Friday, September 24, 2021

பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்......

நம்ம துளசிதளம், கோமாவில்  இருக்கு ! எப்பவாவதுதான்  விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா  நிலை.....     இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான்.  இதுதான் பத்து...........  போதுமடா சாமி.....  இப்படி ஒரு நிலை....

என்னதான் கோவிட் முடக்கிப்போட்டுருச்சுன்னாலும் பொழுது விடியறதும் பொழுது முடியறதும் நிக்குதா ? அதுபாட்டுக்கு அது......

அந்தக் கணக்கில்  பதினேழு முடிஞ்சு பதினெட்டாவது  வயசில் அடி எடுத்து வச்சுருக்கு நம்ம துளசிதளம் !

இனியாவது  எழுந்து உக்கார்ந்து  எழுதறதுதான் நல்லது....

பார்க்கலாம், எப்படி போகப்போகுதுன்னு.....

ம்ம்ம்ம்ம்  சொல்ல விட்டுப்போச்சே.... இன்றைக்குத்தான் நம்ம கோபாலுக்கும் பொறந்தநாள் !

கோவிட் காரணம் மூடி வச்சுருக்கும் கோவிலில்  தரிசனம் கிடைச்சதும் பாக்கியம்!   ஒரு லெவல் படியிறங்கி இருக்கோம்.

பெருமாளே.... காப்பாத்து....