Monday, December 29, 2025

லங்காவித் தீவில் கொஞ்சநேரம்............

காலையில்  கண்விழிக்கும்போதே  ரொம்ப நடக்கவேண்டி இருக்குமோன்ற கவலை.... இப்போதையக் கொள்கைப்படி ரொம்ப எதிர்பார்ப்பு இல்லைதான்.   எவ்வளவு முடியுமோ அவ்வளவு போதும் !  மணி  என்னவோ ஆறேமுக்கால்தான்.. கப்பல் இன்னும் போய்க்கிட்டுத்தான் இருக்கு.   சூரியனைக் காணோமேன்னு பார்த்தால் இதோ இங்கிருக்கேன்னு  கரும் மேகத்துக்குள்ளிருந்து வெளியே எட்டிப்பார்த்தான். 
பத்துமணிக்கு வெளியே போகலாமுன்னு நியூஸ் லெட்டர் சொன்னது.  குளிச்சுத் தயாராகி எட்டுமணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஃப்ரெஷ் மார்கெட் ப்ளேஸ் (மாடி # 16) போனோம். மழை ஆரம்பிச்சு அடிச்சுப் பேயுது !  கஞ்சி தேடிப் போனேன். ஆ.... கிடைச்சுடுத்து !  நம்மவர் சொல்றார், 'கொஞ்சம் நல்லா சாப்பிட்டுக்கோ. போற இடத்தில் என்ன வசதியோ?'....
கஞ்சியுடன் ஒரு க்ரஸாண்ட், கொஞ்சம் பழங்கள் எனக்கு.  நல்லதா காஃபி போட்டு எடுத்துக்கிட்டு, நீச்சல் குளம் பக்கம் போய் உக்கார்ந்தோம்.  இதே மாடிதான்.  பத்தெட்டு நடந்தால் போதும். மழையை வேடிக்கை பார்த்துக்கிட்டே காஃபி குடிச்சு முடிச்சதும் 'ஸீ வாக்'  போகலாமேன்னு தோணுச்சு. கண்முன்னே இருக்கும்போது விடமுடியுதா ? ரொம்ப நீளமில்லை. ஒரு  பத்து மீட்டருக்கும் குறைவுதான்.



கரை கண்ணுக்குத் தெரிஞ்சது.  வந்துட்டோம்.  வேகம் குறைஞ்சு  லங்காவி க்ரூயிஸ் டெர்மினல் னு  பெயர் காட்டும் இடத்தில் போய் மெதுவா நின்னது.  மணி இப்போ ஒன்பதே கால்.  இன்னும் முக்கால் மணியில் போர்ட் சம்ப்ரதாயங்கள் எல்லாம் முடிச்சதும் கீழே இறங்கலாம்.   அறையில் இருந்து பார்த்தப்ப  ஆறேழு கார்கள் ..... அதிகாரிகள் போல !

மழை கொஞ்சம் நின்னதுன்னு நாம்  வெளியே இறங்கும்போது மணி பத்தரை. நம்ம கழுத்து மெடாலியன்தான்  செக்கவுட்டுக்கும் செக்கின்னுக்கும் ! இந்த ஊர் பெயர் லங்காவி. உள்ளுர் கலாச்சார உடையில்  சில பூமி புத்திரிகள், அங்கங்கே நின்னு நம்மை வரவேற்றனர்.  இந்தாண்டை  பூமிபுத்திரர்கள் சிலர்,   சில இசைக்கருவிகளை வாசிக்கறாங்க.

சிறுசும் பெருசுமா இருக்கும் 99 தீவுகள் கொண்டதுதான்  இந்த லங்காவி மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரம் லங்காவித்தீவு. கெடா மாநிலத்தின் பொன்கலம்னு ஒரு பெயர் !  இந்தக் கெடா மாநிலம் மலேசியா நாட்டுக்குட்பட்டது. கெடா  மாநிலம்தான் நாம்  பள்ளிக்கூடக் காலங்களில் 'கடாரம்'னு சரித்திரப் பாடங்களில் வாசிச்சது! (உண்மையிலான்னு எனக்குச் சரியாத்தெரியலை) மலேசியக் கரைக்கும் லங்காவிக்கும் இடையே முப்பது கிமீ தூரம்தான்.

