சின்னாம்ணின்னு சொல்றதைப்போல Kagemni ன்னு ஒரு மன்னர்வீட்டு மாப்பிள்ளை அடுத்தாப்லெதான் இருக்கார். இந்த ஏரியாவில் குன்றுகள் ஏராளம், அதுக்குள்ளேயும் வெளியேயுமா சமாதிகளும் ஏராளம். அதுலே ஒன்னுதான் இப்போ நாம் போய்ப் பார்க்கறோம்.
நீதிபதி, பூஜாரின்னு அரசாங்கத்துலே பெரிய பதவிகளில் இருந்தவர். மன்னருடைய சொத்துபத்து நிர்வாகம் எல்லாம் இவர் பொறுப்புலேதான்.
பொறுப்புலே இருக்கறவனுக்குப் பொண்ணைக் கட்டிக்கொடுத்தால் .... பணத்தை எடுத்துக்கிட்டு ஓடமாட்டாந்தானே? எல்லாம் விவரமாத்தான் இருந்துருக்கார் மன்னர், இல்லே?
முதல்லே பார்த்த சமாதி மாளிகைன்னால், இது பங்ளா ! ஏகப்பட்ட அறைகள். மகனுக்கு அஞ்சு அறை, மனைவிக்கு அஞ்சு அறைன்னு ஒதுக்கியாச்சு. பெரிய கூடங்கள்! அப்புறம் சாமான்செட்டு வச்சுக்க, அதுக்கு இதுக்குன்னு அதுபாட்டுக்குப் போகுது !
வாசலைத்தாண்டி கூடத்துக்குள் நுழைஞ்சதுமே க்ரூப் டான்ஸ் ஆடிக்கிட்டே நம்மை வரவேற்கிறாங்க!! எல்லா சுவர்களிலும் செதுக்குச் சிற்பங்கள்.....
அப்பத்திய மக்களுடைய அன்றாட வேலைகளும், வாழ்க்கை முறைகளையும் புரிஞ்சுக்கலாம். மாடுன்னா செல்வம்தானே..... ஏகப்பட்ட மாடுகள் !
குட்டிப்பாப்பாக் கன்னுக்குட்டியைக் குழந்தைபோல முதுகில் சுமந்துக்கிட்டுப் போறார் ஒருத்தர். பன்னி ஒன்னைத் தூக்கி வச்சு அதைக் கொஞ்சறார் ஒருத்தர். அதுக்குப் பாலோ என்னமோ , ஒரு ஜக்லே கொண்டு வர்றார் ஒருத்தர், வாத்துகளுக்குத் தீனி போடறார் ஒருத்தர் இப்படி.... மிருகநேயம் நல்லது!
நைல்நதியில் படகுலே போய் மீன் பிடிக்கறாங்க. முக்கிய உணவு மீனாக இருக்கும்போல.... அந்த மீன்களும் ஏராளமா, என்னைப் பிடிச்சுக்கோன்னு தானாவே படகாண்டை வந்து நிக்குதுகள். முறம் மாதிரி கூடை ஒன்னுலே அப்படியே வாரிக்க வேண்டியதுதான் !
தூண்டிலில் ஒரு முள் போட்டுப் பிடிச்சா டைம் வேஸ்டுன்னு அஞ்சு கொக்கி ஒரே தூண்டிலில். எப்படியாப்பட்ட டைம் மேனேஜ்மென்ட் பாருங்க ! ( படத்தில் ஒரு வெட்டுக்கிளி, தவளை இருக்கு, தெரியுதா? )
எல்லாம் பெரிய பெரிய சைஸ் மீனுங்களே! கழியில் தொங்க விட்டு ரெண்டு பேராத் தோளில் சுமந்து போறாங்க. அப்போதைய ஆட்கள் கூட ரொம்ப உயரமாவும் திடகாத்திரமாவும் இருக்காங்க. ஊளைச்சதையோ, தொப்பையோ காணோம் !
ஆடு, கோழி, வாத்துன்னு புடிச்சுக்கிட்டுப் போறாங்க. வகைவகையான சாப்பாட்டுப் பொருட்களைக் கடவுளுக்குப் படையல் போடறாங்க. அப்படியே சமாதியில் இருக்கும் மன்னர்களுக்கும் கொண்டு போய் வச்சுருவாங்களாம். அவுங்களுக்கு அடுத்து வரப்போகும் பிறவிக்குத் தேவைப்படுமேன்னுதான்.....
அப்பத் தயிர்வடை, தினசரி பேப்பர் எல்லாம் கூட இந்த எண்ணத்தினால்தான் போல !
குளிக்க பாத் டப் கூட இருக்கு இங்கே! (சமாதியின் உள்ளே கிடக்கறவரும் குளிச்சுச் சுத்தபத்தமா இருக்கவேணும்! )
ஒரு இடத்துலே பலி கொடுக்கன்னே ரெண்டு கற்சுவர். இடையிலே நிக்கவச்சா அசையமுடியாதுன்னு ரெய்னா சொன்னப்ப , மனசுக்குக் கொஞ்சம் பேஜாராப் போச்சு. ப்ச்.....
ஆளுங்ககிட்டே வேலைவாங்க மேஸ்த்ரி கூடக் கையில் சின்னக் கோல் வச்சுக்கிட்டு நின்னு பார்க்கறார். சனத்தை மேய்ச்சுக்கறதும் கஷ்டம்தான், இல்லே!
ஏகப்பட்டச் சுவர்சிற்பங்கள் இருப்பதால் நின்னு பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு ரசிக்க நேரம் எடுக்கும். இந்த சிற்பங்கள் செதுக்கி இருக்கும் கல்கூட கொஞ்சம் வேற வகையா இருக்கு.... ஒரு மெரூன் கலர்.....
இங்கே ம்யூஸியம் கூட ஒன்னு இருக்கு. ஆனால் ரொம்ப முக்கியமானவைகள் கய்ரோ பெரிய ம்யூஸியத்தில் இருப்பதால் அங்கே போகும்போது பார்க்கலாம். இன்றைக்கு இன்னும் சில இடங்களுக்குப் போகணும்னு ரெய்னா சொன்னாங்க. அதுவுஞ்சரி. அவுங்களுக்கும் ஒரு ஒர்க் ஆர்டர், ஐட்டினரி எல்லாம் இருக்குமுல்லெ?
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. ஒழுங்கா நிக்கும் ப்ரமிடுகள், வெறும் கற்குவியலா நிக்கும் ப்ரமிடுகள்னு நிறைய இருக்கு!
பொட்டல் காட்டில் போற பாதையில் செக்யூரிட்டின்னு சின்ன கூண்டுக்குள்ளே ஆர்மி உக்கார்ந்துருக்கு. குளிர் மட்டுமில்லே, வெயிலும் கொடுமைதானே... ப்ச்.... இந்தாண்டை ஒரு செல்லம்.... என்ன பொழைப்புடா.....
வந்த வழியாவே திரும்பிப்போறோம்னு கண்ணில் பட்ட கட்டடங்கள் சொல்லுது. சுமார் ஒரு மணி நேரப் பயணம் இருக்காம்.
தொடரும்...... :-)

நீதிபதி, பூஜாரின்னு அரசாங்கத்துலே பெரிய பதவிகளில் இருந்தவர். மன்னருடைய சொத்துபத்து நிர்வாகம் எல்லாம் இவர் பொறுப்புலேதான்.
பொறுப்புலே இருக்கறவனுக்குப் பொண்ணைக் கட்டிக்கொடுத்தால் .... பணத்தை எடுத்துக்கிட்டு ஓடமாட்டாந்தானே? எல்லாம் விவரமாத்தான் இருந்துருக்கார் மன்னர், இல்லே?
முதல்லே பார்த்த சமாதி மாளிகைன்னால், இது பங்ளா ! ஏகப்பட்ட அறைகள். மகனுக்கு அஞ்சு அறை, மனைவிக்கு அஞ்சு அறைன்னு ஒதுக்கியாச்சு. பெரிய கூடங்கள்! அப்புறம் சாமான்செட்டு வச்சுக்க, அதுக்கு இதுக்குன்னு அதுபாட்டுக்குப் போகுது !
வாசலைத்தாண்டி கூடத்துக்குள் நுழைஞ்சதுமே க்ரூப் டான்ஸ் ஆடிக்கிட்டே நம்மை வரவேற்கிறாங்க!! எல்லா சுவர்களிலும் செதுக்குச் சிற்பங்கள்.....
அப்பத்திய மக்களுடைய அன்றாட வேலைகளும், வாழ்க்கை முறைகளையும் புரிஞ்சுக்கலாம். மாடுன்னா செல்வம்தானே..... ஏகப்பட்ட மாடுகள் !
குட்டிப்பாப்பாக் கன்னுக்குட்டியைக் குழந்தைபோல முதுகில் சுமந்துக்கிட்டுப் போறார் ஒருத்தர். பன்னி ஒன்னைத் தூக்கி வச்சு அதைக் கொஞ்சறார் ஒருத்தர். அதுக்குப் பாலோ என்னமோ , ஒரு ஜக்லே கொண்டு வர்றார் ஒருத்தர், வாத்துகளுக்குத் தீனி போடறார் ஒருத்தர் இப்படி.... மிருகநேயம் நல்லது!
தூண்டிலில் ஒரு முள் போட்டுப் பிடிச்சா டைம் வேஸ்டுன்னு அஞ்சு கொக்கி ஒரே தூண்டிலில். எப்படியாப்பட்ட டைம் மேனேஜ்மென்ட் பாருங்க ! ( படத்தில் ஒரு வெட்டுக்கிளி, தவளை இருக்கு, தெரியுதா? )
ஆடு, கோழி, வாத்துன்னு புடிச்சுக்கிட்டுப் போறாங்க. வகைவகையான சாப்பாட்டுப் பொருட்களைக் கடவுளுக்குப் படையல் போடறாங்க. அப்படியே சமாதியில் இருக்கும் மன்னர்களுக்கும் கொண்டு போய் வச்சுருவாங்களாம். அவுங்களுக்கு அடுத்து வரப்போகும் பிறவிக்குத் தேவைப்படுமேன்னுதான்.....
அப்பத் தயிர்வடை, தினசரி பேப்பர் எல்லாம் கூட இந்த எண்ணத்தினால்தான் போல !
குளிக்க பாத் டப் கூட இருக்கு இங்கே! (சமாதியின் உள்ளே கிடக்கறவரும் குளிச்சுச் சுத்தபத்தமா இருக்கவேணும்! )
ஒரு இடத்துலே பலி கொடுக்கன்னே ரெண்டு கற்சுவர். இடையிலே நிக்கவச்சா அசையமுடியாதுன்னு ரெய்னா சொன்னப்ப , மனசுக்குக் கொஞ்சம் பேஜாராப் போச்சு. ப்ச்.....
ஆளுங்ககிட்டே வேலைவாங்க மேஸ்த்ரி கூடக் கையில் சின்னக் கோல் வச்சுக்கிட்டு நின்னு பார்க்கறார். சனத்தை மேய்ச்சுக்கறதும் கஷ்டம்தான், இல்லே!
ஏகப்பட்டச் சுவர்சிற்பங்கள் இருப்பதால் நின்னு பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு ரசிக்க நேரம் எடுக்கும். இந்த சிற்பங்கள் செதுக்கி இருக்கும் கல்கூட கொஞ்சம் வேற வகையா இருக்கு.... ஒரு மெரூன் கலர்.....
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. ஒழுங்கா நிக்கும் ப்ரமிடுகள், வெறும் கற்குவியலா நிக்கும் ப்ரமிடுகள்னு நிறைய இருக்கு!
பொட்டல் காட்டில் போற பாதையில் செக்யூரிட்டின்னு சின்ன கூண்டுக்குள்ளே ஆர்மி உக்கார்ந்துருக்கு. குளிர் மட்டுமில்லே, வெயிலும் கொடுமைதானே... ப்ச்.... இந்தாண்டை ஒரு செல்லம்.... என்ன பொழைப்புடா.....
வந்த வழியாவே திரும்பிப்போறோம்னு கண்ணில் பட்ட கட்டடங்கள் சொல்லுது. சுமார் ஒரு மணி நேரப் பயணம் இருக்காம்.
தொடரும்...... :-)















































