Showing posts with label Udipi. Show all posts
Showing posts with label Udipi. Show all posts

Friday, May 07, 2010

சாவி கொடுக்க இப்படி ஒரு திருவிழா!!!!

ஸ்ரீ மாத்வர், தன்னுடைய சிஷ்யப்பிள்ளைகளில் எட்டுப்பேரை தனித்தனியாக மடங்கள் அமைச்சுக் கொள்கைகளையும் பக்தியையும் பரப்பச் சொன்னார். இந்த எட்டு மடாதிபதிகளும் உடுபி கிருஷ்ணனை முறைப்போட்டுக் கவனிச்சுக்கணுமுன்னும் சொல்லி வச்சுருந்தார். அப்போவெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு மடம் பொறுப்பெடுத்துப் பூஜைகளைச் செய்யணும் மற்ற தேவைகளையும் பார்த்துக்கணும். எதாவது ஆக்கப்பூர்வமாச் செய்யலாமுன்னா ரெண்டு மாசம்தான் என்றது ரொம்பச் சின்னது என்றதால் நம்ம வாதிராஜர் இந்த ரெண்டு மாசத்தை, ரெண்டு வருசமா மாத்தி அமைச்சார். இதுக்கு பர்யாயா (paryaya) சேவை என்ற பெயரும் கொடுத்தார்.

இந்தக் கணக்கில் ரெண்டுவருசப் பொறுப்பு முடிஞ்சதுன்னா அடுத்த 14 வருசத்துக்கு மற்ற ஏழு மடாதிபதிகளும் எட்டுத்திக்கும் சென்று த்வைதம், பக்தி எல்லாத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்து தர்மங்களை வளர்க்கணும். உடுபியைப் பொறுத்தவரை இந்த கிருஷ்ணனுக்குப் பொறுப்பேத்துக்கும் விஷயம் பெரிய திருவிழா. ஊரே அப்படி திமிலோகப்படுமாம்.


ஆங்கிலவருசக்கணக்கின்படி ரெட்டைப்படை வருசம் வரும்போது ஜனவரி 17 & 18க்கு இந்த பர்யாயா விழா நடக்குது. இந்தியா முழுவதிலும் இருந்து விருந்தினர்கள் வந்துருவாங்களாம்.

நிறைய சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் இந்த விழாவில் இருக்கு. சரியா 13 மாசத்துக்கு முன்னேயே தொடங்கிருது ஏற்பாடுகள். நவகிரஹங்களைப் பூஜித்துவிட்டு, அனந்தேஸ்வரன் கோவிலுக்கும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர் கோவிலுக்கும் போய் வழிபட்டு, துளசிச்செடிகளையும் வாழைக்கன்னுகளையும் எடுத்துக்கிட்டுப்போய், ஏற்கெனவே தெரிஞ்செடுத்த இடத்தில் 'bபேலே முஹூர்த்' என்ற வாழைக்கன்னுகளை நட்டுவளர்க்கும் விழா.

இதுக்குப்பிறகு ரெண்டு மாசத்துலே 'அக்கி முஹூர்த்'ன்னு திருவிழாவுக்கு வேண்டிய அரிசியை கிடங்கில் கொண்டு சேர்க்கும் விழா. ஒரு முறம் அரிசியை தங்கப்பல்லக்கில் வச்சுக் கடையில் இருந்து ஸ்டோர் ரூமுக்கு ஊர்வலமாக் கொண்டு போவாங்க.

இன்னும் நாலு மாசம் ஆனதும் 'கட்டிகே முஹூர்த்'ன்னு திருவிழாவுக்குச் சமையல் செய்யத் தேவையான விறகுக்கட்டைகளைச் சேகரித்து தேர்போல அவைகளை அடுக்கும் விழா. 25 அடி உயரமுள்ள கம்பத்தைத் தேருக்கு நடுவில் கட்டிவச்சு, அதில் ஒரு மனித உருவப்பொம்மையும் வச்சுட்டு அதைச்சுற்றி விறகுக்கட்டைகளை அடுக்குவாங்க.. இந்த சீஸன்லே மழை காலமாம். வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தமாதிரியும் ஆச்சு.


அப்புறம் திருவிழாவுக்கு ஒரு மாசம் இருக்கும்போது bபட்டே முஹூர்த்ன்னு தேவையான நெல்மணிகளைச் சேகரித்து வைக்கும் விழா. ஒரு முறம் நெல்மணிகளைக் ஸ்ரீ க்ருஷ்ண மடத்தில் இருந்தெடுத்துத் தங்கப்பல்லக்கில் ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போய் bபடகுமாளிகெ என்ற குடோன்லே வைப்பாங்க. இப்படி வகைவகையான ஏற்பாடுகள் குறிப்பிட்ட முஹூர்த்தத்தில் நடக்கும். இது எல்லாம் முறையாக நடந்தது என்று குறிப்பிடும் விதத்தில் பட்டே முஹூர்த் நாளில் கட்டைகள் அடுக்குன தேருக்கு ஒரு கிண்ணக்கூரை போல விறகுக்கட்டைகளை செங்குத்தா நிறுத்தி டோம் அமைச்சுவைப்பாங்க.

திருவிழாவுக்கான சமையல் பாத்திரங்கள் கொடிகள் கோஷங்கள் அடங்கிய பதாகைகள் எல்லாம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலிருந்தே ஏற்பாடாகும். மாத்வர் தெரிஞ்செடுத்த எட்டு மடங்களுக்கும் ஆராதனை மூர்த்தியா விஷ்ணு அண்ட் கண்ணனின் பல்வேறு லீலைகளைக் குறிப்பிடும் சிலைகளே இருக்கு.

பாலிமர் மடத்துக்கு ஸ்ரீ ராமர், அடமர் மடத்துக்கு காளிங்கமர்தன க்ருஷ்ணன்( சங்கு சக்கரம் தாங்கி, நடராஜர் போல வலதுகாலைத் தூக்கி, காளிங்கன்மேல் நிற்கும் போஸ்) கிருஷ்ணபுரா மடத்துக்கும் காளிங்கமர்தனம்தான். ஆனால் போஸ் வேற! சிறுவன் கண்ணன் காளிங்கன் தலைமேல் நின்று நடனம் ஆடுவது போல்! சோதே மடத்துக்கு ஸ்ரீ பூவராஹன், புட்டிகே மடத்துக்கு ஸ்ரீ விட்டலன், சிரூர் மடத்துக்கும் ஸ்ரீ விட்டலந்தான். வெவ்வேறு போஸ். ஸ்ரீ கணியூர் மடத்துக்கு நரசிம்ஹர்,. பெஜாவர் மடத்துக்கு மறுபடி ஸ்ரீ விட்டலன். இடுப்பிலே ரெண்டுகைகளையும் வச்சுக்கிட்டு ' இப்ப என்னாங்கறே?' என்னும் போஸ்:-)

புதுசா இன்சார்ஜ் எடுத்துக்கப்போகும் மடாதிபதி, திருவிழாவுக்கு ரெண்டு மாசம் இருக்கும்போது அவருடைய யாத்திரைகளுக்குக் கிளம்பிப்போய் அவைகளை முடிச்சுக்கிட்டு விழாவுக்குச் சரியா ஒரு வாரம் இருக்கும்போது திரும்பிவந்துருவார். எல்லா மடத்திலிருந்தும் பதாகைகளைக் கொண்டுபோய் அவரை வரவேற்பார்கள். அவர்களோடு ஊர்வலமாத் தேரடி வீதிக்கு வந்து .ஸ்ரீ அனதேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் வணங்கி அதன் பின் ஸ்ரீ க்ருஷ்ணமடத்துக்கு வந்து 'கள்வனை' தரிசனம் பண்ணி அதன் பின் அவரோட மடத்துக்குப் போவார். இந்த விசேஷத்துக்குன்னே அவரோட மடத்தை விசேஷமா அலங்காரம் பண்ணி இருப்பாங்க(ளாம்).

ஏதோ கல்யாண வீட்டு விஷயம் மாதிரிதான் இருக்கு. மண்டபங்களில் நடக்கும் கல்யாணமானாலும், கல்யாணவீடுன்னு காமிக்க வாசலில் வாழைமரம் நட்டுப் பந்தல் போட்டு அலங்கரிக்கிறோமுல்லே! பொண்ணுக்கும் பையனுக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுலே விருந்துக்கு கூப்புட்டுப்போறதுபோல, மற்ற மடங்களின் தலைவர்கள் எல்லாம் இவரை ஒரோரு நாளைக்கு அழைச்சு மரியாதை செய்து விருந்து கொடுப்பாங்க.
இவரும் பதில் மரியாதையா அந்தந்த மடத்தில் இருக்கும் ஆராதனை மூர்த்திகளை வணங்கி நட்பையும் நல்லுறவையும் மேலும் செழிப்பாக்குவார். பொருளும் மனமும் நிறைந்த செல்வந்தர்கள் அவுங்கவுங்களுக்கு விருப்பமான சமாச்சாரங்களை( அரிசி மூட்டைகள், பணம், காய்கறிகள்ன்னு) ஊர்வலமாக் கொண்டுப்போய் இவருக்குக் காணிக்கையாக் கொடுத்துட்டு வருவாங்க.

