பொதுமக்களின் ( அதாவது ஒருத்தர்) வேண்டுகோளை முன்னிட்டு இந்த வாரம்
'தலைவர் வாரம்'!!!! நம்ம வீட்டுலே பாதி ( இதுவும் ஒருத்தர்தான்)ஆளுங்க தலைவரோட ரசிகர்கள்.
(பொது மக்களுக்கு 'சிங்குலர்' என்ன? )
கிடைத்த படங்களின் விவரங்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
மதுரை வீரன்
கலங்கரை விளக்கம்
மன்னாதி மன்னன்
தேடிவந்த மாப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
நேத்துப் பார்த்தது அலிபாபா.
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். திறந்திடு சிஸேம்!!!!!'
மாடர்ன் தியேட்டர்ஸ். வந்த வருஷம் 1955. கவனிங்க, அரை நூற்றாண்டுக்கு
முன்னே இருந்த வசதிங்களை வச்சு நல்லாவே எடுத்திருக்காங்க. 'தலையில்லாத முண்டம்'கூட வருது.
இதுலே நடிச்சப்பவே எம்ஜியாருக்கு 38 வயசு!!!! கூடவே அவரோட அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியும் அண்ணனாவே
வரார்.
பானுமதியம்மா நல்லா நடிச்சிருக்காங்க. மார்ஜியானா ஒரு ஆட்டக்காரி. துணையா ட்ரம் அடிக்கற
அன்னாடங்காய்ச்சிக்குப் பேரு 'தவுலத்'!!!
நடனத்துக்குன்னு தனி ஆளுங்க வேற. ஒரு நடனம் சாயி, சுப்புலட்சுமி சகோதரிகள். 'நாங்க ஆடுவதும் பாடுவதும்
காசுக்கு, சிலர் ஆளைக்குல்லாப் போடுவதும் காசுக்கு'
கதாநாயகன் எவ்வளவு 'வெள்ளந்தி'பாருங்க! பாட்டுலேயே 'க்ளியரா' இருக்கு எதுக்கு அந்த விருந்துன்னு!! ஹூம்ம்ம்..
இன்னொரு நடனம், சொன்னா நம்பணும், நம்ம 'வஹீதா ரெஹ்மான்'( சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க
தங்கக்கையினாலே காசை அள்ளி வீசுங்க)
தமாசு நடிகருக்கும் டூயட் இருக்கு. 'சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனாக் கல்கண்டே' தவுலத்துக்கு ஜோடி புல்புல்!
சாரங்கபாணியும் எம்.என், ராஜமும் பாடி ஆடறாங்க.
தங்கவேலுக்கும் ஒரு பாட்டு. 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
ஜல்ஸா செய்யடா' (கண்டசாலாவின் குரலில்)
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
மாசில்லா உண்மைக் காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே
என்னை அன்பினாலே ஆள வந்த அழகுபூபதி
உன்னைவிட மாட்டேன் உண்மையில் நானே
என் நாட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
இதெல்லாம் பாடுனதும் நம்ம பானுமதியம்மாதான்!
இசை யாருன்னா, தட்சிணாமூர்த்தி. இசைகுழு நல்லா அடக்கி வாசிச்சிருக்கு.
பாட்டுங்க எல்லாம் நல்லா இருக்கறது மட்டுமில்லை, இன்னும் மனசுலே நல்லாவே நினைவில் இருக்குது.
பாடலோட வரிகள் தெள்ளத் தெளிவா காதுலே விழுது. மனசுலே நின்னதுக்கு அதுவும் காரணமோ? கூடவே
சேர்ந்து பாடிக்கிட்டு ஜோராப் படம் பார்த்தோம். நம்ம பூனைங்க தான் மிரண்டு போச்சுங்க. அம்மாவும் அப்பாவும்
நல்லாத்தானே இருந்தாங்க, திடீர்னு என்ன ஆச்சுன்னு! பாடல்வரிகளும் கதையோடு சம்பந்தப்பட்டதுதான் விசேஷம்.
மறக்காம சொல்லவேண்டியது பி.எஸ். வீரப்பாவின் குரல்!!! நல்ல அழுத்தமான உச்சரிப்பு. அழகாக வசனம்
பேசறார், கூடவே அந்தச் சிரிப்பு ஹா ஹா ஹா ஹா.......
படம் ஆரம்பிச்சப்ப, வசனத்துலே நான் கவனிச்சது, ரெண்டு மூணு இடத்துலே 'கடவுள்'ன்ற வார்த்தை. அட! பரவாயில்லையே,
அந்தக் காலத்துலே கூட கவனமா இருந்திருக்காங்களே! கதை நடக்கற ஊரு 'பாக்தாத்'ஆச்சே. அவுங்க 'அல்லா'ன்ற
பேரைத்தானே சொல்லியிருக்கணும்?
