Tuesday, September 15, 2009

என்னமோப்பா மாதவா.....

மயூரபுரின்னு பெயர் வழங்கிவந்த பகுதியிலே....... ப்ருகு முனிவர் ஆசிரமம் அமைச்சு வேள்விகள் நடத்தித் தெய்வங்களை (?) ஆராதித்து வந்தார். இவர்தானே வண்டு ரூபமெடுத்து சிவனைமட்டும் சுற்றி வந்தவர்? அதனால்தானே சிவனும், தன் உடலில் அம்பது சதமானம் இட ஒதுக்கீடு கொடுத்து அர்த்த நாரியானது. இந்தக் கணக்கில் பார்த்தால் எல்லாத்துலேயும் ஏதோ ஒரு நன்மை கிடைச்சுருதுன்னு வச்சுக்கலாம்.

நல்லவேளை அடிச்சுச் சொல்லாமக் கேள்வியாக் கேட்டுருந்தேன்:-) 50% இடம் கொடுக்கக் காரணமானவர் ப்ருங்கி முனிவராம். நம்ம ப்ருகும் லேசுப்பட்டவரில்லை. ராமாவதாரத்துக்கு ஒரு காரணகர்த்தாவாம். ஐயம் தெளிவித்த ஆன்மீகப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களுக்குக் கோடி நன்றிகள்.
மேலும் விளக்கங்களுக்குப் பின்னூட்டங்களைப் பார்க்கணும், நீங்க எல்லோரும்.


இந்த மயூரபுரி, ஏகப்பட்ட மயில்கள் உலாவும் வனப்பகுதியாத்தான் அந்தக் காலத்துலே இருந்துருக்கு. இந்த இடத்துக்கே இது காரணப்பெயராவும் அமைஞ்சுருக்கலாம். நான் இப்பெல்லாம் அடிக்கடி மயூரபுரிக்குப் போய்வந்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னா...நீங்க நம்பணும்,ஆமா:-)


மயிலாப்பூர் கபாலி கோயில் ராஜகோபுரத்தைப் பார்த்து நில்லுங்க. ( இப்படித்தான் நாலைஞ்சுநாள் முன்னே அந்த வாசலாண்டை அகஸ்மாத்தாப் போனப்ப, சின்ன ரதத்தில் ஸ்வாமி புறப்பாடு. தூரத்துலே இருந்து பார்த்தேனா..... என்ன சாமின்னு தெரியலை. சாமிக்கு முன்னால் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு வச்சுக்கிட்டு ஊர்வலத்தில் நடந்து வரும் காலம் எல்லாம் மாறிப்போயிருக்கு. சின்னதா ஒரு ஜெனெரேட்டர் வச்ச ஒரு வண்டியும், அதுலே நிக்கும் விளக்குக் கம்பமுமா ஒரு அமைப்பு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்துக்கு பதிலா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்னு உறுமல்.

கிட்டேப்போய்ப் பார்த்தால் முருகன். மனைவியருடன் ஊர்வலம். கோவிலுக்குள்ளே போனால்..... நேரெதிராப் பிள்ளையார். நமக்கிடதுபக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் ஒரு முப்பது நாப்பதுபேர் தரையில் அமர்ந்து ஏதோ புத்தகம் வச்சுக்கிட்டுப் பாராயணம் பண்ணறாங்க. திருப்புகழோன்னு ஒரு ஐயம். அந்த பக்தர்கள் வரிசையில் எல்லோருக்கும் முன்னால் ஒரு பைரவர். லீடர் போல உக்கார்ந்துருக்கார். பொதுவாக் கோவில்களில் இவருக்கு அனுமதி இல்லையே...எப்படி உள்ளே வந்தார்? எப்படி விரட்டாம விட்டாங்க? (கடைசியில் நாங்கள் வெளியே வரும்போதும் பார்வையை அந்தப் பக்கம் விரட்டினேன். பாராயணம் தொடருது. பைரவர் ஆழ்ந்த உறக்கத்தில். நிஷ்டையோ என்னவோ? தோழியிடம் இதைச் சொன்னபோது அவர் ஒரு சித்தராகக்கூட இருக்கலாமுன்னு சொன்னாங்க!)வலமாக உள்ளே நடந்தால் முருகன் சந்நிதியில் கற்பூர ஆரத்தி முடிஞ்சு பக்தர்கள் தொட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. குருக்கள்கிட்டேயே கேட்டாச்சு என்ன விசேஷமுன்னு...... கிருத்திகையாம். அன்னிக்கு சஷ்டித் திதியும் சேர்ந்து அமைஞ்சுருச்சு. கிடைச்சவரை பாக்கியமுன்னு கோயிலை வலம்வந்து 'எல்லோரையும்' தரிசனம் செஞ்சுட்டு வந்தோம்.

