"கஸ்தூரி ஆண்ட்டி வீட்டுலே பூஜைக்குக் கூப்புட்டுருக்காங்க, வர்றியா?"
"வாட் பூஜை? யூ நோ தட் ஐ டோண்ட் பிலீவ் இன் காட்"
" அது பரவாயில்லை. உனக்குத்தான் புடவை கட்டிக்கப் பிடிக்குமே. ஒரு ச்சான்ஸ் கிடைச்சிருக்கு."
" புடவையா? ................ஓக்கே."
எப்படியோ புடவைன்ற தூண்டிலைப் போட்டு மகளை இழுத்துக்கிட்டு பூஜைக்குப் போனேன். இவ நல்லா உயரமா இருக்கறதாலே புடவை கட்டினாக் கொஞ்சம் அழகாத்தான் இருக்கு. அதிலேயும் அங்கே வர்ற நம்ம சங்காதிகள் " யூ லுக் ஸோ நைஸ்"ன்னு சொல்றது இவளுக்கும் பிடிச்சிருக்கு.
அதே சமயம், நம்ம பழக்க வழக்கங்கள், கலை கலாச்சார விஷயங்களை இவ மனசுலே ஒரு மூலையில் எங்கியாவது விதைக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு.
இங்கே நாங்க வந்தப்பதான் தமிழ்நாட்டுக்காரங்க யாருமெ இல்லையே. அதுக்கப்புறம் ஒரு சிலர் வந்தாலும் அவ்வளவா பூஜை, புனஸ்காரம்னு இல்லை. எப்பவாவது ஒருத்தரை ஒருத்தர் விஸிட் பண்ணறதோட சரி.எட்டு வருசம் கழிச்சுத் தமிழ்ச்சங்கம் தொடங்குன பிறகுதான் கொஞ்சம் கலை, மொழின்னு பசங்களுக்கு அறிமுகம் ஆச்சு.
இந்தக் காலக்கட்டத்துலேதான் நம்ம டி.என். கிருஷ்ணன், வயலின் வித்தகர் இங்கே நம்ம ஊருக்கு ஒரு நிகழ்ச்சி கொடுக்க வந்துருந்தார். காஞ்சமாடு கம்பங்கொல்லை பார்த்த மாதிரி பாய்ஞ்சோம். நூறு பேருக்கும் கம்மியாத்தான் அரங்குலே இருந்தாங்க. அப்பத்தான் அங்கே வச்சு நம்ம கஸ்தூரியைப் பார்த்தோம். குளிருக்குப் பயந்து நாங்கெல்லாம் கம்பளி உடுப்புலே புதைஞ்சுக்கிட்டு இருந்தப்பப் 'பளிச்'னு பட்டுப்புடவை நம்ம கண்களை இழுத்துருச்சு.
சிங்கப்பூர்க்காரவுங்களாம். பேச்சுவாக்குலே, இங்கெ அவுங்க வந்து ஒரு மாசம் ஆச்சுன்னு சொன்னாங்க. மகன் யூனியிலே படிக்கிறாராம். நம்ம வீடு யூனிக்குப் பக்கத்துலேதானே இருக்குன்னு சொல்லி அவுங்க வீடு எங்கேன்னுகேட்டா.......... இடம் சொன்னாங்க. அட! நம்ம தெருவுக்கு எதுத்த தெரு. இவ்வளோ போதாதா?
சிங்கப்பூர்லே இருந்துட்டு இங்கே வந்துருக்காங்க. ஆனா கோவைதான் சொந்த ஊராம். மலேசியாக்காரரைக் கல்யாணம் கட்டி, சிங்கப்பூர்லெ பல வருசங்கள் இருந்துட்டு, இப்ப இங்கெ வந்துருக்காங்க. சிங்கையிலே டீச்சரா வேலை பார்த்துருக்காங்க. ரேடியோவுலே பாட்டெல்லாம் பாடி இருக்காங்க.
நம்ம தமிழ்ச்சங்கத்துலே நாங்க ஆரம்பிச்சிருந்த தமிழ் வகுப்புகளுக்கு முறையான ஆசிரியர்கள் இல்லாம நாங்களே வாரம் ஒருத்தர்ன்னு வகுப்புகள் நடத்திக்கிட்டு இருந்தோம். புள்ளைகள் எல்லாம் ஒண்ணு, டீச்சர்கள் மட்டும் வெவ்வெறு. இதுனாலே என்ன பாடம் நடத்தறோம், பிள்ளைகள் எவ்வளவு தூரம் அதைக் கத்துக்கிட்டாங்கன்னு பார்க்க ஒருதொடர்பில்லாம இருந்துச்சு. அதுலேயும் எங்க வீட்டுக்காரர் வகுப்பு எடுக்கப்போனா, வெறும் ரிவிஷன் வச்சே சமாளிச்சுருவார். இப்ப கஸ்தூரிக்கு ப்ராப்பர் டீச்சிங் அனுபவம் இருந்ததாலே அவுங்களையே டீச்சராப் புடிச்சுப் போட்டுட்டோம்.
அவுங்களும், இதுக்கெல்லாம் அசராம, சிங்கைப் பாடத்திட்டத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் வரவழைச்சு வகுப்பு நடத்தினாங்க. எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வந்துருச்சு. மொழியின் கூடவே நம்ம கலைகளும் வளரணும்தானே?தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள், விழாக்கள் இதுக்கெல்லாம் கஸ்தூரியின் பாட்டு இல்லாமல் முடியாதுன்னும் ஆகிருச்சு.நாந்தானே கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர். எனக்கும் இவுங்களை விட்டா வேற யார் இருக்கா?
கொஞ்சநாளிலே இங்கே சிலருக்குப் பாட்டுக் கத்துக்கற ஆர்வம் உண்டுன்னு தெரிஞ்சதும் பாட்டு வகுப்பும் ஆரம்பிச்சாங்க.வாரம் ஒரு நாள் அவுங்க வீட்டுலெ 'ச ப ச'ன்னு இருந்துச்சு. இங்கே இருக்கும் யூனி நூலகத்துலேயும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இப்படி படு பிஸியா இருந்தாலும், நம்ம பண்டிகைகள், நல்ல நாள், கிழமைகள்ன்னு வந்தா எதையும் விடாமக் கொண்டாடுவாங்க. எங்களைப்போல வீட்டுவரையில் கொண்டாடாம, எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டாடுவாங்க. அதுலெ பாட்டு, நடனம்ன்னு கலை நிகழ்ச்சிகளும் இருக்கும்.
இங்கே எங்களுக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் குஷியாப் போச்சு. மத்த தோழியர்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு.உள்ளேயே ச்சும்மாக் கிடக்கற புடவை, நகைகளை வெளியே எடுக்கறது, உடுக்கறதுன்னு ஜாலிதான். ஆனா வீட்டு ஆம்பிளைகளுக்குத்தான் கஷ்டமாப் போச்சு. 'புடவையெல்லாம் வேணாம், இங்கே யாரு கட்டறா?'ன்னு சொல்லி அவுங்க வயித்துலேயும், பர்ஸுலேயும் பாலை வார்த்துக்கிட்டு இருந்தோமா, இப்பக் கஸ்தூரி வருகையாலே, 'கட்டிக்கப்புடவையே இல்லை. இன்னும் நாலு வாங்கிக்கணும்'னு ஆச்சு.
புடவைன்னதும்தான் இன்னொரு விஷயமும் ஞாபகம் வருது. கஸ்தூரி எப்பவும் புடவைதான் கட்டுவாங்க. நாங்கெல்லாம் குளுருக்குப் பயந்து அதையெல்லாம் ஏறக்கட்டி நாளாச்சு. பட்டுப்புடவைகள் எக்கச்சக்கமா வச்சிருக்காங்க. அந்தக் காம்பினேஷன்கள் பார்த்து வச்சுக்கிட்டு அடுத்தமுறை ஊருக்குப் போறப்ப மறக்காம வேற காம்பினேஷன்லே வாங்கிவர ஆரம்பிச்சோம்:-)))
சிங்கையிலெ ரொம்ப நாளா இருந்ததாலெ மலேசியர்கள், சீனர்கள்ன்னு அவுங்களுக்கு நட்பு வட்டம் இருந்துச்சு.இங்கே தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள்ன்னு அந்த வட்டம் இப்ப ரொம்பப் பெரூசாவே ஆகிருச்சு. அவுங்க வீட்டு நவராத்திரி கொலுவுக்கு பகுதிவாரியா விருந்தாளி வருகை . அதுவும் ஒரு விதத்துலே நல்லதுதான்.
எல்லாரும் கூடும்போது பொது மொழியா இங்கிலீஷ் வந்துருதே. இந்தியை வச்சுக்கலாமுன்னா சிலருக்கு மொழித்தகராறு.இன்னொருத் தமிழ்க்காரரைப் பார்த்தவுடன் தமிழ் தானாய் வந்துருது. அக்கம்பக்கம் உக்கார்ந்து இருக்கறவங்களுக்கு மொழி தெரியலைன்னா அது ஒரு சங்கடம். அநாகரிகமும் கூட. தமிழ்லே பேசிட்டு, அடுத்தவங்களுக்காக அதை ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துக்கிட்டுன்னு ஒரே சல்லியம் போங்க. அதனாலெ எங்களுக்கு இந்தப் 'பிரித்தழைக்கும் கொள்கை' பிடிச்சுப்போச்சு.
இந்தக் காலத்துலே விரதங்கள், பூஜைகள் எல்லாம் சம்பிரதாயமா செஞ்சுக்கிட்டு இருக்கறதே பெரிய விஷயம் இல்லையா?எங்க வீட்டுலே நடக்கும் பூஜைகளுக்கு நம்ம கஸ்தூரிதான் ஆஸ்த்தான பண்டிதர். லேடி பண்டிட். நம்ம வீடு எவ்வளோ முன்னேறிடுச்சுப் பாருங்க. நல்லா நடத்தி வைப்பாங்க. நமக்கும் சரி, நம்ம விருந்தினர்களுக்கும் சரி, பூஜை முடிஞ்சாப் பூரணத்திருப்தி.
நடத்தி வைக்கும் பண்டிட்டுக்குத் தட்சிணை கொடுக்கணும் இல்லையா? நாங்களும் எதோ 'சாஸ்த்திரத்துக்கு'த் தட்சணை கொடுப்போம். உடனே அதை அப்படியே எங்ககிட்டே திருப்பித் தந்து, கோயிலுக்குப் போகும்போது அங்கெ உண்டியல்லே சேர்த்துறச் சொல்லிருவாங்க. சாமிக்கும் ஒரு வருமானம் ஆச்சு:-))
இவ்வளோ ஆச்சாரமா இருக்காங்களே, அப்ப மடிசஞ்சியா இருப்பாங்கன்னு நினைச்சுறக்கூடாது. நல்ல நகைச்சுவையோடு ஜாலியாப் பேசுவாங்க. வயசு,காசு பணம், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாம எல்லாத் தரப்புலேயும் நண்பர்கள் இருக்காங்க.அவுங்களோட ஒரு மருமகள்கூட இங்கத்துப் பொண்ணுதான்.
இப்ப எதுக்கு மாஞ்சுமாஞ்சு கஸ்தூரியைப் பத்திச் சொல்றேனா? அவுங்க இந்த ஊரைவிட்டு வேற ஊருக்குப்போறாங்க. எங்களுக்குத்தான் கொஞ்சம் கை உடைஞ்சதுபோல இருக்கப்போகுது.
பட்டுப்புடவைகள் எல்லாம் திரும்ப பீரோவுக்குள்ளே அடங்கிரும். நீங்களே சொல்லுங்க, ஒரு நல்ல துணிமணி,நகைநட்டு போட்டோமுன்னு வச்சுக்குங்க. அதை நம்ம நண்பர்கள் நாலுபேர் பார்த்து, அட... நல்லா இருக்கே(????)எங்கே வாங்குனது? எத்தனை பவுன்?ன்னு கேட்டு விசாரிச்சாத்தானே நமக்கும் ஒரு திருப்தி இருக்கும்?:-)))))
அதுக்குச் சான்ஸே இல்லேன்னா எப்படிங்க? பட்டுப் புடவை கட்டிக்கிட்டு சூப்பர் மார்கெட்டுக்காப் போறது?
