இன்னிக்கு எல்லாரும் அரண்மனைக்குப் போறோம். மதில்சுவரைக் கடக்கணும். நல்லா உசரமா கோட்டையாட்டம் கட்டி வச்சுருக்காங்க. பின்னே அரண்மனைன்னாச் சும்மாவா?
வரவேற்பு ரொம்பவே பலமா இருக்கு. அடடா..... நமக்குச் சிவப்புக் கம்பளம் எங்கே?
நமக்குப் பத்து பத்.......ஆனால்.....
தாய்களுக்கு இலவசம். அடடா...கேக்கவே எவ்வளவு சுகமா இருக்கு. அதானே உள்ளூர்க்காரன் பொழுதண்ணிக்கும் காசு கொடுத்துப் பார்க்கணுமுன்னா நடக்குமா?
ஹூம்.... பெருமூச்சு விடத்தான் முடியுது. மத்த நாடுகள் படிக்க வேண்டிய பாடம் இது.
இந்தக்கூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
அரண்மனையின் உள்ளே இருக்கும் மரகதப் புத்தர் கோயிலுக்கு வாங்க.
(முழு விவரம் அடுத்த பதிவில்)
நம்ம கும்மிகள் இதுகளுக்கும் தெரிஞ்சுருச்சு....:-)))
யானைக் கும்மி......கும்மியடி கும்மியடி......
வீரமிருந்தா என்னைக் கடந்து போ......
ஏனிப்படிக் கோவணத்தோடுத் துண்டு கொண்டு வீற்றிருக்கும் ஆண்டி ஆனாய்????????
கொல்லிப்புற வாசலுக்கு இந்த அலங்காரமா? அச்சச்சோ.....
ராஜாராணி 'வீடு' இதுதானாம்.
படங்கள் பிடிச்சிருக்கா?
இன்னொரு விசயம் உங்ககிட்டே கேட்டுக்கவா?
தொழில் நுட்பக் கேள்வி:
படத்தில் 'க்ளிக்' செய்தால் பெருசாத் தெரியுமுன்னு பல இடங்களில் வருதே.
அதுக்கு எப்படிப் படங்களை வலை ஏத்தணும்?
டீச்சருக்கு 'ஹெல்ப் ப்ளீஸ்'