சரி.....இது இருக்கட்டும். இப்ப எங்கே நிக்கறீங்க? கோவில் ராஜகோபுரத்தைப் பார்த்துத்தானே? இந்தப் பக்கம் உங்க இடதுகை வசம் கொஞ்ச தூரத்துலே ஆதிகேசவன் கோவில் இருக்கு. வலது கைப்பக்கம் கொஞ்ச தூரத்துலே மாதவப்பெருமாள் கோவில் இருக்கு.
அவ்வளவா உயரம் இல்லாத அளவான ராஜகோபுரம். மாதவா, மாதவா, மாதவான்னு மூன்று நிறங்களில் எழுதி இருக்கு. அதுக்கு அடியில் பளிச்'ன்னு திருமண். எல்லாத்துக்கும் நியான் விளக்கு அமைச்சுருக்கு. ராத்திரியில் அட்டகாசமா இருக்கும் போல!


நடுவிலே மண்டபமும், அர்த்த மண்டபமும், அதுக்கு அப்பால் கருவறையும். ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீமாதவப்பெருமாள் (மட்டும்) இருந்த கோலத்தில். வலது பாதத்தைத் தாமரை மலர்மேல் வச்சு கைகளை அருள்பாலிக்கும் விதம் அபய ஹஸ்தரா இருக்கார். நமக்கு முன்னே வலது பக்கம் உற்சவ மூர்த்தி. கொள்ளை அழகு. அநிருத்த மாதவராம். கல்யாண மாதவர். இருபக்கமும் தாயாரும் ஆண்டாளுமாத் தேவியர். அவருக்கு முன்னால் சின்ன சைஸா ஒரு வராஹமூர்த்தியும் அவர் தொடையில் அமர்ந்திருக்கும் பூமாதேவியும்.


அர்த்தமண்டபத்தில் நமக்கு வலது புறம் மூன்று சின்ன சந்நிதிகள். சேனைமுதலியார், பேயாழ்வார், நால்வராக உடையவர், பேயாழ்வார்,பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் க்ரூப்.
வெளியே முன்மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் நாலு பக்கமும் அழகழகான சிற்பங்கள். தசாவதாரமா பத்து, காளிங்கனோடு பாலகனாக் கண்ணன்( வெண்ணையும் தயிரும் பாலுமாச் சாப்பிட்டு சின்னத் தொந்தியோடு செழுமையா இருக்கார்) அனுமான், ஆட்டக்காரி, உடையவர் இப்படி வகைவகையா.
மண்டபத்தின் வெளிப்புறம் மேலே அண்ணாந்து பார்த்தால் பக்கத்துக்கு ரெண்டு மூணுன்னு வாய்பிளந்த முதலைகள். ( மழைத் தண்ணீர் சரிந்து வரும் குழாய் அமைப்பு. அதெல்லாம் விசாரிச்சுட்டேன்)

அலுவலகத்தில் இருந்த 'அதிகாரி'யிடம் படம் எடுத்துக்கலாமான்னு கேட்டதுக்கு, அவர் ஏதாவது விசேஷமா?ன்னார். கோயிலைப் பத்தி எழுதணுமுன்னு சொன்னதுக்கு எடுத்துக்குங்க. ஆனா சீக்கிரமா எடுத்துருங்கன்னார்.(???!!! ) நமக்கெதுக்கு வீண் ஆராய்ச்சி? கிடைத்தவரை உத்தமம்.

நாலு அலங்காரத்தூண்களொடுச் சின்னதா ஒரு திறந்த மண்டபம். படிகளில் யானைச் சவாரி செஞ்சுக்கிட்டு இருந்த மூன்று பொடிசுகள். அதையடுத்து கம்பிக்கதவு போட்டு மூடியிருந்தக் கோவில் குளம். சந்தான புஷ்கரணி. இங்கே இதன் கரையில்தான் மேலே சொன்ன ப்ருகு முனிவரின் ஆசிரமம் இருந்ததாம். மாசி மாதம், மகம் நட்சத்திரம், பௌர்ணமித் திதி இம்மூணும் சேர்ந்து வரும் நாளில் பூவுலகின் சகலப் புண்ணியத் தீர்த்தங்களும் இக்குளத்தில் வந்தடைவதாக ஒரு ஐதீகம். அந்த நாளில் இத்திருக்குளத்தில் புனித நீராடி அமிர்தவல்லித் தாயாரையும் மாதவப்பெருமாளையும் வழிபடும் பக்தர்களுக்குப் புத்திரப்பேறும், சகல செல்வங்களும் கிட்டுமாம். இந்த விவரமெல்லாம் ப்ரமாண்ட புராணத்தில், மயூரபுரி மகாத்மியத்தில் இருக்கு. இதே புராணத்தில் அஞ்சாவது அத்தியாயத்தில் ப்ருகு முனிவரின் ஆஸ்ரமத்தில் ஆக்நேய திக்கில்( தென் கிழக்கு மூலையில்) உள்ள கிணற்றில் அயோநிஜராக, பேயாழ்வார் அவதரித்தார். இவர் பெருமாளின் நந்தகம் என்னும் வாளின் அம்சம்.

இதே 'கதை' ஆதிகேசவப் பெருமாள் கோயிலைப் பத்தி முன்னே எழுதி இருந்த பதிவிலும் படிச்சுருப்பீங்க. இது என்னப்பா மாதவா, இப்படி ஒரு கன்ஃப்யூஷன்? நோ...நோ..... நோ கன்ஃப்யூஷன் அட் ஆல்! இந்தக் கபாலியும் மயூரபுரிக் காலத்தில் இங்கே இல்லை. சாந்தோம் சர்ச்சு இப்போ இருக்கு பாருங்க அங்கேதான் இருந்துருக்கார். இப்பத்தானே அடுக்கடுக்காத் தெருக்கள், மாடவீதிகள், கபாலி கோவில் எல்லாம் இங்கே ஆகி இருக்கு,ஒரு நானூறு வருசத்துக்கு முந்தி. அப்போ ஒரே காடு. கூப்பிடு தூரத்தில் ரெண்டு கோவிலும் இருந்துருக்கும்.என்ன....கொஞ்சம் உரக்கக் கூப்பிடணும்,அம்புட்டுத்தான்.

இந்தப் புஷ்கரணியில் தோன்றிய அருள்மிகு அமிர்தவல்லித் தாயாருக்கு, விஸ்தாரமானத் தனிச்சந்நிதி இருக்கு. திருக்குளத்தை எட்டிப் பார்த்தேன். ஏராளமான படிகளொடு கூடிய ஆழமான அமைப்பு. சுத்தம்.... சொட்டுத் தண்ணி இல்லை. அடியில் பச்சைப்பசேலுன்னு புல்தரை. இந்தியாவில் இருக்கும் 'சந்தானங்கள்' போதுமுன்னு ஆயிருச்சு அந்த சாமிக்கே.

பின்புற மதில் சுவருக்கு அருகே பூவராகர். தனிச்சந்நிதி. இடது தொடையில் ஹாயாக அமர்ந்திருக்கும் பூமாதேவி. அழகான உருவம். அதைச் சுற்றிக்கிட்டு மேலே வலம்போனால்... பெருமாள் கோவில்கள் வழக்கப்படி ஆண்டாளம்மாவுக்கானத் தனிச் சந்நிதி, எதிரே துளசி மாடம்.
இடது பக்க நீண்ட மண்டபத்தில் பரமபத வாசல், சின்னத் தேர்கள், கோவிலின் மாதிரி அமைப்பு செஞ்சுக் கண்ணாடிப்பெட்டியில் வச்சுருக்கும் மேசை, ஸ்ரீ ராமர் சந்நிதி( மூடி இருந்துச்சு) இப்படி. இந்தத் தேரில் ஒரு பசுவும் பாப்பாவும் ரொம்ப அழகாக தலையை உயர்த்தி நிக்குது. உற்சவ மூர்த்தியை நடுவில் வச்சுட்டால் கனஜோரா இருக்கும்!
அழகானச் சின்னச் சின்னக் கோபுரங்களுடன் கோயில் படு சுத்தமா ஜொலிக்குது. வெளிப்பிரகாரம், நமக்கிடது பக்கம் மடைப்பள்ளி. சுவத்துலே பெருமாளின் பதினாறு திவ்யநாமங்களும் என்னென்ன பலன்கள் கொடுக்குமுன்னு ஒரு தகவல் பலகை பார்த்ததும் நம்ம கைலாஷி நினைவு வந்தது.
ராஜகோபுரத்துக்கு எதிரே நல்ல உசரமான நாலு தூண்களோடு இன்னொரு மண்டபம். அங்கேயும் தூண்களில் அழகான தசாவதாரச் சிற்பங்கள். ஆனால் பராமரிப்பு இல்லாம அந்த இடம் கிடக்கு. இன்னும் கொஞ்சம் சுத்தமா வச்சுருக்கலாம். இங்கே உள்ளூர் வழக்கப்படி குப்பைகளை வாசலில் கொட்டும் பழக்கம், இங்கேயுமா? (-:
மாதவன், என்னை மூணுமுறை வரவச்சுட்டான். இந்தக் கோவிலுக்கு முதல்முறை நாச்சியாரோடு வந்தேன். ரெண்டாவதா, நம்ம கோபாலோடு வந்தப்ப, (நான் பெற்ற இன்பம்) சாயந்திரம் கோவில் திறக்கும் நேரம். வயசான பட்டர் ஒருத்தர் தளர்வா உக்கார்ந்துருந்தார். மூலவருக்குத் திரை போட்டு இருந்துச்சு. கோவிலைச் சுத்திட்டு வாங்கன்னார். ஆச்சு. சரேல்னு திரையை விலக்குனவர், 'பட்டர்கள் யாரும் இங்கே நிரந்தரமா வேலை செய்யறதில்லை. சம்பளம் ரொம்பக் கம்மி. வெறும் ரெண்டாயிரம்தான். அந்தப் பக்கம் அந்தக் கோவிலில் (? ஆதிகேசவன் கோவிலில்)அஞ்சாயிரம். மூணு மட்டை சாதம் வேற உண்டு அங்கே. இங்கே சாப்பாடும் கிடையாது. டிவிஎஸ்க்காரா கோவிலை நல்லாக் கட்டிவச்சுட்டுப் போயிட்டா. கோயிலுக்குச் சொத்து எக்கச் சக்கம். நல்ல வரும்படி வர்றது. சுத்தி இருக்கும் கடைகள் எல்லாம் கோவிலோடதுதான். ஆனால்...... பட்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கறதில்லை. இளவயசு பட்டர்கள் எல்லாம் ஆறுமாசம் இங்கே இருந்தாவே ஜாஸ்தி. என்னைப்போல வயசானவந்தான் வேறெங்கே போறதுன்னு இங்கேயே கிடக்கேன்'னார்.

"என்னமோப்பா மாதவா....இப்படி இதையெல்லாம் என்னைக் கேக்கவச்சுட்டியே"

நீயே குறைகேட்கும் & தீர்க்கும் கோவிந்தன். இப்ப உனக்கு நான் ப்ரதிநிதியா? அச்சச்சோ....... என்னாலே என்ன செய்ய முடியும்? பெரியவருக்குத் தன் மனசைச் சொல்லிக்கக் கிடைச்ச ஒரு ஆத்மா நான் என்ற ஆறுதல்.


உணர்வுக்கு வந்தவர்போல், 'சட்'னு திரும்பி நெய்விளக்கை ஏத்தி மூலவரை அறிமுகப்படுத்தினார். சேவிச்சுக்கிட்டோம்.

மூணாவதா நேத்து என்னமோ அங்கே போனால் தேவலைன்னு இருந்துச்சு. ரொம்பவே இருட்டிவேற போச்சு. இத்தனைக்கும் மணி ஏழரைதான். பிரகாரத்தில் வலம் வந்தப்போ ....வடகிழக்கு மூலையில் முக்காலிருட்டில் ஒரு சின்னச் சந்நிதி. போன ரெண்டுமுறையும் இதைக் கவனிக்கவே இல்லை. இப்போ...அதுவும் யாரோ உள்ளூர்க்காரர் அதை வலம்வந்துக்கிட்டு இருந்தாரேன்னு கவனிச்சால்...... ஹைய்யோ...என்னன்னு சொல்வேன்!

பால ஹனுமான், அழகாச் சின்னதா ஒரு ஆஞ்சநேயர். ' சட்' ன்னு எனக்கு கோகி நினைவு வந்துருச்சு. நான் இருக்கேன்னு காமிக்கத்தான் என்னை வரச் சொன்னாயா?

என்னமோப்பா மாதவா...உன் செயலைப் புரிஞ்சுக்கவே முடியலை.

32 comments:

said...

