ரொம்பவே வயசானதா, அழுக்கு உடம்போட( ஒருவேளை அதோட கலரே அதுதானோ என்னவோ?)
ஒண்ணு வந்து வாசலிலே நிக்குது. Hedgehog க்கு வைக்கற சாப்பாட்டை ஒரு கை பாக்குது!!
இந்த 'ஹெட்ஜ்ஹாக்'ன்றது ஒரு பெருச்சாளி சைஸுலே இருக்கும். உடம்பெல்லாம் முள்ளம்பன்றி போல
இருக்கும். அசப்புலே பார்த்தா நம்ம ஊர்லே தேங்காய் நார் இருக்கும்லே ,அதுலே அப்படியே ஒரு
பெருச்சாளிக்குச் சட்டை தைச்சுப் போட்டதுபோல!
இது எங்கெருந்து வருது? இதுங்கெல்லாம் வேலிக்குப் பக்கத்துலே இருக்குற செடிப்புதர்கள்லே
பகல் முழுக்க ஒளிஞ்சு இருக்கும். இருட்டுனபிறகு, சாப்பாடு தேடி வரும். புழு, பூச்சி, நத்தை இப்படி
யெல்லாம்தான் சாப்பாடு!! ஆனா பாலும், ப்ரெட்டும் வச்சா ரொம்ப நல்லா சாப்பிடும்னு ஒரு புத்தகத்துலே
வாசிச்சேன். அதும்படி அப்பப்ப ஒரு ரொட்டித்துண்டைப் பிச்சு, பாலிலே போட்டு வச்சோம்னா நல்லா
சாப்பிடும். ஆனா ஆளுங்க போனா ஒடிப் போயிரும். அதாலே தட்டை வெளியிலே வச்சுட்டு, கதவைச்
சாத்திட்டு ஒளிஞ்சிருந்து ஜன்னல் வழியாப் பாப்போம். இப்படி ஒரு நாள் பாத்தப்பதான் இந்த 'அழுக்குக்கேஸ்'
மெதுவா வந்து அந்தப் பாலை நக்கிக்குடிக்குது!!
பாவமா இருக்கேன்னு, கொஞ்சம் கப்புவோட சாப்பாட்டையும் வச்சேன். அதையும் ஆவலோட தின்னது!
அதுக்கு அப்பவே சொல்லியாச்சு, 'வா, சாப்பிடு. ஆனா வீட்டுக்குள்ளே வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதே!'
புரிஞ்சதோ என்னவோ, தினம் ராத்திரி மட்டும் வந்துக்கிட்டு இருந்தது!! 'கஞ்சி வரதப்பான்னா எங்கே
வருதப்பான்னு கேட்டானாம்னு சொல்றமாதிரி அதும் பார்வை இருந்துச்சு. அதாலே அதுக்கு 'வரதன்'னு
பேர் வச்சு, சுருக்கமா வரதுன்னு கூப்பிட ஆரம்பிச்சோம்.
ஒரு நாள் மகள் கேக்கறா, 'ஏம்மா, வரதன் ற பேரு நம்ம தாத்தா பேருதானே?'ன்னு!!! ஆஆஆஆ....
ஆமாம். வரதாச்சாரின்றது நம்ம மாமாவோட முழுப்பேர். ஆனா எல்லோரும் 'ச்சாரி மாமா'ன்னே
சொல்லிக்கிட்டு இருந்ததாலே அவரோட பேரின் முதல் பாதி மறந்தே போச்சு!!! அடக் கடவுளே.....
இப்ப என்ன செய்யறது? ஒரே பேருலே எத்தனை ஆளுங்க இருக்காங்க! ஃபோன் புக்கைப் பாருங்க!!!
ஸ்ரீநிவாசனும், வெங்கடராமனும் பக்கம் பக்கமா இல்லை? அதாலெ இப்படியே விட்டுரலாம்!!!!
ரெண்டுமாசம் வரைக்கும் வந்துக்கிட்டிருந்த வரது ஒருநாள் வரவேயில்லை. எதுக்கும் இருக்கட்டுமுன்னு
கொஞ்சம் சாப்பாடை வெளியில் வச்சுட்டு வந்தேன். இப்ப என்னன்னா அந்த பூனைச் சாப்பாட்டை, இந்த
ஹெட்ஜ்ஹாக் கூட்டம் வந்து சாப்பிடுது!!!!! இப்படியே நாள் போச்சு! வரது வரலை!!!! வரவேயில்லை!!!!
இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க குளிர் வந்தவுடனே தூங்கப் போயிரும். அப்புறம் வசந்த காலம் வந்தாத்தான்
முழிக்கும்!!! ஹைபர்னேட் செய்யற வகை!!!!
கப்புவுக்கும், இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க மேலே ஒரு பிரியம் வந்துருச்சு போல. அதுங்க தட்டைச் சுத்தியும், சிலது தட்டு
மேலெ ஏறியும் நிக்குறதைப் பாத்துக்கிட்டே தூரமா உக்காந்திருக்கும்!!!! அதை 'ஃபிக்ஸ்' செஞ்சாச்சு!
ஆபரேஷனுக்கு ஆன செலவுலே பாதியை மட்டுமே நாங்க கட்டுனோம். மீதியை அந்த 'கேட் ப்ரொட்டக்ஷன் லீக்'
கொடுத்துச்சு. 'நல்ல ரெஸ்பான்ஸிபிள் ஓனர்'னு நமக்கு இந்தச் சலுகை!!!!!
கப்பு ஒரு இயற்கை உபாசகி!! தோட்டத்துலே பூச்செடிக்குப் பக்கத்துலே போய், பூக்களை மோந்து
பாத்துக்கிட்டு, அப்படியே அதும்வாசத்திலே சொக்கிப் போனாப்புலெ கண்ணெல்லாம் அரைவாசி
மூடிக்கிட்டு உக்காந்து இருக்கும்!!! அப்பப்ப எதாவது ஒரு குருவியைப் பிடிச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளே
கொண்டுவந்து எனக்குக் கொடுக்கும். பயந்து நடுங்கிக்கிட்டு போராடற பறவையைச் சமாதானப்படுத்தி
வெளியே கொண்டுபோய் விடுறது எனக்கொரு வேலை!!! அதேபோலத்தான் எப்பயாவது ஒரு எலிக்குட்டியை
கொண்டுவரும்!! எதையும் கொல்லாது!!! அஹிம்சாப் பூனை!!!! மனமெல்லாம் அன்பு மட்டுமே நிறைஞ்சது!!!
நமக்கு எங்கேயாவது சில நாள் அக்கம்பக்கம் இருக்கற ஊருங்களுக்குப் போய்வரணுமுன்னா, கப்புவை
'கேட்டரி'யிலே விட்டுட்டுப் போவோம். அங்கேயும் பலவித நிபந்தனைகள் இருக்கு. முதலாவதா,
நம்ம பூனைக்கு தடுப்பூசி போட்டிருக்கணும். குறைஞ்சது ஒரு மாசத்துக்கு முன்னே போட்டிருக்கணும்.
இங்கெல்லாம் பூனை, நாய்க்கு ஒரு ரெக்கார்ட் புக் நம்ம வெட்னரி க்ளினிக்லே கொடுப்பாங்க.
ஒவ்வொருமுறை அங்கே கொண்டு போறப்பவும் அதை இந்த புத்தகத்துலே பதிஞ்சுருவாங்க. அப்புறம்
அதுக்கு வேற ஏதாவது நோய்நொடிக்கு சிகிச்சை செஞ்சிருந்தாலும் அது அந்த புத்தகத்திலே பதிஞ்சிருக்கும்.
அந்தப் புத்தகத்தைக் காட்டுனாத்தான், 'கேட்டரி'யிலேயே சேர்ப்பாங்க.
ஒரு நாலைஞ்சுதடவை இப்படி விட்டுட்டுப் போயிருக்கோம். எல்லாம் மூணு, நாலு நாளுங்கதான்!!
ஆனா ஒவ்வொருதடவையும், திருப்பி எடுக்கப் போறப்ப ஒரே கம்ப்ளெயிண்டுதான். 'சாப்பிடவே இல்லை'!!!
முகமெல்லாம் வாடி இருக்கும். பாவம். அதனாலே எங்கே போனாலும் காலையிலே போய் ராத்திரிக்குத்
திரும்பிடறமாதிரி வச்சுக்கிட்டோம். அப்படியே எப்பவும் இருக்க முடியுமா?