பத்தே நிமிஷத்துலே 'கவனிச்சுட்டாங்க' போல. ஊருக்கேத்த பேரும் வந்துருச்சு!!!
இது கலர்ப் படம். கேவா கலராம்! ப்ரவுனும், மரூனும் தூக்கலா இருந்துச்சு.
மொத்தத்துலே ரசிக்கவேண்டிய படம்தான்!!!! ஆங்.. அந்த மாளிகை இருக்கற இடம் 'ஒஹேனக்கல்'லா?
அட்டகாசமா இருக்கு!
'அண்டா கா கஸம், அபுல் கா ஹூக்கும். மூடிடு சிஸேம்!!!!!'
ஒரு நாளைக்கு மருதவீரனோடு வாரேன்.
Wednesday, August 03, 2005
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்!!!
Posted by
துளசி கோபால்
at
8/03/2005 11:04:00 AM
28
comments
Tuesday, August 02, 2005
உங்க அம்மாவும் எங்க அம்மாவும்!!!
அம்மான்னாவே தெய்வம்தான்.
அதுலே என்ன சந்தேகம்?
ஆனா உயர்ந்த இடத்துலே இருக்கறது
உங்கம்மாவா? இல்லை எங்கம்மாவா?
ச்சீச்சீ, இது என்ன பைத்தியமாட்டம் கேக்கறே? அவுங்கவுங்களுக்கு அவுங்கவுங்க அம்மா
ஒசத்தியில்லையா?
ஓ. அப்படியா? அப்ப அம்மான்னா அவுங்க புள்ளீங்களுக்கு நல்லதுதானே செய்யணும்?
ஆமா. இப்ப செய்யறதுலே எது கெட்டதுன்னு சொல்லறே?
அவுங்களுக்குக் காரியம் ஆகணுமுன்னா மட்டும் நல்லது செய்யறது. மத்த சமயத்துலே யாரையும் கண்டுக்காம
இருக்கறது. இதுமட்டும் நல்லதா?
'அம்மா'ங்களுக்கு இதெல்லாம் சகஜமாச்சே. இதையா ஒரு பெரிய தப்புன்னு சொல்ல வந்துட்டே?
இதெல்லாம் தப்பு இல்லைன்னு ஆயிருச்சா இப்பெல்லாம்?
ஆமாம். எலக்ஷன் வருதுல்லே. அம்மா தேதியைச் சொல்லாம மூடு மந்திரமா கொஞ்சநாளா இருந்துட்டு
இப்ப பட்டுன்னு தேங்காய் ஒடைச்சாப்புலே சொல்லிட்டாங்க செப்டம்பர் 17க்கு எல்லோரும் ஓட்டுப் போடணுமுன்னு!
அதுசரி. உனக்கு விஷயம் தெரியுமா? உலகத்துலே இருக்கற 'பவர் ஃபுல் பெண்மணிகள் வரிசையிலே 24வது
இடத்துக்குப் போயிட்டாங்க.
என்ன? போன வருசம் 43 வது இடத்துலே இருந்தவுங்களா? 19 படியை ஒரே தாண்டா தாண்டிட்டாங்க. உள்ளூர்
ஆளுங்க என்ன சொல்றாங்களாம் இதைப் பத்தி?
அம்மாவைப் பத்தி நல்லாத்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அடுத்தவங்க கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா
இருக்க மாட்டாங்க நம்ம அம்மா. பரோபகாரம் ஜாஸ்தி. ஆனா என்ன உதவிக்கரம் நீட்டிக்கிட்டே இருக்கறதாலே
நம்ம வீட்டுலே கஷ்டம் இருக்கறதைக் கூட கவனிக்க நேரமில்லாம இருக்காங்க.
அதுவும் சரிதான். அவ்வளவு பெரிய நாடான ஆஸ்தராலியாவே 'தம்பா' கப்பல் ஆளுங்களை உள்ளே வரவிடாம
பிடிவாதமா நின்னப்ப, எல்லோரையும் இங்கே எடுத்துக்கிட்டு வரிகட்டுற ஆளுங்களோட சுமையை அதிகரிச்சது
இந்த அம்மான்ற வருத்தம் இன்னும் பலபேருக்கு இருக்குது.
தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கறதுலேமட்டும் ரெண்டு அம்மாவுக்கும் வித்தியாசம் கொஞ்சம்கூட இல்லே,
இல்ல?
ஏன்? வித்தியாசம் இருக்கே. அவுங்க தமிழிலே சொல்வாங்க. நம்ம அம்மா இங்கிலிபீஸூ!!!
இப்பப் புதுசா என்ன வாக்குறுதி கொடுத்தாங்க?
எல்லாம் 'ஸ்டூடண்ட்ஸ் லோன்' இருக்குலே அதுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யப்போறாங்களாம். அப்பத்தான்
படிச்சு முடிச்சவங்க இங்கேயே இருந்து வேலை செய்வாங்களாம். இந்தத் தள்ளுபடி இவுங்களுக்கு மட்டும்தானாம்.
அப்படியா? இவுங்க ஓட்டுங்களும் அம்மாவுக்குத்தான்னு சொல்லு!
அப்ப எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கதானா?
பின்னே அரசியல்ன்னா என்னன்னு நினைச்சுக்கிட்டே?
பின் குறிப்பு: இதுலே எங்கம்மா பேரு ஹெலன் க்ளார்க். உங்கம்மா பேரு........ நீங்களே போட்டுக்குங்க.
Posted by
துளசி கோபால்
at
8/02/2005 01:10:00 PM
4
comments
Monday, August 01, 2005
வேகம் வேகம் வேகம்!!!!
இந்த மீள்பதிவின் காரணம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. காவல்துறையினருக்கும்,
பிரதமரின் காரோட்டிக்கும் என்ன ஆகும் என்பதை வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் எழுதுவேன். இங்கெயும் ஒரு வழக்கு நீதிமன்றம்
வர ஒரு வருடம் ஆகிவிட்டது பாருங்கள்!!
ஒரு வேடிக்கை/உண்மை நிகழ்ச்சி
***********************
இந்த நாட்டுப் பிரதம மந்திரியின் 'கார்' வேகக் கட்டுப்பாட்டை மீறி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் தேசிய தொலைக்காட்சி களில் தோன்றி, அப்படி அந்த'கார்' மற்றும்
காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக் கார்களும் கடும் வேகத்தில் (குறிப்பிட்ட இடத்தில் வேகம் 50 கிலோ மீட்டர்)
அதாவது 140 கிலோ மீட்டரில் சென்றதாகவும் சொல்லியிருக்கின்றனர்.
இங்கே தெற்குத்தீவைச் சேர்ந்த 'டிமரு'என்னுமிடத்திலுள்ள விமான நிலையத்திலிருந்து போகவேண்டிய
விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரதம மந்திரி 'கிறைஸ்ட் சர்ச்' என்னும் ஊருக்கு வந்து, அங்கிருந்து
புறப்படும் விமானத்தைப் பிடிப்பதற்காக வேகக் கட்டுப்பாட்டை மீறி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டு நாளாக, ரேடியோவிலும், தொலைக்காட்சிகளிலும் இதேதான். மக்களுக்கு ஒரு நீதி, மந்திரிக்கு
ஒரு நீதியா?
உடனே, ஒரு இந்திய நாட்டைச் சேர்ந்த என் மனக்கண்ணில் விரிந்த காட்சி இது.
நம் இந்திய நாட்டில் இது போல நடந்திருந்தால்............
1. யாரும் 'கண்ணால் கண்ட சாட்சி'என்று முன் வந்திருக்க மாட்டார்கள். அப்படி யாரேனும் கூறும்
பட்சத்தில், காவல்துறையே அவர்களைப் பயமுறுத்தி, அடித்து நொறுக்கி இருக்கும்.வாயைத் திறக்க முடியுமா?
2. பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 'சாட்சிகளை' இல்லாமல் செய்திருப்பார்கள். இன்னேரம்
சாட்சிகள் 'மேலே' போயிருப்பார்கள். சாட்சிகளின் குடும்பம் சின்னாபின்னமாயிருக்கும்.
3. 'டிமரு' விமானம் ரத்து செய்யப்படாது. விமானம் இல்லாவிட்டால் என்ன ? ஹெலிகாப்ட்டர் இல்லையா ?
4. 'கிறைஸ்ட் சர்ச்' விமானத்தைப் பிடிக்க விரைவானேன்? பிரதமர் வரும்வரை விமானம் காத்திருக்காதா, என்ன?
5.முதலாவதாக அரசாங்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதையெல்லாம் காண்பிக்குமா? கட்சித்தொண்டர்கள் இந்த
அக்கிரமத்தை சகிப்பார்களா? இன்னேரம் நிகழ்ச்சி வழங்கியவர் கதி என்னாவாயிருக்கும்?
இப்படிப் பல...
PM's Speeding Motorcade Investigated
21/07/2004 07:29 AM
NewstalkZB
The speeding prime ministerial motorcade has been reported to the Police Complaints Authority.
Police National Headquarters has also appointed a Dunedin inspector to investigate the incident on Saturday, when Helen Clark's motorcade broke the speed limit while travelling from Waimate to reach a flight at Christchurch.
Eyewitnesses say the cars hurtled through several built up areas, after Miss Clark's flight to Wellington out of Timaru was cancelled.
Waimate mayor David Owen recalls Miss Clark and her team leaving the township very quickly.
The Police Commissioner's office says police have to balance competing duties, including security, urgency and the safety of road users.
Miss Clark needed get back to Wellington to attend the Bledisloe Cup match.
Tulsi Gopal
from New Zealand
Posted by
துளசி கோபால்
at
8/01/2005 11:54:00 AM
14
comments
