Wednesday, April 17, 2013

சரியாப் பார்க்கலையே......:( இனி எப்போ?


கோவில் புதையுண்டு இருந்த காலத்தில்,  இந்தப்பக்கமா வேட்டையாட வந்த தர்மவர்மன் காதில் கோவில் இருக்கும் விவரத்தைச் சொன்னதே கிளிதானாம். அதை நினைவு கூறவே கிளிமண்டபம் ஒன்னு கட்டினாராம் அரசர். எப்பவும் ரெங்கா ரெங்கன்னு அழகாக் கிள்ளை மொழிகள் பேசிக்கொண்டிருக்குமாம் அங்கே!  ஹைய்யோ!!! மயக்குமோ!  மயக்கத்துடன் அனுபவிக்கணும்.

பெரிய கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். இப்பவும் ரங்கா ரங்கா ரங்கா கோபுர முகப்பு கண்ணில் படலை:(  சரியா கோபுரவாசலுக்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்துனா????

ரெங்கவிலாஸ் மண்டபக் கோவில்கடைகள் வெய்யில் தணிஞ்சதால் முன்னேறி இருக்கு. காலையில் கண்ணில்படாத குட்டிக்கல்லுரல்களின்  அழகு வரிசை  அபாரம். கோபுரதரிசன சீட்டு விற்கும் மேசைக்குப்போய்  அங்கிருந்த பெண்ணிடம் அன்னப்பெருமாளைப் பற்றி விசாரிச்சேன். இப்ப மூணாவதுமுறையா நம்மைத்  தொடர்ந்து பார்த்ததால் ஓரளவு பரிசயமாகி இருந்தோம்.  அப்படி ஒன்னு இங்கே இல்லையேன்னு முழிச்சாங்க.

அதுக்குள்ளே  நம்ப காளி முத்து அங்கே வந்து சேர்ந்தார். நம்மைப் பார்த்ததும் புன்சிரிப்பு.  கிளிமண்டபம் பார்க்கலை விட்டுப் போச்சுன்னேன்.  அது அங்கெதானே இருந்ததுன்னு சொல்லி எங்ககூடவே வந்தார்.  'பச்சைக்கிளிகள் எல்லாம் ரெங்கா சொல்லுதா?'ன்னேன்.  அங்கே ஏது கிளின்னார். தர்மவர்மனுக்கு  கோவிலைக் காட்டுச்சாமே கிளி!  அதுக்குத்தானே நன்றி சொல்ல ஒரு கிளிமண்டபமே கட்டியிருக்காங்கன்னதும்..... அப்படியெல்லாம் ஒன்னுமே இல்லை. இது கிள்ளிவளவன் கட்டிய மண்டபம். கிள்ளிமண்டபம் இப்போ கிளிமண்டபமா ஆகி இருக்குன்னார்.

"அப்போ கிளி? "

"சின்ன கூண்டுலே ஒன்னு இருக்கு.  அது பொம்மைக்கிளி"

சோகமாப்போயிருச்சு எனக்கு.  ரேவதி மண்டபம், அர்ஜுனமண்டபம் இருக்கும் திருச்சுற்றிலே கிளிமண்டபம் இருக்கு.  சொன்னாப்படி  உள்விதானத்தின் உச்சியில்  சின்ன கூண்டும் பொம்மைக் கிளியும்:( அப்பதான் கவனிக்கிறேன் எதிர்மூலையில்  குட்டியா ரெண்டு சந்நிதிகள். உள்ளே சிலை ஒன்றுமில்லை. ஓவியம்தான். துலுக்க நாச்சியார்!  இன்னொரு சந்நிதியில் சேரகுலவல்லி!

Thanks to Deepak Saagar

தில்லிப்படைகள்  கோவிலில் இருந்த செல்வங்களையும்  நம்பெருமாளையும் மற்ற விக்கிரங்களையும் கொள்ளையடிச்சுக்கிட்டுப்போய் தில்லி சுல்தானுக்குக் காணிக்கையாக் கொடுத்துட்டாங்க.  மனம் மகிழ்ந்த சுல்தான்  படைவீரர்களுக்கு  செல்வத்தைப் பங்கு பிரிச்சுக்கொடுக்கும்போது அங்கே வந்த சுல்தானின் மகள் சுரதாணி, அழகிய மணவாளனின் அழகில் மயங்கி  தனக்கு அந்த 'பொம்மை' வேணுமுன்னு கேட்டு வாங்கிக்கிறாள்.
அல்லும் பகலும் பொம்மைகூடவே பொழுது போறது.  இனி  அந்த பொம்மையை  விட்டு ஒரு நாளும் பிரிஞ்சு இருக்கமுடியாதுன்ற நிலைக்கு வந்துட்டாள்.
Thanks to Deepak Saagar. 


இங்கேயோ  ரெங்கனை விட்டுப் பிரிஞ்ச துயரில் வாடிக் கிடக்கிறாள் இன்னொருத்தி.  கோவிலில் ஆடிப்பாடி இறைவனை மகிழ்விக்கும்  பெண்களில் ஒருத்தி.  இவளும்  நம்பெருமாளைத்தேடி தில்லிப்படைகள் போன வழியாப்போய் கடைசியில் சுல்தான் மகளிடம் அவன் இருப்பதைக் கண்டு பிடிச்சுடறாள்.   பூஜை புனஸ்காரங்கள் ஒன்னும் இல்லாம விரிச்சோடிக்கிடக்கும்  ஸ்ரீரங்கம்  வந்து கோவில் பொறுப்பாளர்களுக்கு சேதி சொல்லிடறாள். இவளுக்கு 'பின் சென்ற  வல்லி'ன்னு பெயர் உண்டாச்சு.

எப்படியாவது   நம்பெருமாளைத் திரும்பிக்கொண்டு வந்துடணுமுன்னு திட்டம் போடறாங்க. பெரிய நடனக்குழு ஒன்னு புறப்பட்டுப்போய்  சுல்தான் முன் ஆடுது. மனம் மகிழ்ந்த சுல்தான் பொன்னும் பொருளுமா வாரிக்கொடுக்கிறான். இதெல்லாம் வேண்டாம். விக்கிரஹத்தைத் திருப்பித்தந்தால் போதுமுன்னு கெஞ்சறாங்க.  என்ன ஏதுன்னு புரியாமல் முழிக்கும் சுல்தானுக்கு அவனுடைய மகளின் பொம்மை பற்றிய விவரம் கிடைக்குது.  கேட்டால் குழந்தை தரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாள்.

என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக் கடைசியில் குழந்தை தூங்கும் சமயம் பொம்மையைத் தூக்கிக் கொடுத்துடறார்.  ஆனந்தத்தோடு அதை வாங்கிக்கிட்டவுங்க  ஓட்டமும் நடையுமா ஊருக்குத் திரும்பறாங்க.  மறுநாள் பொழுது விடிஞ்சவுடன்  பொம்மையைக் காணோமுன்னு  குழந்தை அழுது அடம்பிடிக்கறாள். அன்ன ஆஹாரமில்லாமல் அழுது அழுது  உடல்நிலை மோசமாகிருது.   தாங்க முடியாத நிலைக்குப்போன சுல்தான்,  திரும்பப்போய்  வாங்கி வர படை வீரர்களை அனுப்பறான். குழந்தை சுரதாணியும் கூடவே வர்றாள்.

தொடர்ந்து  வரும் தில்லிப்படை வீரர்களிடமிருந்து நம்பெருமாளைக் காப்பாத்த அவனைத் தூக்கிக்கொண்டு போனவர்கள்  திருவரங்கம் வராமல்  கர்நாடகா மேலக்கோட்டைக்குக் கொண்டு போயிடறாங்க.  ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த  சுரதாணி, அவளுடைய  பொம்மை இன்னும் இங்கே வந்து சேரலைன்ற விவரம் தெரிஞ்சதும்  மயங்கி விழுந்து உயிரை விட்டுடறாள். அவளைத்தான்  பெருமாள் மேல் காதல் கொண்ட பீபி நாச்சியார்ன்னு  கோவில்கட்டி கும்பிட ஆரம்பிச்சது சனம்,.
Thanks to Deepak Saagar

தில்லிக்காரிக்கு சோறு ஆகாதுன்னு  சப்பாத்தி நைவேத்தியம்  ஸ்பெஷலா நடக்குது இங்கே! பெருமாள் லுங்கி கூடக் கட்டிக்கறானாம்!  எங்காத்துலே பழக்கம் இல்லைன்னு  சொல்லி மனசை நோகடிக்காமல் உனக்காக இதையெல்லாம் நான் செய்வேன்னு சொல்லிச் செய்யறான் பாருங்க அந்த அன்புதான் பெருசு.

 ஒளிச்சு வைக்கப்பட்ட அழகியமணாளனை ஒரு வழியா பெரிய கோவிலுக்குக் கொண்டு வந்துடறாங்க. இங்கிருந்து போனவன் , திரும்பிவர அறுவது ஆண்டுகளாச்சாம். இதுக்கிடையில்  கொஞ்ச நாளுக்கு முன்னாலே  பூமிக்கடியில் ஒளிச்சு வைக்கப்பட்ட ரங்கநாயகித் தாயாரின் திருவுருவம்,  தானே கிளம்பி  மேலே வந்துருக்கு! தாயார் சிலை எங்கிருக்குன்னு தெரியாமல் அல்லாடிய  அன்பர்களும் அரசனும்  வேற ஒரு சிலை செய்து மூலவராக்கிட்டாங்க.  இப்ப ஒன்னு மண்ணில் இருந்து கிளம்பியதும் என்ன செய்யறதுன்னு  யோசிச்சு,  இவர்தான் ஒரிஜினல்னு புரிஞ்சுபோனதால்  இவரை மறுபடியும் தாயார் சந்நிதிக்குள்ளேயே  ஸ்தாபனம் செஞ்சாங்க. அதுவரை மூலவரா ஆக்ட் கொடுத்தவரை அப்படியே ஒதுக்கித் தள்ளிட  முடியுமா?  அதனால் தாயார் சந்நிதியில் இப்போ  ரெண்டு மூலவர்களும் இருக்காங்க.

இப்பத் திரும்பி வந்த அழகியமணவாளன் கூட ஒரிஜினலா இல்லையான்னு சந்தேகம் வந்துருது.  இவன் கூடப்போனவர்கள் யாருமே இப்போ உயிரோடு இல்லை.  இவனைத் தெரிந்த பக்தர்கள் யாராவது இருக்காங்களான்னு தேடுனப்ப,  90+ வயசில் ஒருத்தர் கிடைக்கிறார். பெரும்ஆளுக்கு உடைகளைத் துவைச்சுக்கொடுத்த பெரியவர்.  மூத்து ,வயசாகி இப்போ கண்பார்வையும் இல்லை இவருக்கு.   'பெருமாளைக் குளிப்பாட்டிய திருமஞ்சன நீர் கொடுங்கோ, இவர் நம்மவரா'ன்னு சொல்றேன்னார். அப்படியே ஆச்சு.  அதை  முகர்ந்து  சுவைத்தவர்,  கரகரன்னு கண்ணில் நீர் வழிய 'இவர் நம்பெருமாளே, நம் பெருமாளே' ன்னு பக்திப் பெருக்கால் கூவினார்.  அப்போலெஇருந்துதான்  அழகியமணவாளருக்கு  நம்பெருமாள் என்ற பெயர் கிடைத்தது!  அழகியமணவாளரின் திருமஞ்சன நீருக்கு அப்படி ஒரு தனிச்சுவையும் மணமும் உண்டாம்!!!!

சேரகுலவல்லி?  நம்ம குலசேகராழ்வாரின் மகள். சேர நாட்டு மன்னர் குலசேகரர் , பெருமாளிடம் அளவில்லாத பக்தி.  அவர் 'படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'ன்னால்  அவர் மகள் இன்னும் ஒரு படி மேலே போய்  கல்யாணமுன்னு பண்ணிக்கிட்டால் உன்னைத்தான்னு சொல்லிட்டாள்.  ஒரு நாள் கல்யாணமும் ஆச்சு. அன்னிக்கு ஸ்ரீராம நவமி வேற!  பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தவர், மாமனார் என்ற ஹோதாவில் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காம எதுவும் வேணாம்  உன் கோவில் வாசலில் ஒரு படியாகக்கிடந்தாலும் போதும் என்கிறார்.

செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இப்படி டௌன் டு எர்த் ஆகி பரமபதநாதனை விட்டால் வேற யாருமில்லைன்னு இருந்தே ஆழ்வார்கள் வரிசையில் சேர்ந்துட்டார்  நம்ம குலசேகராழ்வார். திருப்பதி வேங்கடவனுக்கும் திருவரங்கம் ரெங்கனுக்கும்  நிறையச் செய்கிறார்.  பெரிய கோவிலில் மூணாவது சுற்றுக்கே குலசேகரன் திருவீதி என்றுதான் பெயர்.

நம்ம ரெங்கனுக்கு  ஏகப்பட்ட  நாச்சியார்கள் இங்கே!  எண்ணிப்பார்த்தால் பனிரெண்டுன்னு  தாளிச்சுட்டாங்க நம்ம ஜெயஸ்ரீ.

அன்னமூர்த்தியைப் பற்றி விசாரிச்சதில்  கொஞ்ச நேரம் யோசித்த கே எம்  கொடிமரத்துக்கு வலது  பக்கத்தில்  இருக்குன்னு நினைக்கிறேன் என்றார். இதுக்குள்ளே நாங்க பேசிக்கிட்டே  வெளியே நாலாம் சுற்றுக்கு  (ரெங்கவிலாஸின்  மறுபக்கத்துக்கு )வந்திருந்தோம். சரி. நாங்க பார்த்துக்குறோம். உங்கள் சேவை   வேற யாருக்காவது  தேவைப்படுமுன்னு  அவருக்கு நன்றி சொல்லிட்டு நாங்க தேடிக்கிட்டு இருந்தோம். கடைசியில்  கொடிமரத்துக்கு  வலது பக்கம்  வெளி முற்றத்தை நோக்கி ஒரு மூலையில் சந்நிதி ஒன்னில் தனியா ஆடாம அசையாம உக்கார்ந்துருக்கார் அன்னமூர்த்திப்பெருமாள். ஒரு கை அபய ஹஸ்தம் காண்பிக்க மறு கையில் சோற்றுருண்டை!  கொஞ்சம்கூட வருமானமே இல்லாத சந்நிதி போலிருக்கு. ஈ காக்காவைக் காணோம். நமஸ்காரம் செஞ்சு  ஃப்யூச்சர் ரசஞ்சாதத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மன்றாடிட்டு   வெளியே  அதே ரெங்கவிலாஸின்  மறுபக்கத்துக்கு(சக்ரத்தாழ்வார் சந்நிதி  இருக்கும்  பக்கம்) வந்தோம்.
Thanks to Hindu.


மண்டபத்தில்  இருக்காள் ஆண்டாள்!  கால்களைக் கொஞ்சம் கொஞ்சமாக் கவனமா வச்சு ரிவர்ஸில் நடப்பதை  வியப்போடு பார்த்தேன்.  மண்டபத்தின் ஓரத்துக்கு வந்துட்டாள். இன்னும் கொஞ்சம் நகர்ந்தால் தொபுக்கடீர் என்று விழநேரிடும். அப்போ ஒரு பணியாளர் பெரிய ப்ளாஸ்டிக் ட்ரம்மைக் கொண்டு வந்து வைக்க,செல்லம் ஒன் பாத்ரூம் போறதுப்பா!!!!  கேமெரா டிக்கெட்  வாங்கிக்கலையேன்னு  இருந்தாலும், பாவம் பொண். எதுக்குப் படமெடுக்கணும்?   ப்ரைவஸி வேணாமான்னு  இருந்துட்டேன்.   அவளுக்கு முன் கூட்டம் கூட ஆரம்பிச்சது.  நல்லா இருடீம்மான்னு வாழ்த்திட்டு  ரங்கா  ரங்கா கோபுரத்தை முற்றத்துள்ளிருந்து ஏறிட்டு பார்த்துட்டு வெளியே வந்தோம்.இனி எப்போ வரப்போறோமோன்னு இருந்துச்சு.

கோவில் கோபுரங்களும் மண்டபங்களும் பல பகுதிகளும்  தில்லிப்படையினரால் அழிக்கப்பட்டு பலமுறை சேதமாகி இருக்கு. கோவிலுக்குள்ளேயே வந்து குடி இருந்துருக்காங்கன்னா பாருங்க:( பக்தர்களும்  அப்போதிருந்த மன்னர்களும் மனம்தளராமல் மீண்டும் மீண்டும் புதுப்பிச்சுக்கிட்டே இருந்துருக்காங்க. அதனால்தான் நமக்கு இவ்வளவாவது  காணக்கிடைச்சிருக்கு.

ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகள் எல்லாம் தில்லிப்படை வரும்வரை ஒழுங்காவே நடந்துருக்கு. அப்புறம்தான் சில மாற்றங்கள் சப்பாத்தி சமாச்சாரம் எல்லாம்  அப்புறம் வந்தவையே!  பொதுவா நாம் வெத்தலை போட்டுக்க சுண்ணாம்பை வெத்தலையின் பின்புறத்தில் தானே தடவுவோம். இங்கென்னன்னா பெருமாளுக்குத் தாம்பூலம் தரும்போது வெற்றிலையின் முன்பக்கத்தில் சுண்ணம் தடவுறாங்களாம். எல்லாம் ஸோ அண்ட் ஸோ படையெடுத்து வந்தபின்  ஏற்பட்ட மாறுதலே!

நம்ம கீதாம்மா இருக்காங்களே (கீதா சாம்பசிவம்)  அவுங்க இந்தப்  படையெடுப்பினால்  ரெங்கன் பட்ட பாட்டையெல்லாம்  ஆராய்ந்து  ரொம்பவே அருமையா ஒரு தொடர் எழுதி இருக்காங்க.  ஒரு 27 இடுகைகள் இதுவரை. வரலாறு  ஒரு 15 பகுதிகள். அதுக்கப்புறம் அங்கே கொண்டாடப்படும் விழாக்களைப்பற்றிய விரிவான வர்ணனைகள் என்று தொடர் அபாரம்!  நான் ரசித்துப் படிக்கும் தொடர்களில் இது(வும்) ஒன்னு.  முதல்  முகவுரை இது.இப்படியே நூல்பிடிச்சுப்போய்  வாசிங்க.  உங்களுக்கெல்லாம் கட்டாயம் பிடிச்சுப்போகும்,ஆமாம்!


இங்கே நியூஸி, ஆஸி, சிங்கைன்னு  அநேகமா எல்லா வெளிநாடுகளிலும் ஒரு அம்யூஸ்மெண்ட் பார்க் போனால் கூட எதெது எங்கே இருக்குன்ற விவரங்கள் அடங்கிய மேப் ஒன்னைக் கையில் கொடுத்துருவாங்க. நமக்கும் எதையும் விடாமப் பார்த்து அனுபவிச்ச  திருப்தி இருக்கும்.

இங்கே இது ஒன்னும் சின்னக்கோவில் இல்லை.156 ஏக்கர்!  கிட்டத்தட்ட 80 சந்நிதிகள், கணக்கில்லாத மண்டபங்கள் என்று இருக்கும்போது  கோவில் வரைபடம் ஒன்னு  அச்சடிச்சு விற்றால்கூட ரொம்பப் பயனாக இருக்கும். நமக்கும் எந்த சந்நிதியையும் விடாமல் பார்த்த மனநிறைவு இருக்கும்தானே?

இப்பப் பாருங்க  மூணு முறை வந்தும் பார்க்காமல் கோட்டை விட்டவை அநேகம்.  ஹனுமன் சந்நிதிக்குப் பக்கம்  தங்கவிமானம் பார்க்க ஏறிப்போகும் படிவரிசை கூட  இருக்காமே!

ஸ்ரீரங்கம் விட்டுக் கிளம்புமுன்  கடைசியா காஃபி ஒன்னு குடிக்கணும். அதுவும் அந்த முரளி கடையில் என்று தோணுச்சு. சீனிவாசன் போய் விசாரிச்சுக்கிட்டு வந்து   வண்டியை அங்கே செலுத்தினார்.  ஸ்ரீரங்கம் போலிஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கு கடை.  பயங்கரமான கூட்டம்!  வண்டியை நிறுத்த இடமில்லை. ஸ்டேஷன் வாசலில் டபிள் பார்க்கிங் போட முடியுமா?  நாங்க மட்டும் இறங்கினோம்.  கோபால் போய் பத்து ரூபாய்  ஒரு கப் என்று ரெண்டு காஃபி வாங்கியாந்தார்.




நல்ல காஃபியா இருந்துச்சு.  வெளியே நிறைய மேசைகள் மட்டும் போட்டு, நின்னவாக்குலே குடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.  பெரிய பெரிய பித்தளை ஃபில்ட்டர்களில் டிகாஷன் இறங்கிக்கிட்டே இருக்கு ஒரு பக்கம். பணியாளர்கள் எல்லாம்  பயங்கர பிஸி. சுறுசுறுப்பாய் வேலையில் மூழ்கி இருந்தாங்க. பெயர்ப்பலகை கூட இல்லாமல் சிம்பிளா பலவருசங்களா நடக்குதாம் இந்தக் காஃபிக் கடை!












இருளில் வண்டி திருச்சியை நோக்கிப் போனது.  கோவிலை சரியாப் பார்க்கவே இல்லைன்னு  முணுமுணுத்தேன்.  மூணு முறை வந்துமான்னார் கோபால். ஆமாம்னு  நான்  தலையாட்டியது இருட்டில் அவருக்குத் தெரிஞ்சுருக்குமோ?



தொடரும்.............:-)





50 comments:

said...

என்ன அழகா சுத்திக்காட்டியிருக்கீங்க? தெளிவான படங்களும் தகவல்களுமாக நேரில் சென்று வந்த அனுபவத்தை உணர்கிறேன். நேரில் சென்றிருந்தால் கூட தரிசிக்க முடியுமே தவிர இத்தனை விவரங்களை சேகரித்திருக்க இயலுமா தெரியவில்லை. கிள்ளிமண்டபம் கிளிமண்டபமானது வேடிக்கை. தில்லி நாச்சியாருக்கு சப்பாத்தி நைவேத்தியமாவது அறிந்து வியப்பு. காஃபிக்கடைக்கு மட்டுமே பதினொரு புகைப்படங்கள்! காஃபியின் ருசி அதிலேயே புரிகிறது. பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

said...

சில சமயம் பார்த்ததையே பார்த்தாலும் பார்க்காத மாதிரியேதான் இருக்கும்.

said...

அருமையான பதிவு
இதில் எந்தத் தகவலும் தெரியாமல்
ரெங்கனை சேவித்து வந்ததோடு சரி
தங்கள் பதிவைப் படித்ததும் திருப்தியாய்
ஒருமுறை ரெங்கனைச் சேவிக்கனும் என
மனம் அல்லாடுகிறது
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
வாழ்த்துக்கள்

said...

கோவில் வரைபடம் ஒன்னு அச்சடிச்சு விற்றால்கூட ரொம்பப் பயனாக இருக்கும். நமக்கும் எந்த சந்நிதியையும் விடாமல் பார்த்த மனநிறைவு இருக்கும்தானே?

நிறைய முறை சென்றிருந்தாலும் ஒவ்வொன்றின் சரித்திரங்களையும் ஆராய ஆவல் வந்தது பதிவுகள் எழுத ஆரம்பித்தபின்னால்தான் ..

said...

மனசு நெறஞ்சு போச்சு !! ஆனா கனக்கவும் செய்யுதே ஏன்னுதெரியல . இத்தனை நாளும் துளசியோடும் ரங்கனோடும் (பதிவு படிச்ச நேரம் போக ) மீதி நேரங்களிலும் கோவில் , மனசுல ஓடிட்டே இருந்தது .
இன்னும் ரங்கனை பத்திஎழுதிட்டே.....இருந்திருக்கலாம்னு தோணுது.
மனதிர்க்கு மிகவும் நெருங்கிய என்னைக்கும் அகலாத பதிவு .

said...

ஸ்ரீரங்கம் முடிஞ்சதும் தொடர் முடிஞ்சிருமோன்னு நெனச்சேன். தொடரும்னு முடிவில் பாத்துட்டுதான் நிம்மதியாச்சு. தொடருங்க :)

said...

நன்றி மீண்டும் வருகன்னு சொல்லி இருப்பார்பா. வருத்தப் படாஅதீங்க. ஒவ்வொரு சந்நிதியும் ஒவ்வொரு நாள் அனுபவிக்கணும்.

எவ்வளவு தகவல்கள் துளசிமா.
சப்பாத்தியை வர் கண்டருளத்தானே செய்கிறார்.
நம்ம வீரராகவன் கூட துப்பட்டிதானே போட்டுக்கறார்.
அவன் நம்மை ஆட்டிவைத்தது போக நாம்தான் அவனை ப் படுத்துகிறோமா?

said...

கூடவே பயணித்த திருப்தி...

காஃபி உடனே குடிக்கணும் போல் உள்ளது...

said...

சுத்தமான கோயிலை சுத்திபார்த்த சந்தோசம்.ஆனா காப்பியை கண்ணுல மட்டும் பார்க்க முடியுது

said...

இதை பின்னூட்டமாக அனுப்பவில்லை . ஒரு விபரம் தேவை. ஆதி ரங்கா , மத்ய ரங்கா பற்றி எழுதி .இருக்கீங்களா அடுத்த வாரம் செல்ல இருப்பதால் விவரம் துளசியிட மிருந்து தெரிந்து கொண்டு சென்றால் முழுசா பாத்துட்டு வரலாம் இல்லையா. தனி மடலில் அனுப்பினாலும் சரி பின்னூட்டமாக அனுப்பினாலும் சரி . THANK YOU .

said...

கல்லுரல், வடைக்கரண்டி, ஆப்பத் தட்டில் பதிவை ஆரம்பிச்சி...
காபி பில்டரில் கொண்டு முடிச்ச ஒங்க தெறமையே தெறமை டீச்சர்:)

அந்தப் பெரிய பெரிய பித்தளை பில்டர்களைப் பாக்கும் போதே, எனக்கு மனசெல்லாம் மணக்குது;

நல்ல - காபி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம்:)
----

இந்த வருசம் திருச்செந்தூரு-ல அர்த்த சாம பூசை முடிச்சிட்டு..
என் முருகனுக்கு முத்தம் குடுத்து, பள்ளியறைக்கு அனுப்பிட்டு..

முத்தம் குடுத்த வாய்க்கு ஒரு காபி கெடைக்குமா -ன்னு ஏங்கித் தவிச்சேன்; அம்புட்டு பசி + சோர்வு;

கடையெல்லாம் பூட்டியாச்சி;
கடக் காத்து சும்மா ஏகாந்தமா அடிக்குது;
ஒரு சின்னப் பொண்ணு சுண்டல் வச்சிக்கிட்டு (வித்துக்கிட்டு) இருந்தா, ஆளே இல்லாத கட்ற்கரை மண்டபத்துல; சும்மாப் பேச்சு குடுத்தேன்;

யாரும் இல்லாத இடத்துல, என்னமா இம்புட்டு ராத்திரில வித்துக்கிட்டு இருக்கே? -ன்னு கேட்டேன்;

பள்ளிக்கூடம் முடிச்சிட்டு, தெனமும் அம்பது ரூவாயாச்சும் விக்கலை-ன்னா, சித்தி வீட்டுக்குள்ள சேக்க மாட்டாங்களாம்; இன்னிக்கி முப்பது ரூவா தான் வித்துருக்கு -ன்னு அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கா:(

பசிக்குது-ம்மா ன்னு சொன்னேன்!

சில வருடங்களா, ஏதோ என் தனிப்பட்ட துன்பம்; பசி;
அவ கிட்ட சொல்லும் போதே கண்ணு கலங்கிருச்சி;

அண்ணா, உக்காரு-ண்ணா -ன்னு சொல்லி, அவ கிட்ட இருக்குற பேப்பரையே, இலை போல பரப்பி வச்சி, சுண்டலைச் சோறு மாதிரி போட்டா...

முருகா... அன்னிக்கி ராவுல அப்படியொரு பசியில தின்னேன்!

திடீர்-ன்னு எங்கோ ஓடிப் போனா; ஐஞ்சு நிமிசத்துல காபி டம்ளரோட வரா;
ரொம்ப சோர்வா இருந்தேனாம்; மொகமே காட்டீக் குடுத்துருச்சாம்; பக்கத்துல எங்கோ கருப்பட்டிக் கடை இடுக்குச் சந்துல காபி...

பத்து ரூவா காபி; நான் இன்னும் சுண்டலுக்குக் காசு கூட குடுக்கலை;
அவ வித்த காசுல வாங்கியாந்த காபி;

அன்னிக்குத் தான் நான் குடிச்ச காபில, அப்பிடியொரு சூடு, மணம், நுரை...

said...

அப்பறம் பசி அடங்கி, சும்மாப் பேசிக்கிட்டு இருந்தோம்;
எட்டாப்பு படிக்குறா போல; நூறு ரூவா குடுத்தேன்;

காபிக்கும் சுண்டலுக்கும் சேத்து முப்பது ரூவா தான் ஆச்சாம்; மேல வாங்க மாட்டேங்குறா:)

சில்லறை இல்லம்மா; எல்லாம் ஐயரு தட்டுலயே போட்டுட்டேன் -ன்னு சொல்லுறேன்;
சும்மாச் சொல்லாத-ண்ணே, ஐயரு நூறு ரூவா கம்மியா ஒங்க மாதிரி ஆளுங்க கிட்ட வாங்க மாட்டாரு-ன்னு சொன்னாப் பாருங்க...
ரொம்ப நாள் கழிச்சி, ஒரக்கவே சிரிச்சிப் புட்டேன்:)

Finally we settled for a deal;
நூறு ருபாய்க்கும் சுண்டல் கட்டிக் குடுத்தா;
அடேங்கப்பா... என் முருகன் வீட்டுல ஒரே ஒரு "மானஸ்தி";
---

வீட்டுக்கு அவ போவலை; பூட்டி இருக்குமாம்; கருக்கல்-ல்ல போயீருவாளாம்;
நானும் ஓட்டலுக்குப் போவலை; பேசிக்கிட்டே இருந்தோம்;

அருணகிரி திருச்செந்தூர் வந்த போது, முருகன் நடனம் ஆடிய கதையை/ பாட்டைச் சொன்னேன்;
தாலாட்டா பாடிக் காட்டின போது, நல்லாப் பாடுற-ண்ணே; ஒன்னைய கட்டிக்கப் போறவக குடுத்து வைச்சவக-ன்னு ஆசீர்வாதம் வேற:))

பேரு என்னம்மா-ன்னு கேட்டேன்;
"உச்சிமாகாளி";

அடுத்த நாள் காலை-ல, தோழனின் தூத்துக்குடிக்கு, புதுக் கிராமம் பாக்கப் போகணும்;
போயிட்டு வரேம்மா -ன்னு சொன்னேன்;
முருகன் இருப்பான்; கண்ணுல தண்ணி வுடாத-ண்ணே; ஆம்பிள அழுவக் கூடாது-ன்னா பாருங்க;

அவ கிட்ட "நாயகி பாவம்" விளக்கமா என்னால சொல்ல முடியும்?
தூத்துக்குடி செல்லும் வழியெல்லாம், தோழனின் நினைவுகளையும் மீறி, முருகன் நினைவுகளையும் மீறி... அந்த "உச்சிமாகாளி"யின் நினைவுகளே! அவ காபியின் சூடே;

said...

ஸ்ரீரங்கம் விட்டுக் கிளம்புமுன் கடைசியா காஃபி ஒன்னு குடிக்கணும். அதுவும் அந்த முரளி கடையில் என்று தோணுச்சு. //

உங்களுக்கு தோன்றிய எண்ணம் காப்பி பிரியர்களுக்கு நல்லது.
ஸ்ரீரங்கம் போனால் நல்ல காப்பி குடிக்கலாம் தானே!
பித்தளை பில்டர்கள் பள பள என்று இருக்கிறது.

கண்ணபிரான் சொன்ன சுண்டல் சிறுமி மனதை கனக்க வைத்தாள்.
கருப்பட்டி காப்பி மணக்குது அந்த சிறுமியின் மனம் போல்.

said...

//கிள்ளி மண்டபம்//

அங்கிட்டு, எல்லாரையும் பெருமாளு சடாரி சார்த்திக் கிள்ளுவாராம்:)

கிளி, மண்மேட்டில், அரங்க விமானத்தைக் கண்டு புடிச்சது = "கதை";
அந்தச் சோழன் பேரு = தர்மவர்மா (தருமவர்மன்); அப்பிடியொரு சோழன் வரலாற்றில் இல்லை:)

ஆனா, கிள்ளி வளவன் = கரிகாற் சோழனின் பேரன்;
அவன் தான், அரங்கன் ஆலயத்தை, முதன்முதலில், ஒரு ஒழுங்கு செய்தது; அதான் கிள்ளி வளவன் மண்டபம்!

புறநானூற்றில், கோவூர் கிழார் பாடுவாரு;
குள முற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்;
----

//பூமிக்கடியில் ஒளிச்சு வைக்கப்பட்ட ரங்கநாயகித் தாயாரின் திருவுருவம்//

ஒரே கருவறையில், இரட்டைப் பிள்ளை (Twins) தெரியும்;
ஒரே கருவறையில், இரண்டு தாயார்கள்?

எங்குமே காணாத வகையில்,
இது திருவரங்கத்துக்கு மட்டுமே அமைந்த பெருமை!

அரங்க நாச்சியார், அம்மா-அம்மா என்று, அம்மம்மா!
ஆயிரம் மோகினி வேடம் அவரு போட்டாலும், இவ கண்ணில் இருக்கும் கருணை மட்டும், அவருக்கு வரவே வராது;

முகம் பொழி கருணை போற்றி!

said...

//அன்னமூர்த்திப் பெருமாள் - நமஸ்காரம் செஞ்சு ஃப்யூச்சர் ரசஞ் சாதத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மன்றாடிட்டு//

:)
பாவம், அவருக்கே ரசஞ்சோறு கெடைக்குதோ என்னமோ?
Btw
* திருவரங்கத்தில் ரசஞ்சோறு = சாற்று அமுது (புளிச்-சாறு + அமுது)
* பாயசம் = திருக் கண் அமுது
* பீடா/ வெற்றிலை = இலைக் கறி அமுது

அரங்கன் சாப்பிட்டான் = "அமுது செய்து அருளினான்"
இதான் பெருமாளுக்கு, "அம்சி அம்சி" -ன்னு திரிஞ்சி போச்சி:))

எழுந்தருளப் பண்ணுதல் = ஏளப் பண்ணுதல்! என்ன ஏளனமோ?:)

said...

//பெரிய ப்ளாஸ்டிக் ட்ரம்மைக் கொண்டு வந்து வைக்க,செல்லம் ஒன் பாத்ரூம் போறதுப்பா!!//

he he
see, even a 5 aRivu knows how to control;
& behave properly in public place!

அரங்கன் கோயில் யானை = ஆண்டாள்;
அதன் அழகே தனி;
ஆனைக்கா சாந்தி போல!

அம்மா மண்டபத்தில் இருந்து ஒரே குடம் காவிரி நீரெடுத்து வரும்!
அப்போ ஆடாமல் அசையாமல், தண்ணி தளும்பாம வரும் அழகைப் பார்க்கலாம்!

விடியலில், ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி முடிந்த பின், இதுக்குத் தான் முதல் சேவை;
அரங்கனின் சூடிக் களைந்த மாலை, இதற்கே அணிவிக்கப் படும்!

இனிமேலாச்சும், கோயிலில், ஆண்டாள் என்னும் பெண் யானையை ஆயுசுக்கும் தனியே நிறுத்தாமல்,
அது கூட ஒரு வாழ்க்கைத் துணையை நிறுத்தி வையப்பா, அரங்கா;

காதல் மடப் பிடியோடு
களிறு வருவன கண்டேன்!

said...

உங்களுக்கு யானை மீது கூடுதல் பிரியம் போல! :-)

KRS பின்னூட்டத்தையே ஒரு பதிவாக்கிடலாம் போல இருக்கே.. :-) காஃபி தலைவலி என்றால் மட்டும் குடிப்பேன்... இல்லை போர் அடித்தால் டைம் பாஸ் செய்ய குடிப்பேன்.

அந்த பித்தளை பாத்திரம் ஃபில்டர் காஃபி போடவா! நான் கூட வேற எதுக்கோ என்று நினைத்து விட்டேன்.

said...

கிளிமண்டபத்தில் ஒரு பெரிய வெண்கல் மணி ஆளுயரத்திற்கு மேல் இருக்கும் .
அதில் விபரம் பொறிக்கப்பட்டிருக்கும், ....

அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில்
அரங்க தங்க விமானத்தின் அருமையான காட்சி கிடைக்கும் ...

said...

//ஹனுமன் சந்நிதிக்குப் பக்கம் தங்கவிமானம் பார்க்க ஏறிப்போகும் படிவரிசை கூட இருக்காமே//

yessu:)

எவ்ளோ-ன்னு தான் பாப்பீங்க டீச்சர்?
* கற்பூரப் படியேற்றம்-ன்னு இருக்கு;
* சேனை முதலியார் உள்ளறை
* வீடணன் & அனுமன் நித்ய சிரஞ்சீவிகளாக இருக்கும் தொழுவறை
* மூலவர் கருவறையை ஒட்டிய, உள் நாழி (உண்ணாழி)
* "ஓம்" என்று சுழித்து நிக்கும் பிரணவ விமான - அணுக்க சேவை
* கார்த்திகைக் கோபுரக் காட்சிகள்
* வட திருக் காவேரி - தென் திருக் காவேரித் துறைகள்
* திருமங்கை ஆழ்வார் துறை
* கைத்தல சேவை
* நாச்சியார் (மோகினி) திருக்கோலம்
* மட்டையடி விழா = அரங்கனை பழங்களால் அடிச்சி, துவம்சம் பண்ணும் பங்குனி உத்திரப் பெண்கள் கட்சி:)

எல்லாத்துக்கும் மேலா...
நம்மாழ்வார் அவன் காலடியில் "துளசியால்" மூழ்கி மறையும் நம்மாழ்வார் மோட்சம்!
-------

//இருளில் வண்டி திருச்சியை நோக்கிப் போனது.
கோவிலை சரியாப் பார்க்கவே இல்லைன்னு முணுமுணுத்தேன்.
மூணு முறை வந்துமா?-ன்னார் கோபால்//

ha ha ha
நீங்க எத்தினி முறை போனாலும், "முழுக்க"ப் பாக்கவே முடியாது;
குறை வச்சியே அனுப்புவாரு அப்பா; Too Selfish:)

அவனைப் பாக்கும் "நிறைவு" - அதை நிறைவடையவே விட மாட்டானாம்!

* ஏய், என் காதலியே,
உன்னைக் கூடும் போதெல்லாம், உன்னைப் புதுசு புதுசா அறிகிறேன்;
* அப்படி அறியும் போதெல்லாம், உன்னிடம் நான் இன்னும் அறியாதது எவ்ளோ இருக்கோ? -ன்னு ஏங்குகிறேன்டீ:)

அறிதோறும் அறியாமை கண்டற்றால் = குறள்

இதை அப்படியே 32 வயசு மாறன் பையனும் (நம்மாழ்வார்), நாயகி பாவத்தில் பாடுவான்(ர்)

காமத்தில் "நிறைவு" என்பதே இல்லை;
அதே போல், காமரு ஆழ்வார்-அரங்கனிடமும் "நிறைவு" என்பதே இல்லை:)

said...

சசி கலா,

ஆதிரங்கம், ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம், ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம், திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
சதுர்த்தரங்கம், சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)
பஞ்சரங்கம், பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர் (தமிழ்நாடு)


இதுலே ஸ்ரீரங்கமும் திரு இந்தளூரும் இதே தொடரில் விவரமா இருக்கு.
ஆதி ரங்கம் போனபோது நான் பதிவர் ஆகலை:(

சதுர்த்தரங்கம் நம்ம நவகிரக கோவில் பயணத்துலே எழுதியாச்சு.

இன்னும் கோவிலடிதான் போகலை

நிற்க, திருச்சிக்குப் பக்கத்துலேயே இருக்கும் ஆதி நாயக் கோவிலுக்கு முடிஞ்சாப்போயிட்டு வாங்க. இதைப்பற்றி நம்ம ஸ்ர்ர்ரங்கம் தொடரில் குறிப்பிட்டு இருக்கேன். (கயிறு கட்டிய பெருமாள்!)

உங்க மெயில் ஐடி இல்லைன்னு இங்கே சொல்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி

said...

அந்த காபி அப்படியே டவராவிலே இருக்கே !!
குடிக்கலயா..?

எனக்காக ஒரு வேளை வைட் பண்றீகளோ என்னமோ தெரியல்ல...

கொஞ்சம் பொறுங்க...

கிளம்பி வந்துகினே இருக்கேன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

said...

சூப்ப‌ரா எழுதுறீங்க‌ம்மா.. தொட‌ர்ச்சியா ப‌டிச்சிட்டு வ‌ர்றேன்.. சும்மா ப‌ட‌ம் போட்டு நாலு வ‌ரி எழுதாம‌ ஹிஸ்ட‌ரி எல்லாம் எழுதுற‌து ந‌ல்லா இருக்கு.. அடுத்த‌முறை நாங்க‌ இந்த‌ இட‌ங்க‌ளுக்கு போகுற‌ப்ப‌ முற்றிலும் வித்தியாச‌மான‌ அனுப‌வ‌மா இருக்கும்.. கோவில் மேப் ந‌ல்ல‌ ஐடியா.. எதாவ‌து கோவில் ஆபிச‌ர்ஸ் இமெயில் ஐடி இருந்தா த‌ட்டிவிடுங்க‌..

said...

அப்பால ரங்கம் - இது இரண்டாவது - திருப்பேர் நகர் எனப்படும் கோவிலடி.

மத்யரங்கம் திருவரங்கம் - மூன்றாவது தான்.

கோவிலடி திருவரங்கத்தினை விட பழைய கோவில்.

முரளி காஃபி குடிச்சாச்சா எனக்கு இப்பவே குடிக்கணும் போல இருக்கு!

said...

நன்றி துளசி !!!என் மெயில் id உங்களுக்கு தெரியும்னு நெனச்சேன் , பின்னூட்டம் அனுப்பறதால . எப்படி உங்களுக்கு என் id
தெரியப்படுத்துவதுனு எனக்கு தெரியல ... sorry

said...

எத்தனை தடவை பார்த்தாலும் அடங்காது.

நிறைந்த படங்கள் தகவல்களுடன் மனம் குளிர யாத்திரை வந்தோம். நன்றி.

said...

வாங்க கீதமஞ்சரி.

பல கோவில்களுக்கும் போயிருந்தாலும் போனோமா சாமி கும்பிட்டோமா வந்தோமான்னுதான் இருந்துருக்கேன், ரசனைகளை வளர்த்துக்குமுன்பு!

பதிவர் ஆனதும் பார்வையே மாறிடுச்சேப்பா:-))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

மனசும் நிறையலை கண்ணும் நிறையலை என்பதே உண்மை:(

said...

வாங்க ரமணி.

மனசில் பற்றே இல்லாமல் பற்றற்றவனை(?) ஸேவித்தல்தான் சரி. வித்யாசமா என்ன தெம்படுமுன்னு கண்ணு அலைஞ்சால் நல்லாவா இருக்கு:-))))

said...

வாங்க ரமணி.

மனசில் பற்றே இல்லாமல் பற்றற்றவனை(?) ஸேவித்தல்தான் சரி. வித்யாசமா என்ன தெம்படுமுன்னு கண்ணு அலைஞ்சால் நல்லாவா இருக்கு:-))))

ஆனாலும் ரெங்கனை இன்னொருமுறை ஸேவித்தால் நன்றாகத்தான் இருக்கும். மனம் கிடந்து அல்லாடுதே!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பதிவர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு:-)
கோவில் விளக்கங்களை விவரிச்சுச் சொல்ல உங்களை விட்டால் வேற யாரு இருக்கா இங்கே சொல்லுங்க. நாம் பதிவர் ஆனதே நான் கண்ட இன்பம் ,பெறுக இவ்வையகம் என்பதால் தானோ?

எல்லாம் பெருமாள் கிருபை!

said...

வாங்க சசி கலா.

ரெங்கனைப்பற்றி அதான் நாலாயிரம் எழுதி வச்சுப்போயிருக்காங்களே! அதையெல்லாம் படிச்சு, புரிஞ்சு மகிழ்ச்சி அடையணும் நாம்! அந்த மஹா சமுத்திரத்தில் ஒரு துளி கிடைச்சாலும் போதுமே!!!

said...

வாங்க ஜிரா.


அப்படியெல்லாம் சட்னு விட்டு விலகும் ஆளா நான்? பிடிச்சால் குரங்குப்பிடிதான்:-)

இன்னும் கொஞ்சம்வதை பாக்கி இருக்கு:-))))

said...

வாங்க வல்லி.

அவன் படுத்துனா, அதுக்காக நாம் சும்மாவா இருப்போம்:-) பாவம் அவனை ஒரு நிமிசம் கண்ணயர விடறதில்லை திருப்பதியில்:( பணங்காய்ச்சி மரமா அவனை ஆக்கிட்டோமோ!!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நீங்களெல்லாம் கூடவருவதால்தான் நான் நிம்மதியாப் பயணிக்க முடியுது.

வாங்களேன் பொடிநடையாப்போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வரலாம்:-)

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

வர்ச்சுவல் உலகமல்லவா. (வலையில்) கண்ணால் கண்டதோடு மனசில் நிறைச்சுக்கணும்:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

அன்னைக்கு அந்தச் சின்னத் தங்கைதான் தாயுமானவளா இருந்து உங்க பசியை உணர்ந்து உபசரிச்சு இருக்காள்! நல்லா இருக்கணும் அந்தப்பொண்ணு!! இப்படித்தான் சாமி எதிர்பாராத இடத்தில் காட்சி கொடுத்துருது!!!

உச்சிமாகாளி!! என்ன ஒரு அருமையான பெயர்!!!!

கோவில் யானையைப் பத்தி முந்தி சொன்னது இங்க்ஜே இன்னொருக்கா ரிப்பீட்டணும் நான்.

யானையை யானையா தன்னிச்சையா இருக்கவிடணும். எப்பேர்ப்பட்ட ஜீவன். அதை தனியா ஒற்றைப்படுத்தி வளர்ப்பதுகூட அநியாயமுன்னு தோணுது. பேச்சுத் துணைக்காவது அதுக்கொரு ஜோடி அதே இனத்துலே வேணும்தானே? எத்தனை நாளுக்கு மனுசப்பயல்களோடு போரடிச்சுக்கிட்டு இருக்கும்?

ஒருவேளை ஜோடியா இருந்தா தன் குடும்பம் குழந்தை குட்டின்னு மனுசப்பயலுவளைப் பார்த்துப் படிச்சுக்குமோன்னு பயமா இருக்குமோ?

மோகினி பற்றிச் சொன்னது ரொம்பச் சரி. என்ன தான் ஆம்புளை பொம்பளை வேசம் கட்டினாலும் பெண்களைவிட அழகா அம்சமா இருக்குமே தவிர பெண்களுக்கே இயல்பா உள்ள கருணைக் கண்கள் வராதுதான் அம்மா! விதிவிலக்கு தாயுமானவன்!

அவனுக்குத்தான் குறையொன்றுமில்லை. நமக்கோ ஏராளமான குறைகள், அவனாலேயே:-)


போகட்டும். அவந்தான் நல்லா இருக்கட்டுமே! நல்லா இரும் பெருமாளே! நீர் நல்லா இரும்!

said...

வாங்க கோமதி அரசு.


எல்லாம் யானை சைஸ் காஃபி பில்டர்கள். அரண்டு போயிட்டேன்!! நம்மது எல்லாம் பூனை சைஸ் கூட இல்லை. வெறும் மௌஸ் அளவுதான்:-)

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நீங்க மட்டும் கிளம்பி வாங்க (*அக்காவோடுதான்) துளசி விலாஸில் காஃபி இன்னும் கமகமன்னு கிடைக்கும்:-)))

said...

வாங்க வெண்பூ.

இப்படி சைலண்ட் ரீடரா இருந்தால் எப்படி? அப்பப்ப ஒரு அடையாளம் வச்சுட்டுப் போகக்கூடாதா?

நல்ல பாய்ண்ட். கோவில் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்.சுற்றுலாத்துறை இன்னும் நல்லா செய்யலாம் இல்லை? தனியார் யாராவது இதை வெளியிட்டு நாலு காசும் பார்க்கலாம். ஹாட் கேக் வியாபாரம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோவிலடி பார்க்கணுமுன்னு ஆவலா இருக்கு. அவசரத்தில் வரிசை மாறிக் குறிப்பிட்டுவிட்டேன்:(

காஃபி....

அப்பா சொல்லலைன்னா முரளி பற்றித் தெரிஞ்சே இருக்காது எனக்கு! முதல் நன்றி அப்பாவுக்குத்தான்.

அதான் நீங்க அடிக்கடி முரளி காஃபிகுடிக்கப்போறதா தகவல் வந்துச்சே:-)

said...

சசி கலா,

உங்க மெயில் ஐடியை பின்னூட்டமா அனுப்புங்க. வெளியிடாமல் சேமிச்சு வச்சுக்கறேன்.

said...

வாங்க மாதேவி.

ஒரு பதிவர் சந்திப்பு ரெங்கன் கோவிலே போட்டு எல்லோருமாச் சேர்ந்து சுத்திப் பார்க்கணும்!
என்ன பேராசைன்னு ரெங்கன் சிரிக்காமல் இருந்தால் சரி:-)

said...

வாங்க கிரி.

யானை வளர்ப்பது பேராசை. கோபாலுக்கு ரெண்டு யானைப்பராமரிப்பு கட்டிவராது:-)

அதனால் பூனைக்கு மாறிட்டேன்.

நான் ஒரு காஃபி பைத்தியமா இருந்தேன். நேரங்காலம் கிடையாது.பகல் சாப்பாடு முடிச்சுக் கையோடு ஒரு காஃபின்னு இருந்த காலம் எல்லாம் போச்:( இப்போ நாளுக்கு ஒன்னு:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வெங்கலமணியா? ஊஹூம்....கண்ணில் படவே இல்லையே:(

அப்ப கட்டாயம் இன்னொரு விஸிட் போகத்தான் வேணும்.

இப்போ நச்சரிப்பை ஆரம்பிச்சால்தான் உண்டு. பாவம்.... கோபால்!

said...

மாமனார் எப்பவுமே சொல்வார்....அன்னமூர்த்தி இன்முகத்தோடு அனைவருக்கும் அருள் வழங்குவார் என்று. சாதாரணமாக யாரும் சென்று பார்ப்பதில்லை.

முரளி காஃபி கடை ஃபில்டர் பளபளப்பாக பார்க்கவே கண்ணில் ஒத்திக்கலாம் போல் இருக்கும். காஃபி குடித்தேயிராத எனக்கு காபியின் சுவை தெரியாது. ஒருமுறை டீ குடித்திருக்கிறேன்...:))

சுஜாதா தேசிகன் அவர்களும் முரளி காஃபி கடை பற்றி எழுதியிருப்பார்.

said...

"எங்காத்துலே பழக்கம் இல்லைன்னு சொல்லி மனசை நோகடிக்காமல் உனக்காக இதையெல்லாம் நான் செய்வேன்னு சொல்லிச் செய்யறான் பாருங்க அந்த அன்புதான் பெருசு."

Super.

said...

வாங்க கலை.

இதுதான் அழகான குடும்ப வாழ்க்கையின் ரகசியம். விட்டுக்கொடுத்து வாழ்தல் .

சரியான பாய்ண்ட்டைப் பிடிச்சீங்க!

நன்றி.

said...

//ஒளிச்சு வைக்கப்பட்ட அழகியமணாளனை ஒரு வழியா பெரிய கோவிலுக்குக் கொண்டு வந்துடறாங்க. இங்கிருந்து போனவன் , திரும்பிவர அறுவது ஆண்டுகளாச்சாம்.//

இதை எப்படிக் கவனிக்காம விட்டேன்னு தெரியலை. முதல்முறை தில்லி வரை போன நம்பெருமாளை நாட்டிய தாரகைகள், பாட்டுப்பாடுபவர்கள்னு போய் மீட்டுக் கொண்டு வரவரை சரி. சுரதாணி உயிர் விடுவதும் சரி. அதுக்கப்புறமா இரண்டாம் முறையாகத் தான் ஶ்ரீரங்கத்திலிருந்து பிள்ளை உலகாரியர் உல்லுக்கான் படையெடுப்பிலிருந்து நம்பெருமாளைத் தப்புவிக்க வேண்டி அவர் தலைமையில் கோயில் பரிசனங்கள் சிலரும் சேர்ந்து வேதாந்த தேசிகர் ஆலோசனையின் பேரில் தெற்கே எடுத்துச் செல்கிறார். அப்போத் தான் நம்ம நம்பெருமாள் தமிழ்நாடு எல்லாம் சுத்திட்டுக் கர்நாடகாவுக்கும் போய்ப் பார்த்துட்டுப் பின்னர் திருமலை வந்து அங்கே ஒளிந்து வாழ்கிறார். அது தான் அறுபது வருடங்கள் இருக்க நேரிடுகிறது. பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்யும் போது தான் அதற்குள்ளாகப் புதுப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்திருந்ததால் மக்கள் ஒத்துக்க மறுக்கின்றனர்

said...

ஆர்யபடாள் வாயிலிலேயே நம்ம நம்பெருமாள் காத்திருக்கார். அப்போத் தான் தன்னோட கணவன் இப்படிக் காத்திருப்பது பொறுக்க முடியாமல் ரங்கநாயகி வில்வ மரத்திலிருந்து ஆக்ரோஷத்தோடு கிளம்ப, பின் பெருமாள் உண்மையானவரா, இல்லையா என்ற சோதனை! பின்னர் இவர் தான் நம் பெருமாளான அழகிய மணவாளர் என்று தெரிந்ததும், புதிதாக வந்தவரை என்ன செய்யறதுனு யோசித்து யாகபேரர் என்ற பெயருடன் மூலஸ்தானத்திலேயே நம்பெருமாளுக்கு இடப்பக்கமாக வைத்திருக்கின்றனர். இப்போதும் யாகங்களில் இவர் தான் கலந்துக்கறார்.

said...

வந்தேன், படித்தேன், தெரிந்துகொண்டேன்!