ஊர்லே அண்ணன் மகளுக்குக் கல்யாணம். கட்டாயம் போகணும்!!! ஒரே நாளுலே இந்தியாவுக்குப் போயிட்டு
வந்துரமுடியுமா? ஊருக்குப் போயே நாலுவருஷம் நாலுமாசம் ஆகுது. அக்கம்பக்கம் விசாரிச்சப்ப,
ஒரு நல்ல 'கேட் மோட்டல்' இருக்குதுன்னு சொன்னாங்க. அங்கே ஒரு நாள் போய்ப் பார்த்தோம்.
ஊருக்கு வெளியிலே இருக்கு அந்த இடம். பெரிய தோட்டத்துக்குள்ளே ஒரு தனி வீடு!!!! சின்னச்
சின்னதா நிறைய அறைகள் இருந்துச்சு. ஒவ்வொரு ரூமுக்கும் ஒரு பின்வாசல் வேற. அங்கே ஒரு ச்சின்னத்தோட்டம்.
தோட்டம் பூராவும் வலைக்கம்பி போட்டுப் பாதுகாப்பா இருக்கு! அந்த அறையிலே குளிருக்கு இதமா
ஹீட்டர் பொருத்தியிருக்கு. நம்ம பூனையோட படுக்கை, விளையாட்டுச் சாமான் எல்லாம் கொண்டுபோய்
கொடுத்துட்டா, அதையெல்லாம் அந்த அறையிலே போட்டுவச்சு, அதுக்குப் பிரிவுத்துயர் ஓரளவு வராமப்
பாத்துப்பாங்களாம்!!!!
இது இல்லாம, ஒரு ஹாலிலே ஒரு பெரிய கட்டிலும், மெத்தையும் போட்டு வச்சிருந்தாங்க. நிறையப் பூனைங்க
அதுலே ஏறி விளையாடிக்கிட்டும் படுத்துத் தூங்கிக்கிட்டும் இருந்ததுங்க. ஓரளவு 'சோஷியலைஸ்' செய்யக்கூடிய
பூனைங்களை இப்படி வச்சுப்பாங்களாம். அதுங்களும் வீட்டுலே இருக்கறதைபோலவே உணருமாம்!!!!
நல்ல இடம்தான். கொஞ்சம் செலவு கூடியது. ஆனாலும் பரவாயில்லை!!!! ஏழு வாரத்துக்கு அங்கே
ரூம் போட்டாச்சு!!!! ஊருக்குப் போகறதுக்கு மொத நாள் கொண்டுபோயும் விட்டாச்சு!!
மறுநாள் கிளம்பறதுக்கு முன்னே ஒரு ஃபோன் போட்டு விசாரிச்சேன். 'தொந்திரவு ஒண்ணுமில்லை.
அமைதியா இருக்கு'ன்னு சொன்னாங்க. ஒரு மனத்திருப்தியோடு கிளம்பிப் போனோம். நாலுவாரம்
மட்டுமே எங்க இவர் லீவு எடுத்திருந்தார். அதனாலே அவர் மட்டும் ஊரிலிருந்து கிளம்பிட்டார். நாங்க
இன்னும் மூணுவாரம் இருந்துட்டு வர்றதா ஏற்பாடு.
ரெண்டு நாள் கழிச்சு, இவர் தான் நல்லபடியாகப் போய்ச் சேர்ந்த விவரத்தைச் சொல்றதுக்கு ஃபோன்
போட்டவர் சொல்றார், 'கப்புவைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்'!!!
என்ன விவரமுன்னு கேட்டா, இவர் வந்தவுடனே கேட்டரிக்குப் ஃபோன் போட்டு, கப்புவோட சுகத்தை
விசாரிச்சாராம்! 'நல்லாதான் இருக்கு. ஆனா சாப்பாடு மட்டும் சரியாச் சாப்புடறதே இல்லை'ன்னு
சொன்னாங்களாம். அப்ப இவர் ,'இப்ப வந்து நான் திரும்ப எடுத்துக்கலாமா?'ன்னு கேட்டதுக்கு,
'எடுக்கலாம். ஆனா மூணு வாரக் காசை திருப்பித்தரமாட்டோம்'னு சொன்னாங்களாம். இவர்
பரவாயில்லைன்னு சொல்லிட்டு அங்கே போனாராம். கப்பு ரொம்ப இளைச்சு, ச்சின்னப் பூனைக்குட்டி
மாதிரி இருந்துச்சாம். உடனே வீட்டுக்குக் கொண்டு வந்துட்டாராம். 'இப்பக் கொஞ்சம் பரவாயில்லை.
