

பூப்பூவா பூத்திருக்கு,
பூமியிலெ ஆயிரம்பூ,
பூவிலே இந்த பூ
என்ன பூ?
மொத்தமா மூணு படம் போடறேன்.
என்ன பூவுன்னு சொல்லுங்கப்பூ.
பர்ப்பிள் கலர் பூ ரெண்டு படமும் ஒரே வகைதான்
Sunday, April 09, 2006
இந்த பூ ???
Posted by
துளசி கோபால்
at
4/09/2006 03:53:00 PM
31
comments
Thursday, April 06, 2006
பெங்களூரு, நானு பருத்திதேனெ

பயண விவரம் பகுதி 16
இதோ, பெங்களுருக்குப் போக காலை ஏழரை மணிக்கு விமானம். காலையிலே சீக்கிரமா எழுந்து அடிச்சுப்பிடிச்சுக்கிளம்பி ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு. அங்கெ வாசல்லேயே ஒரு 'டீக்கடை' இப்படி சொல்லக்கூடாதோ, ஒரு டீ ஷாப் இருக்கு. 4 ரூபாயாம், ஒரு வாய் டீ. அதையும் வாங்கி ஊத்திக்கிட்டு உள்ளெ போய் செக் இன் செஞ்சு 20 நிமிஷமே லேட்டாப் புறப்பட்டு எட்டரைக்கு ,ஏன்றி, சென்னாகிதிரா? ன்னு கேட்டுக்கிட்டே பெங்களூருலே இறங்கியாச்சு. பேக்கேஜ் எடுக்க ரொம்ப நேரம் நிக்க வேண்டியதாப் போச்சு. பயங்கரக்கூட்டம். நிறைய வெள்ளைக்காரர்கள்.
டாக்ஸியிலே சிட்டிக்குப் போறப்ப, ஒரு லைட்டுக் கம்பம் விடாம போஸ்ட்டர் அடிச்சு தட்டியில் ஒட்டிக் கட்டி வச்சுருக்காங்க.'ஆர்ட் ஆஃப் லிவிங்' ரவிசங்கர் வர்றாராம். அதுக்கு பழைய ஏர்போர்ட்லே மூணுநாள் விழாவாம்.அதான் கூட்டமாம்.டாக்ஸி ட்ரைவரா நமக்குக் கிடைச்சவர் ஒரு சேட்டன். அது போதாதா? சம்சாரிச்சுக்கிட்டே ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இந்த ஹொட்டல், நான் மூணுவருசம் முந்தி வந்து தங்குனப்ப நல்லாவும், புதுசாவும் இருந்துச்சுங்க. விலையும் ரீஸனபிள்தான். அதைப் பத்தி எங்க இவர்கிட்டே சொல்லித்தான் இப்ப இங்கே வந்தோம். எண்ணி மூணே வருசத்துலேஇப்படிக் குப்பையாக் கிடக்குமுன்னு நான் எதிர்பார்க்கலை. கார்பெட் எல்லாம் கிழிஞ்சு, நிறமெல்லாம் போய்அசிங்கமா இருக்கு. முக்கியமா இந்தக் கிழிசல் ஆபத்துதான். யாராவது கால்தடுக்கி விழுந்தா? போதாக்குறைக்குப்பொன்னப்பா( எவ்வளோ நாள்தான் பொன்னம்மான்னே சொல்றது?) மாதிரி வேக்குவம் க்ளீனரை அங்கெ காரிடோர்லேயே, நீள வயரோடு போட்டு வச்சிருக்காங்க. யாரையாவது கட்டாயமா விழ வைக்கணுமுன்னே முன்னேற்பாடா இருக்குறாங்க போல. நாங்க தங்குன ரெண்டு நாளும் அங்கெயேதான் கிடந்துச்சுங்க. இன்னும் கிடக்கும், நீங்க வேணாப் பாருங்க.
இதுக்குப் பேர் ரொம்ப பெத்தபேரு, 'ஹோட்டல் சாம்ராட்'. இதுக்கு நேர் எதிரே நடராஜ் தியேட்டர். அடையாளம் சொல்ல சுலபம்.மச்சினர் வீட்டுக்குப் பக்கமுன்னுதான் முந்தியும் இங்கே வந்தது. சாப்பாடு அங்கே, தூக்கம் இங்கே.
என்னோட தமிழ் இலக்கிய சேவை(!) ஆரம்பிச்ச இடம் மரத்தடி. அப்ப என்னமோ இதோட முக்கியஸ்தர்கள் எல்லாம் பெங்களூருன்னு ஒரு தோணல். அப்படியில்லே, எல்லா ஊர்லேயும் ஆளுங்க இருக்காங்கன்றது வேற விஷயம். அப்பநான் சேர்ந்த காலத்துலெ, இந்த மரத்தடியின் பெங்களூரு கிளை ரொம்ப சலசலத்துக்கிட்டே கலகலன்னு இருந்துச்சா,எனக்கும் ஒரு அபிமானமாப் போச்சு. இப்ப நம்ம வலைஞர்கள் வேற அங்கிருக்காங்களா, எல்லாரையும் சந்திக்கற ஆர்வம் கூடிப்போச்சு.
ஹரிமொழின்னு சொந்த தளம் வச்சு எழுதிக்கிட்டு இருக்கற ஹரிகிருஷ்ணன் அவர்கள் இப்ப நங்கநல்லூர்லே இருந்து பெங்களூரு போயிட்டார். இவரைப் பத்திச் சொல்லணுமுன்னா என்னாலெ ஆகாது. நேத்து முளைச்ச காளான், எக்கச்சக்கமாக் காய்ச்சுக் குலுங்கி நிக்கற மாமரத்தை (இனிப்பு மாம்பழத்தோடு கூடிய)பத்தி என்ன சொல்ல முடியும்? ( நல்லா இருக்காஉவமை?) சமீபத்துலே இவர் எழுதுன அனுமனின் வார்ப்பும் வனப்பும் என்ற புத்தகத்தைப் பாராட்டி, இவருக்குக் கவுரதை கிடைச்சது. பாராட்டுவிழா வெல்லாம் படத்துலெ பார்த்தேன்.
நம்ம இளவஞ்சி, ராகவன்( ஜிரா) சுதர்சன் எல்லோரும் சந்திக்க வரேன்னு சொல்லியிருந்தாங்களா, அவுங்களையும் ஹரியண்ணா( இப்படித்தான் அவரை எல்லோரும் கூப்புடறாங்க. ஆனா நான் மட்டும் ஹரித்தம்பின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். என்ன சொல்லுங்க, அவரைவிடக் கொஞ்சம், (கொஞ்சமே கொஞ்சமுன்னாலும்) மூத்தவ இல்லையா?)க்ரூப்போடயே சேர்த்துப் பார்த்தா நல்லா இருக்குமுன்னு நினைச்சேன். ஆனா நம்ம வலைஞர்களுக்கு மரத்தடிஅவ்வளவா பரிச்சயமில்லையாம். அதுவுமில்லாம அன்னைக்கு வேலை நாளாச்சுங்களா, சாயந்திரமாத்தான் கொஞ்சம்நேரம் இருக்குமுன்னு சொன்னாங்க. அதுவுஞ்சரிதான். ஒரு ஏழு, ஏழரைமணின்னு முடிவாச்சு. ஹொட்டலுக்கே வந்துடறோமுன்னு சொன்னாங்க.
இங்க இருக்கப்போறதோ ரெண்டே நாளு. அதுலெ ஒரு நாளைச் சொந்தங்களுக்கு ஒதுக்கணும். ஒரு நாளு நமக்கு.அதானே ஞாயம்?
ஹரியண்ணாவைப் பார்த்துரலாமுன்னு அவருக்குப் ஃபோன் போட்டு எந்நேரம் வசதிப்படுமுன்னு கேட்டா,அவர் சொல்லிட்டார், உங்க நேரமெ என் நேரமுன்னு! ஒரு அஞ்சு மணிவாக்குலே வரேன்னு சொல்லிட்டுப் போனோம்.
வீட்டுக்குள்ளே நுழைஞ்சு மாடிப்படியேறிப் போனா, அவரோட திருமதி, 'மேடம் வந்துட்டாங்க'ன்னு மேல்மாடியைப் பார்த்து உரக்கச் சொன்னாங்க. என்னடான்னு பார்த்தா, ரெண்டாவது மாடியிலே ஒரு அறையிலே இருக்கார். உள்ளே அட்டகாசமான புத்தக அலமாரி, கணினின்னு ஒரு செட்டப்பு. சுவத்துலே அடடாடா... என்னன்னு சொல்றது? அருமையானபுள்ளையார். மரச்சிற்பம். சின்ன விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு.
ரொம்ப ஒல்லியா இருக்கார். கண்ணு தீர்க்கமா பார்க்குது. இன்னிக்குத்தாம் மொதமொதலாப் பாக்கறோம்ன்ற எண்ணமே வரலை.ச்சும்மா குசலம் விசாரிச்சுத் தொடங்குன பேச்சு, அப்படியே ஆழமான இலக்கியப் பேச்சாப் போகுது. என்னைப் பயமுறுத்துறாப்பலெ அடிக்கடி கம்பராமாயணத்துலே, இன்னும் புறநானூறுன்னு செய்யுளைச் சொல்றார். ஆஹா, இவர் சாமானியப்பட்ட ஆளில்லைரா, ரொம்ப கவனமா இவர் பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிப் போகுது. பேச்சு சுவாரஸியத்துலே நேரம் போகறதே தெரியலை. இளவஞ்சிக்கு போன் போட்டு ஏழரையை எட்டாக்கிறலாமுன்னு சொல்லியாச்சு. பாவம் அவுங்கவேற வந்து காத்துக்கிட்டு இருந்தாங்கன்னா?
பாரதியாரின் கவிதைகள் எப்படி தேசிய உடமையா ஆனதுன்னும், இன்னும் பாரதியார் வாழ்க்கையைப் பத்தியும்கூடப் பேச்சுப் பயணம் தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு. எங்க இவர்வேற இப்பத்தாம் மொதல் மொதலா ஒரு இலக்கியவாதியைச் சந்திக்கறார். அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் மெஷின்கள்தான். இப்படி ஒரு உலகம் இருக்கான்னு 'ஆ'ன்னு பேச்சுமூச்சுல்லாமக் கேட்டுக்கிட்டு இருக்கார். இன்னிக்கு நேரம் பத்தாமப் போச்சு. அடுத்தமுறை வரும்போது, ஒருநாள் முழுக்க இவரோட பேச்சைக் கேக்கணுமுன்னு தோணிருச்சுங்க..
மரத்தடியிலே சக்திப்பிரபா, அய்யப்பன், ஷைலஜாவுக்கெல்லாம் கூடச் சொல்லியிருந்தேன். ஷைலஜா இப்ப நாட்டுலேயே இல்லை. சக்தியும் படிப்புலே கொஞ்சம் பிஸி. ஆனா முடிஞ்சா சந்திக்கலாமுன்னு சொல்லி இருந்தாங்க. அய்யப்பன் மட்டும் மனைவியோடு ( புது மணமக்கள்தான்) வந்தார்.
திருமதி பத்மா ஹரிகிருஷ்ணன், கீழே அவசர அவசரமா எங்களுக்கெல்லாம் 'அடை' செஞ்சுச் சுடச்சுட மேலே எடுத்துக்கிட்டு வந்தாங்க. ஒரு குரல் கொடுத்துருந்தா, நாங்களே ஓடிப்போய் கீழே சாப்புட்டுருப்போம். பாவம், ரெண்டாம் மாடிக்கும் , கீழேமுதல் மாடிக்குமா ஓடி ஓடி வந்துக்கிட்டு இருந்தாங்க. இவுங்க வீட்டு இட்டிலியைப்பத்தி பல இடத்துலே கேள்விப்பட்டிருந்தேனா,'என்னங்க அடை? இட்டிலி இல்லையா?'ன்னு கேட்டேன். வாய்க் கொழுப்பு..ம்ம்ம்.
பாவம் பத்மா. ஒரு நொடி திகைச்சுப் போயிட்டாங்க. 'இப்ப செஞ்சுரட்டா?'ன்னு வேற கேக்கறாங்க. இவ்வளவு அப்பாவியா இருந்தா எப்படிங்க? எனெக்கென்னவோ டி.கே.சியோட குற்றாலம் வீடு நினைவு வந்துச்சு. நான் போனேனான்னு கேட்டுறாதீங்க.எல்லாம் வாசிப்பு ஞானம்தான்! இந்த ஆச்சரியக்குறி போடறப்ப எல்லாம் ஹரியண்ணா ஞாபகம் வந்துரும். அவர்தான்கொஞ்சமா எப்பவாவது ஒருக்கப் போடணுமுன்னு சொல்லியிருந்தார். இல்லேன்னா நான் !!! அள்ளித் தெளிக்கிற ஆளு.இருக்கட்டுமே, காசா பணமான்னு போடறதுதான்.
அடையோடு முடியுமா? ச்சுடச்சுட நல்ல அருமையான காஃபி வேற! பத்மா வேலைக்கும் போறாங்க. அப்புறம் வீட்டு வேலை,இதெல்லாம் போதாதுன்னு இப்படி இலக்கியம் பேச வரும் நண்பர்களுக்கு ஓடிஓடி உபசாரம்னு இருக்காங்க. அவுங்க பொறுமையைப் பாராட்டி திரும்புற வழியெல்லாம் இவர்கிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்.
சொல்ல மறந்துட்டேனே, இதோடு விட்டாங்களா? கிளம்பறப்ப தாம்பூலம், ப்ளவுஸ் துணி, முழுத்தேங்காய்னு வச்சுக்கொடுத்தாங்க. உடனே, எங்க இவர்கிட்டே, 'இந்தக் கலருலே புடவை என்கிட்டே இல்லேன்றதை ஞாபகம் வச்சுக்குங்க'ன்னு அங்கேயே சொல்லிட்டுத்தான் வந்தேன். சாட்சி வேணாமா? எப்படியோ ஒரு ஹிண்ட் கொடுத்தாச்சு.
நாங்க திரும்ப வந்து ஹோட்டல் லாபியிலே உக்காந்திருந்தோம். சுதர்சன் செல்லுலே கூப்பிட்டு, வந்துக்கிட்டே இருக்கேன்,ஆனாட்ராஃபிக் ஜாம் ஆயிருச்சுன்னு சொன்னார். அப்ப ரெண்டு இளைஞர்கள் வந்து சேர்ந்தாங்க. அவுங்கதான் நம்ம இளவஞ்சியும், ராகவனும்.
அன்னிக்கு காதலர் தினம்வேற. ராகவனோ டிப்டாப்பா டையும் கையுமா இருக்கார். இளவஞ்சி நம்மைப்போல சாதாரணமாத்தான் இருந்தாருன்னு சொல்ல முடியலை. கண்ணுலே அந்த இலக்கிய ஒளி வீசுது. ஒரு அஞ்சாறு நிமிஷம் அங்கேயே இருந்து அறிமுகப்பேச்சை ஆரம்பிச்சோம்.எம்ஜிஆர் மாதிரி கறுப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு வராருங்க நம்ம சுதர்சன். ஆஹா ஜமா சேர்ந்தாச்சு. இனி இங்கே என்ன, மேலே போய்ப்பேசிக்கிட்டு இருக்கலாமுன்னு கிளம்பினோம்.
பின் குறிப்பு: இது துளசிதளத்தின் முன்னூறாவது பதிவுன்னு ப்ளொக்கர் சொல்லுதுங்க. அது சொன்னாச் சரியாத்தானிருக்கும்.இல்லீங்களா?

Posted by
துளசி கோபால்
at
4/06/2006 09:01:00 PM
82
comments
Wednesday, April 05, 2006
அட!!
மக்கள்ஸ்,
இன்னிக்கு ரொம்ப சந்தோஷமான நாள். இங்கே நியூஸியின் சரித்திரத்துலேயே,முதல்முறையா ஒரு இந்தியர் கவர்னர் ஜெனரலா ஆகியிருக்கார்.
இவர் பெயர் ஆனந்த் சத்யானந்த். வயது 61
இவரது பெற்றோர்கள் ஃபிஜியிலிருந்து இங்கே வந்து குடியேறிய இந்தியர்கள்.
இங்கேயே படித்து, வழக்குரைஞராக( இது சரியா, இல்லே வழக்கறிஞரா?) இருந்து ,இப்போடிஸ்ட்ரிக்ட் கோர்ட் ஜட்ஜாக இருக்கற இவர் ஆகஸ்டு மாதம் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்பார்.
இதுவரை வெள்ளைக்காரர்களும், மவோரி இனத்தவர்களும்தான் இந்தப் பதவி வகிச்சுருக்காங்க.
காலம் மாறி வருது.
இவருக்கு நம் நல்வாழ்த்துகள்.
இந்த மகிழ்ச்சியை உங்களோடு சேர்ந்து பகிர்ந்துக்கத்தான் இந்தப் பதிவு.
Posted by
துளசி கோபால்
at
4/05/2006 03:00:00 PM
12
comments
