Wednesday, January 14, 2026

இனிய பொங்கல் !!!

அனைவருக்கும் வணக்கம். 

நம்ம வீட்டில் பண்டிகைகள்/ விழாக்களையெல்லாம் எப்படி சம்ப்ரதாயமாகக் கொண்டாடறேனோ இல்லையோ.... அதுக்குண்டான  ஸிம்பிள் கண்காட்சியை மட்டும்  மனசுக்குத் தோணியபடி வச்சுடறது ஒரு வழக்கமாகவே ஆகிப்போச்சு.
பொங்கல் வைக்கிறது  வழக்கம்போல்  நம்ம  கிராமத்துக் களத்துமேட்டுலே தான் ! பண்ணையாரும் எஜமானியம்மாவும், வில்வண்டியில் வந்து இறங்கியிருக்காங்க. 
                 
பண்ணையாளும் அவர் மனைவியுமா வீட்டைச் சுத்தப்படுத்தி, வாசக் கோலமெல்லாம் போட்டு வச்சுருக்காங்க.  

அய்யனார் கோவிலில்  இந்த வருஷம் ஒரு துளசிமாடம் !



அறுவடை முடிஞ்ச புதிய வைக்கோல்,  மாட்டுக்கொட்டாய் கூரைக்கு ஆச்சு !
                                                                                                
அடுப்பும் பத்தவச்சுப் பாலும் பொங்கிக்கிட்டு இருக்கு !

வீட்டுக்கு ரெண்டு கரும்பை எடுத்துவச்சுட்டு,   கரும்புக் கட்டுகளை சந்தைக்கு எடுத்துப்போறாங்க, பூனைய்யாவும் பூனைம்மாவும்.  கைக்குழந்தை அம்மா மடியில்!  திரும்பி வரும்போது இருட்டிப்போச்சுன்னா............ மறக்காம லாந்தர் எடுத்துக்கிட்டு போகணும்....சரியா ? 
வாங்க நண்பர்களே.....  கொஞ்ச நேரத்தில் பொங்கல் பொங்கி முடிச்சதும், அய்யனாருக்குப் படைச்சுட்டு, உங்களுக்கெல்லாம் இலைபோட்டு  பந்தி விளம்பணும் !  
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் அன்பான, இனிய வாழ்த்துகளும், ஆசிகளும் !

எல்லோரும் நல்லா இருங்க மக்கா !

PIN குறிப்பு:  behind the scene  below !!!!!



                 



0 comments: