Wednesday, April 20, 2022

கொரோனாவும், கோபாலும், பின்னே ஞானும்.........

காலையில் விடுதலைப் பத்திரம் வந்துருச்சு......

 அனுபவங்களால் நிறைந்ததே வாழ்க்கை!  வாழ்க்கை முழுசும் அனுபவம் அனுபவம்னு அடிச்சுக்குவேனே.... அதுலே ஒன்னு இதோ..... நானும் வர்றேன்... என்னையும் அனுபவிச்சுக்கோன்னு சொல்லி இருக்கு!  எனக்குத்தான் காதுலே விழலை !
இந்தக் கொரோனா.... ஊருலகம் எல்லாம் அடிச்சு ஆடிக்கிட்டு இருந்துச்சு பாருங்க.....  அப்பதான் விவரம் ஒன்னுமே தெரியாம 2019 ஆம் வருஷம் டிசம்பர் மாசம் பகல் பத்தரைக்கு, இந்தியப்பயணம் முடிச்சு, இங்கே நியூஸிக்கு வந்து இறங்கினோம். எங்களோடு ஒரு விவிவிவிஐபியும்  நியூஸிக்கு வந்துருந்தார்.  'துல்சி,  நியூஸியில் வேற யாரிடமும்  இருக்கப்போறதில்லை....  உன்கூடவேதான்'ன்னுட்டார் !   மறுநாள் புதுவருஷம் 2020 பிறந்ததும்  இவரை பிரதிஷ்டை பண்ணினதும் மனசெல்லாம் ஒரே பூரிப்பா இருந்தது !

 இனி  ரொம்ப நாளைக்குப் பயணம் என்ற சொல்கூட நம்ம வாழ்க்கையில் இருக்காதுன்றது அப்போ எங்களுக்குத் தெரியாது....

மார்ச் மாசம் யுகாதிப் பண்டிகை வந்தன்னைக்குத்தான்  நியூஸியிலும் கோவிட் தன்னுடைய வேலையைக் காமிக்க ஆரம்பிச்சதுன்னு நாடு முழுக்க லாக்டௌன் ஆரம்பமாச்சு.  இத்தனை அமர்க்களத்திலும்  நியூஸியின் வடக்குத்தீவில் மட்டுமே ஆட்டம். எங்க தெற்குத்தீவுப் பக்கம் தலையை நீட்டலை.  எங்களுக்கு இது மனசமாதானமாக இருந்தாலும்.... லாக்டௌன் மற்ற  அரசு சொல்லும் நியமங்கள் எல்லாத்துக்கும் நாங்களும் கீழ்ப்படிஞ்சு நல்ல குடிமக்களாகவே இருந்தோம். 

2020, 2021 ன்னு ரெண்டு வருஷம் பூராவும்  கீழ்ப்படிஞ்சு படிஞ்சே தரையோடு தரையாக் கிடந்தோம். இதுக்கிடையில் அண்டை நாட்டுலே  இருந்த எங்க மக்களும் பார்டர் தாண்டி வர ஆரம்பிச்சுருந்தாங்க.ஆனால் எல்லாம் வடக்குத்தீவுக்குத்தான்.   இப்படி வந்த ஒருத்தர்  கோவிடின்  புள்ளை, பேரனையும் கையோடு கூட்டி வந்துருக்கார்! அப்போ யாருக்கும் தெரியலை.  அவருடைய  வேண்டாத  லக்கேஜ்  வடக்குத்தீவு முழுசும்  பரவி, கோவிடுக்குக் கொள்ளுப்பேரன் கூட பொறந்துட்டான்.

 வடக்கில் மட்டும்  கோவிட் குடும்பம்   வாழறது சிலபலருக்குப் பொறுக்கலை. எப்படி தெற்குத்தீவு மக்கள் மட்டும் நிம்மதியா இருக்கலாம் ? எங்க சொந்தம் எல்லாம் அங்கே இருக்கு. ரெண்டு வருஷமாப் பார்க்கலை.  ரெண்டு க்றிஸ்மஸ் பண்டிகைகூடப் போயிருச்சு. இனியும் பார்க்காம இருக்க முடியாது..... எங்கள் சொந்தங்களைப் பார்த்தே ஆகணுமுன்னு 'அடம்' பிடிச்சு, அரசை நச்சரிச்சு, நச்சரிச்சு  2022 ஜனவரி 23 முதல்  வந்து போக அனுமதி வாங்கிட்டாங்க.   ஹாலிடேன்னு வந்தவங்க , தெற்குத்தீவு முழுக்கப் பரவலாப் பயணம் வேற !
  
இவுங்க பங்குக்குக் கொள்ளுப்பேரனைக் கூட்டிவந்து எங்க தீவில் விட்டுட்டாங்க.  காணாததைக் கண்டமாதிரி இவன்  இங்கே ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டான். பரபரன்னு எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.....  கோவிட் வடக்குத்தீவில் இருந்த காலத்தில்  ரெட்டை இலக்கத்தில் தினமும் ஏறிக்கிட்டுப்போன எண்ணிக்கை, இந்த ஓமிக்ரோன் காலத்தில்  நாலு இலக்கத்தில்  ஆரம்பிச்சு இப்போ அஞ்சிலகத்தில் போய்க்கிட்டு இருக்கு.  இதில் முதல் இடம் நம்ம ஊருக்குதான்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கச் சொல்லி அரசு  ஏற்பாடு செஞ்சதும்  நாங்க சுமார் 65 % மக்கள்  முதல் ஊசி, அதுக்கடுத்த  மூணாவது வாரத்தில் ரெண்டாம் ஊசி போட்டுக்கிட்டோம்.  அப்புறம் ஒரு  ஆறு மாசம் ஆனதும் பூஸ்டர் ஊசி எல்லாமும் ஆச்சு.  தோராயமாக் கணக்குப் பார்த்தால் மக்கள் தொகையில்  90% மக்கள்   ஊசிகள் போட்டுக்கிட்டாங்க. இதிலும்  ஒரு  குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்கும் மக்கள், தடுப்பூசிக்கு எதிர்ப்பு காமிச்சுக்கிட்டு இருக்காங்க.  தடுப்பூசி போட்டுக்காதவங்களை வேலையில் இருந்து எடுத்துருவோமுன்னு அரசு  நடவடிக்கை எடுத்தது சரியில்லையாம்.   ஆனால் இவுங்க மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுதல்  சரியான்னு   கேட்கணும்..... ப்ச்.....

கூட்டங்கூடிக்கிட்டு ஊர்வலம் போறதும்,  தலைநகரில் பாராளுமன்றத்துக்கு முன் கூடாரம் போட்டுத் தங்கிக்கிட்டும்  வழி பிரதமர் வண்டிவரும்போது  வழி விடாமல் கூச்சல் போட்டுக்கிட்டும் இருந்ததால்  அவுங்களை கலைஞ்சு போகச் சொல்லி, அப்படியும் மூணு வாரமாச்சு இடத்தைக் காலி பண்ண.  கடைசியில்  எங்கூருக்கும் வந்து  இருக்கும் நாலு சதுக்கங்களில் ஒரு சதுக்கத்தைப் பிடிச்சுக்கிட்டுக் கூடாரம் போட்டுக் குழந்தைகுட்டிகளுடன்  சுமார் நாலு வாரம் தங்கி இரு23333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333ந்து 

தங்கியிருந்து புல்வெளியை எல்லாம் நாசம் பண்ணிட்டுப் போயிருக்காங்க.   எங்க சிட்டிக் கவுன்ஸில்  புல்வெளியைச் சரியாக்கப்போகுது. இதுக்கு நிறைய செலவாகும்னு ஒரு கணக்கு சொல்றாங்க. இங்கத்துப் போலிஸும் ச்சும்மா நிக்குமே தவிர நம்மூர்ப்போலிஸ் வேலையெல்லாம் காட்டாது.  மேலிடத்து உத்தரவின்படி , ஒரு நாள் சொல்லி அதுக்குள்ளே கலைஞ்சு போங்கன்னு சொல்லும். 

நம்ம தீவுக்கு ஓமிக்ரான் வந்துட்டானேன்னு  ஒரே கவலை எங்களுக்கு. முந்திபோல  ஊர் முழுக்கக் கோவிட் டெஸ்ட்டிங் ஸ்டேஷன்ஸ் வைக்காமல்  எண்ணிக்கையைக் குறைச்சுட்டு,  எலிப்பரிசோதனையை வீட்டுலேயே செஞ்சுக்கச் சொல்லுது அரசு.  RAT   Rapid Antigen Test. எலிக்குட்டிப் பரிசோதனைன்னதும்   எனக்கு ஒரு பதிவுலக நண்பர் நினைவுக்கு வந்தார். பழைய வலைஞர்களுக்கும் இதைப் படிக்கும்போது ஞாபகம்  வரலாம். இப்ப இந்த உலகத்தில் இல்லை. சாமிக்கிட்டே போயிட்டார் :-(

எதாவது ஒன்னு வந்துருக்குன்னதும் அதைவச்சுக் கடைகளில் காசு பார்க்கும் வேகம் கூடிருதுல்லே ?  இந்த எலி டப்பாவில்  இருக்கும் பொருட்களை வச்சு அஞ்சு முறை சோதனை செஞ்சுக்கலாம். உடனே இது ஒரு சின்ன அட்டைப்பொட்டி அம்பது டாலர்னு  மருந்துக்கடைகளில் மட்டும் கிடைச்சது. அப்புறம் இன்னொரு கடையில் முப்பதுக்குத் தரோம்னு சொன்னாங்க.
அரசு தருவிச்சு இலவச விநியோகம் செய்ய ஆரம்பிச்சது.  நமக்கு, நம்ம யோகா வகுப்பில்  ஆளுக்கொரு பொட்டின்னு கிடைச்சது. அப்புறம் மருத்துவ நண்பர் இன்னொரு பொட்டி கொண்டுவந்து கொடுத்தார்.


இதுக்குள்ளே பள்ளிக்கூடம் எல்லாம் திறந்துட்டாங்க. புள்ளைகளும்  பள்ளிக்கூடத்துலே புடிச்சுக்கிட்டு வந்து வீட்டுக்குள் பரப்பிருச்சுங்க.  நம்ம ஊர் முழுக்க  இப்படியே.....

  ட்ராஃபிக் லைட் சிஸ்டமுன்னு ஆரம்பிச்சு முதலில் நாடு முழுசும் ரெட் சிக்னல். எங்கே போனாலும்  வாய் மூக்கு மூடி போட்டுக்கணும்.  நூறு பேருக்கு மேல் கூட்டம் கூடாது. எல்லா இடத்துலேயும்  வாக்ஸீன் போட்டுக்கிட்ட  பாஸ்(போர்ட்) காமிச்சால்தான் உள்ளே அனுமதின்னு..... அரசு சொல்படி கோவில், சத்சங்கம், சநாதன் தர்ம சபா பூஜைகள் எல்லாம்  மூடறதும் திறக்கறதுமா .....  தப்பித்தவறி திறந்துருக்கும் சமயம் ஒரு பூஜைக்குப் போகலாமுன்னா 'நம்மவர்'  போடும் தனிச் சட்டத்துக்குப் பேசாம வீட்டுலேயே இருந்துடலாமுன்னு தோணிப்போகும்.  அங்கே போனால்  யாருகூடயும் ஒட்டாமல் தனியாத் தள்ளி உக்காரணும். எப்பவும் வாய் மூடி கழட்டக்கூடாது.  தோழிகளைக் கட்டிப்பிடிக்கக்கூடாது. ஏம்ப்பா.... ஆசையா ஓடிவரும் பிள்ளைகளைக் கிட்டே வராதேன்னு விரட்ட முடியுமா ? 

கடைசியில் என்ன ஆச்சு தெரியுமோ ? ஸ்ரீ ராமநவமி பூஜைகள் மூணு இடத்துக்குப்போய் வந்த  ரெண்டாம் நாள் சாயங்காலம், இவருக்குக் காய்ச்சல். ரொம்ப லேசாத்தான். நார்மலைவிட பாய்ண்ட் 8 டிகிரி கூடுதல். ஒரு பனடால் போட்டுக்கச் சொன்னேன்.  ஜூரம் விட்டது. 

பொழுது விடிஞ்சதும், நம்மாண்டை இருக்கும் பொட்டிகளில் ஒன்னைத் திறந்து  பரிசோதனை செஞ்சுக்கிட்டவர்....  பாஸிடிவ்னு கொணாந்து காமிச்சார்.  உடனே கிளம்பி  டெஸ்டிங் ஸ்டேஷன் போனார்.  அங்கே உறுதி செஞ்சாங்க.  அப்படியே சுகாதார இலாகா   கோவிட் பிரிவுக்குச் செய்தி அனுப்பிச்சுட்டாங்க.  என்ன செய்யணும், எது கூடாதுன்றதுக்கு அச்சடிச்ச ஒரு தகவல் நோட்டீஸ். இன்னும் ரெண்டு பொட்டி எலிகள்.  பாஸிடிவ்னு தெரிஞ்சுபோச்சுல்லே.... இனி ஏழாம்நாள்  எலிப்பரிசோதனை போதுமாம்.


ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக்கணும்.  அது பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டுலே இருக்கறவங்களும் தனிமைப்படுத்திக்கணுமாம். எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..... எலிப்புழுக்கை ஏன் காயணுமாம் ?  ரஜ்ஜுவை விட்டுட்டாங்க.  நம்ம குடும்ப மருத்துவரிடமிருந்து ஃபோன் வருது, நான் எப்படி இருக்கேன்னு ? ஏன்னா நம்ம உடல்நிலை இருக்கும் லக்ஷணம் தெரிஞ்சவங்க அவுங்க தானே ?

மூணாம் நாளும் ஏழாம் நாளும் நான் எலிப்பரிசோதனை செஞ்சுக்கணுமாம். தினம் தினம் டாக்டர் ஃபோன் பண்ணி விசாரிக்கறாங்க..... நல்ல வேளை குட் ஃப்ரைடே... ஈஸ்டர்னு  நாலுநாட்கள் தொடர்விடுமுறை வந்ததால்.....  விசாரிப்பு நின்னு போச்சு......

தனிமைப்படுத்திக்கறேன்னு  ஃபைவ் ஸ்டார் ரூமுக்குள்ளே போயிட்டார்.  அவர் அவருக்கு குடிக்க, தின்னன்னு எதாவது கொண்டுபோய் வாசலில் வச்சுட்டு வரணும்.  பாஸிடிவ்காரர் மட்டுமில்லாமல் நெகடிவ்காரரும் N95 Mask போட்டுக்கணும்.  ஃபேஸ்புக்கில் சமாச்சாரத்தைப் போட்டுவிட்டேன். மற்ற  உள்ளூர் நண்பர்கள், உதவி வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. வெளியூர், வெளிநாட்டு நண்பர்கள் எல்லோரும் கவலையைத் தெரிவிச்சு எனக்குத் தைரியம் சொன்னாங்க. அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை இத்துடன் தெரிவிச்சுக்கறேன்.

ஆச்சு மூணாம் நாள். என்னோட எலி, எனக்கொன்னுமில்லைன்னு சொல்லிருச்சு. ஒரு கோடு இருந்தால் இல்லை. ரெண்டு கோடுகள் இருந்தால் இருக்கு. சிம்பிள் !



இதுக்கெல்லாம் தனியா மருந்து மாத்திரைன்னு ஒன்னும் இல்லை. தலைவலி, உடல்வலிக்கு பனடால். இருமல் வந்தா அதுக்கொரு இருமல் ஸிரப். வைரஸ் என்பதால்.... எப்படி உள்ளே வந்துச்சோ... அப்படியே வெளியே ஓசைப்படாமப் போயிருமாம். உடலுக்குள் நுழைஞ்சவுடன் வீரியம் காமிச்சு அடுத்தவங்களுக்கு தொற்று பரவ அல்லாடுமாம். ஏழாம் நாள் பொட்டிப்பாம்பு.  

எல்லா வேலைகளும் செஞ்சு செஞ்சு எனக்குக் களைப்பாப் போயிருச்சு. கைவேற சரியில்லையே.... அதுபாட்டுக்கு விடாம வலிக்குது.  ரூம் ஸர்வீஸ் ஒரு கட்டத்துலே  அலுத்துப் போயிருதுப்பா....  முப்பத்தியஞ்சு முறை....   ஒரே ஒரு நல்லதுன்னா..... வீட்டு ஸிட்டிங்  ரூம் டிவி  வாயையும் கண்ணையும் மூடிக்கிட்டதுதான். தொண தொணன்னு அதுபாட்டுக்குக் கத்திக்கிட்டே இருக்கும் எப்பவும். நம்ம ரஜ்ஜுவுக்குத்தான்   வீடு சைலண்ட் ஆனது ஏன்னு தெரியலை.... சுத்திச் சுத்தி வர்றான்.  தகப்பனைப் பார்க்க முடியலை. என்ன ஆச்சும்மா? என்ன ஆச்சு.....  ஏம்மா நீ கத்திச்சண்டை கூடப் போடாம இருக்கே.... 24 மணிநேரமும் வீடே கதின்னு  வேற....   ப்ச்....  

வீக் எண்ட் வேற.... அதுவும்  லாங்க் வீக் எண்ட். நிறைய விசேஷங்களில் பங்கெடுக்கணுமுன்னு இருந்தேன்.  ஒரு நிச்சயதார்த்தம், ஒரு  ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் பொறந்தநாள், நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழா, நம்ம ஆஞ்சியின் பொறந்தநாளான ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி, சனிக்கிழமை போகும் ஹரே க்ருஷ்ணா கோவில் விஸிட், நம்ம தமிழ்ச்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழான்னு..... எதுலேயுமே கலந்துக்க முடியலை. 

ஆச்சு நேத்து ஏழாம்நாள்.  அரசு செய்தி அனுப்புச்சு.... விடுதலை...விடுதலை விடுதலை.....
எனக்கு மட்டும் எலிப்பரிசோதனை. ஒத்தைக்கோடைக் காமிச்சது..... 
நாம் ரெண்டு தடுப்பூசி, ஒரு பூஸ்டர் எல்லாம் போட்டுக்கிட்டதால் அவ்வளவா பாதிப்பு ஒன்னும்  இல்லாமத் தலைக்கு வந்தது, தொப்பியோடு போச்சுன்றதே உண்மை!

என்ன ஒன்னு.....  இது திரும்பியும் வர்ற சான்ஸ் இருக்காம். ஓமிக்ரோனோட வாரிசுகள் ஏற்கெனவே வெளியே வந்து உலாத்த ஆரம்பிச்சுருக்கே....  கொஞ்சம் படிச்ச வைரஸ்கள் போல!  பெயரெல்லாம்  BA 1, BA 2 ன்னு  வச்சுருக்குகள்.

ஊர் உலகமெல்லாம் நோயில் வாட, அதை உண்டாக்கியவனே.... அதைக் கண்டுபிடிக்கவும்   தேவையானவைகளைத் தயாரிச்சு  இதே ஊருலகமெல்லாம் அனுப்பி நல்ல காசு பார்த்துக்கிட்டு இருக்கற அக்ரமம் இந்த பூவுலகைத் தவிற வேறெங்கும் இருக்காது....
என்னவோ போங்க......    

PIN குறிப்பு: இந்தப் பதிவில் ஒரு விசேஷம் இருக்கு. நம்ம ரஜ்ஜுவும் நாட்டுநடப்பைக் கொஞ்சம் எழுதியிருக்கு, பாருங்க. :-)  

Wednesday, April 13, 2022

வேண்டாத விருந்தாளி .............

வேண்டாத விருந்தினரின் வருகையை முன்னிட்டு, உங்கள் துளசிதளத்துக்கு விடுப்பு !
ஏழு நாட்கள் இருந்துட்டுத்தான் போகுமாம்  :-(



Tuesday, April 12, 2022

ஸ்ரீ ராமநவமி 2022

பழசை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்கும்போது.... திடீர்னு நடுவிலே ஒரு புதுசை எழுதறேன். சுடச்சுட  மனசுக்குள் இருப்பதைச் சொல்லாமல் நாளைக்கடத்த முடியாது.... 
நானும் ஒரு வகையில் நம்ம ஆஞ்சி ஆகிட்டேன் போல !  ( சரியாச் சொன்னால் நான் ஒரு குரங்கு ! ) எங்கெங்கே ஸ்ரீ ராமர் பெயர்  கேக்குதோ அங்கெல்லாம் ஆஞ்சி போயிருவாராம்.  நேத்து ஸ்ரீ ராமர் பிறந்த தினக் கொண்டாட்டம்.  உண்மையில்  ஃபிஜியில் இந்த விழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்குது.  அங்கே இங்கேன்னு ஃபிஜி இந்தியர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமும்  அதே ஒன்பது நாட்கள் விழாதான் கொண்டாடுறாங்க. 

யுகாதி  முதல் நவமி வரை கொண்டாட்டம். சைத்ரமாசம் வளர்பிறை நவமி. இங்கே நம்ம ஊரிலும் நிறைய  ஃபிஜி இந்தியர்கள் இருக்காங்க.  ராமாயண மண்டலின்னு ஏகப்பட்ட குழுக்கள் ராமாயண வாசிப்பை வருஷம் முழுசும்  நடத்தறாங்க.  நம்ம ஊரில் சநாதன் தரம் ப்ரதிநிதி சபா என்ற பெயரில்  ஒரு ஹால் வாங்கியபிறகு  எல்லா பண்டிகைகளும் அங்கே நடத்திக்கறோம் என்றாலும் கூட  இந்த ராமாயண மண்டலிகள்  அங்கங்கே வீடுகளிலும் சில பொது இடங்களிலும் நடந்துக்கிட்டுதான் இருக்கு.  சநாதன் சபாவிலும் செவ்வாய்க் கிழமைகளில் ராமாயண வாசிப்பு உண்டு. 

இந்த ஒன்பது நாட்களும் நம்மால் விழாவில் கலந்துக்க முடியறதில்லை. முடிஞ்சபோது போறதுதான். பொதுவா ஒரு நாலைஞ்சு நாட்கள் போவோம். இந்த வருஷம் கோவிட் நம்மூருக்கு விஜயம் செஞ்ச காரணத்தால்  முக்கியமான சில விழாக்களுக்குக் கூடப்போக விடாமல்  தடா  போட்டுருக்கார் 'நம்மவர்'.  கொஞ்சம் பிடுங்கி எடுத்ததில்   மூணாம் நாள் விழாவுக்குப் போக முடிஞ்சது.  அதுக்கப்புறம்   கடைசி நாள்  போக முடிஞ்சது. அது நேத்து, ஏப்ரல் பத்தாம் தேதி.

எனக்குப் பண்டிகைகளில் ரொம்பப்பிடிச்சது ஸ்ரீராமநவமிதான்.  ப்ரஸாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம். நீர்மோர், பானகம், வடபப்பு, பழம், புஷ்பம் போதும்.

நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலிலும்  இதே நாளில்தான் கொண்டாட்டம்.  அங்கே சாயங்காலம்தான்  விழா.  


காலையில் நம்ம வீட்டில் பண்டிகை கொண்டாடினோம். சின்னதா ஒரு அலங்காரமும் சிம்பிள் ப்ரஸாதமும்.  



பத்தேகால் போலக் கிளம்பி க்றைஸ்ட்சர்ச் ஃபிஜி அசோஸியேஷன் நடத்தும் ஸ்ரீராம்நௌமி பூஜை நடக்கும் ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தோம். பள்ளிக்கூட ஹால்தான்.  பிறந்த குழந்தைக்குத் தொட்டில் கட்டும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு பக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள்.  ராமாயண வாசிப்பும் இருந்தது. பூஜை, பஜன் எல்லாம் ஆனதும் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தி ஆரத்தி, ஆட்டம் பாட்டம் எல்லாம் ஆச்சு. தொட்டிலை ஆட்டும் வாய்ப்பும் கிடைச்சது.  குழந்தையை உச்சிமோந்து கொஞ்சலாமுன்னு போனால்,  ஆதிசேஷன் படமெடுக்க,  சங்கு சக்ரத்தோடு மஹாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் ! 

என்னடா இது ராமரைக் காணோமேன்னு நினைச்சேன். அப்புறம் இதுதான் சரியான முறைன்னும் தோணுச்சு. ராமாவதாரத்தில், மஹாவிஷ்ணு ராமராகப் பிறந்தப்ப, ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சங்கும் சக்கரமும் பரதன், சத்ருக்னனாகவும்  கூடவே பிறந்ததாக ராமாயணம் சொல்லுது.  நாலு குழந்தைகள்  ஆனால் நாலு வெவ்வேற நக்ஷத்திரத்தில் ! ராமர் புனர்பூசம், லக்ஷ்மணன் ஆயில்யம், பரதன் பூசம், சத்ருக்னன் மகம் ! 

மாஸ்டர்ஜி ஜகத்சிங் அவர்களிடம், நம்ம கண்டுபிடிப்பைச் சொன்னதும் சரியான உருவத்தைத் தொட்டிலில் கிடத்தியதை நினைத்து சந்தோஷப்பட்டார். என்ன இருந்தாலும் 'ஊர்க்காரர்கள்' சொன்னா அது சரியாத்தான் இருக்கும் இல்லே !  

முக்கிய பூஜைகளில் ஹவன் செய்வது வழக்கம் என்றபடியால், வெளியே  திறந்த வெளியில் ஹோமம் நடந்தது.  ஹாலுக்குள்  நெருப்புப் பற்றவைக்கத் தடை இருக்கு. கொஞ்சம் புகை வந்ததும் ஸ்மோக் அலார்ம் அடிச்சு, அடுத்த சில நிமிஷங்களில் ஃபயர் எஞ்சின் வண்டி வந்துரும். 




ஹவன் முடிஞ்சதும்  திரும்ப ஹாலுக்குள் வந்து பூஜையை முடிச்சோம்.  நம்ம சநாதன் ஹாலிலும் இதே நேரம்தான்  கொண்டாட்டம்  என்பதால் இங்கே பூஜையை முடிச்சு அங்கே போய்த் தலையைக் காட்டிட்டு வரணும். அங்கே நம்ம ஆஞ்சி வேற இருக்காரே !  நல்லவேளை ரெண்டு இடங்களும்  பக்கத்துலேதான்.  ஒரு அஞ்சு நிமிட் ட்ரைவ். 



சநாதன் ஹால் போய் ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு  ஹாலுக்குள் போனால்  தொட்டிலிடும் நிகழ்ச்சி முடிஞ்சு  சபைக்கு நிதிதிரட்டும் வகையில் நடக்கும் ராஃபிள் குலுக்கல் நடக்குது. ஃபிஜி இந்தியர்களின் எல்லா விழாக்களிலும் இது வழக்கமா நடக்கறதுதான்.  எல்லா விழாக்கள் நடத்தவும் நிதி வேண்டித்தானே இருக்கு ! பரிசுப்பொருட்களும்  மக்களே வாங்கிக்கொடுக்கறதுதான். 
நம்ம பண்டிட், என் தலையைப் பார்த்ததும்,  வந்து ஒரு சீட்டு எடுக்க ச் சொன்னார். கூடைக்குள் கைவிட்டுக் கிளி மாதிரி ஒன்னு எடுத்துக்கொடுத்தேன் :-)நல்ல பரிச்சயமுள்ள தோழியின் பெயர் வந்தது !  

'நம்மவருக்குப் பசி நேரம் ' சாப்பிட்டுட்டுக் கிளம்பினோம். இனி அடுத்த பூஜை நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில். நடுவில்  ஒன்னரை மணி நேரம் இருக்கு. வீட்டுக்குப்போய் ரஜ்ஜுவுக்கும், பறவைகளுக்கும்  சாப்பாடு கொடுத்துட்டு, நாமும் ஒரு டீ போட்டுக்குடிச்சுட்டு, அஞ்சு  மணிக்குக் கோவிலுக்குப் போனோம்.


சந்நிதியில் புதுசா  ராமர், சீதை, லக்ஷ்மணன் & ஆஞ்சி !  கண்ணைக்கவரும் அழகு !  ஹைய்யோ !!!   வச்ச கண்ணை வாங்கமுடியலை.!  புதுசான்னு  கோவில் மக்கள் ஒருவரிடம் கேட்டால்.... யாரோ ஒரு பக்தர் வீட்டிலிருந்து வந்துருக்காம்.

இன்று அபிஷேகம் ஆரத்தி எல்லாம்  சாளக்ராமத்துக்கு !   நம்ம கோவில் கமிட்டியின் தலைவரின் ப்ரசங்கம் முடிஞ்சதும்  வழக்கமான தீபாராதனை !   அப்புறம் விருந்து வரிசை தொடங்கிருச்சு.  தலைவரிடம்,  ராமர் & கோ விவரம் கேட்டேன்.  இன்றைக்கு கடைசி தீபாராதனை நடத்தியவர் வீட்டுச் சிலையாம் !  அட ! நமக்குத் தெரிஞ்சவர்கள்தான்.

கூடுதல் விவரம் அந்தத் தோழியே சொன்னாங்க......இங்கே நம்மூரில்தான் வாங்குனாங்களாம்! அற்புதம் அழகுன்னு பாராட்டிட்டு, விருந்தும் முடிச்சு வீட்டுக்கு வந்தாச்சு !   

ஜெய் ஸ்ரீராம் !







Friday, April 08, 2022

Food Yoga !!!

வாரம் ஒரு வகுப்புதான்.  அதுவும் ஒரு மணி நேரம் மட்டும்.  அந்த  நேரத்துக்குத்தான் ஹால் புக் பண்ணி இருக்கோம்.  அதையே ஒழுங்காப் பண்ணிட்டு வரக்கூடாது ? ஊஹூம்.... முடியாத். குழுவிலே யாருக்காவது பொறந்த நாள், கல்யாணநாள், வீட்டு விசேஷம் இப்படி வராமல் இருக்குமா ? இதுக்கு நடுவிலே பண்டிகைகள் வேற ! இதெல்லாம் போதாதுன்னு மாசத்தில் கடைசி  வகுப்பில் ஒரு ஸ்நாக்ஸ் டே   !  இப்படி ஏதாவது வந்தால்  ஒரு இருபது நிமிட்ஸ், கொண்ட்டாட்டத்துக்கு எடுத்துக்குவோம்.  நாந்தான் இந்த வகை நாளுக்கு ஃபுட் யோகான்னு பெயர் வச்சேன்:-)
எங்க ஊர்  ஸ்போர்ட்ஸ் கேன்டர்பரி  அமைப்புதான் இந்த  யோகா வகுப்புகளை ஆரம்பிச்சுக் கொடுக்குது.  விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி கொடுக்கறாங்க.  பயிற்சியாளர்கள் தயாரானதும் நாங்களே இதை நடத்திக்குவோம். நிறுவனத்தார் நமக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை ஏற்பாடு செஞ்சுருக்காங்க. அவுங்க மாசம் ஒரு முறை வந்து நம்ம வகுப்பு எப்படி (எந்த லட்சணத்தில் )  நடக்குது.... இன்னும் எந்தமாதிரி இதை மேம்படுத்தலாம், புதுசா என்னென்ன சொல்லித்தரலாமுன்னு பார்த்துக்குவாங்க.


ஒரு வாரம் இருக்கும்போதே  நம்மிடம் விசாரிச்சு வச்சு அதுக்கேத்தபடி நடத்தறதுதான். சின்னச் சின்ன டெஸ்ட் வேற இருக்கும். எத்தனை  விநாடிகள், நிமிஷத்தில் நம்மால்  சிலதைச் செய்ய முடியுதுன்னு பார்ப்பாங்க. அடுத்த முறை வரும்போது போனமுறையை விட எவ்வளவு முன்னோக்கிப் போயிருக்கோமுன்னும்  பார்த்து நம்மை ஊக்கப்படுத்துவாங்க.  இந்த மூணு வருஷமா எங்களுக்கு உதவி செஞ்ச ஒருங்கிணைப்பாளர்,  வேற வேலைக்குப் போறாங்கன்னதும்  எங்களுக்குக் கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்தது. புதுசா இன்னொருத்தரைப் போட்டுருக்காங்களாம்.  அவுங்க ஒருநாள் வந்து பார்த்துட்டுப் போனாங்க.

யோகான்னதும்  விதவிதமான ஆசனங்கள் போடறதும்,  தீரேந்திர ப்ரம்மச்சாரின்னு ஒரு யோகா குரு இருந்தாரே அவர் மாதிரி உடம்பை முடிச்சுப்போட்டுக்கறதும்தான்னு நினைச்சுடாதீங்க. இது கொஞ்சம் வயதானவர்களுக்கு  கால்களுக்கு தடுமாற்றம் வராம நிற்க நடக்க வைக்கிறது, ஞாபகசக்தி போயிடாமல்  மூளையை ஆக்டிவா வச்சுக்கறது, கொஞ்சம் மூச்சுப்பயிற்சின்னு  நடப்பதுதான்.





ஒரு வகுப்பில் குழுவில் ஒருவருக்குப் பொறந்தநாள்னு கேக் வெட்டிக் கொண்டாடினோம். கூடவே தீனிகள்!  குழு மக்களே சமையல் பொறுப்புகளை ஏத்துக்கறதும் அடிக்கடி நடக்கும். சமோஸா சாட், ஜலேபி, ஃபலூடான்னு ஒரு கை பார்க்க வேண்டியதாப் போச்சு. குழுவினர் எல்லோரும்  வராததால்  வீட்டுக்கு வேற பார்ஸல் ஆச்சுன்னு வையுங்க.   கம்யூனிட்டி ஹால்களில் சகல வசதிகளுடன் அடுக்களையும் இருப்பதால் சுடவைக்க வேண்டியவைகளைச் சுடவச்சுக்குவோம். 



விழா முடிஞ்சதும்  ஆளுக்கொரு  வேலை பார்த்து அடுக்களையைச் சுத்தம் செஞ்சு வச்சுருவோம். இந்தப் பகுதியில் ஒருத்தர் மட்டும் வேலையில் உதவவேமாட்டாங்க.  க்ளிக் வேலைதான் எப்பவும்.  நம்ம யோகா குழுவுக்கு அஃபிஸியல் பொட்டாக்ராஃபர் அவுங்க.   

 உங்களுக்குத் தெரிஞ்சவர்தான் என்பது உபரித்தகவல் :-)