Monday, June 24, 2019

அசோகவனத்தில் சீதை! (பயணத்தொடர், பகுதி 108 )

நம்ம 'விஷ் லிஸ்ட்'  ராவணன் சபையில் போய் உக்கார்ந்த ஆஞ்சி வால் போல் நீளமாப்போகுதுன்னா ,  இந்த 'பக்கெட் லிஸ்ட்....'    அதைவிடப்  பெருசு... பாட்டம்லெஸ் பக்கெட் :-)

இப்பப்போற இடமும் இதுலே ஒன்னு. மலேசியத் தோழிகள் போய்வந்து படமும் காமிச்சது முதல்  இதே நினைப்புதான் !

நம்ம இலங்கைப்பயணத்துக்குக் காரணம் ரெண்டே ரெண்டு தான்.  ஒன்னு நேத்து.... யா.........  னை...........   ரெண்டு இன்றைக்கு சீ...... தா........   பாக்கி எல்லாம் போனஸ் கணக்கே!
காலையில் குளிச்சுத் தயாராகி  ப்ரேக்ஃபாஸ்டுக்கு  வந்தால்.....  டைனிங் ஹாலில் ஒரு அனக்கமும் இல்லை.  ட்யூட்டி மேனேஜர்  மட்டும் கொட்டக்கொட்ட உக்கார்ந்துருக்கார்.  சமையல்காரர் இன்னும் வரலையாம்.  அதனால் ஒன்னுமே  இன்னும் ரெடி ஆகலை.... சமைக்கவே ஆரம்பிக்கலைன்னா ..... என்னத்தை ரெடியாக்கறது?
பழங்கள் கொஞ்சம் அவசர அவசரமா நறுக்கிக் கொண்டு வந்து வச்சுட்டு, டீ போடப் போயிட்டார்.  பழமும் டீயுமா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.   நம்ம மஞ்சு  தங்குமிடம், நேத்து நாம் முதலில் போன  க்ரீன் ஸ்டார் என்றபடியால்  (ஒரு நிமிட் நடை) அங்கேயே டீ குடிச்சுட்டு  வந்துட்டார்.  சரி .... வேறெங்காவது பார்த்துக்கலாம். முதலில் வந்த வேலைன்னு கிளம்பிட்டோம் :-)
சாலைக்கு அந்தப்பக்கம் எதோ பயிர்.....  காய்கறித் தோட்டமோ என்னவோ...நிறைய ஆட்கள்  வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
அடுக்கடுக்கா டெர்ரஸ் டைப் விளை நிலங்கள்.....

நேஷனல் ஹைவே  A5 பிடிச்சுப்போனால்  எட்டு கிமீ தூரத்துக்கும் குறைவு. காமணியில் போய்ச் சேர்ந்தோம். ஆதிசக்தி சீதா அம்மன் கோவில்!
தூரத்தில் இருந்து பார்க்கும்போதே  கோபுரம் மட்டும் உக்கார்ந்துருக்கேன்னு பார்த்தால் சாலையையொட்டியே  சாலைச்சரிவில் கோவில்.
கோவிலுக்குப்பின்புறம் சலசலன்னு ஓடும் ஆறு!
சாலையின் ஓரத்தில்  அழகழகான  ராமர் & கோ சிலைகளுடன்  அப்படியே  சாலை  ஆஞ்சியும் ,  கோவிலுக்கான ராஜகோபுர நுழைவு வாசலுமா இருக்கு!  ஸ்ரீ ராமஜெயம்! வாசலில் த்வாரஆஞ்சிகள் இருவர்!
சாலை ஆஞ்சிக்குச் சனம் சிதறுதேங்காய் போட்டுட்டுப் போகுது!
படிகள் இறங்கிப்போகணும். ஒரு இருபது இருபத்தைஞ்சு படிகள் இருக்கலாம். உள்ளே போனாட்டு, கீழே பள்ளத்தில் இருக்கோம் என்ற நினைப்பு நமக்கு வர்றதில்லை. வாசலில்  விபூதி குங்குமம், சந்தனம் வச்சுருக்காங்க. நாமே எடுத்து இட்டுக்கலாம். பாழ் நெத்தியா இருக்க வேணாம், பாருங்க.


