Friday, May 05, 2006

சுத்தி சுத்தி வந்தேங்க.....


பயண விவரம் பகுதி 23


இன்னிக்கு முழிச்ச நேரம் சரியில்லை போல. இன்னும் நாலு நாளையிலே கிளம்பறதுன்னு முடிவாச்சு.

அண்ணன்இப்ப இங்கே இருக்கார். அவுங்களோட போய் ரெண்டு நாளாவது தங்கறதுதானே நியாயம்? வீட்டுக்கு வந்து இருன்னுஅண்ணனும் அண்ணியும் சொல்லிச் சொல்லித் தளர்ந்துட்டாங்க. எனக்கு ஏது நேரம்? 'அதுவுமில்லாம அவுங்களும் இன்னும் புது வீட்டுக்கு மாறலை. அங்கேயே இன்னும் கொஞ்சம் வேலை பாக்கின்னு நடந்துக்கிட்டு இருக்கு. நம்மாலே அந்தவேலை கெட்டுருமே'ன்ற நல்லெண்ணம்னு வையுங்களேன்.


நானே வந்து கூட்டிட்டுபோறேன்னு சொன்னவரை,'அட அதெல்லாம் எதுக்கு? நானெ வந்துடறேன். இது என்ன பிரமாதம்?'னு சொல்லி வாயை அடைச்சாச்சு.
ஞாயிறு காலை ப்ரேக்ஃபாஸ்ட் முதல், அவுங்களோடுன்னு ஒரு ஏற்பாடு. எட்டுமணிக்கெல்லாம் கிளம்பிட்டேன்.ஒரு ஆட்டோகாரர்கிட்டே போகவேண்டிய இடத்தைச் சொன்னேன், குமரன் நகர், கோயம்பேடு மார்கெட்டுக்குப் பக்கத்துலே.இடம் தெரியுமான்னு கேட்டதுக்கு அதெல்லாம் தெரியும். வேணுமுன்னாக் கேட்டுக்கலாம்மா'னுட்டார். குறுக்குவழின்னு எனக்குப் பழக்கம் இல்லாத
சந்து பொந்தெல்லாம் போய்க்கிட்டு இருக்கோம். நானும் விடாம, 'இந்தப்பக்கம் எல்லாம் எதுக்கு வரணும்? சாலிகிராமம்வழியாப் போங்க'ன்னு சொன்னேன். பழையபடி அங்கே இங்கேன்னு சுத்தி 100 அடி ரோடுக்குப் பேரலல் ரோடுலேபோறார். 'இடம் தெரியும்னுட்டு இங்கே எதுக்கு திரும்பணும்? நேரா அதுலேயே போகவேண்டியதுதானே?'ன்னதும்கபால்னு வண்டியை நிறுத்திட்டு "இல்லேம்மா, நீ வேற ஆட்டோலே போய்க்கம்மா. இறங்கும்மா'ன்னதும் எனக்குக்கோபம் வர ஆரம்பிச்சது.

'காரணம் என்ன?'ன்னு கேட்டதுக்கு ' அட்ரஸ் சரியாச் சொல்லலை'யாம். இடம் தெரியாதுன்னாதெரியாதுன்னு சொல்லியிருக்கலாமுல்லையா? நான் உடனே' இங்கே இறங்க மாட்டேன். வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடு'ன்னேன்.


"என்னாத்துக்கும்மா என்னாத்துக்கு? "

"கம்ப்ளெயிண்ட் பண்ணறதுக்கு. வேற எதுக்கு?"

"அட்ரஸ் சரியாச் சொன்னாத்தானே போமுடியும்? "

"இந்தா இதைப் பாரு. இதான் அட்ரஸ்"

நீட்டுனதாளை பார்த்துட்டு ஏதோ முணங்கிக்கிட்டே வண்டியைக் கிளப்பி வடபழனி கோயில் பக்கம் திரும்பி,அங்கே தெருமுனையில் இருந்த இட்டிலிக்கடைக் கையேந்தி பவன்லே 'ஏம்பா.. இந்த குமரன் இது எங்கேஇருக்கு?' அந்த ஆள் கை நீட்டுன திசையிலே போறோம். குமரன் காலனி!

"அது என்னா குமரன் இதுவா? அந்த இது அது இல்லை. பேசாம சாலிகிராமம் வழி போ."

செல்லுலே அண்ணனைக் கூப்பிட்டு, இப்பத்தான் வடபழனி கோயிலைச் சுத்திக்கிட்டு இருக்கோம். எப்படியும்சாயங்காலத்துக்குள்ளே வீட்டுக்கு வந்துருவேன்னு சொன்னென்.

என்னைத் திரும்பிப் பார்த்தவ(ன்)ர் உர்ருன்னு சாலிகிராமம் வந்தவுடன், நானே வழி சொல்லிவர ஒருவழியாஅண்ணன் வீட்டு வாசலுக்கு வந்தோம்.

இறங்கும்போது நான் கேட்டேன், 'முதல்லேயே வழி தெரியாதுன்னுசொல்லி இருந்தா,சாலிகிராமம் வழி நானெ சொல்லி இருப்பேன்லே'ன்னதும் தலையைக் கவிழ்ந்தபடிநின்னுக்கிட்டு இருந்தா(ன்)ர். பேசுன தொகைக்கு மேலே 10 ரூபாயை நானாகக் கொடுத்ததும், 'நான் இந்தப்பக்கம் புச்சும்மா. அதான் வழி தெரியாமச் சுத்தறதாப் போச்சு. அட்ரஸ்கண்டி கரீட்டாச் சொல்லி இருந்தாஅப்பவே வந்துருக்கலாம்'ன்னா(ன்)ர்.


"நான் அட்ரஸ்ஸைக் காமிச்சப்ப பார்த்துட்டு நேராக் குமரன் காலனிக்கு ஏன் போனே?"

" இங்க்லீஸ் படிக்கத்தெரியாதும்மா"

" அப்பத் தெரிஞ்சமாதிரி போனெ?"

பேசாம தலையைக் குனிஞ்சுக்கிட்டு இருந்த ஆளைப் பார்த்ததும் பாவமாவும், அதே சமயம் கோபமாவும்இருந்தது.

'நான் இதுவரை பாத்த ஆட்டோ ட்ரைவர்கள் எல்லாம் நல்லவங்க. நீ ஒருத்தன் தான் அடாவடி'ன்னு சொன்னதும் முகம் சுண்டிவிட்டது.
அதுக்குள்ளே பால்கனியிலே இருந்து பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் கீழே இறங்கிவந்துட்டார், சில்லறை இல்லாம தடுமாறிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு.

'கொஞ்சம் குமரன் காலனியைச் சுத்திக் காமிச்சார். பார்த்துட்டு வந்ததாலே லேட் ஆயிருச்சு'ன்னு சொன்னதும் அசட்டுச்சிரிப்போடு ஆட்டோவைக் கிளப்பிக்கிட்டுப் போனார் அந்த ட்ரைவர்.

வீட்டுக்குள்ளே வந்து விஷயத்தைச் சொல்லி இப்படி கூவம் ரிவர் பக்கத்துலேன்னு சொல்லியும் ஆட்டோ ட்ரைவருக்கு வழி தெரியாமப் போச்சுன்னு புலம்புனப்ப அண்ணி ஒரே போடா போட்டாங்க.'கூவம் ரிவர்னு சொல்லக்கூடாதுங்க.அந்த காவா(ய்) பக்கமுன்னு சொல்லியிருக்கணும்'


மத்தியானம் மூணு மணிக்கு இலக்கியக்கூட்டம் போகணுமுன்னு முன்னாலெயே சொல்லி, எழுத்தாளர்பெருமைக்குக் கொஞ்சம் 'பில்ட் அப் 'கொடுத்தேன். சாப்பாட்டுக்கப்புறம் கிளம்புனோம். அண்ணாநகர்லேதான்கூட்டம்(!)ங்கறதாலெ வசதியாப் போச்சு. 'இரவா'ன்னு எல்லாரும் அன்பாக்கூப்புடற டாக்டர் வாசுதேவன் இடம் விவரம் கொடுத்துருந்தார்.


அண்ணாநகர் அமுதம் அங்காடிக்குப் பக்கத்துக் கட்டிடம். அங்கேபோய் இறங்கிட்டுச் சுத்திச்சுத்திப் பார்த்தாலும்அவர் சொன்ன அடையாளத்தைக் காணொம். எதுக்கு இருக்கு செல்? போடு போனை.

ஜிப்பா போட்டுக்கிட்டு செல்லுலே பேசிக்கிட்டே ( என்கிட்டேதான்) ஒருத்தர் வரார். எழுத்தாளர்ன்றது பார்த்தவுடனேதெரிஞ்சது. எப்படின்னு கேக்கக்கூடாது. அது அப்படித்தான்.


அங்கேயெ காரை நிறுத்திட்டு அவர்பின்னாலேயே போனோம். அங்கே நம்ம மது, இன்னும் சிலர் இருந்தாங்க.நம்ம அண்ணனையும் அண்ணியையும் உக்காரச் சொன்னாங்க.

'நீங்க சண்டையெல்லாம் போட்டு முடிங்க. அப்புறமா வர்றோமு'ன்னு அவுங்க கிளம்பிட்டாங்க.

'அது என்னாங்க சண்டை?'ன்னு கேட்டதுக்கு, 'இது இலக்கியக்கூட்டம்தானே?'ன்னு கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டுப்போனார் நம்ம அண்ணன்.


படம்: டாக்டர் இரா. வாசுதேவன்.

22 comments:

said...

ஆகா.......ஊர் சுத்திக்காட்டுனாரா அந்த டிரைவரு...விடுங்க....இதெல்லாம் சகஜமுங்க...

இப்பல்லாம் பெங்களூர்லயும் ஆட்டோக்காரங்க அடாவடி செய்றாங்க....சென்னையப் பாத்துக் கெட்டுப் போய்ட்டாங்க.....

said...

ஆஹா அண்ணன் தேறிட்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அடடே, இன்னிக்கு ரெண்டு ராகவன்களும் ஒண்ணா வந்துட்டீங்க. சந்தோஷம்.

டோண்டு,
அண்ணன் நல்லா தமாஷாப் பேசுவார். எப்பப்பார்த்தாலும் நம்ம வீட்டுலே சிரிப்புச் சத்தம்தான்.

ராகவன்,

அஞ்சு பத்து கூடுதலாக் கேட்டாக் கொடுத்துரலாம். அது ஒண்ணும் பிரச்சனை இல்லை. இன்னும் சொன்னா,
நிறைய ஆட்டோ ட்ரைவருங்க நம்ம சொல்ற விலாசத்தை விசாரிச்சு பொறுப்பாக் கொண்டுபோய் சேர்த்திருக்காங்க.
இது என்னமோ புது ஆள். நான் முழிச்ச நேரம் சரியில்லை. வேற என்ன சொல்றது?

அந்த வரைக்கும் பகல் நேரமா இருந்தது நல்லதாப் போச்சு.

பெங்களூரும் இப்படி ஆயிட்டு வருதா? அடக்கடவுளே!

said...

ஆட்டோக்காரரை நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கீங்கக்கா.. போய் இங்கிலீஸ் கத்துகிட்டுத் தான் அடுத்த வேலைக்குப் போயிருப்பார் :)

said...

'நீங்க சண்டையெல்லாம் போட்டு முடிங்க. அப்புறமா வர்றோமு'ன்னு அவுங்க கிளம்பிட்டாங்க.

'அது என்னாங்க சண்டை?'ன்னு கேட்டதுக்கு, 'இது இலக்கியக்கூட்டம்தானே?'ன்னு கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டுப்போனார் நம்ம அண்ணன்.//

பார்த்தீங்களா உங்க அண்ணனுக்குக்கூட தெரிஞ்சிருக்கு இலக்கியவாதிங்கன்னா யாருன்னு..

தேவையா?

said...

துளசி, இந்த மாதிரி சுத்து எல்லாம் உஙக ஊருலே கிடைக்குமா?நமக்கு எப்படி பொறுமையில் பெருமை கற்றுக் கொடுக்கிரார்கள் பாருங்கள்.நல்ல வேளை பகல் நேரம். இதுவே இரவாக இருந்தால் கதையே வேற. இன்னும் 20 ரூபா மீட்டருக்கு மேல் போயிருக்கும்..

said...

அது சரி, இலக்கியம் கூட்டமுனா சண்டை இல்லாமலா, அது கூட தெரியாதா ஆளா நாங்க
அன்புடன்
நாகை சிவா

said...

