Showing posts with label Alappuzha. Show all posts
Showing posts with label Alappuzha. Show all posts

Monday, April 06, 2015

ரெவியிண்டெ ஸ்வந்தம் ம்யூஸியம் போகாம், வரூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 36)

இந்தியா வந்துட்டோமுன்னா நம்ம நித்தியப்படி சமாச்சாரங்களில் ஒன்னு  அண்ணனுக்கு தினமும் ஃபோன் பண்ணுவது. நாம் பத்திரமா இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டே,  ஊர் சுத்துவோம். அநாவசியக் கவலையை அவுங்களுக்கு  ஏன் கொடுக்கணும், இல்லையா?

மரியா வந்து சேர்ந்ததையும், அம்முவின்  பூனை சமாச்சாரத்தையும் சொன்னேன். அண்ணனும் அண்ணியும்  Zeus விவரம் கேட்டு  ரொம்ப வருத்தப்பட்டாங்க. சரி நடந்தது நடந்துபோச்சு அதுக்கு அவ்ளோதான் ஆயுசுன்னு  ஆறுதல் சொன்னகையோடு,  'கருணாகரன் ம்யூஸியம் கட்டாயம் போய்ப் பார். உனக்கு ரொம்பவே பிடிக்குமு'ன்னதும், அதைப் பற்றிய விவரம் கேட்டுக்கிட்டேன். அங்கேதான் போறோம் இப்ப.


காம்பவுண்டை விட்டு வெளியே வர்றோம். தண்ணீரெல்லாம் வடிஞ்சுபோய் பாதை கண்ணுக்குத் தெரிஞ்சது!  படகுத்துறை கடந்து குரிசடி வரை வந்துட்டு  வலக்கைப் பக்கம் திரும்பணும்.



மரியாவில் இருந்து ஆலப்புழாவுக்கு வெறும் 20 கிமீ தூரம்தான்.  ஊருக்குள்ளே வந்ததும்  வழியை விசாரிக்கலாமுன்னு ஒரு பைக் நபரிடம் கேட்டதுக்கு, நான் அந்த வழிதான் போறேன். பின் தொடர்ந்து வாங்கன்னார்.  ஃபாலோ மி பிஹைண்ட்:-)))


சரியா அங்கே கொண்டுவிட்டதும் நன்றிகள் சொன்னோம்.  தெரு என்னவோ சாதாரணமாத்தான் இருக்கு.  கம்பி கேட்டுக்கு அப்புறம்  வெள்ளை அன்னம் போல் பெரிய கட்டிடம்!  வாசலில் சின்னதா ஒரு தோட்டம்.  ஆறு இத்தாலிய மங்கைகளின்  பளிங்குச் சிலைகள் தாங்கி நிற்கும் ஒரு  கூடார மண்டபம். சின்னதுதான்.




அதுக்கு அந்தாண்டை ஒரு அல்லிக்குளம். நடுவில் ஒரு சிலை. தகப்பனும் மகனுமா! பைபிள் கதையில் வரும்  மந்தையில் இருந்து பிரிந்துபோன ஆடு, மறுபடி வந்ததுபோல்  வீட்டையும் தகப்பனையும் விட்டுப்போன மகன், பாகம் பிரிச்சுக்கொண்டு போன காசு அத்தனையும் தொலைச்சுட்டு வீடு திரும்பின சம்பவம். தகப்பன்,  செல்வம் போனால் போகட்டும். நீ திரும்ப வந்ததே பெரிய சொத்து என்று அணைச்சு வரவேற்கிறார். ஏழடி உசரத்தில் இந்த வெண்கலச் சிலை, 1400 பவுண்ட் கனம்  உள்ளதாம்.  உலகப்புகழ் பெற்ற சிற்பி ஸாம் ஃபிலிப்  இந்தச் சிலையை (The Prodigal Son)  செஞ்சுருக்கார்.



ஆறு பெரிய தூண்கள் அணிவகுத்து நிற்கும் முகப்புக் கட்டிடம்.  பக்கவாட்டுஅறையில்   அனுமதிச்சீட்டு வாங்கிக்கணும்.  150 ரூபாய் ஒரு ஆளுக்கு.  நாங்க மூணு டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.  தனியார்  சேகரிப்பு இந்த ம்யூஸியத்தில் இருக்கு. நம்மை உள்ளே அழைச்சுக்கிட்டுப் போறார்  ம்யூஸியத்து வழிகாட்டி.


படங்கள் எடுக்க அனுமதி இல்லை. மனசு சோக கீதம் பாடியது உண்மை. ஆனால் இவுங்க வலைப்பக்கத்துலே  கொஞ்சம் படங்கள்  போட்டு வச்சுருக்காங்க. கூடவே தகவல்களும்.


கிருஷ்ணன் முதலாளி  என்பவர்தான்  கேரளாவில்  தேங்காய் நார் பயன்படுத்தித் தயாரிக்கும் தொழிலுக்கு (Coir products) முதல் தொழிற்சாலை  ஆரம்பிச்சவர்.  இதுக்கு முன்னே இந்தத் தொழில்  ஐரோப்பியர்  கைவசம் இருந்தது. கைத்தறி நெசவு போல் ஆரம்பத்தில் இருந்த  தொழிலை,  நவீனமயமாக்குனது இவரது மகன் கருணாகரன்.  இவர் முதலில்  இங்கிலாந்து (Birmingham University)  படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக ஜெர்மனி போனார். அங்கே படிப்புமுடிஞ்சதும், ஒரு ஜெர்மானியப்பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவருக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு மக்கள்.  ரெவி,லீலா.

தகப்பனின்  மறைவுக்குப்பிறகு  தொழிற்சாலை ரெவியின் கைகளுக்கு வந்தது. தொழிலை இன்னும் நல்லா விரிவு படுத்தி ஓஹோன்னு இருந்துருக்கார். மனைவியின் பெயர்  Betty. இவருக்கு ஒரே மகள்,  Lullu.

தொழில் சம்பந்தமா பலநாடுகளுக்குப்போய் வர்றார். கலைப்பொருட்கள் மீதுள்ள ஆசையால் ஒவ்வொரு பயணத்திலும் பொருட்கள் சேர்ந்துக்கிட்டே வருது.  தன்னுடைய 72 ஆம் வயசில்  (2003) ரெவி காலமாகிட்டார்.

கடைசியில் இவ்வளவையும் வீட்டுலே வச்சுக்கிட்டு என்ன பண்ணறது?  நாலு பேர் பார்த்து சந்தோஷப்படட்டுமேன்னு  அவருடைய மனைவி Bettyயும் மகளுமா  திட்டம் போட்டு, தனியா ஒரு கட்டிடம் கட்டி  மக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க. 2006 ஆம் ஆண்டு மேகாலயா கவர்னர்  வந்து திறந்து வச்சுருக்கார்.




கீழ்தளத்தைப் பார்த்து முடிச்சதும், மாடிக்குக் கூட்டிப் போனார் வழிகாட்டி. விளக்கைப் போட்டதும்.....   கண் எதிரில் ஒரு மாயாலோகம்! க்றிஸ்டல், பளிங்கு, தந்தம், போர்ஸலீன், வெள்ளி  இப்படி பலவகைகளில்  சின்னச்சின்ன சிற்பங்கள். எல்லாம் அழகா கண்ணாடிப் பொட்டியில் தூசு படாமல் வச்சுருக்காங்க. பார்வையாளர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் நிம்மதியா சுத்திச்சுத்திப் பார்க்கும் வகையில் அமைப்பு. நம்ம சீனிவாசன்  ஒரு சுத்துப் பார்த்துட்டு  கீழே  போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.


நாங்க  இந்த மாடியில் ஒவ்வொரு  கண்ணாடிப்பொட்டிக்கு முன்னும் நின்னு  ஆஹா...ஓஹோன்னு  சொல்லிக்கிட்டு இருக்கோம்.

ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!  எதைச் சொல்ல எதை விட?  வெண்ணையில் செய்ததைப்போல தந்தத்தில் அப்படியே இழைச்சு வச்சுருக்காங்க. ஒரு அலமாரியில்  கஜுராஹோ சிற்பங்களைப்போல் முழுசும் தந்தத்தில்!  இத்துனூண்டு சிற்பங்களில் என்ன ஒரு வேலைப்பாடு!
கடவுளர் சிலைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை!  அவதார் என்ற பெயரோடு ஒன்னு இருக்கு பாருங்க..... ஹைய்யோ!!!!!



நம்ம கோபால் எப்பவும், நான்  சின்னச்சின்ன பொம்மைகளையும் பொருட்களையும்  சேகரிப்பதைப் பார்த்து,  எவ்ளோ ஜங்க்(!) சேர்த்து வச்சுருக்கேன்னு சொல்வார்.  இதெல்லாம் அவர் பார்வைக்கு ஜங்க்காமே ஜங்க். பேசாம என் காலத்துக்குப் பிறகு இப்படி  அழகா டிஸ்ப்ளே செஞ்சுருங்க. உங்களுக்கு வருமானமுமாச்சுன்னு  சொன்னேன். பொழுதும் போனமாதிரி இருக்குமே!  ஜஸ்ட் ஒரு டாலர் தான் எண்ட்ரி ஃபீ:-)

இந்த மாடியின் பின்பகுதியில்   கேரளா  ஹால் ஒன்னு  இருக்கு. பொதுவா கேரளத்தைப் பற்றி இதுவரை தெரிஞ்சுக்காதவங்களுக்காகன்னு வச்சுக்கலாம். தரை முழுக்க  பாலீஷ் செஞ்ச டெர்ரகோட்டா டைல்ஸ் போட்டு  உள்கூரை நல்ல தேக்குமரத்தில் பாரம்பரிய வேலைப்பாடுகளோடு  அழகோ அழகு!   இதற்கடுத்து இதை ஒட்டினாப்போல ஒரு பெயிண்டிங் கலெக்‌ஷன். ஓவியங்கள் ப்ரமாதம்.

இதே கட்டடத்தின்  பின்பகுதியில்  ரெவி கருணாகரனின்  குடும்பம் வசிக்கிறாங்க. ஒரே மகள்தானே.  ஆனால் அவுங்களுக்கு  ஒரு விதமான   உடல்நிலைக் கோளாறு. நெருங்கிய உறவினரின் கவனிப்பில் இருக்காங்களாம். தன்னுடைய  சொத்து சுகங்களோ, இத்தனை அபூர்வமான  கலைச்செல்வங்களோ  இருக்கு  என்ற விவரம் கூடப் புரிந்துகொள்ள முடியாத  ஒருநிலை.ப்ச்.... எனக்கு  ஐயோன்னு  இருந்தது:(

லீலா பேலஸ் ரிஸார்ட்டுகள் உட்பட ஏகப்பட்ட  பெரிய பெரிய நிறுவனங்களை ஏற்படுத்திட்டுப் போயிருக்கார் ரெவி.

ம்யூஸியம் பார்க்க  உள்ளூர்க்காரர்கள்  வருவது அபூர்வமாம். ஆனால் வெளிநாட்டினர் அநேகர் வருவதுண்டாம்.  இங்குள்ள தந்த சிற்பங்களின்  விவரம் எல்லாம் அரசாங்கக் கணக்கெடுப்புக்கு  உட்பட்டதுன்னார்.

வார விடுமுறையாக  திங்கட்கிழமை  லீவு .பார்த்து வச்சுக்குங்க. மற்ற நாட்களில் தினமும் காலை 9 முதல் மாலை 5 வரை திறந்துருக்கும்.


ஒன்னேகால் மணி நேரம்போனதே தெரியலை. கீழ்தளத்தில் ரெஸ்ட் ரூம்  நல்ல வசதிகளோடு நீட்டா இருக்கு!



வெளியே தோட்டத்திலும் சில சிற்பங்களை  வச்சுருக்காங்க.ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் கூட இருக்கு. பழையகால சாமான்களை இனி இப்படிப் பார்த்தால்தான் உண்டு.


சரி கிளம்பலாமுன்னு காருக்கு வந்தா....சீனிவாசன் நல்ல தூக்கத்தில்!
இனி ஒரு   அரைமணிக்கூர்  பயணம் செஞ்சு கோவிலுக்குப் போறோம்.
எண்டே க்ருஷ்ணா.... இதா வருந்நு...

தொடரும்........:-)

PINகுறிப்பு:  நாம் ரவி, ரமா என்பதை,  ரெவி, ரெமான்னுதான்  கேரளத்தில் சொல்றாங்க.

சொல்ல மறந்துட்டேனே.......   'உள்ளே ' படங்கள் எல்லாம் இவுங்க பக்கத்தில் சுட்டது!  வேற வழி இல்லை.  மாப்பு ச்சோதிக்குந்நு   ரெவிமுதலாளி!





Wednesday, April 01, 2015

வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)

அறைக்கதவைத் தட்டிய ரெமா (இவுங்கதான் இங்கே மேனேஜர்)  பகல் சாப்பாட்டுக்கு என்ன வேணுமுன்னு கேட்டாங்க. சிம்பிளா கொஞ்சம் பருப்பும் சாதமும் என்றேன். 'மீன் கறி இங்கே  நல்லா இருக்கும். வைக்கட்டுமா'ன்னாங்க.  அடராமா......  வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் முகம் கொஞ்சம் வாடிப் போச்சு. வெள்ளை அரிசியா இல்லை சிகப்பா?  வெள்ளைன்னேன். பச்சரின்னும் சொல்லி வச்சேன்.  இன்னும் ஒரு மணி நேரத்தில்  சாப்பிடலாமுன்னு சொல்லிப் போனாங்க.

வைஃபை இருக்குன்னதும்  நாங்க  கொஞ்ச நேரம் மெயில் பார்த்துட்டு,மகளுக்கு ஆறுதலா ஒரு கடிதம் அனுப்பினேன். ஒரு ஏழெட்டு மெயில் இங்கும் அங்குமாப் போச்சு. ஜூபிட்டர் எப்படி இருக்கான்னதுக்கு அவன் கொஞ்சம் சோகமா இருக்கறமாதிரி இருக்குன்னாள். 'அவனுக்கு  இவனைக் காமிக்கலைதானே? ஆமாம்.  நல்லது,  அவன் மனசில் இவன் காணாமப் போனதாகவே இருக்கட்டும்.'

க்ரெமெடோரியம் ஆள்  வந்து கொண்டு போயிட்டாராம். அஸ்தியை,  மகளின் வெட்னரி க்ளினிக்குக்கு அனுப்பிருவாராம். 'அங்கே இருந்து கூப்பிடுவாங்க'ன்னு சொல்லிப் போனாராம்.  கவலைப்படாதே. Zeus க்கு  நல்ல கதி கிடைக்கும்.  அவன் ஆயுசு அவ்ளவுதான்.  நான் பெருமாளிடம் நல்லபடி வேண்டிக்கறேன்,  என்றேன்.

மரியா ஒரு  அழகான நாலுகெட்டு வீடு. கேரள பாரம்பரியத்தில்  ரொம்பவே பிரஸித்தி உள்ளது இந்த நாலுகெட்டு டிஸைன்கள். வாசலில்  வருபவர்கள் உக்கார  சுற்றிலும் அகலக்குறைவான  திண்ணை போல் ஒரு அமைப்பு இருக்கும். இங்கே திண்ணைச்சுவருக்குப் பதிலா  மரத்தில் பெஞ்சு போல ரெண்டு பக்கங்களிலும் அமைச்சு இருக்கு.



வாசலைக் கடந்தால் அகலமான வெராந்தாக்கள் நாலுபுறமும்  ஓட நடுவில் ஒரு திறந்த வெளி முற்றம், பளபளக்கும் நாலு தூண்களுடன்.வலது பக்கத்தில் வெராந்தாவில் (இது   ஒரு ஹாலின் அளவில் இருக்கு)  ஸிட்டிங்ரூம் பர்னிச்சர்களா   மூணு  மூங்கில் ப்ளாச்சுகள் பின்னிய  ஆசனங்கள்.

 முற்றத்தையொட்டி ஊஞ்சல். இது சதுரப்பலகை!   முற்றத்தின் பக்கம் காலைத் தொங்கவிட்டும் உட்காரலாம்.  முற்றம் நிறைய கூழாங்கற்களை நிரவி வச்சு, ஓரம் முழுசும் மணி ப்ளாண்ட் செடிகள். பார்க்கவேஅழகு!
இதுக்கு நேர் எதிரா இருக்கும் வெராந்தாவில் சாப்பாட்டு மேஜை. பத்து நபர்கள் சேர்ந்து சாப்பிடலாம்.



வாசக்கதவுக்கு நேரா முற்றத்தைக் கடந்தால்  பின்கட்டுக்குப் போகலாம். இங்கேயும் உம்மரத்தில் உள்ளதுபோல்  திண்ணைபெஞ்சுகள். சாரு கஸேரைகள் (ஈஸிச்சேர்)போட்டு வச்சுருக்காங்க. எதிரே அழகான தோட்டம். தெங்குகள் எல்லாம் பதினெட்டாம்பட்டை வகை. தென்னங்கன்னு வளர்க்கும்போது  பாளை ஒவ்வொன்னா வருது பாருங்க. அதுலே பதினெட்டாவது முளைச்சு வரும்போது, தெங்கு காய்க்கத் தொடங்கிரும்.




தோட்டத்துக்கு அந்தப்பக்கம் பாடங்கள் (வயல்கள்).  குட்டநாடு நெல்வயல்கள். இப்போ கொய்த்து முடிஞ்சு அடுத்த நடவுக்குக் காத்திருக்கு நிலம்.




மற்ற இரண்டுவெராந்தாக்களிலும்  அலங்காரப்பொருட்கள். ஒரு பழையகால மரத்தொட்டில் கூட இருக்கு. வெராந்தாக்கள் சேரும் நாலு மூலைகளிலும்  படுக்கை அறைகள். ஒரு மூலையில் மட்டும் அறைக்குப் பதிலாக அடுக்களை!
அறையும் நல்லாப் பெருசாதான் இருக்கு. இதுக்குள்ளேயேபெட்டிகள் வச்சுக்க ஒரு சின்ன அறை.  பக்கத்தில் குளியலறை. இங்கேயும்  ஷவருக்கு அப்புறம் கூழாங்கல்போட்டு மேற்புறம் மூணு பட்டைகளாகத்  திறந்த அமைப்பு. மழை வந்தால் அது உள்ளேயும் வரும் வகை:-)

படுக்கை அறைப்பகுதியில்  எழுதும் மேஜை, நாற்காலிகள். டிவி, ஏஸி எல்லாம்  அதது வேண்டியபடி. பின்பக்கக் கதவைத் திறந்தால்  நல்ல சைஸில் சிட் அவுட்.  எனக்குப் பிடிச்ச திண்ணைபெஞ்சு. ஐ சிம்ப்ளி லவ் திஸ் ப்ளேஸ்!
வெயில் கண்ணை உறுத்தாமலிருக்க  சின்ன மூங்கில்பட்டைகளால் ஆன திரை! ப்ரைவஸிக்கும் ஆச்சு,  இல்லையோ!


முன்வாசலுக்கு வெளியே எட்டிப் பார்த்தால்  காம்பவுண்ட் சுவருக்கு  அந்தப்பக்கம் அகலமாக ஓடும் ஆறு! பம்பா நதி! மணிமாலா ஆறு என்ற ஒன்னு  பம்பாவின் துணையாறு போல்  பம்பாவில் வந்து சேர்ந்துருது. அதனால் எல்லாமே பம்பா பம்பாதான். காசிக்கு கங்கை எப்படியோ அப்படி இந்தப் பக்கங்களில்  இதுவும் ஒரு புனிதம் என்பதே!  சேரநாட்டு மலைகளில் மழை பெய்ய ஆரம்பிச்சவுடன், நீர்வரத்து அதிகமாகி  பொங்கிப்பெருகி பாதைகளைக்கூட மூடிருது. அதான் நாம் வழி தெரியாமல் முழிச்சதன் காரணம்.

வீட்டின்ற உடமஸ்தர்  துபாயில் இருக்காராம். அவரது பலநாள் கனவாம் இப்படி ஒன்னு அமைக்கணும் என்பது. பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கிட்டுப் போறாங்களாம். இப்போதான்  முதல்முறையா நியூஸி மக்கள் வந்துருக்காங்க:-)   இந்த வீட்டைத் தவிர்த்து தோட்டத்தில் தனித்தனியா நாலு காட்டேஜ்கள் இருக்கு.  முக்கியப்பட்ட பல சினிமா தாரங்கள் மோகன்லால், மம்மூட்டி போன்றோர்  பத்துநாளைக்கு  வந்து தங்கி ஓய்வெடுத்துக்கறது  பதிவு.  ( பதிவு = வழக்கம்)  இங்கேயே ஆயுர்வேத மஸாஜ், போட் ஹவுஸ் அனுபவிக்கணுமென்றால் அதற்கான ஏற்பாடுகள், ஊரைச் சுற்றிப்  பார்க்கணும் என்றால்  அதுக்குத்தகுந்தபடின்னு  எல்லா வசதிகளையும் செஞ்சு தர்றாங்க. காட்டேஜ்களில் இப்ப யாரும் இல்லை. உள்ளே பராமரிப்பு வேலைகள் நடக்குதுன்னு சொன்னாங்க. டிசம்பர் சீஸனுக்கு ரெடியா  இருக்கணுமாம்.

நமக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு செஞ்சு தற்றாங்க. நாங்க சிம்பிளான வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் ரெமா கொஞ்சம் வெலவெலத்துப் போயிட்டாங்க:-) மீன்கறின்னு சொல்லி இருந்தால் வாசலில் ஓடும் நதியிலேயே மீன்  பிடிச்சுச்  சமைச்சுருவாங்களாம்!

சமையல் ஆகும்வரை கொஞ்சம் வாசலுக்கு வந்து க்ளிக்கிட்டு இருந்தேன். வாசலில் நின்னு பார்த்தப்ப இடதுபக்கம்  கொஞ்சதூரத்தில் அழகான ஒரு சர்ச்!  நதியின் வளைவில் இருப்பதால் தண்ணிக்குள்ளே நிற்பதுபோல் இருக்கு. அக்கரைக்குப் போனால் பார்க்கலாம். போயிருக்கலாமேன்னு இப்பத்தோணுது எனக்கு. தனியார் படகுகள் இங்கே அங்கேன்னு  நதியைக் கடக்கப் போய் வருதுதான். இதைத்தவிர  புளின்குன்னு வெலியநாடு ஃபெர்ரி சர்வீஸொன்னு இக்கரைக்கும் அக்கரைக்கும் போய் வருது.


அந்த அழகான சர்ச் ஒருசினிமாவில் நடிச்சுருக்காமே!   சிம்புவின் படம் என்றார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா'ன்னு நினைக்கிறேன் என்றார் , சினிமாப்ரேமியான நம்மவர். ஸெயிண்ட் மேரீ'ஸ் ஃபோரேன் சர்ச்.வலியபள்ளி  (St.Mary's Forane Church, Valiyapally)


ஒன்னேகாலுக்கு சாப்பாடு ரெடி. பருப்பு, முட்டைக்கோஸ்  தோரன், பீட்ரூட் தயிர்பச்சடி, ரஸம், சோறு, கடுமாங்கா அச்சார்.  நமக்கு இது யதேஷ்டம். சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் பணியாளர்கள்  இருக்காங்க. இப்போதைக்கு  அங்கே கெஸ்ட் நாம் மட்டும் என்பதால் மற்ற ஆட்கள் வீடுவரை போயிருக்காங்களாம்.  ஃப்ரான்ஸிஸ், ஸோஸம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் செஞ்சாங்களாம். நம்ம ஸ்ரீனிவாசனுக்கு  அடுக்களையில் இருக்கும்  ஊணுமேசையில் சாப்பாடு பரிமாறினாங்க.

ராத்திரிக்கு என்ன வேணும்? சப்பாத்தி செய்யட்டுமான்னு கேட்டாங்க. ஆய்க்கோட்டே!

சாப்பாடு ஆனதும் ரெண்டு மணிக்கு நாம் கிளம்பி வெளியே போறோம். ரெடியா இருங்க.

தொடரும்.....:-)