Friday, December 31, 2004

மனசே சரியில்லே.

இத்தனை உயிருங்க, (ஒரு லட்சத்துக்குமேலே இருக்குமாமே! ஐய்யோ) ஒரு நிமிசத்துலே உலகை
விட்டுப் போனதை நினைச்சு நினைச்சு மனசே சரியில்லே.



போனவங்களுக்கு அவுங்கவுங்க சம்பிரதாயப்படியும் நம்பிக்கைப்படியும் சவ அடக்கம் செய்யக்கூட முடியாம
போயிருச்சே. இதையெல்லாம் நினைச்சு நினைச்சு அவுங்க நெருங்கிய சொந்தங்கள் வாழ்நாளெல்லாம்
வருத்தப்படுவாங்களே.

இந்த நிலையிலே கொஞ்சம் பண உதவியைத்தவிர வேறு ஏதும் செய்ய இயலாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு,
என் கையாலாகாத நிலையை எண்ணித் துக்கப்படுவதைத்தவிர வேறு வழியில்லை.

உயிர் பிழைச்சவுங்க எல்லாம் இந்த பேரழிவு தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கையுடன் மறுவாழ்வு தொடங்க
நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதுதான் முக்கியம்.

அங்கே நடந்தவைகளையும், இப்போது என்னவிதமான நிவாரணப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன
என்ற விவரங்களையும் சக வலைப் பதிவாளர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிந்தது.

நிறையப்பேர் சேவை மனப்பான்மையோட உதவி செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சப்ப, அவுங்களையெல்லாம்
கையெடுத்துக் கும்பிடணும்ன்னு இருக்கு.

புது வருசத்துக்குன்னு சில பதிவுங்களை ஏற்கனவே எழுதி வச்சிருந்தாலும், இப்ப இருக்கற மனநிலையிலே
அதைப் பத்தி நினைக்கறதுகூட அபத்தமாப் படுது.

ஓரளவுக்காவது நிலமை சீரடைஞ்சாத்தான் இனி எழுதவே ஓடும்.

இந்தமாதிரி ஒரு பேரழிவு, உலகத்துலே எங்கேயுமே நடக்கக்கூடாதுன்னு மனசார வேண்டிக்கிட்டு இருக்கேன்.


0 comments: