ஓசி ட்ராம் போய் வந்ததும்........... லஞ்சு டைம் நெருங்கிருச்சே.... கடை தேடணுமே, சாப்பிடன்னுன்னு யோசனையோடு அறைக்கு வந்தோம். பெரிய மால்களில், ஷாப்பிங் சென்டர்களில் ஃஃபுட் கோர்ட்னு ஒன்னு இருக்குதானே.... ஏதாவது தேறாதா என்ன ? அதான் நாம் தங்கி இருக்கும் இடம் மால்களால் சூழப்பட்டுருக்கே !
எம்போரியம்னு தலையில் எழுதியிருக்கும் கட்டடத்துக்குள் நுழைஞ்சாச். பழைய நாட்களில் நம்மூர்ப்பக்கம், பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்களில் நாலு கட்டு வீடு, ஏழு கட்டுவீடுன்னு ரயில் வண்டிபோல் நீள நெடூகக் கட்டி விட்டுருக்கும் வீடுகள் யாருக்காவது நினைவிருக்கோ ? ஒவ்வொரு கட்டுக்கும் இடையில் முற்றம் வேற இருக்குமே!
அதேதான்.....அந்த முற்றம்தான்..... இங்கே ரெண்டு தெருக்களுக்கிடையில் இருக்கும் குறுக்குத்தெரு. இப்படி நாலைஞ்சு தெருக்களைக் கடந்து போகும் அளவுக்கு மால்நீளம்.... இங்கே எங்கூரில் பெரிய அளவு நிலத்தில் மாலும், அடுக்கு மாடிக் கார்பார்க்குமாகத்தான் அமைச்சுருக்காங்க. ஆனால் மெல்பர்னில் நகர மையத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால்..... பப்ளிக் கார்பார்க்னு தனிக்கட்டடம் ஒன்னு ரெண்டு என் கண்ணில் பட்டது. இலவச ட்ராம்கள் ஓடுவதால் வேறெங்கேயாவது, வண்டியை நிறுத்திட்டு, மால்சுத்த வர்றாங்க போல இருக்கு ! நடைபாதைகளில் அங்கங்கே பெஞ்சு போட்டு வச்சுருக்காங்க. கால்வலிக்கு இதம் !
அங்கங்கே சாப்பாட்டுக் கடைகள் இருந்தாலும் எல்லாம் நமக்கானவை அல்ல. இண்டியனைத் தேடிக் கண்கள் அலையுது... கண்ணில் பட்ட எஸ்கலேட்டர், லிஃப்ட் இதுகளிலெல்லாம் ஏறிப்போய்த் தேடிக்கிட்டே இருந்தோம். கிட்டத்தட்ட மால் முடியும் இடத்தில்... இடதுபக்கம் போனால் ச்சில்லி இண்டியா! மிளகாய்ன்னா அது இந்தியாவுக்கு மட்டும்தானா என்ன ? ....
எனக்கோ உறைப்பு ஆகவே ஆகாது.... ஒரு பயத்தோடு உள்ளே நுழைஞ்சேன். வெறும் சோறு கிடைச்சால்கூடப் போதும்......... கிடைச்சது !

சாப்பிட்டு முடிச்சதும்...அந்தப் பக்கம் இருந்த கதவினூடே வெளியே வந்தால், நாம் நம்ம எலிஸபெத் தெருவில் இருக்கோம் ! திரும்பக் கடைகண்ணிகளுக்குள்ளே புகுந்து போக இஷ்டமில்லாததால்..... இதன் வழியாகவே அறைக்குத் திரும்பலாமேன்னு நடந்தால்.... ஒரு சர்ச் !
செயின்ட் ஃப்ரான்ஸிஸ் சர்ச். ரொம்பவே பழைய சர்ச்சுகளில் ஒன்னு ! 1841 இல் கட்டியிருக்காங்க. நகரம் உருவான ஆறாம் ஆண்டு ! நம்ம கோவில்கள் போல , உச்சிகால பூஜை முடிஞ்சு நடை அடைத்தல் என்றதெல்லாம் பொதுவாக சர்ச்சுகளில் இல்லை. பக்கவாட்டுக் கதவுகள் திறந்து வைப்பாங்க. இது கத்தோலிக்கப்பிரிவைச் சேர்ந்தது என்பதால் அங்கங்கே சிலைகள் ! மெயின் ஆல்டர் & சபாஹால் எல்லாம் பெருசாவே இருக்கு. விதானத்தில் அழகான மரவேலைப்பாடு ! நம்மூர் ஆரன்முளாக் கண்ணாடி போல ஒரு கண்ணாடி , சபை ஆரம்பத்தில் !
ஆனால் இது கண்ணாடி இல்லைன்னு கிட்டக்கப்போய் பார்த்தப்பப் புரிஞ்சது. பளபளக்கும் உலோகத்தட்டு ! எதுக்கு இங்கே இதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா..... என் தலை வெடிக்காதோ ?
கத்தோலிக்கக் கோவில்களில் ஒரு வேஃபர் பிஸ்கட் மாதிரி ஒன்னும், ஒரு மடக்கு ஜூஸும் முக்கால்வாசி பூஜை முடிஞ்சபிறகு தருவாங்க. இந்த வேஃபர் பிஸ்கட் வாயில் போட்டதும் அப்படியே கரைஞ்சு போயிரும். இந்த பிஸ்கட்டும் ஜூஸும் அவுங்க சாமி யேசுவின் சதையும் ரத்தமும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இது கோவில் பூஜைகளில் கலந்துக்கும் எல்லோருக்கும் இல்லை. யேசு மேல் முழு நம்பிக்கை இருக்கறவங்களுக்கு மட்டும்தான். இந்த நம்பிக்கை தனக்கு இருக்குன்னு சொல்றதுக்கு ஒரு சடங்கு இருக்கு. அதுக்கு கன்ஃபர்மேஷன்னு பெயர். குழந்தைங்களுக்கு இந்த சடங்கு செய்யும் பெற்றோர்கள் இதுக்கான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேணும். பொதுவா ஏழு வயசு முதல் பதினாறு வயசுக்குள் இதை நடத்திரணுமாம். (நாம் , நம்ம பசங்களுக்கு பூநூல் போடற மாதிரிதான், இல்லே ! )ஏழுன்றது அவ்வளவாப் புரிஞ்சுக்க முடியாத பருவம் என்பதாலும், பதினாறு வயசுன்றது..... 'எல்லாத்தையுமே' புரிஞ்சுக்கிட்ட வயசுன்றதாலும்....பொதுவா பனிரெண்டு வயசில் இந்த சடங்கைச் செய்யறாங்க கடவுள் பக்தி மிகுந்திருக்கும் பெற்றோர். பிள்ளைங்க என்னன்ன கடைபிடிக்கணும் என்றதெல்லாம் சர்ச் நடத்தும் ஸண்டே ஸ்கூலில் சொல்லிக்கொடுப்பாங்க.
எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன், மேற்கொண்டு தகவல்கள் இருந்தாலோ, அல்லது எழுதியதில் கருத்துப்பிழை இருந்தாலோ சொல்லுங்க. திருத்திக்கலாம் ! கீழே உள்ள பத்தி நம்ம துளசிதளத்தில் 2008 இல் பதிவு செஞ்சதுதான், முழுவதும் வாசிக்க இதோ அந்தச் சுட்டி !
https://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_3941.html
ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம் நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.
அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கற பசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்
படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும். நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!
அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்ப நீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.
அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ஃபாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.
அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்க சாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுக் கேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுக்கிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாம முழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சை ரசமாம்.
நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னு
பாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜை
எல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.
அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கற பசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்
படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும். நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!
அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்ப நீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.
அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ஃபாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.
அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்க சாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுக் கேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுக்கிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாம முழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சை ரசமாம்.
நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னு
பாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜை
எல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.
நம்மூரில் 'சொந்த மதம் விட்டு, இந்த மதத்திற்கு மாறியவர்கள்' இந்தச் சடங்கைக் கோலாகலமாக் கொண்டாடுவதை நான் பார்த்திருக்கேன். முதல் முறையாக இந்த சடங்கு நிறைவேறியதும், 'அந்த சரீரமும், ரத்தமும்' இவர்களுக்குத் தருவாங்க. இதுக்குப்பின் விசேஷ நாட்களில், கோவில் பூஜை நாட்களில் இப்படி ஹோலி கம்யூனியன் நடக்கும்போது இவர்களும் வரிசையில் போய் வாங்கிக்கலாம். பாதிரியார்தான் ஒவ்வொருவருக்கும் தருவார். ஆனால் கையில் கொடுப்பதில்லை. வரிசையில் போய் வாயைத் திறந்ததும் நாக்கின் மேல் ஒரு வேஃபர். ஒரு கோப்பையில் இருக்கும் ஜூஸில் ஒரு மடக்கு. கடிச்செல்லாம் தின்ன முடியாது.... நாக்கில் வச்சதும் அப்படியே கரைஞ்சு போவதை முழுங்கிடணும். அப்படிக் கொடுக்கும்போது, தப்பித்தவறி வேஃபர் உடைஞ்சு கீழே விழுந்துட்டா ? அபச்சாரம் இல்லையோ ! அது கீழே தரையில் விழுமுன் இந்தக் கைப்பிடியுள்ள அலங்காரத்தட்டில் விழும்படிக்கு, மோவாய்க்கு அடியில் தட்டைப் பிடிச்சுக்குவாங்களாம் !
