உண்மையைச் சொன்னாக் கண்டதையும் போனதையும் எழுதிக்கிட்டு இருக்கும் நான் மும்பைச் சம்பவம் பற்றியும் சொல்லி(?) இருக்கணும்தான். ஆனா.... தொலைக் காட்சியில் பார்த்து திக்கிச்சுப்போய் இருந்தேனே.....
சாதாரண மக்களுக்கு இருக்கும் போக்குவரத்துகளில் ரொம்பவே முக்கியமானது ரயில்வண்டிகள்தான். (ரெயில்வே சம்பந்தம் இன்னும் கொஞ்சம் என் ரத்தத்தில் ஒட்டியிருக்கு) அங்கேயும் தீவிரவாதமுன்னா.....
அதான் மீடியா பண்ண அட்டகாசத்தில் பார்த்துருப்பீங்களே..... என்ன? இல்லையா? ஆமாம். நீங்க சொல்றது ரொம்பச் சரி. தாஜ் ஹோட்டல் அமர்க்களத்தைக் காமிக்கத்தான் டைம் இருந்துச்சு. ரெயில்வே ஸ்டேசனையும், ஏழைபாழைகளையும் கவனிக்க யாருக்கு நேரம் இருக்கு?
சம்பவம் நடந்த மறுநாளும் அதுக்கு அடுத்த நாளும் நான் ஆஸ்தராலியாவில் இருந்தேன். அங்கே தொலைக்காட்சியில் 'தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளால் ரெண்டு ஆஸ்தராலியர்கள்' கொல்லப்பட்டதைத் திரும்பத்திரும்பக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்களா....... கேட்டுக்கேட்டு ஒரு கட்டத்தில் அது என்னவோ 'நேற்று மழை பெய்தது' ன்னு சொல்றது போல ஒரு காதுக்குள்ளே புகுந்து மறு காது வழியா வெளியே போச்சு.
முதலில் கேட்ட,அதிர்ச்சியான நிகழ்வுகளை போகப்போக மனம் எப்படிச் சர்வசாதாரணமா எடுத்துக்குதுன்னு பார்த்தப்ப.....
உண்மை முகத்தில் வந்து அறைவது போல்,
இதுதான் தீவிரவாதிகளின் தாக்குதல் முதல்முறையா நடக்குதா? காலங்காலமாய்ப் பட்டுமா புத்தி வரலை? எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் அமெரிக்காவைப் பாருன்னு சொல்றதை இங்கேயும்சொல்லியாச்சு அங்கத்து 9/11 மாதிரி இங்கே நடந்துருக்குன்னு.
உலகத்துக்கே ஒரே ஒரு 9/11 போதாதா? அதுலே இருந்து,மத்த நாடுகள் ஒன்னுமே படிக்கலையா? இதென்ன திருவிழாவா? எங்க நாட்டுலேயும் கொண்டாடுறோமுன்னு பெருமையடிச்சுக்க........
நாட்டின் பாதுகாப்பைப் பலமாக்கி இருக்கவேணாமா ? இதுக்குன்னு வருசாவருசம் ஒதுக்கும் மக்கள் வரிப்பணம் எங்கே போகுது? தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுன நம்ம பாதுகாப்பு வீரர்கள் ரெண்டு பேர் ஒரு துப்பாக்கியை மாத்திமாத்திப் பங்குவச்சுக்கிட்டு எதிரியைச் சுட்டுத் தள்ளுனாங்களாம்- எங்கூர் டிவி நியூஸ். விடிஞ்சது போங்க.
'என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'
இப்போ... அண்டைநாடுதான் காரணம். அதோடு போர் நடத்தப்போறோம்...
வேணாம். நிறுத்து.ஆணிவேரையே பிடுங்க முடியுமா உன்னாலே? பேசாம உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்து. போருக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் பலம் செஞ்சுக்கோ. அதே 9/11க்கு பிறகு அதே அமெரிக்காவின் பாதுகாப்பு முறைகளைப் பார்க்கலையா?
மனித உசுருங்க மலிஞ்சு போன நாடு, பணம் பதவி அதிகாரம் இவற்றை மட்டுமே வாழ்க்கையின் உன்னத நோக்கங்களாக் கடைப்பிடிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட அதிர்ஷ்டம் கெட்ட நாடு....
அதெப்படிங்க...தேனை எடுத்தவன் கையை நக்காமல் விடுவானா? நக்கிக்கோ. ஆனால் கொஞ்சூண்டு நக்கிக்கோ. முழுசையும் நக்கிட்டு, வெறும் பாத்திரத்தைக் காமிச்சா எப்படி?
நாட்டு மக்கள் எல்லாம் செத்து நாடே சுடுகாடு ஆனபிறகு என்ன பண்ணப்போறே? எல்லாத்துலேயும் ஊழல் செஞ்சு அமுக்குனதைச் செலவு செய்யவாவது நாடு வேணாமா?
பெருச்சாளிகளை ஒன்னும் செய்ய முடியாதுன்னா.....
மதத்தின் பெயரால் அக்கிரமம் செய்யும் தீவிரவாதிகளும் எல்லாரையும் கொன்னுட்டு அப்புறம் மதத்தை எங்கே போய் பரப்புவாங்க?
நினைச்சுப் பார்க்கப்பார்க்க மனசுதான் சரியில்லாமப்போகுது(-:
ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.
புலம்ப ஒரு சான்ஸ் கொடுத்த அவந்திக்கு நன்றி.அவுங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று, போற்றிப் பாராட்டவேண்டியதொன்று.
தொடர்பதிவுக்கான அழைப்பு உங்கள் எல்லாருக்கும்தான். எழுதுங்க.
Showing posts with label மும்பைத் தாக்குதல். Show all posts
Showing posts with label மும்பைத் தாக்குதல். Show all posts
Tuesday, December 09, 2008
அவந்திகாவின் அழைப்பை ஏற்று......
Posted by
துளசி கோபால்
at
12/09/2008 04:03:00 PM
34
comments
Labels: தீவிரவாதம், மும்பைத் தாக்குதல்
Subscribe to:
Posts (Atom)
