வீட்டுலே ஸ்மோக் அலார்ம் போட்டுருக்கீங்களா? அது வீட்டு செக்யூரிட்டி அலார்ம்கூட இணைஞ்சுருக்கா? வெரிகுட். நல்லது. மாசாமாசம் வரும் பில்லுக்குப் பணம் கட்டறோமுல்லே? இதெல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதா? இதை எப்படிப் பரிசோதிச்சுப் பார்க்கணும்?
எப்படின்னு தெரியலைன்னா இதோ நாங்க செஞ்சதுபோல செஞ்சுதான் பாருங்களேன்.....
முதல்நாள் 'மகேஷ், சரண்யா மற்றும்பலர்' னு ஒரு படம் பார்த்தோம். குடும்பக் கதை. அருமையான வீடு. திண்ணை, முற்றம் எல்லாம் வச்ச பிரமாண்டமான வீடு. இப்படியெல்லாம் வீடுகள் இன்னும் இருக்கான்னு கோபாலுக்கு ஒரே ஆச்சரியம். 'இது எல்லாம் ஸ்டெர்லிங் லே எடுத்ததுன்னு நான் என்னுடைய மேதாவிலாசத்தை (நானே) மெச்சிப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதுலே நம்ம எஸ்.பி. பாலாவின் 'வைகறைப் பனியே பூமியின் அழகு' ன்னு ஒரு பாட்டு.... அருமை. இசை வித்யாசாகர். இப்பெல்லாம் அதிகமாப் படங்களில் இசை அமைக்கும் யுவனோட, கடமுடாக் காட்டுக்கத்தல்களால் பாட்டுசீன் என்றாலே மனம் வெறுத்துப் போயிருந்த எங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசம்னு வச்சுக்குங்க. (அதுக்காக வித்யாசாகரைத் தலையில் தூக்கிவச்சு ஆடமுடியாது. இந்தப் பாட்டு நல்லா வந்துருக்கு.)
ஒரு வாரத்துக்குன்னு அரைச்சுவச்சுக்கும் மாவில் முதல் நாள் மட்டும் இட்டிலி. மறுநாளில் இருந்து தோசை. ஆறாம் நாளுவரைத் தாக்குப் பிடிக்கும் தோசைமாவு கடைசிநாளில் பொங்களமாகி மங்களம் பாடிரும் நம்ம வீட்டில். அது என்ன பொங்களம்? பயந்துறாதீங்க. ரெஸிபி இதோ.
மீந்துகிடக்கும் ஒன்னரைக் கப் அளவு இருக்கும் தோசை மாவில் அரைக் கப் பொடி ரவை, கால் கப் துருவிய தேங்காய்ப்பூ, ஒரு கைப்பிடிக் கடலைப் பருப்பு, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கலக்கி வச்சுறணும். ரவை எல்லாம் ஊறி மறுநாள் கெட்டியான மாவா ஆகி இருக்கும். அதுலே கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து இட்டிலி மாவுப் பதத்துக்குக் கொண்டுவந்துருங்க. உங்களுக்கு விருப்பமுன்னா பொடியா நறுக்குன வெங்காயம் பச்சை மிளகாய்ச் சேர்த்து ஊத்தப்பமா ஊத்திக்கலாம். இல்லைன்னா கலக்கி வச்சுருக்கும் மாவையே ரெண்டு கரண்டி எடுத்துச் சூடானத் தோசைக்கல்லில் ஊத்தி லேசாப் பரத்திவிடுங்க. அடை செய்யும் கனம் இருக்கணும். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சுத்திலும் ஊத்தி, ஒரு மூடி போட்டு மூடி சிறுதீயில் வேகவிடணும்.
பொங்களம் போட்டுக்கிட்டு இருக்கேன். இவர் பேசாமச் சாப்புட்டுட்டுப் போகலாமில்லே? அதான் தொட்டுக்க மிளகாய்ப்பொடி இருக்கே. அத்தைவிட்டுட்டு, நேத்துப்பாட்டு அருமையா இருக்கு. எஸ்பி எவ்ளோ நல்லா பாடறார். அதைக் கேட்டுக்கிட்டே தின்னா உனக்கென்னன்னு ஆரம்பிச்சு டிவிடியைப் போட்டார். இவருக்குண்டானதைச் சுட்டுப்போட்டுட்டு(?) நானும் என்னோட தேவைக்குச் சுட ஆரம்பிச்சேன். அழகா அம்சமா எண்ணெய் குறைவா ரெண்டு ஆச்சு. இன்னும் கொஞ்சூண்டு மாவு இருக்கு,கூடுதலா ஒன்னு சாப்புடுங்கன்னா ...... ஐய...இருக்கற நோணாவட்டம் கொஞ்சமா? த(வ்)வா சூடா இருக்கும்போதே மீந்த மாவையும் ஊத்திவச்சுட்டா வேலை முடிஞ்சது, இல்லையா? ஊத்துனேன். மூடியையும் போட்டேன். அம்புட்டுதான்
இங்கே 'வைகறைப்பனியே ரெண்டாம் முறை ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு கையில் என் தட்டும் மறுகையில் கணினியில் ஸ்டெர்லிங்கைத் தேடுவதுமா உலகையே மறந்தேன்............................ஊஊஊஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்......... சத்தம் எங்கே இருந்து வருதுன்னே ஒரு நிமிஷம் கண்டுபிடிக்கமுடியலை.....ஆஹா..... ஸ்மோக் அலார்ம் வெளுத்துவாங்குது. ஏன் இப்படின்னுப் பார்வையை அடுப்பின் பக்கம் திருப்புனா...... மூடியையும் மீறிப் புகை.
அலார்மில் பேட்டரியை எடுத்துருங்கன்னு அலாரத்துக்குமேலே அலர்றேன். இதுக்கு பேட்டரி ஏது? மெயின்லே கனெக்ட்டட்ன்னு அவரும் பதில் அலறல். ஓடிப்போய் அதுக்குண்டான ஸ்விட்சை ரீசெட் பண்ண முயற்சிக்கிறார். குட்டிக்குட்டியா லைன்கட்டி இருக்கும் ஃப்யுஸ் தொகுப்பில் எது எங்கே இருக்குன்னே புரியலை.
இதுக்குள்ளே அடுப்பை அணைச்சு, மூடியைத் திறந்தால்...... காக்கைச் சிறகிலே...... கரிய நிறம் தோன்றியிருக்கு! வீட்டுக்குள் மண்டும் புகையை விரட்ட எல்லாக் கதவு ஜன்னல்களையும் 'பாம்'ன்னு விரியத் திறந்தாச்சு. அலார்மின் அலறலும் நின்னது. நல்லா எஃபெக்டிவா இருக்கு நம்ம ஸ்மோக் அலார்ம்ன்னு சொல்லிப் பாராட்டிக்கிட்டே, ஹோம் செக்யூரிட்டி இப்பப் போன் பண்ணுவாங்க அவுங்ககிட்டேக் 'கோக்குமாக்கா ஒன்னும் சொல்லாம, ஸ்மோக் ஃப்ரம் குக்கிங்'னு சொல்லுங்கன்னு சொல்லி வாய் மூடலை, ஃபோன் வந்தே வந்துருச்சு. சமாளிச்சு முடிக்குமுன் வீட்டுவாசலில் ஃபயர் எஞ்சின் வந்து நிக்குது! ஓ மை காட்!!!!!
அதான் முன்வாசக் கதவு உள்பட எல்லாம் விரியத் திறந்து கிடக்கே...... என்ன ஆச்சுன்னு கேட்ட ஃபயர் ஆபீஸர்கிட்டே...'.பொங்களம் கருகிங்'ன்னா புரியாதேன்னு 'பர்ண்ட் டோஸ்ட்'னு அவுங்களுக்குப் புரியும்விதமாச் சொல்லித் திருப்பி அனுப்புனோம் ஏராளமான நன்றிகளுடன்......
"ஈஸ் எவ்ரிதிங் ஓகே......?"
"எஸ் ப்ளீஸ். தேங்க்ஸ் ஃபார் கமிங். "
மேற்படி டயலாக் ஒரு 10 ரிப்பீட்டு:-)
பரவாயில்லை விடுமுறைநாளில் கூட ஜரூரா வேலை செய்றாங்க!!!!
நம்ம விடுமுறை இப்படி ஜாலியாகப் போகப்போகுதுன்னு யார் கண்டா?
நேத்து மகள் வந்துருந்தாள். எனக்குக் கிடைச்ச கிறிஸ்துமஸ் பரிசு ரெண்டு யானைகள். கோபாலுக்கு ஒரு எலி. பயணத்துக்குப் பயன்படுத்தும் வகையில் வாலைச் சுருட்டி வயித்துலே வச்சுருக்கு:-)
மகளிடம் நடந்த விஷயத்தைச் சொன்னதும் ,'ஓ மை காட். ஹௌ குட் யூ?'
டோண்ட் ப்ளேம் மீ...... ஐ டிட்ண்ட் மீன். பட் ஒன் திங் ஃபார் ஷ்யூர்.. இட்ஸ் ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா. டெஃபனைட்லி ஆல் பிகாஸ் ஆஃப் ஊத்தப்பா!!!!
Showing posts with label சமையல்குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல்குறிப்பு. Show all posts
Sunday, January 11, 2009
All because of Uthappa
Posted by
துளசி கோபால்
at
1/11/2009 04:24:00 PM
48
comments
Labels: smoke Alarm, அனுபவம், சமையல்குறிப்பு
Subscribe to:
Posts (Atom)
