Monday, May 30, 2016

பொறந்தநாள் பொறக்கும் நேரத்தில்... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 40)

எட்டரைக்கு  விழா தொடக்கம்னு  சொன்னதால் ஒரு அஞ்சு நிமிசம் இருக்கும்போது கிளம்பி பொடி நடையில் போறோம். நாங்க போய்ச் சேரும்போதே  பாபா வந்து அவருடைய இடத்தில் உக்கார்ந்துருக்கார்.  மக்கள்ஸ் போய் அவரைக் கும்பிட்டுக்கறாங்க.  ஒவ்வொருத்தரிடமும்   ரெண்டு வார்த்தைகள் பேசிட்டு  தட்டில் வச்சுருக்கும் இனிப்பை எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருக்கார்.
'காட்சிக்கு எளியன்' என்பது எவ்ளோ உண்மை பாருங்க. சுத்திவர அடியா(ள்)ர்களை  வச்சு அரண் அமைச்சுக்கிட்டு இல்லாம  இப்படி  இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு.  இவருக்கு  ஒரே ஒரு கொள்கைதான். இவருடைய அருள்வாக்கும் இது ஒன்னுதான்.  அனைவரையும் நேசி! அனைத்தும் அன்பே! ரொம்ப ஸிம்பிள்!  Love all  Love is all. அம்புட்டுதான்!

எனக்குப் பொதுவா இந்த சாமியார்கள் என்றாலே ஒரு அலர்ஜி.  குடும்பத்தில்  ஒரு குறிப்பிட்ட சாமியாரின் பக்தர்களா  இருந்தவர்கள்  பவிஷைக் கண்கொண்டு பார்த்ததால் .......  இவுங்க சங்காத்தமே வேணாமுன்னு  ஆகிபோச்சு. 

மேலும் சில குறிப்பிட்ட  கதைகளையும் கேட்டுருக்கேன்.  ப்ச்.... வேணாம்....  இப்போ நல்ல நாளில் அதையெல்லாம் நினைப்பானேன்....

நாங்களும் போய்  வணக்கம் சொன்னோம். 'அக்கா'வைக் கையில் கொடுத்து  'எப்படி இருக்கீங்க பாபா?' ன்னு  கேட்டேன்.  சிரிச்ச முகத்தோடு  'நல்லா இருக்கேன்மா. எப்ப வந்தீங்க'ன்னார்?

ஊரில் இருந்து வந்து பத்து நாளாச்சு. இங்கே  சாயங்காலம் நாலு மணிக்குத்தான் வந்தோம்னேன்.  எங்களுக்கு ஆளுக்கு ஒரு லட்டு எடுத்துக் கொடுத்த கையோடு,  'இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பாருங்க. போயிடாதீங்க'ன்னார். 'இங்கேதான் தங்கி இருக்கோம் பாபா'ன்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே  கெமெராவை என் கையில் இருந்து வாங்கி எதிரில் உக்கார்ந்து இருந்த பக்தரிடம் கொடுத்து  க்ளிக்கச் சொன்னார் நம்மவர். ஆச்சு !

நாங்க போய்  அந்தாண்டை  பிரகாரத் திண்ணைக்குப் பக்கம் படிக்கட்டுகளில் உக்கார்ந்தோம்.  இந்தத்  திண்ணைதான் இங்கே எப்போதும்  கச்சேரி அரங்கம்:-) மேடையில்  சிருசேரி சிஸ்டர்ஸ் பாடிக்கிட்டு இருக்காங்க.
 அவரவர் விருப்பம்போல் எங்கே வேணுமுன்னாலும் உக்கார்ந்துக்கலாம். நாட்டாமைகளுக்கு வேலையே இல்லை. அதுக்கான அவசியமும் இல்லை.  பாபா முன்னால் நடப்பவர்களுக்கு  கொஞ்சம் இடம் விட்டு  தரையில்  உக்காரும் பக்தர்கள்தான்  அதிகம்.  எதிரில் நீளமா இருக்கும் படிகளிலும்  உக்காரலாம். யாகமண்டபத்தில், திண்ணை யில் இப்படி ......

பூரணப்ரம்மம் சந்நிதியில் பொறந்தநாள் கேக் வச்சு சரி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க சிலர். அஞ்சடுக்கு ஒன்னும் மூணடுக்கு ரெண்டுமா அட்டகாசமா இருக்கு!

நடனம், பாட்டுன்னு  பார்த்துக்கிட்டு இருக்கோம்.  சின்ன தொன்னையில் வெண்பொங்கல், நறுக்கிய பழங்கள், திராக்ஷை,  மிட்டாய்னு  நொறுக்குத்தீனிகள் வந்துக்கிட்டே இருக்கு.  கொஞ்ச நேரத்தில்  தின்னு முடிச்சக் காலி தொன்னைகள், சாக்லேட் பேப்பர்கள்னு குப்பைகளைச் சேகரிக்கவும் வந்துக்கிட்டே இருக்காங்க, பிள்ளைகள்.  இடம் பளிச்ன்னு  இருக்கும் காரணம் இப்போப் புரிஞ்சு இருக்குமே!
சிலபிள்ளைகள்  தன்னுடைய பங்காக  எதாவது  செய்யணும் பாபாவுக்குன்னு  அப்பவும்   வாழ்த்து அட்டைகள் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நான் ஏற்கெனவே வரைஞ்சது இங்கே இருக்குன்னு  கூட்டிப்போய் காமிச்சார் ஒரு மாணவர்:-)





நம்ம ஜானகி மேடமும் வந்து  சத்சங்கத்தில் கலந்துக்கிட்டாங்க!  அநேகமா  வர்றவங்க எல்லோரும்  வந்துட்டாங்க போல ! நம்ம பாபாவும் கண்ணை மூடிக்கிட்டு அசையாமல்  உட்கார்ந்திருந்தார். நிஷ்டை? மேடையில் இப்போ பாடும் பாட்டு அஷ்டபதியில் இருந்து! ஒருவேளை  பாட்டின் பொருளறிஞ்சு  லயிச்சுட்டாரோ என்னமோ? திடீர்னு எழுந்த பாபா  அஷ்டபதிக்கு ஆட ஆரம்பிச்சார்.  நான் கேள்விப்பட்டுருக்கேனே தவிர  இதை இதுவரை பார்த்ததில்லை.

சட்னு  வீடியோ க்ளிப்பா பதிவு செய்ய ஆரம்பிச்சேன்.  கூட்டத்தில் இருந்த சனத்தில் பாதிப்பேர் செல்ஃபோனில் ரெகார்ட் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாந்தான் பிரமிப்பில்  முதலிரண்டு நிமிசத்தை விட்டுருக்கேன் :-)

மணி பத்து. கொஞ்சம் பெரிய பிள்ளைகள் வந்து ஒரு நடனம் ஆடுனாங்க. அதுக்கப்புறம் ஒரு  பரதநாட்டியம். சுதா ரகுநாதன் குரலில்  'அசைந்தாடும் மயிலொன்று .....' அழகான அபிநயம்!


கொஞ்சம்  பாட்டு, பாபாவின் பேச்சு என்று நேரம் ஓடிருச்சு.  இப்போ மேடையில் நாதஸ்வர கோஷ்டியின் வாசிப்பு!



வெண்ணிற ஆடைகளில் குட்டிதேவதைகள்  அணிவகுத்து வந்தாங்க. பாரதிராஜா படம் ஞாபகத்துக்கு வந்து தொலைச்சது :-)  நள்ளிரவு நெருங்கும் நேரம். இத்தனைக் களேபரத்திலும்  சில பசங்க பிரகாரத் திண்ணையில் தூங்கிக்கிட்டு இருந்தாங்க :-)
பூரணபிரம்மத்திற்கு  பூஜை ஆரம்பிச்சு தீபாரதனை காட்டி, ஹேப்பி பர்த்டே பாட்டு முடிஞ்சு ,  பாபா தன் பொறந்தநாள் கேக்கை   கட் பண்ணி , அவருக்குப் பெரிய மாலை போட்டு  ஒரே கொண்டாட்டம்!


கடைசி நிகழ்ச்சிக்கு  வந்திருந்தோம்.வரிசையில் போய்  பூரணப்ரம்மத்திற்கு  நமஸ்காரம் செஞ்சுட்டு  பொறந்தநாள்  இனிப்புகளை ஒரு கை பார்க்க வேண்டியதுதான் பாக்கி.  தானாகவே வரிசை ஒரு ஒழுங்குமுறையில் நகர்ந்துக்கிட்டு இருக்கு!
இன்றைக்கு பூரணபிரம்மம் பட்டை போட்டுருந்தார்.  அந்தந்த நாளின் விசேஷத்துக்குத் தகுந்தபடி, இவரே  நாராயணன்,  சிவன், கிருஷ்ணன்,  ராமன்,  ஆண்டாள், அம்மன் என்று மாறி மாறி நமக்குக் காட்சி கொடுப்பதுதான் இங்கே வழக்கம்!
கேக், ஐஸ்க்ரீம், சிப்ஸ், சாக்லெட், இப்படி....  கூடவே ஒரு டிஷ்யூ வச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது!
ஒரு முட்டலோ மோதலோ கத்தலோ, விரட்டலோ  இல்லாம  எல்லாமே ஒரு ஒழுங்கில்.....   அருமை!  ரிலாக்ஸா உக்கார்ந்து இருந்த இடத்தில் இருந்தே  க்ளிக்கிக்கிட்டு  இருந்தேன்:-)
வெளியூர், வெளிநாடு,  உள்ளூர்னு எல்லாமே அன்பால் வந்த கூட்டம். சின்னக்குழந்தைகளும், வயதில் முதிர்ந்தவர்களுமா  ஒரு கூட்டுக்குடும்ப  எஃபெக்ட் இருந்துச்சுன்னு  எனக்கொரு தோணல்!  எதோ ஒருவிதத்தில்  அவுங்களுக்கு  எதோ நல்லது நடந்துருக்கலாம். ஒரு நம்பிக்கையான சொல் கிடைத்துருக்கலாம். நம்பினால்தான் தெய்வம். நம்பிக்கைதான் வாழ்க்கை!

'கவலையை விடு!  களிப்புடன் இரு'  என்றதோடு,  முகம் கோணாமல் எல்லோரையும் ஒரே மாதிரி நேசிக்கவும் பழகவும்  முடிஞ்ச அந்த மனசு ...  எனக்குப் பிரமிப்பைத் தருது!

என்னைப் பொறுத்தவரை   எனக்கொரு நல்ல நண்பர் கிடைச்சுருக்கார்!
அறைக்குத் திரும்பும்போது  மணி ஒன்னே கால்!  இப்படி பின்நிலாக் காலத்தில் அரை இருளில்  காலாற நடந்து எத்தனையோ வருசங்களாச்சு !  மனத்திருப்தியுடன்  தூங்கினோம்.

நாளைக்குக் காலையில் சீக்கிரம் எழுந்துக்கலாமா?   பாக்கிக் கொண்டாட்டங்கள்  இன்னும் இருக்கே!

தொடரும்...........  :-)

PINகுறிப்பு:  இன்றைய நிகழ்வின்  ரெண்டு வீடியோ க்ளிப்ஸ் போட்டுருக்கேன்.  ஆர்வம் இருப்பவர்களுக்காக :-)


Friday, May 27, 2016

புள்ளையாரின் 'தோளர்' :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 39)

காட்டில் தனியா நிக்கும் ஒற்றையானையைக் கடந்து போறோம். அம்பாரியில் புள்ளையார் உக்கார்ந்துருக்கார்.
கொஞ்சதூரத்தில் குட்டியூண்டு குன்றின்மேல் குட்டியா ஒரு பாலவிநாயகர் கோவில் கொண்டுருக்கார், தன் தகப்பனோடு!  அட!  போனமுறை பார்க்கலையேன்னு  குன்றேறிப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். இன்னும் கொஞ்சதூரத்தில்  புத்தர் இருக்கார். கோவில் கதவு மூடி இருக்கு. போனமுறைகளில் தரிசனம் ஆச்சுதான்.
விண்ணளந்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர்:-) முக அழகு அருமை! எதுத்தாப்லெயே  எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு  ஒரு மசூதி!   இங்கே சாமிகளுக்குள் எந்த பேதமும் இல்லை. எல்லோரும் ஒன்னுக்குள் ஒன்னா கலந்துகட்டித் தாயா பிள்ளையாத்தான்  இருக்காங்க.
கண்ணில் பட்டது ஒரு புது அமைப்பு! நவகிரகங்கள்! திருஞானசம்பந்தர்  அருளிய கோளறு திருப்பதிகம், நுழைவு வாசலின் ரெண்டுபக்கமும் இருக்கு. அதை நின்னு வாசிச்சேன்.  உள்ளே போனால் நடுவில் சூரியன்!  பனிரெண்டு ராசிகளும் அவனைச் சுற்றி!  இடமும், வலமுமா நவ்வாலு கிரகங்கள் அவரவர் திசை நோக்கி! அவரவருக்கு உரிய ஸ்லோகம் அவரவர் இடத்தில்!  சொல்லிக் கும்பிட்டுக்கலாம்.