கடவுளையும் அப்பப்ப புரிஞ்சக்க முடியாம போயிருது....

கோவிலெல்லாம் பிராமதமா தான் இருக்கு..கடவுளோட அருளும் அதே மாதிரி பட்டருக்கும் கிடைக்கட்டும்.

said...

//இவர்தானே வண்டு ரூபமெடுத்து சிவனைமட்டும் சுற்றி வந்தவர்? அதனால்தானே சிவனும், தன் உடலில் அம்பது சதமானம் இட ஒதுக்கீடு கொடுத்து அர்த்த நாரியானது.//

ஈசனை மட்டும் வண்டாய்ச் சுற்றியவர் ப்ருங்கி முனிவர். உமை அம்மையின் கோபத்தால் உடல் கூடாய்ப் போனது என்றும் பின்னர் சரியானது என்றும் சொல்வார்கள். நவராத்திரியில் இது வந்தாலும் வரும். ப்ருகு முனிவர் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தின் மூலகர்த்தா. "ஸ்ரீ" இவரின் மகளாய்ப் பிறந்து மஹாவிஷ்ணுவை அடைந்தாள். பார்கவர் என்றும் சொல்லுவார்கள். பார்கவி என்ற பெயரும் ஸ்ரீக்கு உண்டு. விஷ்ணுவை மார்பில் உதைத்தவர் இவர்.

said...

மறந்துட்டேனே, இந்த ப்ருகு முனிவர் தான் மஹாவிஷ்ணுவை சபிச்சவரும் கூட. ப்ருகுவின் மனைவியை சுதர்ஸனச் சக்கரத்தால் மஹாவிஷ்ணு அறுத்துவிட, மனைவியைப் பிரிந்த சோகம் தாளாமல் மஹாவிஷ்ணுவும் மனைவியைப் பிரிந்து வாழ சாபம் கொடுக்கிறார். அந்த சாபத்தை ஏற்றே ராமராய் மஹாவிஷ்ணு வந்தார் என்று வால்மீகி ராமாயணம் சொல்லுகிறது. சுட்டி இங்கே


ராமாயணம்

said...

வாங்க சிந்து.

அருமையான கோவில் & அழகான பெருமாள்.

said...

வாங்க கீதா.

ரொம்ப நன்றிப்பா.

சரித்திரத்தை மாற்றப் பார்த்தேனே......

(பிழைத் திருத்தம் போட்டுடறேன்)

'ங்' இப்படிச் செஞ்சுருச்சு பாருங்க!

said...

உள்ளேன் டீச்சர்.!

said...

ஆஹா இன்னைக்கு நான் தான் பர்ஸ்டா!!!!! பரிசு ஏதாவது உண்டா டீச்சர்....

said...

I hope that u will write about Mundaga kannai amman temple also.

Baalakumaran is great of informing us about mylapore koil, mundagakanni amman, ragavendraa, triplicane sivan koil ...

said...

துளசி
இந்த ப்ருகு முனிவர் ட்ரினிட்யில யார் க்ரேட் நு கண்டுபிடிக்க ஒவொருத்தராய் உதைச்சு பார்த்தார். அப்பா ப்ரஹ்மாக்கு இன்சல்ட் ப்ண்ணினார்னு கோவம் வந்தது.சிவனுக்கு ரொம்ப ஃபுயூரியஸ் ஆச்சு. ஆனா மாதவன் மட்டும் அவர் காலைப்பிடிசிண்டு வலிச்சுடுத்தானு கேட்டாராம். அவ்வளவு கம்ப்பாஷன் அப்பேர் பட்ட வைஜயந்தி மாலதரன் அவர் பொண்னையும் கல்யாணம் பண்ணிண்டு முனிவர் உதைத்த அதே மார்பில் ஸ்ரீ யை வைத்தும் கொண்டார். is it correct Mrs shivam ?
எப்படி என் தமிழ் எழுத்து? சுக்குமி ளகுதி இப்பிலி தானே :))

Anonymous said...

ஜூனியர் கோகியை நியூஸில விட்டுட்டு வந்துட்டீங்களா.

said...

ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குப் போயிருக்கேன் அக்கா. மாதவப்பெருமாள் கோவிலுக்குப் போனதில்லை. இப்ப உங்களோட போயிட்டு வந்த மாதிரி இருக்கு. :-)

said...

டீச்சர் பதிவு ரொம்ப நல்லா இருக்கு, நீங்க எளுதும் பக்தி பதிவுகள் அனைத்தும் அருமை, நிறைய எளுதுங்கள். அப்புறம் ஏன் கோகுலாஸ்டமி பதிவும், பட்ச்னங்கள் படமும் போடவில்லை, குட்டிகண்ணன் கூட டூ விட்டுட்டீங்களா?
கடைசியா ஒரு கேள்வி எனது பின்னூட்டங்கள் ஏன் உங்கள் பதிவில் வருவது இல்லை? தரமாக இல்லையா?

said...

உங்களுடைய அனுபவமும், தேர்ந்தெடுக்கும் விசயங்களும் இங்கு வாழ்ந்து கொண்டுருக்கும் என்னை வியப்படைய வைக்கிறது. வெட்கப்பட வைக்கின்றது. உங்களின் வலைதள புகழ் சமீபத்தில் உள்ளே வந்த அறிவுக்கூட்டம் ஒன்று பதிவை தேர்ந்தெடுத்து அதகளம் செய்து போய்விட்டார்கள். அப்போது தான் புரிந்தது நீங்கள் யார் என்று? காந்தியாரை யார் என்று கேட்பவர்களுக்காக காந்தி யார்? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள கடைசியில் துளசி தீர்த்தம் குடித்த திருப்தி.

http://texlords.wordpress.com

said...

//நமக்கிடதுபக்கம் இருக்கும் வெளிப்பிரகாரத்தில் ஒரு முப்பது நாப்பதுபேர் தரையில் அமர்ந்து ஏதோ புத்தகம் வச்சுக்கிட்டுப் பாராயணம் பண்ணறாங்க. திருப்புகழோன்னு ஒரு ஐயம்.//


திருமுறைகள் படிப்பாங்க. அந்தக் கோயிலில் (மயிலை கபாலீஸ்வரர் கோயில் தானே நீங்க சொல்றது?) திருமுறைகள் வகுப்பும் எடுக்கிறாங்க. வாரா வாரம் ஞாயிறு அன்று சிறப்பாகப் பாராயணம் நடைபெறும்.
பிரபலமான பல ஓதுவார்கள் இசை நிகழ்ச்சியும் நடக்கும்.



//வயசான பட்டர் ஒருத்தர் தளர்வா உக்கார்ந்துருந்தார். மூலவருக்குத் திரை போட்டு இருந்துச்சு. கோவிலைச் சுத்திட்டு வாங்கன்னார். ஆச்சு. சரேல்னு திரையை விலக்குனவர், 'பட்டர்கள் யாரும் இங்கே நிரந்தரமா வேலை செய்யறதில்லை. சம்பளம் ரொம்பக் கம்மி. வெறும் ரெண்டாயிரம்தான். அந்தப் பக்கம் அந்தக் கோவிலில் (? ஆதிகேசவன் கோவிலில்)அஞ்சாயிரம். மூணு மட்டை சாதம் வேற உண்டு அங்கே. இங்கே சாப்பாடும் கிடையாது. டிவிஎஸ்க்காரா கோவிலை நல்லாக் கட்டிவச்சுட்டுப் போயிட்டா. கோயிலுக்குச் சொத்து எக்கச் சக்கம். நல்ல வரும்படி வர்றது. சுத்தி இருக்கும் கடைகள் எல்லாம் கோவிலோடதுதான். ஆனால்...... பட்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கறதில்லை. இளவயசு பட்டர்கள் எல்லாம் ஆறுமாசம் இங்கே இருந்தாவே ஜாஸ்தி. என்னைப்போல வயசானவந்தான் வேறெங்கே போறதுன்னு இங்கேயே கிடக்கேன்'னார்.//


"வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை, நானும் போன மாசம் தான் பார்த்தேன். வயதான பட்டர் என்னிடமும் சொன்னார். ஆனால் கூடவே எழுதவேண்டாம்னும் வேண்டுகோள் விடுத்தார். அதனாலே மனசாட்சியும் உறுத்த, ம.பா.வும் தடைபோட அதை எழுதலை. நீங்க எழுதினதுக்கு நன்னிங்கோ!! பல கோயில்களிலும் இன்று இந்த நிலைமைதான். கோயில் சொத்தில் வரும் வருமானத்தை என்ன செய்வாங்கனு யோசிச்சேன். அப்புறமா அதுவும் புரிஞ்சது! :((((((((((

டிஸ்கி: ஹிஹிஹி, நேத்திக்கு பிருகு முனிவரை மட்டும் பார்த்துட்டுப் போயிட்டேன். பதிவை இன்னிக்குத் தான் சாவகாசமாப் படிச்சேன்.

said...

