Thursday, February 29, 2024

இதோடு முடிஞ்சதா சரித்திரமே இல்லை !

திவாலின்னு நான் ஆற அமரப் பதிவு எழுதும்போதே அடுத்த தீபாவளி வந்துரும்போல இருக்கு. இன்னைக்கு CFCESSA வோட திவாலி.   Christchurch Fiji Culture, Education, Sports Social Association. 2002ம்  ஆம் வருஷம் ஆரம்பிச்ச க்ளப்.  நாங்க இங்கே வந்த சமயம் (1988 ) நம்ம ஃபிஜி மக்கள் ஏற்கெனவே  புலம்பெயர்ந்து வந்துருந்தாங்க.  கோவில்னு ஒன்னும் இல்லாததால்  வீடுகளிலேயே சாமி கும்பிடுவதோடு,  ராமாயண வாசிப்பும்  மட்டுமே !
இப்படி  ராமாயணம் வாசிக்க சிலபல குழுக்கள் ஏற்கெனவே  அமைச்சுட்டாங்க.  இந்தக் குழுக்களுக்கு ராமாயண் மண்டலின்னு என்ற பொதுப்பெயர் இருக்கு.  இந்தக்குழுக்களின் தலைவர்கள் பெயரால்  இன்னாரின் ராமாயண் மண்டலி குறிப்பிடுவது வழக்கம். நாங்களும் 'பாசுதேவ் கா ராமாயண் மண்டலி'க்குப் போய்க்கிட்டு இருந்தோம்.  வெவ்வேறு குழுக்கள் என்றாலும்,  எல்லாரும் எல்லாருடைய  மண்டலிக்கும் போய்வர்றதுதான். தனித்தனியாக இருப்போம், அதே சமயம் எல்லோரும் ஒன்னாச் சேர்ந்தும் இருப்போம் என்றதுதான் உண்மை.

அப்படி இருந்த காலத்துலேதான்  ஃபிஜியில்  ஸ்கூல்மாஸ்டரா இருந்த ஜகத் சிங் இங்கே நியூஸிக்கு  வந்துட்டார்.  அவர்  தன் பங்குக்கு ஒரு  ராமாயண் மண்டலின்னு  ஆரம்பிக்காம, குழுவுக்கு ஒரு பெயரும் கொடுத்தார்.  இதில்  ராமாயண வாசிப்பும் உண்டு என்றாலும் கலை, கலாச்சரம், விளையாட்டுன்னு  சேர்த்துக்கிட்டதால்  ஃபிஜி மக்கள்  க்ளப் உருவாகிருச்சு.  
இதுக்கு முதலிலேயே 1995 இல்  நம்  ஸ்ரீலங்கா  நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பிச்ச தமிழ் அசோஸியேஷனும், 1997 இல்  நாம் ஆரம்பிச்ச இண்டியன் க்ளப்பும் ( ISCC   Indian Social Cultural  Club )நல்லாவே இன்னும்  நடந்துக்கிட்டு இருக்கு. 

இந்த ஃபிஜி க்ளப்பில் நாமும் போய்ச் சேர்ந்துக்கிட்டோம். ஸ்ரீராமநவமி, ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி,  திவாலி கொண்டாட்டங்களோடு ராமாயண வாசிப்பு, தேவி பாகவதம் வாசிப்பு ன்னு  ஆன்மிக சமாச்சாரங்களும்  இருக்கே ! 

இப்ப ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்..... நம்ம மக்கள் எல்லோருக்காகவும் தனிப்பட்ட ஹால் இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால்.... சில நண்பர்களின் முயற்சியால் இடம் தேடப்பட்டு, எல்லோருமாச் சேர்ந்து குறிப்பிட்ட தொகையை வழங்கி ஒரு ஹாலையும் வாங்கி, அதை நம்ம சநாதன் தரம் ப்ரதிநிதி சபாவாக நாமகரணம் செஞ்சுட்டோம்.  நமக்கு ஒரு நல்ல அதிருஷ்டமா, ஃபிஜி பண்டிட்டே, ஈடுபாட்டுடன்   முன்னின்று எல்லாத்தையும்  நடத்திக்கொடுத்து வழிகாட்டறார்.  அவருடைய  தலைமையில்தான்   வருஷம் முழுசும் செவ்வாய்க்கிழமைகளில் ராமாயண வாசிப்பும்,  பண்டிகைகள், விழாக்கள் எல்லாமும் குறைவில்லாமல் நடக்குது.  முக்கியமா ,  பூஜை சம்ப்ரதாய முறைகளில்  ஹவன்  (ஹோமம்)செய்வது  அதிகம்.    
Our Sanatan Hall :  Then & Now 
 ஆரம்பகாலங்களில் பள்ளிக்கூட ஹால்கள், சிட்டிக்கவுன்ஸில் ஹால்கள் என்று வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருந்தோம்.  அங்கெல்லாம்  ஹாலுக்குள்  ஹவன் நடத்த அனுமதி இல்லை.  இப்ப இது நம்ம சொந்த கட்டடமா ஆனதால்  தீவளர்த்து  ஹோமம் செஞ்சுக்கத் தடையேதுமில்லை ! முக்கிய விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடும்போது  ஹவன் செய்வது   விசேஷம். 
நம்ம ஹால்  வளாகத்தில் இப்ப ஒரு ஆஞ்சநேயர் சந்நிதியும்  கட்டியாச்சு.!  அவரும்  இந்தியாவிலிருந்து நமக்கு அருள் பாலிக்க  வந்து செட்டில் ஆகிட்டார் !
காலநிலை பொருத்தமாக இருக்கும் சமயங்களில்  ஆஞ்சு சந்நிதிக்கு முன்னால் ஹவன் நடத்திக்குவோம்.  ஜனவரி முதல் தேதிக்கு  இங்கேதான் எப்போதும். எங்களுக்கு அது கோடைகாலம் !
அப்ப இந்த ராமாயண மண்டலிகள்  எல்லாம் என்ன ஆச்சுன்னா...  அவர்கள்  எங்கேயும் போகலை... இதே சநாதன் ஹாலில் செவ்வாய்க்கிழமை ராமாயண வாசிப்பிலோ, இல்லை வேறொருநாளோ,   அவரவர்கள் குழுவினருடன்  சேர்ந்து அவர்கள் சார்பில் அந்த நாளை நிறைவாக்கிக் கொள்கிறாங்க. 

நம்ம  மாஸ்டர் ஜகத்சிங் குழுவினர், மாசத்தின்  கடைசி வெள்ளிக்குப் பொறுப்பேத்துக்கிட்டாங்க.  இந்தக்குழுவிலும் நாம் அங்கம் என்றதால்  இதோ கிளம்பறோம், திவாலி கொண்டாட !

அங்கே சநாதன் ஹாலுக்குப் போகும்போது எப்பவும் போல்  முதலில் நம்ம ஆஞ்சி சந்நிதியில் கும்பிட்டோம். ஆரம்பகாலத்தில் கண்ணாடித்தடுப்பு இல்லாமல்தான்  வச்சுருந்தோம்.  நம்ம சனம், பக்தி மிகுதியால்  குங்குமத்தை எடுத்து அவர் முகம் முழுசும் பூசிட்டுப்போகுது.  செம்முகம் நல்லாவா இருக்கு ?   அவர் உடை முழுசும்  குங்குமம் வேற !  

அதனால்  கண்ணாடித் தடுப்புப்போட்டு, பாதங்களை மட்டும் தொடும்படி  செய்தாச்சு. பாதகமலங்களில் குங்குமம் அர்ச்சனை செய்யலாம்.  சுத்தப்படுத்துவதும் நமக்கு எளிது !  


திவாலி விழா ஆரம்பத்தில் வழக்கம்போல் ஹவன் ஆச்சு. அப்புறம்  ராமாயண வாசிப்புன்னு  ஒரு பத்து நிமிட். குழுவினரின் பஜன் !   அடுத்து ஆரத்தி!   எல்லோரும் தீபாரதனையில்  பங்கெடுக்கலாம்.  பிரசாத விநியோகம் முடிஞ்சதும், கலைநிகழ்ச்சிகள்.   பாட்டு, நடனம், கவிதை வாசிப்புன்னு பங்குபெற்ற  அனைவருக்கும்  சான்றிதழ் வழங்குதல். நம்மூர் தபலா கிங்கின் வாசிப்பும் இருந்தது!










மேடை நிகழ்ச்சி என்றெல்லாம் இல்லாமல் , சாதாரணமாகச்  சபையின் முன்  நடந்தவை எல்லாம் ரொம்பவே ஹோம்லி ! 

கீழே சில வீடியோ க்ளிப்ஸ் (ஃபேஸ்புக்கில் போட்டவை)  லிங்க் கொடுத்துருக்கேன்.  நேரம் இருந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.


https://www.facebook.com/1309695969/videos/1477032929537918/

https://www.facebook.com/1309695969/videos/710570847648085/

https://www.facebook.com/1309695969/videos/265480586526453/

https://www.facebook.com/1309695969/videos/707948544587781/

https://www.facebook.com/1309695969/videos/691345899727490/

பஜன்

https://www.facebook.com/1309695969/videos/210784125383398/

கலை நிகழ்ச்சிகள் முடிஞ்சதும்  மஹாப்ரஸாதம் என்னும் வகையில் விருந்து சாப்பாடு ! 

பொதுவாகவே ஃபிஜி இந்தியர் விழாக்களில்  முதலில் தீபாராதனை  முடிஞ்சதும் ஒரு ப்ரஸாதம். பக்தர்கள்  கொண்டு வருபவை.  உடனே ஒரு டீ !   விழாவின் கடைசியில் மஹாப்ரஸாத் என்னும் வகையில்  விருந்து. இதை யாராவது ஸ்பான்ஸார் செய்துவிடுவார்கள்.  இல்லையெனில்  சநாதன் சபா சார்பில்  நடக்கும்.  சமையல் ஏற்பாடுகளில் ஆண்களே, அடுப்புக்கு  முன்னின்று  சமைப்பார்கள்.  பெண்கள் பூரி மாவு பிசைந்து, பூரி திரட்டிப்போடுதல் போன்ற வேலைகள் மட்டுமே ! 

நல்லா இருக்குல்லே !!   




6 comments:

said...

மஹா ப்ரசாதத்துக்காக மனம் ஏங்குகிறது!

said...

தொடரும் கொண்டாட்டங்கள்.... அனைவரும் ஒன்று கூடி கொண்ட்டாட்டங்களில் ஈடுபடுவது மகிழ்ச்சியே.

said...

வாங்க ஸ்ரீராம்,

இது முதல் செட் ப்ரஸாதம். மஹாப்ரஸாதம் தான் டின்னர். நாங்க சாப்பிடலை. அதான் நோ படம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

எத்தனை விதவிதமான கொண்டாட்டங்கள் பாருங்க ஒரே பண்டிகைக்கு, ஒரே ஊரில் :-)

said...

பிரசாதம், உணவு என மகிழ்ச்சியாக இருக்கிறது.

""நல்லா இருக்குல்லே !! "" அடடா.....மிகவும் நல்லாக இருக்கிறது; ) படத்தை சொன்னேன்.

said...

வாங்க மாதேவி,

ஹாஹாஹாஹா