Monday, February 28, 2022

என்ன கவி பாடினாலும்.............

ஆச்சு இன்றைக்கு ஏழாம்நாள் !  கோலமும் போட்டு, ஆல்மண்ட் ரவா லாடும் செய்தேன்.! 

வழக்கமா நம்ம வீட்டுக் கொலுவுக்கு வர்ற தோழிதான்,  நாம் சொன்ன நாளில் வரமுடியாமல் போச்சுன்னு இன்றைக்கு வர்றாங்க.  காலை பதினொரு மணிக்குன்னு சொன்னபடி  வந்தாங்க.  வீரா & அன்புன்னு ரெண்டு குட்டீஸ்   வேஷ்டி கட்டிக்கிட்டு !!!   நமக்கு நல்ல பழக்கம் உள்ள குடும்பம் என்றபடியால்  நம்மவரோடு ஒட்டிக்கிட்டாங்க. 
ஃபோட்டோபாய்ன்ட்டாக  இருக்குமிடம்தான் எல்லோருக்கும் பிடிச்ச இடமும் கூட :-)
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை.... அடடா... என்ன அருமையான பாட்டு !  அயனம்பட்டி ஆதிசேஷைய்யர் எழுதிய பாட்டு இது. ஆனால் பாட்டைக்கேட்டவுடன் எழுதியவர் பெயர் நினைவுக்கு வராது..... பாடிப்பாடி பிரபலமாக்கியவர் பெயர்தான் டக் னு மனசில் வந்து நிக்கும். அதிலும் நம்மவர்  இந்தப் பாடகரின்  விசிறி !  கோவில் திருவிழாக் கச்சேரின்னா..... அவ்ளோதான்.....  ராத்ரி தொடங்கி விடியும்வரை  ஏழெட்டுமணி நேரம் கூட அசராமல் பாடுவார் இவர்.  முருகன் பாட்டுன்னா போதும்.... வெல்லம்.  மருதமலை மாமணியே.... முருகைய்யா....   கேட்டு மயங்காதவர்கள் யாராவது இருக்காங்களா என்ன ? 
'நம்மவரின்'  சிறுவயதில்  வீட்டாண்டை இருக்கும் முருகன் கோவில் திருவிழாவில்  இவர் பாடுனதை இப்பவும் ரசிச்சுச் சொல்லுவார்.  'நாதர்முடி மேலிருக்கும்..'  பாட்டுலே  ஆடு பாம்பே, நெளிந்தாடு பாம்பே...  வளைஞ்சு வளைஞ்சு பாடுவாராம் !  இப்பவும் மதுரை சோமுதான் நம்மவரின் ஃபேவரிட் !

தோழி, கொலுவுக்கு முன் அமர்ந்து பாட ஆரம்பிச்சதும்  சபையோர் வந்து உக்கார்ந்தாங்க. நானும் ஒரு சின்ன வீடியோ க்ளிப் எடுத்தேன். 

 ஃபேஸ்புக்கிலேயும் போட்டுருந்தேன். இங்கே ப்ளொக்ஸ்பாட்டில் என்னவோ  எந்த லிங்க் கொடுத்தாலும்  வேலை செய்யமாட்டேங்குது. அதன் சுட்டியை இங்கே போட்டுருக்கேன்.  விருப்பம் இருந்தால் பாருங்களேன் ! 

https://www.facebook.com/1309695969/videos/568940787665777/

இவுங்க ஒரு கலைக்குடும்பத்தின் அங்கம். இங்கே நம்மூரில் பரதநாட்டியம், பாட்டு எல்லாம் சொல்லித்தரும் பள்ளி நடத்தறாங்க. தாயார் கலைமாமணி. கொள்ளுப்பாட்டியின் பெயர்தான் இவுங்களுக்கும்.  பவித்ரா 'மதுரம்'. மதுரம் என்றதும் மனசில் மணி அடிச்சதோ ? எனக்கு அடிச்சது :-)


இன்றைக்குக் காலையில் எனக்கொரு சேதி, இன்பாக்ஸில் வந்தது. உள்ளூர் மருத்துவர். நம்ம தோழிதான். "குழந்தைகளுக்குக் கொலுவைக் காட்ட ஆசை. வரலாமா?"  வாங்களேன்னேன்.  மாலை நேரம்  பரவாயில்லையா ?   'இல்லை. எங்களுக்கு யோகா வகுப்புக்குப் போகணும்.  காலை வேளை பரவாயில்லை'ன்னதும்,  ஒரு மணி நேரம் டைம் கொடுங்க. பிள்ளைகளை தயார் செய்து கூட்டி வர்றேன். நோ ஒர்ரீஸ். பகல் 12 ன்னு முடிவாச்சு.
பவித்ரா  இருக்கும்போதே அவுங்களும் வந்துட்டாங்க.  ஸ்நேஹாவே (மருத்துவர்)பவித்ராவின் மாணவிதானாம் !  மகளும் அங்கேயே குழந்தைகள் பிரிவில் நடனம் பயில்கிறாள்.  ஆஹா ஆஹா....

நடனமும் பாட்டுமா நம்ம கொலுவில்.... சூப்பர்தான் போங்க. 

https://www.facebook.com/1309695969/videos/236550801838152/

https://www.facebook.com/gopal.tulsi/posts/10221193363686229



இப்பெல்லாம் ரொம்ப வேலை செய்ய முடியலைன்னு உள்ளுர் இண்டியன் கடைகளில் இருந்து சில தீனிகள் வாங்கி வச்சதால், தினப்படி செய்யும் பிரஸாதங்களோடு விளம்பக் கொஞ்சம் சுலபமாத்தான் இருக்கு.   இந்த முறை 'நம்மவர்' பேச்சைக் கேட்டுட்டேன் :-)



Friday, February 25, 2022

What a small world :-)

நேற்று தோழி வந்து போனபிறகு நாமும் ஒரு கொலுவிஸிட்டுக்குப் போய் வந்தோம்.  ஆக்லாந்தில் இருந்து நம்மூருக்கு இடம் பெயர்ந்த குடும்பம்.  அழகான கொலு அங்கே ! சின்னக்குழந்தைகள்  இருக்கும் வீடானதால்  பிள்ளைகளுக்கு ஒரு சின்னக்குட்டிக்கொலு வேற !  நம்ம வீட்டுக்கும் வரச் சொல்லி அழைச்சுட்டு வந்திருந்தோம்.




ஆறாவது நாள்  நம்ம வீட்டுக்  கொலுவுக்குப் புதுக்கோலமும், நைவேத்யமும்  ஆச்சு. இன்றைக்கு இன்னொரு தோழி வர்றதாக சொன்னாங்க.   அப்புறம் நேற்று நாம் கொலுவிஸிட் போன குடும்பமும்  ஆறு மணிக்கு வரேன்னு ஃபோன் பண்ணாங்க.  



ஊஞ்சலைப் பார்த்ததும் ஒரே குஷி !   குழந்தைகளைப் பார்த்ததும் ரஜ்ஜுவுக்குப் பிடிச்சுப்போச்சுன்னு நினைக்கிறேன். பிள்ளைகள் ஆசையாக் கிட்டே போனதும் ஓடாமல் இருந்தான்.










நம்ம பூனை ஜோஸியத்தின்படி பாஸிடிவ் வேவ்ஸ். தோழி, அருமையாப் பாடினாங்க.  ஆக்லாந்தில் சிலருக்குப் பாட்டு சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருந்தாங்களாம். புதுசா இப்ப நம்மூருக்கு வந்துட்டதால்  பிள்ளைகளுக்கான பரதநாட்டிய வகுப்புகள் நடக்குதுன்ற விவரம் சொன்னேன். நம்ம வித்யா சுப்ரமணியம் அவர்கள் அனுப்பித்தந்த  ஆதிகேசவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க. 
அப்பதான்   எழுத்தாளர் வித்யா  சுப்ரமணியம் வரைஞ்சதுன்னு  சொன்னேனா.... அவ்ளோதான்.... 'ஆஹா.... அவுங்க கதைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இப்பக்கூட அவுங்க நாவல்தான் வாசிப்பில்'னாங்க. அவுங்க ஆதர்ச எழுத்தாளர் படமும் வரைவாங்கன்றது  இதுவரை தெரியாதாம்.  உடனே அவுங்க  அம்மாவுக்கும் வீடியோ கால் செஞ்சு எல்லா விவரமும் சொல்லி, ஆதிகேசவனை அப்படியே லைவாக் காமிச்சாங்க.  எனக்குமே பெருமையாத்தான் இருந்தது.  நம்ம வித்யா அவர்களுக்கு நல்லாப் புரை ஏறி இருக்கணும் !




நேரமாச்சுன்னு அவுங்க கிளம்பும் சமயம் இன்னொரு தோழி வந்தாங்க.  வேலைநாளா இருப்பதால் நேரம் அப்படியிப்படின்னு தாமதமாயிடறதுதான். என்ன செய்வது சொல்லுங்க ? இங்கே இருந்து இதே தோழிவீட்டுக்குப் போறதாகத்தான் ப்ளானாம்.  எல்லோருக்கும் எல்லோரையும் தெரிஞ்சுருக்கு. சின்ன உலகம் !



Wednesday, February 23, 2022

கொலு விஸிட் & விஸிட்டர்ஸ்

இந்த ஒன்பது நாட்களுக்குப் 'போட்ட' கோலங்களும், செய்த நைவேத்யங்களும் என்னன்னு பார்க்கலாமா ?  ஒன்னும் ப்ரமாதமில்லை, ரொம்பவும் மெனெக்கடவும் இல்லை கேட்டோ ! பெரிய திட்டங்களும் இல்லை. காலையில் மனசுக்குத் தோணும் வகைதான். இருக்கும் ரெண்டுபேருக்கு என்னன்னு செய்வது ? 
கொலு பார்க்க யாராவது வர்றதா இருந்தால்தான்  சுண்டலே ! 
நவராத்ரி ரெண்டாம் நாள்  காலையில் நம்மவருக்குக் கண் செக்கப். அதுக்கு ஓடணும் என்பதால் மினி இட்லியும் நெய்ச்சக்கரையுமா  ஆச்சு. ( இந்த நெய்ச்சக்கரை எங்க அப்பாவின் ஃபேவரிட்! )

நம்ம மல்லிச்செடியிலும் பூக்களின் வருகை.

மூணாம்நாள் ..... இப்படி.... ஒரு சுண்டலுடன் நைவேத்யம். தொட்டுக்க ஜாங்கிரி :-)
இன்றைக்கு  நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் நவராத்ரி விழா !  வெலிங்டனில் இருந்து பண்டிட் வர்றார். கோவிலில் விளக்கேற்றி ஆரம்பிச்சு வைக்கும் பாக்யம் கிடைச்சது.








 அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாம் அமர்க்களமா நடந்தது. பெண்கள் சேர்ந்து குங்கும அர்ச்சனை செய்தோம்.  

நாலாம்நாள் மாம்பழக் கேஸரி நைவேத்யம். இன்றைக்கு மாலை நம்ம யோகா குடும்பம் வந்தாங்க. 





இன்னொரு நண்பர்குழுவும் வர்றதா இருந்தது.  சிலபல காரணங்களால் வரலை. ஒரு தோழி மட்டும் வந்துட்டுப் போனாங்க.
சாயங்காலம் விஸிட் வர சிலருக்கு முடியலை. பகலில் வரலாமான்னு கேட்டவங்களுக்கு  வாங்கன்னு சொன்னேன். சிலருக்குக்  காலையில் வரலாமா?   மத்யானம் வரலாமா ? ன்னு ஒரு குழப்பம்.  நமக்கும் அவுங்க வந்து போகறதை வச்சு,  மற்ற வேலைகள், விஸிட் எல்லாம் நடத்திக்கணும்.  இவ்வளவு தூரத்தில் இருக்கோம்.  வர்ற ஆசைப்படறவங்களை விடலாமோ ? 

அஞ்சாம்நாள் மூணு செட் நண்பர்கள் வருகை, வெவ்வேற நேரங்களில். 









சாயங்காலம் ' அம்மன்' வருகை !  மனநிறைவா இருந்தது ! 

https://www.facebook.com/1309695969/videos/1207663929713259/