ஒரு நாலே முக்காலுக்கு, ஆட்டோ ட்ரைவரிடம் இருந்து ஃபோன். கீழே வந்துட்டாராம். நாமும் சட்னு கிளம்பி வெளி முற்றத்தின் வாசலுக்கு வந்தோம். டீக்கடையாண்டை இருந்த செங்கற்களை எடுத்துத் தயாரா அடுக்கி வச்சுருந்தார் புது ட்ரைவர் அப்துல். செய்யவேண்டியவைகளைச் சொல்லித்தான் அனுப்பி இருக்கார் நம்ம தீப், இல்லே !
மேம்பாலத்தின் வழியா ஊருக்குள் போறோம். பதினொரு வருஷங்களுக்கு முந்தி நாம் பார்த்த அயோத்யா இப்ப புது மாற்றங்களோடு ! எங்கே பார்த்தாலும் அடுக்கு மாடிக் கட்டடங்களும், புது ஹொட்டேல்களும், சாலையின் ஓரத்தில் நடை பாதையில் சுவர்கள் போல் அங்கங்கே எழுப்பி அதில் அழகழகான ராமாயண ஓவியங்களுமா இருக்கு ! எல்லாம் புதுக்கோவில் கட்டுனபிறகு வந்தவை ! ஓரளவு ராமாயண சம்பவங்கள் தெரிஞ்சதால் ஓவியங்கள் எதைக் காட்சிப்படுத்தி இருக்குன்னு கவனிச்சுக்கிட்டே போறேன். சுவாரஸியம்தான் ! ஓவியங்களுக்குக் கீழே விளக்கமும் ஹிந்தியில் இருக்குதான். வண்டி போகும் வேகத்தில் நின்னு வாசிக்க முடியாதே.....


Ghaghara River என்றொரு பெரிய நதி, இங்கே சரயூ நதியில் வந்து சேருது. சரயுவின் புதுப்பெயர்தான் இந்த காகரான்னும் சொல்றாங்க. நல்ல அகலமான நதி. மேலே ரயில்பாலம் ஒன்னு போகுது ! (சரயுவே நல்லாத்தானே இருக்கு ! அப்ப எதுக்குப் புதுப்பெயராம் ? ) நல்ல அகலமான நதி .... கிட்டத்தட்ட ஒன்னரை கிமீ இருக்கலாம். பாலத்துக்குக்கீழே....... நதிக்கரை மணல்பரப்பு பார்க்கிங் ஏரியா போல ஏராளமான வண்டிகளுடன்.
ஒரு நல்ல இடம் பார்த்து, வண்டியைக் கொண்டுபோய் நிறுத்திட்டு, 'எனக்கான படிகளை ' எடுத்து வச்சார் அப்துல் ! அங்கிருந்து ஒரு பத்துப்பனிரெண்டு படிகள் ஏறி கரைக்குப் போகணும். கரை மண்பாதையா இல்லாம, காங்க்ரிட் போட்டதாகவே இருக்கு. அப்துலும் நம்கூடவே வந்து நம்மை ஆரத்தி நடக்கும் இடத்துக்குக் கூட்டிப்போறார். . வழியெங்கும் சின்னச் சின்னச் சின்ன வியாபாரங்கள். நிறைய தீனிக்கடைகள். கரையின் ஒரு பக்கம் தனித்தனி சுவர் அமைப்பில் ராமாயணக்காட்சிகள்

கண்பார்வை இல்லாத பெற்றோர்களின் தாகத்துக்குத் தண்ணீர் எடுக்க வந்த மகன் ஸ்ரவணனை, தவறுதலாக அம்பெய்து கொன்ற தசரதனுக்குப் பெற்றோர் சாபம் கொடுக்கும் காட்சி.... புத்திர சோகம் என்னன்னு புரிஞ்சுக்கோ......
இந்த ஸீன்.... என்னவாக இருக்குமுன்னு யோசனை. போரில் தசரதனுக்குக் கைகேயி உதவும் காட்சியாக இருக்கணும். அதனால்தானே ரெண்டு வரம் கேளு. தர்றேன்னு கைகேயிக்கு வாக்குக் கொடுத்தார், இல்லே ?
கொஞ்ச தூரத்தில் படகுத்துறை ஒன்னு இருக்கு. அங்கே போனால் ஆரத்தி நடக்கும் சமயம் படகில் கூட்டிப்போய் காமிப்பாங்களாம். இருக்கட்டும்..... இதுலே ஒரு ரிஸார்ட் வேற இருக்காமே.... நதிக்கரையோரம் தங்கலாம் ! இருக்கட்டும்... இருக்கட்டும்....

பொழுதுசாயும் நேரம்... சூரியன் ஆரஞ்சா இருக்கான் ! நதி இருக்கும் பக்கம் தோட்டம் அமைக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன். ஜனகரின் வில்லை முறிச்சுட்டு, ராமர் நிக்கறார் ! அச்சச்சோ..... நாண் ஏற்றச் சொன்னால் வில்லையே உடைச்சுட்டேனே.....
அட ! துல்ஸி காட் !!!!மணல்வெளியில் சந்தை கூடி இருப்பதைப்போல ஒரு கூட்டம் ..... துணிமணிகள் விக்கறாங்க போல... ஸ்வச்பாரத் கழிப்பறைகள் அங்கங்கே.... ரொம்ப நல்லது.



\ஆரத்தி எடுக்கும் அடுக்கு விளக்குகளுக்குத் திரி போட்டு நெய் நிறைச்சுக்கிட்டு இருக்காங்க. படிகளில் சனம் சேர ஆரம்பிச்சாச்சு. 'ஆரத்தி முடிஞ்சதும் இப்ப வந்தவழியாவே வாங்க. நான் வந்து கூட்டிப்போவேன்'னு சொல்லிட்டு அப்துல் போனார். நாங்களும் ஒரு இடம் பார்த்து மேல்படிகளில் உக்கார்ந்தோம். கால் பிரச்சனையில் உக்கார்றதும் கஷ்டம்தான். அதைவிட எப்படி எழுந்திரிக்கப்போறேன்ற பெரிய பிரச்சனை இருக்கே.... அதை அப்புறம் சமாளிக்கலாம்ற குண்டுதைர்யம்தான்.

புண்ணிய நதிகளுக்கு மாலை சந்த்யா வேளையில் ஆரத்தி எடுக்கும் வழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்னால் ஏற்பட்ட சம்ப்ரதாயமாக இருக்கணும். ஆரவாரமில்லாமல் ஒரு தீபம் கொண்டு ஆரம்பிச்சுருக்கும், இல்லே ? நம்ம தெற்கில் இந்த வழக்கம் இருக்கான்னு தெரியலை. காவிரிக்கு உண்டோ ?
காலம் போகப்போக பெரிய அளவில் செய்ய ஆரம்பிச்சு இப்ப ஒரு ஷோ போலவே நடத்தறாங்க. ஷோடஸ உபசாரம், ஆரத்தி எடுப்பவர்களுக்கு யூனிஃபார்ம், இதுக்கு ஸ்பான்ஸார் செய்யும் மக்களுக்கு , ஆரத்தியில் பங்கெடுக்கும் முன்னுரிமை இப்படி பலதும் விஸ்தரிக்கப்பட்டுருக்கு !
நாம் முதல் முதலில் பார்த்த ஆரத்தி, ஹரித்வார் கங்கைக்கரையில் ! ஒரு பதினாலு வருஷங்களுக்கு முன்! அப்ப யூனிஃபார்ம் எல்லாம் கிடையாது. அப்புறம் மூணு வருஷம் கழிச்சுக் காசியில் தஸ்அஸ்வமேதகாட்டில் பார்த்தப்ப , அலங்கார விளக்குகளும், யூனிஃபார்ம் அணிஞ்ச இளைஞர்களும், ஒரே வரிசையில் நின்னு ஒன்னுபோல செய்வதுமா, ப்ராட்வே ஷோவில் இருக்கும் ஒழுங்கும், ப்ரமாண்டமுமாய் ஒரே அட்டகாசம்தான் !
அதுக்குப்பிறகு, ரிஷிகேஷிலும், போன இந்தியப் பயணத்தில் காசியிலேயே அஸ்ஸி காட்டில் அதிகாலை ப்ரம்மமுஹூர்த்தத்திலும், கேதார் காட்டில் மாலை நேரத்திலுமா ஆர்த்தி அனுபவம் கிடைச்சதும் அவன் அருளாலேதான் !
இதோ.... இப்ப சரயூ ஆரத்திக்கு வந்துருக்கோம். மறுநாள் பௌர்ணமி என்பதால் வானத்தில் ப்ளிச்னு நிலவு ! கோலாகலமான ஆரத்தி! படகு ஒன்னு பின்புலத்தில் மெள்ள ஊர்ந்து போகுது.
https://www.facebook.com/share/v/1C5PHSRS5D/
https://www.facebook.com/share/v/16BcWs9ncx/
https://www.facebook.com/share/v/159annMvjf/
https://www.facebook.com/share/v/1AEFWy4RdK/
மேலே : ஆரத்தி வீடியோ க்ளிப்ஸ், லிங்ஸ்
ஒரு ஏழேகாலுக்கு எல்லாம் முடிஞ்சது. நாம் அப்துல் சொன்னபடி திரும்பி நடக்கறோம். கொஞ்ச தூரத்தில் அப்துல் நமக்காகக் காத்திருந்தார். படிக்கரைக் கடைகள் பலதும் காலி ! ஆரத்திவரைதான் கூட்டம். அதுக்குப்பின் வியாபாரம் இல்லை! ஹனுமன் கொடிகளை வச்சுருந்தவரிடம், ரெண்டு கொடிகளையும், அடுத்து ஸ்கார்ஃப் விற்பனையாளரிடம் ராம் ராம்னு போட்ட ஸ்கார்ஃப்களையும் வாங்கினோம்.
மணி ஏழரை ஆனதால் நல்லாவே இருட்டிப்போயிருந்தது. திரும்பி ஐராவுக்கு வரும் வழியில் 'ஒரு கோவில் இருக்கு. பார்க்கறீங்களா'ன்னார் அப்துல். இங்கேதான் எங்கே பார்த்தாலும் கோவில்களா இருக்கேன்னு நினைச்சாலும், அப்துல் குறிப்பிட்டுச் சொல்லும் கோவில் என்னவா இருக்கும் என்ற ஆர்வத்துடன் சரின்னோம்.
ஒரு தோட்டத்தாண்டை ஆட்டோவை நிறுத்தினார். செங்கற்களை வெளியில் எடுத்து வச்சார். தோட்ட வாசலில் வெளிச்சம் அவ்வளவா இல்லை. அரையிருட்டில் கவனமாப் படி இறங்க வேண்டியிருந்தது. கணேஷ் வாட்டிகான்னு போர்டு.
ஆஞ்சுவும் புள்ளையாருமா ஒரு சந்நிதி ! துளசிமாடத்தில் துளசியுடன் ஹனுமன் கொடிகள் !
அடுத்து ஒரு பெரிய கொட்டகையில் பெரிய்ய்ய்ய்ய Gகதை ! கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய்ய்ய வில் ! கதையைப் படம் எடுக்க முடிஞ்சது. வில் குறுக்கு வாட்டத்தில் இருந்ததால் ஒரு ப்ரேமுக்குள் அடங்கலை. சரியான வெளிச்சமும் இல்லையே.... அங்கே வந்திருந்த இளவயதுக் குழுவினரை, அவர்கள் செல்லில் படம் எடுத்துக்கொடுத்தேன். பதில் உதவி செஞ்சாங்க .
பெரிய முரசு ஒன்னு இருந்தது. அடுத்த பகுதியில் கம்பி ப்ரேம்களுக்குள்ளில் பார்த்தால் ஏகப்பட்ட சிவலிங்கங்கள். நடுநாயகமா பெரூசா ஒன்னு ! நர்மதை நதியில் கிடைத்தவைன்னு தகவல் !





ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மூன்று பளிங்குப்பாறைகள் ஒரு இடத்தில். என்ன சிலை செதுக்கப்போறாங்கன்னு தெரியலை.
இந்தத் தோட்டமே தனியார் உண்டாக்கிக்கொடுத்தது. தகவல் இருக்கு! போனவருஷம் புது ராமர்கோவில் மூலவர் ப்ரதிஷ்டை தினத்தில்தான் இதையும் ஆரம்பிச்சுருக்காங்க. 'ஸ்ரீ ராம் தீப்' னு பெயர். படேல் அர்விந்த் பாய் மங்கள்பாய் அவர்களின் கைங்கர்யம் ! லால்குரு ஃபார்ம், பாபலி, வடோதரா , குஜராத். நல்லா இருக்கட்டும்.
வெளியே நின்னுக்கிட்டு இருந்த அப்துல், நல்ல இடமா? பிடிச்சதான்னார். அருமை. நீங்க சொல்லலைன்னா இப்படி ஒன்னு இருக்கறதே தெரிஞ்சுருக்காது. நன்றின்னேன். உங்களுக்குப் பிடிக்கும்னுதான் நினைச்சேன். நல்லதுன்னார். நல்ல மனிதர்.
ஐரா வந்ததும், செங்கற்கள் வெளியில் வந்தன. நான் இறங்கினதும், நடைபாதையின் ஓரத்தில் எடுத்து வச்சுட்டுப்போனார். ஆட்டோ சார்ஜ் எல்லாம் இவ்ளோ கொடுன்னு டிமாண்ட் பண்ணறதில்லை. நீங்க கொடுக்கறதைக் கொடுங்கன்றாங்க. ஒருவேளை நமக்கு அமைஞ்ச ஆட்டோக்காரர்கள் மட்டும்தானோ ?
இன்றைக்குப் பகல் சாப்பாட்டை எடுக்காததால் டின்னர் கொஞ்சம் நல்லாவே சாப்பிடணும்.
தொடரும்......... :-)
9 comments:
ப்ரமாதம் நன்றி
வாங்க விஸ்வநாத்,
மிகவும் நன்றி !
ஆரத்தி பார்க்கும் அதிருஷ்டம் எனக்கும் இரண்டு முறை வாய்த்தது.
படங்கள் அழகு.
சிக்ஸ்பேக்கில் சிங்கம் போல நிற்கிறார் ராமன்!
கைகேயி தேர்க்கால் அச்சுக்குத்தானே கைகொடுத்தார்... குதிரைக்கு பக்கத்தில் அடிபட்டது போலவா விழுந்து கிடப்பார்?
அயோத்தி பற்றி இதுவரை படிக்காத தகவல்களும், படங்களும்.. நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
ராமனுக்கென்ன ... பராக்ரமம் மிகுந்த அழகன் இல்லையோ !
அது கைகேயி ரதம் ஓட்ட உதவி செய்யற ஓவியமா இருக்கலாம். அடிபட்டுக்கிடப்பது போரிட வந்த எதிரி ! (இப்ப சரி வருதா ???? ஹிஹி)
வாங்க பானு.
எல்லாம் நான் பெற்ற இன்பம் வகைதான் ! வருகைக்கு நன்றி !
அழகான இடமும் சிறப்பான செய்திகளும் மா ... இந்த ஆண்டு பொங்கல் முடிஞ்சு ஒரு வாரம் அப்பா கோஷ்டி அங்க சேவிக்க சென்று இருந்தார்கள் .... அவரின் அனுபவங்கள் இப்போ உங்களின் அனுபவங்கள் என ராமர் எங்களை சுற்றி வருகிறார் ..
வாங்க அனுப்ரேம்,
கோஷ்டி ஸேவைக்கு நமஸ்காரங்கள். ராமர் நம்மை விடமாட்டார் ! க்ருஷ்ணனும்தான், இல்லையோ !
சரயு ஆரத்தி நன்றாகவே இருக்கிறது கண்டு கொண்டோம்.
ஸ்ரீராம்தீப் லிங்கங்கள் அழகாக இருக்கின்றன.
Post a Comment