Saturday, April 03, 2010

வேணுமான்னு சொல்லுங்க


'திடுக்'ன்னு ஒரு பயணம் கிடைச்சது. சொல்லாமக் கொள்ளாம ஓடவேண்டியதாப் போச்சு. பயணத்தைப் பற்றி எழுதணுமா வேணாமான்னு முடிவு செஞ்சுக்கலை.

'சுருக்'காச் சொன்னால் அரபிக் கடலோரம் போய் அழகனைக் கண்டேன்.

அது என்ன, எப்பப் பார்த்தாலும் பயணக் கட்டுரைன்னு சிலர்( அட, ஒருத்தர்தாங்க!) சொன்னாங்க. அதெல்லாம் கண்டுக்காம நாம் போற வழியில்தான் போகணுமுன்னாலும், இப்ப உங்ககிட்டே கேக்கறேன். பயணம் எழுதவா வேணாமா? எப்படியும் நம்ம நினைவுகளுக்குன்னு எழுதத்தான் போறேன். அதை வெளியிடவா வேணாமான்னு சொல்லுங்க மக்கள்ஸ்.

37 comments:

said...

தயவு செய்து வெளியிடவும் :)

Srini

said...

இதென்ன கேள்வி டீச்சர்..!

நீங்க இதைப் பத்தியெல்லாம் எழுதினாத்தான நாங்க சூப்பர்ன்னு பின்னூட்டம் போட்டுட்டு, மனசுக்குள்ள உங்களைத் திட்டிட்டு, கோபால் ஸாரை பாராட்ட முடியும் பொறுப்பானவர்ன்னு..!

கமான்.. ஆரம்பிங்க..!

said...

ம்ம்ம்ம்... எப்படியும் எழுததான் போகின்றீர்கள்.... வெளியிட்டால் தப்பில்லை....

said...

பயண கட்டுரை எல்லாம் எழுதுங்க ..

said...

ம்ம்ஹூம்.

பயணக் கட்டுரை எழுதினது போதும்.

For a change,

பயணக் கதை எழுதலாமே? :)

http://kgjawarlal.wordpress.com

said...

டீச்சருக்கு இப்படி ஒரு கேள்வியா. நீங்க போய்க்கிட்டே இருங்க .. நாங்க ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்க மாட்டோமா !

said...

ஆவலுடன் உள்ளேன். எப்ப வரும் எப்ப வரும் என்று மக்கள் உங்களுடன் பயணிக்க காத்திருக்கின்றனர். வாழ்த்துக்கள்

said...

waiting to read pls

said...

Pl write it Amma.....atleast for fans like us :)

said...

"வேணும்" சுருக்கமா சொல்லிட்டேன்... :)

said...

துளசி அம்மா. நீங்க எழுதும் பயணக் கட்டுரைகளின் ரசிகை நான். நீங்கள் எழுதும் கட்டுரைகள் மூலம் பல இடங்களைப் பார்த்திருக்கிறேன். நிச்சயம் தொடருங்கள். அதுவும் அந்த அருமையான நடையிலேயே, பஞ்ச் தலைப்புக்களுடன். :)
அன்புடன்,
விதூஷ்.

said...

வேணும்,வேணும்...வேண்டும்.

said...

http://www.youtube.com/watch?v=ouJymiIGjqM

அரபிக்கடலோரம் என்றால் இதுவா?
ரொம்ப பழசாச்சே.

meenachi paatti

said...

ungaludaiya payana katturaiya nichayamaaga thaankal veeliyida vendum indha pathivil thankaludaiya payanathil edutha pugai padam endru ninaikiren ,. m

nandraaga vanthullathu enkalukkum aavalaaga ullathu kattayam payana katturaiyai veliyidungal amma

said...

துளசிம்மா, அரபிக்கடலோரம் வேலை விஷயமாத்தான் போயிருக்கொம். அழகனை எல்லாம் பார்த்ததில்லை. நீங்க எழுதியே ஆக வேண்டும்.

said...

தலைப்பைப்ப்பாத்து என்னமோ ஏதோன்னு இல்ல நினைச்சிட்டேன் ? :)

வேணும்.. வேணும்..பதிவேற்றுங்க நினைவுகளை..

said...

எழுதுங்க டீச்சர்!

said...

உள்ளேன் டீச்சர் ;))

said...

ஆஹா...... உத்தரவாகிருச்சு!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!

ஸ்ரீனி

உண்மைத்தமிழன்

ஞானசேகரன்

ரோமியோ

ஜவஹர்

தருமி

மதுரை சரவணன்

ராம்ஜி யாஹூ

கனவுகளின் தோழி

லோகன்

விதூஷ்

குமார்

மீனாட்சி அக்கா

பிரபாகர்

வல்லி

கயலு

என் ஆர் சிபி

கோபி

அனைவருக்கும் நன்றி.

திங்கக்கிழமை நாள் நல்லா இருக்கு. ஆரம்பிச்சுறலாம்:-)))))

said...

என் பதிவு பக்கம் பயணம் செய்ய உங்களுக்கு நான்visa, ticket எல்லாம் கொடுத்தேனே. அங்கே வரவேற்பு கூடி தயார் பண்ணி இருந்தேன். சரி நீங்க அரபி கடலோரம் பயணம் முடிச்சுட்டுவாங்க

http://www.virutcham.com

said...

Many thanks!!!

said...

அட?? நாங்களும் இருக்கோமில்ல??? உங்க பார்வை எப்படிப் பார்த்தது அரபிக்கடலைனு தெரிஞ்சுப்போமே.

said...

என்னங்க நீங்க இதையெல்லாம் கேட்டுக்கிட்டு...இன்னேரத்துக்கு ரெண்டு பதிவை போட்டு தாக்கியிருக்க வேண்டாமா!!..

அப்புறம்.. அந்த 'ஒருத்தர்' அண்ணாவுக்கான உள்குத்தா!! :-))))

said...

அரபிக் கடலோரம் போனது மட்டும் தானா?
அழகைக் கண்டது மட்டும் தானா?
ஃப்ளையிங் கிஸ் பத்தி யாரு சொல்லுறதாம்?
...
...
...
எழுதினாத் தானே உண்மை வெளீல வரும்? அதுக்காகவாச்சும் எழுதுங்க டீச்சர்! :)

said...

வேணுமான்னு கேள்வி கேட்கற பயண்மா இது டீச்சர்?காசு செலவில்லாம ஊர் சுத்த வைக்கிறீங்க.நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து தொத்திக் கொள்ளும் அழகான பயணம்.

தொத்திக்கொள்றதுன்னவுடனே கல்கத்தா நினைவு வந்துருச்சு.முன்பு ஆங்கிலேயர் காலத்து ட்ராம் வண்டி ஓடிகிட்டு இருந்தது.ஜனநெரிசல் காரணம் காரணமாகவோ ஒருவரின் சராசரி ஓட்ட வேகத்துக்கு ஒப்பான வேக பயணமென்பதாலோ தேவைப்பட்ட இடத்தில குதிக்கலாம்,வண்டிக்குள் புகுந்து கொள்ளலாம்.

Anonymous said...

என்ன டீச்சர் கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு

said...

எழுதுங்க ப்ளீஸ்!

said...

வாங்க விருட்சம், சந்தியா, கீதா, அமைதிச்சாரல், கே ஆர் எஸ், சின்ன அம்மிணி & கிரி.

நாளை நமதே:-))))))


ஏம்ப்பா.... கே ஆர் எஸ்,
ரகசியத்தைக் காப்பாத்தத் தெரியாதா?

அமைதிச்சாரல்,
கண்டுபிடிச்சாச்சா:-))))))

வரவரத் தலைப்பு, எதை எழுதணும் இப்படியெல்லாம் டார்ச்சர் வந்துக்கிட்டு இருக்கு 'அங்கிருந்து'!!!!

said...

வாங்க ராஜ நடராஜன்.

240 கிலோ மீட்டர் வேகத்துலே போற பைக்லே இருந்து குதிச்சுட்டு மீண்டும் வந்து தொத்திக்குதாம் ஒரு நாய். இன்னிக்குக் கிடைச்ச சேதி!

said...

//240 கிலோ மீட்டர் வேகத்துலே போற பைக்லே இருந்து குதிச்சுட்டு மீண்டும் வந்து தொத்திக்குதாம் ஒரு நாய். இன்னிக்குக் கிடைச்ச சேதி!//

இது ட்ராம விட நல்லாயிருக்கே:)))

said...

ஆமாங்க ராஜ நடராஜன்.

இன்னிக்கு தினமலர் வாரமலரில் இருக்கு.

4 ஏப்ரல் 2010

said...

என்ன கேள்வி டீச்சர் .. ஸ்டார்ட் பண்ணுங்க..
LK

said...

பின்னூட்டம் ஒன்று பத்து பக்கத்துக்கு இன்று
எழுதி வைத்திருக்கிறேன்.
சீக்கிரம் உங்கள் பதிவைப்போடுங்கள்.
( ஏதாவது ஒரு லைனை எடுத்து கொடேஷன் தருவது தான் பாக்கி.)

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க எல் கே.

நாளைக்கு வச்சுக்கலாம் கச்சேரியை:-)

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

போது விடியட்டுமுன்னு காத்துருக்கேன். மொதவேலை இதுதான்:-)

said...

சீக்கிரம் பதிவை போடுங்க டீச்சர்.
அரபிக்கடலோரம் அழகனை தரிசிப்போம்.

said...

வாங்க முகுந்த் அம்மா.

பின்னூட்டத்துக்கு பதில் போட லேட்டாயிருச்சு:(

ரெண்டு பதிவு போடறதில் பிஸியா இருந்தேன்னா நம்புங்க ப்ளீஸ்:-))))