Monday, May 30, 2022

கிணத்தோடு முடியும் சமாச்சாரமா ?

அந்தப் பாட்டிக்கு எப்பவும் எதாவது பின்னிக்கிட்டே இருக்கணும். குளிர் ஊர் இல்லையா....... குடும்பத்தில் வேற புதுப்புது புள்ளைகள் பிறந்துக்கிட்டுத்தானே இருக்கு. ஏற்கெனவே பிறந்த பிள்ளைகளும்  வளர்ந்துக்கிட்டுத்தானே இருக்கு !  பேரன் பேத்திகளுக்குக் கம்பளி ஆடைகள் பின்னிப்போடறதுதான் வழக்கம்.  இப்பதான் கடைகள் பெருத்துப்போய் எல்லாத்தையும் ரெடிமேடாவே வாங்கிக்கிறக் கலாச்சாரம் வந்துருச்சே....
கம்பளி நூல் பெரிய அளவில் ( Wool Hank ) வாங்கி, அதைப் பிரிச்சுச் சின்னச்சின்ன உருண்டைகளாச் சுத்தி வச்சுக்கிட்டால்  பின்னும் போது எளிதாக இருக்கும்.  மொத்தத்தையும் தூக்கிக்கிட்டு அலைய வேணாம்.  சரிதானே ?  அப்ப இதில்  தாத்தாவுக்கு வேலை ஒன்னும் இல்லையா ? இருக்கே.... அந்தப் பெரிய நூல்பொதியைத் தாத்தா கையிலே மாட்டி வச்சுட்டு, அதுலே இருந்து நூலை இழுத்துப் பாட்டி சின்ன உருண்டைகளா  நூல் சுத்தி  எடுப்பாங்க. 


ஒரு கடையில் இந்த ஜோடியைப் பார்த்துட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.  காலம் மாறிகிட்டே வருதே....   இன்னும் பாட்டி பின்னியே ஆகணுமா ?  அப்படிக் கஷ்டப்பட்டுப் பின்னிக்கொடுத்தாலும் இப்பத்திப் பசங்க போட்டுக்குமுன்னு நினைக்கிறீங்க ?  அதெல்லாம் இப்போ தேவையே இல்லை. பேசாம  வேற வேலையைப் பாருங்கன்னு, ஒரு    Samsung s S23 ultra  வைப் பாட்டிக்கும்,  ஒரு  Samsung Galaxy Tab S7 FE ஐ தாத்தாவுக்கும் வாங்கிக் கொடுத்தாச்சு.  இப்பப்பாருங்க... அவுங்க உலகமே தனி !  
சரி, கிணத்துக்கு வருவோம்.  களத்துமேட்டில்  இருக்கும் ஐயனார் கோவிலாண்டையே  இருந்தால்  நல்லதுன்னு தோணுச்சு.    ரொம்பத்தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் சட்னு தண்ணீர் தென்பட்டது :-)
 தோட்டத்துக்கான கமலைக் கிணறாகவே இருக்கட்டுமுன்னு  தீர்மானம்.   தொழுவத்தில்  இருக்கும் ஜோடி  மாடுகளை ஓட்டிவந்தேன். பரவாயில்லாமல் இருக்குன்னாலும்....  ஒரு காளையும் ஒரு பசுவுமா இருக்கே... ப்ச்.  

 தொழுவத்தில் இருக்கும் இன்னொரு காளை, சின்னது. பெருசும் சின்னதுமா இருந்தால் சீராக தண்ணீர் இழுக்க வராதுல்லை ?  பண்ணையாள் ரங்கன் சொன்னதும்  இதேதான்.
தண்ணீர்  இழுக்கறாங்கன்னதும்  குடங்களைத் தூக்கி வந்து வச்சாங்க பண்ணையாளின்  மனைவி அலமேலு.  ரங்கனும், அலமேலுவும்  நல்லமாதிரி. முகம் சுளிக்காமல்  தோட்டத்தில் எல்லா வேலைகளையும் செஞ்சு நல்லபடி பார்த்துக்கறாங்க. 
சின்னப் பண்ணையார் இங்கேதான் பண்ணை வீட்டில் இருக்காரு. கல்யாணமாகிக் குழந்தை ஒன்னும் இருக்கு.   இந்தச் சின்னப் பண்ணைக்காரர் யாருன்னு இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கணுமே !  அவர் ஒரு மிருகநேசன். ரொம்ப அன்பானவர். 

 இவர் மனைவியும்  தொழுவத்தாண்டை இருக்கும் சின்னக்குடிலில்  உக்கார்ந்து  குழந்தைக்கு மாடுகளைக் காமிச்சு  விளையாட்டுக் காட்டுவார்.  அந்தப்புள்ளை ரொம்பச் செல்லம்..... தாய்மடியை விட்டு இறங்கவே இறங்காது.  
மாடு பிடிக்கலாமுன்னு 'சந்தை'க்குப் போனோம்.   நமக்குன்னே ஒரு கடை திறந்துருக்காங்க இங்கே !  
  அங்கே போனதும்தான் எப்பவும் கற்பனை ஊத்துப் பொங்கிப்பொங்கி வரும் எனக்கு:-)   ஒத்தைமாடு வாங்கப்போனவ எப்படியோ ஏழு மாடுகளை வாங்கியாந்தேன்.

 பத்துமாட்டுக்குச் சொந்தக்காரர் ஆனார்  பண்ணையார். 
மாடுகள் வந்தாட்டு,  வேலைதராமல் சும்மா வச்சுருக்க முடியுமோ ? 

 வண்டி ஒன்னு செஞ்சேன். 
பொங்கல் சமயம் வேற....   தோட்டத்துக் கரும்புகளை உழவர் சந்தையில் கொண்டுபோய் தானே வித்துட்டு வரேன்னு கிளம்புனார் பண்ணையார்.  பண்ணையாரம்மாவும் கைக்குழந்தையோடு வண்டியில் ஏறுனாங்க. டவுனில் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிக்கணுமாம் :-)

இருட்டுலே வீட்டுக்குத் திரும்பும்போது விளக்கில்லேன்னா எப்படின்னு ஒரு லாந்தர் தயாராச்சு.  ஆனாலும்  ரோடில் எதிரே வர்ற வண்டிக்கு, நம்ம வண்டி வருதுன்னு காமிக்க ஹெட்லைட்  வேணுமே....  உண்மையான ஹெட் லைட்கள் காளைக்கு நெத்திச்சுட்டாச்சு !  

இப்படித்தான் சிறுகச்சிறுக  அலங்காரங்கள் வளர்ந்துக்கிட்டே போயிருச்சு.  பொங்கலன்னிக்குப் பெரிய பண்ணையாரும், பண்ணையாரம்மாவும்  அட்டகாசமான பொட்டிவண்டியில் வருவாங்க. கூடவே அவுங்க வீட்டுச் செல்லம் சிண்ட்டுவும் வரும். பண்ணையாரம்மா ரொம்ப நல்லவங்க.  பண்ணையாளுங்களுக்கு நல்லதாப் பொங்கல் பரிசுகள் கொண்டுவந்து தருவாங்க. 
அன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் நம்ம ரங்கனும், அலமேலுவும்  அடுப்பு,பொங்கப்பானை எல்லாம் தயாரா  வச்சுருப்பாங்க.   பண்ணையாரம்மா  வந்ததும் பொங்கல்  வச்சுப் பூஜை செய்வாங்க.  


 இந்த அலங்காரங்கள் எல்லாம் வழக்கமா நம்ம வீட்டு முன்னறையில் வச்சுருவோம்.   பண்டிகைக்குத் தகுந்தாப்லெ செஞ்சுக்கணும்.  மதுரை மீனாக்ஷி, புள்ளையார், ஆஞ்சின்னு ஒரு Bபேக்ட்ராப்.  
இதெல்லாம் ஒரே நாளில் செய்யும் வேலை இல்லை. எப்படியும் ஒரு ரெண்டு வாரம் எடுக்கும் என்பதால்  கிறிஸ்மஸ் விழா முடிஞ்சவுடனே  ஆரம்பிச்சுறணும்.

ஆனால் ஒரு விஷயம் சொல்லணும்... இப்படி எதாவது  கைவேலைகள் செய்ய ஆரம்பிச்சால்....  வீட்டில் குப்பை சேர்வதைத் தவிர்க்க முடியாது. எந்தப் பொருளைப் பார்த்தாலும்  'குச் காம் கோ ஆயேகா' தான். இதனாலேயே வீடு கலகலன்னு சண்டையும் சச்சரவுமாக இருக்கும் :-)

"இங்கே ஒரு  சின்ன அட்டைத்துண்டு  வச்சுருந்தேனே.... யாரு எடுத்தா ?"

