Showing posts with label ஜிலேபி. Show all posts
Showing posts with label ஜிலேபி. Show all posts

Tuesday, June 17, 2008

ஷிவ்ஜி வாயிலே ஜிலேபி:-)

"யே ஷிவ்ஜிகா மந்திர் ஹை"



"ஓ... ஷிவாஜி கா மந்திர்?"


"நைநை....யே தோ பர்மேஷ்வர் ஷிவ்ஜி கா மந்திர்"


கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஷிவாஜி மஹ்ராஜின் கோட்டை இருந்த 'ஷனிவார்வாடா' வைச் சுத்திக் காமிச்சது இதே கைடுதானே.


சுத்திக்காமிக்கன்னு அங்கே ஒன்னும் இல்லை. கோட்டைக்குள்ளே நுழைஞ்சால் வெறும் அஸ்திவாரம் போட்டுவச்சமாதிரி இருந்துச்சு.




அரைநாள் டூர்ன்னு பூனாநகரைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்த ஷிவ்ஜி கா மந்திரை சத்ரி மந்திர்ன்னு சொல்றாங்க.மராட்டியப் படைகளின் தலைவரா இருந்த Shindyanchi Chhatri என்றவர் கட்டிய கோயில் இது. வானவரி என்ற இடத்தில் இருக்கு. (இதையே வானவெடின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்)



முழுக்கமுழுக்கப் பளிங்குக்கற்களால் கட்டி வழுவழுன்னு இருக்கு. பலவர்ணக் கண்ணாடிக்கூடுகளில் இருக்கும் தொங்குவிளக்குகள். ஜொலிப்பு அட்டகாசம். சிவலிங்கம் வச்சு பூசை நடக்குது. 1794லே கட்டுனதாம்.




ஷிவ்ஜி, ஷிவாஜின்னு மாறிமாறிக்கேட்டே ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிப்போச்சு. ஹிந்தி அவ்வளவாத் தெரியாது பாருங்க அப்ப.





இப்ப நம்ம வல்லி என்னை ஜிலேபித் திங்கக் கூப்புட்டாங்களா ஓடி வரணுமுன்னு பார்த்தா என் ஜிலேபி இன்னும் வந்து சேரலையே...... காத்திருந்தேன். பலன் கிடைச்சது.



நம்ம சுதந்திர இந்தியாவுக்கும் சிங்கைக் கோமளவிலாஸுக்கும் ஒரே வயசு.



சிங்கை ஜிலேபியை சிவாஜி வாயிலே கொண்டு வைக்கணுமா என்ன? இல்லே ஷிவ்ஜி வாயில் வைக்கணுமா?



அவ்வளவுக்குப் பெருந்தன்மை இல்லாததால் இதோ
துளசி வாயிலே ஜிலேபி.:-))))



பி.கு: சரித்திர டீச்சர் என்றதால் புள்ளிவிவரம் இல்லாம ஒன்னும் சொல்ல முடியாது. ஹிஸ்ட்ரி சிவாஜிக்கு மட்டுமா? இந்தத் தட்டுலே இருந்த ஜிலேபிக்கும்தான்!!