Friday, September 11, 2020

ரோட்டோருஆ பயணம் (பகுதி 1 )


துளசிதளமும் கொரோனா காலத்தில் லாக்டௌன் ஆகிருச்சு. இனியும் தள்ளிப்போட்டால் ஆகாதுன்னு  முடக்கத்தில் இருந்து மெல்ல வெளி வருகிறது :-)

ஆரம்பம்....   கொஞ்சம் மெதுவாக  நடக்கட்டும். வாரம் ஒன்றுன்னு  ஆரம்பிக்கணும். இன்று வெள்ளிக்கிழமை நல்ல நாள்தான் இல்லையோ !!!

ஒரு நாப்பத்திநாலு நாட்களா இந்தப் பக்கம் வரலைன்றதுக்காக வீட்டையே இடிச்சு மாத்துனா எப்படி ?  இந்த ப்ளொக்ஸ்பாட் ஓனர்.....   தன்னிஷ்டம் போல ஆடறாரே.....    வீட்டுக்குள்ளே புகுந்தால்  எதெது எங்கே இருக்குன்றதே ப்ரச்சனையாப் போச்சு...  ஒரே தட்டும் தடுமாற்றமும்தான்.....  வாடகை இல்லாம இலவசமாக் கொடுக்கற 'வீட்டுக்காரரை' என்னன்னு வையறது....  

 என்னவோ போங்க..... 





ரோட்டோருஆ பயணம்  (பகுதி 1 )

'எப்படிங்க உங்கூருக்கு வர்றது?'ன்னு யாராவது கேட்டுருப்பாங்களோ?  

'அப்படியே ரோட்டோரமா வா 'ன்னு பதில் கிடைச்சுருக்கும் போல !   அதான் இந்த இடத்துக்கே  ரோட்டோரு ஆ ன்னு பெயரே வந்துருக்கு :-)

உண்மையில் இது மவொரிச் சொல். ரோட்டோன்னால் ஏரி, ருஆ ன்னால் ரெண்டு, ரெண்டாவதுன்னு ன்னு ......  ரெண்டாவது ஏரி ! 
இந்த ஊருக்கு  ஒரு மவொரி பெயரும் இருக்கு.  Te Rotorua-nui-a-Kahumatamomoe.  சொல்லிப் பாருங்க.   பல் சுளுக்கிக்கும் இல்லே ? 

மவொரி இனமக்கள்தான்  நியூஸியின் ஆரம்பகால மக்கள். இங்கேயே இருந்த பழங்குடிகளா ?  ஊஹூம்......   இவுங்களும் இந்த கலியுக பாஷையில் வந்தேறிகள்தான். என்ன ஒன்னு.....    கேப்டன் குக்,  இந்த வழியாப்  போனப்ப எதோ தீவு மாதிரி ஒன்னு இருக்கேன்னு பார்த்துவச்சுக்கிட்டு, அப்புறம்  ஒருக்கா இங்கே வந்து காலு குத்தின  நாளுக்கு, ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே இங்கே வந்து குடியேறுன மக்கள்தான்.  பஸிஃபிக் கடலின் பாலிநேஷியாத் தீவுகளில் இருந்து  இங்கே புலம் பெயர்ந்த மக்கள்தான் இவுங்க.
இவுங்க இனம் பெருகி,   அரசர், மக்கள்னு  ஆரம்பிச்சு, அப்புறம்  இவுங்களுக்குள்ளேயே குழுக்கள் பிரிஞ்சு சிற்றரசர்களா அங்கங்கே அவரவர் குழுக்களுடன்  தீவின் பல இடங்களில் போய்த் தங்கிட்டாங்க.  இந்த ரோட்டோருஆ பகுதிக்கும் இப்படி ஒரு தலைவரின் மாமனோ மச்சானோ வந்து, இடத்தைப் பார்த்துப் பிடிச்சுப்போய் தன்னுடைய குழுவோடு இங்கே குடிவந்துட்டார்.   ஊரோட முழுப்பெயர் இருக்கு பாருங்க.... அதுலே பின்பகுதி இவருடைய பெயர்தான். Kahumatamomoe  கஹுமாட்டாமொமு ( சரியான உச்சரிப்புதானான்னு தெரியலையே.....  ) மவொரி மொழிக்கு எழுத்துரு கிடையாது. பேச்சு மட்டும்தான்.  வெள்ளையர் வந்தாட்டு, அவுங்க இங்லீஷ் எழுத்துகளைப் பயன்படுத்திக்கிட்டாங்க. 


ரொம்பப்பெரிய ஊருன்னு சொல்ல முடியாது.  ஜனத்தொகை சுமார் 76 ஆயிரம். மவொரிகளின் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாத்திக்கிட்டு இருக்கும் ஒரு ஊர்.  அச்சு அசலா இவுங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு நாம் பார்த்துத் தெரிஞ்சுக்கும் வகையில்  லிவிங் மவொரி வில்லேஜ்  இருக்குமிடம் இது !   வெந்நீர் ஊற்றுகள்( Geothermal ) நிறைந்த பகுதி!  இதையொட்டியே மவொரி கிராமங்கள் ! சுற்றுலாப்பயணிகளுக்கு  ரொம்பவே முக்கியமான ஊர் இது.  நியூஸியின் வடக்குத்தீவில் இருக்கு!

நியூஸிலாந்து நாடுன்னா மூணு தீவுகளைச் சேர்த்துதான்.  சின்னச்சின்னக் குட்டித்தீவுகளைக் கணக்கில் நான் சேர்க்கலைப்பா.  இந்த மூணு தீவுகளிலும் பெருசுன்ற கணக்கில்  வடக்குத்தீவு, தெற்குத்தீவு, அப்புறம்  ஸ்டூவர்ட் தீவு சின்னது ஒன்னுமா இருக்கு. 

வடக்குத் தீவை விடத் தெற்குத்தீவு கொஞ்சம் ஒரு 36708 சதுர கிமீ பெருசு.   மவொரிகள் வந்து இறங்கியது  வடக்குத்தீவில்.  வெள்ளைக்காரர்கள் வந்திறங்கியது தெற்குத்தீவில் !  ( ஆளாளுக்குத் துண்டு போட்டு இடம் புடிச்சுட்டாங்கபா ! )   நாங்க வசிப்பது தெற்குத்தீவில்! 

நியூஸியில் ரொம்பவே இயற்கை அழகோடு ஏராளமான இடங்கள் இருக்கு. சுற்றுலா வர்றவங்க அதிகபட்சமா ரெண்டு வாரம் தங்கி,  முக்கியமான இடங்கள்னு சுற்றுலாத்துறை சொல்லும் இடங்களைப் பார்த்துட்டுப் போயிருவாங்க. நாமோ உள்ளூர் மக்கள். ( இங்கே வந்து 33 வருஷமாச்சு! )  இங்கெதானே இருக்கோமுன்னதும்  ஒரு மெத்தனம் வந்துருது பாருங்க.....   தெற்குத்தீவை ஓரளவு சுத்திப் பார்த்துட்டோம்.  வடக்குத்தீவிலும்  பெரிய நகரங்களான  ஆக்லாந்து, வெலிங்டன்(இதுதான் தலைநகர்)  சிலமுறை போய்ப் பார்த்துட்டு வந்துருக்கோம். 

இன்னும் பார்க்காத இடங்களுக்கு ஒருமுறையாவது போகணும் என்ற ஆசையில்  ரோட்டோருஆ போக முடிவு செஞ்சோம். நினைச்சவுடனே சட்னு கிளம்பமுடியுதா ? முதலில் ரஜ்ஜூவுக்கு ஹாஸ்டலில் இடம் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டுத்தானே ஏர்லைன்ஸ் டிக்கெட்டே  புக் பண்ணனும் இல்லையோ ! அப்புறம்  அங்கே போய் இறங்கினதும் ஊர்சுத்த ஒரு  வாடகைக் கார்,  தங்கற இடங்கள்னு ஒவ்வொன்னா வலை போட்டுப் பிடிச்சு எல்லாம் சரியாச்சு.

சுபயோக சுபதினத்தில் காலையில் ரஜ்ஜுவைக் கொண்டுபோய் கேட்டரியில் விட்டுட்டு,  வீட்டுக்கு வந்து சின்னதா ரெண்டு பொட்டிகளை எடுத்துக்கிட்டு  எங்கூர் விமானநிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சுமார் இருபது மொழிகளில் நம்மை வரவேற்றது ஏர் நியூஸிலாந்து!  இதுலே 'நமஸ்தே' இருக்கு :-) பகல் ஒரு மணிக்கு நம்ம ஃப்ளைட்.   சுமார் ரெண்டு மணி நேரப் பயணம்.  900 கிமீ தூரம். 

சின்ன சைஸ் விமானம் என்பதால்  ஆடி ஆடிப் பறந்து பகல் மூணுமணிக்குத் தரையைத் தொட்டது. ரொம்ப ஆடம்பரம் இல்லாத  சுமாரான ஏர்ப்போர்ட்தான்.  த்ரிஃப்டி கம்பெனியின் வாடகைக் கார் புக் பண்ணி இருந்தோம். திரும்ப   நாம் வண்டியை ஒப்படைக்கப்போவது வேற ஊரில்.  இங்கே செல்ஃப் ட்ரைவிங் என்பதால்  எந்த ஊரிலாவது வாடகை வண்டி எடுத்துக்கிட்டு அப்படியே  ஊர்களைப் பார்த்துக்கிட்டே போய்  வேற எந்த ஊரிலும்  அந்தந்தக் கம்பெனி வச்சுருக்கும் இடத்தில்  வண்டியை விட்டுடலாம்.  எல்லோரும் சாலைவிதிகளை மீறாமல் கடைப்பிடிப்பதாலும்,  நாடு முழுசுக்குமான சாலைகளை நல்லபடியாகப் பராமரிக்கும் அரசு இருப்பதாலும்  எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.

கார் சாவியை வாங்கிக்கிட்டு இந்த ஊரில் நாம் தங்கப்போகும் 'ஸீடர்வுட் லேக் ஸைட் மோட்டலு'க்குப் போய்ச் சேர்ந்தோம். அதிக தூரமில்லை. ஒரு  மூணு கிமீதான்.  இது ரோட்டோருஆ ஏரிக்கரையாண்டை இருக்கு.  வரவேற்பில் போய் நாம் தங்கப்போகும் யூனிட் சாவியை வாங்கினதும், ஒரு  முன்னூறு மில்லி பால் எடுத்துக் கொடுத்தார் வரவேற்பாளர்.  கிச்சனோடு இருக்கும் யூனிட்கள்தான் மோட்டலில் என்பதால் நமக்கு ஒரு காஃபி, டீ போட்டுக்கப் பாலுக்கு ஓட வேணாம். சக்கரை, காஃபிப்பொடி, டீத்தூள் எல்லாம் அடுக்களையிலே இருக்கும்.  தினமும் கொண்டு வந்து அடுக்கி வச்சுருவாங்க. இன்னும் தேவையானா ஃபோன் பண்ணிச் சொன்னால் போதும்.  நல்ல வசதியான அறைகள்தான் பொதுவாகவே !

பத்து விநாடி நடையில் ஏரிக்கரைக்குப் போயிடலாம். ஒரு 80 சதுர கி மீ  அளவுலே பரந்து கிடக்கு.  நல்ல ஆழம்தானாம். பத்து மீட்டர்னு சொன்னாங்க.எனக்குப் பார்த்தவுடனே பிடிச்சுப்போச்சு !  நம்ம யூனிட்  எண் 14. இங்கே மொத்தமே 17 யூனிட்கள்தான். 

டீ போட்டுக் குடிச்சுட்டு கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, ஏரியை ஒரு நோட்டம் விட்ட கையோடு  ரோட்டோருஆ ஊருக்குள்  போய்ப் பார்க்கலாமுன்னு  கிளம்பினோம். சுமார் ஒன்பது கிமீ தூரத்தில் ஊர் இருக்கு.  வர்ற வழியெல்லாம்  மக்காச்சோளம்  பயிரிட்டு இருக்காங்க.  சொல்ல மறந்துட்டேனே.... இன்றைக்குத்தான் எங்க கோடை காலத்தின் கடைசிநாள். நாளை முதல் இலையுதிர்காலம்.
புது இடம் என்பதால் வேடிக்கை பார்த்துக்கிட்டே  ஊருக்குள் போய்ச் சேர ஒரு இருபது நிமிட் ஆச்சு.  முதலில்  பார்க்கப் போனது கவர்மென்ட் கார்டன்னு ஒரு இடம்.  அட்டகாசமான பழைய ஸ்டைல் கட்டடம். இதுக்குள்ளே ம்யூஸியம் இருக்கு!  வார் மெமோரியல், ரோஜாத்தோட்டம்,  சீரான புல்தரைகளோடு கோல்ஃப்,  Croquet  மைதானங்கள், ஈவன்ட் சென்டர்னு  பெரிய இடம்தான்.  ஏரிக்கரையையொட்டியேதான் இருக்கு இதுவும்! 
எக்கச்சக்கமான கடல்புறாக்கள், கருப்பு அன்னங்கள், கூஸ் ரக வாத்துகள்னு நமக்குத்துணையா நடை போட்டுக்கிட்டு இருக்காங்க.


அந்தக் காலத்துலே  இங்கே  மவொரிகள்  வந்த படகைப்போல ஒன்னு செஞ்சு பார்வைக்கு வச்சுருக்காங்க.    இதுக்கு Waka ன்னு பெயர். 20 மீட்டர் நீளமும்,  ரெண்டரை டன் எடையிலுமா இருக்கும் இதை 1989  ஆண்டுதான்  செஞ்சாங்களாம்.


ஏரியை விட்டுக்கிளம்பி  டவுனுக்குள்ளே போய் ஒரு சுத்து. பெரிய கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் எல்லாம்  செயின் ஸ்டோர்ஸ் என்றபடியால் பழக்கப்பட்ட பெயர்கள்தான்  அதிகம். அப்பதான் நினைவுக்கு வந்தது, நான்  இரவு உடை கொண்டுவர மறந்துட்டேனேன்னு. தெரிஞ்ச பெயருள்ள கடையில் போய்  ஒன்னு வாங்கிக்கிட்டுப் பக்கத்துலே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் மறுநாள் காலைக்குத் தேவையான  சில சாப்பாட்டுச் சமாச்சாரங்கள்  வாங்கிக்கிட்டோம்.

திரும்ப மோட்டேலுக்கு வர்ற வழியில் ஒரு ஷாப்பிங் சென்டரில் இருக்கும் இந்திய உணவுக் கடையில் 'நான் &  வெஜ் கறி 'பார்ஸல் ஆச்சு.
அறைக்குப் போய்  கொஞ்சம் ஓய்வு (அதான் ஃப்ரீ வைஃபை இருக்கே! )
அதன்பின் ராச்சாப்பாடுன்னு முடிச்சுக்கிட்டோம்.

ஒருநாள் போச்சு!  காலையில் சீக்கிரம் கிளம்பலாமா ?

தொடரும்........  :-) 


20 comments:

said...

மலரும் நினைவுகள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

said...

புது இடத்தின் அறிமுகம். தொடர்கிறேன்.

said...

உள்நாட்டு பயணமா ? சூப்பர்
படிக்கும் போது உடன் அழைத்து செல்வது போல் இருந்தது 😃

said...

படங்களுடன் பகிரும் பாங்கு எங்களையும் உடன் அழைத்துப் போவது போல உள்ளது..உடன் பயணிக்கிறோம்..

said...

அருமை நன்றி

said...

ரோட்டோருஆ ...தகவல்களும், இடமும் மிக சிறப்பு...


வழக்கம் போல படங்கள் அட்டகாசம்..😍😍😍

said...

முடக்கத்திற்குப் பின், முழு வீச்சில். வழக்கம்போல அனுபவிக்கத்தக்க பகிர்வு

said...

உள்நாட்டுப் பயணம். உங்கள் தயவில் நியுுசி சுற்றிப் பார்க்கப் போகிறேன்!

படங்கள் வழமை போலவே அழகு.

சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு. தொடரட்டும் பதிவுகள்!

எனது பக்கத்திலும் நடுநடுவே சற்றே இடைவெளி வந்து விடுகிறது! தொடர்ந்து எழுத வேண்டும்!

said...

பள்ளியூடம் இல்லாம போர் அடிச்சுப் போச்சு. நல்ல வேளை ஆரம்பிச்சு வெச்சீங்களே.

நான் வெஜ் கறின்னு பார்த்த உடனே தூக்கிவாரிப் போட்டது. திரும்பப் படிச்சாத்தான் உம்மைத்தொகை விளையாட்டுன்னு புரிஞ்சுது. :)

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்,

உங்க நியூஸிச் சுற்றுலாவை எங்களாலும் மறக்கமுடியாதே! அன்போடு நம்மையும் கண்டுக்கிட்டுப் போனது ரொம்பவே மகிழ்ச்சி!

பதிவில் எதாவது பிழை இருந்தால் சொல்லுங்க. திருத்திக்கலாம்.


said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தொடர்வது மகிழ்ச்சி !

said...

வாங்க கோவி. கண்ணன்,

அதான் பயணங்களைக் கோவிட் முடக்கிப்போட்டுருச்சே :-(

இந்த உள்நாட்டுப் பதிவு 2 வருஷங்களுக்கு முன் போய் வந்தது. அந்த சமயம் நம்ம தியேட்டரில் கனடாப் பயணம் ஓடிக்கிட்டு இருந்ததால் இது தள்ளிப்போனது.

இப்பதான் கையில் எடுத்தேன். இனி கோவிட் தடுப்பு மருந்து கண்டு பிடிச்சு, அது வெற்றி அடையும் வரை உள்ளூர் பயணங்கள்தான் !

said...

வாங்க யாதோரமணி,

உடன்பயணிப்பது மகிழ்ச்சி! ரசிப்புக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றிப்பா !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பயணங்களைத் தேடி எடுக்கும்படியாக ஆச்சே !!!!

வருகைக்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நாட்டு நடப்பைப் பார்க்கும்போது, கோவிட் மரணங்களைக் கேள்விப்படும்போது...மனசு முடங்கித்தான் போகுது. எழுதி என்ன பண்ணப்போறோமுன்னு கூட தோணுது...ப்ச்....

ஆனாலும் எழுத்தை ஒரேடியா விட முடியுதா ?

தோணும்போது எழுதி வைக்கணும் நாம் !

said...

வாங்க கொத்ஸ்,

பள்ளியூடம் இல்லைன்னு கவலைப்பட்ட வகுப்புத்தலைவரைக் கண்டதும் மகிழ்ச்சின்னாலும், பெயரைப் பார்த்தவுடன் 'கெதக்'னு இருந்தது உண்மை. ஐயோ.... என்ன தப்பு செஞ்சுட்டேனோன்னு....... இம்போஸிஷன் எழுத கைக்கு பலமில்லை.....

மாணவரைப் பார்த்துப் பயப்படும் ஒரே டீச்சர் நாந்தான் போல :-)

said...

இனிய பயணம் .

இறுதிப் படம் உலோககத்தால் செய்யப்பட்டது போல் தோன்றுகிறது சூப்பர்.

said...

வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. வெண்கலச்சிலைதான்! 2001 இல் திறந்து வச்சுருக்காங்க.