காலை உணவு..... முடிச்சுட்டு வழக்கம்போல் சிகிச்சைக்குப் போனோம். சிகிச்சை முடிஞ்சதும் வழக்கம்போல் ஒரு செல்ஃபி. இந்த மருத்துவமனையில் என்னென்ன மாதிரி சிகிச்சை நடக்குதுன்ற பட்டியலைப் பார்த்துட்டு ஒரு க்ளிக்.
அட்மின் சைடுலே இருக்கும் கீதா.... எனக்கு நல்ல ஒரு தோழி ஆகிட்டாங்க. பொதுவா எல்லோருமே இனிமையாத்தான் பழகறாங்க. ஒரு ரெண்டு நாளிலேயே... மனசுக்கு இணக்கமா ஆகிருது.
மதியம் ஒரு மூணு மணிக்குக் கிளம்பி திருவான்மியூர் போறோம். கோவிலுக்குத்தான். கலைக்கோவில்னு பெயர் ! நம்ம கலைமாமணி முத்தரசி அவர்கள் நடத்தும் நாட்டியப்பள்ளி! இங்கே நம்மூரில் இருக்கும் தோழியின் தாய். மகள் வீட்டுக்கு வந்து போகும்போது, நமக்கும் பரிச்சயமாகி, இப்போது நம்ம தோழியாகவும் ஆயாச்சு.
https://www.facebook.com/gopal.tulsi/posts/pfbid02bLQLcVPYcaFxCfxg2ADDetjWUS4cLtvVvex6RVeHHAJwqz81R9AjUSgeFJpz3RBUl
மேலே நம்ம வீட்டில் !
வீட்டில் இருதரப்பு அம்மாக்களும் இருப்பதால்.... நாம் போய் சந்திச்சுப் பெரியவங்க ஆசிகளை வாங்கிக்கணும்.
https://www.facebook.com/share/r/1CWWvPEDnS/
தமிழ்நாடு அரசு , இயல் இசை நாடகம் என்னும் கலைத்துறையை வளர்ப்பதற்கு, கலைத்துறையில் வெவ்வேறு பிரிவைச் சார்ந்த , கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களில் சிலருக்கு , மானியம் வழங்கும் நிலையில், இவுங்களைத் தெரிஞ்செடுத்து, ஒரு நாட்டிய நாடகம் தயாரிக்கச் சொல்லி இருக்காங்க. அந்த வேலைகளில் இவுங்க மூழ்கிப்போகுமுன் இதோ... நாம் வந்து வாழ்த்திட்டுப் போறோம்.
அங்கிருந்து நேராப் போனது நம்ம அடையார் அநந்த பதுமனை, ஸேவிக்கத்தான் ! கோவிலில் இப்போ ப்ரம்மோத்ஸவம் நடக்குது. மார்ச் நாலு முதல் பதினைஞ்சு தேதிவரை ! இதே நாட்களில் சைடு பை சைடாக இசைவிழாவும் நடத்தறாங்க.
நம்ம சென்னை வாழ்க்கையில் தினம்தவறாம இந்தக்கோவிலுக்குப் போயிருக்கேன். என்னுடைய இஷ்டக்கோவில் இது ! ஒரு தள்ளுமுள்ளும் இல்லாம நிம்மதியாப் பதுமனை எவ்வளவு நேரமுன்னாலும் தரிசிக்கலாம். அதுவும் உக்கார்ந்தே !
எப்ப சென்னைக்குப் போனாலும், இந்தக் கோவிலுக்குப் போகாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு முறை போகும்போதும்.... நல்ல முன்னேற்றங்கள் கண்கூடு ! படுசுத்தமான பராமரிப்பு ! கோவிலைச் சேர்ந்த சபா ஹாலில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் எல்லாமே தரத்தில் உயர்ந்தவைகளே ! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை அனுபவிச்சுருக்கேன். பதிவுகளாக எழுதித்தள்ளியும் இருக்கேன் !
கேரள அரசரின் நேரடிப் பார்வையில் இருக்கும் கோவில் ! எனக்குத் தெரிஞ்சவரை, சாமி சொத்து சாமிக்கே !
நாம் கோவிலுக்குப்போய்ச் சேரும்போது மணி அஞ்சடிக்கப்போகுது. தெருவை அடைச்சுப் பந்தல் ! (இப்பெல்லாம் பந்தல்னா அது ஓலைப்பந்தல் எல்லாம் இல்லை. ஷாமியானாப் பந்தல்தான் ! )
வாசலில் ஒருபக்கம் தேர் நிக்கறது. கோவில்வாசலில் ரங்கோலி போட்டுக்கிட்டு இருக்காங்க ஒரு பக்தை !
https://www.facebook.com/share/v/1XfSYuREdr/
கோவில் முழுசும் உள்ளெயும் வெளியேயும் அட்டகாசமான அலங்காரம் ! மூலவரை ஸேவிச்சுட்டுப் ப்ரகாரம் வலம் வர்றோம். உற்சவகாலம் என்பதால் வாகனங்கள் எல்லாம் வரிசைகட்டி நிக்குது. சாதாரண நாட்களில் நல்ல ஸீத்ரூ கவர் போட்டு வச்சுருப்பதால்... எல்லாமே பளிச் !
பெருமாள் கோவிலாக இருந்தாலும்.... சிவன் சந்நிதியும் உண்டு. ஒரு காலத்தில் வெறும் மரத்தடியில் இருந்தவர் இப்போ மண்டபத்துக்குள் இருக்கார் !
யாகசாலையில் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு ! பக்தர்கள் உக்கார்ந்து தரிசிக்க, இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.
எல்லாமே அமர்க்களம்தான், போங்க !
உற்சவச் செலவுகளுக்காக ஒரு தொகை கொடுத்ததும் , பெரிய திருவடி பெருமாளோடு நம்மிடம் வந்தார் !
இசைவிழா ஆசை இருந்தாலும் ஏழுமணிக்குத்தான் நிகழ்ச்சிகள் ஆரம்பம் என்பதால் இன்னும் ஒருமணி நேரம் காத்திருக்கும் மனநிலை இல்லைன்னு கிளம்பிட்டோம்.
இன்றைக்கு ஒரு பதிவர்/ நண்பர்/ அம்மாவை சந்திக்கவும் நேரம் வாங்கியிருந்தோம். உங்களுக்கெல்லாம் தெரிஞ்சவர்தான். மூத்த பத்திரிகையாளர். நம்ம பத்மா மணி அம்மா ! மூப்பும், கொஞ்சம் உடல்நலக்குறைவும் சேர்ந்துக்கிட்டதால்..... பழைய உற்சாகம் இல்லை. கொஞ்சநேரம் பேசினோம். கொள்ளுப்பேத்தி, கொடுத்த தாம்பூலம் அருமை. குழந்தையின் தாயின் கையிலிருந்தத் தட்டை 'நான்தான் கொடுப்பேன்'னு வாங்கியது அழகு !
அங்கிருந்து திரும்பி வரும்போது சாலையில் பயங்கர ட்ராஃபிக். தி நகர் வர ஒரு மணி நேரம் ஆச்சு. நேரா ஜிஎன் செட்டி சாலை சங்கீதாதான் !
பணியாரம்னு மெனுவில் பார்த்துட்டுச் சொன்னேன். எண்ணி மூணேமூணு ! நாங்களும் மூவர்தானே ! அப்புறம் அவரவர் விருப்பம். மெனுவில் ஹிட்டு இட்லின்னு பார்த்துட்டு வாங்கினால்.... அது டம்ப்ளர் இட்லியாக இருந்துச்சு.... ப்ச்....
தொடரும்........... :-)
