Thursday, December 22, 2005

இது ஒரு பண்டிகைக் காலம்.

இதுக்கு முந்தியிருந்த பதிவுலே தம்பி ராமநாதனுக்குப் பதில் சொல்றப்ப 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'னுஎழுதுனப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, எனக்கு ஊரு, மொழியும் மட்டுமில்லை எல்லா மதங்களுமே சர்வ சம்மதமுன்னு இருந்திருக்கிட்டு இருக்கேன்றது. குழந்தை உலகத்துலேயும் இந்த விகல்பம் எல்லாம் கிடையாது பாருங்க.


இப்ப இந்த வருஷ கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட நம்ம ஊர் கேரளா அசோஸியேஷன் மும்முரமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கு. அதுக்கு இந்த விழாவுக்கான கலை கலாச்சார ஒருங்கமைப்பாளர் 'அடியேன்' என்பதாலே இந்த ஒருமாசத்துக்கும்மேலா, அவுங்ககூடயே பேசிப் பழகிவர்றதாலே 'மலையாள வாசனை' கூடிப்போய் பதிவிலும் தலை காட்டிக்கிட்டு இருக்கு.
கிறிஸ்மஸ் கொண்டாடும் எல்லா நண்பர்களுக்கும் இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன். கதைக்களன் நம்ம 'வத்தலகுண்டு'தான்:-)






சர்வ மதமும் சம்மதம்


எங்க பக்கத்து வீட்டுலெ ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்க பேரு ஆரோக்கிய மேரி. அவுங்கவீட்டுலே ஒரு பெரிய கூண்டுலே இரண்டு ஆடுங்க இருக்கும்! ஆடுங்களுக்கு எதுக்கு கம்பி போட்டகூண்டுன்னுதானே நினைக்கறீங்க? அதுங்க ரெண்டும் 'ஸ்பெஷல்' ஆடுங்க! அதுங்க ரெண்டும்'கேளை ஆடு'ங்களாம்! கூண்டுன்னா சின்னது இல்லே. அதுங்க காலாற நடக்கறதுக்கும், துள்ளிக்குதிக்கறதுக்கும் இடம் நிறைய இருந்துச்சு. அதுங்களுக்குத் தீனிக்காக ஏதோ ஒருவித தழைங்களைக்கொண்டுவந்து போட்டுருப்பாங்க. நான் அங்கே போறப்பெல்லாம், அந்தத் தழைங்களை எடுத்து,கம்பிக்கு நடுவாலே நீட்டுவேன். அதுங்க ரெண்டும் என்னப் பாத்தாப் போதும், 'மே மே'ன்னுகத்தும்!


அவுங்க வீட்டுலே கோழிங்ககூட நிறைய இருந்துச்சு. அதுங்க குஞ்சுங்களோட மேயறதைப் பாக்கறதுக்குஜோரா இருக்கும்.அந்த அக்கா ஒரு கிளிகூட வளத்தாங்க!


அந்த அக்காவோட வூட்டுக்காரருக்கு, வேற எங்கோ மலைமேல வேலையாம். எப்பவாவது வருவார். அந்தஆடுங்ககூட அவரு மலையிலே இருந்து கொண்டு வந்ததுதானாம்!


நம்ம அண்ணன் இருக்காரு பாருங்க, அவரு ரொம்ப நல்லா படம் வரைவாரு! அப்பல்லாம் நம்ம 'சந்திராடாக்கீஸ்'லே புதுப்படம் வரும்போது, காலையிலே ஒரு மாட்டு வண்டிலே டும் டும்னு கொட்டு அடிச்சுகிட்டுதெருவுலெ எல்லருக்கும் சினிமா நோட்டீஸ் கொடுத்துகிட்டுப் போவாங்க. அங்கே வேலை செய்யற ஆளுநம்ம அண்ணனோட '·ப்ரெண்ட்' ஆயிட்டாரு. அந்த வண்டி நம்ம வீட்டுகிட்டே வர்றப்ப நானும் டும் சத்தம் கேட்டுட்டு நோட்டீஸ் வாங்க ஓடுவேன். அப்போ அந்த '·ப்ரெண்ட்' கீழே இறங்கி எனக்கு நோட்டீஸ்கொடுத்துட்டு, கூடவே பெரீய்ய்ய சினிமா போஸ்டர் ஒண்ணும் தருவாரு. அது அண்ணனுக்கு!


அண்ணன் அந்த போஸ்டர்லே இருக்கற படங்களைப் பாத்து, அப்படியே வரைஞ்சிருவாரு! நம்ம வீட்டுலெஅண்ணன் வரைஞ்ச படங்கள் ஏராளமா இருந்துச்சு.


படம் மாத்திரமில்லை, நல்லா பொம்மையும் செய்வாரு. புள்ளையார் சதுர்த்தி வரும்போது, ஆளுங்கபுதுக்களிமண்ணாலெ புள்ளையார் சிலை செஞ்சு விப்பாங்க. அந்த ஈர மண்ணெ ஒரு அச்சு மாதிரிஇருக்கற பலகையிலே அடைச்சு ஒரு தட்டு தட்டினா புள்ளையார் அப்படியே 'டபக்'ன்னு வெளியேவந்துருவாரு! கூடவே எருக்கம் மாலையும் விப்பாங்க! ஆனா, ஆத்துப்பக்கம் நிறைய எருக்கஞ்செடிஇருக்குல்லே,நாங்க அங்கேபோய் பறிச்சுகிட்டு வந்து, ஊசிநூலுலெ கோத்துருவோம்!


நம்ம வீட்டுலே மட்டும் சிலையா வாங்காம, நாலணாக்கு வெறும் களிமண்ணை வாங்குவோம். வெறும் மண்ணுன்றதாலே நிறைய தருவாங்க!
அதை அண்ணன் புள்ளையார் சிலையாச் செஞ்சுருவாரு. மூஞ்சூறுகூட அற்புதமா இருக்கும். எனக்கும்கொஞ்சம் பச்சை மண்ணு கிடைக்கும், சின்ன சின்ன சொப்பு செய்யறதுக்கு. இந்த சிலை மட்டுமில்லே,நம்ம வீட்டுலே நோம்பு கும்புடுவாங்களே, அதுக்கும் கலசத்துலே முகம் வரைஞ்சு, கண்ணு, மூக்கு, காதுஎல்லாம் அரைச்ச மஞ்சளாலே அருமையா செஞ்சுடுவாரு!
வத்தலகுண்டுலே நிறைய ராவுத்தருங்க இருக்காங்க. ஒரு தடவை ஒரு பெரியவரு நம்ம ஆஸ்பத்திரிலேகொஞ்சநாள் தங்கியிருந்தாரு. அவருக்கு நம்மோட, ரொம்ப பிரியம் ஏற்பட்டுப் போச்சு! உடம்பு சுகமாகிவீட்டுக்குப் போனப்புறமும், தினம் ஒரு நடை நம்மையெல்லாம் வந்து பாத்துட்டுத்தான் போவாரு.தினமும் கொஞ்சதூரம் நடக்கணும்னு அம்மா சொல்லியிருந்தாங்களாம். இங்கே ராவுத்தருங்கெல்லாம்தமிழ்தான் பேசுவாங்க.அவுங்க வீட்டுலேயும் தமிழ்தான்.


அவரு ரொம்ப பக்திமான். தினமும் சாயந்திரம் மசூதிக்குப் போயிட்டு அப்படியே ஒரு ஏழு மணிவாக்குலெநம்ம வீட்டுக்கு வந்து, வெளியே இருக்கற பெரிய திண்ணையிலே உக்காருவாரு.


