Showing posts with label ஆஸ்ட்ராலியா. Show all posts
Showing posts with label ஆஸ்ட்ராலியா. Show all posts

Monday, July 23, 2007

எ.கி.எ.செ? (கடைசிப்) பகுதி 12

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
இன்னிக்கு 'ஆஸி டு நியூஸி'ன்னு கிளம்பறோம். காரைக் காலையில் பத்துமணிக்குத் திருப்பிக் கொண்டுவிட்டுறணும்.'க்ரேஸ் டைம்' அரைமணி நேரம் இருக்கு. அதுக்குமேலே போச்சுன்னா ஒருநாள் வாடகை கூடிப்போயிரும்.இன்னிக்குக் காலையில் வழக்கமான(??) நடைப்பயிற்சி வேணாமுன்னு முடிவு பண்ணிட்டு, சாமான்களையெல்லாம் பொறுக்கி ஒழுங்கா மூட்டைக் கட்டிட்டு, 'கோயில்' பார்க்கப் போனோம். உள்ளெ எப்படித்தான் இருக்குன்னு பார்த்தே தீரணும்.


நல்ல கூட்டம் இருக்கு. எல்லாரும் நீட்டா உடை உடுத்தி வந்துருந்தாங்க. அன்பா வரவேற்று உள்ளெ போகச் சொன்னாங்க.பெரிய ஹால்தான். ஒரு கோடியில் மேடை இருக்கு. அதுலே ஒரு மைக். கீழே நிறைய நாற்காலிகள். குழந்தையும் குட்டியுமா ஜேஜேன்னு இருக்கு. கடைசி வரிசையில் உக்கார்ந்தோம். ஒரு ட்ரே மாதிரி (தூக்குக் கைப்பிடியுள்ளது) வரிசையா எல்லார்க்குமுன்னே நீட்டிக்கிட்டே வந்தாங்க. மக்கள் அதுலே இருந்து ஒண்ணை எடுத்து வாயில் கவுத்துக்கிட்டு திருப்பி காலிக்குப்பியை அதுக்குன்னு இருக்கும் இடத்துலே போடறாங்க. கண்ணு பார்த்தா கை செய்யாதா நமக்கு? அரை ஸ்பூன் அளவு வரும் தண்ணீர்( தீர்த்தம்?)அதுக்கேத்தமாதிரி ச்சின்ன்ன்ன்ன்ன டம்ப்ளர். நம்மூர்லே டீக்கடைக்காரப் பையன் கொண்டுவரும் அஞ்சாறு டீ க்ளாஸ் வைக்கும் கொத்து ஞாபகம் வந்துச்சு. ஆமாம். இதுக்கு எதுக்கு இவ்வளவு நோணாவட்டம்?பேசாம நம்மூர்லே ச்சொட்டு மருந்து தர்றதுபோல வாயிலே விட்டுறலாமே? ச்சுப். பேசப்படாது:-)

Mormons churchன்னு எப்பவோ கேட்டுருக்கேன். அவுங்களுதாம் இது. நாங்க இப்ப இருக்கறது 'மீட்டிங் ஹவுஸ்ன்னு சொல்ற ஞாயித்துக்கிழமை நிகழ்ச்சியாம். நேத்துக் காலையில் என்னவோ அலுவல் நடக்குதுன்னு எட்டிப் பார்த்த இடம்தான் கோவிலாம். இங்கே 'அதுக்குன்னு' இருக்கறவங்க மட்டுமே நுழைஞ்சு பூசை செய்வாங்களாம். அப்ப எல்லாரும் வெள்ளை உடுப்புப் போட்டுக்குவாங்களாம். வெள்ளைன்றது பரிசுத்தத்தைக் குறிக்குமாம். நல்லவேளை, நேத்து ஓசைப்படாம ஓடுனது.'நேரமாகுது, பிரசங்கம் ஆரம்பிச்சா அப்புறம் நடுவுலே எழுந்து போறது நல்லா இருக்காது'ன்னு இவர் சொன்னதாலேஒரு அஞ்சு நிமிஷம் மனசுக்குள்ளெ 'தெரிஞ்ச மாதிரி' சாமியைக் கும்பிட்டுட்டு வெளியே வந்தோம். வாசலில்உக்கார்ந்திருந்த பாட்டி(??) அன்போடு பேசுனாங்க. 'நேரமாயிருச்சு'ன்னு சொன்னேன். நம்மைப் பத்துன விவரம்கேட்டுட்டு, பத்திரமா பிரயாணம் இருக்கணுமுன்னு ஆசி வழங்குனாங்க. பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரி இல்லையா?

ஷாலட் தெருவிலே வண்டியைச் சரியான நேரத்துக்குக் கொடுத்துட்டு, 'ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்'களில் குறுக்கெயும் நெடுக்கேயுமாப் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலின் நடுவிலே இன்னிக்கு பள்ளிக்கூடப் பசங்க நிறைய இருக்கும் 'கொயர் நிகழ்ச்சி'. சனி, ஞாயிறுகளில் இப்படி எதாவது நடத்துதாம் 'மால் மேனேஜ்மெண்டு'.

இந்தப் பக்கம் கழைக்கூத்தாடி வித்தை காமிக்கிறார், ஆங்கிலம் பேசிக்கிட்டு. நெத்தியிலே கத்தியைச் செங்குத்தா நிறுத்தறதும், மூணு கத்திகளை வச்சு அம்மானை ஆடறதும், அவரைச்சுத்தி ச்சின்னப்பிள்ளைகள் கூட்டமும் கனஜோர். இன்னொரு பக்கம் வாயில் ஒரு சின்னக்குழாய் மாதிரி ட்யூப் அடைச்சுக்கிட்டு கர்மசிரத்தையா ஓவியம் தீட்டிக்கிட்டு இருந்தார் ஓவியர். என்னென்னவோ நிறங்களை ஸ்ப்ரே செஞ்சு கடைசியில் பார்த்தா அட்டகாசமான கலர்காம்பிநேஷனில் படம். வரைஞ்சு தள்ளியது நிறைய விற்பனைக்கு இருக்கு ஒரு பக்கம்.

எலிஸபெத் தெருவில் இருக்கும் 'கோவிந்தாஸ் ரெஸ்டாரெண்ட்' லே( ஹரே கிருஷ்ணா) சாப்பிடலாமுன்னு போனா......... நம்ம அதிர்ஷ்டம்மாலையில் பஜனை & 'இலவச'விருந்து இருக்காம். அதுக்காக சமைச்சுக்கிட்டு இருக்கறதாலே இப்ப 'உணவுவிற்பனை' கிடையாதாம். ஃபுட்கோர்ட்டுக்கு வந்து 'நம்ம பேர் எழுதியிருந்த பீட்ஸா'வை முழுங்கிட்டு ரெண்டு மணிக்குஅறைக்கு வந்தோம். செக் அவுட் நேரம் காலை 10 மணி. ஆனா நமக்கு ரெண்டு மணிவரை லேட் செக் அவுட் அனுமதி இருந்துச்சு. மோட்டல்காரங்ககிட்டே, இனி எப்ப வந்தாலும் 4A ரூம் நமக்குன்னு சொல்லிட்டு, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு ஏர்போர்ட்டுக்கு நதியின் குறுக்கே இருக்கும் பதிமூணில் ஒண்ணான 'ஸ்டோரி ப்ரிட்ஜ்' ( நல்ல பொருத்தமான பெயர்தான் இந்தக் கதை முடிவில்) வழியா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.

சிட்னியின் ஹார்பர் ப்ரிட்ஜ் டிஸைன் செஞ்சு கட்டுனவர் ஜான் ப்ராட்ஃபீல்ட்(John Job Crew Bradfield) . இந்த'ப்ரிஸ்பேன் ஸ்டோரி ப்ரிட்ஜ்'ம் இவர்தான் டிஸைன் செஞ்சு கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க முழுக்க ஸ்டீல்கன்ஸ்ட்ரக்ஷன்.cantilever bridge

அமெரிக்கா கொண்டுவந்த விதிப்படி இப்ப இங்கே ஆஸி, நியூஸியெல்லாம் 'ஸீத்ரூ ப்ளாஸ்டிக்' பையில் டூத்பேஸ்ட்,க்ரீம் இத்தியாதிகள் ( 100 ml அளவுக்குள்ளே மட்டும் இருக்கணுமாம்) போட்டு,செக்யூரிட்டி செக்கப் வரை கையிலே தனியா வச்சுக் காமிக்கணுமுன்னு தமிழைத் தவிர எல்லா மொழிகளிலும் அச்சடிச்சு வச்சு கூடவே அதுக்குண்டான ப்ளாஸ்டிக் பைகளையும் போட்டு வச்சுருக்காங்க. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பையைக் கையில் எடுத்துக்கிட்டேன்.

செக்யூரிட்டியில் நான் வெறும் ஹேண்ட் பேக் மட்டும் வச்சுருக்கறதைப் பார்த்துட்டு அதை ஸ்கேன் செஞ்சபிறகு, என்னோட ப்ளாஸ்டிக் பை சாமான்கள் எங்கேன்னு கேட்டதுக்கு, நான் 'எல்லாத்தையும் செக்கின் பண்ண பெரிய பெட்டியிலே போட்டாச்சு. கையோட கொண்டு போறதுன்னாதானே ப்ளாஸ்டிக் பையிலே போடணும்?' சொன்னேன்.

"இந்தப்பக்கம் வாங்க, உங்க ஹேண்ட்பேகைத் திறந்து காமிங்க. அதுலே என்னவோ இந்த இடத்தில் இருக்குன்னு, ஸ்கேன்லே காமிக்குது."

அந்த இடத்துலே திறந்து நான் வெளியே எடுத்தது ஒரு லிப்ஸ்டிக்.

"ஓ........ நீங்க இதைத் தனியா ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

"அப்படியா? லிக்விட் ஐட்டம்தானே பையிலே போடணும்? "

"இல்லையில்லை. இதையும் ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

போட்டாப்போச்சு. இதோன்னு கையிலெ வச்சிருந்த ப்ளாஸ்டிக்லே போட்டேன்.

'சரி. நீங்க போகலாமு"ன்னு அதிகாரி சொன்னார். ( ஹூம்........இந்த இடத்துக்கு இவ(ன்)ர் ராஜா.)

என்னவோ எதோன்னு ' எங்க இவர்' பதறியடிச்சு என் பக்கம் வந்தார்.

"ஒண்ணுமில்லை."
(லிப்ஸ்டிக்கை வச்சு, விமானத்தைக் கடத்திருவேன்னு ஒரு சந்தேகம்)

உள்ளே லவுஞ்சுலே போனபிறகு, 'அந்த ஸ்கேனர் இதைப் பிடிக்காம விட்டுருச்சு பாருங்க'ன்னு கைப்பையில் இருந்த இன்னொரு லிப்ஸ்டிக்கை எடுத்துக் கோபாலுக்குக் காமிச்சேன்.

"எல்லாரும் கையிலெ ப்ளாஸ்டிக் பை பிடிச்சுக்கிட்டு வந்தப்ப நீ வெறுங்கையா வந்ததுக்கே, உன்னை ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு அவருக்குத் தோணி இருக்கு"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த இடத்துக்கு அவ(ன்)ர் ராஜா"

விமானம் கிளம்ப இன்னும் மூணுமணி நேரம் இருக்கு.
அருமையான பாஸ்த்தா, சன் ட்ரைய்டு டொமாட்டோ, மஃப்பின், காஃபின்னு கொஞ்சம் நல்லாவே( ஓசியில்) சாப்பிட்டுட்டு, நான் தமிழ்மணத்திலும், இவர் தினசரியிலுமா மூழ்குனோம்.

ஊருக்கு வந்து சேர்ந்தப்ப இரவு 12 மணி. இறங்குன பிறகு, Agate Geode கொண்டு வந்துருக்கேன்னு டிக்ளேர் செஞ்சிருந்தேன்.எடுத்துக்கூடக் காமிக்கச் சொல்லலை. ஒரு கேள்வி மட்டும்தான்.

"கடையில் வாங்குனதுதானே?"
"ஆமாம்."
"நோ ப்ராப்ளம். "

இது.............. :-)
வெளியே வந்தவுடன் 'ஆச்சரியத்திலும் ஆச்சரியமா' மகள் வந்துகாத்திருக்காள். டாக்ஸி செலவு மிச்சம்:-)))))

இதுவரை பன்னிரெண்டு முறை கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

12 பதிவு(ம்) எழுதலாம்:-)))))

நன்றி & வணக்கம்.

Monday, July 16, 2007

எ.கி.எ.செ? பகுதி 10

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? ஆஸ்ட்ராலியப் பழங்குடிகளை வதைக்கமுடிஞ்ச அளவுக்கு வதைச்சுட்டு, இப்ப ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திதான்இவுங்களும் தங்களில் ஒருவர்னு ஏத்துக்கிட்டு இருக்கு அரசு. அதுக்காக வருஷக்கணக்காப் போராடுனவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.இத்தனைக்கும் இவுங்க இங்கே வந்தே அறுபதாயிரம் வருஷங்கள்வரை ஆகி இருக்கலாமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஒவ்வொருகுழுவா வெவ்வேற இடங்களில் இருந்துருக்காங்க. அதுக்கேத்த மாதிரி தங்களை அடையாளப்படுத்திக்க ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பேர் இருந்துருக்கு. கூரி, முர்ரி, நூங்கர், யமட்ஜி, நுங்கா இப்படியெல்லாம் அவுங்க இருந்த இடத்தைக் குறிப்பிடும் பேர்கள் இருக்கு. அப்ப ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இருந்துருக்காங்களாம்.




1770லே காப்டன் குக் இங்கே வந்தது, அப்புறம் 1788லே இங்கிலாந்து இதையும் தன்னோட காலனிகளுக்குள் ஒண்ணாபிடிச்சுக்கிட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். வெள்ளைக்காரங்களோடு கூடவே வந்தது நோய்களும்தான். பெரிய அம்மை,சின்னம்மை வகைகள்,இன்ஃப்ளூயன்ஸான்னு வந்து பரவுச்சு. பழங்குடிகளைத் துரத்திட்டு அவுங்க இருந்த இடத்தையெல்லாம் வெள்ளைக்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க. என்ன செய்ய, ஏது செய்யன்னு வகைதொகை தெரியாத இந்த ஜனங்க பிழைக்க வழியில்லாம, புது இடத்துக்குப் போன வாழ்க்கைப் போராட்டத்துலேயே கொஞ்சம்கொஞ்சமா பலமில்லாம,உடல்நிலை சரியில்லாமப்போய் நிறைய உயிர்கள் போயிருக்கு. போதாக்குறைக்கு, மிருகங்களை வேட்டையாடுறதுபோல இவுங்களைக் கூட்டங்கூட்டமாக் கொன்னு குவிச்சுருக்காங்க. நூத்தி முப்பது வருசம் விடாமத் துரத்திக்கொன்னா எந்த இனம்தான் தப்பி உயிரோடு இருக்க முடியும்?



இதுக்கிடையிலே இவுங்களுக்குப் புள்ளை வளக்கத் தெரியலைன்னு பழங்குடிகளின் பிள்ளைகளையெல்லாம் அப்பா,அம்மாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப்போயிட்டாங்க. புள்ளைங்களுக்குப் படிப்பு, நல்ல நாகரீகப் பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கறோமுன்னு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிள்ளைகளை எடுத்துக்கிட்டுப்போய் கேம்ப், அனாதைகள் இல்லம்னு வச்சுப் பார்த்தாங்களாம். இதுலே சோகம் என்னன்னா......... அங்கே இருந்த பெண்குழந்தைகள் ரொம்ப மோசமா நடத்தப்பட்டது.17 சதமானம்பேர் abuseக்கு ஆளாக்கப்பட்டு.............. ச்சே என்ன கொடுமை . அங்கே இருந்து தப்பி ஓடியசிறுமிகளைப்பத்தி ஒரு சினிமாகூட 'Rabbit-Proof Fence'ன்னு வந்துச்சு. யாராவது பார்த்தீங்களா?




எந்தப் பிள்ளைங்க எந்தப் பெற்றோர்களுதுன்னு சரியான ஆவணங்கள் கூட எழுதி வைக்கலையாம். பிள்ளைங்க 18 வயசானதும் அவுங்களை வெளியே அனுப்புனப்ப, அதுங்க தங்களுடைய சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்குங்க. தப்பித்தவறிப் பெத்தவங்ககிட்டே போய்ச்சேர்ந்தவங்களும் அவுங்க மொழி தெரியாம முழிச்சாங்களாம்.அரசாங்கம் செஞ்சது அநியாயமுன்னு பலரும் போராடி, மனித உரிமைக் கழகம்வரை செய்திகள் போயிருச்சு.



1967 வருஷம்தான் கருத்துக் கணிப்பு நடத்துனாங்க, பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வழங்கலாமான்னு. 90% மக்கள்அவுங்களையும் மனுசங்களா மதிக்கணுமுன்னு ஒத்துக்கிட்டதாலே பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வந்துச்சு.



1998லே 'நாங்க, பழங்குடிகளுக்குச் செஞ்ச அநியாயத்துக்கு வருந்தறோமு'ன்னு சொல்லி நாடே மன்னிப்புக் கேட்டுச்சு. ஒவ்வொருவருஷமும் மே மாசம் 26 அன்னிக்கு National Sorry Day ன்னு வருத்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க 2004 வரை. அதுக்கப்புறம்,மனப்புண்ணை ஆத்தும் நாள்ன்னு( National Day of Healing ) மாத்திக்கலாமுன்னு ஆரம்பிச்சு, மறுபடியும் பழைய பேருக்கே வந்துச்சு.




2000 வருஷம் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தய விழாவுலே அபாரிஜின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கேத்தி ஃப்ரீமேன் கையாலே, ஒலிம்பிக் ஜோதியை ஏத்தி வச்சாங்க. பழங்குடிகளுக்கும் மற்ற மக்களுக்கும் இருக்கும் நல்லுறவைப் பலப்படுத்தறோமுன்னு இப்ப ஒரு 11 வருஷமா மே மாசக்கடைசி வாரத்தை National Reconciliation Weekனு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.



இதைப் பத்திச் சொல்லும்போது இங்கெ நியூஸியின் பழங்குடிமக்களை இவுங்களோடு ஒப்பிடாம இருக்க முடியலை. மவொரிகளுக்குத்தான் இங்கே பலவிதமான முன்னுரிமைகள் இருக்கு. அவுங்க நிலங்களை எடுத்துக்கிட்டோமேன்னு அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களை நஷ்ட ஈடா வழங்கிக்கிட்டு இருக்கு. ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டும்தான். கலப்பின மவோரிகளா இருந்தாலும் அவுங்களை மவொரிகள் கணக்குலேதான் எடுத்துக்கும். அரசாங்க அறிவிப்புகள், அறிக்கைகள் எல்லாத்திலும் மவொரி மொழியிலும் அச்சிட்டு இருக்கும். கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் மவொரி மொழிக்குத் தனிப்பிரிவே இருக்கு. இன்னும் பலவிதமான சலுகைகள் இந்த இனத்துக்கு உண்டு. இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சிருந்த காரணத்தால் ஆஸ்ட்ராலிய அபாரிஜின்களைப்பத்தி நினைக்கும்போது மனசுலே துக்கம் வந்ததென்னமோ உண்மை.



பழங்குடி மக்கள் வரைஞ்சு வச்சிருக்கும் குகை ஓவியங்கள், அவுங்க வசித்துவந்த குகைகள் இப்படி பலதும் சுற்றுலாப் பயணிகள் போய்ப்பார்க்கும் முறையில் வசதிகள் இப்ப செய்யப்பட்டிருக்கு. இவுங்களோட கலாச்சாரநிகழ்ச்சிகள்ன்னு நகரங்களில் 'ஷோ' நடத்துறாங்க. இதெல்லாம் இவுங்களைப் பத்தி மத்த ஜனங்கள் ஓரளவு தெரிஞ்சுக்க உதவுது. அரசு நடத்தும் விழாக்களில் சிலசமயங்களில் பழங்குடிகளின் நடனம்(??) சேர்க்கப்படுது.நடனமுன்னு சொல்ல முடியாதுன்னாலும், விழா நல்லபடி நடக்க, ஆசி கூறும் சடங்குன்னும் வச்சுக்கலாம்.



ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திவரை அபாரிஜன்கள் எத்தனைபேர் இருக்காங்கன்ற கணக்கெடுப்புக்கூட நடத்தலைங்க. இப்பச் சொல்றாங்க ஏறக்குறைய அஞ்சு லட்சம் மக்கள் இருக்காங்கன்னு. இவுங்களோட மொத்த ஜனத்தொகையில் ( 21 மில்லியன்) 2.5% பழங்குடிகள். 1977க்குமுந்தி, யாராவது இந்தப் பழங்குடிகளோட கல்யாணம் செஞ்சுக்கிட்டா அது சட்டவிரோதமுன்னுகூட இருந்துச்சு.



இந்த மக்களுக்கு வேண்டிய சுகாதாரம், கல்வி இப்படி எதுவும் இல்லாம ஆதிகால மனுஷங்கமாதிரிதான் இன்னும் பலர் இருக்காங்க. நிறையப்பேருக்கு குடிப்பழக்கம் வேறயாம். விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் கொஞ்சம் முன்னேறிய வாழ்க்கை வாழும் பழங்குடிகள்எண்ணிக்கை இருக்கு. ஒரு சிலர் அரசியல்வாதிகளாவும், பார்லிமெண்ட் அங்கத்தினராவும் ஆகியிருக்காங்க. விளையாட்டு உலகிலும்கொஞ்சம்பேர் முன்னேறி இருக்காங்க.Jason Gillespie என்ற க்ரிக்கெட் விளையாட்டுக்காரரை ஞாபகம் இருக்கா? ஃபுட் பால், ரக்பின்னுஒரு இருபதுபேருக்குக்கிட்ட புகழ் கிடைச்சிருக்கு. ஓவியரான ஒருவர் தங்களுக்காக ஒரு கொடியைக்கூட வரைஞ்சு இருக்கார்.Australian indigenous rights activistsன்னு பலர் இருக்காங்கன்னாலும் இன்னும் போதிய முன்னேற்றம் ஏற்படலைன்னுதான் சொல்லணும். ஏற்கெனவே நல்ல நிலைக்கு வந்தவங்க ஏன் மற்ற மக்களை மேலே கொண்டு வரலை? முயற்சி செஞ்சு தோல்வியா இல்லை, முயற்சியே செய்யலையா?



இப்ப அரசாங்கம் சொல்லுது, இவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணுமுன்னு. 200 வருஷத்துக்கு மேலே இன்னும் சரியாச்சொன்னா 219 வருஷமா அங்கே இருக்கும் அரசு, இன்னும் இவுங்களை முன்னேற்றாம இருக்கறது அநியாயமா என் மனசுக்குப் படுது. இப்பக் கொஞ்ச காலமா, இவுங்க இருக்கும் குடியிருப்புகளில் பிள்ளைகளுக்கு நல்ல சத்துணவு, கல்வின்னு ஆரம்பிச்சு இருக்காங்களாம். அரசு சம்பந்தமான விழாக்களில் இந்த மக்களின் நடனம் இப்பெல்லாம் கல்ச்சுரல் வகையில் நடக்குது. உண்மையான பரிவோட இதெல்லாம் நடக்கலையோன்னு என் உள்மனசுசொல்லுது. என்னுடைய தோணல்களுக்கு முடிவே இருக்காது போல(-: ஒருவேளை தூரத்துலே இருந்து பார்க்கறது வேற, அவுங்களோடபழகி அவுங்களைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவுங்க தேவைகளைக் கவனிக்கறது வேற இல்லீங்களா? அரசு தரப்புலே மன்னிப்புன்னு சொல்லிட்டுச் சும்மா இல்லாம இன்னும் பலவிதத் திட்டங்களைக் கொண்டுவந்து இவுங்களை உண்மைக்குமே முன்னேத்தணும் என்றது என் கோரிக்கை & விருப்பம்.



தொலைக்காட்சியில் பழங்குடி இனத்தைப் பத்தி நிறைய விவரணைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்த ரெண்டுமூணு நாளில் கிடைச்சது. திட்டங்கள் போடப்பட்டாலும் எவ்வளவுதூரம் நடைமுறையில் வெற்றியடையுமுன்னு தெரியலை. முக்கியமா அவுங்க மொழியையும்
கொஞ்சம் காப்பாத்துனாதான் அவுங்க கலாச்சாரம் அழியாமக் காப்பாத்தப்படும், இல்லையா?



தொடரும்...............

Thursday, July 12, 2007

எ.கி.எ.செ? பகுதி 9

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

'சூர்யா' எழுப்புனதும் சூடா ஒரு காஃபி குடிச்சுட்டு நடக்கறதுக்குப் போனோம். உடற்பயிற்சியைக் கொண்டாடும்
ஆட்கள் எங்கே பார்த்தாலும். ஆத்தங்கரை வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்போடு இருக்கு. நேத்து விபத்து
நடந்திருக்கக் கூடிய இடத்தை ஒரு பயத்தோடு எட்டிப்பார்த்தேன். கர்மசிரத்தையா கயிறு கட்டிக்கிட்டி இருக்கார் ஒருத்தர்.
இறங்கி ஏறுவாராம். "தலையில் ஹெல்மெட் போட்டுக்கோ. உனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை"ன்னு
கவுன்சில் போர்டு வச்சுருக்கு. ச்சின்னச்சின்ன விரிப்புகள் போட்டு அதுலே பஸ்கி, தண்டால்னு பயிற்சி செய்யும் ஆட்கள், அதலபாதாளத்தில் ஆற்றங்கரையில்.













அந்த சர்ச் கோவிலுக்குள் போய் எட்டிப்பார்த்தோம். உள் அரங்கத்துலே ரெண்டுமூணுபேர் என்னமோ அலுவலா இருந்தாங்க.
பார்வையாளர்கள் நேரம் காலை 9 முதல்னு ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்துட்டோம்.



இன்னிக்கு சவுத் பேங்க் போகலாமுன்னு எண்ணம் இருந்துச்சு. இந்த ஆற்றின் தெற்குப் பகுதி. இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாதநெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க.


சனிக்கிழமையானதாலே
விடுமுறைக்கூட்டம் இருக்குமுன்னு நினைச்சேன். கார் பார்க்கிங்தான் எங்கே போனாலும் ஒரு தொந்திரவு. இங்கே
ஒரு இடத்தில் ஒரு காருக்கு 10 டாலர்னு பார்த்து விசாரிச்சதுலே நாள் பூராவும் நிறுத்தினாலும் பத்து டாலர்தானாம்.
ஒருமுறை உள்ளே கார் போக பத்துன்னு சொன்னாங்க. கார் பார்க் கட்டிவிட்டாவே பில்லியனர் ஆயிறலாம் போல!






வண்டியை நிறுத்திட்டு நதிக்கரையில் நடந்து போனோம். இதோ நான் தேடிவந்த இடம். நேப்பாளக் கோயில். "நேப்பாள்
ஷாந்தி மந்திர்". 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான்
ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே
வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை.





இந்தமுறை அதைச்சுற்றி கண்ணாடித் தடுப்புப்
போட்டு ஒரு ஸீத்ரூ உண்டியலா ஆக்கி வச்சுருக்காங்க. அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க.
வெளியே ரெண்டு யானைகள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு. உள்ளே ஒரு பெஞ்சு இருக்கை. பின்பக்கம்
புத்த ஸ்தூபியின் அடிப்பாகம் இல்லேன்னா நம்ம கோயில்களில் இருக்கும் பலிபீடம்போல ஒண்ணு இருக்கு. ஒரு ச்சின்ன
செவ்வக வடிவக் குளம். கோயிலைசுத்தி மூங்கில் வனம். அங்கே இருந்து மரப்பாதைப் பாலம் வழியா ஒரு ட்ராப்பிகல்
தோட்டத்தைக் கடந்து போகலாம். பெரணிச்செடிகள் நிறைஞ்சு கிடக்கு.மணி ப்ளாண்ட்ன்னு சொல்வோம் பாருங்க,
அது அப்படிச் செழிப்பா வளர்ந்து மரங்களில் ஏறிப்பிடிச்சிருக்கு. ஒவ்வொரு இலையும் பிரமாண்டம். பேசாம வாழை
இலைக்குப் பதிலா அதுலே சோறு போட்டுச் சாப்புட்டறலாம்( எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்........)







இந்த ஊருக்கு 'பீச்' இல்லாத குறையை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வச்சுருக்கு
நகரசபை. அதை எதுக்குப் பாழாக்கணுமுன்னு அங்கங்கே நீச்சலுடையில் மக்கள். சிலர் சூரியக்குளியல் நடத்திக்கிட்டு இருக்காங்க.
செயற்கைக்கடலில் ச்சின்னதா அலை அடிக்குது. இன்னும் அட்மாஸ்பியர்க்கு வலுவூட்ட வேணுமுன்னு ஒரு 'லைஃப்கார்டு' பத்தடி உயர ஏணியில் உக்கார்ந்து 'கடலில்' குளிக்கும் ஜனங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார். அதைத் தொட்டடுத்து சின்னப் பிள்ளைகளுக்கான நீச்சல்குளம். நீர்விளையாட்டுதான் அங்கே.






இன்னிக்குச் சனிக்கிழமையாப்போனது நல்லதுதான். இங்கே ஒரு மார்க்கெட் சனிக்கிழமைகளில் நடக்குது. கூடாரங்கள்
நாலுவரிசைகளில் முளைச்சிருக்கு. அந்தப் பகுதிக்குப் போனால் கண்முன்னே எதுத்தாப்புலே, நேத்து இருந்து மனசுலே
குடைஞ்சுக்கிட்டு இருந்த விஷயம். ஆஸ்ட்ராலியாவின் பழங்குடியைச் சேர்ந்த ஒருத்தர் டிட்ஜெரிடூ வச்சு வாசிக்கிறார்.
மரத்தினால் செஞ்ச ஒரு ஒன்னரை மீட்டர் வரும் குழாய். அதில் அவர் ஊதும் சத்தம் விநோதமா ஒலிக்குது. நான் படம் எடுக்கறதைப் பார்த்துட்டு, 'எடுத்துக்கோ'ன்னு சொல்லி கையால் ஜாடை காமிச்சுட்டு அவர் ஊதிக்கிட்டே இருந்தார். இதை ஊதறதுக்கு எவ்வளோ மூச்சடக்கி வாசிக்கணும், இது எவ்வளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்ததாலே ஒரு நிமிஷம்
போதுமே. நன்றி சொல்லிட்டு, அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்தேன்.

இங்கே போட்டுருக்குப் பாருங்க.






இவுங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கேன். அடுத்த பதிவுக்குக் கட்டாயம் வந்து பாருங்க.


கொஞ்சம் மனசைக் கல்லாக்கிக்கிட்டு வாங்க.


தொடரும்............

இன்னிக்கு கறுப்பு வெள்ளின்றது என் கணக்குலெ சரியாப் போச்சு(-:

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. இப்ப மறுபடியும் வெளியிட்டுப் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். ச்சூ மந்திரக்காளி......... எல்லாம் சரியாப் போச்சு:-)))) ஹங்........... போச்சா இல்லையா?

Monday, July 09, 2007

எ.கி.எ.செ? பகுதி 8

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகரைத்தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கோம். காலையில் 11 மணிக்குக் கோயிலை பூட்டிருவாங்களாம். மேப்பைப் பார்த்துக்கிட்டேதான் வந்தோம். ஹைவே(Mt Lindesay Highway) 13 இல் வந்துசவுத் மெக்ளீன் பகுதியில், மெக்ளீன் பார்க்குக்கு அடுத்ததுன்னு விலாவரியாப் போட்டுருக்கு. இதோ,மூணாவது முறையா இதே இடத்துக்கு வந்து , மொதல்லே முழிச்சுப் பார்த்தமாதிரி அதே முறைப்பில் இப்பவும் அந்தப் பார்க்கை முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன். பார்க்குக்கு இடது பக்கம் 'ஹிண்டூ டெம்பிள்'னு மேப்லே போட்டுருக்கே! ஆனா............ பார்க் இதோ இருக்கு. அப்ப டெம்பிள் எங்கே? கவுண்டமணி செந்தில் கணக்காப் புலம்ப வச்சுட்டாரே இந்த பிள்ளையார்!


காலையில் கண்ணு முழிச்சதே சூர்யா நினைவாலே. நம்ம ஜே எஸ் சூர்யாங்க. அவர் படத்துலே வர்ற ஆ(ஹ்)ஆ(ஹ்) சவுண்டு கேட்டுத்தான். இது ப்ரிஸ்பேன் காக்கா. அச்சு அசலா அப்படியே கத்துது. மோட்டலில் இருக்கும் யூகலிப்டஸ் மரம். ஒரு பட்டைகூட இல்லாம மொழுமொழுன்னு அப்படியே உரிச்சு வச்சுருக்கு. அதோ உச்சியில் சூர்யா.ச்சேச்சே...........காக்கா.
நாப்பது நிமிஷ ட்ரைவ். இங்கே வந்து அரைமணி நேரமாச்சு. சுத்தி சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம். யாரையாவது கேட்டுப்பார்க்கலாமான்னா ஈ, காக்கையைக் காணொம். மடிக்கணினியை எடுத்துக் கோவிலோட வலைப்பக்கத்தைப் பார்த்தால் அதுலே ஒரு தொலைபேசி எண் இருக்கு. அதுக்கு அடிச்சுக் கேக்கலாமுன்னு கூப்புட்டா........ மணி அடிக்குதே தவிர,யாரும் எடுக்கலை. பூசை நேரம் 9 மணிக்காம். இப்பவே மணி ஒம்போதேகாலாயிருந்துச்சு. பத்தரை மணிக்கு ஒரு நண்பரை, வேற ஒரு இடத்தில் சந்திக்கறதா ஒரு முன்னேற்பாடு. 25 நிமிஷப் பயணம் போகணும்.

பார்க்குக்கு இந்தப்பக்கம் எதிரெதிரா ரெண்டு வீடுகள். ஒரு வீட்டுக் கதவைத் தட்டினோம். வீட்டம்மா நல்லவங்களா, இன்முகத்தோடு சொன்னாங்க. கோயில் அங்கேதான் இருக்காம்(!!!) அதுக்கு நுழைவாசல் இப்ப நாங்க நிக்கற தெருவுக்கு முன் தெருவாம். நாங்க முதல்லே வந்த ஹைவேயில் திரும்பிப்போனா முதல் இடது பக்கம் கோயில்.தொந்திரவு கொடுத்துட்டோம். மன்னிச்சுக்குங்கன்னதுக்கு, அட....... நீங்கவேற. நிறையப்பேர் இப்படி எங்களைத்தான்வந்து கேக்கறாங்க. பழகிப்போச்சு'ன்னு சொன்னாங்க.

ஒரு போர்டாவது வச்சுருக்கலாம் கோவில் இந்தப் பக்கமுன்னு. புலம்பிக்கிட்டே அவுங்க சொன்ன முதல் இடது திரும்புனா இந்துக் கோயில்னு ஒரு போர்டு இருக்கு. எப்படி இதைத் தவறவிட்டோம்? ம்ம்ம்ம்........ புரிஞ்சுபோச்சு.மெயின் ரோடைப் பார்க்காம ஒரு ஆங்கிளில் இருக்கு (-: வண்டியை உள்ளெ கொண்டு நிறுத்திட்டு,கோயிலின் பக்கவாட்டுக் கதவுக்குள்ளெ ஓடி நுழையறப்ப பூஜைமணிச் சத்தம் கணகணன்னு ஒலிக்குது. பிள்ளையாருக்கு நைவேத்தியம் காமிச்சுக்கிட்டு இருக்கார் குருக்கள். இன்னொருத்தர் கையில் ஒரு பெரிய ஜால்ரா. ச்சின்ன டவரா போலஒரு கிண்ணம். உள்ளே ஒரு பிடி மஹா நைவேத்தியம்( வெறுஞ்சோறு) ஒரு பெரிய கட்டி கற்பூரத்தை ஏத்திஒரு சுத்துச் சுத்திட்டு அந்த தீச்சுவாலைமேலே உள்ளங்கையை வேகமா ஆட்டி 'கப்'னு கற்பூரத்தை அணைச்சார் குருக்கள்.

என்ன நடக்குது? ஆ........ன்னு பார்க்கறேன். அந்தக் கற்பூரத்தட்டு, நிவேதனம் இருக்கும் கிண்ணம் எல்லாம் எடுத்துக்கிட்டு,கருவறையின் வலது பக்கச்சுவரில் இருக்கும் இன்னொரு தெய்வ உருவத்துக்கு முன்னால் கற்பூரத்தை மறுபடி கொளுத்தி,கிண்ணத்தைத் திறந்து காட்டி கற்பூர ஆரத்தி ஒரு சுத்து, மறுபடி கையை விசிறுனதுலே கப்னு கற்பூரம் அணைஞ்சது. இப்ப அடுத்து இன்னொரு சந்நிதி. எல்லாம் முன்னே சொன்னபடி. எனக்குப் புரிஞ்சுபோச்சு, இங்கத்து சிஸ்டம். ஜால்ரா தட்டுறவர் கூடவே போறார். அவர் பின்னால் நாங்களும். வலம் வந்துகிட்டே இடது வலதுன்னு ரெண்டு பக்கமும் இருக்கும்குட்டிக்குட்டிச் சந்நிதிகளை தரிசிச்சுக்கிட்டே வர்றோம். எல்லாருக்கும் காமிச்சபிறகு அதே பக்கவாட்டுக் கதவு வழியா குருக்கள் போயிட்டார்.

நாங்க ரெண்டுபேர் மட்டும் கொஞ்சம் ஆறஅமர மறுபடி ஒவ்வொரு சந்நிதியாப் பார்த்துக்கிட்டே வந்தோம். பண்ணைகளில் இருக்கும் ஷெட் போல ஒரு இடம். இதையே கோவிலா மாத்தி இருக்காங்களோ?

கோவிலுக்குள்ளெ நுழைஞ்சது இடதுபக்கக் கதவு வழியா. இது அர்த்த/மகா மண்டபம். முன்வாசலைப் பார்த்த ஒரு சந்நிதி. ஸ்ரீ செல்வ விநாயகருக்கு. அழகான மண்டபம். கருவறையைச் சுத்தி வலம்வரலாம். வலம் வரும்போது பின்னால் திறந்தவெளியா இருக்கும் முற்றத்தில் நமக்கு இடது புறம் ஆஞ்சநேயர் அவருக்கு நேர் எதிரே ஸ்ரீதேவி, பூதேவி சகிதமுள்ள ஸ்ரீ நாராயணன். நமக்கு வலதுபக்கம் வள்ளி தேவானையுடன் ஸ்ரீ முருகன். கொஞ்சமா சந்தனம் பூசிச் சந்தனக்காப்பில் இருந்தார். அவருக்கு நேர் எதிரே சரஸ்வதி.

கருவறையின் வெளிப்பக்கச் சுவர்களில் தட்சிணாமூர்த்தி, (பிள்ளையாருக்கு நேரே பின்னால்) லிங்கோத்பவர்,பிரம்மா.இவர்களைக்கடந்து நாம் மறுபடியும் அர்த்தமண்டபத்தில் நுழையும்போது நமக்கு வலதுபுறம் துர்கா, இடதுபுறம்சிவன் அமிர்தகதேஸ்வரர்,சமயக்குரவர் நால்வர். இன்னொரு மாடம் போலுள்ள இடத்தில் உற்சவ மூர்த்திகள். தில்லை நடராஜர் சபை என்று எழுதிய இடத்தில் நடராஜனும் சிவகாமியும்.

யாரையும் விட்டுறக்கூடாதுன்ற எண்ணத்தில் எல்லாரும் நெருக்கியடிச்சு நிக்கிறாங்க. அதானே? பிரம்மா கூட இருக்காரே! மண்டபத்தில் ஒரு ராமகிருஷ்ணரின் மார்புவரை உள்ள சிலை. முன்வாசல் அருகே நவகிரகங்களுக்கு ஒரு சந்நிதி. கவனமா இருந்தால் பக்கச் சுவத்தில் இடிச்சுக்காம வலம் வரலாம். பிள்ளையாருக்கு எதிர்ப்புறம், நவகிரகத்தையொட்டி ஒரு பைரவர்.

முன்வாசலில் போய் நின்னு கோபுரத்தைப் பார்த்தோம்.சின்னதா குட்டியா அழகான கோபுரம்,வெளிர் நிறத்தில். அதிலே இருக்கும் தெய்வ உருவங்கள் எல்லாம் சாம்பல் நிறத்தில். அம்சமா இருக்கு. இதே நிறத்தில்தான் பின்னால் கருவறை மேலே உள்ள விமானமும், குட்டிச் சந்நிதிகளில் இருக்கும் விமானமும்.

வெளியே மரத்தடியில் குருக்கள் நின்னுக்கிட்டு இருந்தார். பக்கத்துலேயே ஒரு வீடு. அவருக்குக் கொடுத்துருக்காங்களாம்.அந்த ஒம்போது மணிப் பூஜைதான் இன்னிக்குக் கொஞ்சம் பிந்திருச்சாம். புள்ளையாருக்கு பயங்கர குறும்புப்பா........ ஒம்போதுக்கு நம்மை அங்கே அலைய விட்டுட்டு, இங்கே அடுப்புப் பத்தவைக்கிறதைத் தள்ளிப்போட்டுருக்காரு பாருங்க.

கொஞ்சநேரம் குருக்களிடம் பேசிக்கிட்டு இருந்தேன். இலங்கையிலிருந்து இங்கே வந்து ஏழெட்டு வருஷமாச்சாம்.மற்ற வெளிநாட்டுக்கோயில் குருக்களைப்போல் இல்லாம ரொம்பவே சிம்பிளா(??) இருந்தார். சாமியும்தான், பேரில் மட்டும்'செல்வ' வச்சுக்கிட்டு இருக்கோன்னு எனக்குத் தோணுச்சு. எனக்குப் பாருங்க, இந்த 'தோணல்கள்' பொழுதன்னிக்கும் தோணிரும்.திரும்பிப்போகும்போது மனசுலே என்னென்னவோ ***கள். கடவுளர்களுக்கு நைவேத்தியம் காமிக்கும்போது ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனிக் கிண்ணத்துலே வச்சுக் காமிக்கக்கூடாதா? இல்லேன்னா கொஞ்சம் நிறையவாவது காமிக்கலாமே? பிள்ளையார்(யானை)பசிக்கு சோளப்பொறி போல ..............பாவம் சாமி. என்னமோ காக்காய்க்கு வைக்கறதைப்போல ஒரு பிடி. ஹங்.........ஒருவேளை அதை காக்காய்க்கே வச்சுடறாங்களொ என்னவோ? அங்கேதான் காக்காய்ங்க இருக்கே! என்ன அஞ்ஞானம் பாருங்க.

ஏன் கோயிலில் பக்தர்களே இல்லை? வேலை நாள் என்றதாலா? ஒருவேளை சாயங்காலமா வருவாங்களோ? இல்லெ வீக் எண்டுலேமட்டும் வருவாங்களா? சிட்டியைவிட்டு இவ்வளோ தூரத்துலே வனாந்தரத்துலே இருக்கே! மறுபடி ***கள்.

குறிப்பிட்ட நேரத்துலெ நண்பரைச் சந்திக்க முடிஞ்சது. அன்னிக்குப் பகல் சாப்பாடு 'ப்ரவுன்ஸ் ப்ளெயின்ஸ்' என்ற இடத்தில் இருக்கும் 'க்ராண்ட் ப்ளாஸா'வில். பெரிய ஷாப்பிங் மால். சில சினிமா அரங்குகள்கூட இருக்கு இதுலே.ஃபுட் கோர்ட்லே உச்சிவானம் தெரியும் அருமையான கண்ணாடிக்கூரை. இதுமாதிரிதான் நம்ம வீட்டுலே போடணுமுன்னுநான் யதார்த்தமாச் சொன்னதைக்கேட்டு அப்படியே நடுநடுங்கிட்டார் இவர். மனசுக்குள்ளேக் காசைக் கணக்குப் போட்டுப் பார்த்திருப்பார்போல!

மனசு, உடம்பு, ஆன்மா மூணுக்கும் நான் உத்திரவாதமுன்னு சொல்ற கடை. அமித்திஸ்ட் கலர்லே அழகழகாப் பொருட்கள்.என்னோட கலராச்சேன்னு உள்ளெ போய்ப் பார்த்தேன். பிள்ளையார் ஒருத்தர் அகப்பட்டார். 'கணேஷாவைத் தேர்ந்தெடுத்ததுக்கு வாழ்த்து(க்)கள். குறைவில்லாத செல்வம், தடைகளை நீக்குதல், வாழ்வில் நீங்காத வளம், எடுத்த காரியத்தில் வெற்றி.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ அவரோட கல்யாண குணங்களைன்னு ஒரு பக்கம் வர்ற அளவுக்கு விவரிச்சு வச்சுருக்கும்ஒரு நோட்டீஸை, ஒரு சந்தனமரப் பெட்டியில் இருந்து எடுத்து நம்ம அமித்திஸ்ட் பிள்ளையாருடன் சேர்த்து அழகா பொதிஞ்சு கொடுத்தாங்க கடைக்காரம்மா. பத்திரமாக் கொண்டுவந்து அறையிலே வச்சுப் பிரிச்சுப் பார்த்தேன். ச்சும்மா சொல்லக்கூடாது.......அருமையாச் செஞ்சுருக்காங்கச் சீனாவுலே! He is the patron saint of students who pray to him to pass their exams!! இன்னிக்குப் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வந்த நினைவுக்காச்சு.

இங்கே இன்னொரு கடையிலே நுழைஞ்சு மைக்ரோவேவ் பாத்திரம் ஒண்ணு வாங்கிக்கிட்டோம். இன்னிக்காவது நல்ல காஃபியாப்போட்டுக் குடிக்கணும். அங்கே விதவிதமா கைக்கடிகாரம் இருந்துச்சு. மகளுக்கு ஒண்ணு வாங்கிக்கலாமுன்னு சிலதைத் தேர்ந்தெடுத்து,கைத்தொலைபேசியில் படம் புடிச்சு அவளுக்கு அனுப்பி, அவள் தேர்ந்தெடுத்ததை வாங்கின்னு கொஞ்ச நேரம் ஆச்சு.முந்தியெல்லாம் நூத்தம்பது, இருநூறுன்னு செலவு செஞ்சு வாஙகுனதைவிட, இப்ப வேணுங்கறதை பேஷன் மட்டும் பார்த்து,இருவது, முப்பதுக்கு வாங்குறது நல்லாதான் இருக்கு. எப்படியும் ஒரு வருசத்துக்கு பேட்டரி வந்துருது. திரும்பி இங்கே பேட்டரிமாத்துறதுக்குத்தான் பதினைஞ்சு டாலர் ஆகிருது(-: இளவயசுக்காரங்களுக்கு, வாட்ச் இப்ப பேஷன் அக்ஸெஸரீஸ்னு ஆகிப்போச்சு.

மாலையில் மறுபடியும் ஆத்தங்கரை விஸிட். அக்ஸ்மாத்தா எட்டிப்பார்த்தப்ப, ராக் கிளெய்ம்பிங்குக்கு, குனிஞ்சுக் கயிறு கட்டிட்டு நிமிர்ந்த ஒருத்தர் எப்படியோ தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை...........என் தொண்டையில் இருந்து சத்தம்எழும்புறதுக்குள்ளே சமாளிச்சுட்டார். ( கத்தி இருந்தேன்னா அதைக் கேட்டே அதல பாதாளத்துலே போயிருப்பார்) எனக்குத்தான்உயிரே போறமாதிரி நெஞ்சு அடைச்சிருச்சு. 'விழுந்துருந்தா என்ன கதி?'ன்னு சொன்னதுக்கு, 'செத்துப்போயிருப்பேன்' னுகூலா சொல்றாருப்பா. கரணம் தப்புனா மரணம் (-: அந்த அரை இருட்டிலும் கருமமே கண்ணாயினார் போல மக்கள்ஸ் ஓடறதும், உடற்பயிற்சி செய்யறதுமா இருக்காங்க.

குழலூதும் 'கண்ணன்' சிலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு. The church of Jesus Christ of the latter-day saintsBrisbane Australia Temple. பளிங்கு, டைல்ஸ், மொஸைக்குன்னு இழைச்சு இழைச்சுக் கட்டி இருக்கும் விஸ்தாரமான கோயில்.சுத்திவர பாதிரிப்பூ(Plumeria, Frangipani ) மரங்களும், பர்ட் ஆஃப் பாரடைஸ் பூச்செடிகளும். நாளைக்கு காலையில் வாக்கிங் போகும்போதுன்னு மறக்காமக் காமெராவைக் கொண்டுவரணும்.

அன்னிக்கு ராத்திரி அகஸ்மாத்தா டிவியைப் பார்த்துட்டு மனசெல்லாம் ஒரு வலி. அடப்பாவிகளா.............. ஒரு இனத்தையே எப்படி அழியற நிலமைக்குக் கொண்டுவந்துட்டீங்கன்னு வேதனனையாப் போயிருச்சு.

தொடரும்...........