Friday, May 09, 2025

படிப்புக்கான தேவன்..... (2025 இந்தியப்பயணம் பகுதி 18 )

கண்ணுக்கும் பல்லுக்கும் இந்த ராகவைய்யாத் தெருவுக்குள்  புகுந்து புறப்பட்டுக்கிட்டே இருக்கோம், இந்த முறை. பொதுவா கண்ணுக்கு மட்டும்தான் வர்றது வழக்கம். வரும்போதெல்லாம்  நேரம் பொருந்திவந்தால் தொட்டடுத்தாப்லெ இருக்கும் ஸ்ரீ ராகவேந்த்ரா மடத்துக்குள்  போய் நம்ம க்ருஷ்ணனை தரிசிப்பது வழக்கம். 
இன்றைக்குப் பல்வேலையாகப்போனால் வாசலில் தோண்டிவச்சுருக்காங்க நகராட்சி.  தெருவில் தடுப்பு வேற.  தெருவில்   கொஞ்சம் உள்ளே போய்த்தான் யூ டர்ன் எடுக்கவேண்டியிருந்தது.  அப்பதான் கவனிக்கிறேன்  ஒரு கட்டடத்துக்குள்ளே கேரளா/ கர்நாடகா ஸ்டைலில்  ஒரு கருவறை வடிவம்.  இருட்டில் என்ன பெயர்னு தெரியலை. யூ டர்ன் எடுத்தபின் பார்த்தால் .......   பக்கத்துக் கட்டடம் ஸ்ரீ ராகவேந்த்ரா மடம் கோவில்.
அட !  எத்தனை முறை  இங்கே வந்துருக்கேன்...  குதிரைக்குக் கண்பட்டை போட்டாப்லெக் கண்ணாடிக்கடை கோவில் கண்ணாடிக்கடை  கோவில்னு இருந்துருக்கேனே தவிர   கண்ணை ஏறெடுத்து அந்தாண்டை பார்க்கலை பாருங்க!  
பல்வேலையை முடிச்சுட்டு நேரா அந்த வாசலுக்குப் போனோம்.  வாதிராஜர் மடம், உள்ளே போனால்  ரெண்டொருவரைத்தவிர  யாருமில்லை.  முதல்முறை வர்றதால் ஒரு விநாடி திகைச்சு நின்னுட்டு  எதுக்கும் வலப்புறமாகவே போனால் ஆச்சுன்னு போனால், தேர்வடிவக் கருவறை,  தெருவுக்கு முதுகு காமிச்சு நிக்குது.  
முன்பக்கம் கருவறைக்குள் பார்த்தால் மூலவர் ஹயக்ரீவர் , அலங்காரத்துடன் இருக்கார். 

ஆஹா.....' குதிரை தின்ன கடலை ' மனசுக்குள் வந்து போச்சு..... கர்நாடகா உடுபி பயணத்தில் நாம் போய் வந்தது   இங்கே.....  சரியாச் சொன்னால் ஒன்னரைப்பதிவுதான்.  கொஞ்சம் எட்டிப்பார்த்தீங்கன்னா விசேஷ விவரங்கள் தெரிஞ்சுக்கலாம். 

https://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_3651.html

https://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_20.html

சாயங்காலப்பூஜை ஆரம்பிச்சது.  கேரளக்கோவில்களில் இருக்கோமோன்னு ஒரு மனமயக்கம்.  மூலவருக்குப் பூஜை ஆனதும், மற்ற சந்நிதிகளிலும் தீபாராதனை காமிச்சாங்க.  படம் எடுக்கலாமான்னு தெரியாததால்   ச்சும்மா இருந்தேன். பூஜைகள் முடிஞ்சதும், ஆஃபீஸ்  அறையில் இருந்தவரிடம் படம் எடுக்க அனுமதி வாங்கிட்டு, அப்படியே  பேரன் பெயரில்  அர்ச்சனைக்கும் ஒரு  டிக்கெட் வாங்கி அதுவும் ஆச்சு. 

பூதராஜர்னு ஒரு சந்நிதி! சிவபெருமானின் பூதகணங்களுக்கெல்லாம் தலைவர் இவர்தான். தினப்பூஜை தவிர இவருக்கு ஒரு குறிப்பிட்ட தினங்களில் விசேஷ பூஜை இருக்குன்னு  தகவல் பலகையில் பார்த்தேன்.  சரி ன்னு மனசு சும்மா இருக்குதா ? அன்றைக்கு என்ன விசேஷமுன்னு பார்த்தால் சங்கராந்தி தினமாம்.  
எல்லா மாசமும் சங்கராந்தி தினத்தில் பூதராஜாவுக்குப் பூஜை.  எனக்குத் தெரிஞ்சதெல்லாம்  மகர சங்கராந்தி மட்டும்தான்.  அதான் நம்ம பொங்கல் பண்டிகை தினம்.  மாசாமாசம் சங்கராந்தி வருதுன்னு அப்பதான் புரிஞ்சது.  இதுவுமே  ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது  ஒரு குறிப்பிட்ட நாளில் வர்றதுதான்.  மேஷம் முதல் மீனம் வரை சங்கராந்திகள். 



சோதே (Shri Sode Vadiraja Mutt  )மடத்தினர் இந்தக்கோவிலை 2009  ஆம் வருஷத்தில்  நிர்மாணித்து,  நிர்வகிக்கிறாங்க.  படு சுத்தமாகப் பராமரிக்கிறாங்கன்னு  பளபளப்பே சொல்லுது !  இனி வரும் பயணங்களில் ஒரு முறை இங்கும் வந்துபோக வேணுமுன்னு மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன் !
வெளியே படிகளிறங்கி வந்தால் வாசலையொட்டி ஒரு மரம்.  என்ன மரமுன்னு தெரியலை. மஞ்சள் துண்டு கட்டி, நாட்டார் சாமிகள் படம் ஒன்னு வச்சுருக்காங்க.  மற்ற விவரம் ஒன்னும் தெரியலை.... மரத்தை வெட்டாமலிருக்க உதவலாம். 
இன்றைக்கு ராச்சாப்பாடு கீதத்தில் !  வேலைக்கு ஆள் வேணுமாம்.  வழக்கம்போல் அவரவருக்கு வேண்டியது அவரவருக்கு!  எனக்கு மினி இட்லி சொன்னதும் சாம்பார்க்குளத்தில் மூழ்கிய  இட்லிகள் வந்தன.  எனக்கு இப்படி இருந்தால் பிடிக்காது.  அதை விஜிக்குக் கடத்திட்டு, சாம்பார் தனியாகவும் மினி இட்லி தனியாகவும் இருக்கும்படி கேட்டு வாங்கினேன். 



 வாசலில் 'நம்ம சென்னை' போட்டுவச்சுருக்காங்க. 
இந்தப்பயணத்தில்  ஜி என் சாலையின் ரெண்டு ஓரத்திலும் இருக்கும் கீதம் & சங்கீதாவுக்குமாத்தான் மாறிமாறிப்போய்க்கிட்டு இருக்கோம். ரெண்டுமே சுமார்தான் என்னைப்பொறுத்தவரையில்.....  போகட்டும்......ஏதோ ஒன்னு......


மறுநாள் கொஞ்சம் ஸ்பெஷலா இருக்கப்போகுதுன்னு இப்போதே  சொல்லி வைக்கிறேன்!    

தொடரும்.........  :-)

6 comments:

said...

கோவில் பற்றிய விவரங்கள் புதிது.

செயற்கை சப்பாத்திகள் போலவே மற்ற ஹோட்டல்களில் கிடைக்கும்போது கீதத்தில் சப்பாத்தி அருமையாக இருக்கும். 

said...

// கீதம் & சங்கீதாவுக்குமாத்தான்//

சரவணபவன், மரத்துக்குப் பக்கத்து இருக்கை இல்லியா ?

said...

ஹயக்ரீவர் கோவில் தரிசனம் புதிதாக கிடைத்துள்ளது. நன்றாக இருக்கிறது கோவில்.

said...

வாங்க ஸ்ரீராம்,

இந்தக்கோவிலைப்பார்த்தது எனக்கும் ஆச்சர்யமே !

கீதம் சப்பாத்திகள்....... அப்படியொன்னும் வித்யாசம் எனக்குத் தெரியலை. நான் இட்லி ஆள் !

said...

வாங்க விஸ்வநாத்,

சரவணபவன் இப்போ இல்லை. அந்த மரம் கூட என்ன ஆச்சோ ? ப்ச்.....

said...

வாங்க மாதேவி,
நல்ல அழகான கருவறைப்பா !!!!!