அநேகமா அம்மா அந்த நேரத்துலெ ஆஸ்பத்திரி ஜோலியெல்லாம் முடிச்சுட்டு வீட்டுலெதான் இருப்பாங்க.நம்ம பக்கத்துவீட்டு ஆரோக்கியம் அக்காவும் எப்பவுமெ நம்ம வீட்டுலெதான் இருப்பாங்க.
நான் தான் நம்ம ராவுத்தர் தாத்தாவுக்கு, 'சங்கத்தலைவர்'னு பேரு வச்சிருந்தேன்! ராவுத்தர் தாத்தாவந்தவுடனே எல்லாரும் திண்ணைக்கு வந்துருவாங்க. நல்லா இருக்கீங்களாம்மான்னு அன்பாக் கேப்பாரு.சின்னப்புள்ளென்னு நினைக்காம எங்கிட்டேயும் 'இன்னிக்கு என்ன பாடம் படிச்செம்மா? வீட்டுப்பாடம்எழுதியாச்சா?'ன்னு கேப்பாரு. பெரியவங்க எல்லாம் ஏதாவது விஷயம் பேசிகிட்டு இருப்பாங்க. 8 மணிசங்கு ஊதுனவுடனே,'நல்லதும்மா, போயிட்டு வாரேன்'ன்னு கிளம்பிடுவாரு.
பேச்சு எதுலெயோ ஆரம்பிச்சு எங்கெயொ போகும். ஒருநா, எங்க தாத்தா எப்படி செத்தாருன்னு அம்மாசொன்னாங்க. கேக்கறதுக்கு கதை மாதிரி இருந்துச்சு. அக்காங்க எல்லாம் உள்ளெ எதாவது படிச்சுகிட்டோ,
ரேடியோவிலே பாட்டு கேட்டுக்கிட்டோ இருப்பாங்க. அண்ணன் அவர் பாடத்தைப் படிச்சுகிட்டு இருப்பார்.நாந்தான்ஆஆஆன்ன்னு பேசறவுங்க வாயைப் பாத்துகிட்டு அவுங்களோட உக்காந்திருப்பேன்.


ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம்நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கறபசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும்.நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!


அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்பநீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப்பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.


அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ·பாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்கசாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுகேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுகிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாமமுழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சைரசமாம்.நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னுபாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜைஎல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.


அம்மாவுக்குத் தொண்டையிலே சின்னக் கட்டிபோல வந்தது. அவுங்களே ஏதோ மருந்து சாப்பிட்டாங்க. ஆனா அது போகறமாதிரி தெரியலெ!நம்ம ராவுத்தர் தாத்தாதான் சொன்னாரு, 'வியாழக்கிழமை கொஞ்சம் சக்கரை கொண்டுபோய், மசூதிலெ கொடுத்தா பாத்தியா ஓதித் தருவாங்க.அப்படியே ஒரு அச்சு வெல்லத்தை மசூதிலே இருக்கற குளத்துலெ போடுங்க'ன்னு.


நானும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு அச்சு வெல்லமும், ஒரு காகிதத்துலெ பொட்டலம் கட்டுன சக்கரையுமா மசூதிக்குப் போவேன்.அச்சு வெல்லத்தைக் குளத்துலெ போடுவேன். அங்கெ நிறைய வயசான தாத்தாங்க உக்காந்திருப்பாங்க. அவுங்கள்ளே யாராவது அந்தச்சக்கரைப் பொட்டலத்தை வாங்கி, ஏதோ மந்திரம் சொல்லி ஓதிட்டு, திரும்பத் தருவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுகிட்டேவீட்டுக்கு வந்துருவேன். பொட்டலத்துலே பாக்கி இருந்தா அக்காங்களுக்கு அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கணும்!


ரெண்டு மூணு மாசத்துலே அந்தக் 'கட்டி' காணாமப் போச்சுன்னு அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் சக்கரையை பாத்தியா ஓதி வாங்கறது அந்த ஊர்லே நாங்க இருந்தவரைக்கும் தவறாம நடந்துச்சு.