அண்ணாமலையாரும் உண்ணாமுலையாளும் பக்கத்து ப்ளாட்டில்!
திருவள்ளுவர்  தினமும் ஒரு குறளுக்குப் பொருள் சொல்லியவண்ணம் இருக்கார்!
சுஷீல்ஹரி பள்ளிக்கூட வாசலைத் தாண்டி  பெரியகோவில் வளாகத்துக்குள் வந்துருந்தோம்.  பொதுவா நாம் பார்க்கும் ஆள் நடமாட்டம் ஒன்னும்  காணமேன்னு இருந்தேனே....  இப்பக் காரணம் புரிஞ்சது. எல்லோரும் விழாவுக்கான ஏற்பாடுகளில் முழுகி இருக்காங்க. மறுநாள் நிகழ்ச்சிகள் இவை!

எங்கே பார்த்தாலும் பூக்களோ பூக்கள்! சரஞ்சரமாக் கோர்த்துக்கிடக்கு! பெரியகோவில் மூர்த்தியான பூரணப்ரம்மம் அலங்கரிப்பு ஒரு புறம். எதிரே இருக்கும் பெரிய யாகசாலை மண்டபத்தின் ஒரு கோடியில் கோட்டிஸ்வாமிகள்  இருக்கார். இப்போ புதுசா  மற்ற மூணு மூலைகளில்  ரெண்டு பெரிய யானைகளுடன் புள்ளையார், ஆதிசேஷனோடு ராதாக்ருஷ்ணன், நாலுகுதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீராமனும் சீதையும்!  காலடியில் நம்ம ஆஞ்சி!



ஒரு இடம் நம்ம  மஹாபெரியவா காஞ்சிமுனிவருக்கு!
இங்கேதான் புதுசுபுதுசா எதாவது  அலங்காரங்களும் அமைப்புகளும்  வந்துக்கிட்டே இருக்கே!  நம்ம முகநூல் நண்பர் கோபால் ச்சூடா (Gopal Chooda) அவர்களின் தயவால்  எல்லா சனிக்கிழமை  பூஜைகளும் மற்ற விசேஷநாட்களின் படங்களும், வீடியோ க்ளிப்புகளும்  இருந்த இடத்தில் இருந்தே நோகாமல் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன். சிலபடங்களின் பின்னணியில் புதுசா எதாவது  தெரிஞ்சால் என்ன ஏதுன்னு அவரிடம் இன்பாக்ஸில் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.  பாபாவின் தீவிர பக்தர் இவர். பொறுமையா  எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அனுப்புவார்!

பூக்களம், விளக்குகளுக்கு  திரிபோட்டு  எண்ணெய் ஊற்றி வைப்பதுன்னு  எல்லோரும் ஒவ்வொரு வேலையில்!  வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னது நாம்தான். இப்போ நமக்கான வேலை படமெடுத்தல்னு  திருப்திப் பட்டுக்கிட்டேன்:-)
பிரகாரத்தில் பெரியகோவிலின் விவரங்கள் எழுதி வச்சுருக்காங்க. சுவாரஸியமான சங்கதிகள்!  இன்னும் ஒன்னு , ஞானி எப்படி இருப்பார்னு!  பலசமயங்களில்  நமக்குத்தான் ஞானம் என்னன்னே புரியறதில்லை.....   படிச்சுப் பார்க்கும்போது...   நம்மாலே ஏன் அடுத்துப்போக முடியலைன்னு கொஞ்சம் விசனமாவும் இருந்தது உண்மை.
அடுத்துப்போன   சாப்பாட்டுக்கூடத்திலும் தொட்டடுத்து இருந்த அடுக்களையிலும் வேலைகள் பரபரன்னு நடக்குது. காய்கறிக் குவியல்கள்! அவரவருக்கு முடிஞ்சவகையில் உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மேஸ்திரி போல்  அதிகாரம் செய்யவோ, அதட்டி உருட்டி, மிரட்டி வேலை வாங்கவோ யாருமில்லை!   எல்லாம் அன்பால் கட்டுண்ட மனங்கள்!  அன்பு இருக்குமிடத்தில் மற்ற எதுக்கும் அவசியமில்லைதானே!

தீவிரமா வெங்காயம் உரிக்கும்  குட்டி பக்தர்:-)
பிள்ளைகள் வரைந்த வாழ்த்து அட்டைகளின் தோரணம் வழியெங்கும் விதவிதமாய்! அலங்கார விளக்குகள் முழுசும் சோலார் பவரில் வேலை செய்யுது.

சமணக்கோவிலுக்குள் போய் கும்பிட்டுக்கிட்டோம்.
பிள்ளைகளுக்கான  ஆக்டிவிட்டீஸா, ட்ராஃபிக் சைன்ஸ்  என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு பார்க் இருக்கு. நல்ல விஷயம்.
அறைக்குத் திரும்பலாமுன்னு  போனதில் வழியில் துர்கையைத்  தரிசித்தோம். ஹைய்யோ!  வழக்கமான பிரமிப்புதான்.  என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு சிரிப்பு !
இங்கேயும்  ஒரு யாகசாலை இருக்கு!  காயத்ரி மண்டபம்.  புதுசா  இங்கேயும் ஒரு ராமர் அண்ட் சீதா?  ஆனால் ராமர் கையிலே கோதண்டத்தைக் காணமே... ஆஞ்சி வேற இருக்கார்.  முதுகிலே அம்பறாதூணி  இருப்பதால் ராமர்தான்னு நினைச்சுக்கிட்டேன்.

துர்கை  கோவிலில் இருந்து அறைக்குத் திரும்பும் வழியில்  என்னவோ வித்தியாசம்!  ஆங்..........  இங்கே இருந்த பசுக்கொட்டில் எங்கே? புதுசா ஒரு கட்டடம் கட்டிக்கிட்டு இருக்காங்க?
அறைக்கு வந்ததும் நம்மவர் மட்டும் வேட்டிக்கு மாறினார்.  திரும்ப கணேஷ்புரிக்குப் போனோம். எல்லோரும் பூஜை மும்முரத்தில். நமக்கும் பூஜைக்கூடைகள் வந்தன. வீட்டுக்கு ஒன்னு போதும்னு  ஒரு கூடையை மட்டு வாங்கி கோபாலிடம் கொடுத்தேன். நம்ம முழங்கால் பிரச்சனையால் தரையில் உக்காரக் கஷ்டம் இல்லையோ!
தேங்காய், பழம், பூ, விபூதி, குங்குமம்,மஞ்சள், வெத்தலை பாக்கு  இருக்கு. சந்நிதி  உள்ளே அர்ச்சகர் சொல்லும் மந்திரத்தைத் திருப்பிச் சொல்லி  அவர் சொல்படி பூ, குங்குமம் இத்தியாதிகளைக் கொண்டு அர்ச்சிக்கவேணும். (ஓ எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பது இப்படியும் பொருந்துதே!)
மந்திரம் என்னன்னு  சின்ன அட்டையில் கூடைக்குள்ளும்  இருக்கு. நல்லவேளை. தப்புத்தப்பா உளறவேணாம் !
பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆனதும் நாங்க இருக்கும் இடத்தில் இருந்தே கண்ணில் ஒத்திக்கிட்டோம். அடுத்து உற்சவர் வெளியில் வந்தார். கோவிலைச் சுத்தப்போறார். நம்மவர் ஊர்வலம் போகும் புள்ளையாருக்குத் தோள் கொடுக்கப்போனார். முகத்தில் தனியா ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது!
முடிஞ்சவரை க்ளிக்கினேன்.  போதுமான வெளிச்சம் இல்லாததாலும், ஊர்வலம் நகர்ந்துக்கிட்டே இருந்ததாலும் படம் சரியா வரலை.  (பொதுவா நான் எங்கேயும் ஃப்ளாஷ் பயன்படுத்தறதில்லை. மக்கள் முகத்தில் திடீர்னு வெளிச்சம் அடிக்க வேணாமேன்னுதான்....)

பிரஸாத விநியோகம் அடுத்து! மோதகம், கேஸரி, சுண்டல், அரிசி உப்புமா, ஒரு பர்ஃபி, ஒரு வாழைப்பழம், அரை ஆப்பிள்.  நமக்கு டின்னரும் ஆச்சு:-)

 பத்து நிமிசம்போல அங்கே  கொஞ்சம் பேச்சு பரிமாறிட்டு அடுத்த அரை நிமிட்டில்  அறைக்கு வந்தோம் .

நான் வேஷம் மாறிக்கணும். விழாவுக்குப் போறேனாக்கும் :-)

தொடரும்........  :-)