Thursday, February 12, 2026

ஒருநாள் உணவை..... ஒழி என்றால்................

ஓசி ட்ராம் போய் வந்ததும்...........  லஞ்சு டைம் நெருங்கிருச்சே....  கடை  தேடணுமே,  சாப்பிடன்னுன்னு யோசனையோடு அறைக்கு வந்தோம்.  பெரிய மால்களில், ஷாப்பிங் சென்டர்களில் ஃஃபுட் கோர்ட்னு  ஒன்னு இருக்குதானே....  ஏதாவது தேறாதா என்ன ?  அதான் நாம் தங்கி இருக்கும் இடம் மால்களால் சூழப்பட்டுருக்கே ! 
                                  
எம்போரியம்னு தலையில் எழுதியிருக்கும் கட்டடத்துக்குள் நுழைஞ்சாச். பழைய நாட்களில் நம்மூர்ப்பக்கம், பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்களில் நாலு கட்டு வீடு, ஏழு கட்டுவீடுன்னு ரயில் வண்டிபோல் நீள நெடூகக் கட்டி விட்டுருக்கும்  வீடுகள் யாருக்காவது நினைவிருக்கோ ? ஒவ்வொரு கட்டுக்கும் இடையில் முற்றம் வேற இருக்குமே! 

அதேதான்.....அந்த முற்றம்தான்..... இங்கே ரெண்டு தெருக்களுக்கிடையில் இருக்கும் குறுக்குத்தெரு.   இப்படி  நாலைஞ்சு தெருக்களைக் கடந்து போகும் அளவுக்கு மால்நீளம்.... இங்கே எங்கூரில் பெரிய அளவு நிலத்தில் மாலும்,  அடுக்கு மாடிக் கார்பார்க்குமாகத்தான் அமைச்சுருக்காங்க.  ஆனால்  மெல்பர்னில் நகர மையத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால்..... பப்ளிக்  கார்பார்க்னு தனிக்கட்டடம் ஒன்னு ரெண்டு என் கண்ணில் பட்டது. இலவச ட்ராம்கள் ஓடுவதால்  வேறெங்கேயாவது, வண்டியை நிறுத்திட்டு,  மால்சுத்த வர்றாங்க போல இருக்கு !  நடைபாதைகளில் அங்கங்கே பெஞ்சு போட்டு வச்சுருக்காங்க. கால்வலிக்கு இதம் !
அங்கங்கே சாப்பாட்டுக் கடைகள் இருந்தாலும் எல்லாம் நமக்கானவை அல்ல. இண்டியனைத் தேடிக் கண்கள் அலையுது...  கண்ணில் பட்ட எஸ்கலேட்டர், லிஃப்ட் இதுகளிலெல்லாம் ஏறிப்போய்த் தேடிக்கிட்டே இருந்தோம். கிட்டத்தட்ட மால் முடியும் இடத்தில்... இடதுபக்கம் போனால்  ச்சில்லி இண்டியா!  மிளகாய்ன்னா அது இந்தியாவுக்கு மட்டும்தானா என்ன ? ....  
எனக்கோ உறைப்பு ஆகவே ஆகாது.... ஒரு பயத்தோடு உள்ளே நுழைஞ்சேன். வெறும் சோறு கிடைச்சால்கூடப் போதும்.........  கிடைச்சது ! 



 சாப்பிட்டு முடிச்சதும்...அந்தப் பக்கம் இருந்த கதவினூடே வெளியே வந்தால்,  நாம் நம்ம எலிஸபெத் தெருவில் இருக்கோம் ! திரும்பக் கடைகண்ணிகளுக்குள்ளே புகுந்து போக இஷ்டமில்லாததால்.....  இதன் வழியாகவே அறைக்குத் திரும்பலாமேன்னு நடந்தால்.... ஒரு சர்ச் !
செயின்ட் ஃப்ரான்ஸிஸ் சர்ச். ரொம்பவே பழைய சர்ச்சுகளில் ஒன்னு !  1841 இல் கட்டியிருக்காங்க. நகரம் உருவான ஆறாம் ஆண்டு ! நம்ம கோவில்கள் போல , உச்சிகால பூஜை முடிஞ்சு நடை அடைத்தல் என்றதெல்லாம் பொதுவாக சர்ச்சுகளில் இல்லை. பக்கவாட்டுக் கதவுகள் திறந்து வைப்பாங்க. இது கத்தோலிக்கப்பிரிவைச் சேர்ந்தது என்பதால் அங்கங்கே சிலைகள் !  மெயின் ஆல்டர் & சபாஹால் எல்லாம் பெருசாவே இருக்கு.  விதானத்தில்  அழகான மரவேலைப்பாடு ! நம்மூர் ஆரன்முளாக் கண்ணாடி போல ஒரு கண்ணாடி , சபை ஆரம்பத்தில் !  
ஆனால் இது கண்ணாடி இல்லைன்னு கிட்டக்கப்போய் பார்த்தப்பப் புரிஞ்சது.  பளபளக்கும் உலோகத்தட்டு ! எதுக்கு இங்கே இதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா..... என் தலை வெடிக்காதோ ? 
கத்தோலிக்கக் கோவில்களில் ஒரு வேஃபர் பிஸ்கட் மாதிரி ஒன்னும்,  ஒரு மடக்கு ஜூஸும் முக்கால்வாசி பூஜை முடிஞ்சபிறகு தருவாங்க. இந்த வேஃபர் பிஸ்கட் வாயில் போட்டதும் அப்படியே கரைஞ்சு போயிரும். இந்த பிஸ்கட்டும் ஜூஸும் அவுங்க சாமி யேசுவின்  சதையும் ரத்தமும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இது கோவில் பூஜைகளில் கலந்துக்கும் எல்லோருக்கும் இல்லை.  யேசு மேல் முழு நம்பிக்கை இருக்கறவங்களுக்கு மட்டும்தான். இந்த நம்பிக்கை தனக்கு இருக்குன்னு சொல்றதுக்கு ஒரு சடங்கு  இருக்கு. அதுக்கு கன்ஃபர்மேஷன்னு பெயர்.  குழந்தைங்களுக்கு இந்த சடங்கு செய்யும் பெற்றோர்கள் இதுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேணும். பொதுவா ஏழு வயசு முதல் பதினாறு வயசுக்குள்  இதை நடத்திரணுமாம். (நாம் , நம்ம பசங்களுக்கு பூநூல் போடற மாதிரிதான், இல்லே ! )ஏழுன்றது அவ்வளவாப் புரிஞ்சுக்க முடியாத பருவம் என்பதாலும், பதினாறு வயசுன்றது..... 'எல்லாத்தையுமே' புரிஞ்சுக்கிட்ட வயசுன்றதாலும்....பொதுவா பனிரெண்டு வயசில் இந்த சடங்கைச் செய்யறாங்க கடவுள் பக்தி மிகுந்திருக்கும்  பெற்றோர்.  பிள்ளைங்க என்னன்ன கடைபிடிக்கணும் என்றதெல்லாம்  சர்ச் நடத்தும் ஸண்டே ஸ்கூலில் சொல்லிக்கொடுப்பாங்க.

எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்,  மேற்கொண்டு தகவல்கள் இருந்தாலோ, அல்லது  எழுதியதில் கருத்துப்பிழை இருந்தாலோ சொல்லுங்க. திருத்திக்கலாம் ! கீழே உள்ள பத்தி நம்ம துளசிதளத்தில்  2008 இல்  பதிவு செஞ்சதுதான்,  முழுவதும் வாசிக்க இதோ அந்தச் சுட்டி !

https://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_3941.html

ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம் நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.
அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கற பசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்
படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும். நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!

அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்ப நீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.

அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ஃபாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.
அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்க சாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுக் கேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுக்கிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாம முழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சை ரசமாம்.
நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னு
பாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜை
எல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.