வத்தலகுண்டுக்குப் பக்கத்துலே இன்னொரு கிராமம் இருக்கு. அதுதான் முதல்லே வத்தலகுண்டா இருந்துச்சாம். அப்புறம் ஊர் பெருசாஆகணும்னு இப்ப இருக்கற எடம் வத்தலகுண்டாயிடுச்சாம். அதனாலே அந்தக் கிராமம் பழைய வத்தலகுண்டாயிடுச்சாம்! அங்கே வீடுங்கரொம்ப இல்லே. ஆனா ஒரு பெரிய கோயில் இருக்கு, அது மாரியம்மன் கோயில். சித்திரை மாசம் திருவிழா வரும். அதுக்குன்னு ஏகப்பட்ட 'முஸ்தீபு' இருக்கு. இருங்க சொல்றேன்!


பங்குனி மாசம் தொடக்கத்துலே நல்லதா, மூணுகிளையா இருக்கற வேப்பக்கம்பை எடுத்து, அரைச்ச மஞ்சளைப் பூசி, குங்குமம் வச்சுஒரு மேடையிலெ நடுவிலெ நட்டு வச்சிருவாங்க. இது கோயிலுக்கு முன் வாசல்லே இருக்கும். தினமும், கோயிலுக்குப் பக்கத்துலெஇருக்கற குளத்துலெ பொம்பிளங்க முங்கி எந்திருச்சு, கையோட கொண்டுவந்துருக்கற குடத்துலே தண்ணி மொண்டுகிட்டுப் போய்அந்தக் கம்பத்துக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, சுத்திவந்து கும்பிட்டுகிட்டு, கோயிலுக்குள்ளெ போய் சாமி கும்பிடுவாங்க. இதுபோல ஒரு மாசம், தினமும் நடக்கும்! ஆளுங்க, குடும்பக் கஷ்டங்களுக்காக, சாமிகிட்டே நேந்துகிட்டு, இப்படி ஒரு மாசம் பூரா தினமும் வந்து'கொம்பு'க்கு தண்ணி ஊத்துவாங்க!


30 நாளு ஆனபிறகு, கோயில் திருவிழா நடக்கும். அது ஒரு வாரம். அதுலெ கடைசி மூணு நாளு, சாமி,, இப்ப இருக்கறவத்தலகுண்டுக்கு வந்துரும்! இங்கே மூணு நாளு திருவிழா அமர்க்களப்படும். தினமும் ராத்திரி ஒரோரு அலங்காரமா ஊர்கோலம்வரும். முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்குன்னு. ஜோடனை செய்யறதுக்கு ஆளுங்க வெளியூர்லெ இருந்து வருவாங்க! பாட்டுக் கச்சேரி,பொய்க்காலு குதிரை, கரகாட்டம்னு நடக்கும். வளையல், பொம்மைங்க, விளையாட்டு சாமானுங்க, முட்டாய்ங்கன்னு எங்கெ பாத்தாலும்கடைங்கதான்! குடை ராட்டிணம், தொட்டி ராட்டிணம்னு வேற சுத்திக்கிடே இருக்கும். இந்த சமயம், முழுப் பரீட்சையெல்லாம் முடிஞ்சுபெரிய லீவு விட்டிருபாங்களா, எங்களுக்கெல்லாம் திருவிழா நடக்கற இடமே கதின்னு சுத்திக்கிட்டு இருப்போம்! நம்ம வத்தலகுண்டுலே 'ராஜாஜி மைதானம்'னு இருக்கு. அங்கெதான் இதுக்கு இடம்.


ஒரு பெரிய சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இருக்கே தவிர, மாரியம்மனுக்குன்னு கோயில் இல்லே. அதனாலே மைதானத்துலேஓரு ஓரமா ஓலைக்கொட்டாய் போட்டு அங்கெதான் சாமியை வச்சிருப்பாங்க! அந்த மூணு நாளும் 'ஜே ஜே'ன்னு எங்கெ பாத்தாலும்ஜனங்க ! இங்கேயே ஒரு கோயில் கட்டணும்னு பேசிகிட்டு இருக்காங்களாம்.