அடுத்த வாரம்: மீனாட்சியம்மா
நன்றி: தமிழோவியம்
Friday, September 29, 2006
எவ்ரிடே மனிதர்கள் -18 கஸ்தூரி
Posted by
துளசி கோபால்
at
9/29/2006 08:51:00 AM
38
comments
Wednesday, September 27, 2006
ரெடிமேட் பகுதி 15

இருவத்திரண்டு விதமான தைய்யல். விதவிதமா தைக்கலேன்னாலும் அது என்னதான் செய்யுதுன்னு பார்த்துறணுமில்லையா?
ஒண்ணொண்ணா ஆரம்பிச்சேன். பூ, பட்டர்ப்ளை. முக்கோணம், பாம்பு ன்னுஒரே துணியிலே கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்னு ஓட்டுனதுலே என்ன டிசைன், எப்படி இருக்குங்கறது புரிஞ்சுபோச்சு. நல்லா இருக்குன்ற கணக்குலே பார்த்தா ஒரு பத்துதான் தேறும். ஜெகஜ்ஜால கில்லாடிங்க.ஒரேதா 22ன்னு கணக்கு காமிச்சிட்டாங்க.
இதுலே ரெட்டை ஊசிக்கூட இருக்கு. அதைப் போட்டுத் தைச்சா ரெண்டு வெவ்வேற கலர் நூல்களைச் சேர்த்துஒரே சமயத்துலே டிஸைன் செஞ்சுறலாம். நமக்குத் தெரிஞ்ச ஒரே கலர்ன்னு கறுப்பு & சிகப்பைச் சேர்த்துத் தைச்சுப் பார்த்தேன். அட்டகாசமா இருந்துச்சுன்னு சொல்லமுடியாது. பரவாயில்லாம இருந்துச்சு. இவ்வளவு 'நுணுக்கங்கள்' படிச்சபிறகு ச்சும்மா இருக்கலாமோ?
மேசை விரிப்புகள் ஸ்பெஷலிஸ்ட் ஆயிட்டேன். மகள் உடுப்புலே தேவை இருக்கோ இல்லியோ, ஒரு வரிசை டிஸைன் கட்டாயமாப் போச்சு. மகளும் மூணு வயசானதும் ப்ளே ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சாள். குழந்தையைக் பள்ளிக்கூடம் கொண்டு போக, கொண்டுவர ன்னு யாராவது ஒருத்தர் பாக்டரியிலே இருந்து உதவிக்கு வந்துருவாங்க.
இந்த ராஜபோக வாழ்க்கையை விட்டுட்டு இங்கே நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம். ராஜபோகம் 'மிஸ்'ஸாகப் போகுதுன்னு அப்பத் தெரியலை. அங்கிருந்து அனுப்புன வீட்டுச்சாமான்களும் வந்து சேர்ந்துச்சு. மெஷினை மறுபடி ஸ்டேண்டுலேபொருத்தித் தைக்கலாமுன்னு பார்த்தா............ அது சுத்தவே மாட்டேங்குது. இங்கே ரிப்பேர் செய்வாங்களான்னும் தெரியலை. ஒருவழியா விசாரிச்சு, அங்கே கொண்டு போனோம். சாமான்கள் இடம் மாறும்போது கீழே போட்டுருக்காங்கபோல. ரிப்பேர் செஞ்சுறலாம். அதுக்கு இவ்வளோ செலவாகுமுன்னு சொன்னாங்க பாருங்க, நான் மயக்கம் போட்டுவிழாத குறை. இந்த மெஷினோட விலையிலே சரி பாதி. இங்கே எல்லாத்துக்கும் இப்படி கொள்ளை விலைன்றது அப்பத்தான் உறைக்குது. சம்பளமும் அதிகமாத்தானே இருக்கு. அப்ப 'தானிக்கும் தீனிக்கும் சரி போயிந்தி'!!!
பைத்தியம் விலக வைத்தியம் செய்யணும்தானே? அப்பச் செலவைப் பத்தி யோசிக்க முடியுமா? ரெண்டு வாரத்துலே ரிப்பேர் செஞ்சது வீட்டுக்கு வந்துருச்சு. தைக்குதுதான். ஆனா.......... என்னவோ சரியில்லைன்னு ஒரு தோணல். ரொம்பக் கவலைப்பட நேரம் இல்லை. வீட்டுவேலைக்கு உதவின்னு யாரும் இல்லை. எல்லாம் நாமே. 'சம்மர்'ன்னு நாடே கொண்டாடுது,நமக்கோ பயங்கரக்குளிர். நாப்பதுலே இருந்து 18க்கு வந்திருக்கோம். கைகால் விறைச்சுப்போகுது, ஹீட்டருக்கு முன்னாலேயே உக்கார்ந்திருக்கோம். இதுலே தைய்யலாவது மண்ணாவது.
