Friday, November 29, 2019

எழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )

பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட்.  பொட்டிகளைக் கீழே  கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி  சாப்பிடப் போனோம்.  பேச்சு சுவாரஸியத்துலே எங்கெ போய் சாப்ட்டோமுன்னு நினைவுக்கு வரலை.

மசாலா மரவள்ளியும்,  மூணு வகை தோசைகளும்... ஆச்சு....
சாப்பாடானதும்,  நாங்க ஒரு பக்கமும், நம்மவர் ஒருபக்கமும் கிளம்பியாச்சு. மூணரைக்கு லாபியில் சந்திக்கலாமுன்னு முடிவு.  என்னுடைய ஸாம்சங் நோட்புக் சரியா சார்ஜ் ஆகாம, இந்தப் பயணம் முழுசும் படுத்தல். அதான் அதை எடுத்துக்கிட்டு, சிம்லிம் டவர் வரை போயிட்டு வரேன்னார்.  எலக்ட்ரானிக் கடைகள் கொட்டிக்கிடக்கே அங்கே!
காலணிகளைப் பார்த்ததும் மகள் ஞாபகம். மொத்தக் கடையையும் சூறையாடிருவாள் :-)

நானும் ஜெயந்தியும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கப்போனோம்.  அவுங்க எப்பவும் எழுத்துவேலையில் பயங்கர பிஸி. இப்ப ஓவியம் வரைவதிலும்  புகுந்தாச்சு.  அதென்னமோ.... பிரபல ஓவியக் கலைஞரின் ஆவி (உங்களுக்கு யார் மனசில் வர்றாங்களோ அவுங்க பெயரை நினைச்சுக்கலாம். எனக்கு என்னவோ ரவி வர்மாதான் வந்தார் )  அவுங்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்குன்னு தோணுது.  அப்படி வரைஞ்சு தள்ளறாங்க. சிங்கை நூலகத்தில் ஒரு  பெயின்டிங் எக்ஸ்பிஷன் கூட நடத்துனாங்க.

சிலபல  புத்தகங்களுக்கும் அட்டைப்படம் வரைஞ்சு கொடுத்துருக்காங்க. இவ்வளவு ஏன்....  போன வருஷம் (டிசம்பர்) இங்கே நியூஸிக்கு வந்தப்ப எனக்கு வரைஞ்சு வந்த படங்கள் இவை. நீங்களே பாருங்க...... எப்படி தூள் கிளப்பறாங்கன்னு !

இதுக்கு நடுவிலே  இலக்கியப் பயணங்கள் வேற......   இப்பக்கூட இன்றைக்குக் காலையில்தான் சிங்கை திரும்பி இருக்காங்க.   அலுப்பையும் பொருட்படுத்தாம நம்மைப் பார்க்க வந்த நட்புக்கு நன்றின்னு ஒரு சொல் போதுமா என்ன ?  போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு  எனக்கொரு   மல்லிகைப் பந்து வேற!  பூப்பிசாசுக்கு ரொம்பப் பொருத்தம் :-)
முகத்தில் களைப்புத் தெரிஞ்சது.... அதான் ரொம்பச் சுத்தாம சீக்கிரமாவே ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   கொஞ்ச நேரத்துலே 'நம்மவரும்' வந்துட்டார். நோட்புக்குக்குப் புது பேட்டரி போட்டாச்சாம்.  எல்லோருமாக் கொஞ்ச நேரம் பேசிட்டு, மூணே முக்காலுக்கு அவுங்க கிளம்பிப் போனாங்க. நாங்களும் பொட்டிகளை எடுத்துக்கிட்டு டாக்ஸி பிடிச்சு ஏர்ப்போர்ட்டுக்கு வந்துட்டோம். டாக்ஸி ட்ரைவர்  ரொம்ப நல்லமாதிரி !
அங்கே இருக்கும் எடை பார்க்கும் ஸ்கேலில்  ஒவ்வொன்னா வச்சுப் பார்த்துத் திருப்தி ஆனதும் போய்ப் பொட்டிகளைச் செக்கின் செஞ்சதும்தான்  'நம்மவர்'  முகத்தில் களையே வருதுப்பா :-) உண்மையில் இன்னும் ஒன்னு ரெண்டு கிலோ வரை வச்சுருக்கலாம்.  எங்கே வாங்க விட்டார்?  செராங்கூன் ரோடு முழுக்க எவ்ளோ பார்த்தேன்...  :-)
செல்ஃப் செக்கின்தான் இப்பெல்லாம்....
பை நிறைய இருக்கும் பூவை எடுத்துத் தலைநிறைய வச்சுக்கிட்டேன். இப்பவே வச்சு அனுபவிச்சால்தான் உண்டு. நாளைக்கு நியூஸியில் இறங்கும்போது   தலையில் பூவின் சுவடு கூட இருக்கப்டாது.  ஃபைன் கட்டி முடியாதுப்பா.....    கனம் இழுக்குது.   பூச்சரத்தைப் பேசாம ப்ளேனுக்கு முன்னால் கட்டி விட்டுருக்கலாம், இல்லே :-)


நமக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கேன்னு  ரெண்டாம் டெர்மினல் வரை போய் மகளுக்கு  வேணுங்கறதை வாங்கிக்கிட்டு, அப்படியே கைவசம் இருக்கும் நாப்பது சாங்கி டாலருக்கு  என்ன வருதோ அதுன்னு பார்த்து ஒரு சேவல் வாங்கினேன். நம்மூட்டுலே ஒரு பழனி முருகன் வந்துருக்கார்.

சரியா ஏழு அம்பதுக்கு வண்டி கிளம்பிருச்சு. எல்லாம் வழக்கம்போல்....  பத்து இல்லை பத்தரை மணி நேரம்  இப்படி அடைஞ்சு கிடக்கவேணும்.  வால்காத்து அதிகமா இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடலாம்.

நம்ம அஃபிஸியல் விண்ட்டர் முடிய இன்னும் பத்துநாள் கிடக்கு....
தூக்கமும் விழிப்புமா மாறிமாறி அனுபவிச்சுக் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் என்ற பெயரில்  வட இந்திய குல்ச்சாவைக் கொண்டு வந்து நீட்டுனதை வாங்கி ஒரு பக்கம் அப்படியே வச்சுட்டு   பத்துமணிக்கு  நியூஸி வந்திறங்கி, திக் திக்குன்னு சிகப்புச்சேனல் வழி போய், நல்லவேளை.... சுண்டைக்காய் வத்தல் தப்பிச்சதுன்னு பெருமூச்சு விட்டு, டாக்ஸி பிடிச்சு வீடு போய்ச் சேரும்போது  மறுநாள்  காலை  மணி பத்தரை.
சாமி நமஸ்காரம் பண்ணிட்டுக் குளிச்சு விளக்கேத்தி அரக்கப்பரக்க ஆக்கித்தின்னுட்டு மூணு மணிக்கு  டாக்டரைப் போய்ப் பார்த்தோம்.  நம்மவர், போனவாரமே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சுருந்தார்.  அதுக்கப்புறம் ஸ்பெஷலிஸ்ட், இன்வெஸ்டிகேஷன்ன்னு அதெல்லாம் ஒரு தனிக்கதை போங்க....
நாலு மணி ஆனதும்  நேராக் கேட்டரிக்குப்போய் நம்ம ரஜ்ஜூவை வீட்டுக்குக் கூட்டி வந்தாச்சு. இப்பதான்  நம்ம பயணம் பூர்த்தி ஆனதாக் கணக்கு !
இதுவரை கூடவே வந்த வாசக நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

PIN குறிப்பு:  அடுத்த பயணத்தில் இருக்கிறேன்.  நாடு திரும்பும்வரை லீவு வேணும்......


5 comments:

said...

அருமை நன்றி

said...

அருமையான பயணம். கூடவே பயணித்த உணர்வு. வாழ்க வளமுடன்.

said...

வெண் மேகங்களும் , மலைகளும் ...ஆஹா அழகு மா ..

ஓ ...அடுத்த பயணத்தில் இருக்கிறீர்களா...மிக மகிழ்ச்சி ..

உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் ...

said...

சூப்பர் அம்மா ... நாங்களும் உங்களுடன் இருந்தது உணர்வு ..

அடுத்த பயணமா எங்களுக்கு அடுத்த விருந்து காத்து இருக்கிறது

said...

இனிய பயணம் வந்தோம் நாங்களும். அடுத்த பயணம் காண வருகிறோம்.நன்றி.