செந்நிறக் கழுகுகள் ஏராளமா இருப்பதால் இந்தத் தீவுக்கு லங்காவின்னு பெயர்.  மலாய்ப்பெயர்தான் இது.  மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு (அட! ஆமால்லே... நாம் கூட  சாமியார்கள் உடையை காவின்னுதானே சொல்றோம். ) ரெண்டையும் சேர்த்து லங்காவின்னு பெயர் வச்சுருக்காங்க அந்தக் காலத்தில்.! ஊருக்குள்ளே போனதும் காவிக்கலர் கழுகைத் தேடணும்...
நம்ம கப்பலை இப்பத்தான்  முழுசாப் பார்க்கலாமுன்னா  எங்கே ? கப்பலை முழுசுமா ஒரு ஃப்ரேமில் அடக்க முடியாதுன்னு  பார்ட் பார்ட்டா க்ளிக்கினேன். அப்பவும் முன்பக்கம் தெரியலை.  க்ரூப் டூர் போக புக் பண்ணவங்களைக் கூட்டிப்போக கைடு கொடிபிடிச்சுக்கிட்டு நின்னுருந்தார். சீனர்தான். மொழிபிரச்சினை அறவே இல்லை ! ஒரு ஏழெட்டுப்பேர்  நம்மாண்டை, டாக்ஸி வேணுமான்னு  கேட்டாங்க. கேட்டதுலே ஒருத்தர் 'இங்கே எடுக்கலாமா இல்லே வெளியே போனதுமா 'ன்னு நாங்க பேசுனதைக் கேட்டுட்டு,  'நம்ம வண்டியில் வாங்க'ன்னு தமிழில் சொன்னார். ஆஹா.... எங்களுக்கும் மொழிப்பிரச்சினை இல்லை !!!!  வெளியே போய் புக் பண்ணணுமாம். கூடவே போறோம்.   இந்தப் பலகைப் பாதையே ஒரு முக்கால் கிமீ இருக்குமோ என்னவோ! என் கால்வலி, ஒன்னரை கிமீ ஈஸின்னதுபாருங்களேன்....   அதுக்கு ரெண்டாம் வாய்ப்பாடு தெரிஞ்சுருக்கு. கப்பல் முழுசாத் தெரியுதான்னு அப்பப்ப நின்னு க்ளிக்கறதை நிறுத்தலை. 
டூரிஸ்ட் இன்ஃபர்மேஷன் சென்டரைத் தாண்டினதும்  மீண்டும் மழை பிடிச்சுக்கிச்சு.  ஒரு சின்னக்குடை நம்மாண்டை இருக்குன்னாலும், பையில் இருந்து எடுக்கறதுக்குள்ளே பாதி நனைஞ்சுட்டோம்.   ஒரு குட்டித் திண்ணையில்  உக்கார்ந்து குடையைத்தேடுறார் இவர்.  அங்கே போட்டுவச்சுருக்கும் ஊஞ்சலில் நான் கொஞ்சநேரம்.  
அடிச்சுப்பேய்ஞ்சமழை  ஒரு நிமிட் இடைவெளி விட்டதும்,  நம்மைக் கூட்டிப்போனவர் , ஒரு டெண்ட் நோக்கி நடந்து ' இங்கேதான்  புக்கிங் 'என்றார்.  சுவாரஸியமான இடங்கள்னு ஒரு பத்துப்பனிரெண்டு இருக்காம்.  அங்கங்கே தகவல் போட்டு  வச்சுருக்குச் சுற்றுலாத்துறை !
'நாங்க ரெண்டே பேர்.  சாயங்காலம் ஆறரைக்குள் திரும்ப நம்மைக் கொண்டுவந்து இங்கே விட்டுடணும்'  என்றதும்  நானூறு ரிங்கிட் (மலேசியன் காசு)கொடுங்கன்னு வாங்கிக்கிட்டாங்க.  ட்ரைவரைக் கூப்பிடப் போகும்போது , தமிழ்பேசும்  ட்ரைவரை அனுப்புங்கன்னு கேட்டுக்கிட்டேன்.  ட்ரைவராக வந்தவர் நம்மை இங்கே கூட்டிவந்தவரே! பெயர் கேட்டதுக்குப் பெருமாள் என்றார் !  ஆஹா.... பார்த்தஸாரதி !    இங்கேயே இருங்க நான் 'தேர்' கொண்டுவர்றேன்னு  போனவரைப் பின் தொடர்ந்தோம். எல்லாம் வேன் டைப் !  

நாங்க ஏற்கெனவே முடிவு செஞ்சபடி, முதலில் அக்வேரியம் போனோம். அண்டர் வாட்டர் வொர்ல்ட் !   பத்தே நிமிட்தான் ஆச்சு. சாலைகள் நல்ல கண்டிஷனில் சுத்தமா இருக்கு ! உள்ளே போய் டிக்கெட் வாங்கும்போது,  அவுங்களாவே நமக்கு சீனியர் சிட்டிஸன்னுக்கான தொகையை வாங்கிக்கிட்டாங்க. முந்தி  கே எல்லில் பெட்ரோநாஸ் டவர் பார்க்கப் போனபோதும், இப்படித்தான் கேக்காமலேயே நமக்கு சீனியர் சிட்டிஸன் டிஸ்கௌன்ட் கிடைச்சது. ( அப்பவே கிழ முகம் வந்துருக்கு, இல்லே ?
                        
                               
ஒரு ரெண்டு மணிநேரம் போதுமாம், சுத்திப்பார்க்க.  நாங்கள்  திரும்பி வரும்வரை பெருமாள் காத்திருக்கணும். 

( சாம்பிளுக்குச் சில படங்களைப் பதிவில் போட்டுருக்கேன். மற்ற படங்களை ஒரு ஆல்பத்தில் போடணும். ஃபேஸ்புக் ஆல்பத்தில் போடவா ? )
அக்வேரியம் என்று மீன்கள் மட்டுமே அல்லாது, சில பறவைகளும் விலங்குகளும் கூட இங்கே இருக்கு .  பலவகைகள் இதுவரை நம் கண்ணில் படாதவைகளே!  நாம் இதுவரை கடல்வாழ் உயிர்களில்  கண்டது,  ஒரு கடுகளவு இருந்தாலே அதிகம் ! வானத்து நக்ஷத்திரங்கள் போலத்தான் கடல்வாழ் உயிரினங்களும்..... எண்ணவே முடியாது....
1995 ஆகஸ்ட் மாதம்தான் இதன் திறப்புவிழா நடந்தது. ஆச்சே முப்பது வருஷம், இல்லையோ ?  மலேசியாவின் மிகப்பெரிய  மீன்காட்சிசாலை என்ற பெருமை இதுக்கு இருக்கு.  வெப்பமண்டலக்காடு,  நதிகளின் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் இப்படி மூன்று பகுதிகளுக்கான   அபூர்வ மீன், விலங்கு, பறவைகள்னு காட்சிப்படுத்தியிருக்காங்க.
மொத்தம் ஆறு ஏக்கர் பரப்பளவு. நல்ல விசாலமான  கூடங்கள்.  ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணாக்கர்களுக்கும் கூட ரொம்பவே உதவியாக இருக்காம்.

டன்னலுக்குள் போய்,   சிலபல கடல்வாழ் உயிர்களைப் பார்க்கலாம். இந்த சுரங்கப் பாதையே பதினைஞ்சு மீட்டர்தான். ஏதோ பழுது பார்க்கறாங்க போல்.... பாதை மூடியிருந்தது. (பரவாயில்லை. இதைவிட ரொம்பவே நீளமான டன்னலுக்குள் எல்லாம்  வேறு நாடுகளில் போயிருக்கோம்)
வெளியேறும் பகுதியில் வழக்கம்போல் கடைகள்..... லங்காவித் தீவில் ட்யூட்டி ஃப்ரீ வியாபாரம்தானாம் ! பேரனுக்கு லங்காவின்னு ஒரு கழுகுப் படம் போட்ட சட்டை மட்டும்.

ஒன்னரை மணி நேரம் கடந்து நாங்கள் வெளியே வந்தப்ப  மணி ஒன்னு. பகல் சாப்பாட்டுக்கு எங்கேயாவது போகணும் என்று பெருமாளிடம் சொன்னதுக்கு, அவர்  'கிர்திகா கிச்சன்' கூட்டிப்போனார்.  மலேசிய இந்தியர் நடத்தும்  ரெஸ்ட்டாரண்டு. ஆர்டர் எடுக்க வந்த  பெண்ணிடம்,  நாங்க "ரோட்டிச்சனாய்'  சொன்னோம்.  பெருமாள் தனக்கு ஒன்னும் வேண்டாம் என்றார்.  கூட வருபவர்களை விட்டுட்டு சாப்பிடும் வழக்கம் நமக்கில்லாததால்.... அவரை வற்புறுத்தியதும்,  பனிரெண்டு மணிக்கே வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை சாப்பிட்டுவிட்டாராம்.  நோய் காரணம், நேரத்துக்குச் சாப்பிடணும் என்ற அவசியம் இருக்காம்.  அடராமா...... அப்போ ஏதாவது பானங்கள் ?  இளநி இருக்கே என்றேன்.



எனக்கும் இளநி வேணும். வெட்டிக்கொடுப்பாங்களான்னு கேட்டதுக்கு ரெஸ்ட்டாரண்ட் ஓனரம்மா..... அதுக்கென்ன....  தருவோமே என்றார்.   வெட்டி என்றால் ரெண்டாகப்பிளந்து.... பெருமாள் மோர் வாங்கிக்கொண்டார்.  இளநி அருமை ! உள்ளே தேங்காயும் அருமை ! 

ஓனரம்மாவிடம் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தேன். நல்லாவே தமிழ்ப்  பேசறாங்க.  சிவகாமி என்று பெயர்.  கணவர்  காவல்துறையில் வேலை.  ஒரு முப்பது வருஷமாச்சாம் இந்த ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பிச்சு ! பில் வந்தப்ப.... மோருக்கு காசு வேணாமாம்.  அது சரியில்லை. என்ன சாப்பிட்டோமோ அதுக்கான முழுத் தொகையும்  கொடுக்கணும் என்றதுக்கு, பெருமாள் அவுங்க உறவினராம்.  அதனால் அவர் சாப்பிட்டதுக்குச் சார்ஜ் இல்லைன்னுட்டாங்க. 
பெருமாள் ஒரு அஞ்சு நிமிட் குடும்ப சமாச்சாரங்கள் எதையோ விசாரித்தபின் அங்கிருந்து கிளம்பிப் போகும் வழியில் பெருமாள் சொல்றார், 'என்னிடம் காசு வாங்கமாட்டாங்க. அதனால்  நான் இங்கே வரவே மாட்டேன்.  டூரிஸ்டுகள்  மரக்கறி சாப்பாடு வேணுமென்றால் மட்டும் இங்கே கூட்டிவருவேன்' 
 
அடுத்து எங்கே போகலாம்னு பார்த்தப்ப, நம்மவர் ஸ்கை ப்ரிட்ஜ்ன்னார். போனபிறவிகளில் இவர் பருந்து.  எங்கே போனாலும் அந்த ஊரில் இருக்கும் உயரமான இடத்துக்குப்போய்ப் பார்த்தே ஆகணும் என்பார்.  அவர் பருந்து என்றால் நான் கருடன்.  கருடன் இருக்கும் ஈகிள் ஸ்கொயர் போகலாம் என்றேன்.

முதலில் ஸ்கை ப்ரிட்ஜ்.  இங்கிருந்து அரைமணி நேரப்பயணம்.  அங்கே இருக்கும் கேபிள் கார் ஸ்டேஷனில் இருந்து மலை உச்சிக்குப் போகணும். அங்கிருந்து SkyGlideன்னு கீழே போக  ஒரு குட்டி ரயில்பெட்டிபோல இருப்பதில் (inclined elevator one car    )   ஏறி  கீழே இருக்கும் ஸ்கை ப்ரிட்ஜ் ப்ளாட்ஃபார்ம் போகணும்.    இந்த ஸ்கை   ப்ரிட்ஜ் ப்ளாட்ஃபார்மிலிருந்து அந்த எதிர்மலையாண்டை போட்டுருக்கும் இன்னொரு ப்ளாட்ஃபார்ம் வரை இருக்கும் வளைவான பாதை (மரப்பலகைகளை அடுக்கி இணைச்சுருப்பாங்க. )  வழியாக நடந்து போய் வரணும். ஸ்கை வாக்    தொங்குபாலம்தான்.  125 மீட்டர் நீளம் .இதன் நடுவில் ஒரு இடத்தில் பலகைக்குப் பதில் கண்ணாடி ! கீழே பார்த்தால் கிடுகிடுப் பள்ளம். த்ரில் !

எப்படிப்போனோமோ அப்படியே திரும்பி டாப் ஸ்டேஷன் போய், கேபிள் கார் மூலம் அடிவாரத்துக்கு வந்துடலாம். நடந்துபோகத் தெம்பு இருந்தால்  டாப் ஸ்டேஷனில் இருந்து ஸ்கை ப்ரிட்ஜ் பளாட்ஃபார்ம் வரை போகப்  போட்டு வச்சுருக்கும் 320 படிகள் மூலம் போகலாம்.  திரும்பி வரும்போது அதே 320 படிகளில் ஏறி  வரணும். இதை எழுதும்போதே ஐயோன்னு இருக்கு  என் முழங்காலுக்கு. என்னடா.... பெருமாளே  இப்படியெல்லாம்..... (மனசுக்குள்ளேதான் முணுமுணுப்பெல்லாம்)


https://youtu.be/ERRuH_azBE0?si=i4p60_NWb8WC402L

மேலே இருக்கும் யூட்யூப் வீடியோவில் இந்த அனுபவம் பார்க்கக்கிடைச்சது.  கொஞ்சம் பெரிய வீடியோதான். ஆனால் சுவாரஸியமே!  நேரம் இருந்தால் பாருங்களேன் !


கேபிள்கார் ஸ்டேஷன் இருகும் மலையடிவாரம் போகும் பாதையே   மலைப்பாதைதான்.  நல்ல அகலமான பாதை, கொஞ்சம் கொஞ்சமா வளைஞ்சு வளைஞ்சுதான் போகுது. ஒரு காமணி நேரமானதும் மழைபிடிச்சது.  அப்படி ஒரு கனமழை.... இன்னும் காமணி போகணும் என்றிருக்கும்போது.....
 'இந்த மழையில் கேபிள்காரில் உச்சிக்குப் போறதும் கொஞ்சம் கஷ்டம்தான். போனாலும்  சுத்திவர 360 டிகிரியில் லங்காவி முழுக்கப்பார்க்க முடியாது. ஒரே மேகக்கூட்டத்தில் ஒன்னுமே தெரியாது. அப்புறமும் ஸ்கைவாக்னு ப்ரிட்ஜ் மேலே நடந்து போய் வர்றதும்  இந்த மழையில் முடியாத காரியம். அங்கே போய் மழை நிக்கும்வரைக் காத்திருக்கலாமா'ன்னார் பெருமாள்.
 கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்... இந்த மழையில்  ஒன்னும் முடியாதுதான்.... ப்ச்.
ரெண்டு நிமிட் யோசிச்ச நம்மவர்,  சரி. வேணாம். திரும்பிடலாம்னார். எனக்கு உள்ளுக்குள்  நிம்மதி.... பெருமாளே காப்பாத்திட்டேடா!!!

நான் மெதுவா  அப்ப அந்த ஈகிள் பார்க்னு சொன்னேன்.  அது ரொம்ப தூரம்னு.......... பெருமாள் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே பரவாயில்லை. இப்பதான் ஸ்கை ப்ரிட்ஜ் இல்லையே..... ஈகிளே பார்க்கலாம்னு நான் முந்திக்கிட்டேன்.    ஊருக்குள்ளே போய்க்கிட்டு இருக்கோம். எங்கே பார்த்தாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களே.....  வெளிநாட்டு மக்கள் ஃப்ளாட்டுகளை வாங்கிப்போட்டுருக்காங்களாம்.  பெருமாள் சொன்னவைதான்.

தமிழ்க்காரப்பயணிகள் கிடைச்சதில் பெருமாளுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. மனக்குறைகளைச் சொல்லி ஆத்திக்க ரெண்டு மக்கள் கிடைச்சாச்சு ! குடும்பக்கதை,  மனைவி போன கதை, மக்கள் தகப்பனைக் கவனிக்காமல் தம் விருப்பப்படி வாழ்வது, பேரக்குழந்தைகள்  இப்போது காட்டும் அன்புன்னு பலதும் நம்ம செவிகளுக்குள் புகுந்தன. ஒவ்வொரு கதைக்கும்  பொருத்தமான ஒரு தமிழ்ச்சினிமாப் பாட்டுவேற , பெரும்பாலும் எம் ஜி ஆர் & சிவாஜி கணேசன் நடித்த சினிமாக்களில் வந்தவை..... உண்மையிலேயே பொருத்தமான பாட்டுகளே ! நல்லாத்தான் பாடறார். ஒருமுறை ஒரு வரி மறந்தப்ப, நான் எடுத்துக்கொடுத்தேன் :-)
முக்காமணி நேரம், சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் கேட்டு, அப்பப்ப உச்சுக்கொட்டிட்டு, அங்கங்கே கொஞ்சம் க்ளிக்கிட்டு ஈகிள் சதுக்கம் வந்து சேர்ந்தோம். 

தொடரும்............. :-)

0 comments: