Friday, March 11, 2005

அயோத்தியா!!!!!!

இப்ப என்ன திடீர்னு அயோத்தியாவைப் பத்தி?

ம்ம்ம்ம்.... நீங்க சலிச்சுக்கறது கேக்குது!

இது ஒரு சினிமா விமரிசனம்!!!! படத்தோட பேருதாங்க இது!

அது என்ன? யாரும் கேள்விப்படாத படமா இருக்கேன்னு நினைக்கிறீங்கதானே?

எனக்குன்னு இப்படி எல்லாம் ஆப்டுதே!( அகப்படுகின்றதே!)



இதுலே பாருங்க, யாரும் பார்க்காத, அட்லீஸ்ட் கேள்விக்கூடப்பட்டிருக்காதப் படங்களையெல்லாம்
நம்ம 'சப்ளையர்' இங்கே தமிழ்ப்படமில்லாம 'காஞ்சு'கிட்டு இருக்கற கூட்டத்துக்காகவே அனுப்பி
வச்சுடறாரு! ஒருவேளை இந்தப் படங்களோட 'ரிலீஸ்'கூட நம்ம வீட்டுலேதானோன்னு ஒரு சந்தேகம்
ரொம்ப நாளா இருக்கு! ஆனா பாருங்க, சிலவேளைகளிலே நல்ல படமாக்கூட அமைஞ்சுடுது!!!

சத்தியமா( வுட்டேன்!) இது தமிழ்ப் படம்தான்! நடிப்பு எல்லாமே 'புது முகங்கள்!!!'

டைட்டிலே ஏதேதோ பேருங்க ஓடுச்சுதான். ஆனா, யாரு யாருன்னு தெரியாத நிலைமையிலே இருந்ததாலே
தெரிஞ்சுக்க அவ்வளவா மெனக்கெடலை!!!

இப்ப 'மரத்தடி'லே வேற ஒரு 'இழை' ஓடறது அநேகமாக் கவனிச்சிருப்பீங்க!!!( இது என்னவா?)

கதைக்கு வரேன்.

ரெண்டு நண்பர்கள்.ஒரு இந்துவும், ஒரு முஸ்லீமும்! வசதியை முன்னிட்டு இ & மு ன்னு வச்சுக்கலாம்!

இ & மு சேர்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சு நடத்துறாங்க. இவோட கல்யாணம் நடக்குது. அப்புறம்
அவரோட மனைவி, முவுக்கு பொண்ணு பார்க்கப் போறாங்க. பார்த்த பொண்ணைப் பிடிச்சுப்போய், அவுங்களையே
கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ரெண்டு பேரும் நல்ல நட்பா இருக்காங்க.

கொஞ்ச நாள் கழிச்சு ரெண்டு பேரும் கர்ப்பிணி. முவோட மனைவிக்கு ஏதோ(!) பிரச்சனையாலே இனிமே
குழந்தை பிறக்கறதுக்கு வாய்ப்பு இல்லே டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். அதாலே இப்ப வயித்துலே இருக்கறது
நல்லபடியாப் பிறக்கணுமேன்னு ஒரே கவலை. தோழிகிட்டே புலம்பிக்கிட்டு இருக்காங்க.

இதுக்குள்ளே வில்லன்( நமக்குத் தெரிஞ்ச ஒரே ஆளு! மணிவண்ணன்!!!)சும்மா இருப்பாரா? சும்மா இருந்தா
வில்லனிலே சேர்த்தியா? குட்டையைக் குழப்பி ஃபேக்டரியிலே இருக்கறவங்களைக் கையிலே போட்டுக்கிட்டு
ரெண்டு முதலாளிங்களுக்கும் ஆகாமப் பண்ணிடறாரு! இவும் முவும் இப்ப 'கா'

மனைவிகள் ரெண்டு பேரும் ஒரே நேரத்துலே( சரியா ஊகிச்சு இருப்பீங்களே!)பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியிலே
அட்மிட்! முவோட குழந்தை பிறந்ததும்,அது உயிர் பிழைக்காதுன்னு டாக்டரம்மா சொல்லிப்புட்டாங்க. (சரி சரி,
நீங்க நினைக்கறது சரிதான்) இ யோட மனைவி தன் குழந்தையை அங்கே கொடுத்துட்டு, அந்தக் குழந்தையை
எடுத்துக்கிட்டாங்க.அப்படிக் கொடுக்கரப்ப சொல்றாங்க, எனக்கு பிரச்சனையில்லாததாலே வேற புள்ளையை
பெத்துக்க முடியும்..... இப்படி !

ஆனா, உயிர்பிழைக்காதுன்னு சொன்ன புள்ள பொழைச்சுக்கிச்சு! இப்ப இ வூட்டுலே மு வோட புள்ளை,
மூ வூட்டுலே இ யோட புள்ள. நல்லா வளர்ந்து வாலிபப் பசங்களா ஆயிட்டாங்க.

கொஞ்சம் இருங்க மூச்சு வுட்டுக்கறேன்! ஹப்பாடா!!!!!

ரெண்டு அம்மாங்களும் ரகசியமா அப்பப்ப சந்திச்சுப் பேசிக்கிடுறாங்க!!!

இப்பதான் ஹீரோயினுங்க என்ட்ரன்ஸ்!!

இயோட மச்சினன் பொண்ணு முவோட வீட்டுலே வளர்ற இ யோட புள்ளையைக் காதலிக்குது. இ வீட்டுலே
இ யாக இருக்கற மு வோட புள்ள, ஒரு 'மதரஸா'வை நடத்துறவருடைய பொண்ணை 'லவ்' செய்யுது!

( இங்கெதான் கவனிக்கணும், டைரக்டர் எவ்வளவு கவனமா மதக் கலப்பு இல்லாமப் பாத்துக்கிட்டாருன்னு!)

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே, அந்த மதரஸா இருக்கற இடம் கோவிலுக்கு சொந்தமான நிலத்துலே!

வில்லன் 'சாஸ்த்திரப்படி' ரெண்டு பேருக்கும் ஆகாமப் பண்ணறதுலேயே கவனமா இருக்காரு!!!

இப்ப இந்த வாலிபப் பசங்க, நம்ம காதல் ஜெயிக்கணுமுன்னா நாம ஒண்ணா சேர்ந்து போராடணுமுன்னு
முடிவு செஞ்சு 'தோஸ்த்'தாப் போயிடறாங்க! அப்பத்தானே 'புர்க்கா' போட்டுக்கிட்டு காதலி வீடுங்களுக்கு
போய் வர்ற சாத்தியதையை உண்டுபண்ணிக்கலாம்!

அப்புறம் அம்மா செண்டிமெண்ட், புள்ளைப்பாசம் இப்படியெல்லாம் ஒண்ணுவிடாம இருக்கு! இயோட மனைவியை
கலாட்டா செய்யற பொறுக்கிங்ககிட்டே இருந்து, காப்பத்தச் சொல்லி முவோட மனைவி அந்தப் புள்ளை(!)கிட்டே
சொன்னதும், அந்தப் பையன் தன்னோட சொந்த அம்மான்னே தெரியாம, அவுங்களைக் காப்பாத்தறான்!

அவனுக்கு இப்ப 'ஜாதகப்படி' நேரம் சரியில்லையின்னு, இ யோட மனைவி ஒரு மோதிரத்தை, மு வோட மனைவிகிட்டே
கொடுத்து, அவனைப் போட்டுக்கச் சொல்றது இத்யாதிகள்.....( தலை சுத்துதா?)

ஐய்யய்யோ, இப்பத்தான் சில நடிக, நடிகையரோட பேரும் ஞாபகம் வருது! மு வா வர்றது லிவிங்ஸ்டன்.
அவரோட மனைவி சரண்யா. இ யோட மனைவி சீதா.

மணிவண்ணனோட 'கைங்கரியத்தாலே' மதரஸாவைக் காலிபண்ணச் சொல்லி 'தம்கி' கொடுக்கறாங்க இந்த இ யோட
ஜனங்க. அதுக்குள்ளெ இந்த ரெண்டு ஜோடியும் போய் அங்கே ஒளிஞ்சுக்கிடறாங்க.

ஊரே திரண்டு வருது, கட்டிடத்தை இடிக்கறதுக்கும் தீவைக்கறதும் ( இதுலேதான் ஒத்துமையாக் கூடுவாங்க போல!)
மு வா வளர்ற இ யோட புள்ளைகிட்டே கடைசியிலே ஞாயம் கேக்கறாங்க ஊர்ச்சனங்க. அவர் சொல்லிட்டார்,
நான் முவா வளர்ந்தேன், அப்படியேதான் இருப்பேன்னு!!!!

மு வோட ஒரிஜனல் புள்ளை ( இ வூட்டுலே வளந்தது)க்கிட்டே யாரும் ஒண்ணும் கேக்கலை!!! இவ்வளவு
என்னத்துக்கு? அவருக்கு 'டூயட்'கூட உள்ளூர்லேதான்!

மத்தவருக்குத்தான் ,'வெளிநாட்டுலே டூயட்'!!! அநேகமா அவரோட சொந்தக் காசுலேதான் இந்தப் படத்துக்கு
ஃபைனான்ஸ் இருக்கணும்!!!!

எப்படியோ, கடைசியிலே எல்லாம் 'சுபம்'!!!!!!

'மதக் கலவரம் வராம ரெண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையா இருக்கணும்' என்ற கருத்தைச் சொல்லுற
படம்!!!!!( அப்படின்னு நினைக்கறேன். சரியா?)



3 comments:

said...

துளசியக்கா,
உங்க விமர்சம் படிச்ச எங்களுக்கே தலை சுத்துது. எப்படிப் படம் பார்த்து விமர்சன்ம் பண்ணுனீங்களோ. உங்கள் பொறுமைக்குப் பாராட்டுக்கள்.

said...

அன்புத்தம்பி முத்து!

இதுக்கே இப்படின்னா அடுத்து நான் போடற இன்னோரு படத்தோட விமரிசனத்துக்கு என்ன சொல்லப்போறீங்க?

என்றும் அன்புடன்,
துளசியக்கா

said...

ம்ஹீங்... புரியிறது கஷ்டம். 'அல்லாவே.... கிருஷ்ணாவே'-ன்னு பாட்டு வருமா அந்த படமா? பேசாம அயோத்தியா-ன்னு பேர் வைக்கிறத விட 'அயோக்கியா'-ன்னு வைச்சா டைட்டில் அட்ராக்ஷனால வாச்சி பாடம் பாக்க தோனும்.... :-)