நம்மூரில்  'சொந்த மதம் விட்டு,  இந்த மதத்திற்கு  மாறியவர்கள்'  இந்தச் சடங்கைக்  கோலாகலமாக் கொண்டாடுவதை  நான் பார்த்திருக்கேன். முதல் முறையாக இந்த சடங்கு நிறைவேறியதும், 'அந்த சரீரமும், ரத்தமும்' இவர்களுக்குத் தருவாங்க.  இதுக்குப்பின் விசேஷ நாட்களில், கோவில் பூஜை நாட்களில்  இப்படி ஹோலி கம்யூனியன் நடக்கும்போது  இவர்களும்  வரிசையில் போய் வாங்கிக்கலாம். பாதிரியார்தான் ஒவ்வொருவருக்கும் தருவார். ஆனால் கையில் கொடுப்பதில்லை. வரிசையில் போய் வாயைத் திறந்ததும்   நாக்கின் மேல்  ஒரு வேஃபர். ஒரு கோப்பையில் இருக்கும் ஜூஸில் ஒரு  மடக்கு.  கடிச்செல்லாம் தின்ன முடியாது.... நாக்கில் வச்சதும் அப்படியே கரைஞ்சு போவதை முழுங்கிடணும். அப்படிக் கொடுக்கும்போது, தப்பித்தவறி வேஃபர் உடைஞ்சு கீழே விழுந்துட்டா ?  அபச்சாரம் இல்லையோ ! அது கீழே தரையில் விழுமுன் இந்தக் கைப்பிடியுள்ள  அலங்காரத்தட்டில் விழும்படிக்கு,  மோவாய்க்கு அடியில் தட்டைப் பிடிச்சுக்குவாங்களாம் ! 

இந்தத் தட்டுக்குப்பெயர் Monstranceன்னு கூகுள் சொல்லுச்சு.  இதைத் தமிழில் எப்படிச் சொல்வாங்கன்னு கூகுளையே கேட்டால் 'அரக்கன்'ன்னு.......... ஹாஹா.... போகட்டும்.....

முக்கிய நிகழ்ச்சிகளில், பாதிரியார் வரும்போது.... அவருடைய உதவியாளர் (! ) இதை கையில் தூக்கிப்பிடிச்சு ஊர்வலத்தின் முதல் ஆளா வர்றதையும்  இங்கே ஒரு சாவுச்சடங்கில் பார்த்த நினைவு இப்போ வருது. துக்க நிகழ்ச்சி என்பதால் அப்போ படம் எதுவும் எடுக்கலை....

இந்தப் பெரிய தேவாலயத்தின்  ஒரு பக்கம் தனித்து இன்னொரு சந்நிதி. Chapel ! இது தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்கானது.  இங்கே சர்ச்சே  குவிச்சு வச்சுருக்கும் மெழுகுத்திரியில் ஒன்னு எடுத்து நாமே கொளுத்திவச்சுக் கும்பிட்டுக்கலாம். தேவாலயம் கட்டி ஆறு வருஷமானபின் இந்தச் சந்நிதியைக் கூடுதலாக் கட்டி இருக்காங்க..

நாமும் ஆளுக்கொரு விளக்கை ஏத்திட்டு, அறைக்குப்போனோம்.  வெறும் முன்னூறு மீட்டர் என்பதால் அஞ்சே நிமிட் !

ஒரு நல்ல தூக்கம் ஆனதும், சூப்பர் மார்கெட் ஷாப்பிங். பெரிய கடைகளின் வழியாகத்தான் போகவேணும். காய்கறிகளைத் தவிர மற்றவை  எல்லாமே ஆஸி & நியூஸிக்கு ஒரே விலை ! ஆஸி டாலருக்கு  எங்க டாலரைவிடக் கொஞ்சம் பலம் கூடுதல்.

கடைகளோ............... ப்ரத்யேகமானதாகவும் இல்லை. அங்கிருக்கும் பெரியகடைகள் எல்லாமே அதே பெயரில் நியூஸியிலும் இருக்கு ! அதே பொருட்கள்தான் !  எல்லாம் செயின் ஸ்டோர்களே....  அப்படியிருக்க, நிறைய விலை கொடுத்து அங்கே இருந்து தூக்கிவரணுமா என்ன ? 

சூப்பர் மார்கெட்டுகள் கூட அங்கேயும் இங்கேயும்  ஒரே நிர்வாகத்தின் கீழ் !  ஒன்னு ரெண்டு சூப்பர்மார்கெட்டுகள் மட்டுமே  நியூஸி மக்களால் தொடங்கப்பட்டவை.   வரவர New Zealand Owned  business னு விளம்பரம் கூட பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னா பாருங்க! 

 ஆஸிக்கும் நியூஸிக்கும் இருக்கும் ஒப்பந்தப்படி, ரெண்டு நாட்டுக் குடிமக்களும் விஸா இல்லாமலேயே அங்கிட்டும் இங்கிட்டும் போய்வரலாம்.  வியாபாரம், வீடு , மற்ற இடங்கள் வாங்கவிற்க,   வேலைக்குப்போகன்னு குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகள்  எல்லாமே இங்கேயும் அங்கேயும் ஒன்னுதான்.  நியூஸிக் குடிமக்களாக  இருந்துகிட்டே   ஆஸியில் போய் வசிக்கலாம் இப்படி ஏகப்பட்ட சலுகைகள். அங்கிருந்துக்கிட்டே இங்கத்துத் தேர்தல்களில் ஓட்டுக்கூடப் போடலாம்.

நியூஸியை, ஆஸிகூடச் சேர்த்துடணுமுன்னு கூட ஆரம்பிச்சாங்க.... அது எப்படி ?  எலி வளையானாலும் தனிவளை வேணாமோ ? 

F1 hybrid tomatoes (Solanum lycopersicum)  Kumato  hybrid tomato !
மறுநாள் ப்ரேக்ஃபாஸ்டுக்காக கொஞ்சம் பேக்கரி ஐட்டம், பழங்கள், ஜூஸ் இப்படி வாங்கியாச். மாம்பழம் கண்ணில்பட்டது. விடலாமோ ? நியூஸிக்குளிரில் மாமரங்கள் பிழைக்காது.....  

தொடரும்............ :-)



Monday, February 09, 2026

கேட்க ஆளில்லாத புறம்போக்கு நிலத்தைப் பட்டா போட்டுக்கறது.... இப்படித்தான்....

இங்கே போகணும் அங்கே  போகணும் னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் மெல்பர்னுக்கு வந்துருக்கேன். அதனால் காலையிலேயே எழுந்து ஓடவேண்டாமேன்னு நிதானமாவே அறையிலிருந்து பத்தேகாலுக்குத்தான் கிளம்பினோம்.  மகள்,  இங்கே பார்க்கவேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்ட் அனுப்பியிருந்தாள்.  இலவச ட்ராம் சர்வீஸ் இருக்காம். அதுலே போய்ச் சுத்திப்பாருங்கன்னாள். 
நேத்து லஞ்சுக்காக எலிஸபெத் தெரு போகும்போதே ட்ராம்கள் நடமாட்டம் பார்த்தேன்.  நல்லா இருக்கேன்னும் நினைச்சேன்.

பொதுவா அஸ்ட்ராலியான்னு இப்ப நாம் சொல்லும் எங்கள் அண்டை நாட்டில் முதல்முதலில் காலடி எடுத்துவச்சது டச்சு மக்கள்தான். ஏபெல் டாஸ்மன் என்ற கடலோடி, 1644 ஆம் வருஷம் இங்கே முதலில் வந்துருக்கார். (இதுக்கு  ரெண்டு வருஷத்துக்கு முன்னேயே  நியூஸிப் பக்கமாவும் வந்துட்டுப் போயிருக்கார் . ) டச்சு  நாடும்  உலகம் சுத்திக்கிட்டு, எங்கே நல்ல இடம் கிடைக்குமோ.... அங்கே காலனி ஆரம்பிச்சுக்கிட்டுத்தான் இருந்தது அந்தக் காலத்துலே.  

புதுசாக் கண்ணில்பட்ட இடத்துக்கு  நியூஹாலண்ட் னு பெயரும் வச்சுருக்கார். இந்த வெள்ளைக்காரர்களுக்கு ஒரு வழக்கம் என்னன்னா.... புதுசா ஒரு இடத்தைப் பிடிச்சால். அதுக்கொரு பெயர் வைக்க மெனெக்கெட மாட்டாங்க.  அவுங்களுக்குப் பரிச்சயமான பெயரில் முன்னால் ஒரு 'நியூ" சேர்த்துக்கிட்டால் ஆச்சு. அம்புட்டுத்தான் !

ஒரு முன்னூறு நானூறு வருஷங்களுக்கு முன்னால்  உலகம்னு ஒன்னு இருக்குன்றதுகூட மக்களுக்குத் தெரியாது.  அவுங்கவுங்க இருக்குமிடம்தான் உலகமுன்னுகூட நினைச்சுருக்கலாம். ஒருவேளைத் தெரிஞ்சுருந்தால்  உலகம் ரொம்பவே பெரூசுன்னும்  எண்ணம் இருந்துருக்கும். போக்குவரத்து வசதிகள் ஒன்னுமே இல்லாத காலங்கள்தானே !  இப்ப உலகம் எவ்வளவோ சுருங்கிருச்சு. ஐ  மீன் இடங்கள் சுருங்கலை. அதது அங்கங்கே அப்படியேதான் இருக்கு. ஆனால்  எங்கோ நடக்கறதை அடுத்த அஞ்சாவது நிமிட்லே நாமெல்லாம் தெரிஞ்சுக்கும் விதமா விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம்  வந்துருச்சுல்லே ! 

இந்த ஏரோப்ளேன் கண்டுபிடிச்சு, அதை  பொதுமக்கள் பயணம்  போகும் விதமா  மாத்துனது என்னமாதிரி சமாச்சாரம்!   நாங்க உலகின் தென்கோடியில் இருக்கோம். வடகோடிக்கு ஒரு  இருவது மணி நேரத்துலே போகமுடியுது !  எங்கேயும் இடையில் நிறுத்தாம இன்னும் ரொம்ப வேகமாப் போறதுக்கான ஆராய்ச்சிகள் எல்லாம் முடிவே இல்லாமல் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.  ஆகாயத்துலே மிதக்கற நிலாவுக்கே போய்வர ஆரம்பிச்சாச்சு பாருங்க. !

எங்கியோ ஆரம்பிச்சு.... எங்கியோ போயிட்டேன்..... மன்னிச்சூ........... 
நியூ ஹாலண்டை, ஒரு காலனியாக ஆக்கிக்காம  அப்படியே விட்டுட்டுப்போனதுக்கு டச்சு மக்கள்  சொன்ன  காரணம் அங்கே , ஒரே  மொட்டை நிலம், வெறும் பாலைவனம்தான், தண்ணியே கிடையாது...  மனுஷன் வாழ்வதற்கு லாயக்கில்லை !!   அவுங்க முதலில் பார்த்தது ஆஸியின் மேற்குப்பகுதிதான் ! 

ஆனால்  தொலைதூரத்துலே ஒரு இடம்  'யாருமில்லாம'க் காலியா இருக்குன்ற விவரம் பரவாமலா இருந்துருக்கும் ? 

கேப்டன் ஜேம்ஸ் குக், 1770 ஆம் வருஷம், ஆஸியின் கிழக்குப்பகுதிக்கு வந்து சேர்ந்தார்.  'அட !  நல்ல இடமா இருக்கே'ன்னு போய்  ப்ரிட்டிஷ் அரசுகிட்டே சொல்லி 'அது நம்ம இடமு'ன்னு அவுங்களே சொல்லிக்கிட்டாங்க.  அந்தக் காலங்களில்  குற்றவாளிகளால்  ப்ரிட்டன் சிறைகள் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கவே...........   ( இந்தியாவுக்கு அந்தமான் போல ) கேப்டன் ஆர்தர் பிலிப் தலைமையில்   1400 குற்றவாளிகளைப் பதினோறு கப்பலில் ஏத்திக்கிட்டு , கிட்டத்தட்ட  எட்டரை மாசம் பயணம் செஞ்சு , 'பாட்டனி பே'   (கேப்டன் குக் , பெயர் வச்சுட்டுப்போன) இடத்துக்கு  வந்து சேர்ந்தாங்க. ஜனவரி மாசம் 26 ஆம் தேதி, 1788 வது வருஷம். முதல்வேலையா ப்ரிட்டன் கொடியைக் கொண்டுவந்து நட்டாச்சு !  நட்டாச்சுல்லே....  இந்த  இடம்  இனிமேப்பட்டு  ப்ரிட்டிஷாருக்குச் சொந்தமானது !  இந்த நாளைத்தான் இப்பவும் அஸ்ட்ராலியன் டேன்னு அரசு விடுமுறை விட்டுக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.  


குற்றவாளிகள்  குடியேறின  அந்த 'பாட்டனி பே' தான் இப்ப சிட்னி ! போகட்டும்..... மக்கள் வளம் பெருகி நாடும் உருவாகி,   இப்போ ரொம்பப் புகழ்வாய்ந்த நாடாக மாறிப்போச்சுல்லே !  அந்த நியூஹாலண்ட் என்னும் பெயரையே 1824 இல் தான் அஸ்ட்ராலியான்னு மாத்துனாங்க.
இந்த அஸ்ட்ராலியா நாட்டின் பரப்பளவு, எங்க நியூஸியை விட 29  மடங்கு பெருசு.  அதுக்கேத்தமாதிரிதான் மக்கள் தொகையும் !  நாங்க  5.3 மில்லியன். அவுங்க 33 மில்லியன்! 

ரெண்டுமே தீவுகள்தான் என்றாலும்.  அஸ்ட்ராலியா, ப்ரமாண்டமான தீவு. ஒரு முழுக் கண்டம் !  இந்த  இரு  நாடுகளின் நிலத்தையொட்டிப் பங்குபோட்டுக்க வேறெந்த நாடுகளும் இல்லை ! அதனால் எல்லைத்தகறாறு கிடையாது. எவ்வளவு ஆசுவாஸம் பாருங்க !!!!

நிறைய ப்ரிட்டிஷ் மக்களும்  புது நாட்டுக்குக் குடிவர ஆரம்பிச்சு  அங்கங்கே குழுக்களா வசிக்க ஆரம்பிச்சு , நாடு முழுக்க ஆறு ப்ரிட்டிஷ் காலனிகளா இருந்தவைகள்தான் அப்புறம் தனித்தனி மாநிலங்களா மாறி  (New South Wales, Victoria, Queensland, South Australia, Western Australia, and Tasmania ) தனியாட்சிகளா உருவாச்சு.  ( எல்லாம் நம்ம இந்தியா மாதிரிதான். மாநில ஆட்சிகள், மத்திய அரசு, யூனியன் ப்ரதேசம் இப்படி.... )

இந்த மாநிலங்களில் நாம் இப்போப் பயணத்தில் வந்துருக்கோமே இது  விக்டோரியா ஸ்டேட்டின்,  தலைநகரம்,   மெல்பர்ன் ! 

இந்த நகரம் உருவானது 1835 லேதான்.   இது எங்களுக்கு அக்கான்னேன் பாருங்க.....  நம்ம க்றைஸ்ட்சர்ச் நகர் உருவானது.... 1856 லேதான்.  (2006 லே 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடினோம் !) 

சரி வாங்க...... மெல்பர்ன் நகரத்தைக் கொஞ்சம் சுத்திப்பார்க்கலாம்.  அந்த ஃப்ரீ ட்ராம், என்னமாத்தான் இருக்குன்னு ஒரு சுத்துப் போயிட்டு வரலாம். எலிஸபெத் தெருவில் நடந்து போகும்போது  குறுக்கே ட்ராம்கள் ஓடிக்கிட்டே இருக்கு. ரூட் நம்பர் எல்லாம் போட்டுருக்கு.  ஒரு இடத்தில்  'ஃப்ரீ ட்ராம் ட்ஸோன்'  னு பார்த்தேன். 


நம்ம மெர்க்யூர் ஹொட்டேல் பக்கத்துலேதான்  டேவிட் ஜோன்ஸ் போல பெரிய பெரிய செயின் ஸ்டோர்ஸ் ஏகப்பட்டது இருக்கு.  ஒரு தெருவில் ஆரம்பிச்சு அடுத்த தெருவரை போகும் கடைகள். இதுலே அங்கங்கே மால்கள் வேற !  வேடிக்கை பார்த்துக்கிட்டே மெல்ல நடந்தால்கூட  ஒரு ஏழெட்டு நிமிட்லே எலிஸபெத் தெருவுக்குப் போயிடலாம்.  க்றிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒன்னரை மாசம் இருக்குன்னாலும்..... கடைகளில் (மட்டும்) கொண்டாட்டம் ஆரம்பிச்சுருச்சு !
ட்ராம் ஸ்டாப் எங்கே இருக்குன்னு தேடிக்கிட்டே போனால்.... ஒரு இடத்தில்  சில்லறைக் காசுகளைப் போட்டுவச்சுக்கும் காயின் பர்ஸ் ஒன்னு தரையில் கிடக்கு. சைஸென்னவோ ரொம்பப்பெருசு.  சாமி கையில் இருந்து விழுந்திருக்கும் போல !  க்ளிக் க்ளிக்....  Bourke Street Mall   இந்த இடம். ஷாப்பிங் போகும் அவசரத்தில் யார் விட்டுட்டுப் போனாங்களோ !!!
கலைகளுக்கு மரியாதை, கலையை ரசிச்சுப் பாராட்டுவோமுன்னு அங்கங்கே என்னென்னவோ வச்சுருக்காங்க.  ஒரு இடத்துலே ஒரு வரிசைக் கண்கள் ! 
நேபாள் பயணத்தில் புத்தர் கோவில் கோபுரங்களில் கண் வரைஞ்சு வச்சுருக்கறது நினைவுக்கு வந்தது. அங்கேயாவது சாமி பார்க்கிறார்னு.....  மாடர்ன் கலையில் கெமெராக்கண்கள் பார்க்குது போல் ! 
நகரைச் சுத்தமா வச்சுக்கவும், மக்களின் அவசரத்தேவைகளுக்கும்  அரசு தன் கடமையைச் செய்யுது ! 

 (சொல்லாமல் இருக்க முடியலை.... இங்கே நியூஸியில்  எங்கே பார்த்தாலும்  க்ராஃபிட்டி என்னும் அசிங்கமான ஒரு கலாச்சாரம். நகரசபை, கண்டுக்கறதே இல்லை...ப்ச்)

பெயர்ப்பஞ்சம் இந்தத் தெருக்களுக்கும்தான்.நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் இருக்கும் தெரு லிட்டில் Bபொர்க் தெரு.  இப்படிச் சின்ன & பெரிய தெருக்கள் இந்தப் பேட்டை முழுசுமெ ! ட்ராம் ஸ்டாப்புலே நின்னுக்கிட்டு, கை ஆட்டி ட்ராமை நிறுத்தி ஏறிக்கலாமாம். (இங்கே எங்க நியூஸியில், டாக்ஸிகளைக் கை நீட்டி / ஆட்டி கூப்பிடக்கூடாது.... காலியாகப் போனாலும் கூட  நிறுத்தமாட்டாங்க)
விவரம் தெரியாமல் எந்த ட்ராமை நிறுத்துவது ?  பேசாம  சென்ட்ரல் ஸ்டேஷன் போய் விசாரிக்கலாமுன்னு போறோம். வழியில் நம்ம பேங்க் கண்ணில் பட்டது. நியூஸியில் நாம் கணக்கு வச்சுருப்பதும் இதே பேங்க்தான் என்றபடியால், உள்ளூர் செலவுக்கு ஆஸி டாலர் கொஞ்சம்  எடுத்துக்கலாமுன்னு உள்ளே போய், காசை எடுத்துக்கிட்டோம்.  ஒரு அஞ்சாறு கட்டடம் தள்ளி சென்ட்ரல் ஸ்டேஷன். அங்கே விசாரிச்சுக்கிட்டு எதிர்வாடைக்குப்போய், அடுத்த தெரு திரும்பினால் ட்ராம் ஸ்டாப். 

ஒரே திசையில் போய் நாலு திசையைச் சுத்திச் சுத்தி வருதாம். எத்தனை முறை வேணுமுன்னாலும் போய் வரலாம்.  காலை ஒன்பதரை முதல், மாலை அஞ்சுவரை  எல்லா  நாட்களிலும் இந்த சர்வீஸ் உண்டு.  பனிரெண்டு நிமிட் இடைவெளியில்  அடுத்த வண்டி வந்துருது.
சிட்டி சர்க்கிள் ட்ராம் எல்லாம்  ரொம்பவே பழசு. மரக்கட்டை......ப்ச்....
வண்டி வந்ததும் ஏறி உக்கார்ந்தோம். முதலில் ஒரு முழு வட்டம் போகலாம். அப்புறம் என்னென்ன பார்க்கணுமோ.... அதுக்கேத்தாப்லெ அங்கங்கே இறங்கி ஏறினால் ஆச்சு! 
ஒரு வட்டம் சுத்திவர ஒரு மணி நேரம் ஆகுமுன்னும் ஒரு பதிநாலு, பதினஞ்சு  நிறுத்தங்கள் இருக்குன்னும் தகவல் கிடைச்சது.  நாம் அஞ்சாவது நிறுத்தத்தில் ஏறியிருக்கோம். 





லைப்ரரி, இமிக்ரேஷன் ம்யூஸியம்,  பார்லிமென்ட் பில்டிங், ட்ரெஷரி பில்டிங்,  மார்வெல் ஸ்டேடியம், சில பல பார்க்குகள், புல்வெளிகள்  எல்லாம் தாண்டிப் போய்க்கிட்டு இருக்கும்போது.... ஒரு இடத்தில் நின்ன வண்டி, மேற்கொண்டு முன்னேறாமல்.... ரிவர்ஸில் போகுது.....   அங்கே ட்ராம் லைனில் பழுதுபார்க்கும் வேலை நடக்குதுன்னு அக்கம் பக்கம் உக்கார்ந்திருக்கும்/ நின்னுக்கிட்டே  வரும் மக்களின் பேச்சில் தெரிந்து கொண்டேன்.  ரீ வைண்ட் பண்ணிப் பார்ப்பதுபோல் இதுவரை பார்த்த காட்சிகளைத் திரும்ப ஒருக்காப் பார்த்துக்கிட்டே  நாம் ஏறின  அஞ்சாவது நிறுத்தத்திற்கே வந்து இறங்கியாச்சு.  அடுத்த தொகுதியில் என்னென்ன இருந்திருக்குமோ ?  

கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்....  மணி இப்போ  மதியம் ஒன்னு. நாம் பதினொன்னரைக்கு ட்ராமில் ஏறியிருந்தோம்.  அப்ப ஒன்னரைமணி நேரம் பயணத்தில். போயிட்டு, அதே ரூட்டில் திரும்ப வந்ததால் முக்காமணி நேரம்தான்  ஒரிஜினல் பயணம். அவுங்கதான் ஏற்கெனவே ஒரு மணி நேரம் ஒரு சுத்துன்னு சொன்னதால்.... நாம் ஒரு காமணி நேரக்  காட்சிகளைத்தான் தவறவிட்டுருக்கோம்.  போகட்டும்..... என்ன செய்வது ?  ( இந்தக்  கணக்குப்போடும் புத்தி எப்பத்தான் என்னைவிட்டுப்போகுமோ ???? )

தொடரும்.........:-)




Monday, February 02, 2026

லீவு லெட்டர்

நண்பர்களுக்கும் துளசிதளம் வாசகர்களுக்கும் !

உடல்நிலை கொஞ்சம் சரியில்லாததால்  ஒரு வாரம் விடுப்பு எடுக்கவேண்டியதாக இருக்கிறது.

வரும் திங்களன்று பதிவுகள் தொடரும்.

மன்னிக்கணும்......