செல்லம்போல ஒரு குட்டிப்பையன் கவனமா விபூதி குங்குமம் தொட்டு வச்சுக்கறதை ஒரு க்ளிக்.  நிமிர்ந்து பார்த்து என்ன ஒரு சிரிப்பு !

ராமர், சீதை, லக்ஷ்மணன் சந்நிதி.   இவுங்களைக் கும்பிட்டுக்கிட்டு  இடப்பக்கம் மண்டபத்தில் நடந்து போனா அந்தாண்டை சீதம்மாவுக்கு  விமானத்தோடு கூடியத் தனிச்சந்நிதி.


உட்புறச் சுவர்களில் ராமாயணத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் வரைஞ்சு வச்சுருக்காங்க. பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்லலாம். எதோ ஒரு பள்ளிக்கூடப் பிள்ளைகள் வேற  வந்துருக்காங்க. இன்றைக்குப் பள்ளிக்கூடம் இல்லை.   போயா லீவு !
அன்றைக்குப் பவுர்ணமி என்பதால் இங்கே கோவிலில் சிறப்புப் பூஜை!  அதற்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டு இருக்கு! கோவில் இசைக்கலைஞர்களும்,  வாசிக்கத் தயாரா இருக்காங்க.


எப்படியும் பவுர்ணமிக்கு அரசு விடுமுறை இருக்குல்லையா....  அதைப் பயன்படுத்திக்கலாமுன்னு யோசிச்ச நிர்வாகம்,  பதினொரு வருஷங்களா நடத்திக்கிட்டு வருதாம்!  நாம் போன தினம் 129 ஆவது பவுர்ணமி விழா !


புள்ளையாரும் விசேஷ பூஜைக்கு ரெடி ஆகிட்டார்!

கோவிலுக்குப் பின்புறம் ஓடும் ஆற்றுக்கருகில் போக படிகள் இருக்கு. அதுலே இறங்கிப்போக வெளிமுற்றம் போறோம். நல்ல உயரமான ஆலயமணிக் கூண்டு!

ஆற்றுக்கு அந்தாண்டை போக ஒரு பாலமும் கட்டி இருக்காங்க. அங்கே ஒரு உயரமான  பீடத்தில் அசோகவன சீதையும், ஆஞ்சியும், எல்லாத் துயரங்களுக்கும் காரணமான பொன்மானுமா சிலைகள்.
ஆஞ்சி: தாயே இங்கே எப்படி வந்தீங்க?

சீதா: அதையேன் கேக்கறே ஆஞ்சி. அது ஒரு பெரிய ராமாயணம். எல்லாம்  இதோ இங்கே நிக்குது பாரு... இத்தைப்போல ஒரு பொன்மானைப் பார்த்து ஆசைப்பட்டதுதான் தப்பாப் போயிருச்சு. இங்கெ வந்து மாட்டிக்கிட்டேன்....

ரெண்டு வருஷங்களுக்கு முன் ஆர்ட் ஆஃப் லிவிங் ஃபவுண்டேஷன் ஸ்தாபகர் ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் உபயம். மேடைக்கு முன் ஒரு பெரிய பள்ளம் இருக்கு.  ஆஞ்சி  சீதை முன் மரத்தில் இருந்து குதிச்சப்ப,  அதோட  பாதம் பதிஞ்ச இடமாம். பாறையே பொத்துக்குற அளவுக்குப் 'பொத்'ன்னு குதிச்சுருக்கு!
ஒரு பத்து வருசத்துக்கு முன் எடுத்த படத்தில் ஆஞ்சிப் பாதம் அடையாளத்தை சுத்திவர வட்டம் போட்டுக் காமிச்சுருக்காங்க. கீழே படம்.
இப்போ மேடைக்குமுன்  ஆஞ்சிப்பாதப் பள்ளத்துக்குப் பட்டுத்துணி அலங்காரமும்  பக்தர்கள் கொண்டு வரும் பூக்களுமா இருக்கு. அங்கே  அதுவரை இறங்கிப் போகவும் படிகட்டுகள் அமைச்சு, பாறை வழுக்கினால் விழாமல் இருக்கக் கம்பிப்பிடிமானமும் போட்டு வச்சுருக்காங்க.
சனம் அங்கெ போய் விளக்குப் போட்டுட்டு வர்றாங்க.....
சலசலன்னு ஓடும் இந்த ஆற்றில்தான் சீதை தினமும் குளிச்சாங்களாம்.   கிறிஸ்து பிறப்புக்கு  7300 வருஷங்களுக்கு  முன் இதெல்லாம்!

மாத்திக் கட்டிக்க இன்னொரு புடவை இல்லாம ஒரு வருசத்துக்கு ஒரே புடவையோடு இருந்த சீதையை நினைச்சால் ஐயோன்னு இருக்கு.  குளிச்சுத் துவைச்சு அதையேத் திரும்பவும் கட்டி... ப்ச்.... பாவம்..... இல்லே?
வேற ஒரு ஊரில் இருந்து வந்த குடும்பத்துடன் ஒரு க்ளிக்ஸ் ஆச்சு ! நாம் தமிழ்நாடுன்னதும் ரொம்ப ஆசையா நம்மோடு பேசுனாங்க.  குடும்பத்தலைவருக்குத் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குப்போய் தரிசனம் செஞ்சுக்கணுமாம். சீக்கிரம் ஆசை நிறைவேறட்டுமுன்னு வாழ்த்தினேன்.
உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் கூட்டம் நிறையவே இருக்கு.
புதுக் குடித்தனம் போகும்  புதுக்கல்யாண ஜோடி,  கோவிலில் விற்கும்  ராமர் சீதை படத்தை வாங்கிப்போய் பூஜையில் வைக்கறதுக்காக  வந்துருக்காங்க.  படத்தை வாங்கிப் பார்த்துட்டு, 'நல்லா இருங்க'ன்னு  சொன்னேன்.

திரும்பக் கோவிலுக்குள் வந்தால் ஆஞ்சி சந்நிதியில் அழகான அலங்காரத்தோடு நம்ம ஆஞ்சி!  பக்கத்துலேயே ஆஞ்சி உற்சவருக்கு அலங்காரம் நடக்குது!  இன்றைக்குப் புறப்பாடு உண்டாம்.

கண்ணெழுதிப் பொட்டும் தொட்டு ரொம்ப ஸ்ரத்தையுடன் அலங்காரம் செஞ்சார்  இளைய குருக்கள் ஒருவர். பத்துமணிக்கெல்லாம்  அலங்காரம் முடிஞ்சது. இனி பனிரெண்டுவரை  ஆஞ்சி திரைமறைவில்தான் :-)
புறப்பாடு பார்க்க எனக்கு ஆசை இருந்தாலும் நாமும் ரெண்டு மணிநேரம் காத்திருக்கணுமே....   உள்வீதி (!) புறப்பாடுதான். திரை போடுமுன் நல்லாக் கண்குளிர தரிசனம் ஆச்சே... அதுவே போதும் என்ற நிறைவுடன்  கிளம்ப வேண்டியதாப் போச்சு.

பாருங்க கிட்டத்தட்ட ஒரு வருஷம்  ராமனுக்காக சீதை காத்திருந்தாள். நமக்கு ரெண்டு மணி நேரம் இருக்க முடியலை.... 'நம்ம ' ராமன் தான் கிளம்பு கிளம்புன்னு அவசரப்படுத்தியவர், கேட்டோ :-)

வாசலாண்டை இருக்கும் ராமர் & கோ சிலைகள் ரொம்பவே அழகு. இந்த இடம்தான் ஃபோட்டோ பாய்ன்ட் :-)  இங்கே நின்னு படம் எடுத்துக்காமப்போனால் கோவிலுக்கு வந்த பலன் கிடையாது  என்பதால்..... நாமும்... :-) :-)



மேலே  ரெண்டு படங்கள்:  தோழி எனக்காக எடுத்து வந்தவை. ஆச்சு 15 வருஷம்
கோவிலை  ரொம்பவே நல்லமாதிரி  கவனிச்சு நடத்தறாங்க போல!  அப்பப்ப வண்ணம் அடிச்சு அழகா வச்சுருக்காங்க. தோழி போய் வந்த காலத்தில் இருந்ததை விட இப்பக் கொள்ளை அழகு!  பின்புலம் டெர்ரகோட்டா நிறத்தில் தங்க வண்ணக் கோபுரச்சிலைகள் ... ஹைய்யோ!!!!
(அப்படியே கோவிலுக்குள்ளும் கொஞ்சம் பெயின்ட் அடிச்சுருக்கப்டாதோ? )
ஐயர் இல்லம்?
கோவில் வாசலைத்தான் படமெடுக்க முடியாமல் போச்சு. எதிர்சாரிக்குப் போகணும். எங்கே பார்த்தாலும் வண்டிகள் குறுக்கும் நெடுக்குமா  போய்க்கிட்டு இருந்ததால் 'நோ பாய்ண்ட்'ன்னு விட்டுட்டேன் :-(
வலையில் சுட்ட படம் மேலே!  அன்னாருக்கு நன்றி !

தொடரும்...... :-)




16 comments:

said...

ரொம்ப அழகான இடமும் கோவிலும் மா.. பார்க்கவே பரவசமா இருக்கு

ஆஞ்சிப் பாதம் ...ஆஹா அற்புதம்

அலங்கார ஆஞ்சி மனதில் நிற்கிறார் ..அருமை

said...

கோவில் அழகு. சலசலக்கும் நீரும் அழகு.

அர்ச்சகரை 'ஐயர்' என்று சொல்லும் வழக்கம் ஈழத் தமிழர்கள் மத்தியில்.

said...

ஆஹா அழகான கோவிலாகத் தெரிகிறது. கோவில், பின்னால் ஓடும் நீரோடை, சிற்பங்கள் என அனைத்தும் அழகு.

ஆஞ்சியின் பாதம் - ஆஹா....

தொடர்கிறேன்.

said...

வித்தியாசமான அழகான கோயில். உங்களால் எங்களுக்கு அதனைக் காணும் பாக்கியம் கிடைத்தது.

said...

அருமை நன்றி

said...

கோபுரமே வித்தியாசமான பொலிவுடன் கண்ணைக் கவர்கிறது. படங்களும் தகவல்களும் வழக்கம்போல ரசனை.

said...

எனக்கு ரொம்ப பிடித்த இடம் நான்கு தடவை சென்றுள்ளேன் பழைய பகிர்விலும் இடம் பிடித்தது.

said...

வாங்க அனுப்ரேம்,

அந்த இடமும் ஆறும் ரொம்பவே அழகுப்பா!

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

காட்டுக்குள்ளே நடக்க வேணாம் ... சாலையில் சட்னு கோவில் வந்துருது. அதனால் எப்பவும் பயணிகள் கூட்டம்தான்! ஆறும் அழகு!


நானும் கவனிச்சேன்... இங்கே நம்ம புள்ளையார் கோவில் (!) பூஜைக்கு வெலிங்டன், ஆக்லாந்து நகரில் இருந்து வரும் குருக்களை... ஐயர் என்றுதான் கூப்பிடறாங்க!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழகான இடம்தான்! சுத்திவர அரக்கியர் இல்லைன்னா, சீதை கூட மகிழ்ந்திருப்பாள், அந்த சூழலை ரசித்தபடி !

தொடர்வதற்கு நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

ரசனைக்குரிய சூழல்! எனக்கும் ரொம்பவே பிடிச்சிருந்தது !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதமஞ்சரி,

முன்னைக்கு இப்போது ரொம்ப அழகாவே இருக்குப்பா !

said...

வாங்க மாதேவி,

நான்கு முறைகளா !!!! வாவ்!

கடைசியாகப்போனது 2009 ஆம் ஆண்டா? ஆச்சே பத்து வருஷம்.... இப்ப இன்னும் அழகா இருக்கு. இன்னொருக்கா முடிஞ்சால் போய் வாங்க!

said...

அழகான கோவில் நானும் ப்ர்ஸ்ட் டைம் இப்போதான் போனேன் டீச்சர். அன்று ஏதும் விசேஷம் இல்லாததால் அமைதியான தரிசனம். மிக அழகான இடம்.

said...

வாங்க ப்ரியசகி,

ரொம்பவே அழகா இருக்குல்லே!!!! சாதாரண தினங்களில் கோவிலை மதியம் அடைக்கிறாங்களா?