ஆட்டோகாரன் பாஷை தெரியாம எதுக்கு மெட்ராஸ் சுத்தி பாக்க போனீங்க;)

அப்புறம் வரலாறு சம்பந்தம்மா போட்ட இந்த பதிவு படிச்சீங்களா?

said...

பொன்ஸ்,

//இங்கிலீஸ் கத்துகிட்டுத் தான் ...//

நீங்கவேற. புது ஆளாச்சே. இனிமே நல்லாத் திட்டறதுக்குக் கத்துக்கிட்டு அடுத்தவேலைக்குப்
போயிருப்பார்:-)))))

said...

வாங்க டிபிஆர்ஜோ.

அதான் உலகம் பூராத் தெரிஞ்ச ரகசியமாச்சேங்க:-)))

said...

மானு,

எங்கூர்லே இந்த த்ரில் இல்லேதான். இங்கே டாக்ஸி ஓட்டற நம்மூர் ஆளுங்க
சொல்ற கதை வேற மாதிரி. அதையும் ஒரு நாள் எழுதறேன்.

பகலாப் போனதும், இந்த ஆள் மெட்ராஸுக்குப் புதுசுன்றதும் எனக்குக் கிடைச்ச
போனஸ்னு வச்சுக்கலாம்.

said...

அதானே நாகை சிவா.
அந்த உலகத்துலேதானே இப்ப நாமும் இருக்கோம்:-))))))

said...

உதயகுமார்,

இனிமேத்தான் உங்க வீட்டுக்குப்போகணும். தலைப்பை மட்டும் பார்த்தேன்.

ஆட்டோக்காரன் பாஷையா? பாவங்க. அந்த ஆள்தான் இன்னும் 'மெட்ராஸ் பாஷை' கத்துக்கலை.
நான் அட்டகாசமாப் பேசுவேன்:-)))

said...

pavam ba autowallah

said...

ille ille pavam auto

said...

என்னங்க சிவஞானம்ஜி,

நான் பாவம் இல்லையா? என்னை நடுவழியிலே இறக்கிவிடப் பார்த்தாரே!

அதுகூட மெயின் ரோடுலே இல்லீங்க. பக்கத்துலே ச்சின்னத்தெருவிலே.

said...

டிபிகல் அக்கா ஸ்டைல். ரசித்தேன். வேதனையைக்கூட நகைச்சுவையாய் மாற்றுவது ஒரு தனிக்கலை. அதில் நீங்கள் ஒரு டாக்டரேட்!

said...

ஜெய சந்திரசேகரன்,

பட்டமளிப்பு எப்பன்னு தெரிஞ்சா நல்லது.
'கவுன்' கடன் வாங்கணுமே:-))))

இப்போ என்னாலே குமரன் காலனி எங்கேன்னு
கண்ணை மூடிக்கிட்டுச் 'சொல்ல' முடியும்.

said...

//சென்னையப் பாத்துக் கெட்டுப் போய்ட்டாங்க.....//
ஆகா, இப்போ சென்னை மாறிட்டு வருது. இப்போவெல்லாம் fixed rate. கூட்டுவதும் இல்ல. குறைப்பதும் இல்ல. (அதாவது, இன்னமும் meter-less தான்). உதா, திருவல்லிக்கேணி --> செந்த்ரல், 30ரூ.

said...

வாங்க சீனு.
இது பரவாயில்லையேங்க.
தகராறு வராதில்லையா?
ஆமா, முப்பது ரூபாய் ஜாஸ்தின்னு சொல்றீங்களா? இல்லே, ஓக்கேயா?

said...

முப்பது ரூபாய் என்பது meter கணக்கை விட அதிகம். காரணம், பெங்களூரில் minumum charge 10 ரூபாய், பின் ஒரு கி.மீ.க்கு 5 ரூபாய். ஆனால், இங்கே minumum charge 7 ரூபாய் (2 கி.மீ.க்கு), பின் ஒரு கி.மீ.க்கு 3.5 ரூபாய். திருவல்லிகேணி to சென்ட்ரல் மொத்தம் 4 கி.மீ. அப்போ கணக்கு போட்டுக்குங்க (அடடா! விஜயகாந்த் மாதிரி ஆகிட்டேனா?). யாரை குற்றம் சொல்ல?

said...

என்னங்க இது, இந்தப் பதிவு சுத்திச் சுத்தி வருது?