Showing posts with label பிரதமர். Show all posts
Showing posts with label பிரதமர். Show all posts

Wednesday, June 06, 2007

நியூஸிலாந்து பகுதி 66

அது என்னங்க, அரசியல்வாதிகள் எல்லாம் மாணவர்களையே குறி வைக்கறாங்க? மாணவ சமுதாயம்நினைச்சா எதுவேணாலும் நடந்துருமோ? இல்லை.......இளம் மனசைக் குளிர்விச்சா, அப்படியே பெத்தவங்களும்குளிர்ந்து போவாங்கன்னா??

படிக்கும் மாணவர்களுக்குக் கொடுக்கற கடனுக்கான வட்டியைக் குறைச்சாங்க. இது இப்பப் புதுசாச் சேர்ந்த மாணவர்களுக்குதான். ஆனா 2001 வருசத்துக்கு முன்னாலே வாங்குனவங்க அப்ப இருந்த வட்டியைக் கட்டணுமுன்னும் சொன்னாங்க. அதுசரி, படிச்சு முடிச்ச பிறகு தானே? அப்பப் பார்த்துக்கலாம்........... கடனில்லாத மாணவனைப் பார்க்கறது இங்கே அபூர்வம்.
அதுவுமில்லாம, இங்கேதான் படிக்கற வயசுன்னு ஒண்ணும் இல்லையே. யாரு வேணா எப்ப வேணாப் படிக்கலாம்.ரிட்டயர் ஆனபிறகு படிக்கிறேன்னு கடன் வாங்கிக்கிட்டுப் படிச்சவங்க பலர் இருக்காங்க. இவுங்க எப்பப் படிச்சு முடிச்சு,அப்புறம் எப்ப( எப்படி?) வேலைக்குப் போய்க் கடனைக் கட்டுவாங்க? எல்லாம் காந்திக் கணக்குதான்.

2002 தேர்தலில் ஓட்டுப்பதிவு கூட குறைஞ்சு போச்சு. வழக்கமா 89% ஓட்டுப்போடும் மக்கள்ஸ், இந்த முறை 77% பதிவுதான் செஞ்சிருந்தாங்க. 'எப்படியோ போங்க'ன்ற மனப்பான்மை வந்துருச்சோ என்னவோ! நேஷனல் கட்சிக்கு 27 இடம்தான்.லேபருக்கு 52. பாராளுமன்றத்துலே மொத்தம் 121 இடங்களாச்சே. அதனாலே 61 இருந்தாத்தானே 'அரியணை' ஏற முடியும்?என்ன செஞ்சிருப்பாங்கன்றீங்க? மறுபடி கூட்டோ கூட்டு.
( எங்க நாட்டு அம்மா)

'மருத்துவப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ஆஸ்பத்திரிகளில் போனா அதி முக்கிய அறுவை சிகிச்சைத் தவிர,பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட் என்னும் காத்திருப்பு கூடுதலா இருக்கு. நோயாளிகளோட வரிசை ரொம்ப மெதுவா இருக்கு. அவுங்கவுங்க முறை வர்றதுக்குள்ளே ஆளே போயிருவாங்க'ன்னு கூக்குரல் எழுந்தது.போதுமான மருத்துவத்துறை ஆட்கள் இல்லைன்றதும் ஒரு முக்கிய காரணமா இருந்துச்சு. செவிலிகள் பற்றாக்குறை வேற.இங்கே செவிலியர் படிப்பு முடிஞ்சவுங்களுக்கு, அண்டை நாடான ஆஸ்தராலியாவில் வேலை சுலபமா அதிக சம்பளத்தோடக் கிடைச்சது. மேலும் நியூஸிகளுக்கு ஆஸிக்குப் போகவும், அங்கே வேலை செய்யவும் தடை ஏதும் இல்லை.விஸான்னு எதுவும் வாங்கவும் வேணாம். கூடக் காசுன்னதும் மக்கள்ஸ் போகாம இருப்பாங்களா? மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறையில் ஏராளம்.

இப்பத்து அரசாங்கம் இதுக்கு எதாவது வழி செய்யணுமுன்னு மத்த நாட்டுச் செவிலியர்களுக்கு இங்கே வேலைக்கானஅனுமதி கொடுக்கும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்துச்சு. இதைப் பயன்படுத்திக்கிட்டு, நம்ம கேரள நாட்டுச் செவிலியர்கள் நிறையப்பேர் வந்து இப்போ இங்கே வேலை செய்யறாங்க. டாக்டர்கள் விஷயம்தான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை(-:


டாக்டர்கள் இங்கே வந்து வேலை செய்யணுமுன்னா மட்டும் ஆயிரம் கண்டிஷன்கள். அவுங்களை மீண்டும் தேர்வு எழுதவச்சே முக்காவாசிப்பேரை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. அதுவும் மூணு முறைக்கு மேலே தேர்வுஎழுத அனுமதி இல்லை. ரெண்டு முறை தேர்வில் தோத்துப்போய், மூணாவதுக்குப் பயந்துக்கிட்டு வேற எதாவது வேலை செய்யப் போயிரும் டாக்டர்களையும் நாங்க சந்திச்சு இருக்கோம். டாக்ஸி ஓட்டியாக்கூட வேலை செய்யறாங்க. பேசாம அவுங்க நாட்டுலேயே இருந்திருக்கலாம். படிச்ச படிப்பு ஏத்த மரியாதையாவது மிச்சமாயிருக்குமுன்னு நான் புலம்புவேன்.


இங்கே எல்லாருக்கும் ஒரு குடும்ப டாக்டர் இருக்கணுமுன்னு ஒரு ஏற்பாடு இருக்கு. எல்லாப் பகுதிகளிலும், G.P. ன்னு சொல்லும் ஜெனரல் ப்ராக்டிஷனர்ஸ் சிலர் சேர்ந்து மருத்துவ மனை வச்சுருப்பாங்க. படுக்கை வசதிகள் எல்லாம் இல்லை. பகல் நேரம் காலை 9 முதல் மாலை 5.30 வரை டாக்டரைப் பார்க்கும் க்ளினிக்தான். இங்கே மருத்துவர்கள் மனம்போனபடி ஃபீஸ் வாங்க முடியாது. அரசு நிர்ணயிக்கும் தொகைதான். இதுலே மக்கள்ஸ் வருமானம் அனுசரிச்சு குறைச்சலாவோ,கூடுதலாவோ வாங்குவாங்க. உதாரணத்துக்கு ஒரு நோயாளிக்கு 100 டாலர்ன்னு அரசு சொன்னா, வருஷத்துக்கு 36,000 வருமானம் இருக்கறவங்ககிட்டே 50 வாங்குவாங்க. 16 வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அரசாங்க உதவி வாங்கறவங்களுக்கு, குறைஞ்ச வருமானம் உள்ளவங்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்குன்னு இன்னும் குறைச்சலா வாங்குவாங்க. இதுலே துண்டு விழும் காசு அரசு, மருத்துவர்களுக்குக் கொடுத்துரும்.

கொஞ்சம் வயது போனவர்கள் டாக்டர் செலவைப் பார்த்துப் பயந்து, தங்கள் உடல்நிலையில் அக்கறை காட்டலைன்னு செய்தி வர ஆரம்பிச்சது. இது ஆபத்தாச்சே. ரொம்ப மோசமான நிலைக்குப் போயிட்டா அரசாங்கம்தானே கவனிக்கணும்? முன்னெச்சரிக்கையா இருக்கலாமுன்னு லேபர் ஆட்சியில் இதைக் கொஞ்சம் குறைச்சாங்க. 50 வயசுக்குமேலே இருக்கறவங்களுக்கு யாரா இருந்தாலும் இருந்தாலும் குறைவான காசுதான். இன்னிக்குக் கணக்குக்கு ஒரு தடவை டாக்டரைப் பார்க்க 28 $ கொடுத்தாப் போதும்.

மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்தை வாங்கிக்க மருந்துக் கடைகளில் போனா, அங்கேயும் ஒரு சில மருந்துகளைத் தவிர மத்த மருந்துகளுக்கு அரசு மானியம் கிடைக்கும். இதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துனதாலே மக்களுக்கு மருந்துச் செலவு குறைஞ்சது.

மருத்துவக் காப்பீடு எடுத்துக்கிட்டோமுன்னாதான் நல்லது. ஆனாலும் தனியார் ஆஸ்பத்திரிகள் இல்லாததால் எதுக்கெடுத்தாலும் அரசாங்க மருத்துவ மனைகளையே நம்பி இருக்கணும். இப்ப ஒரு பதினைஞ்சு வருஷமா ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனியே முக்கிய நகரங்களில் மருத்துவ மனைகளைத் திறந்திருக்கு. காப்பீடு இல்லாம உள்ளே கால் வைக்கமுடியாது. ஆர்கனைஸ்டு சர்ஜரிகள் மட்டும் இங்கே நடத்துறாங்க. அரசாங்க ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே இங்கேயும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதுக்கும் நம்ம குடும்ப மருத்துவர்கள் மூலமாத்தான் போகணும்.

இங்கே உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கெல்லாம் போனா நாம் காசு எதுவுமே கொடுக்க வேணாம். அரசாங்கமே பார்த்துக்கும். ரத்தப் பரிசோதனைக்கெல்லாம் குடும்ப டாக்டர் பரிந்துரைக்கணும். ரிஸல்ட்டும் அவுங்களுக்குத்தான் போகும். எக்ஸ்ரே, MRI இதெல்லாமும் காத்திருக்கக் கூடிய வகைன்னா அரசாங்க மருத்துவ மனையிலேயே இலவசமா செஞ்சுக்கலாம். நமக்குக் காப்பீடு இருக்குன்னா, இதுக்குண்டான தனியார் நிலையங்களில் செஞ்சுக்கலாம்.

டாக்டர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளை நீண்டகாலம் எடுக்கணுமுன்னா மூணு மாசத்து சப்ளை கிடைக்கும். அதுவுமேஒரு மாசத்துக்குண்டான மருத்தைக் கொடுத்துட்டு அது முடியும் சமயம் இன்னொரு மாசத்துக்குன்னு கொடுப்பாங்க.மருந்துக் கடைகளுக்குத்தான் இந்தப் பொறுப்பு. முதல் மாசத்துக்கு வாங்கும் சமயம் காசு கொடுக்கறதோட சரி. அதுக்கப்புறம் அடுத்த ரெண்டு மாச சப்ளைக்குக் காசு கொடுக்க வேணாம்.

மருந்துப்பேரைத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, அப்படியே போய் கடையில் வாங்கிக்கறதெல்லாம் இங்கே முடியாது. தலைவலி மாத்திரைதான் இப்படிக் கிடைக்கும். கை வைத்தியமா ஆண்ட்டிபயாடிக் வாங்கித் தின்னுற கதையெல்லாம் போச்சு.எதுவும் மருத்துவர் சொல்லாமக் கிடைக்காது. பொதுவாவே இங்கே மருந்துக்களை அவ்வளவாப் பரிந்துரைக்கவே மாட்டாங்க இந்த மருத்துவர்கள். நமக்குத்தான் டாக்டர் க்ளீனிக்போயிட்டு, வெறுங்கையா வர்றது என்னவோ போலிருக்கும்:-)))))) முழ நீள மருந்துச்சீட்டுக்குப் பழக்கப்பட்டவங்களாச்சே நாம். அப்புறம் 'டானிக்' எழுதி வாங்கிக்கறது? மூச்...பேசப்படாது ஆமாம்.

50 வயசுக்கு மேலே இருக்கும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் பரிசோதனை (மம்மோகிராம்) ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை முற்றிலும் இலவசமாக்கினாங்க.....வரப்பிரசாதமுன்னே சொல்லலாம். பலருக்கும் பயனா இருக்கு.

பிரசவத்துக்குத் தாய்மாருக்குக் கொடுக்கும் லீவையும் அதிகப்படுத்துனாங்க. பிரசவ சமயத்துலே குழந்தையோட அப்பாவுக்கும் 2 வாரம் லீவு சம்பளத்தோடு கிடைக்கும். குழந்தை வளர்ப்பில் ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கணுமில்லையா?அதுக்கப்புறமும், இன்னும் லீவு வேணுமுன்னா ஒரு வருஷம்வரை சம்பளமில்லாம லீவு தாயோ, தகப்பனோ எடுத்துக்கலாம். அவுங்க வேலைக்கு ஆபத்து இல்லை. அப்புறம் போய்ச் சேர்ந்துக்கலாம். 'பார்ட்னர்ஸ் ' எல்லாரும் தனிக் குடித்தனமாவே இருக்கறதாலே இதெல்லாம் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.