Sunday, June 26, 2005

ஊருக்குப் போறவங்களே!!!!

இன்னைக்குத்தான் ஒரு விஷயம் தெரியவந்துச்சு! ஊருக்குப்போறவங்க யாரா இருந்தாலும்
கவனமா இருக்கணும்!!



அது என்னன்னா, ஏர்போர்ட்லே, இம்மிகிரேஷன் லே நம்ம பாஸ்போட்டைக் கொடுக்கறோம்
இல்லையா, ஸ்டாம்ப் செய்யறதுக்கு, அப்ப 'நைஸா' அதுலே இருந்து ஒரு தாளைக்
கிழிச்சுடறாங்களாம்!!!அப்படி ஆயிடுச்சுன்னா அந்த பாஸ்போர்ட் காலாவதியானதுக்கு
சமானமாம்! அது செல்லாததாலே நம்மை நாட்டுக்குள்ளே விடமாட்டாங்களாம்!!!

'இது என்னடாப் புதுக்கதை' ன்னு பார்த்தா......

எல்லாம் என்.ஆர்.ஐ.ங்க கிட்டே இருந்து காசு புடுங்கறதுக்காம்!!!!!!

http://www.hindustantimes.com/news/7598_1411209,000500020002.htm?headline='Indians~using~passports~to~harass~NRIs'

இதுதான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு.........ன்னு ஒரு பழஞ்சொல்லு இருக்கே அதுதான்போலெ!!!!

என்னா அக்கிரமம் பாருங்க!!!!

எல்லோரும் கொஞ்சம் கவனமா இருங்க!!! பாஸ்போர்ட்டைக் கொடுத்துட்டு, நம்ம ஊராச்சேன்னு அங்கே இங்கே
பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்காதீங்க!!!

0 comments: