நேத்து ஒரு ஹிந்திப்படம் பார்த்தேன். சுவாரசியம் இல்லாமல் 'ச்சும்மாப் பார்த்து வைக்கலாம்' ஓசியில் கிடைச்சதைத் திருப்பிக் கொடுக்கணுமேன்னு.........
எப்படி, எப்போ, இப்படி ஆழ்ந்து போனேன்னு தெரியலை. லண்டனில் இருந்து மும்பை வரும் ஏர் இந்தியா விமானத்தில் ஆரம்பிக்கும் முதல் காட்சி.
சரியாச் சொன்னால், வந்து இறங்கிய ஆறு மணிநேரத்தில் நாயகனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.........
தெரிஞ்ச முகமுன்னு ஒன்னுமே கிடையாது. படம் பூராவும் மும்பை நகரில் எடுத்துருக்காங்க போல. 'செட்'ன்னு எதையும் கவனிச்சதாத் தோணலை.
தன் வீட்டில் இருந்துக்கிட்டே...... விதவிதமான சாப்பாட்டுடன், குழந்தையைக் கொஞ்சிக்கிட்டு 'அலைபேசி'யிலேயே நாயகனை விலைபேசும் ஆள். வில்லன்னு சொல்லலாமோ? இல்லே தலைவனா?
எப்படிப்பட்ட 'நெட் ஒர்க்' என்ற வியப்பு இன்னும் மாறலை!!!!!
அபத்தமான பாடல் காட்சிகள், வலிந்து வைக்கப்பட்ட ஆட்டங்கள், நடனம் என்ற பெயரில் கைகால் வலிப்புகள் இப்படி ஒன்னுமே இல்லைப்பா. ஆனா பாட்டு இருக்கு. எங்கியோ மெல்லிசா, ஒலிச்சும் ஒலிக்காமலும்.
படம் முடிஞ்சு டைட்டில் ஓடும்போதுதான் அட! இத்தனைப் பாட்டு எங்கே இருந்துச்சு? ஆங்கிலப்படங்களில்தான் இப்படி வந்துக்கிட்டு இருக்கும்.
விமரிசனம் எழுதப்போறேன்னு சொன்னதும் ...............
வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.
ஒரு பக்கத்தை மட்டும் சொல்லுதோன்னு நினைக்க வைக்கும் கதை. 'அடுத்த பக்கம்' ஒருவேளை இன்னொரு படம் எடுக்கலாம்.
இந்தியாவில் வெளியிட்டாங்களான்னு தெரியலை.
படம் கிடைச்சாக் கண்டிப்பாப் பாருங்க. சின்னப் படம்தான். அதான் அஞ்சு டூயட்டும் ஆறு ஃபைட்டும் வைக்கலையே.
ஆமீர்ன்னா என்ன அர்த்தம்? தலைவன்.
இயக்கம் & எழுத்து ராஜ் குமார் குப்தா
கதை நாயகன்... ராஜீவ் கண்டேல்வால்
தயாரிப்பு ..... ரோனி ஸ்க்ரூவாலா
இசை....அமீத் த்ரிவேதி
Showing posts with label திரைப்படம் விமரிசனம் சினிமா. Show all posts
Showing posts with label திரைப்படம் விமரிசனம் சினிமா. Show all posts
Thursday, August 14, 2008
ஆமீர்
Posted by
துளசி கோபால்
at
8/14/2008 09:40:00 AM
22
comments
Labels: திரைப்படம் விமரிசனம் சினிமா
Subscribe to:
Posts (Atom)