சரியா ஜனவரி 16 ( திருவிழாவுக்கு முந்தைய தினம்) புதுசாப் பொறுப்பு எடுக்கப்போறவர், பதாகைகள், அலங்காரங்களோடு மற்ற மடங்களுக்குப் போய் விழாவுக்கு வந்து நடத்திக்கொடுக்கணுமுன்னு வேண்டிக்கிட்டு அழைச்சுட்டு வருவார். அன்னிக்கு ராத்திரி ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் முக்கிய ப்ராணருக்கும் ( பயந்துறாதீங்க. நம்ம அனுமன்தான்) விசேஷ பூஜைகள் நடத்தி, மறுநாள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கத் தொடங்குவாங்க. பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு விருந்து சமைக்கணுமே. இப்போ வேலை ஆரம்பிச்சால்தானே நேரத்தோடு விருந்து போட முடியும்! இந்த சேவைக்கு எட்டுமடங்களில் இருந்தும் ஆட்கள் வந்து ஒன்னாச்சேர்ந்து செய்வாங்க.

ரெண்டு நாளா நடக்கப்போகும் திருவிழாவில் முதல்நாள் அன்னிக்கு பொறுப்பு ஏத்துக்க வரும் அதிபரும், விடைபெற்றுப்போகத் தயாரா நிற்கும் அதிபரும் அவுங்கவுங்க மடத்துலே இருந்து, சீர்வரிசை போல அந்த ஒரு நாளைக்குத் தேவையான பொருட்களை அன்பளிப்பா அனுப்பி வைப்பாங்க.

பொழுது விடியும்போது 'புது இன் சார்ஜ்' தண்டதீர்த்தத்தில் நீராடி, நித்திய அனுஷ்டானங்களைச் செஞ்சு முடிச்சுட்டு ஜோடுகட்டே என்ற இடத்தில் (தாலுகா ஆஃபீஸ் பக்கம்) காத்திருப்பார். (இந்த தண்ட தீர்த்தமும் ஸ்ரீ மாத்வரால் வெட்டப்பட்ட குளமாம். உடுபியில் இருந்து ஆறெழு மைல் தூரத்தில் இருக்கு. இந்தக் குளத்தில் இருந்து தன்னுடைய குருவின் வயலுக்கு நீர் பாய்ச்ச, ஸ்ரீ மாத்வர் அவர் கையில் உள்ள உள்ள தடியால் கோடு போட்டு ஒரு வாய்க்காலை வெட்டினார். அதனால் இதுக்கு தண்ட தீர்த்தமுன்னு பெயர்) அதே சமயம் மற்ற ஆறு மடங்களின் அதிபர்களும் அவுங்கவுங்க பல்லக்கில் வந்து விடைபெறப்போகும் அதிபருக்குக் காத்திருப்பாங்க(ளாம்)


இங்கிருந்துதான் பேரணி ஆரம்பிக்கும். முதலில் தங்கப்பல்லக்கில் புது இன்சார்ஜின் ஆராதனா மூர்த்தி ஜாம்ஜாமுன்னு அலங்கரிக்கப்பட்டு எல்லாருக்கும் சேவை சாதிச்சுக்கிட்டுப் போக, கூடவே பின்னால் வருவார் புது இன்சார்ஜ்.. இவருக்குப்பின்னால் மற்ற மடாதிபதிகள் சீனியாரிட்டி வரிசைப்படி பின் தொடர்ந்து போவாங்க.

ஊர்வலத்தில் புராண, இதிகாசக் காட்சிகள் உள்ள அலங்கார வண்டிகள் ஊர்ந்து போகும். எள் போட்டால் எண்ணெயாத்தான் ஆகும் என்றமாதிரி ஜனத்திரள் அப்படியே அம்முமாம். தேரடி வீதிக்கு வந்தவுடன், பல்லக்கில் இருந்து இறங்கும் மடாதிபதிகள், தெரு முழுசும் விரிக்கப்பட்டுள்ள புதுத் துணிகளின் மேல் நடந்து நாலுவீதிகளையும் வலம்வந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்துக் கோபுரத்தினடியில் உள்ள கனகதாஸா ஜன்னலின் வழியாக க்ருஷ்ணனைத் தரிசனம் செய்வாங்க.

புது இன்சார்ஜ், ஸ்ரீ அனந்தேஸ்வரரையும் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரரையும் சேவிச்சு நவகிரஹ தானம்(?) செஞ்சுட்டு மற்ற மடாதிபதிகளுடன் சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணமடத்து வாசலுக்குப் போவார். அங்கே விடைபெறப்போகும் மடாதிபதி, இவர்களை எதிர்கொண்டழைச்சு, இன்சார்ஜ் எடுக்கப்போறவரைக் கைபிடிச்சு, ஸ்ரீ மாத்வஸரோவருக்குக் கூட்டிட்டுப்போவார். அங்கே கைகால் எல்லாம் கழுவி சுத்தம் செஞ்சபிறகு ஸ்ரீகிருஷ்ணமடத்துக்குள்ளே போவாங்க. கண்ணனுக்கு எதிரில் இருக்கும் நேயுடு சந்நிதியில் பூஜைகள் செஞ்சுட்டு, வலப்புறம் திண்ணைமேல் இருக்கும் ஸ்ரீ மாத்வர் அறையில் இருக்கும் ஆஸனத்தில் (மாத்வரின் சிம்மாஸனம்) கொஞ்சநேரம் அமர்ந்திருப்பார்.

இதுக்குள்ளே மற்ற மடாதிபதிகள் படகுமாளிகே ( ஸ்டோர் ரூம்)வுக்குப் போய் இவுங்களுக்காக விசேஷமா அரிசிப்பொரியால் அமைச்சுருக்கும் ஆஸனத்தில் இருப்பாங்க. சந்தனம், பன்னீர், பூமாலைகள் எல்லாம் போட்டு மரியாதைகள் நடக்கும். இதெல்லாம் ஆனதும் ராஜாங்கணம் என்னும் பெரிய ஹாலுக்கு ( இங்கேதான் ஹனுமன் ஜெயந்திக்கு விருந்து நடந்துச்சு. பதிவில் படம் போட்டிருந்தேன்) எல்லாரும் வருவாங்க. விழாவுக்கு அதிகாரபூர்வமா அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் எல்லோரும் இங்கேதான் உக்காரவைக்கப்பட்டிருப்பாங்க.


எல்லோருக்கும் மாலைகள் மரியாதைகள். வரவேற்பு, பேச்சுகள் எல்லாம் ஆனபிறகு புது நிர்வாகத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் யார் யார் என்ற விவரம் எல்லாம் சொல்லி, அவுங்களை அறிமுகப்படுத்துவாங்க. 'பட்டேகாணிக்கே' புதியவருக்கு அன்பளிப்புகள் எல்லாம் (மொய்?) ஆனபிறகு, ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதிக்குப்போய் அந்த 'நவத்வார ஜன்னல்' வழியா நமஸ்கரிச்சு, மறுபடி ஸ்ரீ மாத்வர் அறைக்குப்போய்ச் சேருவாங்க.
விடைபெறுபவர், புதிய இன் சார்ஜுக்கு க்ருஷ்ணனின் சந்நிதி ( கர்ப்ப கிரஹம்/ கர்ப்பே gகுடி) சாவியையும் அக்ஷ்யபாத்திரத்தையும்( சிம்பாலிக்கா எல்லோருக்கும் சோறு போடச் சொல்றது போல) ஒப்படைப்பார். பழையவர் வேலை இத்தோடு முடிஞ்சது. மற்ற மடாதிபதிகள் எல்லோரும் ஊர்வலமா இவரோடு , இவர் சார்ந்த மடத்துக்குப்போய் அவரை விட்டுட்டு விடை பெற்றுக்குவாங்க. (ஹ்ஹா................. மூச்சு வாங்குது எழுதும்போதே!) ஸ்ரீ வாதிராஜர்தான் இந்த முறைகளையெல்லாம் சொல்லி ஏற்பாடு செஞ்சுட்டுப் போயிருக்கார். அதை நியமம் தவறாமல் இன்றுவரை பின்பற்றி வர்றாங்க.

நல்லவேளை எல்லா மடம் இங்களுந்த நாலுவீதிகளிலேயே இருப்பதால் ரொம்ப இங்கே அங்கேன்னு அலையவேணாம்!

ஸ்ரீ க்ருஷ்ணனின் சந்நிதியில் தினசரி வழக்கம்போல் இனி எல்லாம் நடக்க ஆரம்பிச்சுரும். அன்னிக்கு இரவு ஸ்ரீ மாத்வஸரோவரில் தெப்போற்சவம் நடக்கும். மறுநாளும் புதியவர் பங்கேற்கும் பல்வேறு பூஜைகள், சந்திப்புகள் எல்லாம் நடக்கும். இனி அவருடைய ஆட்சிதான் ரெண்டு வருசத்துக்கு. ரெண்டு வருசமுன்னு சொன்னாலும் 11 மாசம் முடியும்போதேதான் அடுத்த ஏற்பாடுகள் ஆரம்பமாகிருதே! கோவிலை நல்லமுறையில் நடத்தி, பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் கவனிச்சு யாருக்கும் ஒரு குறையும் வராமல் ஆட்சி செய்ய வேண்டியது இனி இவர் பொறுப்பு.
இந்த வருசம் (2010) புதுசா இந்தப் பதவிக்கு வந்தவர் ஸ்ரீர் சிரூர் மடத்து அதிபதி ஸ்ரீ லக்ஷ்மிவரா தீர்த்தர் 46 வயசானவர். 1964 இல் ஜனனம். ஏழு வயசில் (1971) சந்நியாஸம். ரொம்பச் சின்ன வயசிலேயே மடாதிபதியா ஆகும் வாய்ப்பு வந்துருச்சு. ஸ்ரீ சிரூர் மடத்தின் முப்பதாவது அதிபதி 1978 முதல் 1980 வரை இவர் பர்யாயா ஸ்வாமியாக, க்ருஷ்ணனுக்கு இன் சார்ஜா இருந்துருக்கார். அப்ப இவருக்கு வெறும் 14 வயசுதான்! தன் ஆட்சியில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மஹாமண்டபத்தைப் புதுப்பித்துப் ப்ரமாண்டமாக் கட்டியவர் இவர். கலை, கலாச்சாரம் பண்பாடு, இலக்கியம் இப்படி எல்லா நல்ல விஷயங்களிலும் ரொம்ப ஈடுபாடு உடையவர். காலத்துக்கேத்தமாதிரி நவீன முறைகளைக் கடைப்பிடிக்கத் தயங்காதவராம். 32000, பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு பகலுணவு கிடைக்கும்படி ஏர்பாடு பண்ணி இருக்கார். ஸ்ரீ கிருஷ்ண சரிதம் என்ற பெயரில் ஒரு சிற்ப மாளிகை உண்டாக்கி, அதை உடுபி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு காணிக்கையாத் தந்துருக்கார். இவர் பர்யாயா ஸ்வாமிகளா இருப்பது மூணாம் முறை. இந்த முறை (2010-2012) வேறு என்னென்ன புதுமைகள் வரப்போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
நன்றி: உடுபி ஸ்ரீ க்ருஷ்ணமடத்தில் இருந்து வாங்கிய புத்தகத்தில் (official guide)இருந்து வாசித்தவைகளை இங்கே எனக்குத் தெரிந்தவரையில், நான் புரிந்துகொண்டவகையில் மொழி பெயர்த்து இருக்கேன். எதாவது தவறான தகவல் இருப்பின் அது என்னுடைய குற்றமே.


Wednesday, May 05, 2010

தேரடி வீதியில் தேவன் இருக்கார்.......

ரஜதபீடபுரத்தின் கதையைக் கேக்க வாங்க எல்லோரும். த்ரேதா யுகத்துலே ராம போஜர்ன்னு ஒரு ராஜா இருந்தார். அவருக்கு அஸ்வமேத யாகம் செய்ய ஆசை வந்துச்சு. சாயாத்ரி மலைத்தொடருக்கும் அரபிதக் கடலுக்கும் இடைப்பட்ட நாடு அவருது. இதுதான் நம்ம பரசுராமர் கோடாலியை வீசி கடலில் இருந்து மீண்டெடுத்த நிலப்பகுதி.

யாகத்துக்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சுத்தம் செய்ய நிலத்தை உழுதப்ப, கலப்பையில் கீழ் மாட்டிக்கிட்ட ஒரு ராஜநாகம் செத்துப்போச்சு. ப்ச்.......நாகத்தைக் கொன்னதால் ஸர்ப்பதோஷம் வந்துருமேன்னு ராஜாவுக்குப் ப்யங்கர கவலை. பரசுராமர் நேரில்வந்து ராஜாவுக்கு ஆறுதல் சொல்றார். ( அட! க்ஷத்ரிய த்வேஷம் எல்லாம் தீர்ந்து போச்சு போல இருக்கு!)
'ராஜன், கவலைப்படாதே. அது உண்மையான ராஜநாகம் இல்லை. ஒரு அரக்கன் உன்னுடைய யாகத்தைக் கலைக்க அந்த நாக உருவெடுத்து வந்துருந்தான். அவனை நீ கொன்னதால் பழி பாவம் உனக்கு வராது'ன்னு சொன்னார். ராமபோஜருக்கு மனசு என்னமோ சமாதானம் ஆகலை!

:"சரி. உனக்குப் பரிகாரம் சொல்றேன், கேட்டுக்கோ. வெள்ளியால் நாலு ஆஸனங்கள் செஞ்சு யாகவேதியின் நாலு மூலைகளிலும் வச்சு அதுலே நாகர்களை ப்ரதிஷ்டை பண்ணிரு. ஒன்னுக்கு நாலாச் செஞ்சால் ஆச்சு!"

அதேபோல் வெள்ளி பீடங்களை நாலுமூலையிலும் நிர்மாணிச்சார் ராஜா. அதன்மேல் ஒவ்வொரு நாகர் வச்சு வழிபாடு நடத்தினார். யாகத்துக்கான வேலைகள் ஜரூரா நடந்து பரசுராமரே முன்னின்று யாகத்தை நல்லமுறையில் நடத்திக்கொடுத்தார். சிவனுக்கு மனசு குளிர்ந்துபோச்சு. இங்கேயே லிங்கரூபத்தில் நான் இருப்பேன்னு வாக்குக் கொடுத்து, இந்த ஊருக்கு இனி ரஜதபீடபுரம்ன்னு பெயர் வச்சுறலாமுன்னு சொல்லிட்டார். அப்படியே ஆச்சு.

கொஞ்ச வருசங்களுக்குப் பிறகு அந்த ஏரியாவில் இருந்த ஒருத்தர் பிள்ளைவரம் வேண்டி மகாவிஷ்ணுவைத் தியானிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் அவருடைய கனவில்(?) அனந்தாசனா போஸில், ஆதிசேஷன் மேல் உட்கார்ந்த நிலையில் மகாவிஷ்ணு வர்றார். "நீ ரஜதபீடபுரத்துக்கு நடந்துபோய் (நாலு மைல் தூரம்) அங்கே இருக்கும் சிவலிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யணும். உனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்"

"ஏஞ்சாமி. அது சிவனாச்சே. நான் உங்களையல்லவா கும்பிடறேன்"

"இதுக்குப்போய் ஏன் கவலைப்படறே? சிவனும் விஷ்ணுபக்தர்தான். என் தாமரைத் திருவடிகளில் இருந்து புறப்பட்ட கங்கையைத் தன் தலையில் தாங்கிக்கிட்டு இருக்காரே. அதுவுமில்லாமல் அவர் என்னோட மச்சான்தானே? எங்களுக்குள் வேறுபாடு நாங்கள் பாராட்டுறதில்லை. நானும் அனந்தசயனத்தில் இருக்கும்போது(ம்) மானசீகமா சிவனை வழிபடுவேன். (வேணுமுன்னா அடையாறு ஸ்ரீ அநந்தபத்மநாபன் கோவிலில் போய் மூலவரைப்பார்..வலதுகையால். கீழே இருக்கும் சிவனை வழிபடறேனே!) நான் அந்த லிங்கத்தில் அந்தர்யாமியாக யார் கண்ணுக்கும் புலப்படாமல் வியாபித்து இருப்பேன். கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சமாதிரி சிவன் உடம்பில் விஷ்ணு."

இதுக்கும் ஒரு கதை இருக்கு. பரசுராமர் சிறுவனா இருந்த காலத்தில் மகா ருத்ரர்தான் அவருக்கு சாஸ்த்ர அப்யாஸங்களையும் வில்வித்தைகளையும் கற்றுக் கொடுத்த குரு. பயிற்சிகள் முடிஞ்சு நிபுணரானதும், குருவைப் பயபக்தியுடன் வணங்கி, 'குருதட்சிணையாக என்ன கொடுக்கணுமுன்னு சொல்லுங்க'ன்னு கேட்டார் பரசு. சிறந்த மாணவனைப் பெற்றதைவிட உண்மையான குருவுக்கு வேறெது மகிழ்ச்சியைத் தரமுடியும்? மனம் பூராவும் மகிழ்ச்சி ததும்பிய நிலையில் மஹா ருத்ரர் சொன்னாராம், 'நீ என் கூடவே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேணும்'ன்னு. அப்படியே ஆக இது ஒரு சந்தர்ப்பமா அமைஞ்சது. பரசுராமர், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராச்சே!

கோவிலுக்கு யாரோ வரைஞ்சு கொடுத்த பென்ஸில் ட்ராயிங்

அரசர் மயூரவர்மாவின் காலத்தில் இந்தக் கோவிலுக்குப் பூஜைகள் செய்ய, அஹிச்சத்ரபுரம் என்ற ஊரில் இருந்து சில அந்தணர்களைக் கூப்பிட்டு வந்து அவ்ர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார்களாம். வெள்ளி பீடத்தில் (பெள்ளி பீடா, கன்னடத்தில்) இருக்கும் சிவனை அர்ச்சித்து வந்ததால் இவுங்களுக்கு (ஷிவா + பெள்ளி) ஷிவால்லி அந்தணர்கள்ன்னு பெயர் வந்துருச்சு. இப்பவும் இந்தப்பகுதிகளில் கொவில்களில் எல்லாம் இந்தப் பரம்பரையில் வந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக இருக்காங்க. உடுபிக்கு அருகில் ஷிவால்லின்னு ஒரு ஊரே இருக்கு.

அனந்தேஸ்வரர் கோவிலுக்குள் நுழைஞ்சோம். பெரிய பிரகாரங்களோடு வித்தியாசமா இருக்கு. வெளியே தேரடிவீதியில் இருந்து பார்க்கும்போது உள்ளெ இவ்வளவு விஸ்தாரமா இருக்கும் என்ற எண்ணமே வரலை. இந்தக்கோவிலை அரசர் ராம போஜர், த்ரேதா யுகத்தில் கட்டினாருன்னு சொன்னாலும் இப்போ இருக்கும் இந்த அமைப்பு பஞ்சபாண்டவர்களால் த்வாபர யுகத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதுன்னு தலப்புராணம் அடிச்சுச் சொல்லுது! கோவிலில் இருக்கும் பெரிய ஸ்தம்பத்துக்கு மானஸ்தம்பமுன்னு பெயர். இது சமணக்கோவில்களின் கட்டிடக் கலையையொட்டிக் கட்டப்பட்டுருக்குன்னு சொல்றாங்க.
கருவறையில் மீசையுள்ள தங்க முகமூடியுடன் மூலவர் பெரியலிங்க ரூபத்தில் இருக்கார், பிரகாரம் சுற்றிவரும்போது ஒருமூலையில் நாகதேவதை, அஞ்சுதலைகளுடன் தங்கமா நிக்கிறாள். அடுத்து ஸ்ரீ தர்மஸாஸ்த்ராவுக்கு சின்னதா ஒரு சந்நிதி.. மஹாகணபதிக்கு, ராமர் & கோ (லக்ஷ்மணர், சீதா, ஹனுமன்)வுக்குன்னு சந்நிதிகள் இருக்கு. இந்தக் கோவிலுக்கு ஆதிகாலத்தில் ஒரு கோட்டையைப்போல் ஏழு ப்ரகாரமாம். இப்போ கொஞ்சம் சுருங்கித்தான் போயிருக்கு.
கருவறைக்கூரைகள் பெரிய காங்க்ரீட் ஸ்லாப் எடுத்து அடுக்கிவச்சதைப்போல் இருக்கு. பாண்டவர் காலத்துலே காங்க்ரீட் ஏதப்பா? கருங்கல் பாளங்களாத்தான் இருக்கணும். இவ்வளவு கனத்தைத் தாங்கணுமுன்னா அதுக்கு எப்பேர்ப்பட்ட அஸ்திவாரமும் தூண்களும் அமைச்சுருப்பாங்க? பார்க்கக் கவர்ச்சியா இல்லாத கட்டிடமுன்னாலும் யோசிச்சுப் பார்த்தால் இது கட்டிடக்கலையில் ஒரு அற்புதம் என்றுதான் சொல்லணும். வாயைப் பொளந்துக்கிட்டே ப்ரகாரம் சுத்துனதை யாரும் பார்த்துருக்கமாட்டாங்கன்னு நம்பறேன்:-)

ஸ்ரீ மாத்வர் இந்தப் பூவுலகைவிட்டு 'மறைஞ்சு' போனதும் இந்தக் கோவிலில்தான்னு சொல்றாங்க. ஒருநாள் சிஷ்யர்களுக்கு இங்கே பாடம் நடத்திக்கொண்டிருந்தப்ப, திடீர்னு மாத்வர் மேல் பூமாரி பொழிஞ்சு அவரை அப்படியே மூடிருச்சாம். பூவையெல்லாம் ஒதுக்கி அவரை வெளியில் டீச்சரைக் காணோ(மா)ம். இது நடந்தது 1317 வருசம்
முன்னூறு வருசத்துக்கு முதல் 'புட்டிகே' மடத்துலே அப்போ அதிபதியா இருந்த ஸ்ரீ புவனேந்திர தீர்த்தா ஸ்வாமிகள், நம்ம மாத்வருக்கு இங்கே அனந்தேஸ்வரா கோவிலில் ஒரு சந்நிதி வைக்கணுமுன்னு ஏற்பாடுகள் செஞ்சுட்டார். அப்போ ஒரு நாள் ஸ்ரீ மாத்வர் அவர் கனவில் வந்து, 'என் தலைமேல் எந்தக்கல்லையும் வைக்காதே. நானே இங்கேதான் இருக்கேன்'ன்னாராம். அப்புறம் அந்தச் சந்நிதி அப்படியே காலியாவே நின்னு போயிருச்சு. அந்த நிலைப்படிக்கு மேல் ரொம்பச்சின்னதா சிலை ஒன்னை சுவத்துலே பதிச்சுவச்சுட்டாங்க.
நாலு மாடவீதிகளில் அனந்தேஸ்வரனுக்கு நேர் எதிரா இருக்கு ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கு ஒரு கோவில் இருக்கு. நேரம் அதிகமா ஆயிருச்சுன்னு வெளியில் நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.
கோவிலைச்சுற்றியுள்ள மாடவீதிகளில் நடக்கும்போது மடங்கள் அங்கங்கே கண்ணில் பட்டது. ஸ்ரீமாத்வர் சரோவருக்கு அருகில் தேர்போல் ஒன்னு. அதுமுழுக்க விறகுக் கட்டைகள் அடுக்கி வச்சுருக்கு. திருக்குளத்தில் நித்ய அனுஷடானங்கள் செய்துகொண்டு சிலர்.
கட்டை மேட்டர் கொஞ்சம் சுவையானதுதான். இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்லவா?


கொசுறுத்தகவல்: கட்டைன்னதும் சந்தனக்கட்டை நினைவுக்கு வருது. உடுபி ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வருசம் நாலு டன் சந்தனம் தேவைப்படுது. இந்த்த் தேவையை நிறைவேற்றித் தருவது கர்னாடகா அரசுதான்.

-------------------------------------------------------------------------------------
கிருஷ்ணன் கொடுத்த கமுகுப்பூச் சரம் !

Tuesday, May 04, 2010

தகதக ஜிலுஜிலு பளபள.......

காலையில் கண் தொறக்கும்போதே கண்ணனின் நினைவு. சட்னு தயாராகிக் கோவிலுக்குப் போய்வந்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பலாம். கீழே வந்தோம். ப்ரஷாந்த் குளிப்பதாக தகவல் சொன்னார் அடுத்து நின்ன வண்டியின் ட்ரைவர். எதிர்வரிசையில் ஒரு ஆட்டோ சாமான்களை இறக்குது. அதுலே போகலாமுன்னு எதிர்வரிசைக்குப் போனால், 'கோவிலுக்குப் போக ஆட்டோ எதுக்கு? நாலைஞ்சு நிமிச நடைதான். நேரேபோய் வலது பக்கம் திரும்புனா கோவில்'. அட! தெரியாமப்போச்சே!
நாங்க இருந்த தெரு ஹனுமன் வீதி. வலது பக்கம் திரும்புனா கனகதாஸா தெரு. பெயரைப் பார்த்ததும் மனசுலே ஜன்னல் கூடவே வருது. .உடுபி ஸ்ரீ க்ருஷ்ணனை நாம் தரிசிக்கும் ஜன்னலுக்குப் பெயர் நவக்ரஹ ஜன்னல். ஏன் சாமியை ஜன்னலில் எட்டிப்பார்க்கணுமாம்?
தாழ்த்தப்பட்ட மக்களினம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத காலக் கட்டம்.
க்ருஷ்ணன்மீது அடங்காத அன்பும் பக்தியும் கொண்ட கனகதாசர் தினமும் கோவிலுக்கு வெளியில் மேற்குப் பார்த்தஒரு ஜன்னல் பக்கம் நின்னு 'அவனை' மனதில் வணங்கி எப்படித்தான் இருப்பான்னு தெரியலையே நமக்கு அவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காதான்னு ஏங்கறார். பக்தன் குறையைத் தீர்க்க ஒரு நாள் 'சட்'னு திரும்பி நின்னுட்டானாம் க்ருஷ்ணன்.



அதுலே இருந்து பழையபடி கிழக்கு நோக்கி அவன் திரும்பவே இல்லை(யாம்). அப்போதான் கனகதாஸரின் பக்தியைப் பற்றித் தெரியவந்துச்சு. அன்று முதல் எல்லோருக்குமே மேற்கு பார்த்த தரிசனம் மட்டுமில்லாம எல்லோருமே இனி ஜன்னல்மூலமாத்தான் அவனைப் பார்க்கணுமுன்னு தீர்மானிச்சு அங்கே ஒரு ஜன்னலைப் பண்ணி வச்சுட்டாங்க. இந்த ஜன்னல் ஒன்பது துவாரங்களைக் கொண்ட நவகிரக ஜன்னல். இதுக்கு தங்கமுலாம் பூசி வச்சு இருக்காங்க. (ஒருவேளை அசல் தங்கமோ என்னவோ? பக்தர்கள் தொட்டுத்தொட்டு முலாம் எல்லாம் காணாமப் போயிருக்கணுமே! ஆனால் பளிச்ன்னு அழகா இருக்கே!)24 விதமான கண்ணனின் உருவங்கள் இதுலே இருக்கு. ஒவ்வொன்னும் அழகு அற்புதம்தான் என்றாலும், உள்ளே அவன் இருக்கும்போது கண் வெளியே ஆராய்ச்சி செய்ய மறுக்குதே.

கனகதாஸா தெருவின் கடைசியில் எலெக்ட்ரானிக் கேட் ஒன்னு வச்சு அதன்வழியா உள்ளே போகவும் வரணுமுன்னு இருக்கு. பாதுகாப்புக் காரணம். காவலாளி எவரும் இல்லை அங்கே.. விசேஷநாட்களுன்னா இருப்பாங்க போல. தெருமுனையில் இருந்த பூக்கடையில் வெள்ளையா ஒரு பூ வாழைஇலையில் பொதிஞ்சு வச்சுருந்தாங்க. பார்க்க நூல்திரிகளாட்டம் இருக்கு. கனகாம்பரம் விலை ரொம்பவே மலிவு. முழம் அஞ்சே ரூபாய்.


கேட்டைக் கடந்தால் மாடவீதி. மடங்கள் அங்கங்கே இருக்கு. வாசல் கதவுக்கு எதிரா அந்தந்த மடத்துக்குரிய க்ருஷ்ணரின் உருவங்கள் வச்சு பூஜிக்கிறாங்க. வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்தோம். கூடையில் பச்சை மட்டைகள். இதுதான் ஒருவேளை அந்தத் திரிப்பூக்கள் மூலமோ? சந்தேகம் உடனே தெளிஞ்சது. இது கமுகுப்பூக்கள். அச்சச்சோ...... பூக்களை வெட்டிட்டால் பயிர்? போகட்டும் அதான் எக்கச்சக்கமா விளைஞ்சு நிக்குதே. ஒருவேளை பூக்களுக்குன்னே வளர்க்கும் மரங்கள் இருக்கலாமே!

இன்னும் உடுபிக்கு கண் தெளியலை. காலைநேரம். எல்லாம் நிச்சலனமா இருக்கு. தேர்கள் ஓசைப்படாமல் நிக்குது. வேற ஏதோ வழியில் வந்திருக்கோமுன்னு புரியுது. கணெதிரே ஒரு கோபுரவாசல். அதுக்கு நேர் எதிரா ஸ்ரீமாத்வர் உருவச்சிலை கம்பிக்கூண்டில்.
கோபுர வாசலில் சிலர் உள்ளே போய் வர்றதைப் பார்த்து அங்கே போனால் அங்கே ஒரு மூணு பட்டை ஜன்னல். அதுக்குள்ளே எட்டிப்பார்த்து நமஸ்கரிச்சுட்டுப் போகுது சனம். நாமும் எட்டிப் பார்த்தால்............. ஹை ! இதுதான் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல். இங்கிருந்து பார்த்தால் அந்த நவக்ரஹ ஜன்னல் தெரியுது. ரெண்டுக்கும் நடுவிலே அந்த மண்டபம். நேத்து எப்படி இதைக் கவனிக்காமல் விட்டேன் உள்ளே இருந்தப்ப? நவக்ரஹ ஜன்னல்கிட்டே யாரும் இல்லைன்னா....... இங்கிருந்தே அவனைப் பார்க்கலாம்,அதிர்ஷ்டம் இருந்தால்!

தேருக்குப் பக்கம் போய் பார்த்தால்..... அட்டகாசமான மரவேலைப்பாடுகள். ராமலக்ஷ்மணர்சீதை அனுமன்கூட இருக்காங்க. கோவில் முகப்புக்கு வந்தால் சுவரில் அற்புதமான சித்திரங்கள். ஜடாயு ராவணனுடன் சண்டைபோட்டு இறகுகள் வெட்டப்படுதல், ஐயோ ன்னு சீதை அலறி வாயை மூடி அழறாள். குசலவர்கள் வில்வித்தை பயிற்சி செய்யும்போது தாய் சீதை கூடவே இருந்து பார்க்கிறாள். ராமனும் சீதையும் அவர்கள் பின்னே லக்குவனுமாக வனவாசத்தில் ஒரு காட்சி. இன்னும் மேலே உத்தரத்துக்கு அருகில் பள்ளிகொண்ட பரந்தாமன், விஷ்ணு துர்கை, ஆஞ்சநேயர், கண்ணனும் ராதையும், குழந்தைக் கண்ணன் தொட்டிலில் இப்படி ஏராளம்.
க்ரீம் நிற கோபுரத்தில் டெர்ரகோட்டா சிற்பங்கள் அங்கங்கே க்ரீமும் ப்ரிக்ரெட்டுமா காண்ட்ராஸ்ட்டா அது ஒரு அழகு. நேத்து இருட்டுலே சரியாத் தெரியலை இந்த அழகெல்லாம்!!!!

சந்நிதிக்குப் போய்ச்சேர்ந்தோம். என்ன ஆச்சு ? ஆட்கள் எல்லாம் எங்கே போனாங்க? ஏன் இப்படி நிசப்தமா இருக்கு. ஜன்னலில் யாரும் இல்லை. ஹைய்யோ!!!!! ஒட்டிப்பிடிச்சேன். உள்ளே ஜிலுஜிலுன்னு வெளிச்சம் போட்டுக்கிட்டு வைர அங்கியில் நிக்கறான்ப்பா. கண்ணே கூசுது; ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டு கோபால் போய் திண்ணையில் உக்காந்து தியானம்(?) செய்ய ஆரம்பிச்சுட்டார். அவர் தலைப்பின்னால் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல் இருக்கு.
நான் நகரவேண்டி இருக்கலை. யாராவது வந்தால் வழிவிடப்போறேன். வரலையே! அஞ்சாறு நிமிசம் கழிச்சு ஒரு பக்தை. அவ்ளோதான். அப்புறம் நானே........ நான் மட்டுமே! இப்படியே அரைமணி நேரம் விலகுவதும் ஓடிவந்து இடம்பிடிப்பதுமா ஒரு ஆட்டம். எத்தனைமுறை, எவ்வளவு நேரம் என்ரதுக்குக் கணக்கே இல்லை! போகலாமுன்னு இவர் எழுந்து வர்றார். எனக்கோ.....கொதி அடங்கலை. இன்னும் இன்னும் இன்னுமுன்னு பேராசையா இருக்கு. பார்த்த திருப்தி வரலைன்னு சொன்னால்..... ஒரே ஒரு முறை பார்த்து மனசுலே வச்சுக்கணும். அது அப்படியே அங்கே நிக்கணும். அது போதும். அப்படிப் பார்ப்பதுதான் தரிசனம் உபதேசம் பொழியுது. நான் எதையும் காதுலே வாங்கும் நிலையில் இல்லை. கடைசியா இன்னொருமுறை பார்த்துட்டுத்தான் வருவேன்னு அதுக்குள்ளே வந்துருந்த அஞ்சாறுபேருக்குப்பின்னே போய் நின்னு பார்த்துட்டுத்தான் கிளம்பினேன். சரியா இன்னும் பக்குவப்படலை நான்:(

பேய்க்கு வாக்கப்பட்டுப் பரிபூரணமாப் பக்குவம் அடைஞ்சுட்டார் நம்ம இவர்!

