இப்படி ஓர் மாணவரா?
டீச்சர் ஆப்புரெய்ஸல் பண்ணுங்கன்னு 'தானே' வந்து மாட்டிக்கிட்டார். சொ.செ.சூ:-))) டீச்சரைப்பார்த்து ஓடிஒளியும் மாணவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருத்தரா? இரு, ஆப்பு வைக்கிறேன்னுட்டுக் கண்ணாடியை நல்லாத் தொடைச்சு காதுலே மாட்டிக்கிட்டு உக்கார்ந்தேன்.
அங்கங்கே பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடறாங்களாமே..... நெசமாவா? நாமும் அப்படி(யே) செஞ்சுறலாமுன்னா...... இந்த மனசாட்சி வேற
முன்னாலெ வந்து கும்மியடிக்குது. இது வேலைக்காகாதுன்னுட்டு , எங்கெடா அந்த மாதவிப் பந்தல்? எட்றா அதை..... பந்தலைப் பிரிச்சு மேய்ஞ்சுக் கந்தலாக்கிறலாமுன்னு நம்ம ஜிகேகிட்டே சொன்னேன்..... பூனைப் பயபுள்ளே பயங்கரமானவன். 'சட்'னு எடுத்துக் கொfடுத்துட்டான்.
மொத்தம் 102 பதிவுகள். 2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் பூராவுக்கும் ஒரே ஒரு பதிவு. (வெல்டன்) ஓம் நமோ நாராயணா,ஓம் நமோ வெங்கடேசான்னு சொல்லிக்கிட்டே பிள்ளையார் சுழி போடறார். எப்படி? பிள்ளையார்ன்னு லேபிள் கொடுத்து:-))))
பதினோரு மாச விரதம். ஆளையே காணோம். எந்தக் கைகேயி காட்டுக்கு அனுப்பினாளோ? மக்கள்ஸ் நிம்மதியா இருக்காங்க. ...
மறுபடி புள்ளையார்ன்னு லேபிள், கூடவே படம் ( நல்லாவே இருக்கு) சின்னதா ஒரு நாலைஞ்சுவரிப் பதிவு. கடவுள் வாழ்த்து?ம்ம்ம்ம். இருக்கட்டும்.
ஸ்டார்ட்டிங் ட்ரபுள் முடிஞ்சு வண்டியை எடுத்தாச்சுப்பா. ஒளவையாரையும் புள்ளையாரையும் கொஞ்சிட்டுக் கிளம்புன வண்டி நேராப்போய் நின்னது திருப்பதியில்.
குற்றம் கண்டுபிடிச்சு ஒரு குட்டு வைக்கலாமுன்னு படிச்சா..... எங்கே படிக்கிறது.?? கண்ணுலே குளம் கட்டி நிக்கும்போது என்னன்னு படிக்கிறது?
பொல்லாத மாணவர். டீச்சரை அழவச்ச வெங்காயம்:-)
பிரம்மோத்ஸவப் பதிவுகள் ஒம்போதும் நவரத்தினங்கள். படிக்கறதோட விட்டுறாம பார்த்து மகிழவும்ன்னு அட்டகாசமான படங்கள். ஒவ்வொண்ணும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லுது. எங்கிருந்து கிடைச்சதோன்னு ஆராயக்கூட மனம் வரலை. பேசாம இதையே காப்பியடிச்சு வச்சுக்கிட்டா ஆச்சு.
சாமி வாங்குன இடிகள் படிச்சுட்டு, என் மனசாட்சி என்னை இடிச்சதை எங்கெபோய் சொல்வேன்?
நாமும்தான் 'திருப்பதிக்குப் போய்வந்தேன் நாராயணா'ன்னு இருக்கோம். இவ்வளோ விஷயம் இருக்கா அங்கே கவனிக்கன்னு எனக்கே(!) வியப்பாச்சு
திருமலைக் கோயிலில் இனிப் பார்த்துவச்சுக்கணுமுன்னு குறிப்பெடுக்க வச்சுட்டாரு கோயில் பதிவுகளில். இப்பெல்லாம் நம்மூட்டுப் பெருமாளுக்கும் ஒரு 'தயாசிந்து' வச்சுவுடறதுதான்:-)
(அதுக்காக கோபாலின் தாடையில் தழும்பைத் தேடவேணாம்)
சாமியைப் பத்தி எழுத இவரைவிட்டா வேற ஆளு இல்லைன்னு நாம் சொல்லணுமாம்? என்ன ஒரு இது பாருங்க. நடைவேற அருமையா வந்து விளுது. அப்புறம் வேற வழி? சொல்லிட்டா ஆச்சு. கோயில்கோயிலாப் போய் நாமெல்லாம் சாமியார் ஆயிட்டா? அப்புறம் ப்ளொக் படிக்க ஆளுக்கு எங்கே போவதுன்னு ஒரு பயம் வந்துருச்சு போல.......
ஒரு பண்டிகை, நல்லநாளை விட்டு வைக்காமத் தீவுளிக் கொண்டாட்டம், கந்தசஷ்டி, பேய்த் திருவிழா, நன்றி சொல்லும்நாள்ன்னு இண்டோ அமெரிக்க நல்லெண்ணத் தூதரா ஆனதுமில்லாம, ச்சும்மா வந்து படிச்சுட்டுப்போற ஆளுகளுக்கு என்னதான் தெரியுமுன்னு பார்க்கப் பரிட்சை வச்சுட்டாருப்பா. எல்லாம் ராமாயணம், மகாபாரதம், திருத்தலங்கள்ன்னு தெரிஞ்ச( தா நாம் எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்) விஷயங்கள்தானாம்.
புதிர் போடறது ஒரு பக்கமுன்னா...... இந்த ஜெயஸ்ரீ? எல்லாத்துலேயும் பத்துக்குப் பத்துன்னு அடிச்சு ஆடறாங்க. டீச்சர்னு பேர் வச்சுக்கிட்டு, துப்பட்டாவைத் தேடிக்கிட்டு இருக்கேன். பின்னே? வெக்கக்கேட்டை மறைக்க முக்காடு வேணாமா?
2006லே வெறும் முப்பத்தியேழு பதிவுதானேன்னு உள்ளே வந்தவளை இப்படிச் சங்கிலி ( ப்ச்.... பொற் சங்கிலிப்பா) போட்டுக் கட்டி வச்சதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? மத்தவேலைகள் எல்லாம் அப்படியப்படியே நின்னு போச்சு.
முழுக்க நனைஞ்சாச்சு...மிச்சம் மீதிகளையும் பார்த்துட்டே போகலாமுன்னு போனவருசத்துக்குள்ளே போனேன்....................
பெருமாளுக்கே பேதம் இல்லே...அப்புறம் வெறும் ஆளான நமக்கு எதுக்கு சைவம் & வைஷ்ணவ பேதமுன்னு ஒரு உலுக்கு உலுக்கிட்டார். குலுக்குன்னா படிச்சீங்க? :-))))
ஆண்டாளம்மா ஓடி வருது. நாமும்கூடத்தான் ஓடுவோம். கொஞ்சமா நஞ்சமா? நூறு தடா சக்கரைப் பொங்கலாம், வெண்ணெயாம். கொலஸ்ட்ரால் ஏறப்போகுது.........
இதுலே சுயம்பாகமா ஒரு புதினாத் தொவையலாம். மனுசன்......நம்மையெல்லாம் எப்படி ஆலாப் பறக்க வைக்கிறார் பாருங்க. போற போக்குலே ஒரு சினிமா, பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம்னு கலந்துகட்டி ஆடிக்கிட்டு இருக்கும் கலக்கல் மாணவர் யாருன்னு தெரிஞ்சதா?
இந்தவருசத்துக்கு சமூகசேவை, கோயிலுக்குப்போனா காசு கொடுத்துச் சாமியைப் பார்க்காதே, உண்டியலில் காசு போடாதேன்னுக்கிட்டே 'மயில்'தூதுகள் வேற ஆரம்பமாயிருக்குபோல. ஆறுமுக சாமிக்கு, தீட்சதர்களுக்குன்னு மடல் வழியா சமாதான(மயில்)ப்புறான்னு இன்னோரு ஓட்டம் ........
கண்ணனைக் கட்டிப்போட்டாங்களாம். அதுக்குப் பழிவாங்கறதுபோல கண்ணபிரான் ரவிசங்கர் நம்மை எழுத்தாலேயே கட்டி வச்சுருக்கார் இங்கே.
நவநாகரிக விஞ்ஞான உலகத்தில் இருக்கற நமக்கு, ஒரேடியா ஆன்மீகம், ஆத்திகமுன்னு எடுத்துச் சொல்லவும் சிலர் வேண்டி இருக்காங்கதானே? ஒரு விசயத்தைத் தெரிஞ்சுக்கிட்டாத்தானே அது இருக்கா இல்லையான்னு ஆராயலாம். சங்க காலத்துத் தமிழில் இல்லாட்டி அங்கங்கே கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் எழுதி வச்சுருக்கறதைப்போல இருந்தா, படிக்கிறதோ
இல்லைப் புரிஞ்சுக்கிறதோ கஷ்டம்தான். இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கணுமுன்னா இந்தியக் கல்விமுறை மாதிரி உருப்போட்டுக் கத்துக்கோன்னு விடமுடியாது. காலம் மாறிகிட்டே வருது. விளையாட்டாக் கதை சொல்லிச் சொன்னாத்தான் கொஞ்சமாவது மனசுலே ஏறும்.
இந்தக் கதையின் மூலம் சொல்லி மனதில் ஏத்துறது உண்மைக்கும் புது முறையே இல்லை. பஞ்சதந்திரக் கதைகள் சொல்லிக்கொடுக்காத நீதிகளா?
கதை, பாட்டு. கலாட்டான்னு போனால்தான் படிக்கும்போது மட்டும் இனிக்காம பின்னாலே மனசில் ஊறவச்சுத் திங்கவும் முடியும்.
சாப்பாட்டு நேரம்வேற .....திங்கற எண்ணம் முன் வந்து நிற்குது.
போய்யா.போய் இன்னும் நல்லா ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் சொல்லவர்றதைச் சொல்லு. இருக்குடீ உனக்கு...........
Showing posts with label aappu. Show all posts
Showing posts with label aappu. Show all posts
Thursday, March 20, 2008
KRS-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்
Posted by
துளசி கோபால்
at
3/20/2008 02:20:00 PM
27
comments
Labels: aappu
Subscribe to:
Posts (Atom)
