Saturday, August 16, 2025

எங்க ஊரில் சுதந்திரதின விழாக் கொண்டாட்டங்கள் !

எங்க வழக்கப்படி மூணு/ நாலு  நாட்களுக்கு முன்பே ஆரம்பிச்சுட்டோம் !
முதலில் வீடு என்றதாலும்.....எங்கள்    யோகா வகுப்பு தினம் என்றதாலும்  வீட்டிலிருந்து கொடிகளைக்கொண்டுபோய்  தேசியகீதம் பாடிச்  சின்னதாக ஒரு கொண்டாட்டம். நம்மூரில் ஒரு காலத்தில் பள்ளிக்கூடபிள்ளைகளுக்குக் கொடியேற்றி முடிச்சதும்  ஆரஞ்சு மிட்டாய் கிடைக்குமில்லையா.... அதையே கொஞ்சம்  மேம்படுத்தியது போல ஆரஞ்சு  பர்ஃபி விநியோகம் !  வகுப்புத் தோழி ஒருவரின் தங்கை  நியூஸி அக்கா வீட்டிற்கு நாக்பூரிலிருந்து வந்துள்ளார்.





ஆகஸ்ட் 15 பொழுது விடியுமுன்னே (இங்கே குளிர்காலம் என்பதால் சூரிய உதயம் அதிகாலை ஏழரைக்கு ! அப்போது குளிர் 2 டிகிரி.) கிளம்பிக் கொடியேற்றும் வைபவத்திற்குப் போனோம். 
ஒரு  பதினைஞ்சு வருஷங்களாக நண்பர் அவருடைய  பொறுப்பில் கொடியேற்றும் விழாவை நடத்திக்கிட்டு இருக்கார். 

ஒரு மூணு வருஷங்களாக, இந்திய ராணுவத்தில் லெஃப். கர்னலாக இருந்தவர், இப்போ எங்கூரில் வசிக்கிறார்.  கொடி ஏற்றும் கௌரவத்தை அவருக்குக் கொடுத்தாச்சு !
இந்தமுறை இந்தியக் கடற்படையில் கமாண்டராக இருந்தவர்  ( எங்கூரில் வசிக்கும் மகன் வீட்டுக்கு வருகை ) எங்கள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டது சிறப்பு ! 

மேலே படத்தில்,  முதலில் நிற்பவர் எங்கூர் மல்ட்டிகல்ச்சுரல்  கவுன்ஸிலின் தலைவர், அடுத்து நேவி அப்புறம் ஆர்மி !


(ஆர்மி & நேவி வந்தாச்சு. இன்னும் ஏர்ஃபோர்ஸ்தான் வரலை. பேசாம நானே ஏர்ஃபோர்ஸ் பதவியை எடுத்துக்கலாமான்னு தோணுச்சு)


கொடியேற்றி முடிச்சு, நம் தேசியகீதம் பாடியதும் ஒரு மனநிறைவு வந்தது உண்மை ! 


சுமார் ஒரு ஐம்பது கிவி இண்டியன்ஸ் கலந்து கொண்டோம். 

பாரத் மாதா கி ஜெய் ! வந்தே மாத்ரம் ! ஜெய் ஹிந்த் !






5 comments:

said...

வந்தே மாதரம்...... சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்பு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கு நன்றி ! ஜெய் ஹிந்த் !

said...

சிறப்பு...   வெகு சிறப்பு. 

சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பு.

said...

வாங்க ஸ்ரீராம்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

சுதந்திர தினப் பொன்விழா சமயத்தில்தான் நாம் இங்கே ஒரு இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப் ஆரம்பிச்சோம். நிறுவனர் நம்ம கோபால்தான். முதல் கொண்ட்டாட்டமே சுதந்திரதின விழாதான் !

வருஷாவருஷம் சுதந்திர தின விழா நடந்துக்கிட்டுதான் இருந்தது. அப்புறம் சிலபல காரணங்களால்.... அடுத்துவந்த 'தலைகள்' சுதந்திரத்தை அடியோடு மறந்துட்டாங்க. ஆனால் க்ளப் என்னவோ இன்னும் நடக்குதுதான். இந்தியான்னால் திவாலின்னு ஆக்கிவச்சுருக்காங்க. ப்ச்....


said...

சுதந்திரதின கொண்டாட்டம் சிறப்பாக நடந்துள்ளது.
ஜெய் பாரத மாதா.