" இப்பதாம்மா  எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டேன்... "

"  இந்த பாருங்க நான் சொல்றவரைக்கும் இந்த இடத்தில்  நீங்க கைவைக்கக்கூடாது. குப்பைன்னு நீங்களே நினைச்சுக்கறதா? "

ஏற்கெனவே அர்பன் விவசாயம் செய்யறேன்னு விதை சேமிப்பு சின்னச் சின்ன டப்பாக்களில் போட்டு வச்சும், விதைகளைக் காயவைக்கத் தட்டுகளில் போட்டுக்  கன்ஸர்வேட்டரியில்  பரத்தி இருப்பதும்  போதாதுன்னு, இப்ப வீட்டுக்குள்ளே வேற  குப்பை......   போகட்டும்.  



 ஓடியோடி இன்ஸ்பெக்ஷன் செஞ்சே  களைப்பாகிருச்சாம்!
 

Friday, May 27, 2022

பொட்டிகள் தினம்

இங்கிலாந்திலே பெரிய ப்ரபுக்கள் வீட்டில் க்றிஸ்மஸ்  தினத்துலே உற்றார் உறவினர் நண்பர்களுக்காக  அட்டகாசமான  விருந்து (டின்னர்) நடக்குமாம். விதவிதமான கேக் வகைகள் செஞ்சுக்கறதுதான்.  சாப்புடறமோ இல்லையோ விருந்தினர் முன்னே அவரவர்கள் பவிஷூ காமிச்சுக்க வேணுமே !  
முதல்நாள் இரவு விருந்தில்  மீந்துபோன  உணவுப்பொருட்களையெல்லாம்,  அட்டைப்பொட்டிகளில் போட்டு, அநாதாலயத்துக்கு  அனுப்பிருவாங்க.  இதுக்காவே ஒருநாள் லீவு விடுவாங்கன்னா பாருங்க.  எல்லாம் விருந்தில் அளவிலாத மது அருந்திட்டு, நடனம் ஆடித் தளர்ந்துபோய்  மறுநாள் காலையில் எழுந்திரிக்க முடியாமப் படுக்கையில் கிடப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் லீவுன்னு எனக்குத் தோணுது ! பொட்டிகளில் போட்டு அனுப்பும் வேலையையை எல்லாம்  வேலையாட்கள் செய்வாங்க. Bபாக்ஸில் போட்டு அனுப்பறதால் இதுக்கு பாக்ஸிங் டே ( Boxing Day )ன்னே  பெயர் வந்துருக்கு.  காலப்போக்கில்  தருமம் பண்ணறது குறைஞ்சுட்டாலும்.... பாக்ஸிங் டே லீவை மட்டும்  இன்னும் தொடர்ந்துக்கிட்டே இருக்காங்க. 
இப்ப இந்த நாளை வியாபார நிறுவனங்களில் தள்ளுபடி விற்பனைக்காக  ஒதுக்கியாச்சு. நம்ம அட்சயத்திருதியை மாதிரின்னு வச்சுக்குங்க.  தானம் தருமத்துக்கு உண்டான பண்டிகையைக் கடைசியில் தங்கம் வாங்கிக்கும் விழாவா ஆக்கிவைக்கலை ? 

 இத்தனைநாள் வரை பண்டிகைக்காக புதுப்புது ஐட்டங்கள் ஏகப்பட்ட விலையில் வித்துக்கிட்டு இருந்தாங்களே...  அதெல்லாம் அரைவிலைக்கு வந்துரும்.  அதுவும் இந்த ஸேல் ஒருநாளோடு போகாது.  அப்படியே புதுவருஷம் வரை இழுத்துக்கிட்டே போகும்.  பத்துடாலர்னு  இருந்த பொருட்கள் எல்லாம்  பாக்ஸிங் டேயில் அஞ்சு டாலருக்கு வித்து...... அப்படியே டிசம்பர் கடைசிநாளில் 99 சென்ட்டுக்கு வந்துரும். என்ன ஒன்னு கடைசிநாள் வரை காத்திருந்தால்  நமக்கு வேணுமுன்னு நினைச்சவை எல்லாம் பலசமயம் வித்தே போயிருக்கும். 