அந்த ஊர்லே நமக்குத் தெரிஞ்சவுங்க ( நமக்குத்தான் எல்லாரையும் தெரியுமே!)குடும்பம் ஒண்ணு, சாமிக்கு நேர்த்திக்கடன்னு சொன்னாங்க!அவுங்க வீட்டுலே பெரிய கூட்டுக் குடும்பம்.அவுங்களுக்குள்ளே என்ன சொந்தம்னு சொன்னாலும் புரியாது. அவுங்க வீட்டுக்குப் போனா,நேரம் காலம் தெரியாம விளையாடலாம். அங்கே எல்லா வயசிலேயும் ஆளுங்க இருப்பங்க. ஒரு நாலஞ்சு இடத்துலெ சமையல் கட்டுங்களாஇருக்கும்! வேற வேற சமையல் செஞ்சுகிட்டு இருப்பாங்க! அந்த வீட்டுலெ ஒரு பெரியம்மா இருக்காங்க. அவுங்கதான் எல்லாருக்கும்'க்ளாஸ் லீடர்'மாதிரி!
'எல்லாப் புள்ளைங்களையும் இழுத்துக்கிட்டு, காலேல 5 மணிக்கெல்லாம் புறப்பட்டுக் கோயிலுக்குப் போகணும்'னு அம்மாகிட்டே சொல்லிகிட்டுஇருந்ததை நான் கேட்டேன்! என் கண்ணுல இருந்த ஆசையைப் புரிஞ்சுகிட்டு, பெரியம்மா( எல்லாப் பசங்களும் அவுங்களை அப்படிக் கூப்புடறதுனாலே நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்!)சொன்னாங்க,


"பாப்பாவையும்( நாந்தான் அது)அனுப்பறேங்களா?"

" அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாளே!"

" நான் எந்திருச்சுருவேன்" இது நானு.

" நாங்க எல்லாரும் கிளம்பி இங்க வர்றதுக்கு ஒரு அஞ்சரை ஆயிரும். எப்படியும் இந்தப் பக்கம்தான், உங்க வீட்டைத் தாண்டிப் போகணும். நாங்க வந்து கூப்புட்டுக்கிட்டுப் போறோம்"


" அவ்வளவு தூரம் நடப்பாளான்னு தெரியலையே"

"நடப்பேன் நடப்பேன்" இது நானு.

" திரும்பி வந்து ஸ்கூலுக்குப் போகணுமே"

" இந்தப் பசங்கெல்லாம்கூட ஸ்கூலுக்குப் போகணும்தான். இன்னும் லீவு வுடலையே"

" எத்தனை மணிக்குத் திரும்புவீங்க?"

" என்ன, ஒரு எட்டுக்கு முன்னாலெ வந்துருவொம்"

அம்மா ஒருவழியா சம்மதிச்சுட்டாங்க! மறுநாள் காலையிலே யாரோ என்னப்போட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்குறாங்க!


கண்ணைத் திறந்தா, சின்னக்கா கையிலே ஒரு தண்ணிக் குடத்தோட நிக்குது! 'சீக்கிரம் கிளம்புடீ, எவ்ளோ நேரமா எழுப்புறது?அவுங்கெல்லாம் வந்து வாசல்லே நிக்கறாங்க.எந்திரிச்சி ஓடு'ங்குது!


அப்பத்தான் ஞாபகம் வருது, நான் கம்பத்துக்கு தண்ணி ஊத்தப்போணும்ங்கறது! அரக்கப் பரக்க எந்திரிச்சு, அசட்டுச் சிரிப்போடவெளியே போனேன்.'கொஞ்சம் இருங்க. பல்லு விளக்கிட்டு வந்துருவா'ன்னு அக்கா சொல்லுது.


'அதெல்லாம் போற வழிலே பாத்துக்கலாம். இதுங்கெல்லாம் கூட அப்படியேதான் வருதுங்க'ன்னு பெரியம்மா சொன்னாங்க.


நானு தண்ணிக்குடத்தை எடுத்துகிட்டு, (குடம் என்ன குடம், அது குடம் மாதிரி இருக்கற சொம்புதான்!)கிளம்பிட்டேன்.


போற வழிலே, புளியங்கா நிறைய இருக்கு. எடுக்கலாம்னு பாத்தா, 'இப்ப வேணாம். இன்னும் நீங்க யாரும் பல்லு விளக்கல்லே.வரும்போது எடுக்கலாம்'னு பெரியம்மா சொல்லிட்டாங்க!


ரோட்டுலே நடமாட்டம் அவ்வளவா இல்லே. இவ்வளவு காலேலெ அப்படித்தான் இருக்கும்னு பெரியம்மா சொன்னாங்க. ரோடெல்லாம் ஆடிகிட்டே போனோம். ரொம்ப நேரம் போனமா, அப்ப தூரத்துலே மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிஞ்சது!



மெயின் ரோட்டுலே இருந்து பிரியுற செம்மண் பாதையிலே இறங்கி ஓடுனோம். குளம் வந்துருச்சு. குளத்துக்குப் பக்கம் இருக்கறவேப்ப மரத்துக்கிளையை உடைச்சு,சின்னக் குச்சிங்களா எடுத்து எங்களுக்குத் தந்தாங்க பெரியம்மா. எதுக்குத் தெரியுமா?


பல்லு விளக்க! அதைக் கடிச்சு,அப்படியே மெல்லணும்.கசப்பா இருக்குன்னு மென்னு மென்னு துப்பிகிட்டு இருந்தோம். அது அப்படியேப்ரஷ் ஆயிருச்சு. அதைவச்சு பல்லை விளக்கிட்டு, குளத்துலே முங்கி எந்திரிச்சு,'குடத்துலே'தண்ணி ரொப்பிகிட்டு, கோயிலுக்குமுன்னாலெ நட்டு வச்சிருக்கற கம்பத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, உள்ளெ போய் சாமியைக் கும்பிட்டோம். ஈரப்பாவாடை, கவுனுஅப்படியே உடம்புலே ஒட்டிகிச்சு. நடக்கவே முடியலே! எங்களை மாதிரி நிறையப் பேரு ஈரமா வந்து சாமி கும்புடறாங்க.கோயிலு தரையெல்லாம் 'நச நச'ன்னு ஈரமா இருக்கு. எங்கே வழுக்கிறுமோன்னு, பயந்து பயந்து காலை தூக்கி வச்சு நடக்கறோம்.சாமியைக் கும்புட்டு, துண்ணூரு வாங்கிக்கிட்டு வந்தவேலை முடிஞ்சு போச்சுன்னு கிளம்பிட்டோம்.



வர்ற வழியெல்லாம் ஒரே ஓட்டம்தான். வெய்யிலு வர ஆரம்பிச்சிருச்சு. பாவாடை சட்டையெல்லாம் அப்படியே காஞ்சுபோச்சு.மரம் மரமாப் போயி புளியங்கா பொறுக்கிக்கிட்டே வீடு வந்துட்டோம். மறுநாளு, என்னைத் தயாரா இருக்கச் சொல்லிட்டுபெரியம்மாவும், மத்த பசங்களும் போயிட்டாங்க.
அக்காகிட்டே வழக்கம்போல, இதுவரைக்கும் நடந்ததெல்லாம் சொன்னேன். அக்கா சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு,'போய் நல்லா பல்லு விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்புடு.ஸ்கூலுக்கு நேரமாயிருச்சு'ன்னு சொன்னாங்க.


எங்கிட்டே ஒரு பழக்கம் என்னனா, பள்ளிக்கூடத்துலே இருந்து வந்தாலும் சரி,வேற எங்கேயும் போயிட்டுவந்தாலும் சரி,வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே, நடந்தது எல்லாத்தையும் ஒப்பிச்சாகணும். அவசரமா பாத்ரூம் போகணும்னு இருந்தாலும்,கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு, விஷயத்தைச் சொல்லிட்டுதான் பாத்ரூமுக்கு ஓடுவேன்.பெரியக்கா சொல்லும்,'கிருஷ்ணர் வேஷம்போடாதே! பாத்ரூமுக்கு போயிட்டு வந்து சொல்லு'ன்னு. ம்ம்ம்ஹூம். நான் அதையெல்லாம் கேக்கற ஆளா?


மறுநாளு, அம்மாவே காலெல எழுப்பி என்னை 'ரெடி'பண்ணிட்டாங்க. அன்னைக்குத் திரும்பிவரப்போ, சும்மாப் போனமாட்டுவண்டிலெ எங்களை ஏத்திக்கிட்டாங்க! ஜாலியா இருந்துச்சு. அப்புறம், நாங்களாவே மாட்டுவண்டி 'லி·ப்ட்' கிடைக்குமான்னுபாத்துகிட்டே இருப்போம். சிலநாள் கிடைக்கும். சிலநாளு ஒண்ணுமே அந்த நேரத்துலே வராது!


இப்படியே ஒரு மாசமும் போயிருச்சு.நடுவுலே பெரிய பரிட்சை முடிஞ்சு லீவும் வுட்டுட்டாங்களா, ஒரே ஆட்டம்தான்!


அப்புறம் திருவிழா ஆரம்பிச்சு, சாமி இங்கே வந்துச்சு. தினம் நல்லா சுத்திகிட்டு இருந்தோம். கைலேயும் காசு நடமாட்டம் நிறையஇருந்துச்சு. திருவிழாக் கடையிலே ஒரு பச்சைக்கல் வச்ச அழகான லோலாக்கு ரெண்டணாவுக்கு கிடைச்சது. அக்காவுக்கு'சர்ப்ரைஸ்' தரலாம்னு, அதைவாங்கி, வீட்டுக்கு வெளியே இருக்கற திண்ணையிலே உக்காந்து, நான் ஏற்கனவே போட்டுருந்தத்தங்க லோலாக்கை அவுத்துட்டு,பச்சைக்கல் லோலாக்கைப் போட்டுகிட்டு வீட்டுக்குள்ளெ போய் அக்காவுக்குக் காமிச்சேன்.


அக்கா, ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, 'நீ போட்டுருந்த தங்கலோலாக்கு எங்கே?'ன்னு கேட்டுச்சா, அப்பத்தான்ஞாபகம் வருது, நான் அதை அங்கே திண்ணையிலேயே வச்சுட்டு வந்துட்டேன்னு. ஓடிப் போய் பாக்கறேன், எனக்கே'சர்ப்ரைஸ்!' அது அங்கே இல்லை! 'திருவிழாக்கூட்டம்தான் ஊரெல்லாம் மேயுதே, யாரு கையிலே கிடைச்சதோ'ன்னுஅப்புறம் எல்லாரும் வீட்டுலே கத்திக்கிட்டே இருந்தாங்க! எனக்கு நல்லா'டோஸ்'கிடைச்சது!


நன்றி: மரத்தடி

14 comments:

said...

:)))

Nice!

said...

ம்ஹூம் இதெல்லாம் சரியில்லாத வேலை.. வேணா முதல் எழுதியிருக்கிறதுக்கு சுட்டி குடுத்துட்டு, புதுசாப் பதியுங்க. (நான் நேற்று மயில்லே கேட்டது பத்தி எழுதுங்களேன்..)

"முஸ்தீபு" என்டா என்ன?முன்னேற்பாடா?

said...

நன்றி தங்கமணி.

ஷ்ரேயா,

நாளைக்குப் பதியறதுக்கு இப்பத்தான் முஸ்தீபு நடந்துக்கிட்டு இருக்கு.

ச்சுட்டியெல்லாம் கிடையாது. எல்லாம் மீள் பதிவு:-))))

இன்னும் 4 நாள் இருக்குல்லே.

said...

இந்த மால்குடி டேஸ்னு ஒரு சீரியல் வருமே அதுல வர்ற கேரக்டர்ஸ் மாதிரி இருக்குங்க துளசி.

சூப்பரா ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கி படிக்கும்போதே நானும் உங்களோடவே ஒன்னாயிட்டேன்.

சில இடங்கள்ல உணர்ச்சிவசப்பட்டுட்டேங்க. அவ்வளவு நல்லாருந்தது உங்க நெரேஷன். நன்றிங்க.

நான் நாளைலருந்து லீவான்னாலும் எப்படியாவது உங்க ஸ்டார் பதிவுகள படிச்சி பின்னூட்டம் போட்றுவேன். இது உறுதி.

said...

டிபிஆர் ஜோ,

என்னங்க இப்படிச் சொல்றீங்க? உங்க ஹிட்லர் கதையிலே பாருங்க, விவரமெல்லாம்
எப்படி விவரணையா இருக்கு. அதுக்கு முன்னாலெ இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க.

பாக்கறதையெல்லாம் மனசுக்குள்ளெ பதிஞ்சு வச்சுக்கணும் ஒரு எழுத்துக்காரன்/காரின்றது
உண்மையான பேச்சுங்க.

பண்டிகையைச் சந்தோஷமாக் கொண்டாடுங்க. வீட்டுலே எல்லாருக்கும் எங்கள் 'கிறிஸ்மஸ்
வாழ்த்துக்கள்'


டி ராஜ்,

உங்களுக்குப் பிடிச்சிருந்ததுன்றதே எனக்கு உண்மையான சந்தோஷம்.

said...

எம்மதமும் சம்மதம் என்பதை ரொம்ப அழகா சொல்லியிருக்கிறீங்க.

said...

ஆகா! லோலாக்கு தொலஞ்சு போச்சா! அடப்பாவமே......நல்லா திட்டு வாங்கீருப்பீங்க. இது மாதிரி நானும் காலெஜ்ல மோதிரத்தைத் தொலச்சுட்டு திட்டு வாங்கினேன். நம்புங்க. நான் அந்த மோதிரத்தைச் சம்பாதிச்சுத் திருப்பிக் கொடுத்துட்டேன். இது உண்மை உண்மை உண்மை.

said...

கலை,

நன்றிங்க.

ராகவன்,
நம்பறேன்
நம்பறேன்
நம்பறேன்

said...

டிபிஆர் சொல்வதுபோல் உங்கள் இளங்காலத்திற்கும் வத்தலகுண்டிற்கும் அழைத்துச் சென்றுவிட்டீர்கள், அடுத்தமுறை கொடை செல்லும் போது உங்கள் ஊர் ஏதோ பார்த்த ஊராக தோன்றப் போகிறது. அடிப்பொளி :)

எனக்கென்னவோ ' ஒரு குடம் தண்ணி ஊற்றி ஒரு பூ பூத்ததாம்" பாடலும் நினைவுக்கு வந்தது.

said...

மணியன் ,
வருகைக்கு நன்றி.

மலரும் நினைவுகளில்கூட இளம்பிள்ளைப் பருவம்தான்
மனதில் அப்படியே நின்றுவிடுகின்றது, இல்லையா?

said...

கலக்கல் பதிவு அக்கா.

ஆனா
//தம்பி ராமநாதனுக்குப் பதில் சொல்றப்ப 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'னுஎழுதுனப்பத்தான் ஞாபகம் வந்துச்சு//
இப்படி சொல்லி என்ன வம்புல மாட்டி விடறேளே?

நான் சும்மானாச்சுக்கும் எழுதுனது!! :((((

said...

அக்கா,
திண்ணைப் பேச்சு எல்லம் சொல்லி பழச ஞாபகப் படுத்துறீங்க.
ம்ம்...இந்த சின்ன சின்ன சந்தோசங்கள்தான் பொத்திப் பாதுகாக்கப்படணும்.
நீங்க எப்படி இந்த நியூசில பொழப்ப ஓட்டுறீங்க?

said...

கலக்கறீங்களே சேச்சிக்கா ..

said...

கல்வெட்டு & எல் எல் தாஸு,

வருகைக்கு நன்றி.

கல்வெட்டு,

நமக்கு ஆண்டவன் நியூஸி த் தண்ணியை எழுதிவச்சுட்டான். அதான் குடிச்சுக்கிட்டு இருக்கேன்:-))))