ஒருவாரமா முட்டி மோதி, முங்கியெழுந்து விஸ்ட்டாவை புரிஞ்சு(???)க்கிட்டு ஒருவழியா பின்னூட்டம் மட்டும் தமிழில் போடப் படிச்சேன்.
இந்த விஸ்ட்டா ரொம்பவும் 'நோஸி''யா இருக்கோன்னு ஒரு பயம் வந்துருக்கு. அப்படியெ கண் குத்திப் பாம்பாட்டம் நம்மையே கவனிக்குது.
ஒருவிதத்தில் வேண்டாத யாரையும் வீட்டு வாசலைக் கடக்க விடலைன்றது நல்லாத்தான் இருக்கு. ஆனா வீட்டு முன்னாலெ கூட்டம் சேருதோன்னும் கவலை.
கலப்பையை அப்பப்ப எடுத்து வச்சுரணும் இல்லேன்னா தமிழ் வராது. பாதிவேலையில் இருக்கும்போது எல்லாத்தையும் மூடுன்னதும் ‘கப்சுப்’ன்னு மூடிக்கணும்!
நம்ம கணினியில் கைரேகை அடையாளம் வச்சாப் போதுமாம். அதுக்குக்கூட நான் கைநாட்டுன்னு தெரிஞ்சுருக்கு:-) ஆனா நாம் என்ன லேசுப்பட்ட ஆளா? கட்டைவிரல் வச்சாத்தானே கைநாட்டு? நான் மத்த விரலை வச்சுட்டேன். தப்பித்தவறி நான் ‘சடார்’னு மண்டையைப் போட்டுட்டா, கோபாலுக்குக் கஷ்டம். அண்டர்டேக்கர்கிட்டெ சொல்லி என் அடையாள விரலை எடுத்துப் பாடம் பண்ணிக்கணும். அப்ப நினைவிருக்குமான்னு தெரியலை(-:
சாப்புடறப்ப மட்டும் ரேகை வைக்கமுடியலை. எச்சக் கையில் *** ஓட்டமாட்டேனோ என்னவோ?
அதுவுமில்லாம ஒரு வாரமா கைரேகைக் கொஞ்சம் தேஞ்சமாதிரி வேற இருக்கு(-:
நம்ம இளாவோட ஐடியா நல்லா வொர்கவுட் ஆகுது.
செய்யவேண்டியது எல்லாம் கணினி தொறந்ததும் தானே வர்ற ‘தமிழா’வை போயிட்டு அப்புறம் வாப்பான்னு அனுப்பிட்டு, நம்ம கலப்பை ஃபைலைத் தொறந்து இப்ப நிறுவுன்னு ஒரு உத்தரவு போட்டால் அது சொல்லும் பேச்சுக்கு ,’உம்’ கொட்டிக்கிட்டெ இருந்தால், அது கட்டக் கடைசியாக் கேக்கும், பழைய ‘கீ போர்டை’ கடாசவான்னு. அதுக்கும் ஒரு ‘உம்’ போட்டா வேலை முடிஞ்சது. யூனிகோடில் சிகப்பு ‘அ’ வந்து வயித்துலே காஃபி வார்க்கும் (காலையில் பால் ஆவறதில்லை)
அப்படியே தமிழ்மணத்துலே ஒரு உலாத்தல். பின்னூட்டம் கொடுக்க நினைச்சா............ மஜாவா அங்கே தமிழில் எழுதலாம்.
எல்லாஞ்சரி. நோட்பேடு மட்டும் நம்மைப் பார்த்தாவே பதுங்குது. அங்கேதான் நுழையமுடியலை. அதுக்காக நாம் ஆத்தும் தமிழ்ச்சேவையை
விட்டுற முடியுமா? உனக்காச்சு எனக்காச்சுன்னு இப்ப மைக்ரோசாஃப்ட் வேர்டுலே புழங்கறேன். அதுவும் ரெண்டு மாசத்துக்கு ஓசியாம். அப்புறம் ?
அந்தப் பாலம் வரும்போது அதைக் கடக்கலாம். இது என்ன பெரிய ராமர் பாலமா?
‘ராவணனிடம்’ தஞ்சம் புகுந்தேன்.................
சுரதா இருக்குன்னாலும், ‘கிழ நாய்க்குப் புது வித்தையைக் கத்துக்குடுக்கறது ரொம்பக் கஷ்டமாமே.’..............பழமொழி சொல்லுது.
இப்ப வாலை நுழைக்க எதாவது குறுக்குவழி இருக்கான்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க.
காத்துருக்கேன்.................
Showing posts with label வால். Show all posts
Showing posts with label வால். Show all posts
Wednesday, September 26, 2007
இன்னும் வால் மட்டும் நுழையலை(-:
Posted by
துளசி கோபால்
at
9/26/2007 08:57:00 PM
31
comments
Subscribe to:
Posts (Atom)
