Wednesday, July 31, 2019

அடுத்துப்போனது அபயகிரி விஹாரைக்கு! (பயணத்தொடர், பகுதி 124)

இங்கே ருவன்வெலிசாய விஹாரை விழாவை மனசில்லா மனசோட விட்டுட்டுப்போகும்போது கொஞ்ச தூரத்துலேயே இன்னொரு ஸ்தூபா. வழிக்கருகில்  இல்லாம கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.  ஸ்தூபாவை அடுத்து உள்புறமே அதைச் சுத்திக் கல் தூண்கள் வேலி கட்டுனமாதிரி!  தூபாரமா ஸ்தூபான்னு பெயர்.
ஆரம்பத்துலே இருக்கவேண்டிய  ஸ் ...  சைலண்ட் போல!  இதுவும் 3BCE காலத்துலே கட்டுனதுதானாம். புதுப்பிச்சதால் பளிச்ன்னு இருக்கு!
நமக்கு நேரம் இல்லைன்றதால் போறபோக்கிலே ஒரு க்ளிக். அபயகிரி விஹாரைக்கருகில்  போயிட்டோம்.

ரெண்டாயிரத்து நூறு வருசத்துக்கு முந்தி கட்டுனது.  செங்கல் கட்டுமானம். ரொம்பவே பெருசு. எல்லாமே  அரசர்கள் கட்டினவைகள்தான்.  ராஜ்ஜியம் முழுசும் கைவசம் இருக்கும்போது இடத்துக்கா பஞ்சம்?

 அரசர் வலகம்பா(கு) என்ற வட்டகாமினி அபயன் (நம்ம துட்டகாமினி மன்னரின் தம்பி மகன்.   சொந்த மகன் சலிய(ன்) காதலே பெருசுன்னு பட்டம் துறந்ததால்  சித்தப்பா குடும்பத்துக்கு அரசுரிமை போயிருச்சு, பாருங்க ) கட்டுன விஹாரை இந்த அபயகிரி.
 இதை சமீபத்துலே பழுதுபார்த்துருக்காங்க.  இருபத்திஎட்டு லக்ஷத்து முப்பத்துமூணு ஆயிரத்து, முன்னுத்தி நாப்பத்தியோரு செங்கல் செலவாகி இருக்காம் இந்த புனர் நிர்மாணத்துக்கு!  காசுக்கணக்கில் சொன்னால் அம்பத்திமூணு கோடி ரூபாய்!

இதுவும் பெரிய வளாகம்தான். ஆனால் உள்ளே போக சுத்துச்சுவரெல்லாம் இல்லை. பெரிய மரங்கள் அடர்ந்த இடத்தில் கம்பீரமா நிக்குது!

வாசல் படிக்கட்டுக்கு ரெண்டு பக்கமும் சின்னதா ரெண்டு சந்நிதிகள்.  பூமாலை கட்டித் தொங்கவிட்டாப்லே காகிதத்தில்  புத்த மந்திரங்களோ, இல்லை வேண்டுதல்களோ எழுதிக் கோர்த்துத் தொங்கவுட்டு இருக்காங்க. ஒரு பக்கம் வெள்ளை, அடுத்த பக்கம் சிகப்பு!

(நம்ம பக்கங்களில் கூட ஆஞ்சி சந்நிதியில் இப்படி ஸ்ரீராமஜெயம் னு எழுதுன காகிதங்களை மாலையாக் கட்டிப் போடறது உண்டுதானே? )
பத்துப்பதினொரு படிகள் ஏறி மேலே போறோம்.  பெரிய முற்றத்தில்  ரெண்டு பக்கங்களிலும் கல் தூண்கள். கூரை போட்டு மண்டபங்களா இருந்ததோ என்னவோ? அதுக்கு அந்தாண்டை  உயரமான பீடத்தில்  ரெண்டு குட்டிச் சந்நிதிகள்  ஸ்தூபா அமைப்பில்.


புதுப்பிக்கும் வேலை ஆரம்பிச்சது 1997 ஆம் ஆண்டு.  அநேகமா வேலை முடியப்போகுதாம் இப்போ. ஆச்சே இருபத்தியொரு ஆண்டுகள்!
மேலே படம்: கூகுளார் உதவி.  பழுதுபார்க்கும் வேலை நடக்கும்போது எடுத்தது



பொதுவா இந்த ஸ்தூபா அமைப்பில்  வட்டமாக் கிண்ணம் கவிழ்த்து வச்சாப்லயும்,  பூஜை மணியைப்போலும் இருப்பவைதான் பெரும்பாலும்.   கவிழ்த்த கிண்ணத்துக்கு உச்சியில் ஒரு கூம்பு கோபுரம் போலக் கட்டறாங்க. உள்ளே போகக் கதவுகள் கிடையாது.  புனிதச்சின்னங்கள் உள்ளே இருப்பதாச் சொல்றதை, கும்மாச்சி கோபுரம் கட்டும்போது உள்ளே இறக்கி வைப்பாங்க போல!  ரெலிக்ஸ் என்னும்  (கெடாத) மனித  உடம்பின் பாகங்கள்தான். எலும்பு, பல், தலைமுடி இதெல்லாம்  உயிர்போனபின்னும் அழியாதாமே!

சுத்திவர நாலுபக்கங்களிலும் வெளியே  மாடங்களில் புத்தர் சிலைகளை வச்சுருக்காங்க. பக்தர்கள் ஸ்தூபாவை வலம் வந்து நாற்புறமும் சந்நிதிகளில் கும்பிட்டுக்கறதுதான்.  அப்புறம் ஸ்தூபாவுக்கு எதிரில் அதை நோக்கி உக்கார்ந்து  தியானம், மந்திரங்கள் உருப்போடுதல், இல்லை சும்மாவே  லயித்தல்னு  இருக்காங்க.

 (பல விஹாரைகளில் கவனித்தவை )

காவலுக்கு இருக்கேன்னு ஒரு செல்லம் உக்கார்ந்துருந்தது!
பொழுது சாயறதுக்குள்ளே  இன்னும்  கொஞ்சம் சுத்தலாம், வாங்க.  இனி ஓட்டம்தான்....... விஸ்தரிச்சுப் பார்க்கவும் எழுதவும் கூட  நேரமில்லையே.....


தொடரும்.........   :-)



9 comments:

said...

இவ்வளவு பெரிய விஹாரை, ஸ்தூபாலாம் கட்டிட்டுப்போயிட்டாங்க, ஏகப்பட்ட பெரிய பெரிய படிகளோட..

எப்படித்தான் ஒவ்வொண்ணையும் நடந்து, ஏறிப் பார்த்தீர்களோ...நினைத்தாலே பெருமூச்சு வருது... ஆத்திர அவசரத்துக்கு சோடாக்கடை கூட பக்கத்துல இல்லை.

said...

மிகப் பெரியது.
அபயகிரி விகாரை பௌத்த துறவிமட கட்டிடத் தொகுதியாக இருந்தது என்கிறார்கள்.

said...

அருமை சிறப்பு

said...

ஸ்தூபா பெரியதாக இருக்கிறது. உங்கள் மூலம் இன்னுமொரு ஸ்தூபா பார்க்கக் கிடைத்தது.

ஒடிசாவிலும், பீஹாரிலும் பார்த்த ஸ்தூபாக்கள் மனதுள் வந்து போயின!

தொடர்கிறேன்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அந்தக் காலத்து மனிதர்கள் ரொம்பவே உயரமா இருந்துருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம் இருக்கு. படிகள் எல்லாம் உயரம் கூடுதல். சீனப்பெருஞ்சுவர் ஏறும்போதும் இப்படித்தான்....

ஒரு சமயம் நம்ம ஸ்ரீராமர் ஏழரை அடி உயரமானவர்னு ஒரு ஆன்மிகச் சொற்பொழிவில் கேட்டுருக்கேன். அது நெஜம்தான் போல.....

பயணத்துலே நடை தவிர்க்கமுடியாதே... கஷ்டப்பட்டாவது போய்ப் பார்த்துடணும். அந்த மனத் திருப்திதான் முக்கியம், இல்லையோ!

said...

வாங்க மாதேவி.

ஆமாம். நீங்க சொல்வது ரொம்பச் சரி. வளாகமும் சுற்றிலும் அமைந்த மடங்களுமா எவ்ளோ பெருசு! கட்டடங்கள்தான் அழிஞ்சு போச்சு...ப்ச்...

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒரே டிஸைன்தான் என்றாலும் அலுக்காமல் பெருசு பெருசாக் கட்டி இருக்காங்க, இல்லே?

said...

கம்பீரம் ...