இதுலே ஒரு வேடிக்கை என்னன்னா....  டிசம்பர் 24, சாயங்காலம் 6 மணியோடு கடைகள் எல்லாம் மூடிருவாங்க. மறுநாள் பண்டிகை தினம்....  ஊரே மூடிக்கிடக்கும். டிவியில் கூட கமர்ஸியல் விளம்பரங்கள் வராது. அதுக்கு அடுத்த பாக்ஸிங் தினத்தில் ஸேல் ஆரம்பிச்சுரும். இதுலே பெரிய ஐட்டங்கள் என்னென்னெல்லாம்  எத்தனை சதமானக் கழிவில் வரப்போகுதுன்னு டிசம்பர் 24 ஆம்தேதியே அறிவிப்பும் வந்துரும். தப்பித்தவறி  அன்றைக்குக் கடைக்குப்போக நினைச்சவனும்  அன்றையத் தேவைக்கு  இல்லாதவைன்னா பாக்ஸிங் தினத்துக்குன்னு தள்ளிப்போட்டுருவான் :-)

அதனால் எல்லோரும் காத்துநிக்கும் தினமா இது அமைஞ்சுருது. பொழுது விடிஞ்சவுடன்  கடைகண்ணிக்கு ஓடும் சனம்! நான் பொதுவா வேடிக்கை பார்க்கப்போவேன். அலங்காரச்சாமான்கள்  பார்த்துவச்சுக்குவேன். கடைசிநாள் போனால் ரொம்பவே மலிவாக வாங்கியாறலாம்.  இந்த வருஷம் பூச்சாடிகள் கொஞ்சம் பெருசா வேணும் நமக்கு.  ஏகப்பட்ட   லில்லிப்பூங்கொத்துகளை நமக்கு   அன்பளிப்பா கொடுத்துக்கிட்டு இருக்காங்க  ஒரு அண்ணி.
 
நம்ம வீட்டுலே லில்லிச்செடிகள் இருக்குன்னாலும்...   நான்  நம்ம தோட்டத்துப் பூவைப் பறிக்கவே மாட்டேன்.  செடிகளிலேயே விட்டு வைப்பதால் இன்னும் சில நாட்களுக்குக் கண்ணுக்கு விருந்தாக இருக்குமே! ஸ்வாமிக்குப் பூஜை பண்ணும்போதும், 'புஷ்பம் ஸமர்ப்பியாமி'ன்னு தோட்டத்துப்பக்கம் கை காமிச்சால் போதாதா ? அவரே போய்ப் பார்த்து அன்றைக்கு என்ன வகை பிடிக்குமோ அதை எடுத்துப்பார் !

இங்கே ஸேல்னு சொன்னால்.... உண்மையில் நல்ல ஸேல்தான். விலை ஏத்திட்டு, அப்புறம்  குறைப்பதெல்லாம் இல்லை.  வருஷம் முழுக்க எதாவது  கண்டுபிடிச்சு ஸேல் நடக்கும். பாக்ஸிங் தின ஸேல் வருஷக்கடைசிவரை இருக்குமுன்னா.... மறுநாள் முதல் ஒரு வாரம் புதுவருஷ ஸேல், ஃபிப்ரவரி மாசம்  வைட்டாங்கி தினம்,  வாலண்டைன் டே,  மார்ச்சில்  ஈஸ்டர், ஏப்ரலில் ஆன்ஸாக் டே,  மே மாசம் மதர்ஸ் டே, ஜூனில் எங்க மாட்சிமை தாங்கிய மஹாராணி அவர்களின் பொறந்தநாள், இந்த வருஷம் முதல்  மாட்டாரிகின்னு ஒரு மவொரி புதுவருஷப் பண்டிகை ஆரம்பிச்சுருக்கு , அதுக்கான ஸேல்,  அக்டோபரில் லேபர் டே, நவம்பரில் எங்க  மாநிலம் ஷோ டே, டிசம்பரில் க்றிஸ்மஸ்னு ... அது பாட்டுக்குப் போகும். இதுக்கிடையில் ஒவ்வொரு சீஸன் மாறும்போதும், சம்மர், ஆட்டம், விண்ட்டர், ஸ்ப்ரிங்னு ஸேல்கள்,  கடைகளுக்கான பொறந்தநாள் ஸேல்கள் இப்படி....... !  ஆனாலும் இந்த பாக்ஸிங் டே ஸேலுக்கு மக்கள் மத்தியிலே ஒரு நல்ல பெயர் கிடைச்சுருச்சு :-)  விடப்டாது ! நமக்கு ஒரு ப்ரிண்டர் ஆச்சு :-)
ஓசிப்பூக்களுக்கு ஜாடி வாங்கிக்கக் கடைக்குப் போனோம். ஒன்னு போதுமுன்னா ரெண்டா வாங்கித்தந்தார் நம்மவர். உண்மையில்,  கிடைச்ச லில்லி மலர்கள் எல்லாம்  உதிர்ந்தே போயிருச்சு.  அதுக்காக .... பூச்சாடி வாங்காமல் இருக்கலாமோ ?  அடுத்த வருஷம் ஓசிப்பூக்கள் கிடைக்காதா என்ன ? 

அடுத்த பண்டிகைன்னா புதுவருஷம்தான். ரொம்ப மெனெக்கெட வேணாம்.  க்றிஸ்மஸ் அலங்காரங்களை அப்படியே வச்சுடலாம்.  ஒரு வாரமே இடைவெளி என்பதால் ரெண்டும் சேர்த்துத்தான்  இங்கே கொண்டாடுறாங்க. என்ன ஒன்னு.....  கிறிஸ்மஸ் தினத்துக்கு முந்தினநாள்  பிற்பகலில் இருந்து  மால்களில் ஸாண்ட்டா இருக்கமாட்டார்.     
நமக்கும்  அடுத்துவரும் முக்கியமான பண்டிகை பொங்கல் என்பதால் அதுக்குண்டான அலங்காரத்துக்கு இந்த வருஷம் என்னெ செய்யலாமுன்னு யோசிச்சு, முதல்முதலா  ஒரு புதுக்கிணறு வெட்டினேன் !!!! 

மற்றவைகளை 'உக்கார்ந்து ' யோசிக்கணும். 


Wednesday, May 25, 2022

எங்களுக்குத் தனி மரம் :-)

வீடுகளில்  பண்டிகை  அலங்காரத்துக்காக க்றிஸ்மஸ் மரம் வைக்கிறது உங்களுக்கெல்லாம் தெரியும்தானே ? ஊசி இலைக்காடுகள்னு நாம் சின்னப்புள்ளைங்களா இருந்த சமயம் பள்ளிக்கூடத்தில் படிச்சுருக்கோம் இல்லை !  அந்த  Pine   மரம், இல்லைன்னா  அதே இனம் சார்ந்த Fir மரத்தின் கிளைகளை ஊருலகமெங்கும்  பயன்படுத்தினா... எங்க நியூசிக்கு மட்டும் விசேஷ க்றிஸ்மஸ் மரம் இருக்கு!  

Pohutukawa என்ற பெயருள்ள மரம்.  இது டிசம்பர் மாசம்தான் ரத்தச் சிகப்புப் பூக்களுடன்  இருக்கும்.  எங்க ஊரின் கடற்கரை பக்கம் இருக்கும் பேட்டையில்  இந்த மரங்களைத்தான் எல்லா இடங்களிலும் நட்டுவச்சுருக்காங்க. பார்க்கவே அழகுன்னு ஒருநாள் பார்க்கப் போனோம்.  இந்த மரத்தில் மஞ்சள் நிறப்பூக்களும்  வரும் என்பதை அப்பதான் முதல்முறையாப் பார்த்தேன்.  இந்த மரம்  இங்கத்து மவொரி மக்களுக்கு முக்கியமான ஒரு மரமும்  கூட ! 

பண்டிகைக்கு முதல்நாள்  ராத்ரி, எங்க பக்கத்துப்பேட்டையில்  ஒரு தெருவில் விளக்கு அலங்காரம் பார்க்கப்போனோம்.  நாலைஞ்சு வீடுகள் சேர்ந்து அலங்கரிச்சுட்டாங்க.  க்றிஸ்மஸ் லைட் ஷோ !





கீழே படம்: நம்மூட்டு அலங்காரம் :-)
இப்படி அப்படின்னு க்றிஸ்மஸ் தினம் வந்தே வந்துருச்சு.  முந்தி மாதிரி முதல்நாள் நடுராத்ரிக்குச் சர்ச்சுக்குப்போகும் பழக்கம் எல்லாம்  காணாமப்போயிருச்சு.  அதான் நிலநடுக்கம் வந்ததும், எங்கூர் கதீட்ரல் இடிஞ்சு விழுந்துருச்சே.... 