சென்னைத் தல புராணங்களைப் போற்றி எழுதும் நல்ல நிருபராகிட்டீங்க. துளசி போகிற இடமெல்லாம் ஸ்வாமி ஷரிசனம் கொடுக்கிறார்.
நல்ல நேரம் தொடரட்டும்.

நாங்கள் கோவில் போகாமலேயெ அத்தனை தரிசனமும் கிடைக்கிறது. மனசார வாழ்த்துகள்மா.
ஆமாம் இந்த பிருகு முனிவர்தானே ஸ்ரீனிவாசர் பூமிக்கு வரக் காரணமா இருந்தவர்.
அவர் உதைக்கப் போய்த்தானே லக்ஷ்மி அம்மா கோல்ஹாப்பூருக்குத் தபஸ் செய்ய வந்துட்டாங்க?????????
ஒரே குழப்பமா இருக்கே. எதுக்குத் தன் பொண்ணையே உதைத்தார்!!!

said...

hihihi pennai uthaikkalai Valli, Vishnuvai than uthaithar!

said...

என்னப்பா சிந்து,

பரிசு வேணுமா? துளசியை அனுப்பவா?

பெருமாள் பிரசாதம்:-)

said...

வாங்க ராம்ஜி யாஹூ.

எதுவும் திட்டமிடாமலே நடந்து வருது. அங்கே போகும்படி அமைஞ்சால் கட்டாயம் எழுதணும். எழுதுவேன்.

எல்லாத்துக்கும் நேரம் வரணும் இல்லை?

said...

வாங்க ஜெயஸ்ரீ.

தமிழ் நல்லாத்தானே வருது? எல்லாம் போகப்போகச் சரியாகும்.

மாதவன் என்ன லேசுப்பட்ட ஆளா? மாரில் உதைச்ச பிருகுவின் காலில் இருந்த ஞானக்கண்ணை நைஸாப் பிடுங்கிட்டாராம்!

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஜூனியர் என்னோடு இருக்கான்ப்பா.

said...

வாங்க குமரன் தம்பி.

கூடவே வர்றதுக்கு நன்றி.

கூட்டமும் குறுக்குமறுக்காப் போகும் தெருக்களும் இல்லாட்டி ரெண்டு கோவில்களுமே அதிக இடைவெளியில் இல்லை.

பெருமாளும், உற்சவரும் கொள்ளை அழகு. அதுக்காகவே ஒரு முறை போய்வரலாம்.

said...

வாங்க பித்தன்.

உங்க பின்னூட்டங்களை இதுவரை வந்தவைகளை வெளியிட்டுக்கிட்டுத்தானே இருக்கேன். பின்னூட்டம் வேண்டாத பதிவர் உண்டா?

(அது என்னமோ வாழைப்பழம் வேண்டாமுன்னு சொல்லும் குரங்கனார் நினைவுக்கு வர்றார்)

நம்ம வீட்டுலே எந்தப் பண்டிகையா இருந்தாலும் சம்பிரதாயமான நைவேத்யங்கள் இருக்காது. எனக்கு அப்போ என்ன தோணுதோ அதுதான்.

கிருஷ்னனைக் கொண்டாடாமல் இருப்பேனா? இஷ்டதெய்வமாச்சேப்பா.

நம்ம ஸ்டைலைப் பதிவு போட்டால் ஆச்சு:-)

ஆன்மீகக் காவலர்கள் சண்டைக்கு வராமல் இருக்கணும்!

said...

வாங்க ஜோதிஜி.

என்னைத் துவைச்சுக் காயப்போட்டாச்சா!!!

அடடா..... நான் ஓசைப்படாம மகாராஜாக்கள் நிதிகளையெல்லாம் பார்த்துக்கிட்டு 'தேமே'ன்னு நிக்கிறேனேப்பா:-)

said...

கீதா,

அன்னிக்கு வியாழக்கிழமையா இருந்தது.

ஒருவேளை கிருத்திகை, சஷ்டிக்கான ஸ்பெஷல் பாராயணமோ?

நாயார் அங்கே இருந்ததுதான் அற்புதம்!

ஏம்ப்பா....'சிவன் சொத்து குல நாசம்'ன்னு பழமொழி இருக்குல்லே?

சிவன் கோவில் பராமரிக்கும் நபர்களுக்கு அதனால் கொஞ்சம் பயம் மனசில் வந்திருக்க வாய்ப்புண்டு.

பெருமாளுக்கு அப்படிப் பழமொழி ஏதும் உண்டா?

கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமில்லாமக் கோவில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் மனோபாவம் எப்படி வருதுன்னு வியப்பா இருக்கு!

said...

வாங்க வல்லி.

பொண்ணை உதைக்கலையாம் அவர். கீதா சொல்லியிருக்காங்க. அவரை ஃபேமிலி வயலென்ஸ்லே உள்ளே தூக்கிப் போடணும்!

தரிசனங்கள் எல்லாம் தாமாய் அமையுதுப்பா. ஒருவேளை எனக்குப் 'போறதுக்கு' நேரம் வந்துருக்கோ:-)

said...

கீதா,

தலப்புராணங்கள் பலதும் பலவிதமாச் சொல்லுது. கம்யூனிகேஷன் கேப். இருந்துட்டுப்போகட்டும்.

எதா இருந்தாலும் அதுலே இருக்கும் நல்லதை எடுக்கலாம்:-)

(தனிமடல் ஒன்னு அனுப்பி இருக்கேன் உங்களுக்கு)

said...

//கீதா சாம்பசிவம் said...
hihihi pennai uthaikkalai Valli, Vishnuvai than uthaithar!//

ஹிஹி!
இப்போ நான் யாரு கட்சியில் சேருவது? வல்லியம்மாவா? கீதாம்மாவா? :)))
சரி, சரியான தகவல் என்னும் கட்சீல சேர்ந்துருவோம்! :)

பெண்ணைத் தான் உதைத்தார் கீதாம்மா!

பெருமாளின் திருமார்பில் காலால் எட்டி உதைத்து,
அன்னை வாழ்கின்ற திரு வாழ் மார்பினை, அவமதித்தார்!

தன்னை அவமதித்தவருக்கும் கணவர் பணிவிடை செய்து, பணிவு காட்டுகிறாரே என்ற பொய்க் கோபத்தில், அன்னை கொல்லாபுரி என்னும் கோலாப்பூருக்கு தவம் செய்ய வந்து விட, அவரும் திருவேங்கடம் வந்து விடுகிறார்!

திருவேங்கடம் ஹரியான கதை இது தான்! சரி தானே டீச்சர்? :))

said...

//அநிருத்த மாதவராம்//

அப்படீன்னா என்ன டீச்சர்?

//வடகிழக்கு மூலையில் முக்காலிருட்டில் ஒரு சின்னச் சந்நிதி//

மாதவப் பெருமாள் ஒரு அழகு-ன்னா, இந்த முக்காலிருட்டு சிறிய திருவடியான ஆஞ்சநேயர் - குழந்தை அனுமன் - "சிறிய" சிறிய திருவடி - அழகோ அழகு!

said...

//சுத்தம்.... சொட்டுத் தண்ணி இல்லை.//

சொட்டுத் தண்ணி இல்லீன்னா என்ன டீச்சர்?
கொறைஞ்ச பட்சம் சுத்தமா இருக்கே-ன்னு சந்தோஷப்பட்டுக்குங்க! :(

said...

முதலில் பூவராகர் சன்னதி குளக்கரையில் தான் இருந்தது. தற்போது மாற்றி தனி சன்னதியாக கட்டியுள்ளார்கள்.

இங்கு பெருமாள் கல்யாண மாதவராய் தாயார்களுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

மாசி மகத்தன்று தாயார் இக்குளத்தில் அவதரித்ததால் அன்று குளத்தில் நீராடுவது விஷேசம்.

சித்திரை திருவோண நாள் தொடங்கி பத்து நாள் பிரம்மோற்சவம். சென்னையில் இருந்தால் சென்று சேவியுங்கள். பெருமாளின் அழகே அழகு.

சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவீர்கள்????

இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

வரவர 'எல்லாத்துக்குமே' சந்தோஷப்பட்டுக்கணுமுன்னு ஒரு கொளுகையை ஆரம்பிச்சு வைக்கிறேன்.

கோயில் 'சுத்தம்' நல்லாத்தான் இருக்கு.

said...

வாங்க கைலாஷி.
தகவலுக்கு நன்றி.

அநேகமாக இன்னும் ஒரு ஆறுமாசம்.

நேத்து(ம்) உங்களை நினைச்சோம் கீதாம்மா வீட்டுலே!