குழந்தைக்கு நாலரை வயசு. இங்கெ அஞ்சாவது பிறந்த நாள் அன்னிக்கே பள்ளிக்கூடத்துலே சேர்த்துறலாம். இன்னும் ஆறுமாசம் இருக்கே. அதுவரை கிண்டர்கார்டன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலாம்னு அதைப் பத்தி விசாரிச்சோம்.பள்ளிக்கூடத்துலே இடம் இல்லையாம். ஆனால் தாயோ தகப்பனோ கூடவே இருந்துக்கறதா இருந்தால் சேர்த்துப்பாங்களாம்.வேக்கன்ஸி வரும்போது ( அஞ்சு வயசு வரவர ஒவ்வொரு புள்ளையா ப்ரைமரி ஸ்கூலுக்குப் போகுமுல்லெ) நம்மபிள்ளைக்கு இடம் கிடைச்சா, அப்பா அம்மா கொண்டு வந்து விட்டுட்டுப் போலாமாம்.
பள்ளிக்கூடம் அவ்வளோ கிட்டக்க இல்லை. கார்லே போனால் ஒரு ஆறு நிமிஷம் ஆகும். இருக்கறதோ ஒரே ஒரு கார். அதை இவர் வேலைக்கு எடுத்துக்கிட்டுப் போயிருவார்.மகளொ ரெண்டுங்கெட்டான். அவளாலே அவ்வளோதூரம் நடக்கமுடியாது. என்னாலெ அவளைத் தூக்கிக்கிட்டும் போக முடியாது. காலையிலே இவரோடு கிளம்பிறலாமுன்னா, எட்டுமணிக்கே எங்களை பள்ளிக்கூட வாசலில் இறக்கிட்டுப் போயிட்டார். ஒம்போது மணி பள்ளிக்கூடத்துக்கு பூட்டுன கதவுக்கு முன்னாலெ குளிருலே நடுங்கிக்கிட்டே உக்கார்ந்திருக்கணும். ஒரே ஒரு நாள் அனுபவமே வாழ்க்கையை வெறுக்கும்படி செஞ்சுருச்சு. 11.30க்கு பள்ளிக்கூடம் முடிஞ்சு அங்கங்கே நின்னு நிதானமா , ரோடு ஓரம் போட்டுவச்சிருக்கற பெஞ்சுங்களை ஒண்ணுவிடாம உக்கார்ந்து பார்த்து வீட்டுக்கு வந்து சேரும்போது ஒரு மணி ஆகி இருக்கும்.
அங்கங்கே கடைகளுக்குள்ளெ நுழைஞ்சு எதாவது புதுசா பொம்மை, விளையாட்டுச் சாமான்னு வாங்கிக் கொடுக்கணும்.ஒரு பேக்கரியிலே கேக்குத் துண்டம், லாமிங்டன்னு தீனி. நடக்க வைக்கக் கொடுக்கும் பக்ஷீஸ். காலையில் பள்ளிக்கூடம்போக டாக்ஸி. ("மகளொட கல்வி முக்கியம். டாக்ஸி செலவைப் பார்க்காதே" இது அப்பா!)
இது ஒரு பக்கமுன்னா..... பள்ளிக்கூடத்துலே இன்னொரு கதை. இந்தமாதிரி அம்மாங்க கூடவே இருக்காங்க பாருங்க, அவுங்களுக்குஒரு பேர் இருக்கு. மதர் ஹெல்ப்பர். ரெகுலரா என்ரோல் செஞ்ச பிள்ளைகளுடைய அம்மாக்களும் தினம் ஒருத்தர்மதர் ஹெல்ப்பரா வரணும். அதுக்கு ரோஸ்ட்டர் போட்டு வச்சுருவாங்க. என்னைமாதிரி இடமில்லாத பிள்ளைகளோட அம்மாக்கள் தினமுமே மதர் ஹெல்ப்பரா அங்கெ நிக்கணும். டீச்சருங்க எல்லாம் ராணிகள். நாங்கெல்லாம் சேவகம்.அதுலே என் கேட்டகரி அடியாருக்கு அடியா(ள்)ர்.
இது அரசாங்கம் நடத்துற பாலர்பள்ளி. இலவசம். ஆனா வாரக் கடைசியில் பிள்ளைங்க ஒவ்வொருத்தரா வரிசையில்போய் டீச்சருக்கு முதுகைக் காமிச்சு நிக்கறாங்க. டீச்சர் ஒரு ப்ரவுன் கலர் என்வலப்பைச் சட்டையின் முதுகில் பின் போட்டுக் குத்தி வைக்கிறாங்க. அதுலெ நாம் டொனேஷன் எதாவது போட்டுத் திங்கக்கிழமை கொண்டுபோய்க் கொடுக்கணும். நிர்பந்தம் இல்லை. ஆனா எல்லாரும் கொடுப்போம். அதெ போல தினமும் எதாவது ரெண்டு பழங்கள்ஆரஞ்சோ, ஆப்பிளோ கொண்டு போகணும். அங்கெ ஒரு கூடை இருக்கும். அதுலெ போட்டுறணும்.பத்தரை மணிக்கு அந்தப் பழங்களையெல்லாம் மதர் ஹெல்ப்பர் கழுவித் துண்டங்கள் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் விநியோகிக்கணும். இது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. பசங்க வயத்துக்குள்ளே பழங்கள் போக நல்ல ஏற்பாடு. ஒண்ணைப் பார்த்து இன்னொண்னும் கீழே வீசாமத் தின்னுதே, அதுவரைக்கும் நல்லதுதானே?
ஒரு அறையிலே தரையிலே இருக்கும் விளையாட்டுச் சாமானையெல்லாம் சேகரிச்சு அந்தந்த இடத்துலே ஒழுங்காஅடுக்கிவச்சுட்டுத் தலை நிமிரும்போது இன்னொரு பிள்ளை ஓடிவந்து எல்லாத்தையும் டமடமன்னு தள்ளி வீசி எறிஞ்சுட்டுப் போகும். அதையெல்லாம் மறுபடி அடுக்கணும். நாம அடுக்கி முடிச்சது எப்படித்தான் இந்தப் புள்ளைகளுக்குத் தெரியுதோ,இன்னொண்ணு ஓடிவரும் அதையெல்லாம் தள்ளறதுக்குன்னே. பல்லைக் கடிச்சுக்கிட்டு இதையெல்லாம்கூடச் செஞ்சுறலாம்,ஆனா முகத்தை புன்சிரிப்பா வச்சுக்கிட்டே இருக்கணுமே அதுதான் படா பேஜார். இன்னொருத்தர் பிள்ளைங்ககிட்டே கோபம் காட்ட முடியுமா?
உள்ளெ இந்த கலாட்டான்னா, வெளியே மணல் போட்டு வச்சுருக்கற இடத்துலே விளையாடற பிள்ளைங்களுக்குத் தலை, மூஞ்சு வாயெல்லாம் மணல். வெள்ளைக்காரப் பசங்களுக்கு முடி கொஞ்சம் மெல்லிசா இருக்கு. அவ்வளோ அடர்த்திஇல்லை. ச்சின்னமுடி வேற. மணல் பட்டாலும் தலையை ஒரு உதறு உதறுனா முக்காவாசி கீழே விழுந்துரும்.நம்ம பசங்களுக்கு திக்கான முடியிலெ மணல் மாட்டிக்கிட்டு ஒரே நறநற. தினம் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டுனதுலேமுடி சரியாக் காயாம ஜுரம், மூக்கு ஒழுகறது, இருமல்னு அது ஒரு கஷ்டம். இந்த அதிகப்படி வேலைகளாலெ நானே துவண்டு போயிட்டேன்.