மூஞ்சு தெளிஞ்சிருக்கு. கொஞ்சம் நல்லாத்தான் சாப்பிடறான்'னு சொன்னார்.
நம்ம பூனைங்க, நாய்ங்களை பொண்ணாயிருந்தாலும் நாங்க எப்பவும் 'ன்'போட்டுத்தான் சொல்றது!
இப்படிச் சாப்புடாம சத்தியாகிரகம் பண்ணறதை என்ன செய்ய? அப்பத்தான் இங்கே 'கேட் டோர்'
வைக்கறது அறிமுகமாகியிருந்தது. அதனாலே ஒரு ஆளைக்கூப்பிட்டு, கண்ணாடிக் கதவுலே ஒரு 'கேட்
டோர்' வைக்கச் சொன்னோம். இது உண்மைக்குமே நல்ல உபயோகமா இருந்தது! பூனைக்கு எப்ப
வேணுமோ அப்ப வெளியே போக வர ரொம்ப செளகரியம்!!!! நம்ம நண்பர்கள் யாராவது, நாம இல்லாதப்ப
நாளைக்கு ரெண்டுமுறை வந்து சாப்பாடும், த்ண்ணீரும் வச்சிட்டுப் போயிட்டாங்கன்னா, பூனை
சாப்புட்டுக்கும்!! பூனைங்களுக்குப் பழகுன இடம்தான் முக்கியமாம். அதுங்க நாயைப் போல எஜமானனை
ஸ்நேகிக்காதாம். இடத்தைத்தான் ஸ்நேகிக்குமாம்!!! இப்படியெல்லாம் சில புத்தகங்களில் எழுதுனதைப்
படிச்சிருக்கேன்!!! இந்தப் ப்ளான் நல்லா வொர்க் அவுட் ஆச்சு!!!!
இந்தக் 'கேட் டோர்'லே ஒரு கஷ்டமும் இருந்துச்சு. நம்ம பூனையல்லாத வேற பூனைங்களும் வீட்டுக்குள்ளே
வந்து, இருக்கறதை ஒரு பிடி பிடிச்சுட்டுப் போக ஆரம்பிச்சதுங்க!!!! ஒரு சின்னப் பிரவுன் நிறப்
பூனைக்குட்டி எப்பப்பார்த்தாலும் ரொம்ப உரிமையோடு வந்து சாப்பிடறது மட்டுமில்லாம, நம்மப் படுக்கை
அறைக்குள்ளும் வந்து கட்டிலில் ஒய்யாரமாத் தூங்க ஆரம்பிச்சது! தினமும் அதைத் துரத்தறதே எங்களுக்கு
வேலையாப் போச்சு! சத்தமே இல்லாமப் 'பூனை' மாதிரி வீட்டுக்குள்ளெ வந்துரும்!!!!
நம்ம வீடு 'யுனிவர்சிட்டி'க்குப் பக்கம் என்றதாலே வருஷ மார்ச் முதல் நவம்பர்வரை மாணவர்கள் கூட்டம்
அதிகம் இருக்கும். இதுலே பலர் நண்பர்களுடன் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருப்பாங்க.
பரீட்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சா, கூட்டைக் கலைச்சு விட்டமாதிரி எல்லோரும் போயிருவாங்க. இதுலே
பலர் பூனை, நாய் வளர்க்கறவங்கா இருப்பாங்க. நாய் வச்சிருக்கவங்க அவுங்க போகும்போது நாயைக்
கூட்டிட்டுப் போயிருவாங்க. இந்தப் பூனைக்கேஸ்ங்கதான் கொஞ்சம் 'டோண்ட் கேர்' ஆளுங்க! பல
சமயம் அப்படியே விட்டுட்டுப் போயிடுவாங்க. அதுங்கதான் அக்கம்பக்கத்து வீடுகளிலே போய் தெண்டுறது!!!
இதனாலேயே பல பூனைங்களை நாம பாத்துக்க வேண்டியதாயிடும்!!!! பொறுப்பில்லாத ஜனங்கள்!!!! இதுவரை
வந்த பூனைங்களைக் கணக்கெடுத்தா ஏராளமாப் போயிரும், இந்தத்தொடரும் முடிவில்லாமத் தொடர்ந்துடும்!!
அதனாலே நம்ம வீட்டுக்குள்ளே வந்து , வாழ்க்கையிலே பங்கு வச்சதுங்களைமட்டும் சொல்வேன்!
இன்னும் வரும்!!!!!
Wednesday, July 06, 2005
என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 14
Posted by
துளசி கோபால்
at
7/06/2005 11:58:00 AM
6
comments
Monday, July 04, 2005
USA-ல் உள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு!!!
அமெரிக்காவாழ் வலைப்பதிவாளர்களுக்கு,
சுதந்திரதின 'விடுமுறை'க்கு வாழ்த்துக்கள்!!!!!
Posted by
துளசி கோபால்
at
7/04/2005 04:01:00 PM
17
comments
Friday, July 01, 2005
என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 13
சுத்தமுன்னா சுத்தம்! அப்படியொரு சுத்தம்!!! மனுசங்க ஆஸ்பத்திரியைவிட அட்டகாசமா இருக்கு!!!
அங்கெயிருக்கற வசதியான நாற்காலிகளிலெ, நாற்கால் ஜீவன்களொடு உக்காந்திருக்கற ஆளுங்ககிட்டே
முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்!!!! அந்த ஜோதியிலே நாங்களும் அப்படியே ஐக்கியமாயிட்டோம்!!!!
வலைபெட்டிக்குள்ளே நம்ம 'ஆளு' இருக்கார், அப்பப்ப தீனமா ஒரு குரல் கொடுத்துக்கிட்டு!!!
நாய்ங்களோட வந்திருக்கறவங்க மட்டும், (ஸ்டைலா ஒரு 'லீஷ்' போட்டது!) கூடையில்லாம இருக்கறாங்க!
நாய்ங்க வேற இந்தப் பூனைக்கூடைங்களைக் கட்டாயம் மோந்து பாக்கவேண்டிய நிர்பந்தந்துலே
இருக்கறமாதிரி, ச்சும்மாச்சும்மா பூனைக்கூடைகிட்டே வர்றதும், பூனைங்க எல்லாம் தீனமாக் குரல்
கொடுக்கறதும், நாயோட 'அம்மாங்க' ஹை ஜாக்கி, ஜிம்மி( எதாவது ஒரு பேரு போட்டுக்குங்க.. ஆனா
பேரு மட்டும் வெள்ளைக்காரப் பேரா இருக்கட்டும்!!)ன்னு அதுங்களை அடக்குறமாதிரி 'பாவ்லா' காட்டறதுமா
இருந்துச்சு! சுவத்துலே இருக்கற அலமாரிகள்லே விதவிதமான பிஸ்கெட், சாப்பாடு, இன்னும் நான்
'சூப்பர் மார்கெட்'லே பார்த்த அத்தனைவகை விளையாட்டுச் சாமான்களும் அலங்காரமா இருக்கு.
ப்ராண்ட் பேருங்கதான் வேற, ஆனா பாக்குறதுக்கு அதேதான்!!! விலையும் 'தீ பிடிச்ச' விலை!!!!
நம்ம கப்பு ஆரோக்கியமா இருக்கான்னு செக் செஞ்சுக்கறதுக்கும், தடுப்பூசி போட்டுக்கவும் வந்திருந்தோம்.
வெட்னரி டாக்டரைப் பார்த்தோம். 'பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர்டு டொமெஸ்டிக் கேட்'ன்ற ஜாதியாம் நம்ம
கப்பு! பயந்த பார்வையோட ஒரு ச்சின்ன நடுக்கமும் இருந்துச்சு! அப்பப்ப அழுகை வேற!!!
பரிசோதனை முடிஞ்சு, வீட்டுக்குக் கொண்டுவந்து கூண்டைத் திறந்ததும் விட்டுச்சு சவாரி!!!
ஒரே ஓட்டம்!
நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையிலே ரெண்டு வீடுதள்ளிதான் இருக்கு இந்த வெட் க்ளினிக். ரோடை
குறுக்காலெ கடந்தா ஆச்சு. ஆனா, கூடையிலே பிடிச்சுப் போடறதுமுதல், திரும்ப வர்றதுவரைக்கும்
'அய்யோ, அம்மா'ன்னு விடாம அழுதுக்கிட்டு இருக்கறதாலே கார்லேதான் கொண்டு போவோம்!!!!
இல்லேன்னா, ரோடெல்லாம் கூப்பாடு போட்டுக்கிட்டு, போறவர்றவங்கெல்லாம் நம்மையே
பாக்கறமாதிரி ஒரு பிரமை நமக்கு உண்டாக்கிரும்!!!
நம்ம கப்பு ஒரு 'கிட்டன் நாப்பர்' ஆயிடுச்சு! ஒருநாள் மழையான மழை. கப்புவைக் காணாம். கூப்பிட்டுக்
கூப்பிட்டுப் பார்த்தாச்சு! அப்ப எங்கோ கிணத்துக்குள்ளெ இருந்து கேக்குற மாதிரி ஹீனமா ஒரு 'மியாவ்'
சத்தம் கேட்டது! தோட்டத்துலே தேடிக்கிட்டே போறேன். ஒரு புதருக்குள்ளே இருந்து சத்தம் வருது.
உள்ளே பார்த்தா..... கப்பு பதுங்கிப் படுத்திருக்கு! மெதுவாத் தூக்குனா, கூடவே வெள்ளையா ஒரு பொட்டலம்
வருது. அய்யய்யோ... அது பொட்டலமில்லே! ஒரு பூனைக்குட்டி!!! பிறந்து ஒருநாளோ ரெண்டுநாளொதான்
ஆகியிருக்கும்போலெ!!! துவண்டு கிடக்குது பாவம்!!!! அக்கம்பக்கத்து வீடுங்களிலே விசாரிச்சாச்சு.
யாரோடதும் இல்லையாம்! எங்கே இருந்து வந்துச்சுன்னு தெரியலை!!!! வாயிலே சொட்டுப் பாலைவிட்டாக்
குடிக்கக்கூடத் தெம்பில்லாம இருக்கு! அப்புறம், நம்ம நண்பர் ஒருத்தர் வீட்டுலே பூனை, குட்டி போட்ட
விவரம் ஞாபகம் வந்து அவுங்க வீட்டுலே கொண்டுபோய்க் கொடுத்தோம்,எப்படியாவது அந்தப் பூனை
இதுக்கும் பாலூட்டிக் காப்பாத்திடும் என்ற நம்பிக்கையில்!! ஹூம்.. அதும் விதி முடிஞ்சது....
இப்ப நம்ம கப்புவுக்கு ஏறக்குறைய ஒரு வயசு! ஒருநாள் திடீர்னு பார்த்தா, வயிறு கொஞ்சம் பெருசா
இருக்கு! அட! புள்ளைத்தாய்ச்சி!! ஈராக் போர் ஆரம்பிச்ச நாள்!!! எங்கே பாத்தாலும் 'சதாம் ஹுசேன்'
பேச்சுதான்! அன்னைக்குக் கப்புவுக்கு 'குழந்தை' பொறந்துச்சு! சொன்னா நம்ப மாட்டீங்க!!! ஒரே
ஒரு குட்டி!!!! அதுக்கு 'சதாம்'னே பேரு வச்சாச்சு. அடுத்தவாரம் 'வெட்' கிட்டே கொண்டுபோனப்பதான் அது
பொண்ணுன்ற விவரம் தெரியுது:-) உடனே பேரை மாத்தணுமா இல்லையா? இனிமே அது 'மணி' !!
மகளோட பள்ளிக்கூடம், பாலே க்ளாஸ், பியானோ ட்யூஷன்னு எங்கெ போனாலும் மணியைத் தூக்கிக்கிட்டுப்
போவேன். அதுபாட்டுக்கு முன் சீட்டுலே படுத்துக்கிட்டு இருக்கும்! அங்கெ வர்ற புள்ளைங்களும் நம்மளைப்
பார்த்ததுமே ஒடிவரும்,'மணி'யைக் கொஞ்ச!!!!! மணி படு அழகு!!!!
கப்பு ஒரு கண்டிப்பான 'அம்மா'!!! அப்பப்ப 'மணி'க்கு ஒரு ச்சின்ன அடி வைக்கும்! என்னடா, இது 'ஃபிஸிகல்
அப்யூஸ்'ன்னு கிண்டல் செய்வோம்! இங்கே நம்ம புள்ளைங்களைக்கூட நாம் ஒரு அடி அடிச்சுடக்கூடாது!
அரசாங்கம் நம்மை 'உள்ளே'தூக்கிப் போட்டுரும்!!! சரி, சும்மா வாய்வார்த்தையா திட்டலாமுன்னாலும் முடியாது.
அது 'வெர்பல் அப்யூஸ்'ஸாம்!!!! கப்பு, கொடுத்துவச்சது. அதுக்கு இந்தக் கண்டிஷன் எல்லாம் இல்லை!
மணி , பொண்ணுன்னு தெரிஞ்சது முதல் எங்க வீட்டுலே இவரோட புலம்பல் அதிகமாயிடுச்சு!! 'கொஞ்ச நாள்லெ
அது பெருசாயிரும். இதுங்க ரெண்டும் மாறிமாறிக் குட்டி போட்டா, பக்கத்து வீட்டு ஃபியோனாவோட
கதிதான் உனக்கும்'னு சொல்லி ஒரே ரகளை!!!! 'இப்ப இது ச்சின்னதா இருக்கறதாலே யாராவது
வளர்க்கக் கொண்டு போயிடுவாங்க. பெரிய பூனை ஆச்சுன்னா யாருக்கும் வேணாம். அதனாலே இப்பவே
இதை 'ஆர்.எஸ்.பி.சி.ஏ' கொடுத்துரணும்'
நான் எவ்வளவோ போராடிப் பார்த்தாச்சு. ஊஹூம், கேக்கற ஆளா? 'நான் கப்புவையும், மணியையும்கொண்டு
போய் விடத்தான் போறேன்'னு ஒரு நாள் நிஜமாவே கிளம்பிட்டாரு. கப்புவைப் பிடிக்கப்போனா அது ஓடிப்போய்
ஒளிஞ்சுக்கிச்சு! மணி பாவம்தானே? எப்பவும் என்கூடக் கார்லே வந்துக்கிட்டு இருந்ததுதானே?
அது பேசாம இருந்துச்சு. இவர் ஆங்காரமாக் கொண்டுபோயிட்டாரு!!
இவர் வீட்டுக்கு வந்ததும், நானும் மகளும் மூஞ்சைத் தூக்கிக்கிட்டு இருந்தோம். இப்ப எங்க புலம்பல்
ஆரம்பிச்சுடுச்சு!!! அன்னைக்கெல்லாம் விடாம அழுகையும், ஆங்காரமுமாப் போச்சு! கப்புவைக் காணோம்!
மறுநாள் காலையிலே கப்பு உள்ளெ வந்து, மணியைத் தேடுது!!!! ச்சின்னதா அழுது! சத்தமாக் கூப்புடுது!!!
எனக்குப் பாக்க சகிக்கலை! இவருக்கும்தான்!!! அப்புறம் மெதுவாச் சொல்றாரு, 'நீ ஃபோன் போட்டுக்
கேளு. திருப்பித் தருவாங்களா'ன்னு!! உடனே ஃபோன் போட்டேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. நேத்தே
இவர், விட்டுட்டு இப்படி வந்ததும்,உடனே பூனை வாங்க ஒரு குடும்பம் வந்தாங்களாம். மணியோட
அழகைப் பார்த்துட்டு உடனே கொண்டு போயிட்டாங்களாம்!! ஒரு மணி நேரம்கூட இல்லையாம்!!!
மணி ஒரு நல்ல வீட்டுக்குப் போயிருச்சு'ன்னு சொன்னாங்க!
கப்புவை சமாதானம் செய்யறது பெரிய பாடாப் போச்சு!! ஒரு மாசம் ஆனதும், இனி கப்புவை இப்படியே
விட்டா மறுபடி குடும்பம் பெருகி, பழையபடி போர்க்களம் போகவேண்டியிருக்குமேன்னு கவலை வந்துச்சு!
இங்கே 'கேட்ஸ் ப்ரொட்டெக்ஷன் லீக்'னு ஒரு அமைப்பு இருக்கு. அவுங்ககிட்டே என்ன செய்யலாமுன்னு
ஒரு யோசனை கேட்டேன். அவுங்க சொன்னாங்க 'ஃபிக்ஸ்' செஞ்சுரலாமுன்னு!!!!!
இன்னும் வரும்!!!!!
Posted by
துளசி கோபால்
at
7/01/2005 01:48:00 PM
5
comments
