Friday, September 29, 2017

இடி ஒத்தையா வருமா, இல்லை ஜோடியாவா?......(இந்திய மண்ணில் பயணம் 56)

சங்கர நேத்ராலயாவில் காலை எட்டுமணிக்கு  நமக்கான நேரம். சட்புட்டுன்னு  தயாராகி எட்டடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே போயிட்டோம். எவ்ளோ நேரமாகுமுன்னு  தெரியாததால்... நம்ம சீனிவாசனைப் போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வரச் சொல்லிட்டு,  நாங்கள்  குறிப்பிட்ட பகுதிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
பெரிய ஹாலில் எக்கச்சக்கமான கூட்டம் ! நாங்களும் ஜோதியில் கலந்தோம்.

கண்ணை ஸ்கேன் பண்ணினாங்க.  ஜம்முன்னு கலர் பிரிண்டவுட் எடுத்து ஒரு ஃபைலில் போட்டுக் கொடுத்தாங்க.  நாங்க வேற, இங்கே கிடைச்ச ரிப்போர்ட் எல்லாம்  கொண்டு போயிருந்தோம்.
அப்புறம் கண்ணுலே ட்ராப்ஸ் போட்டுவிட்டுக் காத்திருப்பு. நாங்க கீழே போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வந்தோம். கேன்டீன் நல்ல சுத்தமா இருக்கு!
ஒரு பத்தரை மணி போல டாக்டர்அறைக்குக் கூப்பிட்டுப்போனாங்க.  இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ப்ரமோத் பென்டே  வந்து,' உங்க ரிப்போர்ட் எல்லாம்  பார்த்தேன்'னு சொல்லிக்கிட்டே  கோபாலின் இடது  கண்ணைப் பரிசோதிக்கிறார்.

ஐயோ....வலக்கண்ணுலேதான் பிரச்சனைன்னு சொல்ல வாயெடுக்கறேன்....

அதுக்குள்ளே  'நாலைஞ்சு  ஹோல்ஸ் டெவலப் ஆகி இருக்கு'ன்னு  டாக்டரின் குரல் காதுலே விழுது !

இடக் கண்ணிலா?  ஆமாம்.  இதை லேஸர் மூலம் சரிப் படுத்திடலாம். இங்கேயே பண்ணிக்கறதா இருந்தா  நாளைக்கு செஞ்சுடலாம்னு சொல்றார்.
அப்போ வலது கண்?

"அதுலே ஏற்கெனவே சிகிச்சை நடந்தாச்சு.  இன்னும் துளி ஃப்ளூயட் உக்கார்ந்துருக்கு. நாளாக நாளாகக் கொஞ்சம் கொஞ்சமா  போயிரும்.  எப்போன்னு  சொல்றதுக்கில்லை.  அதுலே இப்ப ஒன்னும் செய்ய முடியாது.
லேஸர் செஞ்சுக்கணுமுன்னா வெளியே  கவுன்டரில் போய் புக் பண்ணிக்குங்க."

நாங்க வேறொன்னும் சொல்லாம தேங்க்ஸ் சொல்லிட்டு வெளியே வந்தோம்.
பேசாம ஊருக்குத் திரும்பிப்போய்  அங்கேயே லேஸர் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு எங்க ரெண்டு பேருக்குமே தோணுச்சு.

லோட்டஸுக்குத் திரும்பிட்டோம்.   அங்கிருந்து  நியூஸி டாக்டருக்கு ஃபோன் செஞ்சு  விஷயத்தைச் சொன்னதும்,  நாளைக்கு  செக்கப்புக்கு வந்துருங்க. பார்த்துட்டு லேஸர் பண்ணிடலாமுன்னு சொல்றாங்க.

பயணத்தில் இருக்கோம் என்றதைச் சொல்லி,  எவ்ளோநாள் தள்ளிப்போடலாமுன்னு  கேட்டதுக்கு, கண்ணுக்கு அழுத்தம் தர்ற வேலைகள் எதுவும் செய்யாதீங்க. கனம் தூக்க வேண்டாம்.  கண் இப்போதைக்குத் தெரியுதுதானே... எப்போ திரும்பி வர்றீங்க?

ரெண்டு  மூணு வாரம் ஆகலாம். அதுக்கு முன்னேயே கிளம்ப முடியுமான்னு  பார்க்கிறோம்னு  கோபால் சொன்னதுக்கு , ஊர் திரும்பினதும் உடனே வந்து பாருங்க.


பார்க்கும் காட்சிகளின் இடையில் எதாவது கருப்புப் புள்ளிகள், எதோ  தூள் போல ஒன்னு மிதக்குறமாதிரி தெரிஞ்சால்  அது  ஓட்டை இருப்பதற்கான அறிகுறி.   அப்படி இருந்தா  கண்ணை டாக்டரிடம்   காமிச்சு உடனே  லேஸர் பண்ணிக்கணும் என்றார் டாக்டர்.

நான் இவரிடம் சொன்னேன்....  'பேசாம ஊருக்குப் போயிடலாம்.  டிக்கெட்டை மாத்தி எடுங்க.'

'இல்லைம்மா... அவ்ளவா பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். பார்க்கலாமு'ன்னு  சொன்னது எனக்கு சமாதானமாகலை....

இன்னும்  நாலே நாலு கோவில்கள்தானே இருக்கு. ஏற்கெனவே  போட்ட திட்டங்களின் படி போயிட்டு வந்துடலாமேன்னு வற்புறுத்திச் சொல்றார்.

பெருமாள் மேலே பாரத்தைப் போட்டுட்டு மறுநாள் காலை எட்டரைக்கு நம்ம சீனிவாசனை வரச் சொல்லிட்டு, ஒரு நாலைஞ்சு நாட்களுக்குத் தேவையான உடுப்புகளையும், டாய்லட்ரிப் பைகளையும் அவுங்கவுங்க கேபின் பேகில் பேக் பண்ணிட்டு, மற்ற சாமான்களைப் பெரிய ஸூட்கேஸில் வச்சுப் பூட்டி இங்கே லோட்டஸ் லாக்கர்ரூமில் போட்டோம். இங்கே லோட்டஸில் இது ஒரு நல்ல வசதி.

மறுநாள் காலை ப்ரேக்ஃபாஸ்ட் குலாப்ஜாமூனும் கொண்டைக்கடலையுமா இட்லியோடு முடிச்சுட்டுக் கிளம்பியாச்சு.  தாம்பரம் தாண்டி  வண்டலூர் போய்க்கிட்டு இருக்கும்போது  ஒரு லாரி நம்ம வண்டி பின்னாலேயே இடிக்கிற மாதிரியே வருது.  ஏற்கெனவே நாம் லெஃப்ட் லேனில்தான் போறோம்.   இன்னும் எப்படி  சைடு கொடுக்கமுடியும்?  நமக்கிடப்பக்கம்  நெடூக வேலிபோட்ட  மீடியன் ஸ்ட்ரிப் இருக்கே....

ஓவர் டேக் பண்ணணுமுன்னா  ரைட்டுலே  போகலாமுல்லே, லாரிக்காரர்?  கூடுவாஞ்சேரிக்குப் பக்கம் போறப்ப, திடீர்னு ஒரு பெரிய சத்தம். திடுக்கிட்டு நான் திரும்பி கோபால் பக்கம் பார்க்கிறேன்....  சினிமாலே ஸ்லோ மோஷன் ஸீன் போல  இவர் உடம்பு   ஸீட்டுலே இருந்து அப்படியே அலேக்காத் தூக்கி வீசுனாப்போல  என் பக்கம் வந்துக்கிட்டு இருக்கு!  நான் இவரை என் வலக்கையால் தொட்டு நிறுத்தப் பார்த்தேன். தட்.....  உடம்பு ஸீட்டில் விழுந்தது!

உண்மையிலேயே என்ன நடந்ததுன்னு  புரிஞ்சுக்கவே சில நிமிட்ஸ் ஆச்சு.  ட்ரைவர் ஸீட்டூலே சீனிவாசனும் ஒரு குலுக்கலோடு  உக்கார்றார்.... நல்ல வேளை ப்ரேக் போட்டார்.  நம்மைக் கடந்த லாரி இப்போ நம்ம வண்டிக்கு முன்!

ரெண்டு வண்டியும் நிக்குது இப்போ. சின்னக் கூட்டம் நம்மைச் சுத்தி....  ரெண்டு நிமிசம் நின்னு பார்த்துட்டு, நாங்கெல்லாம் அடிபட்டுக்கிடக்காம நல்லாவே இருக்கோமுன்னு கலைஞ்சு போயிட்டாங்க.  ரெண்டு ட்ரைவர்களும்தான் இப்போ  கையைக்கையை நீட்டிப்பேசிக்கிட்டு வாய்ச்சண்டையில்.

நம்மவர், என்னை இறங்கவே கூடாதுன்றார்....  நான் சரின்னு  சட்னு இறங்கி  நம்ம   வண்டி என்ன ஆச்சுன்னு பின்பக்கம் போய்ப் பார்த்துக் கிளிக்கினேன். கோபால் உக்கார்ந்துருந்த பக்கம்தான்  அடிச்சுருக்கு. அதான் அவரை இந்தப் பக்கம் தூக்கிப்போட்டுருக்கோ!

'ரைட் சைட் இறங்காதீங்க, ட்ராஃபிக் அதிகமா இருக்கு'ன்னு  சொல்லிக்கிட்டு இருக்கேன்.  ' எங்கே இறங்கறது....  டோர் லாக் ...ஜாம் ஆகிக்கிடக்கு'ன்றார்.
இடிச்சதும் இல்லாம சண்டை போட்டுக்கிட்டு இருந்த லாரிக்காரன், சட்னு  போய் வண்டியைக் கிளப்பிக்கிட்டு போயிட்டான்....

திகைச்சு நின்ன சீனிவாசன்,  வண்டிக்குள் வந்தார்.  'ஓனருக்கு ஃபோன் பண்ணிச் சொல்லணும்.  வேற வண்டி அனுப்புவாங்க'ன்னார். முகம் சரியா இல்லை. விசாரிச்சோம்.   இவர் தப்பு ஒன்னும் இல்லைன்னாலும்.... ரிப்பேர் செலவு முழுசும் இவர் சம்பளத்துலே இருந்துதான் புடிச்சுக்குவாங்களாம். வண்டிக்கு  இன்ஷூரன்ஸ் இருக்கான்னால்....   'தெரியலை. எடுத்தாங்களோ இல்லையோ' வாம்.

வண்டி 'ஓடும் கண்டிஷனில்' இருக்கான்னு கேட்டேன்.  ஸ்டார்ட் செஞ்சால்  எஞ்சின் சத்தம் சரியாத்தான் இருக்கு.  சரி. அப்படியே   கிளம்பிப்போகலாம்.  எப்படியும் இன்றைக்கு மதுரை ஹால்ட் தானே. அங்கே ரிப்பேர் செஞ்சுக்கலாமுன்னு  கிளம்பிட்டோம்.

கண்ணுக்கு அதிர்ச்சி கொடுக்கக்கூடாதுன்னா   உடலுக்கு அதிர்ச்சி கொடுத்துட்டுட்டாங்க....

ஒரு பத்து நிமிட்ஸ் போல போயிருப்போம்... இப்பப் பார்த்தா  இடிச்ச எமன் முன்னாலே போகுது.  அவன் கிளம்புன வேகத்தில் இந்நேரம் ரொம்ப தூரம் போயிருக்கணுமே.....  ஒரு வேளை இன்னொருக்கா இடிச்சுட்டுப் போகலாமுன்னு  காத்திருந்தானா என்ன?
லாரியின் பின்பக்கம் 'தல வேட்டை ஆரம்பம்' னு வேற எழுதி வச்சுருக்கு! நாம்தான் முதல் போணியோ?

அவன் பின்னாலே போக வேணாம், நாம் நிதானமாப் போகலாமுன்னு   சொன்னதுக்கு அப்படியே ஆச்சு.   அப்பதான்  மிராக்கிள் டிங்கரிங் கண்ணுலே பட்டுச்சு.  ஆனா அதைத் தாண்டி வந்துருந்தோம்.   பிஸி ரோடில் எங்கே யூ டர்ன் எடுக்கறதுன்னு.... கொஞ்ச தூரம் போனதும் வலது பக்கத் தெருவில் திரும்பி, சர்வீஸ் ரோடு போல இருந்ததில்  மிராக்கிள் டிங்கரிங்க் போய்ச் சேர்ந்தோம்.






ஓனர் சந்தோஷ் குமார்.  ஓரளவு சரி பண்ணிடலாமுன்னு  தட்டிக்கொட்டி  ஒருமாதிரி சரி பண்ணிட்டார். ஒரு சுத்தி, ஒரு மரக்கட்டை, ஒரு இரும்புக் கம்பி. இவ்வளவுதான் டூல்ஸே!   இப்ப  வலதுபக்கக் கதவு திறக்க வருது,  ஆனால் கதவு பார்க்கக் கேவலமா இருக்கு.

'மதுரையில்     ஆட்டோ ஜங்க் யார்டில் கதவு  கிடைக்கும். வாங்கிப் போட்டுக்கலாம். ரிப்பேர் பண்ண முடியாது'ன்னார் கோபால்.  இந்த கலாட்டாவால் ஒரு ரெண்டு மணி நேரம் காணாமப்போயிருச்சு.

ஹோட்டல் ஆர்யாஸ்னு பார்த்ததும்தான்  லஞ்ச்  நினைவே வந்துச்சு. அதுவரை நடந்த சம்பவத்தைப் போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு இருந்தோம் :-)


வேப்பூர் என்ற இடமாம். வாசலில் புத்தகக்கடை இருக்கு!  நம்ம நியாண்டர் செல்வனை அங்கே பார்த்தேன்!  பரவலா எல்லா இடங்களிலும் பேலியோ பற்றிய  'ஞானம்' வந்துருக்கே!!!
கருடபுராணம் ஒன்னு வாங்கினேன்.  லாரிக்காரனுக்கு என்ன தண்டனைன்னு பார்க்கணும்:-)

தொடரும்.......  :-)


Wednesday, September 27, 2017

கண்ணுக்குள்ளே GAS போட்டாச்சுபா......(இந்திய மண்ணில் பயணம் 55)

நர்ஸம்மாவிடம் சின்னப்பேச்சு கொடுத்தப்ப தெரிஞ்சது  இந்த  ஸர்ஜரி யூனிட்டில்  நைட் வேலைகள் ஒன்னும் இல்லையாம். ஆறு மணிக்கு  சில சமயம் ஆறரை மணிக்கு இழுத்துப் பூட்டிக்கிட்டுப் போறதுதான்.
ஓ... அப்ப ஏழுவரைன்னு சொன்னது ஒரு பேச்சுக்குத்தானா! நல்லதாப் போச்சு.

அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவுங்க  க்ளினிக்கில்  நோயாளிகளைப் பகல் ஒருமணி வரை பார்த்து முடிச்சுட்டுப் பகல் ரெண்டுமணிக்கு இங்கே வந்து  ஆபரேஷன் சமாச்சாரங்களை முடிக்கறாங்க. அதுவும் வாரம் ரெண்டு நாட்கள் மட்டும். சிலர் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும்.
அஞ்சு அஞ்சுக்கு  நம்மவரைக் கூட்டி வந்தார், கொண்டு போனவர்.  கீழே தலைகுனிந்தபடி வந்தவரைப் பார்க்க மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.            ( அந்தக் காலக்  கல்யாணப்பொண்ணு மாதிரி!)   கால் கட்டைவிரலைப் பார்த்தபடி நடக்கணுமாம். நர்ஸம்மா வந்து பிபி செக் பண்ணாங்க. அதிகமாகத்தான் காமிக்குது.  கையில் புதுசா ஒரு பச்சைப் பட்டை போட்டுருக்காங்க.  அதைக் கழட்டக்கூடாதுன்னு  சொன்னாங்க.
அதுலே இப்படி எழுதி இருக்கு!
டாக்டர் வேற  சொல்லி அனுப்பினார்.  கண்ணுக்குள்ளே GAS நிரப்பி இருக்கு. கவனமா இருக்கணும். விமானத்துலே போகக்கூடாது. பல்மருத்துவர், வேறு எதாவது அறுவை சிகிச்சை இப்படி நமக்கு சிகிச்சை நடக்கும் பட்சத்தில் அவுங்களுக்கு  'கேஸ்' சமாச்சாரம் தெரிஞ்சுருக்கணுமாம்.

ஐயோ.... நடமாடும் கேஸ் ஸிலிண்டர் !


அறுவை சிகிச்சையின்போது தேவைப்பட்டால் அப்போ வெயின் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு  அறுவை சிகிச்சைக்கான  முன்னேற்பாடுகள் நடக்கும்போதே ஐவிக்கான ஊசியைக் குத்தி வச்சுடறாங்கதானே. அதை இப்போ எடுக்கும் வேலை பாக்கி இருக்கு.  நர்ஸம்மா வந்து ஊசியை எடுத்துட்டுக் கையில் ப்ளாஸ்டர் போட்டாங்க. அதென்னவோ தபதபன்னு  ரத்தம் வர ஆரம்பிச்சது. அழுத்திப்பிடிச்சுக் கொஞ்சநேரம் ஆனதும் இன்னொருக்காப் போட்டாங்க.

இன்னொருக்கா பிபி செக் பண்ணிட்டு, நாளைக் காலை ஏழுவரை தலையைத் தொங்கப் போடணும். குப்புறப்படுத்துத் தலையணைகளை உயரமா வயித்துலே வச்சுக்கிட்டால்  இப்படிப்படுப்பது  கொஞ்சம் எளிதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. வீட்டுக்குப் போகும்போதும் காரின் பின்ஸீட்லே உக்கார்ந்து  முன் ஸீட்டைப் பிடிச்சபடித் தலையை குனிஞ்சு வச்சுக்கணுமாம்.  மொத்ததுலே தலையெடுக்கக் கூடாது!  தப்பு செய்யாமலேயே தலையைத் தொங்கப்போடும் நிலமை .

வலி இருந்தால் பெனடால் போட்டுக்கலாம். எழுதித்தரவான்னதுக்கு  'வேணாம். ஏகப்பட்டது இருக்கு'ன்னேன்.  வீட்டுக்கு வந்ததும்தான் தலைவலி ஆரம்பிச்சது எனக்கு!

கழுத்தைத் தொங்கப்போட்டு உக்கார்ந்தால் பின்னங்கழுத்து வலிக்குதாம். பாவம்....

ப்ளேனில் தூங்கும்போது கழுத்து சப்போர்ட்க்கான ஸ்லீப்பிங் பில்லோ புதுசு (பட்டன் வச்சது) ஒரு ரெண்டுவாரத்துக்கு முன்னால்தான் ஆளுக்கொன்னு  வாங்கி இருந்தோம். ஸேலில் இருந்துச்சு.  இருபத்தியஞ்சை இருபதுக்குக் கொடுத்தான்.  ஏற்கெனவே நாலைஞ்சு இருக்குன்னாலும் அதுலே பட்டன் இல்லை என்பதால் அதுபாட்டுக்கு வழுக்கிக்கிட்டுப் போயிரும்.  இவரோட கருப்பு பில்லோவை இந்தப் பயணத்துக்குக் கொண்டு போயிருந்தார்.  நேத்து திரும்பிவந்த பொட்டிகள் இன்னும் திறக்கப்படாமல் அப்படியே கிடக்கே... அதில் இருந்து இவருடைய நெக் பில்லோவை  எடுக்கலாமுன்னு  பார்த்தா....   அப்பதான் சொல்றார் அதை ப்ளேன்லே யாரோ திருடிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!!!!

எப்படிப்பா? எப்பூடி?

தேவைப்பட்டால் எடுத்துப் போட்டுக்காம,   ஏறிஉக்காந்தவுடனே எடுத்துக் கழுத்துலே மாட்டிக்கிட்டா? பட்டன் போடாம வச்சுருந்து அப்படியே தூங்கி, அது நழுவி விழுந்து யாரோ எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.... ஸீட்டுக்கு அடியில் விழுந்துருச்சோன்னு  தேடியெல்லாம் பார்த்துட்டு, ஏர்ஹோஸ்டஸ்கிட்டே  புகார் சொல்லி  அவுங்க போய் அக்கம்பக்கம் விசாரிச்சுட்டு வந்து  'காணோம்'னு சொன்னாங்களாம்! இந்த ப்ளைட்லே  உலகின் கூட்டம் மிகுந்த  நாட்டு மக்கள்தான்  நிரம்பிக்கிடந்தாங்கன்னு  ஒரு நியூஸும் சொல்றார் இவர்.

என்னோட நீலத் தலையணையைக் கொண்டு வந்து கொடுத்தேன்.  முன்கழுத்து சப்போர்ட். கொஞ்ச நேரம் போட்டுக்கிட்டு இருந்துட்டு  அதுக்கும்  குத்தம் ஒன்னு  சொல்றார்.  ஐயோன்னு பரிதாபப்படமுடியுதே தவிர வலியை நாம் வாங்கிக்க முடியுமா?

எதாவது குடிக்க வேணுமான்னு கேட்டு ஒரு டீ போட்டு, தலை குனிஞ்சே குடிக்க  அதுலே ஒரு ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தேன். ஒர்க்கவுட் ஆச்சு ! நானே மெச்சிக்கிட்டேன்:-)
'ஸர்ஜரி நடந்தபோது முழு உணர்வில்தான் இருந்தேன். என்ன செய்யப்போறோம் என்பதை சொல்லிக்கிட்டேதான்  செஞ்சாங்க. ஏற்கெனவே ரெடீனாவில்  அங்கங்கே கொஞ்சம்  கிழிசல் (!) இருந்துருக்காம். (இப்ப திடீர்னு கிழிஞ்சு தொங்கலை!  தாங்கும்வரை தாங்கிட்டு, திரை விழுந்துருக்கோ!  )  இப்படி ஆனதுக்குக் காரணம்னு சொல்லணுமுன்னா வயசாவதின் அறிகுறி. 55 முதல் 65 வயசுவரை உள்ளவர்களுக்கு  இப்படி நேரும்' என்றாராம் மருத்துவர்.

அடராமா.....   அப்போ அந்தக் காலத்துலே திடீர்னு   கண் தெரியாமப்போனவங்க... எப்படிக் கஷ்டப்பட்டுருப்பாங்க. வயசாச்சு, கண்ணு தெரியலைன்னு   விட்டுருவாங்களோ...   ப்ச்....

சாமிக்குத்தம்.  திடீர்னு கண்ணவிஞ்சு போச்சு!  இல்லே யாராவது சாபம் விட்டுருப்பாங்க.....  :-(  இப்படி எதாவது நினைச்சுக்கறதுதான் போல :-( 

கொஞ்சநேரம் படுக்கலாமேன்னு ஆரம்பிச்சு  தரையிலே கிடப்பு. குப்புறக்கிடக்கணும் என்பதால்தான் பிரச்சனையே. என்னமோ வழக்கத்துக்கு மாறா நடக்குது நம்ம வீட்டுலேன்னு  ரெஸ்ட்லெஸ்ஸா ஆனது யாருன்னு  தெரியுமா? பாவம்... குழந்தை! அப்பா தலைமாட்டுலே வந்து மோந்து மோந்து பார்த்துக்கிட்டு நிக்கறான்.....
சாப்பாடு  நார்மல்  என்பதால்  நல்லதாப் போச்சு. தலை குனிஞ்சு சாப்ட்டார்.  ராத்ரி தூக்கத்துக்கு எந்த மாதிரி? பல விதமா யோசிச்சு கட்டிலில் கால்பக்கம் தலையை வச்சுப் படுத்தால் முன்பக்கம் கைகளை நீட்டிக்க முடியும். ஹெட் போர்டு இடிக்காதுன்னு  நானே யோசிச்சுக் கண்டுபிடிச்சேன்:-) கால்பக்கம் முழுசும் ரஜ்ஜுவின் இடம் என்பதால் அவனுக்குப் புதுக்குழப்பம்.  ஆனாலும் கும்பலில் கோவிந்தா போட்டுக்கிட்டுத்தான் இருந்தான் :-)
தூக்கமில்லாமலேயே முழு இரவும் தொலைஞ்சது. எப்படா விடியுமுன்னு பார்த்து  எழுந்து, கடமைகளை முடிச்சு சமையலையும் ஒருமாதிரி செஞ்சு வச்சுட்டு ரெடியாகி கண் டாக்டர் அப்பாய்ன்ட்மென்டுக்குப் போனோம். மகள் வந்து கொண்டுபோறேன்னு சொன்னாள்.  'வேணாம். நானே கூட்டிப் போயிருவேன். நீ வேலைக்குப் போ'ன்னு சொல்லி இருந்தேன். (ஃபேமிலி எமெர்ஜன்ஸி எல்லாம் முடிஞ்சு போச்)

தலையைத் தலையை நிமிர்த்திக்கிட்டு இருக்கார், அதான் ஏழுவரைன்னு சொன்னாங்களேன்னு. விடுவமா?  ஊஹூம்... எதுக்கும் டாக்டரைப் பார்க்கும்வரை குனிஞ்சதலை நிமிரக்கூடாது....  ஆமாம்  :-)

ஒன்பதேகால் நமக்கான நேரம்.  முதலில் உள்ளே கூப்புட்டுப்போய் கண்கட்டை பிரிச்செடுத்து  கண்ணைச் சுற்றிச் சுத்தம் செய்யணும். அம்புட்டுத்தான். ஆனால் இந்த வேலையைச் செய்யும் ஆள்  வேலைக்கான பயிற்சியில்னு நினைக்கறேன். நிரூபிக்கறது போல  கட்டைப் பிரிச்சு சுத்தம் செஞ்சதோடு விடாம, கண்ணு தெரியுதா? போர்டுலே  இருப்பதை  வாசின்னு  சொல்ல, நம்மவர் சொல்றார் 'கண்ணு தெரியலை.  மசமசன்னு இருக்கு.  ஐலாஷ்  விழுந்துருக்கு போல'ன்னதும்  இன்னொருக்கா கண்ணைச்சுத்திச் சுத்தம் செஞ்சுட்டு 'இப்போ தெரியுதா?'

' இல்லை. இன்னும்  கண்முடி விழுந்து கிடக்கு.....'

உடனே  கையில் எடுத்தது  பக்கத்தில் இருந்த காட்டன் பட்ஸ். ஐயோ.... கண்ணுக்குள்ளே விட்டுடப்போறாளேன்னு சின்னக்குரல் கொடுத்தேன்.            "  நோ....இருக்கட்டும். டாக்டரைப் பார்க்கும்போது சொல்லலாம்"
இதென்ன  ஐஓஎல் சிகிச்சையா, கட்டைப் பிரிச்சதும் கண் பளிச்சுன்னு தெரிய? என்ன விதமான ஸர்ஜரின்னு தெரியாமலேயே  'ரைட்டா ? ரைட்டு' விளையாடணுமாக்கும். எனக்கு எரிச்சல். வலது கண் வீங்கி இருக்கு.  பாவம்.....
வெளியே வந்ததும் டாக்டர் வந்து கூட்டிப் போனார். மெஷீனில்  முகம் வச்சு கண்ணை சோதித்தபின்,  ரெடீனா நல்லா தன் இடத்துக்குப் போயிருக்கு.  கண்ணுக்குள்ளே கேஸ் இருப்பதால் இன்னும்  சரியாப் பார்க்க வராது.  கொஞ்சநாள் செல்லும்.  அதுவரை கவனமா இருக்கணும். வலது பக்கம் தலையைச் சாய்ச்சு  வச்சுத் தூங்கப்டாது. தலையில் தண்ணி ஊத்தக்கூடாது. கண்ணில் ஜெல்வழியாப் பார்ப்பது  போல ஒரு திரைக்குப்பின் காட்சிகள் தெரியும். அது பரவாயில்லை. அடுத்த வாரம் திரும்ப வந்து கண்ணைக் காமிக்கணும். இப்போதைக்கு ரெண்டு வாரத்துக்கு மெடிக்கல் லீவுக்கு எழுதித்தரேன்.  கண்ணில் வலி  வந்துச்சுன்னா   உடனே என்னை வந்து பார்க்கணும். மற்ற விதிகள் இதுன்னு  ஒரு அட்டையைக் கொடுத்தார்.
மருந்து எழுதித் தந்தார். தர்றது என்ன ஏற்கெனவே எல்லாம் அச்சடிச்சு வச்சுருக்கு.  எத்தனை முறை எத்தனை துளின்னு ....  மருந்து போட்டவுடன் போட்டேன்னு  குறிச்சுக்கணும். மறந்துட்டேன்,போட்டேனான்னு நினைவு இல்லைனு சொல்லமாட்டோமே....   ஹிஹி.

வீட்டுக்கு வரும் வழியில் நம்ம மருந்துக்கடையில் மருந்தை வாங்கிவந்து போட ஆரம்பிச்சாச்சு.  இன்றைக்கு  ஏழாம் நாள்.  கண் சிகப்புக் கொஞ்சம் குறைஞ்சுருக்கு. இந்த டிவி சனியன் வேணாமுன்னா கேட்டால்தானே? டிவி 'கேக்கறாராம்'  !!  :-)

'அதைக் கேட்காம கொஞ்சம் சாமி பாட்டு, கச்சேரி, விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கோ'ன்னு  உக்கார்த்தி வச்சேன்.  ரஜ்ஜுவும் ஆழ்ந்த லயிப்பில் கம்பெனி கொடுக்கறான்.
இதுக்கு இடையிலே திடீர்னு தொண்டை கரகரப்பும் இருமலும் ஆரம்பிச்சு அது ஒரு வேதனை.  இருமும் வேகத்துலே எங்கே கண்முழி தெறிச்சு விழுந்துருமோன்னு  எனக்கு பயம்.  கைவைத்தியமா மருந்து எடுத்துக்கிட்டா நல்லதுன்னு அவர் நினைச்சதால் நம்ம வீட்டு கற்பூரவள்ளி இலையைச் சாறுபிழிஞ்சு தேனில் கலந்து கொடுத்தேன். அப்புறம் மிளகுத்தூளும் தேனும், இப்படி  தேன்பாட்டிலைத் தீர்த்தும் பயன் இல்லை. மருந்துக்கடையில்  ட்ரை காஃப்ன்னு வெத்து இருமலுக்கான மருந்தை வாங்கியாந்து  ராத்திரியில் மட்டும்  அஞ்சு மில்லி. இந்த இருமலும் பாருங்க... பகலில் அடங்கி இருந்துட்டு, ராத்திரி படுக்கும்போதுதான் வேலையைக் காட்டுது.

தோழி சொன்னாங்க 'இருமலும்  ஸர்ஜரியும் எப்பவும் ஒன்னா இருக்கும்.  எது கூடாதுன்னு இருக்கோமோ அப்ப அது கட்டாயம் வந்துரும்'  உண்மைதான். தையல் போட்டுருக்கும்போது  இருமக்கூடாதுன்னு இருந்தால் அப்போதான்  இருமல்வந்து படுத்தும் என்பது நம்ம அனுபவம் இல்லையோ!

பல்லைக்  கடிச்சு எட்டுநாளைத் தள்ளியாச்சு. இன்றைக்கு டாக்டரைப் பார்த்து வரணும்.  என்ன சொல்லப்போறாரோ...   பெருமாளே காப்பாத்து.......

நமக்குக் கொடுத்த நேரம்  மதியம் 1.40. பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போனோம். இன்றைக்குக் காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமப்போச்சு.  போனதும்  போன திங்கள் ஏபிசிடி வாசிக்கச் சொன்ன அறை.  வலது கண்ணில்  மேலே கொஞ்சூண்டு மசமசன்னுதெரியுதாம். மத்தபடி அந்தக் கண்ணால் எதுவும் செய்ய முடியாது. சொட்டு மருந்து ஒன்னு விட்டாங்க.  காத்திருப்பு அறைக்குப்போய் உக்காரும்போதே டாக்டர் வந்து கூப்பிட்டார்.

இருட்டறையில் பரிசோதனை.  விழித்திரை அதன் இடத்தில் நல்லாவே பொருந்தி இருக்கு.  கண்ணுக்குள்ளே காஸ் இருப்பதால்  கண் லென்ஸுக்கு மேலே காடராக்ட் வந்துருக்கு. ஆனால் காஸ் போகப்போக இது சரியாகிரும். இந்த காஸ் மெள்ளமெள்ள வெளியேற  இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.  பிரச்சனை இல்லை.  தலையைச் சாய்க்காம வழக்கம்போல் படுத்துக்கலாம்.  கொஞ்சூண்டு  செல்ஃபோன், லேப்டாப் , டிவி எல்லாம் பார்த்துக்கலாம்.

இருமல் பிரச்சனையைச் சொன்னதும்,  கண் மருந்து போடும்போது  கண்வழியா தொண்டைக்குள் இறங்கி இருக்கலாமோன்ற சம்ஸயத்துலே  மருந்து போடும்போது  கண்ணும் மூக்கும் சேரும் இடத்தில் ஒத்தை விரலால் அமுக்கிக்கிடச் சொன்னாங்க. இதை எனக்குக் கண்சிகிச்சை நடந்தப்ப சொல்லி இருந்தாங்க. அப்படி அமுக்கலைன்னா  மருந்து கண்ணீர்சுரப்பிக்குள் போயிருமாம். ரெண்டு சொட்டு மருந்துகளில் ஒன்னு நேத்தோடு  சரி. இனி மூணு வாரத்துக்கு  ஒரு மருந்துமட்டும் நாலு வேளைக்குப் போடணும்.

இன்னும்  ஒரு வாரத்துக்கு  மெடிக்கல் லீவுக்கு எழுதிக் கொடுத்தாங்க. மே மாசம் 9 ஆம் தேதி  கண் நிலமை சரியாச்சுன்னா வேலைக்குப் போகலாம்.  இல்லைன்னா இன் னும் ஒருவாரம் ஆகட்டுமுன்னு சொல்லி வச்சுருக்கேன். அடுத்த செக்கப் அடுத்த மாசம் இதே தேதிக்கு.  இதுக்கிடையிலெ எதாவது கண்வலின்னா உடனே டாக்டரைத் தொடர்பு கொள்ளவேணும்.

ஒளிவுமறைவா எட்டிப் பார்த்துக்கிட்டு இருந்த  செல்ஃபோன்வகைகள் தைரியமா நம்ம கண்முன்னால் இப்போ!!

அதுக்கப்புறமும்  பார்வை முழுசும் சரியாகாமல் போகவே மாசாமாசம் இதே வேலையாப்போய் கண் டாக்டரைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். இப்பத்து பிரச்சனை என்னன்னா.....   பார்வை ஒரு  கண்ணில்  ரொம்பவே மசமச...

ரெட்டினாவைத் தைக்கறதுக்கு முன், கண்ணுக்குள்ளே இருக்கும்  ஆப்ட்டிகல் ஜெல்லை(fluid) முழுசும் எடுத்துட்டு கேஸ் நிரப்பறாங்க பாருங்க....  அப்போ ஒரு  துக்குனியூண்டு ஜெல் மட்டும் உள்ளேயே தங்கிருச்சு.  சரி ...  விடாப்பிடியாத் தங்குனியே   ஒரு ஓரமாப்போய் உக்காரப்டாதோ? நட்ட நடுவீட்டுலே  வந்து குந்திகினா எப்படி?

ஆப்டிக்கல்  நெர்வ்லே வந்து உக்கார்ந்துருக்காம். இதுக்கு வேற  இடம் கிடைக்கலை பாருங்க:-(

ஒரு லேஸர் சிகிச்சை கொடுத்து இதைத் தள்ளிடலாமுன்னு  அதையும் செஞ்சு பார்த்தாச்சு.  ஊஹூம்.... நகர்ற இனம் இல்லை... :-(

OCT scanning shows a persisting pocket of fluid at the right macula.
Retinal laser was tried to stimulate the retinal pump.   ஒரு ரிப்போர்ட்!
அதுலே பாருங்க.....   ஒரு மில்லியனில் ஒரு ஆளுக்கு இப்படி ஆறது உண்டாம். அட!  நாம்தான் அந்த அதிர்ஷ்டக்காரர் போல!

மூணு மாசம் டைம் கொடுத்தாங்க. அநேகமா சரி ஆகிரும். அப்படி ஆகலைன்னா இன்னொரு ஸர்ஜரி செஞ்சுடலாமுன்னு சொல்றார் டாக்டர்.
ஐயோ.... இன்னொருக்கா தலை குனிவு, குப்புறக் கிடக்கணும், கண்ணு வீக்கம்னு நினைக்கும்போதே எனக்கு வயித்தைக் கலக்குது.....

இதுக்கு நடுவில் செப்டம்பர் மாசம் முக்திநாத் போயிட்டு வந்துடலாமுன்னு  ப்ளானும் ஆச்சு.  முழுசாக் கண் அவுட் ஆகறதுக்குள்ளே  சாமியை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு நினைச்சுட்டார்.  பாவம்....  இல்லே...ப்ச்....

அப்பதான் ஃபேஸ்புக்கில் நம்ம கண் மருத்துவர் ரோஹிணி கிருஷ்ணாவை வாசிக்க ஆரம்பிச்சு இருந்தேன்.  கண் சமாச்சாரம் இப்ப நம்ம வீட்டுலே பிரச்சனையா ஆனதும்  இவுங்க கிட்டே ஆலோசனை கேக்கலாமுன்னு   அவுங்களுக்கு  ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.

'அக்டோபர் மாசம் தமிழ்நாட்டுக்கு வர்றோம். உங்களை வந்து  பார்க்கலாமான்னு...'

என்ன பிரச்சனைன்னு கேட்டதும்   எல்லாம் விலாவரியா சொன்னேன்.  அதுக்கு அவுங்க, சங்கர நேத்ராலயாவில் கண்ணைக் காமிக்கச் சொன்னாங்க.  அங்கே சட்னு  அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்காதில்லையா.... அதுக்கும் உதவி செய்யறேன்னு  சொல்லி ஒரு தனிப்பட்ட தகவலையும் சொன்னாங்க. கூடவே ஒரு  ஃபோன் நம்பரும்.

நாங்க நேபாள் யாத்திரை முடிச்சுட்டு, சென்னை வந்ததும்   நம்ம ரோஹிணி கிருஷ்ணாவின் உதவியால்  அவுங்க சொன்னபடி செஞ்சு  நமக்கு அப்பாய்ன்ட்மென்ட்  கிடைச்சது.

அதுக்குத்தான் நாளைக்கு  அங்கே போறோமுன்னு  கொசுவத்திக்கு முந்தின பதிவில் சொல்லி இருந்தேன்!

ஒன்னே ஒன்னு ............   வீட்டாம்பளைக்கு  சுகக்கேடு வந்தால்  பார்த்துக்கறது........  ரொம்பவே கஷ்டம்ப்பா.....

மறுநாள்  நடந்தது என்ன?

தொடரும்.....:-)

PINகுறிப்பு:  இது ஒரு ஸீரியஸ் பதிவு. வெளையாட்டுத்தனமா நினைக்கப்டாது.  கண்.... கண்... கண்.....

Monday, September 25, 2017

தென்றலும்..... ஒரு புயலுமா இருக்கே..... (இந்திய மண்ணில் பயணம் 54)

பயணங்களில் பதிவர் சந்திப்புகளையெல்லாம் ரொம்பவே முன்கூட்டி  அமைச்சுக்கறது  கொஞ்சம் கஷ்டம்தான். நண்பர்களை சந்திக்க ஆவல் இருந்தாலும்  பல காரணங்களால் நடைமுறைக்கு ஒத்து வர்றதில்லை.
கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து,  நண்பர்களுக்கு  ஃபோன் செஞ்சு அவுங்களுக்கு சரிப்படுமான்னு  கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு எட்டிப் பார்த்துட்டு  வரணும். அப்படித்தான்  இன்று புதுகைத் தென்றல் வீடுவரை போக முடிஞ்சது.
ஏற்கெனவே இவுங்களை ஹைதராபாத் நகரில்  சந்திச்சு அவுங்களோடு கொஞ்சம் ஊர் சுத்தியும் இருக்கோம் :-)பிள்ளைகளுக்கும் நம்மை அப்பப் பரிச்சயம் ஆனதால்  ரொம்ப மகிழ்ச்சியா நம்மை  வரவேற்றாங்கன்னு தனியாச் சொல்லணும்தான் :-)

இந்த ஏழு வருஷ காலத்தில்  பள்ளிக்கூடம் பருவம் போய் கல்லூரிக் காலம் வந்துருச்சு!

அன்பு நிறைந்த பேச்சுகளால்  சட்னு ஒரு மணி நேரம் ஓடியே போச்சு. வீட்டை ரொம்ப அழகா அலங்கரிச்சு வச்சுருக்காங்க புதுகைத் தென்றல். ஹைதை வீடும் அட்டகாசமா இருந்துச்சு.

ப்ளாஸ்டிக்  பைகளுக்கு எதிரியா இருப்பதால்,  காய்கறிகளை ஃபிரிட்ஜில்  வாடாம வைக்கும் துணிப் பைகளுக்கு ஆதரவாளரா மாறி இருக்காங்க. நமக்கும் நம்ம ஷேர் கிடைச்சது :-)
அங்கிருந்து கிளம்பி நம்ம வள்ளுவர் கோட்டம் (சென்னை) கைவினைப்பொருட்கள், துணிமணிகள் கண்காட்சி நடக்குதுன்னு  அங்கேயும் போய் எட்டிப் பார்த்தோம். என்னுடைய தேடல் கத்வால் ஸாரி.
ஆந்த்ரா மாநில ஸ்டால்களில் (தெலங்கானா உள்பட)தேடிப்பார்த்தும்  அவுங்க 'ஙே' ன்னு முழிச்சதுதான் மிச்சம்.  போனது வீணாக வேணாமேன்னு   வாசல்  நிலைப்படி  தோரணங்கள் ரெண்டு வாங்கினோம். கல்யாண வீட்டுக்குக் கட்டுனா அம்சமா இருக்காது?
கண் திருஷ்டி படாம இருக்க பச்சைமிளகாய் எலுமிச்சம் பழம் கட்டி விட்டுக்கிட்டு இருக்கும் மக்களுக்காக  கெடாமல் இருக்கும் தோரணம் கூட விக்கறாங்க. ஃப்ரெஷாப் போட்டா, சட்னு சமையலுக்காவது ஆகும். ப்ளாஸ்டிக் பச்சை மொளகாய் வேஸ்டு இல்லையோ! 

இன்னிக்குப் பொழுது இப்படிப் போச்சு. மறுநாள்  கத்வாலைத் தேடணும். வலைவீசிப் பார்த்ததில்  சென்னை போத்தீஸ் கடையில் இருக்குன்னு தெரிஞ்சது.

வேறென்ன வேலை......  மறுநாளே போத்தீஸ் போயாச்சு.   கத்வால்னு கேட்டத்துக்கு என்னென்னவோ எடுத்து காமிச்சாங்க.  சரியானதாத் தெரியலை.   கொஞ்சம் சுமாரா இருந்த ஒரு புடவையை வாங்கும்போதே... யானை கண்ணுலே ஆப்ட்டது. போதாததுக்கு பச்சை வேற!  விடமுடியலை.
சம்பந்தியம்மாளுக்கு  ஒரு  புடவை வாங்கறோம். சம்பத்தி சீர்?  அப்படியும் வச்சுக்கலாம்.  தெரிவு செய்ததை மகளுக்குப் படமா அனுப்பி, அப்ரூவ் ஆனதும் வாங்கினோம்.  இதை வெட்டி, கவுன் தைச்சுக்குவாங்களாம்.  முந்தானையை ஃப்ரேம் போட்டு மாட்டிக்கலாமுன்னு ஐடியா கொடுத்தேன்.

(ஐயோ....  வெட்டவா போறீங்க?   )

நாளைக்குக் காலையில் நமக்கு  சங்கரநேத்ராலயாவில்  ஒரு அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு.

எதுக்கு?

கொசுவத்தி ஏத்தித்தான் ஆகணும். இதோ ஏத்தியாச்......  சம்பவம் நடந்தது.... போன வருசம் ஏப்ரல் 17.  2016

 நரைதிரைன்னு வயசானால் வருமுன்னு சொல்றது இந்தத் திரைதானோ?

நம்ம கோபால் தூங்கிக் கண்விழிச்சது பினாங்குலே. எழுந்துருச்சப்பவே என்னமோ ஒரு மாதிரி இருக்கு காட்சிகள். சரியாத் தெரியலையே.....  ஒரே மசமசன்னு.....  இன்னும்  மூணு மணி நேரத்துலே ஏர்ப்போர்ட்டுலே இருக்கணும். அதனால் மடமடன்னு  காலை வேலைகளை முடிச்சுக்கிட்டுக் கிளம்பியாச்.

அங்கிருந்து நேரா சிங்கை.  ஒரு பதினொன்னே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்ததும், சிங்கைத்தோழி எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வீட்டுக்குப் போய்  விருந்து முடிச்சுக்கிட்டு, அவுங்களோடு கொஞ்சம் வீட்டுக் காரியங்கள் பேசிட்டு,  சித்ரா 'அன்பளிக்கப்போகும் புத்தகங்களை'  வாங்கிக்கிட்டு (இது ரொம்பவே முக்கியம்!) ஒரு  மூணரை நாலு மணி போல கிளம்பி செராங்கூன் ரோடு.

இந்த ஏப்ரல் மாசம் சிங்கையில் தமிழ்மொழி விழா என்பதால் சித்ரா டீச்சர்,  பள்ளிக்கூட விழா  ஒத்திகைக்குப் போயிட்டு அவசர அவசரமா வந்து சந்திப்பில் கலந்துக்கிட்டாங்களாம்.

ஃபேரர்பார்க் ஸ்டேஷனில் இறங்கி நம்ம சிங்கைச் சீனுவுக்கு ஒரு அட்டென்டன்ஸ். ஹை அண்ட் பை ஆனதும் நேரா நம்ம பழைய கோமளவிலாஸ். போற போக்குலே வீரமாகாளிக்கு ஒரு ஸல்யூட்.  கோமளவிலாஸில் ஒரு  பஜ்ஜி அண்ட் காஃபி.  தொட்டடுத்து இருக்கும் இதே கோமளவிலாஸின் நொறுக்குத்தீனிக் கடையில் கொஞ்சம் சீடை, மிக்ஸர், ரிப்பன் , முறுக்கு இப்படி நொறுக்ஸ். அங்கே போறதே இதை வாங்கிக்கத்தான்:-) எங்கூர்  ஏர்ப்போர்ட் மோப்பநாய்களுக்கு இந்த தீனி வாசம்  28 வருசமாப் பழக்கப்பட்டுருக்கு, நம்ம கைங்கரியத்தால்:-)

வாங்கின அடுத்த  நிமிசம் டாக்ஸி பிடிச்சு ஏர்ப்போர்ட் வந்தாச்சு.
சாயங்காலம் ஏழம்பதுக்கு விமானம் ஏறி  மறுநாள் காலை  பத்துமணிக்கு  ஊர்வந்து இறங்கியாச்சு. ராத்திரி சுமாராத்தான் தூங்குனாராம்.  கண்ணுவேற சரியாத் தெரியலை. ஒன்னும் படிக்க முடியலைன்னு அது ஒரு கவலை.

வீட்டுக்கு வந்தப்ப மணி  பத்தரை.  முதல் தகவல் கண் தெரியலை என்பதுதான்.  ரெண்டு கண்ணுமா? இல்லை.  இடது கண் தெரியுது. வலது கண்ணில்  கருப்பா இருக்கு. கருப்புக் கண்ணை மூடிக்கிட்டால்  இடக்கண்ணில் நல்லாவே தெரியுது.

இன்னும் கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் .....

வலது கண்ணில்  மேல்பாதி பார்வை  மசமச. அப்புறமொரு அரைவட்டக் கருப்புன்னதும் உஷாரானேன்.  விழித்திரை..........

உடனே நம்ம உள்ளூர் தோழிக்கு  (மருத்துவர்) ஃபோன் செஞ்சு சமாச்சாரம் சொன்னதுக்கு முதலில் ரத்த அழுத்தம் எவ்ளோ இருக்கு பார். காய்ச்சல் இருக்கா?

காய்ச்சல் இல்லை. ரத்த அழுத்தம்  வழக்கம்போல கொஞ்சம் அதிகம்தான். அதிலும் வீட்டில் பார்த்தால் எப்போதும்  கொஞ்சம் அதிகமேதான். அதான் கிட்டத்தட்ட 42 வருசம் ஆச்சுல்லையோ:-)  வீடு எப்பவுமே டிமாண்டிங்....

பேசாம  நம்மூரு  ஆஸ்பத்திரி எமர்ஜென்ஸிக்குப் போயிடலாமான்னு ஒரு யோசனை. இன்றைக்கு ஞாயிறு என்பதால்  அங்கே  கண்பிரிவில் டாக்டர்ஸ் ஆன்காலில் தான். நாம்போனபிறகு அவுங்களைக் கூப்பிட்டனுப்பி, வர்றதுக்குள்ளே விடிஞ்சுரும். வலி இல்லைன்னா நாளைக்கு டாக்டரிடம் காமிக்கலாம்னு தோழி சொன்னாங்க.

நம்ம அமெரிக்கத் தோழி ஒருவரிடம் (இவரும் மருத்துவர்தான்) சமாச்சாரத்தைச் சொன்னதுக்கு  அவுங்களும்  நாளைக்குக் கட்டாயம் டாக்டரிடம் கூட்டிப்போகணுமுன்னு  சொல்லிட்டாங்க. சொல்ற அடையாளத்தை வச்சுப் பார்த்தால்  இது விழித்திரை சம்பந்தமானதுதான்னு சொன்னாங்க.

பொழுது எப்படா விடியுமுன்னு காத்திருந்து காலை எட்டேகாலுக்கு நம்ம கண்மருத்துவருக்கு  ஃபோன் செஞ்சால் அவர் ஒரு வாரம் லீவுலே போயிருக்காராம். அட ராமா.....   இந்த விசேஷ மருத்துவர்களுக்கான இடத்தில் இன்னும் ஆறு கண் மருத்துவர்கள் இருக்காங்களே... அவர்களில் யாரையாவது  பார்க்கமுடியுமான்னு  கேட்டதுக்கு  இன்னொரு மருத்துவரிடம் கேட்டுட்டு உங்களுக்கு உடனே தகவல் சொல்றேன்னு சொன்னாங்க வரவேற்பில் இருந்த பெண். கூடவே நீங்க தமிழான்னு  ஒரு கேள்வி!  ஆமாங்க. நானும்தான். கொஞ்சநேரத்துலே கூப்பிடறேன்னு சொன்னாங்க.

அதேபோல் ஒரு காமணியில் கூப்பிட்டு  டாக்டர் ஸோ அண்ட் ஸோ உங்களை வரச்சொன்னார். எப்ப வருவீங்கன்னதும்,  காலையில் இருந்து ரெடியாத்தான் இருக்கோம். இதோ புறப்பட்டாச்சு.

பார்வை சரியில்லாதவர் வண்டி ஓட்ட முடியுமா?  நாந்தான் ஓட்டறேன். ரொம்ப வருசமா வண்டியை ஓட்டாததால் கொஞ்சம்  நெர்வஸா இருக்குன்னாலும் சமாளிச்சு டாக்டர் க்ளினிக் போய்ச் சேர்ந்துட்டோம். முதலில்  கண் பார்வை பரிசோதனை. அஞ்சாவது  லைன் படி, மூணாவது லைன் படி இப்படி.

இடது கண் ஓக்கே. இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னால்தான் இவருக்கு  ட்ரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க ஒரு கண் பரிசோதனைக்குப் போயிருந்தோம். அப்ப எல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு.  இப்ப என்னடா திடீர்னு....  (என் கவலை எனக்கு)

அப்புறம் இன்னொரு அறைக்குப்போய்  இன்னொரு கண் மெஷீனில் பரிசோதனை. நேரடியா என்னென்னமோ டிஸைன் மானிட்டரில் தெரியுதே....   மெடிக்கல் டெக்னாலஜி ஈஸ் அமேஸிங்.......
மூணாவதா டாக்டர் சந்திப்பு. அவரும் பரிசோதனை செஞ்சு பார்த்துட்டு  ரெடீனா டிடாச்டு என்பதை கன்ஃபர்ம் செஞ்சார். தீர்வு என்ன? ஸர்ஜரிதான்.

இன்றைக்கே செஞ்சாகணும். என்னமாதிரி ஸர்ஜரின்னு நமக்கு விளக்க மேஜைமேல் இருந்த கண்ணை எடுத்து டபக்குன்னு திறந்து விளக்கினார்.  கண்ணுக்குள்ளே  கேஸ் ரொப்புவாங்களாம். அப்புறம் கொஞ்சநாளுக்கு ரொம்ப கவனமா இருக்கணும். இப்படித் தூங்கணும் அப்படி இருக்கணும் என்றெல்லாம் சொல்லிட்டு, இப்போ கண்ணின் கொள்ளளவு எவ்ளோன்னு  அளக்கணும். அதுக்கேத்தமாதிரி வாயுவை நிரப்பணும்னு இன்னொரு அறைக்கு அனுப்பினார்.  எதாவது கேள்வி இருக்கா? இருக்கு.

ஸர்ஜரி சதர்ன் க்ராஸிலா?  இல்லை. இங்கேதான். ஜஸ்ட் அ கப்புள் ஆஃப் ப்ளாக்ஸ் அவே!

யார் இந்த ஆபரேஷன் செய்யப்போறாங்க?  நாந்தான் என்றார்.

அடுத்த அறையில் கண்ணளவு எல்லாம் ஆச்சு.  எந்த மாதிரி சிகிச்சைன்னு விளக்கிச்சொல்லும்  தகவல் படிமங்கள்  கொடுத்தாங்க. Vitrectomy Surgery. என்னன்னு கண்டேன்?
உடனே பரபரன்னு அதுக்கான வேலைகள் ஆரம்பிச்சது.

கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிட்டு, பத்து நிமிசத்துலே ஸர்ஜரிக்குண்டான படிவங்களெல்லாம் கொடுத்து  நிரப்பிக்கிட்டு மூணு மணிக்கு  கண்ணாஸ்பத்திரிக்கு வந்து சேரணுமுன்னு சொன்னதும் வீட்டுக்கு வந்தோம். மறுநாள்  போஸ்ட் ஆபரேடிவ் கன்ஸல்டேஷன்  நேரமும் எழுதிக் கொடுத்துட்டாங்க.  கிளம்புமுன் தமிழ் பேசியவரைத் தேடி நன்றி சொல்லிட்டு வந்தோம். இங்கே பத்து வருசமா இருக்காங்களாம். சிங்காரச்சென்னைதான்.

  இதுக்கிடையில் அங்கே ஒவ்வொரு பரிசோதனைக்கு இடையிலும் இருந்த  காத்திருப்பு நேரத்தில் மகளுக்கு சேதி அனுப்பினேன்.

வியப்போடு வந்த முதல்  பதில்... செல்ஃபோன் கொண்டு போயிருக்கியா என்ன?

ஹிஹி  ஆமாம். இங்கே  இலவச வைஃபை  இருக்கு.

எங்கே இருக்கீங்க?  எங்கிட்டே ஏன் சொல்லலை? அப்பா கண் சரி இல்லைன்னா ட்ரைவ் பண்ணக்கூடாதே.  பின்னே  யார் ட்ரைவ் பண்ணினது?

ஸ்பெஷலிஸ்ட்களுக்கான பில்டிங்லே இருக்கோம். செயின்ட் ஜியார்ஜ் ஆஸ்பத்ரி வளாகத்தில். உனக்கு காலையில் வேலைக்குப் போகணுமேன்னுதான் சொல்லலை. நாந்தான் ட்ரைவர்.

இது ஃபேமிலி எமெர்ஜன்ஸியாச்சே. எனக்குச் சொல்லி இருக்கணும். இதோ கிளம்பி வர்றேன்.

வேணாம். இன்றைக்கு மதியம் ஸர்ஜரின்னு முடிவு பண்ணியாச்சு.  நாங்க இப்ப வீட்டுக்குப் போயிட்டு  மூணு மணிக்கு கண்ணாஸ்பத்ரிக்குப் போயிருவோம். நாலுமணி நேரம்வரை ஆகும் மொத்தத்துக்கும். அங்கே  மாலை 7 மணி ஆகிருமாம். நீ வேலையில் இருந்து  மாலை அஞ்சுக்கு வரும்போது ஆஸ்பத்ரிக்கு வந்துட்டுப் போயேன்.

இல்லை. நான்  பகல் ரெண்டரைக்கு வந்து உங்களை பிக்கப் செஞ்சு கண்ணாஸ்பத்ரியில் விடப் போறேன்.

முழு மயக்கம் கொடுக்கப்போறதில்லை என்பதால் பகல் சாப்பாடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை.  எதுக்கும் இருக்கட்டுமுன்னு பகல் 12 மணிக்கே லஞ்சு கொடுத்தேன்.  மூணு மணிக்கு  ஆஸ்பத்ரிக்குப் போனால் எப்படியும் முன்னேற்பாடுகள் முடிய நாலு ஆகிரும்.  அதுக்குள்ளே  பகலுணவு ஜீரணிச்சுருமேன்னு ஒரு கணக்கு:-)

உக்கார்ந்து நிரப்ப வேண்டிய படிவங்களை நிரப்ப ஆரம்பிச்சோம். வருசப்பிறப்புக்கு என்ன நைவேத்யம் பண்ணேன்னு கேக்கலையே தவிர மத்ததெல்லாம் கேட்டுருந்தாங்க.  முக்கியமா இப்ப என்னென்ன மருந்து எடுக்கறோம். எதாவது அலர்ஜி தரும் மருந்து உண்டா? அதி முக்கியமா......   இந்த ஸர்ஜரிக்கு  எப்படி காசு கட்டப் போறே...? கேஷா, கார்டா?  கார்டுன்னா அதன் விவரம் இன்னபிற. நமக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்குன்றதையும் அதன்  காப்பீடு எண்களையும் எழுதியாச்.  சிகிச்சை முடிஞ்சாட்டு  ஒரு நைட் தங்கற எண்ணம் இருந்தால்  நைட்டி,  மற்ற  தேவையானவைகளையும் எடுத்துக்கணுமாம்.

ரெண்டரைக்கு 'டான்' மகள் வந்து  கூட்டிக்கிட்டுப் போனாள். கிறைஸ்ட்சர்ச்  ஐ ஸர்ஜரின்னு  இங்கேயே நம்ம கண்டாக்டர்ஸ் க்ளினிக்குக்கு  அடுத்த வீதியில் இருக்கு. அங்கேதான் ஆபரேஷன். எங்கூர் நிலநடுக்கம் வந்து  அழிஞ்சுபோன ஒரு இடத்தில் புதுசாக் கட்டுன கட்டடம். இதுவழியாத்தான் வாராவாரம் நம்ம கோவிலுக்குப் போவோம். அஸ்திவாரம் போட்டதில் இருந்து கட்டடம் கட்டி முடியும்வரை பார்த்துக்கிட்டே இருந்ததுதான். இதுலே கண்ணாஸ்பத்திரி வருதுன்னு தெரியாமப் போச்சு பாருங்க. இந்தக் கட்டடத்துக்கு எதோ அவார்ட்கூட கிடைச்சுருக்கு. Eco building.


அட்டகாசமான வரவேற்பு. ஆளுக்கொரு பேனா எடுத்துக்கணுமாம்.  கையைச் சுத்தப்படுத்திக்கும் திரவம் நிரப்பிய பேனா அது:-)  உள்ளே கொண்டு போய்  எங்கே விருப்பமோ அங்கே வசதியா உக்காரச் சொல்லிட்டாங்க. வைஃபைக்கான பாஸ்வேர்ட் கிடைச்சது. மூணுபேரும் அவுங்கவுங்க செல்லுலே போட்டுக்கிட்டோம்.


நல்ல பெரிய ஹால். வசதியான இருக்கைகள்.  கண்ணாடிச்சுவர் ஓரமாவே திண்ணை இருக்கைகள். எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லகாலமா இன்றைக்கு வெயில்வேற இருக்கு. அப்படியே குளிர் காய்ஞ்சுக்கலாம். ஜாலி!


நான் 'குறையொன்றுமில்லை' முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் கையோடு கொண்டு போயிருந்தேன்.  'கொஞ்ச நேரம் இருந்துட்டு மகள்  வேலைக்குத் திரும்பப் போயிருவாள். பிறகு வேலை முடிஞ்சு அஞ்சரைக்கு வருவாள்'னு நினைச்சால்  ...  இல்லையாம்.  அப்பாவுக்கு மாரல் சப்போர்ட்.  அவ்ளோதான். தகப்பன் தலையில் ரெண்டு டன் ஐஸ்:-)

கோபாலை உள்ளே இன்னொரு அறைக்குக் கொண்டுபோய் விவரம் எல்லாம் சரிபார்த்துட்டு  ரத்த அழுத்தம் எடுத்துப் பார்த்து  கையில் பெயர் பட்டி போட்டு அனுப்புனாங்க. எனக்கு  ரெண்டு வருசம் முன்னால்  ஐஓஎல் மாத்துன அனுபவம் இருக்கே. ஆரம்ப சமாச்சாரங்கள்  அப்படித்தான் எல்லாம் நடக்கும்னு இருந்தேன்.

ஸர்ஜரி முடிஞ்ச நோயாளிகள்  கண்ணில் பட்டி போட்டுக்கிட்டு அப்பப்ப வர்றதும் கொஞ்ச நேரத்துலே டிஸ்சார்ஜ் ஆகிப் போறதுமா இருக்காங்க. நானே மூணு பேரைப் பார்த்தேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு நர்ஸம்மா வந்து கண்ணில் சொட்டு மருந்து போட்டாங்க. கூடவே ஒரு பையும் கொடுத்தாங்க. 'நோயாளி' தன் பொருட்களையும் விலை உயர்ந்த நகை நட்டுக்களையும் போட்டுக்கலாம். அதை பத்திரமா லாக்கர்லே வச்சுக் காப்பாத்திக் கொடுப்பாங்க.  காலுக்குப் போட்டுக்க  Anti Slippery socks கொண்டு வந்து கொடுத்தாங்க.  அப்பப்ப வந்து கண்ணுலே சொட்டு மருந்து.
இப்படியே ஒரு முக்காமணி நேரம் போனதும், பிள்ளை புடிச்சுக்கிட்டுப் போறமாதிரி ஒரு நர்ஸிங் ஸ்டாஃப் வந்து க்ளிக்ஸ்க்குப் போஸ் கொடுத்துட்டு கொண்டு போனார்.  எங்களுக்குக் குடிக்க என்ன வேணுமுன்னு கேட்டு  காஃபி, டீ  போட்டுக் கொடுத்தாங்க. கூடவே ஒரு பிஸ்கெட்.
குடிச்சுட்டு அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலைகளில். அப்பதான் நண்பர் சத்யாவிடமிருந்து  இன்பாக்ஸில் ஒரு தகவல். தென்றலில் துளசிதளத்தைப் பற்றி வந்துருக்குன்னு  அதை அனுப்பி இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனப்ப  உள்ளூர் மருத்துவர் தோழி வந்தாங்க. அவுங்க வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும் நேரம். நம்மகூட இருந்து கோபாலின் ஸர்ஜரி முடிஞ்சதும் நம்மை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டுப்போறதா ஒரு ப்ளான்.

மகள் அங்கே  நம்மகூடவே இருக்காள்னதும்  ஒரு  முக்காமணி போல பேசிக்கிட்டு இருந்துட்டுக் கிளம்பிப் போனாங்க. ஒருமாசம் கோபால் டிவி பார்க்க விடக்கூடாதுன்னு  சொன்னது எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு.  அதை ஒரு ரெண்டு மாசம் ஆக்கக்கூடாதா?

பதிவின் நீளம் கருதி ரெண்டு பகுதிகளாப் போடறேன்.

தொடரும்......:-)

Sunday, September 24, 2017

அஞ்சானுக்கும் அஞ்சானைக்கும் இன்று.......

பொறந்த நாள்  வந்துருக்கு, மக்களே!

படத்தில் இருக்கும் இருவருக்கும் இன்றைக்குப் பிறந்தநாள்!

பெரியவர் பிறந்து ரொம்ப வருஷம் ஆகுது!

துளசிதளம் பிறந்து இப்போ.....  பதிமூணு வருசம் நேத்தோடு முடிஞ்சுருக்கு. இன்று முதல் பதினாலு தொடக்கம்  :-)

நண்பர்களுக்கும்,  வாசகப்பெருமக்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த அன்பும் நன்றிகளும்!

வழக்கம்போல் தங்கள் ஆதரவு  கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு...