எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் போகணும். நல்லதா ஒரு பாலராமன் போட்ட பேக்ட்ராப் கிடைக்குமான்னு தேடணும். ப்ரிண்ட் போட்டு விக்கும் கடைகள் இல்லாமலா போகும் ? இன்னும் ஒரு ஏழெட்டு ராமன்களை, பயந்துடாதீங்க...... குட்டியாச் சின்னதா வாங்கிக்கணும். நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நினைவுப்பரிசாக் கொடுக்கணும்.
ம் ம் னு தலையாட்டுனவர், இங்கே பக்கத்துலே Gகோண்டான்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே போகலாமா ? உன் ஷாப்பிங் கூட அங்கேயே செஞ்சுக்கலாம். உனக்கு இன்னைக்கும் நாளைக்குமா ஒன்னரை நாள் ஷாப்பிங் செய்ய டைம் இருக்கு !
ரூம் சர்வீஸ்லே ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. ப்ரெட் டோஸ்ட் & டீ .
ஜன்னல் வழியா மேம்பாலம் ஒரு க்ளிக்.
Gகோண்டா எவ்ளோ தூரம்னு கேட்டதுக்கு என்ன ஒரு அம்பது கிமீதான்னார். ஐயோ.... அம்பதும் அம்பதும் நூறு ! அந்த ஆட்டோவே ஃபுல்சார்ஜ்லே இருந்தால் நூறுவரைதான் போகுமாம். போற இடத்துலே சுத்திப்பார்த்துட்டுத் திரும்பிவர சார்ஜ் இல்லைன்னா ??? நடுவழியில் நின்னுட்டா ?
அப்புறம் அவ்ளவுதூரம் ஆட்டோலே போனால் இடிபட்டுப்பட்டு என் கையே போயிருமே......
கீழே சொல்லி காருக்கு ஏற்பாடு செஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை.
எனெக்கென்னவோ அவ்ளோதூரம் போய்வர சுணக்கமா இருந்தது. நம்ம ராமன்களை கோயிலாண்டைக் கடைகளில்தான் வாங்கணும். நேத்துப் பெட்டி வாங்கப்போன இடத்துலே கூட சாமி சமாச்சாரமா ஒரு கடைகூட கண்ணில் படலையே...
அந்த ஏரியா வேற வகையாச்சே...... ஃபைஸாபாத். ஏகப்பட்ட பேட்டைகள் இங்கே சுத்திவர. ஒவ்வொன்னும் நாலைஞ்சு தெருக்குள் அடங்கிருது போல. வாஸிர்கஞ்ச், அக்பர்பூர் , ஃபதேகஞ்ச், ஷாஜஹான்பூர் இப்படி முக்கால்வாசிப்பேட்டைகளும் இஸ்லாமியர் பெயர்களிலேயே...... தில்யைப்பிடிச்சுக்கிட்ட மக்கள், புகழ்பெற்ற ஹிந்துக்கோவில்கள் இருக்கும் ஊர்களுக்கு அந்தக் காலத்துலேயே இடம் பெயர்ந்திருக்கலாம், இல்லேன்னா இந்த ஊர் மக்கள் மதம் மாற்றப்பட்டுருக்கலாம்......
Gகோண்டா ஒரு ஹிஸ்ட்டாரிக் ஸிட்டின்னார் நம்மவர். தூண்டில் !!!
இருக்கட்டுமுன்னு சொன்னேன். பக்கத்துலே ஷாப்பிங் ஏரியா எங்கேன்னு பார்த்தவர், சஞ்சய்க்கு ஃபோன் செஞ்சு பத்துமணிக்கு வரச் சொன்னார். தேவ்காளி ஏரியாவாம். ஸ்மார்ட் பஸார் ஷாப்பிங் சென்டர் போறோம். வாசலில் ஆஞ்சு வம்சம் அம்மாவும் புள்ளையுமா!
மாடியில் ஆண்களுக்கான ஆடைகள் பகுதியில் போய் மருமகனுக்கும் பேரனுக்கும் ஷர்ட்ஸ் வாங்கினோம். வேற கடையில் பார்க்கலாமுன்னா.... சஞ்சய் கூட்டிப்போனது விஷால் மெகா மார்ட். முக்கால் வாசியும் சூப்பர்மார்கெட் சமாச்சாரம். ப்ச்..... நமக்கு இப்போ தேவையில்லை!
இந்தப் பகுதிகள் எல்லாம் ராமர் கோவில் இருக்கும் திசைக்கு எதிர்ப்பக்கம். அயோத்யா ஊருக்குள்ளேதான் போயாகணும்னு இருந்தேன்.
ராமர் கோவில் ஏரியாவுக்குப் போயிறலாமுன்னு சஞ்சயாண்டை சொன்னதும், மேம்பாலத்தில் (நம்ம ஐரா வழியில்) போறார். இது நேஷனல் ஹைவேதான். இடையில் அயோத்யா ஏர்ப்போர்ட் முதல், புதுக்கோவில் ஏரியாவரை மேம்பாலம் புதுசாக் கட்டி அதில் அலங்கார வளைவுகள், ராமாயணச் சிற்பங்கள்னு அங்கங்கே வச்சு அழகுபடுத்தியிருக்காங்க. கோவிலுக்குப் போகும் இடத்தில் இருக்கும் எக்ஸிட் வழியா நாம் மேம்பாலத்திலிருந்து இறங்கி ஊருக்குள் போயிடலாம்.
காலையில் அறையில் இருந்து பார்த்த மேம்பாலமா இதுன்னு தோணுச்சு.... அவ்ளோ கூட்டம்! நடந்து போகும் மக்கள் வேற அங்கங்கே கொத்துக்கொத்தா.....


பாலத்துலே நடுநடுவில் காவல்துறை வண்டிகள் வேற நிக்குது. ஊருக்குள் போகும் இறக்கத்தில் இறங்க அனுமதிக்காம தடை போட்டு வச்சுருக்காங்க . கொஞ்சதூரத்தில் ஊருக்குள் போகும் அலங்கார தோரணவாசல் (சூரஜ் த்வார் ) . இந்த இடத்திலிருந்து பாலம், அலங்காரம் எல்லாம் ஒன்னுமில்லாம சாதாரணமா நீண்டு போகுது. காவலரிடம் விசாரிச்சால்.... இன்றைக்கு ஊருக்குள் எந்த வாஹனத்துக்குமே அனுமதி இல்லை. நடந்து போறவங்களை மட்டுமே உள்ளே விட உத்திரவுன்னுட்டார்.
நிறைய வண்டிகள் பாலத்தின் மேலேயே ஓரமா நிக்க, சனம் இறங்கி நடக்கறாங்க. இந்தக் காலை வச்சுக்கிட்டு நாமெங்கே நடப்பது? முந்தாநாள் நடந்த நடையிலே நம்மவரின் செருப்பே பிய்ஞ்சு போச்சு..... வேற வாங்கிக்கலாமுன்னா எங்கே ? சென்னையில் போய் பார்த்துக்கலாமுன்னார்.


வேற வழியாகப் போகலாமுன்னா நமக்கு யூ டர்ன் எடுக்கமுடியலை. நேராப்போய்த்தான் ஆகணும். அரைமணி நேரமாப் போய்க்கிட்டே இருக்கோம். போகப்போக சரயு நதிப் பாலம்....


நதியைக் கடந்து போய்க்கிட்டே இருக்கோமா.... சட்னு சாலையின் இடதுபக்கம் ஒரு இறக்கம்..ஆஹா.... எக்ஸிட். என்னன்னு பார்த்தால் Gகோண்டா பெயர் போட்ட கட்டைச்சுவர். அங்கே திரும்பி ஒரு இருவது கிமீ போனால் கோண்டா வருமாம்.
அடராமா.... முப்பது கிமீ தூரமா வந்துருக்கோம் ? அந்த எக்ஸிட்டில் இறங்கிக் கொஞ்ச தூரத்தில் ஹைவே அடியில் இருக்கும் பாதையில் நுழைஞ்சு இந்தப்பக்கம் வந்துட்டார் சஞ்சய். கொஞ்ச தூரத்தில் மரத்தடியில் ஒரு கையேந்தி பவன்! வண்டியில் கடைப்பொருட்கள். வாசலில் சமையல். உக்கார்ந்து சாப்பிட ரெண்டுமூணு ப்ளாஸ்டிக் சேர்கள். சஞ்சய் இறங்கிப் போய் அவரிடம் என்னமோ பேசிட்டுத் தண்ணீர் வாங்கிக் குடிச்சுட்டு வந்தார்.
எப்படியோ யூ டர்ன் ஆச்சு. கிளம்பிட்டோம். ஒரு காமணி நேரத்தில் திடீர்னு வண்டி நின்னதும், பதறிப்போயிட்டேன். அங்கே நின்னுக்கிட்டு இருந்த ஒருவர் ஓடிவந்து சஞ்சய் பக்கத்துலே உக்கார்ந்தார். நண்பராம். அப்பாடா..... நல்லவேளை பேட்டரி சார்ஜ் தீரலை.
ஹைவே பக்கத்துலேயே கீழே போகும் சாலையில் போய், எப்படியோக் கடைசியில் நம்ம அவத் ரெஸ்டாரண்ட் வந்து சேரும்போது மணி மூணேகால் ! அங்கேதான் நமக்கு லஞ்ச். முன்கூட்டிச் சொல்லாததால் ரெகுலர் மெனு ஐட்டங்களில் கொஞ்சம் வாங்கினோம். சஞ்சயும் நண்பரும் வேற இடத்தில் போய் உக்கார்ந்து சாப்பிட்டாங்க.
ஐரா வாசலில் வந்து இறங்கும்போது மணி நாலு ! இனிமே வேறெங்கேயும் போகத் தெம்பில்லை. மறுநாள் அயோத்யாவில் இருந்து கிளம்பறோம். டாக்ஸி வேணுமுன்னு சஞ்சயாண்டை சொல்லப்போக..... ' இந்த நண்பரே கார் வச்சுருக்கார். கவலையை விடுங்க. எப்ப வரணுமுன்னு சொல்லுங்க, போதும்'னுட்டார்.
ரொம்ப நல்லது. காலையில் ஃபோன் செஞ்சு சொல்றேன்னார் நம்மவர்.
வண்டியை விட்டு இறங்காமல் போகவர அறுவது கிமீ தண்டத்துக்குப் போய் வந்ததை நினைச்சு நினைச்சு மாளலை எனக்கு. குட்டிராமன்களை வேற வாங்க முடியலையேன்ற கவலை ஒருபக்கம்.
என்னடா ராமா.... இப்படிப் பண்ணிட்டயே...........
தொடரும்.......... :-)
5 comments:
10 ரூபாய்க்கு பாலராமன் படங்கள் (அழகானது) கோயில் தரிசனம் முடிந்து வெளியில் வரும் இடத்திலேயே விற்றுக்கொண்டிருப்பார்களே.. இது தவிர குளிர்சாதனப் பெட்டி முகப்பில் வைக்கும்படி பாலராமர் காந்தம் கொண்ட அழகிய படங்கள் நிறைய விற்பார்களே
ராமர் சிலை அபாரம். பரமசிவன் பாவமா நிக்கறார். ரொம்ப இளைச்சு வேற போயிருக்கார்!
ராமர் அலைந்த அனுபவம் பாவமாயிருக்கிறது.
வாங்க நெல்லைத்தமிழன்,
நாம்தான் கோவிலின் மெயின் கேட் பக்கமே போகலையே..... நாம் போய் வந்த கேட் பக்கம் ஒன்னுமே இல்லை, சனக்கூட்டத்தைத் தவிர.....
வாங்க ஸ்ரீராம்,
தான் பதிநாலு வருஷம் காட்டில் அலைஞ்சது இப்படித்தான்னு நமக்கு ஒரு அனுபவம் காமிச்சுட்டார், இல்லே ?
அட....ராமா.... ஒன்றுமே வாங்கமுடியலையே.
ராமரையும், சிவனாரையும் கண்டுகொண்டோம்.
Post a Comment