கோவிலுக்கு முன்னே கோவிலைச் சுத்தி இருக்கும் நாலுவீதிகளும் நல்ல அகலமாப் பளிச்ன்னு இருக்கு. ஸ்ரீ மாத்வரால் நியமிக்கப்பட்ட எட்டு மடங்களும் இங்கேதான் இருக்கு.

Monday, May 03, 2010

ட்யூப் லெஸ்ஸுக்குள்ளே ஒரு ட்யூப் வந்த மாயம்!!!!

எந்தத் தொழில் செஞ்சாலும் அதுலே ஒரு நேர்மை, நியாயம் இருக்கணுமா வேண்டாமான்னு எனக்கு குழப்பம். அதுவும் அது மனித உயிர்களோடு நேரடியாச் சம்பந்தப்பட்டதா இருக்கும்போது மனசாட்சியை அப்படியே அமுக்கிக் குழிதோண்டிப் புதைச்சுட்டு பணம் மட்டுமே ஒரே நோக்கமா இருக்காங்க:(

இது ஒரு புலம்பல் பதிவுன்னு ஒரு டிஸ்கி கொடுத்துக்கறேன்.

இப்பெல்லாம் ட்யூப்லெஸ் டயர்கள்தான். பங்ச்சர் ஒட்டிக்கலாமுன்னு போனோமா....... அங்கேபோனா.....டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க ட்ராவல்ஸ் கம்பெனியில். அந்தச் சின்னத்துண்டு இடம் விட்டு விலகி, அதே ஓட்டையில் ஏதோ குத்தி அந்த ட்யூபைக் கிழிச்சுருக்கு.

கஸ்டமர்களை ஒழுங்காக் கொண்டு போய்ச் சேர்க்கும் எந்த உத்திரவாதமும் இவுங்களுக்கு இல்லையா? அட்லீஸ்ட் ஒரு AA இல் சேர்ந்துருந்தா உதவி வந்துருக்காதா? அதுக்குப்போய் யார் ப்ரிமியம் கட்டுறதுன்னு இருக்காங்க போல. விதிப்படி நடக்கட்டுமே என்ற பெருந்தன்மை!

ட்ராவல் கம்பெனி ஓனர் தினேஷ் ராவுக்கு 'செல்'லடிச்சு விஷயத்தைச் சொல்லுன்னு ப்ரஷாந்த்கிட்டே சொன்னால்........ தேவை இல்லையாம். ஏன்னா.............. இது அவுங்க கம்பெனி வண்டி இல்லை! போச்சுரா...... அப்ப? நாம் இன்னோவாதான் வேணுமுன்னு கண்டிப்பாச் சொன்னதாலே இன்னொரு இடத்துலே அவர் புக் பண்ணி நமக்குக் கொடுத்துட்டு சார்ஜ் வாங்கிக்கிறார். இப்ப நாம் கொடுக்கும் பணத்தில் இவருக்கும் ஒரு பங்கு கிடைக்குமுல்லே? ட்ரைவரையும் வேறெங்கோ இருந்து புடிச்சுப் போட்டுருக்கு.

பங்ச்சர் ஒட்டும் இடத்துலே ரொம்பக்கஷ்டப்பட்டு வேலை நடக்குது. நம்ம இவர் 'நியூஸி'யைக் கம்பேர் பண்ணி, பத்து நிமிச வேலையை எவ்வளோ நேரம் ரெண்டு பேர் சேர்ந்து செய்யறாங்க பார்'ன்னு சொல்றார். 'அங்கே இருக்கும் தொழிலுக்கான சாமான்கள் வசதிகள் எல்லாம் ஒன்னுமே இங்கே இல்லை. பழைய டயர்கள் மட்டுமே குவிஞ்சு கிடக்கு. எல்லாமே உடலுழைப்பாலே நடக்குது. அப்படி ஒரு கராஜ் வைக்க அஞ்சாறு மில்லியன் டாலர் இங்கே யார் முதலீடு செய்வாங்க? ரெண்டு ஆட்களைக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலைக்கு வச்சுக்கிட்டு தொழில் நடத்தும் 'தொழிலதிபர்கள்'தான் இங்கே கூடுதல்'னு நான் வக்காலத்து வாங்கறேன்.
இதுக்கிடையில் நகர்ந்துபோன சின்னத் துண்டை'' எடுத்துட்டு ஒரு முழு 'வேட்டி'யை உள்ளெ வச்சு அடைச்சார். நான் டயரைச் சொல்றேன்::(
அப்புறம் ட்யூப்லே பங்ச்சர் ஒட்டி, அதை உள்ளெ தள்ளிக் காத்தடைச்சு.....இவ்வளவு வேலையும் செஞ்சு முடிச்சுட்டு அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்.
எங்கூர் காசுலே ஒரு டாலர். மனசு கேக்காம அவுங்க ரெண்டு பேருக்கும் நன்றிக்கடனா கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.

ஒன்பது மணிக்குக் கோவில் மூடிருவாங்க. போயிட்டுப்போகுது போன்னு மனசைச் சமாதானப்படுத்திக்கிட்டு ஊருக்குள் வந்து சேரும்போது சரியா எட்டரை மணி. நேராக் கோவிலுக்குப் போயிறலாம். அறை தேடுவது அப்புறம்னு நானும் கோபாலும் ஒரே சமயம் ஒரே மாதிரி நினைச்சோம். (நான் பேச நினைப்பதெல்லாம்..............நீ பேச வேண்டும்..... ஊம்ம்ம்ம்ம்...உ உம்ம்ம்........அது! )

என்னமோ காலங்காலமா இங்கே குடி இருக்காப்லெ.... மடத்துக்குள்ளெ நுழைஞ்சு திடுதிடுன்னு இவர்பாட்டுக்குப் போறார். நான் குடுகுடுன்னு பின்னாலேயே ஓடுறேன்.... கோவிலுக்குள் நுழைஞ்சு ஜன்னலை நோக்கிப் பாய்ச்சல். அட! ராமா! யாருமே இல்லை! ஏகாந்த சேவை! யாராவது வரும்வரை இடம் பிடிச்சுக்கலாமுன்னு நான் ஜன்னலோடு பசைபோட்டு ஒட்டிக்கிட்டேன். முந்தாநாள் பூக்களால் மூடி வச்சுருந்த அலங்காரம் இல்லாமல் தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான் திருடன். 'திரை போட்டுத் திடீர்ன்னு மறைச்சது எவண்டா'ன்னு கத்த வாயைத் திறந்தவ . நல்ல காலம் கப்சுப் ஆனேன். என் கண்ணில்தான் நயாக்ரா. கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்துட்டு கோபால் போய் மண்டபத்தில் உட்காந்தார்.

இன்னும் பார்த்துக்கிட்டே இருக்கேன். யாரும் வரலை. கொஞ்சநேரத்துலே ஒரு மூணுநாலு பேர் வந்து நின்னாங்க. இடம் விட்டு விலகிப்போய் அவுங்களுக்கு பின்னால் வரிசையில் நின்னேன். அவுங்க போனதும் மறுபடி ஜன்னலில் ஒட்டுன பல்லியாக (சரி.... பெருச்சாளியாக) நான். இப்படியே நாலுமுறை. போதும் போதும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. கோவிலை அடைக்கும் நேரம் ஆகுதுன்னு கிளம்பினோம். அர்த்தஜாமப்பூஜை இருக்கான்னு தெரியலை. இன்னும் ஹொட்டேலை வேறத் தேடணும்.........
"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "
ஸ்ரீமாத்வ ஸரோவர்




ஸ்ரீ மாத்வ ஸரோவர்க்குப் பக்கம் வெளியில் வந்தோம். (இந்தக் குளத்தில்தான் கெட்டிமண்ணுக்குள் இருந்த கிருஷ்ணனைக் கழுவி வெளியே எடுத்தாராம் மாத்வர்) மடத்துக்குழந்தைகள் (ஐயோ..... எல்லாம் பால்வடியும் முகங்களோடு பிஞ்சுகள்) வரிசையா வந்துக்கிட்டு இருக்காங்க. கோவில் முன்னால் ஆரவாரம், கூட்டம் ஒன்னுமில்லாமல் ரெண்டு தேர்கள் அமைதியா நிக்குது.

பூனை தூங்கும் அடுப்பு? ஊஹூம்.... பெரிய நாயே தூங்கலாம்!!!!


திரும்ப உள்ளே போனோம். ரெண்டுநாளைக்குமுன்னே ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைச்சுப்போட்ட அடுப்புகளும் பாத்திரங்களும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில். கழுவிக் கமர்த்திட்டாங்க.

மடத்துக்குள்ளே ஒருசிலர் மட்டுமே அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. யாத்ரீகர்கள்.

யானைக் கொட்டடியை முதல்முறை வந்தப்பக் கவனிக்கலை. அதான் எங்கே பார்த்தாலும் மனிதவெள்ளமா இருந்ததே! அரை இருட்டில் நிற்கும் க்ருஷ்ணனைப் பார்த்தேன். மறுபடி கண்ணுலே தண்ணீர். ஒரு எட்டுக்கூட எடுத்து வைக்க முடியாமல் வெறும் ஒன்னரை அடிச் சங்கிலி. பாவம். குழந்தை. துதிக்கையை ஆட்டிக் கூப்பிட்டது.
அஞ்சாறு நிமிஷ ட்ரைவில் ஸ்வதேஷ் ஹெரிட்டேஜ் ஹொட்டேல் வந்தோம். ப்ரஷாந்தின் ரெகமெண்டேஷன். 500 ரூபாயில் இருந்து அறைகள் இருக்காம். இருப்பதில் த வெரி பெஸ்ட் ஸ்யூட் கூட ரொம்ப மலிவு. எதுக்கும் கண்ணால் பார்த்து முடிவு செய்யணுமே. ஸிட்டிங் ரூம், பெட் ரூம்ன்னு ரெண்டு அறைகள். நல்ல அருமையான பாத்ரூம். யாரும் அதிகம் புழங்காத அறை. எல்லாமே பளிச்சுன்னு புதுசா இருக்கு. ட்ரைவர்களுக்காக ஒரு டார்மிட்டரி கூட இருக்காம். நல்லதாப் போச்சு. இன்னிக்காவது காலைக் கையை நீட்டித் தூங்கட்டும் ப்ரஷாந்த்.

சாப்பாட்டைத் தேடுதல் அடுத்த வேலை. இங்கேயே கீழே பேஸ்மெண்டில் ஒரு உடுப்பி ரெஸ்டாரண்ட் இருக்காம். 'தாலி' மீல்ஸ். வெறும் முப்பதே ரூபாய்

Tuesday, April 13, 2010

கண்ணனைக் கண்ணாரக் கண்டேனே!!!

ஊருக்குள் நுழையும்போதே, நாம் இருந்த பரவச நிலையைக் கொஞ்சமும் உணராம வண்டி நேராப்போய் கோவிலுக்கான பார்க்கிங் ஏரியாவில் நுழைஞ்சது. அங்கேயும் ஒரு வாசல். உடுபி ஸ்ரீக்ருஷ்ணா மஹாத்வார். பாதுகாப்புக்குன்னு ஒரு வண்டி போலீஸ் இருக்கு போல! பகல் பதினொன்னே முக்கால். கோவில் அடைச்சுருவாங்களோன்ற பதைப்பு. சில கடைகளைக் கடந்து போனால் ஸ்ரீக்ருஷ்ணா தர்சனம்ன்னு ஒரு அம்புக்குறி. பாய்ந்தோம்.


ஏதோ ரொம்பத் தெரிஞ்சமாதிரி கோபால் விறுவிறுன்னு போய்க்கிட்டே இருக்கார்.(போன ஜென்ம நினைவு???) சட்டையைக் கழட்டித் தோளில் போட்டுக்கிட்டேச் சட்னு ஒரு வாசலுக்குள் நுழைஞ்சார். நேர் எதிராச் சின்ன மாடத்துலே விஷ்ணு. அங்கே நாலைஞ்சுபேர் வரிசையில். நாமும் போய்ச் சேர்ந்துக்கிட்டோம். கருவறைச் சுவற்றின் சட்டத்தில் வரிசையாப் பிடிப்பிச்ச பித்தளை விளக்குகளின் வரிசை. கண் எதிரே க்ளோஸ்டு சர்க்யூட் டிவியில் பூக்களால் மூடப்பட்ட கிருஷ்ணன், மசமசன்னு இருக்கான். கூட்டமாப் பாட்டுப் பாடறாங்களா என்ன? கேட்டுக்கிட்டே, வரிசை நகர்ந்து வளைவு திரும்புனால்...... திண்ணைகள்.
இடதுபக்கத் திண்ணைகளின் சுவர்களில் கிருஷ்ணனின் ப்ரமாண்டமான பல்வேறு படங்கள். நேரெதிர் திண்ணையில் ஒரு பக்கம் ஆண்கள். அடுத்தபக்கம் பெண்கள் ஒரு முப்பதுபேர் இருக்கலாம். மைக் முன்னால் இருக்க, பாடிக்கிட்டு இருக்காங்க. கன்னட மொழியில் சேர்ந்திசை. இன்னொரு வளைவு திரும்புனோம். வலது பக்கம் ஜன்னலில் பக்தர்கள் நின்னு கும்பிட்டுக்கிட்டு நகர்ந்து போறாங்க. நமக்கிடது பக்கம் திண்ணைக்கும் ஜன்னலுக்கும் இடையில் ஒரு சின்ன மண்டபம். 6x6 அடி இருக்கும். அதன் தூண்களில் வெள்ளிக்கவசங்கள். அம்மா மடியில் குழந்தைக் கண்ணன். யசோதாவாகத்தான் இருக்கணும். நரசிம்மம், கருடன், ஆஞ்சநேயர்ன்னு வெள்ளியில் ஜொலிக்கிறாங்க. அட! முழு மண்டபத்துக்கும் வெள்ளி போர்வை!!!!

வரிசையில் வந்து நின்னு பத்து நிமிசத்துக்குள்ளே நாம் ஜன்னலுக்கு முன்னால் நிக்கறோம். கனகதாஸா ஜன்னலாம். சதுரமா ஒம்போது கட்டங்கள். அதுக்குள்ளே பார்வையை அனுப்பினால் கொள்ளைப்பூக்களுக்கு நடுவில் குழந்தை நிக்கறான். எனக்கு லேசா கையும் காலும் நடுங்குது. தங்கச்சட்டங்களைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு உள்ளே உத்துப் பார்த்தேன். என்ன இப்படி மசமசன்னு இருக்கு? தேவையில்லாத சமயம் பார்த்துத் துளிர்க்கும் கண்ணீர். இப்பெல்லாம் இது ஒரு பேஜாராப் போச்சு. முந்தி எல்லாம் இது திருப்பதிக்கு மட்டும்தான். வரவர மனம் பூஞ்சையா மாறிக்கிட்டு இருக்கேப்பா......

நமக்குப்பின்னே பக்தர்கள் நிக்கிறாங்க. வழிவிட்டு ஒதுங்குவதுதான் நியாயம். மண்டபத்தில் ஒருத்தர் தீர்த்தம் கொடுத்தார். தெரியாமல் தலையில் தடவினப்புறம் சொல்றார் அது பஞ்சாமிர்தமாம். இனிப்பு.
திண்ணைக்கு முன்னால் ஒரு பெஞ்சு போட்டு அதில் ப்ரசாதங்கள் வச்சு நமக்குக் கொடுக்கறார் இன்னொரு பண்டிட். தீர்த்தம், புஷ்பம், துளிச் சந்தனம்.

திண்ணையில் ரெண்டு கோடிகளிலும் குட்டியா ரெண்டு சந்நிதிகள். இடப்பக்கம் பெரிய திருவடி, வலதில் சின்னவர். நேயர். இடப்பக்கம் திண்ணையில் போய் உக்கார்ந்தோம். கண்முன் வரிசை நகருது. பஜனைப் பாட்டு கேக்க இனிமையா இருக்கு. வரிசையில் நிற்கும் மக்களும் பாட்டைப் ஃபாலோ பண்ணிப் பாடுறாங்க. கருவறையை ஒட்டித்தான் வரிசை நிக்குது. அண்ணாந்து பார்த்தேன். மரக்கோவில். உசரமும் உறுதியுமா நிற்கும் உத்தரங்களில் அழகான செதுக்கு வேலைப்பாடுகள். பழைய கோவிலுன்னு பார்த்தாலே தெரியுது! பதிமூணாம் நூற்றாண்டு!

ஸ்ரீ மாத்வாச்சாரியார் ப்ரதிஷ்டை செஞ்ச ஸ்ரீ க்ருஷ்ணர் இருக்கும் இந்த இடம் கிருஷ்ணமடம். இவர் இங்கே வந்த 'கதை'யைக் கொஞ்சம் பார்க்கலாம். கம்ஸவதம் முடிஞ்சு தேவகியைச் சந்திக்கிறான் கிருஷ்ணன். பிறந்த அன்னிக்குப் பிரிஞ்ச குழந்தையை இப்போ வாலிபனாப் பார்க்கும்போது தேவகிக்கு மனசு பொங்குது. இவனுடைய பால்யகாலத்துலே எப்படி இருந்துருப்பான்? அதையெல்லாம் பார்க்கக் கொடுத்துவைக்கலையேன்னு விம்மி அழறாள். கவலைப்படாதேம்மா. நான் இப்படித்தான்னு இருந்தேன்னு காமிச்சால் ஆச்சுன்னு உடனே தன்னுடைய ' பால்ய லீலை'களை மாயையால் மீண்டும் நடத்திக் காட்டுறார்.

மாமியார் கூடவே ஒட்டிக்கிட்டு இருந்த கிருஷ்ணனின் மனைவி ருக்மணிக்கும் இந்தக் காட்சியெல்லாம் தெரியுது. 'குழந்தையா இருந்தப்ப நீங்க ஸோ க்யூட். எனக்கு உங்க குழந்தைப் பருவச் சிலை ஒன்னு வேணுமு'ன்னு கேட்டாள். விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு 'அப்ப நான் எப்படி இருந்தேனோ அதைப்போலவே ஒரு சிலையை செய்'ன்னதும் அவர் ஒரு சிலையை உருவாக்கித் தர்றார்.(அப்போ உளியின் ஓசை கேட்டதான்னு தெரியலை)

குழந்தையைத் தன்னுடைய அறையில் வச்சுப் பூஜிக்கிறாள் ருக்கு. அப்போ அவுங்க த்வாரகையில் குடித்தனம். கண்ணனின் மறைவுக்குப் பின் ஏழாம் நாள் த்வாரகையைக் கடல் கொண்டுபோச்சு. அப்போ அரண்மனையில் இருந்த இந்தச் சிலையும் கடலுக்குள்ளே போயிருச்சு. அப்படியே மண் மூடிக் கட்டியாகி ஒரு பெரிய கல் போல கரையில் ஒதுங்குனதை ஒரு கடல் வர்த்தகன் பார்த்துட்டு, தன்னுடைய படகுக்கு பாரம் சமன் செய்யப் பயன்படுமேன்னு எடுத்து வச்சுக்கிட்டான். ரொம்ப நாளுக்கு அப்புறம் அரபிக்கடலில் (அரபிதக் கடல்ன்னு சொல்றாங்க) இந்த வழியா படகு போய்க்கிட்டு இருக்கும்போது புயல்காற்றடிச்சுப் படகு மாட்டிக்கிட்டுத் தத்தளிக்குது.

கடற்கரைக்கு போன மாத்வாச்சாரியார்( இவரைபற்றி நம்ம மதுரையம்பதி ரொம்ப அழகா ஒரு இடுகை வெளியிட்டு இருக்கார் பாருங்க) தத்தளிக்கும் படகைப் பார்த்ததும் தன் உத்தரீயத்தை எடுத்து வீசி ஆட்டுறார். புயல் 'சட்'னு அடங்கிருச்சு. வணிகன் கரைப்பகுதிக்கு வந்து இவரை வணங்கி, 'என் உயிர் பிழைச்சது உங்களால்தான் ஐயா. இனி நானும் என் படகில் உள்ள பொருட்கள் யாவும் உமக்கே சொந்தம்'ன்னான்.

'எனக்கெதுப்பா இதெல்லாம் நீ போ'ன்னு சொன்னாலும் கேக்கலை. எதையாவது எடுத்துக்கிட்டே ஆகணுமுன்னு பிடிவாதம் பிடிக்கிறான். இந்தப் பாரம் சமன் கல்லை உத்துப் பார்க்கிறார். மனசுலே என்னவோ தோணுது. அதை வாங்கிக்கிட்டுத் தன் தலைமேல் சுமந்தபடியே இறைவனைப் பாடித் துதிச்சுக்கிட்டே நாலைஞ்சு மைல் நடந்து உடுபிக்கு வர்றார். அப்போ அவர் பாடிக்கிட்டே வந்ததுதான் துவாதச ஸ்த்தோத்திரம்.
உடுபி வந்ததும் அங்கிருக்கும் ஒரு குளத்தில் இந்தக் கல்லைக் கழுவினார். மேலே படிஞ்சுருந்த காரைகள் எல்லாம் பொட்ன்னு உதிர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர் ஜொலிக்கிறார். சாளகிராமத்தால் ஆன அழகான குழந்தை வடிவம். தன் உயரத்துக்கு ஒரு மத்தைப் பிடிச்சுக்கிட்டு நிக்குது!

சிலையை ப்ரதிஷ்டை செஞ்சதும் எல்லோரும் கும்பிடுறாங்க. கொஞ்ச நாளில் இவர் ரெண்டாவது முறையா பத்ரிகாஸ்ரமம் போகக் கிளம்பறார். தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண பூஜையை தொடரச்சொல்லிட்டு கங்கை நதியை அடைஞ்சார். அதை கடக்க ஏற்பாடு செய்யும்போது, அப்போ அங்கிருந்த முகமதிய அரசரின் காவலாளிகள் தடை போடறாங்க. இவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமக் கங்கையைக் கடந்து போறார். மறுகரையில் சுல்தானின் காவலர்கள் இவரைக் கூட்டிட்டுப்போய் மன்னர் முன்னால் நிறுத்துறாங்க. 'தான் செஞ்சுது குற்றமே இல்லை. எல்லையில்லா பெருவெளியில் இருக்கும் கடவுளைத்தான் நாமிருவரும் வணங்கறோம். அப்போ மனுசனுக்கு ஏன் பயப்படணுமுன்னு' கேக்கறார்.
இவர் ஒரு உண்மையான மஹான்னு உணர்ந்த அரசர் நிறைய பொன்னும் பொருளும் அன்பளிப்பாத் தந்து ஆசி வேண்டினார். இதெல்லாம் தனக்கு வேணாமுன்னு அன்பா மறுத்துட்டு பத்ரிகாஸ்ரமம் போனாராம். இந்த விவரமெல்லாம் கோவில் வளாகத்தில் இருக்கும் ஒரு சந்நிதியில் சுற்றிவர வரைஞ்சு வச்சுருக்காங்க.
மாத்வருக்கு அடுத்த படியில் இருந்த எட்டுச் சிஷ்யப்பிள்ளைகளை எட்டுமடங்களுக்குப் பொறுப்பு எடுத்து நடத்தச் சொன்னார். உடுப்பியில் இருக்கும் எட்டு மடங்களும் ரெண்டு வருசத்துக்கொன்னா கோவிலை நடத்துது. கோவிலைச் சுத்தியே மடங்கள் எல்லாம் இருக்காம். பெஜாவரா, புட்டிகே, பாலிமரு, அடமரு, சோதே, கணியூரு, ஷிரூர், கிருஷ்ணபுரா இப்படி இருக்கும் எட்டுமடங்களில் கோவில் இருக்குமிடம் க்ருஷ்ணபுரா மடம்.
நேரமாச்சு கிளம்பலாமுன்னு இவர் எழுந்தார். இன்னொருக்கா சாமியைப் பார்க்கணும் என்ற ஆசையில் வரிசையில் போய் நிற்கலாமுன்னு நானும் கிளம்புனேன். கண் முன்னே நகரும் வரிசையில் ஒரு ஏழெட்டுப்பேர்தான் இருந்தாங்க. வாங்க வரிசைக்குப் போகலாமுன்னதும் உக்கார்ந்த இடத்துலே இருந்து வலப்பக்கம் நாலடி எடுத்து வைக்காம, கருவறையை வலம்வந்து நிக்கலாமுன்னு போன இவருடன் நானும் போனதுதான்............. தப்பாப் போயிருச்சு:(

(மீதி அடுத்த பதிவில்)