ரெண்டு வாரம் இப்படியே போச்சு. ரெண்டாவது வாரக் கடைசி நாளில் ஒரு பையன் ( பேர் ஜோஷுவா) மகள் தலையிலே மணலைக் கொட்டுனதுமில்லாமல் அவளை அடிச்சுட்டான். வாழ்க்கையிலே முதல் அடி. அதிர்ந்து போனது மகள் மட்டுமில்லை,நானும்தான். மகளுக்கு அழுகையை நிறுத்தவே முடியலை. சமாதானப் படுத்தியும் தேம்பல் நிற்கவே இல்லை. வீட்டுக்குவந்தும் அழுகைதான், 'பள்ளிக்கூடம் வேணாம் பள்ளிக்கூடம் வேணாம்'னு. மறுநாள் காய்ச்சல் தீ மாதிரி காயுது. இங்கே வீக் எண்டுலே டாக்டர்களைப் பார்க்க முடியாது. எமர்ஜன்ஸி க்ளினிக்னு ஒண்ணு வெள்ளிக்கிழமை சாயந்திரம் அஞ்சு முதல் திங்கக்கிழமை காலை 9 வரை திறந்திருக்கும். மொத்த ஊருக்கும் இது ஒண்ணுதான். அங்கே போனா மூணுநாலுமணி நேரம் காத்திருப்பு எல்லாம் சர்வ சாதாரணம். அங்கே போய் அரைநாள் இருந்து மருந்து வாங்கிக்கிட்டு வந்தோம். அது என்னமோ தெரிலைங்க, இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் வீக் எண்டுதான் உடம்பு சுகமில்லாப் போகுது. ஆரம்பக் காலங்களில் ஏறக்குறைய ஒவ்வொரு வீக் எண்டும் இங்கே போயிருக்கோமுன்னா பாருங்க.
திங்கள் கிழமை வந்துச்சு. நாங்க பள்ளிக்கூடத்துக்குப் போகலை. இன்னும் நாலு மாசத்துலே ரெகுலர் ஸ்கூலுக்கேப் போனாப் போதுமுன்னு முடிவாச்சு. புதன்கிழமை வாக்குலெ பள்ளிக்கூடத்துலே இருந்து போன் போட்டுக் கேட்டாங்க,ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரலைன்னு. குழந்தைக்குப் பிடிக்கலை. இனிமே வரமாட்டோமுன்னு சொன்னேன். நாங்க பார்த்துக்கறொம், நீங்க கூடவே இருக்க வேணாமுன்னு சொன்னாங்கதான். ஆனா ......... எனக்கு விருப்பம் இல்லை.
இந்த நாட்டுலே பெத்தவங்களே குழந்தையை அடிக்க உரிமை இல்லை. அது ஒரு க்ரைம். மத்தவங்கஅடிக்கலாமா? ஊரார்கிட்டே அடி வாங்கவா பிள்ளையைப் பெத்துருக்கோம்?
இப்ப எனக்கு இருக்கற மெச்சூரிட்டி(???) அப்ப இல்லேன்றதும் ஒரு காரணம்.
Posted by
துளசி கோபால்
at
9/27/2006 09:58:00 AM
26
comments
Sunday, September 24, 2006
ஆண்டு நிறைவு(கள்)



இங்கே நம்ம ஊர்லே இருக்கற கடைகள், சூப்பர் மார்கெட் உள்பட எப்பப் பார்த்தாலும்' Birthday Sale'ன்னு போட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆன்னா ஊன்னா இவுங்களுக்கு 'பர்த் டே' வந்துருமே. 'உண்மையான சேல் தானா?'ன்னு பார்க்கணும்னு சொல்வேன்.
தராளப் பிரபுங்களைப்போல 99 செண்ட்ன்னு விலை போட்டு வச்சுருப்பாங்க. ஒரு செண்டு காசையெல்லாம் தூக்கியே பலவருஷமாச்சு. அஞ்சு செண்ட் தான் ஆரம்பம். இப்ப அதையும் தூக்கியாச்சு. தொலையட்டுமுன்னு பார்த்தா....... 'இங்கத்துக் காசெல்லாம் கனம் கூடி இருக்கு.பர்ஸ்லே வச்சாத் தூக்கிக்கிட்டுப் போகமுடியலை'ன்னு சமீபத்துலேதான் கண்டு பிடிச்சாங்க(ளாம்)
தூக்கு அதையும்னு சொல்லியாச்சு. அம்பது, இருவது, பத்து காசுகள் இதையெல்லாம் வேற ரூபத்துலே கனம் குறைச்சுப் பண்ணியாச்சு. பழைய காசுகள் அடுத்த மாசத்தோட அம்பேல். சீக்கிரம் அதையெல்லாம்செலவு பண்ணி (தொலைச்சு)ருங்கன்னு டிவியிலே வந்து தினம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்?........ஆங்..... 99 செண்ட். மக்களுக்கும் தெரியும், கடைக்காரர்களுக்கும் தெரியும் எல்லாத்தையும் ஸ்விஸ் ரவுண்டப் செஞ்சுருவாங்கன்னு. இன்னும் எதுக்காக 1.94, 3.36 , 7.98ன்னு பிலிம் காட்டுறாங்க?
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இப்ப போஸ்ட் ஆபீஸுலே ஒரு தகராறு. உள்ளூர் மெயிலுக்கு 45 காசுஸ்டாம்ப். பத்து ஸ்டாம்ப் இருக்கற புக் வாங்கிட்டோமுன்னா வேலை முடிஞ்சது. வேணுங்கும்போது ஒண்ணொண்ணா எடுத்துக்கலாம். சரிப்பா, இப்ப ஒரே ஒரு லெட்டர் அனுப்பணுமுன்னா 45 காசு ஸ்டாம்பை எப்படி வாங்குறது? அதான் அஞ்சு காசு இப்ப புழக்கத்தில் இல்லையே? குறைஞ்சது ரெண்டு ஸ்டாம்பு வாங்கிக்கணும்.ஆனா எனக்கு ஒண்ணு போதும். அப்ப எப்படி?
50 காசு நான் கொடுக்கணுமா? அஞ்சு காசு நான் ஏன் கூடுதலாக் கொடுக்கணும்? நேர்த்திக்கடனா? இல்லே 45 காசு ஸ்டாம்புக்கு 40 காசு வாங்கிக்குவாங்களா? அஞ்சு காசு கம்மியா ஏன் வாங்கிக்கணும்? கணக்குலே உதைக்காதா?
தலையைப் பிச்சுக்கிட்டு இருக்கு அரசாங்கமும் தபால்துறையும்:-)
அவுங்க ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை 'பர்த் டே'யைப் பார்க்கலாம்.
வருசத்துக்கொரு தடவை எத்தனையோ விஷயம் வருது போகுது. வாலாயமா வர்றதுன்றதாலே அதை அப்படியேவிட்டுற முடியுதா? இந்தப் பதிவுலே போட்டுருக்கற படம்கூட இப்படி வருசாவருசம் வந்து போறதுதான். ஆனா ஒவ்வொரு வருசமும் ஒரு அழகு, ஒரு அனுபவம்,ஒரு வளர்ச்சி. இல்லீங்களா?
கடைகண்ணிகளுக்கு மட்டும்தான் பொறந்தநாள் வருமா? மனுஷாளுக்கு வராதா? மத்த ஜீவராசிகளுக்கு வராதா? இல்லே பதிவுகளுக்குத்தான் வராதா?
வருமுல்லே? அப்படி இன்னிக்கு (எனக்குத் தெரிஞ்சவரை)ஒரு பதிவுக்கு பிறந்தநாள் வந்துருக்கு. ரெண்டு வயசு முடிஞ்சுருக்கு. தட்டுத்தடுமாறி நடைபழகிக்கிட்டு இருக்கும் இதுக்கு உங்கள் வழக்கமான ஆதரவு எப்பவும் வேணும்.நிறைய நண்பர்களையும், தம்பி தங்கைகளையும், ஒரு அண்ணனையும் கூட இதுமூலமா சம்பாரிச்சு இருக்கேன்னா பாருங்களேன்.
அதெப்படி 'டாண்'னு இதெல்லாம் நினைவு இருக்கு?
ஏன் இல்லாம? இன்னிக்குத்தானே என் மாமியார் 50+ வருசங்களுக்கு முன்னே வெளியிட்ட ஒரு பதிவின் பிறந்தநாளும் வருது.
இந்தப் பதிவை என் இனிய மறுபாதிக்கு சமர்ப்பிகின்றேன்.
அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
Posted by
துளசி கோபால்
at
9/24/2006 11:31:00 AM
54
comments