இந்தத் தட்டுக்குப்பெயர் Monstranceன்னு கூகுள் சொல்லுச்சு. இதைத் தமிழில் எப்படிச் சொல்வாங்கன்னு கூகுளையே கேட்டால் 'அரக்கன்'ன்னு.......... ஹாஹா.... போகட்டும்.....
முக்கிய நிகழ்ச்சிகளில், பாதிரியார் வரும்போது.... அவருடைய உதவியாளர் (! ) இதை கையில் தூக்கிப்பிடிச்சு ஊர்வலத்தின் முதல் ஆளா வர்றதையும் இங்கே ஒரு சாவுச்சடங்கில் பார்த்த நினைவு இப்போ வருது. துக்க நிகழ்ச்சி என்பதால் அப்போ படம் எதுவும் எடுக்கலை....
இந்தப் பெரிய தேவாலயத்தின் ஒரு பக்கம் தனித்து இன்னொரு சந்நிதி. Chapel ! இது தனிப்பட்ட பிரார்த்தனைகளுக்கானது. இங்கே சர்ச்சே குவிச்சு வச்சுருக்கும் மெழுகுத்திரியில் ஒன்னு எடுத்து நாமே கொளுத்திவச்சுக் கும்பிட்டுக்கலாம். தேவாலயம் கட்டி ஆறு வருஷமானபின் இந்தச் சந்நிதியைக் கூடுதலாக் கட்டி இருக்காங்க..
நாமும் ஆளுக்கொரு விளக்கை ஏத்திட்டு, அறைக்குப்போனோம். வெறும் முன்னூறு மீட்டர் என்பதால் அஞ்சே நிமிட் !
ஒரு நல்ல தூக்கம் ஆனதும், சூப்பர் மார்கெட் ஷாப்பிங். பெரிய கடைகளின் வழியாகத்தான் போகவேணும். காய்கறிகளைத் தவிர மற்றவை எல்லாமே ஆஸி & நியூஸிக்கு ஒரே விலை ! ஆஸி டாலருக்கு எங்க டாலரைவிடக் கொஞ்சம் பலம் கூடுதல்.
கடைகளோ............... ப்ரத்யேகமானதாகவும் இல்லை. அங்கிருக்கும் பெரியகடைகள் எல்லாமே அதே பெயரில் நியூஸியிலும் இருக்கு ! அதே பொருட்கள்தான் ! எல்லாம் செயின் ஸ்டோர்களே.... அப்படியிருக்க, நிறைய விலை கொடுத்து அங்கே இருந்து தூக்கிவரணுமா என்ன ?
சூப்பர் மார்கெட்டுகள் கூட அங்கேயும் இங்கேயும் ஒரே நிர்வாகத்தின் கீழ் ! ஒன்னு ரெண்டு சூப்பர்மார்கெட்டுகள் மட்டுமே நியூஸி மக்களால் தொடங்கப்பட்டவை. வரவர New Zealand Owned business னு விளம்பரம் கூட பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னா பாருங்க!
ஆஸிக்கும் நியூஸிக்கும் இருக்கும் ஒப்பந்தப்படி, ரெண்டு நாட்டுக் குடிமக்களும் விஸா இல்லாமலேயே அங்கிட்டும் இங்கிட்டும் போய்வரலாம். வியாபாரம், வீடு , மற்ற இடங்கள் வாங்கவிற்க, வேலைக்குப்போகன்னு குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகள் எல்லாமே இங்கேயும் அங்கேயும் ஒன்னுதான். நியூஸிக் குடிமக்களாக இருந்துகிட்டே ஆஸியில் போய் வசிக்கலாம் இப்படி ஏகப்பட்ட சலுகைகள். அங்கிருந்துக்கிட்டே இங்கத்துத் தேர்தல்களில் ஓட்டுக்கூடப் போடலாம்.
நியூஸியை, ஆஸிகூடச் சேர்த்துடணுமுன்னு கூட ஆரம்பிச்சாங்க.... அது எப்படி ? எலி வளையானாலும் தனிவளை வேணாமோ ?
F1 hybrid tomatoes (Solanum lycopersicum) Kumato hybrid tomato !
மறுநாள் ப்ரேக்ஃபாஸ்டுக்காக கொஞ்சம் பேக்கரி ஐட்டம், பழங்கள், ஜூஸ் இப்படி வாங்கியாச். மாம்பழம் கண்ணில்பட்டது. விடலாமோ ? நியூஸிக்குளிரில் மாமரங்கள் பிழைக்காது.....
தொடரும்............ :-)

















































