Thursday, August 14, 2025

இன்றைய அரைநாள் கோவில்களுக்கு....... (2025 இந்தியப்பயணம் பகுதி 58 )

காலை உணவு.....  முடிச்சுட்டு வழக்கம்போல் சிகிச்சைக்குப் போனோம்.   சிகிச்சை முடிஞ்சதும் வழக்கம்போல் ஒரு செல்ஃபி. இந்த மருத்துவமனையில் என்னென்ன  மாதிரி சிகிச்சை நடக்குதுன்ற பட்டியலைப் பார்த்துட்டு ஒரு க்ளிக்.
அட்மின் சைடுலே இருக்கும் கீதா.... எனக்கு நல்ல ஒரு தோழி ஆகிட்டாங்க.  பொதுவா எல்லோருமே இனிமையாத்தான் பழகறாங்க.  ஒரு ரெண்டு நாளிலேயே... மனசுக்கு இணக்கமா ஆகிருது. 


                                                               
மதியம் ஒரு மூணு மணிக்குக் கிளம்பி திருவான்மியூர் போறோம்.  கோவிலுக்குத்தான்.  கலைக்கோவில்னு பெயர் ! நம்ம கலைமாமணி முத்தரசி அவர்கள் நடத்தும் நாட்டியப்பள்ளி! இங்கே நம்மூரில் இருக்கும் தோழியின் தாய். மகள் வீட்டுக்கு வந்து போகும்போது, நமக்கும் பரிச்சயமாகி, இப்போது நம்ம தோழியாகவும்  ஆயாச்சு. 

https://www.facebook.com/gopal.tulsi/posts/pfbid02bLQLcVPYcaFxCfxg2ADDetjWUS4cLtvVvex6RVeHHAJwqz81R9AjUSgeFJpz3RBUl
மேலே நம்ம வீட்டில் ! 

வீட்டில் இருதரப்பு அம்மாக்களும் இருப்பதால்.... நாம் போய் சந்திச்சுப் பெரியவங்க ஆசிகளை வாங்கிக்கணும்.

https://www.facebook.com/share/r/1CWWvPEDnS/
தமிழ்நாடு அரசு , இயல்  இசை நாடகம் என்னும் கலைத்துறையை வளர்ப்பதற்கு,  கலைத்துறையில் வெவ்வேறு பிரிவைச் சார்ந்த , கலைமாமணி விருது பெற்ற  கலைஞர்களில்   சிலருக்கு ,  மானியம்   வழங்கும் நிலையில்,  இவுங்களைத் தெரிஞ்செடுத்து,  ஒரு நாட்டிய நாடகம் தயாரிக்கச் சொல்லி இருக்காங்க.  அந்த வேலைகளில் இவுங்க மூழ்கிப்போகுமுன் இதோ... நாம் வந்து வாழ்த்திட்டுப் போறோம்.
அங்கிருந்து நேராப் போனது நம்ம அடையார் அநந்த பதுமனை, ஸேவிக்கத்தான் !  கோவிலில் இப்போ ப்ரம்மோத்ஸவம் நடக்குது.  மார்ச் நாலு முதல் பதினைஞ்சு தேதிவரை !  இதே நாட்களில் சைடு பை சைடாக  இசைவிழாவும் நடத்தறாங்க.

நம்ம  சென்னை வாழ்க்கையில் தினம்தவறாம இந்தக்கோவிலுக்குப் போயிருக்கேன். என்னுடைய இஷ்டக்கோவில் இது !  ஒரு தள்ளுமுள்ளும் இல்லாம  நிம்மதியாப் பதுமனை எவ்வளவு நேரமுன்னாலும் தரிசிக்கலாம்.  அதுவும் உக்கார்ந்தே !  

எப்ப சென்னைக்குப் போனாலும்,  இந்தக் கோவிலுக்குப் போகாமல் இருந்ததே இல்லை.  ஒவ்வொரு முறை போகும்போதும்.... நல்ல முன்னேற்றங்கள் கண்கூடு !  படுசுத்தமான பராமரிப்பு !  கோவிலைச் சேர்ந்த   சபா ஹாலில்  நடக்கும் இசை நிகழ்ச்சிகள் எல்லாமே தரத்தில் உயர்ந்தவைகளே ! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை அனுபவிச்சுருக்கேன். பதிவுகளாக எழுதித்தள்ளியும் இருக்கேன் !
கேரள அரசரின் நேரடிப் பார்வையில் இருக்கும் கோவில் ! எனக்குத் தெரிஞ்சவரை, சாமி சொத்து சாமிக்கே !

நாம் கோவிலுக்குப்போய்ச் சேரும்போது மணி அஞ்சடிக்கப்போகுது.  தெருவை அடைச்சுப் பந்தல் ! (இப்பெல்லாம் பந்தல்னா அது ஓலைப்பந்தல் எல்லாம் இல்லை. ஷாமியானாப் பந்தல்தான் ! )
வாசலில்  ஒருபக்கம் தேர் நிக்கறது. கோவில்வாசலில் ரங்கோலி போட்டுக்கிட்டு இருக்காங்க ஒரு பக்தை !

https://www.facebook.com/share/v/1XfSYuREdr/


கோவில் முழுசும் உள்ளெயும் வெளியேயும் அட்டகாசமான அலங்காரம் !  மூலவரை ஸேவிச்சுட்டுப் ப்ரகாரம் வலம் வர்றோம்.  உற்சவகாலம் என்பதால்  வாகனங்கள் எல்லாம் வரிசைகட்டி நிக்குது.  சாதாரண நாட்களில்  நல்ல ஸீத்ரூ கவர் போட்டு வச்சுருப்பதால்... எல்லாமே பளிச் !

பெருமாள் கோவிலாக இருந்தாலும்.... சிவன் சந்நிதியும் உண்டு.  ஒரு காலத்தில் வெறும் மரத்தடியில் இருந்தவர் இப்போ மண்டபத்துக்குள் இருக்கார் ! 
யாகசாலையில்  யாகம் நடந்துக்கிட்டு இருக்கு !  பக்தர்கள் உக்கார்ந்து தரிசிக்க, இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.
எல்லாமே அமர்க்களம்தான், போங்க ! 

உற்சவச் செலவுகளுக்காக ஒரு தொகை கொடுத்ததும் , பெரிய திருவடி பெருமாளோடு நம்மிடம் வந்தார் !
இசைவிழா ஆசை இருந்தாலும் ஏழுமணிக்குத்தான் நிகழ்ச்சிகள் ஆரம்பம் என்பதால் இன்னும் ஒருமணி நேரம் காத்திருக்கும் மனநிலை இல்லைன்னு கிளம்பிட்டோம்.

இன்றைக்கு ஒரு பதிவர்/ நண்பர்/ அம்மாவை சந்திக்கவும் நேரம் வாங்கியிருந்தோம்.  உங்களுக்கெல்லாம் தெரிஞ்சவர்தான். மூத்த பத்திரிகையாளர்.  நம்ம பத்மா மணி அம்மா ! மூப்பும், கொஞ்சம் உடல்நலக்குறைவும் சேர்ந்துக்கிட்டதால்.....   பழைய உற்சாகம் இல்லை. கொஞ்சநேரம்  பேசினோம். கொள்ளுப்பேத்தி, கொடுத்த தாம்பூலம் அருமை. குழந்தையின் தாயின் கையிலிருந்தத்  தட்டை 'நான்தான் கொடுப்பேன்'னு  வாங்கியது அழகு ! 
அங்கிருந்து திரும்பி வரும்போது  சாலையில் பயங்கர ட்ராஃபிக். தி நகர் வர ஒரு மணி நேரம் ஆச்சு.  நேரா ஜிஎன் செட்டி சாலை சங்கீதாதான் !

பணியாரம்னு மெனுவில் பார்த்துட்டுச் சொன்னேன். எண்ணி மூணேமூணு ! நாங்களும் மூவர்தானே !  அப்புறம் அவரவர் விருப்பம்.  மெனுவில் ஹிட்டு இட்லின்னு பார்த்துட்டு வாங்கினால்.... அது  டம்ப்ளர் இட்லியாக இருந்துச்சு....    ப்ச்....

தொடரும்........... :-) 

Monday, August 11, 2025

நட்புகளும் உறவுகளும்...... (2025 இந்தியப்பயணம் பகுதி 57 )

இன்றைய அரைநாள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும்தான் !  ஊர் ஊராய் மாநிலம் விட்டு மாநிலமாப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கைப் பயணத்தில் அந்தந்த சமயத்தில் கிடைச்ச நட்புகளைத் தொடர இயலாத  நிலைதான்.  முந்தி ஒரு காலத்தில் பேனா நட்புன்னு இருந்தது யாருக்காவது நினைவிருக்கா ?
 முகமறியா நட்பு.அதுக்குமே கொஞ்சம் மெனெக்கெடத்தான் வேணும். 
இணையத்தொடர்பு வந்ததும்தான், பழைய நட்புகளைத் தேடிப்பிடிப்பது கூட நடக்குது, இல்லே ?  வாழ்க்கையில் வந்த வசந்தம் போல.... யாஹூ குழு ஆரம்பிச்சு,  அதில் நம்ம தோழி  மதி கந்தசாமி நட்டு வைச்ச மரத்தடியில்  கூடியிருந்து , அதில் 'சந்திச்சு' நட்பானவர்கள் பலர். ஒவ்வொருவருக்கும்  மனதில் இருக்கும் ' எழுதும் தாகத்தை'த்  தீர்த்துக்கொள்வதுடன்,  மற்றவர்  எழுதுவதை வாசித்துப் பாராட்டி, 'ஊக்கு' விச்சுக்கிட்டு இருந்தது எல்லாம் நினைவிருக்கோ ?  

அப்புறம் கொஞ்சநாளில் 'தமிழ்மணம் 'என்றொரு மேடையை நமக்கு அளித்தார் காசி ஆறுமுகம்.  முழுமரத்தடியும்  இங்கே இடம்பெயர்ந்தோம்.  அவரவருக்குத் தனி வீடு  ஆச்சு! ஆரம்பமானது எங்கள் அட்டகாசம் !   'நாங்க மரத்தடி மக்கள்'னு சொல்லிக்கறதுலே ஒரு பெருமை வேற !  அந்த உணர்வு இப்பவும் இருக்குதான் !   வெளிநாடுகளிலோ, வெளியூர்களிலோ  மற்ற நட்புகளை சந்திப்பது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுன்னு ஏதோ வீட்டு விசேஷத்துக்குச் செய்வது போலத்தான்  உற்சாகமாக ஓட்டம் !  ஹூம்..... அதெல்லாம் ஒரு காலம்......

முதல் இணைய மகாநாடு நடத்தியதெல்லாம் நினைவிருக்கா ? 

https://thulasidhalam.blogspot.com/2005/03/blog-post_31.html

ஆனால் அந்த மரத்தடி மக்கள், 'நண்பர்களாக'  இப்ப இல்லை. எல்லோரும் குடும்ப உறவாக மாறியிருக்கோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத குடும்ப உறவு.  அன்பே ப்ரதானம் ! 

இந்த உறவில் நம் மறுபாதிகளுக்கும் இடமுண்டு ! நம்மவர்,  சிலவெளிநாடுகளுக்கு வேலை விஷயமாப் போகும் போது, அங்கே  இருக்கும் நம்ம  மக்கள், அவரை வந்து சந்திச்சு, விருந்து உபசாரங்கள் எல்லாம் நடத்தியிருக்காங்க !!!

ஊருக்குத் திரும்பும் நாள் சமீபிக்கிறது.  இந்த முறை  கூடுதல் லக்கேஜுக்காக ஏர்லைன்ஸுக்கு பணம் கட்டப்போறதில்லை.  வரவர அவுங்க செய்யும் அக்ரமம்  கூடிக்கிட்டே போகுது.  நாம் நியூஸியில் இருந்து  வரும்போது  முப்பது கிலோ வரை கொண்டு போகலாம்.  எங்க ரெண்டு பேருக்கும் அறுபது கிலோ. ஆனால் என்னத்தைக் கொண்டு போக ?   இங்கே என்ன இருக்கு ? எங்க ரெண்டுபேர் பெட்டிகளும் சேர்ந்தே  முப்பது கிலோ வர்றதில்லை.  பேசாம ரெண்டு ஆட்டுக்குட்டிகளைத்தான் கொண்டு போகணும்.....

ஆனால் திரும்பி வரும் பயணத்தில் ஆளுக்கு இருபத்தையஞ்சு கிலோதான் அனுமதி.  ஆளுக்கு அஞ்சுன்னு பத்துகிலோ போச்சு.  கூடுதல் லக்கேஜுக்கு  முதலிலேயே பணம் கட்டினால்  கொஞ்சம்  பரவாயில்லையாம். ஆனால் ஏர்ப்போர்ட்டில் செக்கின் சமயம்  கூடுதல் கனத்துக்குச் செலவு, ரெட்டிப்பு ! 

இந்தப்பயணத்தில் நடுவில் ஒருமுறை,  ஒரு பார்ஸல்  கம்பெனி மூலம்  மகளுக்கு அனுப்பிய பொருட்கள்  நல்லபடியாகப்போய்ச் சேர்ந்ததை மனசில் வச்சுருந்து,  இந்த முறையும் நம்ம அம்பது கிலோவுக்கு மேல் இருப்பதை பார்ஸலில் அனுப்பிடணும்.  அதனால் ஷாப்பிங் செஞ்சுக்கறதை முதலில் முடிச்சுக்கிட்டால்  பார்ஸலை அனுப்பிடலாம். வந்து சேர  எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் போல ஆகும் என்பதால்.....நியூஸி கிளம்ப ரெண்டு மூணு நாள் இருக்கும்போதே  அனுப்புவது உசிதம்னு திட்டம்.  வழக்கம்போல் குடும்பம் & நண்பர் கார்த்திகேயன் உதவிக்கு வருகிறார்.  இந்தக் கூரியர் கம்பெனியும் அவர் கண்டுபிடிச்சதுதான் ! 

நமக்குக் கூடுதலா சில ஜோடி செருப்புகள், ஷூ ன்னு வாங்கியாச்சு. மதியம் மூணு மணிக்கு  நம்ம தோழி ,  சிங்கை  எழுத்தாளர் ஜெயந்தி சங்கரை,  எழுத்தாளர்  ராமசந்திரன் உஷா  அவர்கள் வீட்டில் சந்திக்கறோம். எழுத்தாளர் அருணா சீனிவாசன் அவர்களும்  கலந்து கொள்கிறார்கள்.  எல்லோரும் நம்ம மரத்தடி மக்கள்னு தனியாச் சொல்ல வேணாம்தானே ? 
பேச்சும் சிரிப்பும்  தீனியும் காஃபியுமா நேரம் ஓடியே போச்சு !  உஷா வீட்டுச் செல்லம் என்னைக் குசலம் விசாரிச்சது.  

                                           
அங்கிருந்து புறப்பட்டு வேளச்சேரி.  நாத்தனார் வீட்டுக்குப்போய் , போயிட்டு வரேன்னு சொல்லிக்கிட்டோம்.  


அதன் பின்  மச்சினர் வீடு.  அவுங்களுக்கும் பேரன் பிறந்துருக்கான். நம்ம இவனைவிட ஒரு மூணு வாரம் பெரியவன் ! 
குழந்தை அங்கே இருந்ததால்.... கொஞ்சம் அதிகநேரம் இருந்துட்டுக் கிளம்பியாச்சு. 
போறவழியில் க்ரீம் ஸ்டோரின்னு ஒன்னு கண்ணில் பட்டது. ஊஞ்சல் போட்டுருக்காங்க !  இன்னொருநாள் வரணும். மூளையில் முடிச்சு !

இன்றைய டின்னர் நமக்கு ஸ்ரீகுப்தா பவனில் !   அவரவருக்கு வேண்டியதைச் சொன்னோம். 


நல்ல சுத்தமான  இடமும் உணவும்தான் ! கொஞ்சம் சுடச்சுட ஜலேபியும் கிடைச்சது !

 லோட்டஸுக்குத் திரும்பும் போது மணி பத்து !

தொடரும்........... :-)

Friday, August 08, 2025

மகளிர் தினமாம் ! (2025 இந்தியப்பயணம் பகுதி 56 )

  காலை லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்டில் வடகறி !
பகல்  ரெண்டுவரை எல்லாமே (புது )  வழக்கம்போல !  ஆனால் இன்றைய விசேஷம், நம்ம சாந்தா ஆயுர்வேத மருத்துவமனையில் மகளிர்தினக் கொண்டாட்டம் !  வாசலில் ரோஜாவுடன் வரவேற்பு.  சிலபல ஆயுர்வேத மருந்து மாத்திரைகளை வச்சு விளக்கம் சொன்னதோடு,  இலவச மாத்திரை மருந்து விநியோகமும் ! 
இதையெல்லாம் ச்சும்மா உக்கார்ந்துருக்கும் நேரத்தில் பார்த்து  அனுபவிச்சதோடு, இலவசங்களைக் கைப்பற்றி வச்சுருந்தார் நம்மவர் !

இன்றைக்குத் தம்பி அனந்து, நம்மை சந்திக்க வர்றதாச் சொல்லியிருக்கார். ஒரு மாசமா இதோ அதோன்னு போனாலும் நேரங்கள் சரியா அமையலை.  நம்மவருக்கும் இன்றைக்குப் பல் சிகிச்சைக்குப் போக வேணும். அவுங்களும் இதே நேரத்துக்குத்தான் வரச் சொல்லி இருக்காங்க. 
கோபாலையும் சந்திக்கணுமுன்னாக் கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு அனந்துக்குச் சேதி அனுப்பினேன்.  இவர் நம்முடைய துளசிதளத்தின் வாசகர். ஆரம்பித்த நாள் முதல் இன்னும் தொடர்ந்து வந்துக்கிட்டுத்தான் இருக்கார்.  வலை தந்த உறவுகளின்படி இவர் நமக்குத்தம்பி.  ஒடம்பிறந்தாளைப் பார்க்க வர்ற மாதிரிதான் எப்பவும்  'சீர்'  கொண்டு வர்றார். 

கோபால் கிளம்பிப்போனதும்.... நாங்க வீட்டுக் கதைகளையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம்.  மகர் ஸி ஏ முடிச்சுட்டார்.  கேட்கவே  ரொம்ப சந்தோஷமா இருந்தது. 

பல்வேலை முடிச்சு நம்மவர் திரும்பினதும், கிளம்பி நம்ம காப்பிக்கடையில் ஒரு டீ குடிச்சுட்டு, நங்கைநல்லூருக்குப் போனோம். 
  தினமும் ஷாப்பிங் லிஸ்ட் வந்துக்கிட்டே இருக்கு. முடிஞ்சவரை வாங்கிறனும். நம்ம காலத்துக்குப்பின்  இந்தியப் பயணம் வருவாளா என்பதே சந்தேகம்தான். இல்லையோ ! இன்றைய ஷாப்பிங் ரெடிமேட் புடவை.  நம்ம பேட்டை(தி நகரில்) கடைகளில்  தேடிப்பார்த்தும் கிடைக்கலை.  வலையில் தேடினால் இடம் காமிச்சது. போய்ச் சேர்ந்தோம். ஸ்ரீ சாய் ஸில்க்ஸ், 20, மூணாவது மெயின் ரோடு,  தில்லைகங்கா நகர், நங்கநல்லூர், சென்னை.

இந்தியாவின் முதல் கடையாம், இப்படி ரெடிமேட் புடவை தயாரிப்பில். மடிஸார் உட்பட எல்லா வகைகளும். 
எக்கச்சக்கமா தைச்சு வச்சுருக்காங்க. நாம் அளவு சொன்னாலும், நாமே புடவை வாங்கிப்போய்க் கொடுத்தாலும் தைச்சே கொடுக்கறாங்க.  ஆனால் இதுக்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை. மகளும் எப்பவாவதுதான் புடவை உடுத்திக்கறாள் , என் உதவி வேணும்  என்பதால்.... ரெடிமேட் கிடைச்சால்  தானே உடுத்திக்கலாம்தானே !
ஏறக்கொறைய நம்மவர் உயரம் இருக்கிறாள் என்பதால்  நம்மவரையே அளவுக்காக நிறுத்தினேன்.ஹாஹா..... வாங்கியது ஒரே ஒரு புடவைதான்.  சரிவந்தால் அடுத்த பயணத்தில் ரெண்டொ மூணோ வாங்கிப்போகலாம். 
கடை ஓனர், வந்து பேசிப் பரிச்சயப்படுத்திக்கிட்டாங்க. அவுங்க உடுத்தி இருப்பதும் ரெடிமேட் ஸாரிதானாம்.  அழகா இருக்கு.  உடம்பும் கொஞ்சம் ஒல்லி என்பதால்  கச்சிதமாப் பொருந்தி இருக்குதான்.  

அவுங்க கடை விளம்பரத்துக்காக யூ ட்யூபில் போட ஒரு வீடியோ க்ளிப் எடுத்துக்கவான்னு கேட்டுட்டு, நம் அனுமதியோடு ஒன்னு ஆச்சு. நம்மவர் ச்சும்மாப் பார்த்துக்கிட்டு நிக்கறாரேன்னு நம்ம செல்லிலும் அதை எடுக்கச் சொன்னேன். 

https://www.facebook.com/reel/781508421076771

கடையில் நல்ல கூட்டம். புடவை கட்டிக்கத்தெரியாத  இப்பத்து சின்ன வயசுப் பெண்கள்,  இப்படியாவது புடவை உடுத்திக்கணும் னு நினைக்கறதுகூட  ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். புடவைக்கு இருக்கும் மவுசு எப்பவுமே போகாது !  அந்த தொழிலும் நசிக்காது என்பதே பெருசு இல்லையா !!!!
அடுத்த விஸிட் நம்ம ஆஞ்சு.....  கோவிலுக்குள் நுழைய முடியாத அளவில் பயங்கரக்கூட்டம் & நெரிசல்.  கோவில் வாசலுக்கு எதிரில் தெருவுக்கு அந்தாண்டை நின்னு ஆஞ்சுவை தரிசனம் செஞ்சுக்கிட்டோம்.  படம் எடுக்கும்போது,  பின்னாலிருந்து யாரோ..... படம் எடுக்கக்கூடாதுன்னார்.  அது சரி. ஆனால் கோவிலுக்குள்ளில் இல்லையோ, அந்த விதி ? தெருவிலுமா ? 

அப்பப் பார்த்து மகளிடமிருந்து இன்னொரு லிஸ்ட்.  சலோ.... கைராசின்னு போய்  சில உடைகள் ஆச்சு.  ராத்திரியில் பாண்டிபஸார் நல்லா ஜிலுஜிலுன்னு இருக்கு !  எதிர்வாடையில் இருக்கும் கீதா கஃபேவில் நமக்கு டின்னர் !
ஹெல்த் & க்ளோவில் எனக்கொரு சின்ன ஷாப்பிங்.  ஸ்நேஹா.... ஓடிவந்து  நலம் விசாரிச்சாங்க.  
வாசலில் கொஞ்சம் பூ. நம்ம குழந்தைக்குத்தான் !  என் ஃபேவ் பூ இல்லையோ !!!
தொடரும்......... :-)