Wednesday, June 24, 2020

சாங்கி முதல் நியூஸிவரை.... (பயணத்தொடர் 2020 பகுதி 68) நிறைவுப்பகுதி

ஏர்ப்போர்ட் கூட ஒரு தனி உலகமாத்தான் இயங்குது!  அதுவும் இங்கே சாங்கியில் எப்பவும் திருவிழாக்கூட்டம்தான்.  இதுலே  டெர்மினல் 2 எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். பழகின இடம் பாருங்க. கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு, மகள் அனுப்பிய லிஸ்ட்டில் இருந்த சில ஐட்டங்களை வாங்கியாச்.  தலைவலி மாதிரி இருக்கு. சாயங்காலம் ஆனாவே நேரத்துக்கு  குடிச்சே ஆகணும்....   ஆளுக்கொரு  காஃபி ஆச்சு.



ட்ரான்ஸிட் பயணிகளுக்குத் தரும் சாங்கி டாலர்கள் கொஞ்சம் கையில் இருந்தது....   ( முந்தியெல்லாம்  நபருக்கு நாப்பது கிடைக்கும். இப்போ அதில் பாதிதான் ) அதையும் செலவு செஞ்சுட்டு ஸ்கை ட்ரெய்னில் நாலாம் டெர்மினல் விஸிட்.  முதல்முறையா எட்டிப் பார்த்தோம். காலமாற்றம் நல்லாவே தெரியுது !  எல்லாம் அப்மார்கெட் சமாச்சாரம்.


ரயில் பிடிச்சு மூணாம் டெர்மினல் போயிட்டோம்.  நியூஸி ஃப்ளைட் இங்கே இருந்துதான். ஏழு அம்பதுக்குக் கிளம்பும்.  ஒரு  முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் அங்கே இருக்கணும். நம்ம கேட் எங்கோ ஒரு மூலையில்.....   நடந்துநடந்து அலுத்துப்போய்ச் சேர்ந்தால், நம்ம நியூஸி நண்பர்கள் அங்கே இருக்காங்க.   தோழிக்கும் உடம்பு சரி இல்லாமல் போயிருச்சாம், இந்தப் பயணத்தில்.  ப்ச்.... நமக்கும் அதே தானே ஆச்சு......   ஒன்னும் சரி இல்லை. போர்டிங் ஆகும்வரை ஊர்விவகாரம் பேசுனதில் நேரம் ஓடிப்போச்சு.



 அப்புறம் ?  வண்டிக்குள் போய் உக்கார்ந்தாச். அதே போரிங் ஃப்ளைட்தான். ராத்ரி என்பதால்  தூங்க முடிஞ்சவரை தூங்கிக்கணும். வீட்டுக்குப் போனதும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கே !
ப்ரேக்ஃபாஸ்டுக்கு எழுப்புனதும் பார்த்தால்  ஊரை  நெருங்கிக்கிட்டு இருக்கோம்.  டிசம்பர் எங்களுக்குக் கோடைகாலம் என்பதால் சதர்ன் ஆல்ப்ஸ் மலையில் துளியூண்டு பனிதான் ஒட்டியிருக்கு.

காலை பத்தே முக்காலுக்கு  நம்மூரில் லேண்டிங். வருஷக்கடைசிநாள். அத்தியை நினைச்சுத்தான் கொஞ்சம் பயமா இருந்துச்சு.  டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களில் முதலாவது  ஒரு மரச்சிலை.  எல்லாம் எழுதிக்கொடுத்துட்டு, மனசு திக் திக்ன்னு  காத்திருந்தோம். பயோ செக்யூரிட்டியில் பொட்டியைத் திறந்து, ட்ரீட்டட் வுட் என்று சொல்லி அத்தியைக் காமிச்சதும், ஓக்கேன்னுட்டார் ஆப்பீஸர் !  ஹப்பாடா........
டாக்ஸி எடுத்து பதினொன்னரைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!  ஆனந்த அத்தி நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்துட்டார். இனி எல்லாம் (அவருக்கு) சுகமே!
ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு, புழக்கடையில் போய் செடிகளைப் பார்வையிட்டேன். தாமரை பூத்துருக்கு!  வேற சில செடிகள் மண்டையைப் போட்டும் இருக்கு.  நாலடி வளர்ந்த அவகாடோ.... மர்கயா.....ப்ச்.
தோட்டத்தில்  ரன்னர் பீன் காய்ச்சுக்கிடக்கு. கொஞ்சம் பறிச்சுட்டு வந்தேன்.  ராஸ்பெர்ரி செடியில் கொஞ்சம் காய்கள் பாக்கி. நாம் இல்லாத சமயம் காய்ச்சுத் தள்ளி இருக்கு!  மகள் அப்பப்ப அறுவடைப் படங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தாள் :-)
சட்னு குளிச்சுட்டுச் சமையலை ஆரம்பிக்கணும்.  தால் பாத் அண்ட் பீன்ஸ் கறி. யதேஷ்டம்!
ஆனந்த அத்தியை ஸ்வாமி அறையில்  கொண்டுபோய் வச்சுட்டு, தீபாராதனை காமிச்சேன்.
நாலுமணிக்குக் கேட்டரி போனோம்.  ரஜ்ஜூ கொஞ்சம் கோபத்தில்தான் இருந்தான்.  ரொம்பவே நல்ல  மேனர்ஸ் இருக்காம். கேட்டரி ஓனர் ஒரேதாப் புகழ்ந்தாங்க.  நம்ம வளர்ப்பு அப்படின்னு ஒரு (அல்ப) சந்தோஷம். ' வேணுமுன்னா நீங்களே வச்சுக்குங்க'ன்னேன். ரெடியாம் ! சரியா சாப்பிடறதே இல்லைன்னு சொன்னாங்க. இவனுக்கு நாங்களே அவனுடைய ரெகுலர் சாப்பாடை வாங்கிக் கொடுத்துருவோம்.  கேட்டரியில் கொடுக்கும் ப்ராண்ட் இவனுக்குப் பிடிக்காது.

ரெண்டு வாரத்துக்கொருமுறை மகள் போய் பார்த்துட்டு, அடுத்த ரெண்டுவார சாப்பாட்டைக் கொடுத்துட்டு வருவாள்.   கொடுத்து வச்ச சாப்பாடு பாதி பேக் அப்படியே இருக்கு. பாவம்.... ஏங்கிப்போயிருக்கான்...... கேட்டரி ஓனரின் ரங்க்ஸூம் இவனைப் புகழ்ந்து தள்ளிட்டார் !
விஸிட் செஞ்ச மகளும் 'இவன் கேட்டரி ஓனரின்  பெட் ஆகிட்டான். நிறைய சலுகை கிடைக்குது.  அவுங்க ப்ரைவேட் கார்டனில் போய் சுத்தற அளவுக்கு'ன்னாள் !

வீட்டுக்குள் கொண்டுபோய் ஸ்வாமி நமஸ்காரம் பண்ணியதும் திறந்துவிட்டால்.... விடுவிடுன்னு புழக்கடைப்பக்கம் ஓடறான். எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணணும். அவன் இல்லாத சமயம் யார்யார் வந்து போனாங்களோ?  அவன் கவலை அவனுக்கு.. :-)  பாவம்..... நல்லாவே இளைச்சுட்டான். தூக்கினால்  கனமே இல்லை....  ப்ச்...








சுத்திட்டு வந்ததும், மூஞ்சு கொஞ்சம் தெளிவாச்சு :-)  அப்பா மடியில் ஏறி உக்கார்ந்துட்டான். முகத்தில் சிரிப்பு தெரியுதோ ?
இன்றைக்கு நியூ இயர் கொண்டாட்டம் இருக்கு நம்மூர் ஹேக்ளி பார்க்கில்.  பொதுவா பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய், வருஷம் பிறந்தவுடன்  ஒரு காமணி நேரம் நடக்கும் வான/ண வேடிக்கை  (பட்டாஸ்தான். ஆர்கனைஸ்ட் ஃப்யர்வொர்க்ஸ் ) பார்த்துட்டு வருவோம்.  விழா என்னமோ சாயங்காலம் அஞ்சு மணிக்கே ஆரம்பிச்சுப் பாட்டுக்கச்சேரியோடு நடக்கும். இங்கே வந்த புதுசில் ஒரு சில வருஷங்கள் போனதோடு சரி. இப்பெல்லாம்  அந்தப் பாட்டும், கூட்டமும் ரசிக்கறதில்லை.

இன்னும் நேரம் இருக்குக் கிளம்பிப்போக. புதுவருஷத்துக்கு நம்ம ஆனந்த அத்திக்கு புது ட்ரெஸ் போட்டேன். கொஞ்சம் அலங்காரமும் ஆச்சு.  'பெரியவர்' வந்து பார்த்தார் :-)  புதுசா ஒன்னு வந்துறக்கூடாதே........
நேரம் ஆக ஆக....ராத்ரி புதுவருஷத்தை வரவேற்கும் கொண்டாட்டத்துக்குப் போகணுமா....... களைப்பா இருக்குன்னு நம்ம ப்ளானை மாத்திக்கிட்டோம்.  வாணவேடிக்கை பார்க்கப் போகப்போறதில்லை..... ராத்ரி பனிரெண்டு மணிக்கு ( உண்மையில் அப்போ பதினொரு மணிதான். இங்கே டே லைட் ஸேவிங்க்ஸ் காலம் ) சாமி நமஸ்காரம் பண்ணிட்டு, எல்லோருக்கும் (!) ஹேப்பி நியூ இயர் சொல்லிட்டுத் தூங்கியாச்சு.

நம்ம பயணம் என்பது ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்ததும் முடிவடையாது....  அந்தநாள் முடியும்வரை நீடிக்கும் :-)   முக்கியமா  செல்லம்  கேட்டரியில் இருந்து திரும்பினால்தான் அவன் பயணமும் முடியும் :-)

அதான் சொல்றோமே   பயணங்கள் முடிவதில்லைன்னு !

வழக்கத்துக்கு மாறாக, நமக்குப்பின்னாலேயே இந்த கொரோனா துரத்திக்கிட்டு வருது என்ற சமாச்சாரம் தெரியாமலேயே.....  டிசம்பர் முப்பத்தியொன்னாம் தேதி  முற்பகல்  இங்கே வந்து இறங்கியிருக்கோம்.  2020 ஆவது வருஷம்  நல்ல நேரத்தில் பொறக்கலை போல....
உலகத்தையே ஆட்டிவச்சுக்கிட்டுப் பேயாட்டம் போடுது....  ப்ச்....  பார்க்கலாம்....  எப்போ அடங்குதுன்னு....


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்! 

PINகுறிப்பு :  இந்த வருஷம் ஏதும் பயணங்கள் இருக்க வாய்ப்பில்லை.  விண்டர் எஸ்கேப் என்னும் வகையில் அலாஸ்காப் பயணம் ஒன்னு கைக்கெட்டும் தூரத்தில் வந்தது. ஏற்பாடுகளும் ஆரம்பிச்சோம். கொரோனா அதன் வாயில் மண் போட்டுருச்சு.  அதே போல் உள்நாட்டுப் பயணம் ஒன்றையும்  லாக்டௌன் காரணம் ரத்து செஞ்சோம். இனி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை  வெளிநாட்டுப் பயணம் போகப்போறதில்லைன்னு  'ஒருமனசா' முடிவு செஞ்சுருக்கோம்.

பார்க்கலாம்....
பொறுமையாக தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்! 


Monday, June 22, 2020

நகை எத்தனை பவுன் வாங்கலாமுன்னு இன்னும் தீர்மானிக்கலை..... (பயணத்தொடர் 2020 பகுதி 67)

உலகப்படத்துலே பொதுவாப் பார்த்தீங்கன்னா....  சின்னதா ஒரு முந்திரிப்பருப்பை ரெண்டா ஒடைச்சு வச்சதுபோல் இருக்கும் நாடு நியூஸிலாந்து. இவ்ளோ சின்ன நாட்டின் பரப்பில், ஒரு  371.477லில் ஒரு பாகம்தான் சிங்கை.  இதையும் உலகப்படத்தில் பார்த்தால்  மலேசியா என்னும் பெரிய நாட்டின் வாலில் ஒட்டிக்கிட்டு இருக்கும் புள்ளிதான் தெரியும்.
இத்துனூண்டு நாட்டில் விமான நிலையத்துக்கு மட்டுமே நாட்டின் பாதி இடத்தை ஒதுக்கிட்டாங்களோன்னு தோணும்!  பழைய ஏர்பேஸ் (ரெண்டாம் உலகப்போர் சமயம் ) இருந்த இடத்தையும், தொட்டடுத்த கடல் பகுதிக்குள் இருந்த நிலத்தை மீட்டெடுத்து நிரப்பியும்தான் அவுங்க பாட்டுக்கு ஏர்ப்போர்ட்டை விரிவு பண்ணிக்கிட்டே போறாங்க.
சாங்கி விமான நிலையத்தைக் கட்டி எழுப்பிப் பயன்படுத்தத் தொடங்கியது 1981 இல்தானாம்.  அட!  என்னால் நம்பவே முடியலை.   நாம் இந்தியாவை விட்டு வந்தது 1982.  அப்போ ஹாங்காங் வழி.  சாங்கின்னதும் மனசு கொசுவத்தி ஏத்திருச்சு. வெளிநாட்டுக்கு வந்த மூணாம் வருஷம் இந்தியாவுக்கு லீவில் போறோம்.  அப்போ மகள்  17 மாசக்குழந்தை.  முதல்முறையா ஊருக்குப் போறதால், வரும் விவரத்தை  தண்டோரா போட்டுச் சொல்லியாச்சு.  அப்பெல்லாம்  கடிதம் எழுதறதுதான் ஒரே வழி. சொந்தமும், பந்தமும்  அவுங்களுக்கு வேண்டிய (!) சாமான்கள் லிஸ்ட் அனுப்பிட்டாங்க . கூடவே ஒரு வரியும்.....  'நீங்க வாங்கிட்டு வாங்க. நாங்க  பணம் தர்றோம்'. 

 நாங்களும் ஓடி ஓடி வாங்கி மூட்டை கட்டிக்கிட்டு, இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜுக்குப் பணம் கட்டும் மும்முரத்தில் இருக்கோம். இவ்ளோ ஆகுமுன்னு தெரியாததால்  நம்மவர் கொஞ்சம் பயந்துட்டார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் அப்போ வெறும் இருவது கிலோதான் ஒரு ஆளுக்கு அனுமதி.  சிங்கப்பூர்  டாலரில்தான்  பணம் கட்டணும் என்பதால்....  சிங்கப்பூர் டாலர்  மாத்திக்கும் கவுன்டரில்  நிக்கிறேன்.  அமெரிக்கன் டாலரைக் கொடுத்துட்டு, சிங்கைப்பணத்தை வாங்கக் கைநீட்டும் சமயம்தான் சம்பவம் நடந்தது. என் இடுப்பில் இருந்து இறங்கிக் காலாண்டை விளையாடிக்கிட்டே இருந்த  குழந்தை ஓடிப்போயிட்டாள். நான்   என்ன செய்யறதுன்னு தெரியாமல் 'ஐயோ  புள்ளை'ன்னு எல்லாத்தையும் கவுன்ட்டரிலேயே விட்டுட்டு, மகள் பின்னாலேயே துரத்திக்கிட்டு ஓடுறேன். 'நம்மவர்' பணம் கட்டும் வரிசையில் நிக்கறார். இவருக்குப்பின்  வரிசை அனுமார் வால் போல் நீண்டு போகுது. கீழே போகும் படிகள் கிட்டே நின்னு அங்கே இருந்த   நூல் வழியாக் கீழிறங்கும் வாட்டர் பௌன்டெய்னை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தவளை ஒருவழியாப் பிடிச்சு இடுப்பில் வச்சுக்கிட்டுக் கவுன்ட்டருக்குத் திரும்பி வந்தால் , பாஸ்போர்ட், கைப்பை, காசு எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டு கவுன்ட்டரில் இருந்த நபர் என்னைத் திட்டினார். 'யாராவது எடுத்துக்கிட்டு ஓடியிருந்தால் என்ன ஆகி இருக்குமுன்னு...'   அதைக் கேட்டுக்கிட்டு, நம்மவர் நிக்கும் வரிசைக்குப் போனால் அங்கேயும் நல்லாத் திட்டு கிடைச்சது.  காசைக் கொண்டு வந்து கொடுத்துட்டுப் புள்ளையைத் தேடிப்போயிருக்கணுமாம். எங்கே போயிடப்போறாள்னு.....  நல்ல கூத்து போங்க.....  நல்லவேளை... அப்போ ஒரே ஒரு டெர்மினல்தான்....
மேலே இருக்கும் மூன்று படங்களும் கூகுளார் அருளியவை. நன்றி !

இந்த ரெண்டாவது  டெர்மினல் வந்தது  முதலுக்கு அப்புறம் ஒன்பது வருஷம் கழிச்சுதான். நியூஸி ஃப்ளைட் ரெண்டாவது டெர்மினல் என்பதால்  நமக்கு நல்லாவே பழகிப்போச்சு.  இதுக்கப்புறம் மூணாவது வர்றதுக்கே  18 வருஷமாயிருச்சு.  நியூஸி ஃப்ளைட்டை மூணாவதுக்கு மாத்திட்டாங்க. இப்படியே நாலு டெர்மினல் வரை ஒன்னொன்னாக் கட்டி, இந்த 38 வருஷத்துலே  'நகை'யையும் கட்டி முடிச்சுட்டாங்க. அஞ்சு வருஷ ப்ராஜெக்ட் இது.  திறந்து வச்சு இப்பதான் ஒரு எட்டு மாசமாகி இருக்கு. (17 ஏப்ரல் 2019 திறப்பு விழா )  அஞ்சாவது டெர்மினல் ஒன்னும் கட்ட ஆரம்பிச்சதாக் கேள்வி !
முழுக்க முழுக்கக் கடைகளும், வேடிக்கை விநோதங்களுமா ப்ரமாண்டமா இருக்கு நகை என்னும்  JEWEL !  உள்நாட்டு மக்களுக்கு இதுக்குள்ளே வந்து போக ஒரு கட்டணம் உண்டு. நமக்கில்லை.
Canopy Park Attractions களுக்கு மட்டும் எல்லோரும்  கட்டணம் தனியாகக் கட்டணும்.  ஏழு வகைகள் இப்போதைக்கு.

வெவ்வேற பேக்கேஜுன்னு நாலு வச்சுருக்காங்க. 'ஏழை'யும் அனுபவிக்க  எழுபத்தியொரு சிங்கை டாலர். இதில்லாம ஒரு பாட்டுக்கச்சேரி வேற நடக்குது. அதுக்குத் தனிக் கட்டணம்.

சரி வாங்க.....உள்ளே போய்ப் பார்க்கலாம். வாசலுக்குள் நுழையும்போதே பெரிய க்றிஸ்மஸ் மரம் அலங்காரத்துடன் ஜொலிக்குது. பின்புலத்தில் 'ஹோ' சப்தத்துடன்  நீர்வீழ்ச்சி !    உலகிலேயே  பெரிய இன்டோர் பௌன்டெய்ன் இதுதானாம்.  நாப்பது மீட்டர் உசரம் ! 

சுத்திவர நாலு மாடி  உசரத்துக்குக் காடு !

மொத்தம் பதினொரு மாடிகள். நமக்கு மேலே அஞ்சும், கீழே அஞ்சுமா....!  கீழே மொத்தமும் கார் பார்க்கிங்தானாம். 2500 வண்டிகள் நிறுத்தலாமாம். மேலே போக   எஸ்கலேட்டர் அங்கங்கே....  ஒவ்வொரு லெவலா ஏறிப்போய்ப் பார்த்துக்கிட்டே  Canopy Park  போயிட்டோம்.




 இங்கேதான்  அந்த  Mirror Maze, Hedge Maze,  Sky Net walking, Bouncing  இதெல்லாம் இருக்கு.  எதாவது ஒரு விநோதம் போகலாமுன்னா  கையில்  கேபின் பேக்ஸ் இருக்கு. கீழ்தளத்தில்  வச்சுட்டுக்கூட வந்துருக்கலாம்.  பெரிய பெட்டிகள் இல்லையேன்ற மெத்தனம். அதுவுமில்லாம....  கையில் அத்தி இருக்கார்! நான் அவரை விட்டுப் பிரிவதாக இல்லை.


'நகை'க்கான தீம் காடுதான் போல..... எங்கே பார்த்தாலும்  செடிகளும், சின்ன மரங்களுமா உள் அலங்காரம் அட்டகாசம் போங்க!

 பெரிய காளான் டிஸைனில் கட்டி இருக்காங்க. இங்கிருந்து மத்த மூணு டெர்மினல்களுக்குப் போக ஸ்கை ட்ரெயின்  இருக்கு.  இந்த ஜூவெல் இருப்பதே டெர்மினல் ஒன்னுக்குச் சமீபம்தான்.  மற்றபடி  ரெண்டாம்  டெர்மினலுக்கு பாலம் மூலம் நடந்தும் போகலாம். கால் வலின்னா ரெண்டு பக்கம் முழுசும் போட்டுருக்கும் ட்ராவலேட்டரில் போகலாம். போனோம்.





நகை பார்க்க வந்துட்டு ஒன்னுமே வாங்காமல் போன கஞ்சர்கள் நாங்களாதான் இருப்போம். ஏராளமான கடைகள் இருந்தாலும், நமக்கு 'வேண்டியதாக' ஒன்னும் இல்லை.  என்ன ஒன்னு.....  எங்களோடு சேர்ந்து  அத்திவரதரும் நகையைச் சுத்திப் பார்த்துட்டார்.  எனக்கு டெர்மினல் ரெண்டில் ஒரு கடைக்குப் போகணும்.

தொடரும்......  :-)