வீட்டாண்டை இருக்கும் சர்ச்சுகளுக்கு ஒரு விஸிட். பண்டிகைநாளும் அதுவுமா.... கோவிலில் யாருமே இல்லை.  ஏகாந்த தரிசனம்தான் ! 
இங்கெல்லாம்  கோவிலில் அலங்காரம் டிசம்பர் முதல் வாரமே  செஞ்சுருவாங்க. ஆனால்  மாட்டுக்கொட்டாயில் புள்ளை மட்டும் இருக்காது.  க்றிஸ்மஸ் ஈவ்  நடுராத்ரி 12 ஆனதும்தான்  புள்ளை பெறக்குறதா ஐதீகம்.  அப்பதான் கொழந்தையைக் கொண்டுவந்து கிடத்துவாங்க.

இன்னொரு சர்ச்சுக்குள்ளே போய் பார்க்கவே இல்லை. நம்ம பேட்டைதான். நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்து பத்துவருஷமாத் திருப்பிக்கட்டக் காசில்லாமல் தவிச்சோம். இத்தனைக்கும் இது  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ரொம்பவே பழைய சர்ச்.  ஏழுவருஷம் திட்டம்போட்டு, 1858 ல் கட்டி இருக்காங்க.
1800 களில் மரணமடந்தவர்களின் கல்லறை இதைச் சுத்தி இருக்கு.  அவ்ளோ பழசு ! எங்கூர் சிட்டிக்கவுன்ஸில் தண்டச்செலவு பண்ண எப்பவும் ரெடியா இருக்குமே தவிர,  இதைப்போன்ற ஹிஸ்ட்டாரிக்கல் சமாச்சாரத்துக்கு  ஒரு பைஸா கொடுக்காது. 

ஒருவழியாப் பணம் சேர்த்து பழுதுபார்த்து,  28, February, 2021 திறப்புவிழா வச்சாங்க. தினம் என்ன வேலை நடக்குதுன்னு  வெளியே போறப்பவும் வர்றப்பவும் பார்த்துக்கிட்டே இருந்தோம். சர்ச்சோடு சேர்த்து ஒரு காஃபி ஷாப் வேறவச்சுருக்காங்க.    சர்ச்சுக்கு வர்ற சனம் காஃபி வாங்கிக்குடிச்சு, சர்ச்சுக்கான வருமானத்தைப் பெருக்குமாம்!  மறுநாள் திறப்பு விழாவுக்குப் போக முடிவும்  பண்ணிட்டோம். அன்னைக்கு ராத்ரி அரசாங்கத்தின் லாக்டௌன் அறிவிப்பு.  விழா கேன்ஸலாகிருச்சு.  அப்புறம் சில மாசங்களுக்குப்பின் லாக்டௌன் போயிருச்சுன்னாலும்.... நமக்கு அங்கே உள்ளே போக வாய்ப்பே கிடைக்கலை.  இத்தனைக்கும் அதுக்கு எதிர்வாடையில் இருக்கும் காய்கறிக்கடைக்கு வாரம் ரெண்டுமுறையாவது போய்வர்றோம்தான்.  ப்ச்....

அதேமி பழமொழி? விடியாமூஞ்சி வேலைக்குப்போனாலும்......  அதேதான்  க்றிஸ்மஸ் தினமாவது போய் வந்துறலாமுன்னு போனால்.... மூடி வச்சுருக்காங்க. போயிட்டுப்போகுது போ....

இடிஞ்சு போன கதீட்ரலை மீண்டும் கட்டி எழுப்பும்வரை தாற்காலிக சர்ச்சுன்னு அட்டைக்கோவில்  ஒன்னு  கார்ட்போர்டுலே கட்டி இருந்தாங்க. அங்கேயும் போய் வரலாமுன்னு போனால்..... அதே பழமொழி !!!! 
கண்ணாடிவழியாப் புள்ளையை எட்டிப்பார்த்துட்டு வந்தோம்.

அட்டைக்கோவில் விவரம் வேணுமுன்னால்  இந்தச் சுட்டிகளில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_17.html

http://thulasidhalam.blogspot.com/2015/

அன்னைக்கு சனிக்கிழமை வேற . வழக்கமாப்போகும் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு மாலை ஆரத்திக்குப்போய் வந்தோம்.
இப்படியாக நம்ம வீட்டு அலங்காரத்தோடு பண்டிகை அமர்க்களமா நடந்தது :-)