Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Tuesday, June 17, 2008

ஷிவ்ஜி வாயிலே ஜிலேபி:-)

"யே ஷிவ்ஜிகா மந்திர் ஹை"



"ஓ... ஷிவாஜி கா மந்திர்?"


"நைநை....யே தோ பர்மேஷ்வர் ஷிவ்ஜி கா மந்திர்"


கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஷிவாஜி மஹ்ராஜின் கோட்டை இருந்த 'ஷனிவார்வாடா' வைச் சுத்திக் காமிச்சது இதே கைடுதானே.


சுத்திக்காமிக்கன்னு அங்கே ஒன்னும் இல்லை. கோட்டைக்குள்ளே நுழைஞ்சால் வெறும் அஸ்திவாரம் போட்டுவச்சமாதிரி இருந்துச்சு.




அரைநாள் டூர்ன்னு பூனாநகரைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்த ஷிவ்ஜி கா மந்திரை சத்ரி மந்திர்ன்னு சொல்றாங்க.மராட்டியப் படைகளின் தலைவரா இருந்த Shindyanchi Chhatri என்றவர் கட்டிய கோயில் இது. வானவரி என்ற இடத்தில் இருக்கு. (இதையே வானவெடின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்)



முழுக்கமுழுக்கப் பளிங்குக்கற்களால் கட்டி வழுவழுன்னு இருக்கு. பலவர்ணக் கண்ணாடிக்கூடுகளில் இருக்கும் தொங்குவிளக்குகள். ஜொலிப்பு அட்டகாசம். சிவலிங்கம் வச்சு பூசை நடக்குது. 1794லே கட்டுனதாம்.




ஷிவ்ஜி, ஷிவாஜின்னு மாறிமாறிக்கேட்டே ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிப்போச்சு. ஹிந்தி அவ்வளவாத் தெரியாது பாருங்க அப்ப.





இப்ப நம்ம வல்லி என்னை ஜிலேபித் திங்கக் கூப்புட்டாங்களா ஓடி வரணுமுன்னு பார்த்தா என் ஜிலேபி இன்னும் வந்து சேரலையே...... காத்திருந்தேன். பலன் கிடைச்சது.



நம்ம சுதந்திர இந்தியாவுக்கும் சிங்கைக் கோமளவிலாஸுக்கும் ஒரே வயசு.



சிங்கை ஜிலேபியை சிவாஜி வாயிலே கொண்டு வைக்கணுமா என்ன? இல்லே ஷிவ்ஜி வாயில் வைக்கணுமா?



அவ்வளவுக்குப் பெருந்தன்மை இல்லாததால் இதோ
துளசி வாயிலே ஜிலேபி.:-))))



பி.கு: சரித்திர டீச்சர் என்றதால் புள்ளிவிவரம் இல்லாம ஒன்னும் சொல்ல முடியாது. ஹிஸ்ட்ரி சிவாஜிக்கு மட்டுமா? இந்தத் தட்டுலே இருந்த ஜிலேபிக்கும்தான்!!

Thursday, December 13, 2007

Just to keep in touch

டிசம்பர் வந்துருச்சு. வருசக்கடைசி. கையைக் கடிக்குது. போன பதிவில் போன வருச லிங்கைக் கோர்த்துவிட்டது தப்போன்னு இருக்கு. 'பசங்க' அதைப் படிச்சிட்டு(???!!!!) லீவுக்கு இப்படி ஆ(ளா)லாப் பறக்கறாங்க.

இனிவரும் நாட்களில் நம்ம தோட்டத்தை வச்சேக் கொஞ்சம் ஜல்லியடிச்சு
நாட்களைக் கடத்தணும்போல.. போதாக்குறைக்கு நானும் PIT மாணவின்னு
அப்பப்பக் காமிச்சுக்கணும் இல்லையா?
ஆழ்ந்து படிக்காம மேலோட்டமா நானும் வந்தேன்னு இருக்கும் என் வகுப்புத் தங்கங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
முந்தாநாள் முத்துலெட்சுமி கேட்ட கேள்விக்கு இது(வும்) பதிலாக இருக்க வாய்ப்புண்டு.
தலைவெட்டி நியூஸியில்:-)
பொதுவா சூரியகாந்திச்செடி, நெடுநெடுன்னு உசரமா வளர்ந்து உச்சாணியில் ஒரு பூ மட்டுமே பூக்கும்தானே?
இது என்னவோ குள்ள வகையாம். பரபரன்னு எல்லாப் பக்கங்களிலும் கிளைகள்விட்டு 16 பூக்கள் வந்துருக்கு. கொடுத்த காசு செரிச்சாச்சு:-)))
இங்கே நம்ம வீட்டுலே இருக்கும் லொபெலியாப் பூக்கள் நிஜத்தில் ஒரு கலராவும், நிழலில் ஒரு கலராவும் இருக்கு. டார்க் பர்ப்பிள் கலரில் இருப்பது,
படத்தில் மட்டும் ப்ளூவாத் தெரியுது. காரணம் தெரிஞ்சவுங்க சொல்லுங்க,
நம்ம கெமெராவுக்கு கலர் ப்ளைண்ட்????
கண்ணுக்குக் காட்சி.சற்றே வயிற்றுக்கும் உணவு. இந்த வருசம் ராஸ்பெரி நிறைய வந்துருக்கு. ( ஒரு செடி பத்து டாலர்ன்னு மார்கெட்டிலே பார்த்ததும்
வீட்டுக்கு வந்து, செடிகளை எண்ணி நூறு டாலர் கோபாலுக்கு மிச்சம் பிடிச்சதைச் சொன்னேன்:-)
கடைசியா( இப்போதைக்கு) நம்ம ஜிகேவுக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசா ஒரு
பாப்பா வாங்கி இருக்கு. அவனைப் போலவே இவன்.