Saturday, March 30, 2024

நூறு வயசு ஆகிருச்சாமே !!!!

நம்மைவிடப் பண்டிகைகள் கொண்டாடறதுலே கடைக்காரர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம், இல்லே ? 
நம்மூருலே  லேபர் டே வீக்கெண்ட் போனகையோடு (அக்டோபர் நாலாம் திங்கட்கிழமை ) எல்லா மால்களிலும், கடைகளிலும் க்றிஸ்மஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள்  எல்லாமே விற்பனைக்கு வந்துரும். நியூஸியில்  ஹாலோவீன் கொண்டாட ஆரம்பிச்சபின்னும் இப்படியேதான்.....  ஒரு பக்கம்  பேய் பூதம் பிசாசு பில்லிசூனியம்னு குவிச்சுருந்தாலும் ஒர் பக்கம் க்றிஸ்மஸ் சமாச்சாரங்களே ! 

இந்த வருஷம் என்ன புதுசா வந்துருக்குன்னு  போய்ப் பார்க்கத்தான் வேணும்.  சீனவனும், லேசுப்பட்டவனா ? நமக்காக, அவன் மண்டையை உடைச்சுக்கிட்டுப் புதுசுபுதுசா கண்டுபிடிச்சுத் தள்ளறான், இல்லையோ !
பசங்களுக்கு சான்ட்டா ஸூட் வந்துருக்கு !  ரஜ்ஜுவுக்கு ஒன்னு வாங்கலாமுன்னா.... அவன் போட்டுக்கமாட்டான்.....

 நல்லா இருப்பதைப் பார்த்து வச்சுக்கணும்.  பண்டிகை முடிஞ்ச மறுதினம்,  விற்காமல்  மிஞ்சிப்போனதையெல்லாம் ஸேலில் போட்டுருவாங்க.  இது  இன்னும் ஆறேநாளில் வரும் புதுவருஷம் வரை  போகும்.  முதல்நாள் அம்பது சதம் கழிவுன்னு ஆரம்பிப்பது.... அடுத்த சிலநாட்களில் 80 இல்லை 90 சதம் கழிவில் இருக்கும். நான் அப்போதான் போய்ப் பார்த்து, ஆசைப்பட்டது இருந்தால் வாங்குவேன்.   இது நம்ம  பண்டிகை இல்லைதானே ? அடுத்த வருஷ அலங்காரத்துக்கு எடுத்துவச்சால் ஊசிப்போகுமா என்ன ? 

நம்ம வீட்டில்  பண்டிகை இல்லைதானே தவிர பண்டிகைக்கான அலங்காரம் உண்டு. 

அக்டோபர் கடைசியில் ஆரம்பிக்கும் விற்பனைகள், க்றிஸ்மஸுக்கு ஒரு மாசம் இருக்கும்போது   சூடு பிடிச்சுரும். மால்களிலும் பெரிய பெரிய க்றிஸ்மஸ் மரங்களும், சாண்ட்டா வீடும்,  வந்துரும். கூடவே ஒரு ஃபோட்டோ எடுக்கும்  கடையும். சின்னப்பசங்கள் சான்ட்டாவைச் சந்திச்சுப்பேசி, அவரோடு படங்கள் எடுத்துக்கலாம். பதினைஞ்சு நிமிட்லே ப்ரிண்ட் போட்டு படத்தைக் கையில் கொடுத்துருவாங்க. குழந்தைகளின்  முதல் க்றிஸ்மஸ் படங்கள் எடுத்தே ஆகணும்தான், இல்லே ? 

கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறைக்காலம் என்பதால்  சாண்ட்டாவாக நடிக்கும் வேலையும்  இளைஞர்களுக்குக் கிடைக்கும். பஞ்சுதாடியும், வெளுத்தமுடி விக்கும் இருக்கும்போது  வேறென்ன கவலை? 

நம்ம மாலில் எல்லா ஏற்பாடுகளும் நடந்துமுடிஞ்சுருக்கு ! நாந்தான் பலநாட்களா மாலுக்குள் போய்ச் சுத்தாமல் சூப்பர்மார்கெட்டும், கேட் ஃபுட்டுமா இருந்துட்டேன். 

டிஸ்னிக்கு வயசு நூறு ஆயிருச்சுன்னு ஒரு பெரிய ஹாலில் டிஸ்ப்ளே வச்சுருக்காங்க. நம்ம சொந்த சாண்ட்டா க்ளிக்ஸும் ஆச்சு:-)



நம்ம மால் சான்ட்டா..... ரெய்ன்டீர்களுக்குத் தீவனம் போடப்போயிருந்தார்.  வழக்கமா சான்ட்டாவிடம் நாலு வார்த்தை பேசிட்டு வருவேன்.  ப்ச்.... 
அப்புறம் இன்னொருநாள் வேறொருமாலில் பார்க்க முடிஞ்சது !

இந்த வருஷம் நம்ம வீட்டு டிஸ்ப்ளேக்கு என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.  டேபிள் அலங்காரமா  ஸ்நோபால் செய்யலாமா ? அதுக்குள்ளே நிக்கும் அளவிலே ஒரு க்றிஸ்மஸ் மரம் தேடியதில் சரியா ஒன்னும் அமையலை. நானே   சுமாரா ஒன்னு செஞ்சேன்.  மரத்தின் நிறம் சரிவரலை. அப்புறம் இன்னொன்னு சரியான நிறத்தில் செய்ய முடிஞ்சது.  நம்ம கிடங்கில் இருக்கும் க்றிஸ்மஸ் பொட்டிகளைக்  குடாய்ஞ்சதில் ரெய்ன்டீர் ஆப்ட்டது. 

வாசலுக்கான  வளையத்தையும் மாட்டியாச்சு.   தரை அலங்காரத்தில் நேட்டிவிட்டி ஸீன் வைக்கணும்.  முதலில் ஒன்னு செஞ்சு பார்த்துட்டு, மனசுக்குத் திருப்தியில்லைன்னு  வேறொன்னுக்கு மாத்தினேன் !



எல்லாம் இது போதுமுன்னு இருக்கவேண்டியதுதான் !


PIN குறிப்பு :  துக்கவெள்ளியன்னிக்கு பொறந்தநாள் அலங்காரம் போடவேண்டியதா அமைஞ்சுருக்கு !  வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் சேர்ந்தே வருதுல்லே !!!!!


6 comments:

said...

அழகான அலங்காரங்கள்.  என் தங்கை வீட்டில் அவர்கள் செல்லத்துக்கு ட்ரெஸ் மாட்டி அழைத்து வருவார்கள்.  எனக்கு ஏனோ செல்லங்களுக்கு டிரஸ் மாட்டினால் செயற்கையாக இருக்கும் என்று தோன்றும், பிடிக்காது!

said...

கிறிஸ்துமஸ் அலங்காரம் அழகாக இருக்கிறது. பேரனும் பார்த்து மகிழ்கிறார்.

சான்டாவுடன் சந்திப்பும் படம் அருமை.

said...

இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை - சரியாகச் சொன்னீர்கள்!

அலங்காரங்கள் நன்று.

செல்லங்களுக்கு உடை - இங்கே குளிர்காலத்தில் உடை அணிவது எல்லா வளர்ப்புச் செல்லங்களுக்கும் உண்டு - ஆடுகள் உட்பட!

said...

வாங்க ஸ்ரீராம்,

சின்னக்குழந்தையா இருக்கும்போதே ட்ரெஸ் போட்டுப் பழக்கினால் புரிந்துகொள்ளும். வளர்ந்தபின் எதாவது புதிதாக அணிவித்தால்.... அவ்ளோதான்.....பிச்சுப்பிறாண்டிரும் !

குளிர் காலங்களில் இங்கேயும் நாய்ச்செல்லங்களுக்கு கோட்டு போடுவதுண்டு. அது வளர்ப்போரின் ஆசைகளில் ஒன்று !

said...

வாங்க மாதேவி,

ஊர் முழுக்க இருக்கும் மால்களும் கடைகளும்தான் கொண்டாடுவதில் முன்நிற்கின்றன ! நம்மவனும் மால் ப்ரேமிதான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நமக்குக் குளிரும்போது அவற்றிற்கும் குளிராதா என்ன ? அன்பின் வெளிப்பாடுதான் இல்லையோ ! தன்னைப்போல பிறரையும் நேசி !