Sunday, June 23, 2019

பட்ட கண்ணிலே படும் !

ஒரு மூணு வருஷத்துக்கு முந்தி  ரெடீனா விழித்திரை  விழுந்துருச்சுன்னு  சொல்லி இருந்தேன் பாருங்க..... அந்த விழித்திரையை மீண்டும் பொருத்தி வச்சு ரிப்பேர் வேலை நடந்துச்சு. அதுக்கப்புறமும் சர்ஜரியில் ஒரு பிரச்சனையாகி,  ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருந்துச்சு.  நாளாகும் சரியாகன்னு சொல்லிக்கிட்டே இருந்து மூணு வருஷமும் போன நிலையில் அதே கண்ணில்  ஒருமுறை ஐஓஎல் பொருத்துனாங்க.

ஐயோ..... இது ஒரு பெரிய கதை..... எங்கே இருந்து ஆரம்பிக்கன்னு கூட ஒரு குழப்பம்தான். இருக்கட்டும். இப்போதைய பிரச்சனை என்னன்னா....

அதேகண்ணில் பார்வை சரியாத் தெரியலை. சுத்துவட்டாரம் எல்லாம் தெரியுது. ஆனால் படிக்க முடியலைன்னார் 'நம்மவர்'. கண் டாக்டரை (அதே மருத்துவர்தான், விழித்திரை நிபுணர்)போய்ப் பார்த்தோம். அன்றைக்கு ஏப்ரல் தேதி ஒன்பது.

கண்ணில் ஒரு ஓட்டை விழுந்துருக்காம்.  (Macular hole developed ) போனமுறை அறுவை சிகிச்சையில் நடந்த பிரச்சனைதான் காரணம் என்று நான் நினைச்சுருந்தாலும்......     வயசானால் இப்படி சிலருக்கு நடக்குமுன்னு  டாக்டரும், கூகுளாண்டவரும் சொல்றாங்க.

அதுக்கும் ஒரு அறுவை சிகிச்சைதான் செஞ்சுக்கணும்.  இப்பெல்லாம் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டுருக்குன்னாலும்....  அறுவை சிகிச்சைக்குப்பின் நாம் என்ன செய்யவேணுமுன்னு டாக்டர் சொன்னதுமே எனக்கு வயிறே கலங்கிருச்சு.

அஞ்சு நாட்கள் தலையைக் குனிஞ்சு தரையைப் பார்த்துக்கிட்டே இருக்கணுமாம்.  (ஐயோ!)ஈஸ்டர் விடுமுறை காலம் இடையில் வந்துட்டதால்  மே மாதம் 6 ஆம் தேதி அறுவைன்னு முடிவாச்சு.

அட ராமா..... இந்தியப்பயணம் ஒன்னு போக ரெடியாகிக்கிட்டு இருந்தோம். மச்சினர் மகனுக்குக் கல்யாணம்.  குடும்பத்துலே மூத்தவர் என்ற ஸ்தானம் 'நம்மவருக்கு' இருப்பதால்  எல்லாத்தையும் முன்நின்று நடத்திக்கொடுக்க வேணுமாய் மச்சினர் குடும்பம் கேட்டுக்கொண்டதற்கிணங்க.....   முதலில் நம்ம ரஜ்ஜுவுக்கு ஹாஸ்டலில் இடம் இருக்கான்னு கேட்டு வச்சுக்கிட்டு, நமக்கான ஏர்லைன்ஸ் டிக்கெட்டையும்  வாங்கியாச்சு.
மே ரெண்டாம் தேதி கிளம்பிப் போகணும். இப்ப திடீர்னு கண்ணு ஓட்டைன்னா எப்படி?

 கல்யாணத்துக்குப் போய்வரும்வரை தாங்குமான்னு கேட்டதுக்கு, தாங்கலாம். ஆனால்  ப்ளேனில் இருக்கும் கேபின் ப்ரெஷர் காரணம், கண் முழுசாப் போயிடவும் ஒரு சான்ஸ் இருக்குன்னதும், கப்சுப்னு முதல் வேலையா டிக்கெட்டை மாத்தி எடுத்ததுதான்.  கேன்ஸல் செஞ்சாக் காசு ஒன்னும் திரும்பி வராது என்றபடியால்.....  ஒரு ஆறு மாசம் தள்ளிப்போடலாம்தானே!   ரஜ்ஜுவுக்கும் ஆறுமாசம் தள்ளிப்போடச் சொல்லிக் கேட்டுக்கிட்டோம். 

நம்ம ரஜ்ஜு இருக்கானே....  கேட்டரியில் ரொம்ப நல்ல பிள்ளைன்னு பெயர் வாங்கி இருக்கான்! (அடப்பாவி.... வீட்டுலே இல்லாத அக்ரமம் செஞ்சுட்டு...... அங்கே... யோக்கியனா இருக்கானே! ) 'நோ ஒர்ரீஸ், ரஜ்ஜு எனி டைம் 'னு சொல்லிட்டாங்க !

கண்ணைக் கண்போல் பாதுகாக்கவேணும் என்றபடியால்....  அறுவை சிகிச்சைக்கு  அவுங்க சொன்ன தேதி சரின்னு தலையை ஆட்டினோம். ரெண்டு நாளில் அதைப்பற்றிய விவரங்கள் அடங்கிய ஃபைல் நம்ம கைக்கு வந்தாச்சு.  சரியா இன்னும் நாலு வாரம் கழித்து......

தலைகுனிந்தபடியே எப்படி இருக்கணுமுன்னு வீட்டில் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சார்.  தலைகுனிவால் கழுத்தும் முதுகும்  வலி எடுக்கும். அதிலும் கழுத்துவலி சொல்லவே முடியாத அளவு. அடக்க ஒடுக்கமா இருப்பது எவ்ளோ கஷ்டம் தெரியுமோ?



கண்ட சாமான்களை வாங்கி வீட்டில் அடைச்சு வச்சுருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரே.... அந்த 'கண்ட சாமான்கள்' வச்சுதான் எக்ஸ்பெரிமென்ட்ஸ் நடந்துக்கிட்டு இருக்கு.  எதுக்கு வீடு முழுக்கத் தலைகாணி(தலையணை) எதுக்கு இத்தனை குஷன்ஸ்.....  ஹாஹா......   எல்லாம் இப்போ பயனா இருக்குல்லையா :-)
விதவிதமாக் கிடந்தும் இருந்தும், நின்றும் சேவை சாதிச்சுக்கிட்டே இருக்கார். நம்ம ரஜ்ஜு வேற 'அப்பாவுக்கு என்ன ஆச்சு?'ன்னு திகைச்சு அங்கங்கே நின்னு  தரிசனம் பண்ணிக்கிட்டு இருக்கான்! 

இதுக்கிடையில் இந்தத் தலைகுனிவுக்காகவே சில படுக்கை / மேஜை வசதிகள்  இருக்குன்னு டாக்டர் கொடுத்த தகவல்தாளில் இருந்ததைப் பார்த்து  அதில் கொடுத்துருந்த  நம்பரைக் கூப்பிட்டு விசாரிச்சோம்.  எப்போ சர்ஜரின்னு கேட்டுக்கிட்டு, அதுக்கு ரெண்டு மூணுநாட்கள் இருக்கும்போது  கொண்டுவந்து எப்படிப் பயன்படுத்தணும் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லித்தருவோமுன்னு சொன்னாங்க. இதுக்கு ஒரு தொகை வாடகையாக் கொடுக்கணும். சரி.

வலை எதுக்கு இருக்கு? அதுலே தேடுனதில் படமெல்லாம் போட்டுருக்கு.  வாடகையாக் கொடுக்கும் தொகையை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக் கொடுத்தால் விலைக்கே வாங்கிக்கலாமுன்னு  தெரிஞ்சது. அப்புறம் அவுங்களைக் கேட்டதுக்கு  நாம் ஏற்கெனவே  சொல்லி வச்சுருந்த அதே நபரைத் தான் தொடர்பு கொள்ளணுமுன்னு சொன்னாங்க. ரெண்டும் ஒரே கம்பெனி போல!

திங்கட்கிழமை சர்ஜரி என்னும் நிலையில் வெள்ளிக்கிழமை 'கிடக்கை' கொண்டுவர்றோமுன்னு கூப்பிட்டுச் சொல்லிட்டு அதே போல சொன்ன நேரத்துக்கு வந்தாங்க மரியா!

மஸாஜ் டேபிள் போல இருக்கு இந்த மடக்கு மேஜை /கட்டில். பிரிச்சு சரிப்படுத்தினாங்க.  எந்த அறையில் போடணுமுன்னு சட்னு தோணலை என்பதால் லிவிங் ஏரியாவிலேயே  டிவிக்கு எதிரில் போடச் சொல்லியாச்சு. ஆனால் டிவி பக்கம் கால் இருக்கணும் என்பது என் கண்டிஷன் :-)

இதுலே ஒருபக்கம் முகம் பதிப்பதுபோல் ஒரு  இடம். அந்த இடத்துலே இருக்கும் குஷனை எடுத்துட்டால் முகத்தை அதில் பதிச்சுக்கலாம். மஸாஜ் டேபிள் இப்படித்தானே இருக்கு.  ஆனால் நமக்கு இதுலேயே 24 மணி நேரமும் கவிழ்ந்து படுக்கணும் என்பதால் இன்னொரு பக்கம் மேஜையின் அடிப்பக்கத்தில்  ஒரு ஃப்ரேம் உள்ளே தள்ளி முடுக்கிட்டு அதுலே குதிரைலாட ஷேப்புலே (சைஸ் பெருசு)ஒரு அமைப்பு பொருத்திக் க்ளிப் போட்டாங்க. அதுலே ஒரு தனிக்குஷன். அதுக்கு ஒரு உறை வேற !  அதுலேயே பொருத்திக்க இன்னொரு தூளி அமைப்பு. அது நம்ம கையை வச்சுக்க.  அதானே கவிழ்ந்து கிடக்கும்போது தோள்களில் இருந்து தொங்கும் கைகளை என்ன செய்வதாம்?

அதை எடுத்துட்டு அடியில் ஒரு ஸ்டூல் வச்சால் லேப்டாப், செல்ஃபோன் வச்சுக்கலாம்.  ஒரேடியா இல்லாம அப்பப்பக் கொஞ்சம் பார்த்துக்கலாம்.  ரொம்ப போரடிச்சா, கால் பக்கம் இருக்கும்(!) டிவி கேட்டுக்கலாம்.

எப்படி குனிஞ்சே நடக்கணும்? அப்போ எப்படித் தலையை வச்சுக்கணுமுன்னு காமிச்சப்ப.... இது ஈஸிதானேன்னு தோணுச்சு. நாம் அபிவாதயே சொல்லும்போது கைகளை எப்படி காதாண்டை வச்சுக்கறோம்... அதே போலத்தான் வச்சுக்கணும்.  இன்னும் விளக்கமாச் சொல்லணுமுன்னா.....  அடிமைப்பெண் எம் ஜி ஆர் நடை. 

எல்லாத்தையும் நம்ம கூடவே நின்னு கவனிச்சுக்கிட்டு இருந்தான் நம்ம ரஜ்ஜு.  மரியாவும் பூனைப்ரியைதானாம்.  அவுங்களிடம் போய் தடவிக்கிட்டான் !  இனம் இனத்தோடு.....   ரொம்ப அழகா இருக்கான்னு பாராட்டு கிடைச்சதும்,  ரஜ்ஜு முகத்தில் லேசா ஒரு  பெருமிதம்..... சிரிச்சாப்லெ இருக்கு!
எப்படி என்ன எவ்ளவு நேரம் என்றெல்லாம் விளக்கிட்டு மரியா கிளம்பிப்போனாங்க. 'சிகிச்சைக்குப் போகும்போது மறக்காமல் ஒரு பெரிய தலையணை எடுத்துக்கிட்டுப் போங்கோ.   முன்ஸீட்டின் பின்புறம் அதைவச்சு ரெண்டு கையால் பிடிச்சுக்கிட்டு   அதுலெ தலையை வச்சுக் குனிஞ்சுக்கிட்டே  திரும்பி வரணும் ' என்ற கூடுதல் குறிப்பு வேற ! நம்முடைய கிடத்தல் முடிஞ்சு டாக்டரிடம் க்ளியரன்ஸ் வாங்கிட்டால், மரியாவுக்குத் தகவல் சொல்லணும். அவுங்க வந்து எல்லாத்தையும் ரீபேக் பண்ணிக்கொண்டு போயிருவாங்க. "எதுக்கு ரெண்டு நாள் முன்னால் கொண்டு வந்தேன்னா..... உங்களுக்கு எப்படிப் பயன்படுத்தினால்  வசதியாகத் தோணுதோ அப்படி ப்ளே அரௌண்ட் அண்ட் ஃபைண்ட் அவுட்"

இது போதாதா நமக்கு? மரியாவின் தலை மறைஞ்சதும்   தலைவைக்கும் பகுதியை அக்கு வேற ஆணி வேறன்னு பிரிச்சு மேய்ஞ்சாச்சு.  அதைக் கொண்டுபோய் 'கண்ட சாமான்'களில் ஒன்னான  மூவிங் ஸ்டேண்டில் பொருத்திப் பார்த்தார். நாலு க்ளாம்ஸ் அடியில் பிடிப்பிச்சால் இதை அதுலே மாட்டிக்கலாம்.   க்ளாம்ப்?  ஹார்டுவேர் ஸ்டோர் எதுக்கு இருக்கு? ஓடு......  ஓடினோம். வாங்கியாந்தோம். உயரம் கொஞ்சம் அதிகமோ?  மூவிங்லே இருக்கும் சக்கரத்தைக் கழட்டினால் ஆச்சு.   சனி ஞாயிறு ஒரே விளையாட்டுதான் :-) ப்ளே அரௌண்ட் ஒருமாதிரி முடிஞ்சது.

இதுக்கிடையில்  ரெண்டு வாரத்துக்குத் தேவையான  மளிகை, மற்ற தேவையான பொருட்கள், முக்கியமா ரஜ்ஜூ சாப்பாடு எல்லாம் வாங்கியாந்து ஸ்டாக் பண்ணியாச்சு.  'சம்பவம்' நடந்தபின் வீட்டில் தனியா விட்டுட்டுக் கடைகண்ணின்னு என்னால் போக முடியாது பாருங்க..... முக்கியமா நம்ம துளசிதளத்துக்கு ஒரு மாசம் லீவு வேணுமுன்னு விண்ணப்பம் போட்டாச்சு.  மனசு ஒரு நிலையில் இருந்தால்தானே எழுத முடியும், இல்லையோ?  சமாதானக்கேடு.......

சர்ஜரிக்கு நம்ம ரிப்போர்ட்டிங் டைம் மதியம் ஒன்னரை.  மூணு வருஷத்துக்குமுன் ரெடீனா சர்ஜரி செஞ்ச அதே இடம்தான். மகள் நம்மை அங்கே கொண்டு போய் விட்டுட்டு, சர்ஜரி முடிஞ்சதும் வீட்டுலே கொண்டுவந்து விடுவதாகச் சொல்லி இருந்தாள்.  'எதுக்கு வேலையில் இருந்து வரணும். நானே கொண்டுபோயிட்டுக் கொண்டு வருவேன்'னால் கேக்கலை.  'லஞ்சு டைமில் ட்ராப் பண்ணிருவேன். சாயங்காலம்  ஒன் அவர் பர்மிஷன் போட்டால் ஆச்சு'ன்னாள்.  தகப்பனுக்கு உதவி செய்யணுமாம்!  வாவ்..... அப்ப சரி.
இட்லி என்ற பகல் சாப்பாட்டைக் கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தேன்.  ஒருவேளை முழுமயக்கம் கொடுத்தால் வயிறு கொஞ்சம் காலியா இருந்தால் நல்லது இல்லையோ?
மகளுடன் ஹாஸ்பிடல் போய்ச் சேர்ந்தப்ப மணி ஒன்னு! முதலில் கையில் அடையாளப் பட்டி (இங்கத்து ஆதார் கார்ட் ! ) போட்டாங்க.  போனவாரமே  நமக்கு என்னென்ன அலர்ஜி, மத சம்பந்தமா என்ன தேவை, நம்ம உணவுப்பழக்கம், நாம் வழக்கமா எடுத்துக்கும் மருந்து, இதுக்கு முந்தி நடந்த அறுவை சிகிச்சைகள், அப்போ மயக்கமருந்து கொடுத்ததில் கோளாறு உண்டான்னு சகலமும் கேட்டுருக்கும் படிமங்களை நிரப்பிக் கொண்டுபோய்க் கொடுத்தாச்சு.

முதல் வேலையா வைஃபை பாஸ் வேர்ட் வாங்கி அவரவர் செல்லில் போட்டாச் :-) கடமை முக்கியம் இல்லையோ!!
காலணி,  நகைநட்டு, செல்ஃபோன், கார் சாவி இத்யாதிகளைப் போட்டு வைக்க நம்ம பெயரோடு ஒரு பை கொடுத்தாங்க.   நம்ம சாக்ஸுக்கு மேலேயே போட்டுக்க ஒரு ஆன்ட்டி ஸ்லிப் சாக்ஸ் கொடுத்ததும் போட்டுண்டார்.   மூணு வெவ்வேற நர்ஸிங் ஸ்டாஃப் வந்து  கண்ணுக்கு மருந்து போட்டுட்டுப்போனாங்க. ஒவ்வொருமுறையும் கைப்பட்டியைச் சரிபார்த்து எந்தக்கண்ணுன்னு விசாரிச்சு சம்ப்ரதாயமான வகையில்.
மகளைத் திரும்ப வேலைக்குப் போகச் சொல்லி அனுப்பினோம். இனி நான் சேதி அனுப்பும்வரை  அவள் தன் வேலையைப் பார்த்துக்கட்டும்....  மொத்த சர்ஜரியும் சுமார் மூணு மணி நேரமுன்னு சொல்லி இருக்காங்க. இந்தக் கணக்கில் பார்த்தால் நாலரை ஆகிரும்.
சரியா ரெண்டு மணிக்கு மருத்துவர் ஒருவர் வந்து விசாரிப்பெல்லாம் முடிச்சு 'நம்மவரை' உள்ளே கூட்டிப்போனார்.  நான்  தியேட்டர் வாசல் தெரியும் இடத்தில்  போய் உக்கார்ந்துக்கிட்டு மூடிய கதவில் கண்ணை நட்டேன்.
இதுக்குள் நமக்கு காஃபி, டீ எதாவது வேணுமான்னு அரைமணிக்கொருமுறை வந்து கேட்டுக்கிட்டே இருக்காங்க. வேணாம் வேணாமுன்னு தலை அசைச்சே எனக்குக் கழுத்துவலி.
அதுவரை காலியா இருந்த சிட்டிங் ரூம் கொஞ்சம் கொஞ்சமா நோயாளி(!)களால் நிறைஞ்சுக்கிட்டு இருக்கு.  அஞ்சு பேர் சிகிச்சைக்கு வந்துட்டாங்க.  ஐ ஓ எல் பொருத்தும் சிகிச்சைதானாம். எதுவாக இருந்தாலும் பெருமாளே காப்பாத்துன்னு வேண்டிக்கிட்டேன்.

இந்தக் கண் ஆஸ்பத்திரி, ஆபரேஷன் தியேட்டர்கள் மட்டுமே அடங்கியது. தனியார் உடமை.  அந்தந்த  கண் சிகிச்சை நிபுணர்கள் இந்த தியேட்டர்களைப் பயன்படுத்திக்கறாங்க. மொத்த ஊருக்கும்  அரசு மருத்துவமனை ஒன்னுதான் இங்கெல்லாம். அங்கேயும் அறுவை சிகிச்சைகள் செஞ்சுக்கலாம். முற்றிலும் இலவசம்.  என்ன ஒன்னு.... வரிசைக்கிரமப்படி வெயிட்டிங் லிஸ்ட்லே காத்திருக்கணும்.  இதே நிபுணர்கள்தான் அங்கேயும்  சஸ்த்திர சிகிச்சை செய்வாங்க. ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருப்பதால்  நாம் தனிப்பட்ட முறையில் செஞ்சுக்கறோம். மத்தபடி சிகிச்சை தருவதில் அரசு மருத்துவ மனைகளுக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கும் எந்த  வேறுபாடும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அரசு மருத்துவமனை இன்னும் கூடுதலா நல்லாவே இருக்கும் இங்கெல்லாம்.

ஒரு மூணேகால் மணி ஆகும்போது பார்த்தால் 'நம்மவர்' தலைகுனிஞ்சு நடக்க அவர் கைபற்றிக் கூட்டிவர்றார், உள்ளே கொண்டுபோன மருத்துவர்.  இந்த சிட்டிங் ஹாலில் ஒருபக்கம் சிகிச்சை முடிஞ்சு வர்றவங்களுக்கான  தனி இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.  கூடவே வந்த நர்ஸிடம் என்ன செய்யணும் என்றெல்லாம் விளக்கிட்டு, ரத்த அழுத்தம் பரிசோதிச்சாங்க. எப்பவுமே ப்ரெஷர் அதிகமுன்னு மருந்து எடுத்துக்கிட்டுத்தான் இருக்கார். இப்போ எகிறிக்கிடக்கு. 
அதுக்கான மாத்திரைகளைக் கொடுத்து முழுங்கச் சொல்லிட்டு தலையைக் குனிஞ்சு வச்சுக்க ஏற்பாடெல்லாம் செஞ்சு, குளிருக்குக் கம்பளி போர்த்திவிட்டு ஆசுவாசப்படுத்தினாங்க.
வந்ததுமுதல் ஒன்னுமே  குடிக்கலையே..... இப்பவாவது எதேனும் கொண்டுவரட்டான்னு பிலிப்பீனோ  நர்ஸின் அன்புத் தொல்லை. ஒரு கப் டீ சொன்னேன்.  வந்தது......     வெள்ளைக்காரவகை டீ ! தயாரிப்பு தெரியும்தானே....   கொதிக்கும் தண்ணீரில் டீ பேக் முக்கி எடுத்து  துளிப்பாலைக் காமிச்சு வெடவெடன்னு இருக்கும்.  யக்.....

மகளும்  அப்பப்ப சேதி அனுப்பி விசாரிச்சுக்கிட்டே இருந்தாள். 'அப்பா தியேட்டருக்குப் போயாச்சா? எவ்ளோ நேரமுன்னு சொன்னாங்களா? வந்துட்டாரா?  நான் கொடுத்துட்டுப்போன வால்நட்ஸ் சாப்பிட்டாயா?' இத்யாதி.....
'அப்பா வந்தாச்சு. ரெக்கவரி டைம் இப்போ.  ரெண்டுமூணு செக்கப் முடிஞ்சதும்   கிளம்பலாம்.  நாலரைக்கு மேல் கிளம்பிவா'ன்னேன். அதே போல ஆச்சு.
கிளம்புமுன் வலி நிவாரண மருந்து, மறுநாள் டாக்டரைப் பார்க்க வேண்டிய நேரம், இன்னும் என்னென்ன செய்யலாம், என்னென்ன கூடாதுன்ற  விவரம்,  ஒருவேளை எதாவது விரும்பத்தகாதது ஆச்சுன்னால் எந்த நம்பரில் டாக்டரைக் கூப்பிட்டுப்பேசணும் என்றெல்லாம் விளக்கமும் சொல்லி எல்லாத்தகவல்களும்  உள்ள ஃபோல்டரும் தந்தாங்க.
முக்கியமாக் கையில் போட்டுருக்கும் பச்சைப் பட்டி. இதைக் கழட்டவே கூடாது.  கண்ணுக்குள்ளே GAS நிரப்பி இருக்கு. கவனமா இருக்கணும். விமானத்துலே போகக்கூடாது. பல்மருத்துவர், வேறு எதாவது அறுவை சிகிச்சை இப்படி நமக்கு சிகிச்சை நடக்கும் பட்சத்தில் அவுங்களுக்கு  'கேஸ்' சமாச்சாரம் தெரிஞ்சுருக்கணுமாம்.

ஐயோ.... நடமாடும் கேஸ் ஸிலிண்டர் ! கேஸ் சமாச்சாரம் விளக்கும்போது ஆல்ரெடி எக்ஸ்பீரியன்ஸ்டுன்னு சொன்னேன் :-) ரெட்டீனா சிகிச்சையின்போதும் இதே கூத்துதானே ! என்ன ஒன்னு,  அப்போ  ஒரு 16  மணிநேரத் தலைகுனிவுதான். 

அறுவை சிகிச்சையின்போது தேவைப்பட்டால் அப்போ வெயின் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு  அறுவை சிகிச்சைக்கான  முன்னேற்பாடுகள் நடக்கும்போதே ஐவிக்கான ஊசியைக் குத்தி வச்சுடறாங்கதானே. அதை இப்போ எடுக்கும் வேலை பாக்கி இருக்கு.  நர்ஸம்மா வந்து ஊசியை எடுத்துட்டுக் கையில் ப்ளாஸ்டர் போட்டாங்க. அதென்னவோ தபதபன்னு  ரத்தம் வர ஆரம்பிச்சது. அழுத்திப்பிடிச்சுக் கொஞ்சநேரம் ஆனதும் இன்னொருக்காப் போட்டாங்க.

மெதுவா, ரொம்ப அதிராம வண்டியை ஓட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தோம். இனி தலையை நிமிர்த்தவே கூடாது.

போனமுறை நடந்தவைகளை சம்பவம் நடந்து முடிஞ்ச அடுத்த ஆண்டுதான் எழுதினேன்.  விருப்பமும் நேரமும் இருப்பின் பார்க்கலாம்.

கண் 1

கண் 2

இப்பவும்  ஒன்னரை மாசம் கழிச்சுத்தான் இந்தப் பதிவை வெளியிடறேன். 

வீட்டுக்குள் வந்து உக்கார்ந்ததும் ஓடிவந்து பார்த்த ரஜ்ஜுவிடம், அப்பா எப்படித் தலையை குனிச்சு வைக்கணுமுன்னு கேட்டதும்,  'இப்படி'ன்னு  செஞ்சு காமிச்சான், செல்லம்.
குடிக்கும் சமாச்சாரத்துக்கெல்லாம் ஸ்ட்ரா போட்டுக் கொடுத்துடுவேன்.  சாப்பாடு சாப்பிடும்போதுதான்...  ஊஞ்சலில்  சம்மணம் போட்டு உக்கார்ந்து தட்டை மடியில் வச்சுக்கிட்டு தலை  குனிஞ்சபடியே தட்டில் இருக்கும் உணவைக் கொஞ்சமாக் கையில் எடுத்து வாய்க்குக் கொண்டுபோயிடணும்.
ராத்திரி சாப்பாடு ஆனதும்  கொஞ்சநேரம் உக்காரச் சொல்லிட்டு அப்புறம்  தூங்க ஏற்பாடு ஆச்சு.  தலை வச்சுக்கும் குதிரைலாட ஃப்ரேமைத்தான்  இப்ப மொபிலிட்டி டிவைஸா பண்ணிட்டதால் அதைக் கட்டிலுக்கு முன்னால் வச்சு படுத்துப் பார்க்கிறார். அப்பாவுக்குத் துணையா ரஜ்ஜுவும் படுத்துட்டான். எனக்குக் காலை நீட்டக்கூட இடம் இல்லை....
இந்த  கண் விவகாரம் ஆரம்பிச்ச உடனே நான் முக்கியமான ஒரு நகையை எடுத்து அணிஞ்சுக்கிட்டேன்.  இன்னும் சுமார் ஒரு மாசத்துக்குக் கழட்டி வைக்கும் உத்தேசமே இல்லையாக்கும்! அதனால் சமாளிக்க முடிஞ்சது.

என்னதான் வீட்டுவேலைகள், நோயாளியைக் கவனிப்பது, ரஜ்ஜுவைப் பார்த்துக்கறதுன்னு காலை மாலை பறவைகளுக்கு  நேரத்துலே சாப்பாடு கொடுக்கறதுன்னு  ஓயாமல் செஞ்சுக்கிட்டு இருந்தாலும், எழுதும் கை என்னைக் கொஞ்சம் பாரேன்னு பிடுங்கி எடுக்குதுன்னுதான்  'சம்பவத்தை' எழுத ஆரம்பிச்சு அப்பப்ப எழுதிக்கிட்டு இருக்கேன் இப்போ!

அறுவை சிகிச்சை நடந்த மறுநாள் போஸ்ட் கன்ஸல்டேஷனுக்குப் பகல் ஒன்னரை மணிக்கு நமக்கான நேரம். போய்ச் சேர்ந்தோம்.  பெரிய தலையணையை முன்பக்கம் வச்சு அணைச்சுப்பிடிச்சுப் பின் ஸீட்டிலே உக்கார்ந்து வர்றார்.  தலை குனிஞ்சுருந்தாலும்  'பேக் ஸீட் ட்ரைவர்' வேலையைச் சரியாச் செஞ்சுக்கிட்டே வர்றார்.  எனக்கு வண்டியை ஓட்டி ரொம்ப நாள் ஆச்சு.  அல்லும்பகலும் நேரங்காலம் இல்லாம முழுநேர ட்ரைவரா இருந்த காலங்களே இப்போ மறந்துபோச்சுன்னாப் பாருங்க.  இவருக்குக் கண் செக்கப் இருக்கும் நாட்களில் மட்டும், ஆஸ்பத்ரியில் இருந்து  வீடு திரும்ப ஓட்டுவதோடு சரி.  முக்கியமா, மகளுக்கு ட்ரைவிங் லைசன்ஸ் கிடைச்சு அவளுக்குத் தனி வண்டி வாங்கிக்கொடுத்துட்டு,  நமக்கு ரெண்டு வண்டிகள் இருந்த காலம்போய், இவருடைய வண்டியை வித்துட்டு, நைஸா என்னோட வண்டியைப் பிடுங்கிக்கிட்டாரே அப்போ முதல்  எனக்கு நோ ட்ரைவர் வேலை.

டாக்டர் கண்ணைப் பரிசோதிச்சுட்டுக் கட்டுகளைப் பிரித்தபின் ( கை விரல்களை நீட்டி எத்தனைன்னு சொல்லுங்க எல்லாம் கிடையாது கேட்டோ)சில பல மெஷீன்மூலம்  கண்ணைப் பார்த்துட்டு,  சஸ்திர சிகிச்சையில் குழப்பம் ஒன்னும் இல்லை. நல்லபடியாகவே நடந்துருக்கு....   மக்கூலர் த்வாரம் சரியா மூடி இருக்கான்னு இப்போ தெரியாது.... கண்ணுக்குள் வீக்கம் இருக்கே!  இந்த ரெண்டுவகையான சொட்டு மருந்துகளை தினம் நாலுமுறை கண்ணுக்குள் விடணும்.  ஒன்னு ஒரு ஏழு நாட்களுக்கு. இன்னொன்னு நாலு வாரங்களுக்கு.

முக்கியமான ஒன்னு....  தலைகுனிவுதான்.  'சனிக்கிழமை ராத்ரி எட்டுவரை குனிஞ்ச தலை குனிஞ்சபடிதான்  கண்டிப்பாக'ன்னுட்டார்.  அப்ப 124 மணி நேரம்  இப்படி இருக்கணுமோ!!!   அடுத்த செக்கப் இன்னும் ஒரு வாரம் கழிச்சு!

வீட்டுக்குத் திரும்பி வரும்போதே  நம்ம பேட்டையில் நாம் வழக்கமா மருந்துவாங்கும் கடைக்குப்போய் மருந்துச்சீட்டைக் கொடுத்து  ரெண்டு செட்  சொட்டு மருந்துகளை வாங்கியும் வந்தாச்சு.

வீட்டுலேயே இப்படி உக்கார்ந்துக்கிட்டு இருப்பது  'நம்மவருக்கு' ரொம்பவே போர் தான் என்றாலும், வெளியே சுத்தி, காத்துலே பரவும் வைரஸ் சமாச்சாரங்களையும்,   காலநிலை மாறிவருவதால் எங்கே பார்த்தாலும் இருக்கும் ஃப்ளூ ஜுரத்தையும்  பிக்கப் பண்ணிக்கணுமான்னு மிரட்டி வச்சேன்.  கண்ணு இருக்கும் நிலையில் சளிப்பிடிச்சு, இருமல் வந்தாலும் ஆபத்து இல்லையோ.....

பல்லைக் கடிச்சுக்கிட்டு இருங்கன்னேன்.  அதான் துணைக்கு நானும் ரஜ்ஜும் இருக்கோமே :-)  டிவி கேக்கலாம்,  அப்பப்ப அட்டைப்பெட்டியின் மேல் வைக்கும் செல்ஃபோன், லேப்டாப் இதுகளில்  கொஞ்சூண்டு நாட்டுநடப்பைத் தெரிஞ்சுக்கலாம், ஸிடி போட்டுப் பாட்டு கேட்டுக்கலாம்....  வீட்டுக்குள்ளேயே நடக்கலாம்.  வேலை ஒன்னும் செய்ய முடியாது என்பதால்  வெவ்வேற இடத்துலே ஒரே போஸில் உக்காரலாம் இப்படி எத்தனை இருக்கு!

முதல்நாள் சரியாத் தூக்கம் வரலைன்னு மறுநாள் முதல் லிவிங் ஏரியாவில் போட்ட  மேஜைப்படுக்கையில் படுத்துத் தூங்கப் பழகிக்கிட்டார்.  நான்  அப்பப்ப எழுந்துவந்து பார்த்துட்டுப் போவேன். தலைமட்டும் குனிஞ்சபடி இருந்தால் போதும். சுத்திவர அடுக்கி வச்ச தலையணைகள் எல்லாம் திசைக்கொன்னாய் திக்கெட்டும் கிடக்கும்.  வாரி எடுத்து அடுக்கி வச்சுருவேன், ஆளைச் சுத்தி :-)
குப்புறப்படுத்தே கிடப்பதால்  முதுகு, இடுப்பு, பின்கழுத்தெல்லாம் ஒரே வலி.  அதான் மஸாஜ் டேபிள் இருக்கெ, மாஸாஜ் பண்ணினால் ஆச்சு. எடு அந்த டைகர் பாமை !! குட்டி டைகர்தான் வீட்டுலே என்னமோ சரி இல்லை.... அப்பா மடியில் ஏறி உக்காரமுடியலைன்னு ஒரே குழப்பத்தில் இருக்கு.  சுத்திச் சுத்திவந்து தகப்பனைப் பார்க்குது.  அதன் முகத்திலும் ஒரு கவலை !!!!



எளிதா ஜீரணிக்கும் வகையில்  சாப்பாடு கொடுத்ததால் வேற பிரச்சனை ஒன்னும் பெருசா இல்லை.  இப்படியே நாலுநாள் முடிஞ்சு அஞ்சாம்நாள் ஆனதும் மனசுக்குள் ஒரு பரபரப்பு. கௌன்ட் டௌன் ஸ்டார்ட்டட்!  ஒருவழியா 120 மணி நேரம் முடிஞ்சு கடைசி நாலு மணி நேரம்..... நாலு, மூணு, ரெண்டு, ஒன்னு, அரை, கால், பத்து நிமிட், அஞ்சு....  மெள்ள சாமி அறைக்குக் கூட்டிப்போய் ....    டடா ....  தலையை உயர்த்திக் கண்ணைத் திறந்து, பெருமாளைப் பாருங்க......
இப்ப தலையை உயர்த்தி நல்லாவே ஒரு பத்து நிமிட்  உக்கார்ந்துட்டு, கழுத்துவலி எல்லாம் போக சூடா ஒரு ஷவர் எடுத்தால் போதும். ஆனால் தலைவலிக்கறதோடு, தலை சுத்தறமாதிரியும் இருக்காமே.....   அட ராமா....

இன்றைக்கு நல்லபடியா நிமிர்ந்தே படுத்துத் தூங்கலாமுன்னு நினைக்கும்போதே.... ஹப்பா... வாட் அ ரிலீஃப்....

அதுமட்டுமா..... டிவி பார்க்கலாமில்லை !!!!  ஒரு கண்ணை மூடிக்கிட்டுத்தாம்மா பார்க்கிறேன்னு சொன்னதை நம்பாமல்  ஒரு கண் பட்டியும் போட்டுக் கடல்கொள்ளைக்காரனாக்கினேன் :-)

ஒரு வாரம் ஆனதும் செக்கப்புக்குப் போனோம். கண்ணில்  ஒரு உறுத்தல் இருக்காம்.  இமைகளை மூடும்போது  என்னவோ குத்தறது போல.....  கடைசியில் டாக்டர் செக் பண்ணினப்போ.....  கண்ணுக்குள் போட்ட தையல்கள் சில, தானே கரையாமல்  காத்துருக்கு.   அவைகளை உருவி எடுத்துட்டார். ஏன் டிஸ்ஸால்வ் ஆகலையாம்?  ப்ச்....

மருந்தைத் தொடர்ந்து போடச் சொன்னாங்க. அடுத்த முறை செக்கப்   இன்னும் நாலு வாரத்தில். ஜூன் 12.
இனி தலைகுனிவு இல்லை. நம்ம மரியாவுக்கு ஃபோன் செஞ்சதும்,  பக்கத்துப்பேட்டைக்கு வந்துருப்பதால், அப்படியே  நம்ம வீட்டுக்கும் வந்து  மடக்கு மஸாஜ் மேஜையை எடுத்துக்கிட்டுப் போறேன்னு சொல்லி  ஒரு மணியில் வந்தாங்க.  நம்ம ரஜ்ஜுவைத் தேடுனாங்க. அப்பா, அப்பான்னு கூடவே இருந்தவன்,  தலைகுனிவு இனி இல்லைன்னதும் அவனும் ஊர் சுத்தப் போயிட்டான்.
மரியா காரைக் கிளப்பின அடுத்த நொடியில் எங்கிருந்தோ ஓடி வந்தவனைப் பார்த்துக் கையாட்டிட்டு அவுங்க போனாங்க.  லேட் பண்ணிட்டயே ரஜ்ஜூ.....
பாவம்.... 'நம்மவர்' வெளியே சுத்த முடியலை....  லிமிட்டட் அவுட்டிங்தான். அப்படியும் நம்ம வீட்டாண்டை இருக்கும் சூப்பர்மார்கெட் வரைக் கூட்டிக்கொண்டு போனேன்:-)  எல்லாம் இந்த சொட்டு மருந்து போடும் நாள் முடியும்வரை இப்படித்தான்னு தீர்மானமாச் சொல்லியாச்.

இன்னும் பார்வை சரியாகலை. மசமசன்னு தெரியுதாம்.  கண்ணில் கேஸ் இருக்கே!  அதுவும் தானாகவே கொஞ்சம் கொஞ்சமா  ஆவியாகி மறையணுமாம். அதனால்  பச்சைப்பட்டை எச்சரிக்கை அப்படியே இருக்கு.
இப்படியாக மருந்து போட ஆரம்பிச்சு சரியா நாலு வாரங்கள்  (28 X 4 ) முடிஞ்சதும் நம்ம பேட்டையில் இருக்கும் கடைகளுக்கு  ஒரு முறை கூட்டிப் போனேன்.  (இல்லைன்னா  எனக்கும் விண்டோ ஷாப்பிங் செய்யறது மறந்துடாது?)

என் காத்திருப்பெல்லாம் ஜூன் 12க்குத்தான். இதுக்கிடையில் எங்க திருமணநாள் வேற வந்துச்சு. கொண்டாடும் மனநிலை இல்லைன்னாலும்..... நாப்பத்தியஞ்சு வருஷத்தை விட்டுட  மனசில்லை. நம்மூரில் புதுசாத் தொடங்கி இருக்கும் ஸ்ரீஜகந்நாத் ரெஸ்ட்டாரண்டுக்கு லஞ்சுக்குப் போய் வந்தோம். நம்ம  ஹரேக்ருஷ்ணா கோவில் பக்தர்தான் இதை நடத்தறார்.  விழாவை நிறைவு செய்யக் குறைஞ்சபட்சம் கோவிலுக்குப் போய் வந்துடணும். போனேன் வந்தேன்னு போய் வந்தாச்சு.  நம்ம கோவிலில்  உச்சிகாலப் பூஜை இப்பெல்லாம் இல்லை.  சாயங்காலம் ஆரத்தி மட்டும்தான்.

குடும்பத்தோடு கொண்டாடணுமுன்னு  மகளோடும் மருமகனோடும் ஒரு சின்ன விருந்து அந்த வீகெண்டில். வெளியே போய் சாப்பிடுவது(ம்) ஒரு கொண்டாட்டம் தானே!

இன்னும் பார்வை சரி ஆகலை. கண்ணில் இருந்த கேஸ் பப்பிள்  போயிருச்சுன்னு சொன்னார். ஆனால் கண்ணின் வெள்ளைப் படலத்தில் ஒரு குண்டூசி முனை அளவு சிவந்து இருக்கு. அங்கே ஏதோ உறுத்தலா இருக்காம். இன்னொன்னு  லேசாப் பார்க்க முடியுதுன்னாலும் எல்லாமே கொஞ்சம் சின்ன சைஸில் தெரியுதாம்.  (அட!  அப்ப நானும் ஒல்லியா, இளமையாத் தெரியணும் !  வாவ்.....    )

ஜூன் 12 ஒரு வழியா வந்தது.  கண்டாக்டரைப் போய்ப் பார்த்தோம்.  ஏபிஸிடி எல்லாம் தெரியுதான்னு பார்த்துட்டு ( சில வரிசை எழுத்துக்கள் தெரியலைன்னு தடுமாற்றத்தோடு  வாசிக்க முயலும்போது எனக்குப் பாவமா இருக்கும்.... ) ஸ்கேன் செஞ்சுக்கிட்டு, அதன் பிறகுதான் டாக்டர் தரிசனம்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எல்லாம் நலமே! பரிசோதனையும் ஆச்சு.   அந்தக் கண் உறுத்தல்?  கரைஞ்சுருக்க வேண்டிய  இன்னொரு தையல், உள்ளிருந்து வெளியே வந்து தலை காமிக்குது. அதையும் உருவின பிறகு உறுத்தல் நின்னது. இன்னும் சில நாட்களுக்கு  அந்த சொட்டு மருந்தைத் தொடரணுமாம்.

அடுத்த  அப்பாய்ன்ட்மென்ட் இன்னும் அஞ்சு மாசத்தில் !

இன்றைக்குக் கண் பரிசோதனைக்காக மருந்து போட்டுருப்பதால்.... நாளை முதல் ட்ரைவ் பண்ணலாம்.  பச்சைப்பட்டையை வெட்டிப் போட்டாச்!
இப்பெல்லாம் மருத்துவ  சிகிச்சை முறைகள் எவ்வளவோ மாறி இருக்கு!  அதிலும் கண் சமாச்சாரங்களில் பலத்த முன்னேற்றம்.  பழைய காலங்களில்  ரெடினா அறுந்து விழுந்தாலோ,  மக்கூலர் த்வாரம்  ஏற்பட்டு, மத்தியில் பார்வை போனாலோ.....   என்ன ஏதுன்னு விவரம் இல்லாமல்,  'நல்லாத்தான் இருந்தார், திடீர்னு கண்ணு தெரியாமப் போச்சு'ன்னுருவாங்க.

கண்கள் பற்றிய ஒரு 'விழி'ப்புணர்வு வரட்டுமேன்னுதான் நம்ம அனுபவத்தை விஸ்தரிச்சு எழுதிவச்சேன்.

இதுவரை பொறுமையாக வாசித்த நண்பர்களுக்கு நன்றி !


26 comments:

said...

அருமையான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைப்பதிவு. விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகள்.

said...

ரொம்பப்பொறுமை, அசாத்திய மன உறுதி. ஆனால் இப்படி ஏதோ இருக்கும், அதான் விடுமுறைனு மனசிலே அன்னிக்கே தோன்றியது. எப்படியோ எல்லாம் நல்லபடி முடிஞ்சது இறைவன் அருள்! எங்கள் பிரார்த்தனைகளும்!

said...

கஷ்டமான நேரத்தை எப்படிக் கையாளணும்னு என்பதற்கு இதை ஒரு பாடமாக வைச்சுக்கலாம், வைச்சுக்கணும்.

said...

எனக்கு எந்தக் கஷ்டத்தினால் ஒரு மாதம் விடுமுறை விட்டீங்க, இதுவா இருக்குமோ அதுவா இருக்குமோ என்று ஒரே நினைவு.

பரவாயில்லை. செளகர்யம் நிரம்பிய ஊரில் இருப்பதால், சமாளிக்க முடிந்தது. இப்போது சரியாகிக்கொண்டு வருவது நிறைவு அளிக்கிறது. இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்று ஆறுதல் சொல்லிக்கணும்.

பதிவு முக்கியமான செய்திகளைச் சொல்லுகிறது.

said...

அருமையான விழிப்புணர்வுப்பதிவு. கோபால் அண்ணா விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகள்.மிகுந்த பொறுமை, அசாத்திய மன உறுதி. எல்லாம் நல்லபடி முடிஞ்சது இறைவன் அருள்.எப்போதும் எங்கள் பிரார்த்தனைகள். :-)

said...

thank god.
tough experience.
nice narrative for us to handle situations.
Thanks.
Wish Gopal sir a speedy recovery for more enchanting trips.

said...

இந்த கண் விவகாரம் ஆரம்பிச்ச உடனே நான் முக்கியமான ஒரு நகையை எடுத்து அணிஞ்சுக்கிட்டேன்.//

பொறுமை என்ற நகை அணிந்து பத்திரமாய் கோபால் சாரை கவனித்து அந்த கஷ்டமான பொழுதை கடக்க வைத்து விட்டீர்கள்.

ரஜ்ஜூவின் தவிப்பு , அப்பா எப்படி தலைகுனிந்து இருக்கிறார் என்பதை செய்து காட்டியது எல்லாம் நெகிழ்வு.

முதலில் பெருமாளை போய் பார்த்த போது மனம் நெகிழ்ந்து விட்டது, பெருமாளே ! கண் நல்ல தெரியவேண்டும் என்று நானும் வேண்ட ஆரம்பித்து விட்டேன் படித்துக் கொண்டு வரும் போது.

நல்லபடியாக திருமண நாளை குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வைத்த பெருமாளுக்கு நன்றி.

said...

நல்ல படியாக குணமடைந்து விட்டார் எனத் தெரிந்து மனதில் நிம்மதி.

ஆண்டவனின் பூரண அருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

said...

தவிர்க முடியாத காரணத்தால்தான் விடுமுறை எனநினைத்தேன். திரு. கோபால் அவர்கள் நலம்பெற வேண்டுகிறோம்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி !

said...

வாங்க கீதா.

என்ன அசாத்ய மன உறுதி? அப்போ தெரியலை.... பெருமாளே நீயே கதின்னு அவன் காலடியில் விழுந்தேன்.... இப்போ உங்க பின்னூட்டம் பார்த்ததும் கண்ணில் குளம் !

பிரார்த்தனைகளுக்கு நன்றிப்பா !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நல்லபடியா முடிஞ்சாட்டுச் சொல்லலாமுன்னுதான் ......

டாக்டரும்.... சர்ஜரி ஓக்கேன்றாரே தவிர.... சரியாப் போச்சுன்னு சொல்லவே இல்லை பாருங்க..... ஜூன் 12 வரை ஒரே திக் திக்தான்.....



said...

வாங்க கிருபா,

பிரார்த்தனைகளுக்கு நன்றி !

said...

வாங்க நன்மனம்.

நம்ம நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல் சௌகரியமுள்ள ஊரில் இருந்ததால் தப்பிச்சோம். கொஞ்சம் கடினமான அனுபவம்தான்....

பெருமாள்தான் காப்பாத்தினார்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

நகையை நீங்கமட்டும்தான் கவனிச்சுருக்கீங்க !!! டிஸைன் நல்லா இருந்ததோ????

ரஜ்ஜூ பாவம்.... குழந்தை ரொம்பவே தவிச்சுப் போயிட்டான். தினமும் அப்பா மடியில் படுத்துக்கணும். அது இல்லைன்னதும் கண்ணில் குழப்பம்....

இந்தத் திருமண நாளை சின்னச் சின்னதா நாலைஞ்சு முறை கொண்டாட வச்சுட்டான் பெருமாள்! இன்றைக்குத்தான் நம்ம ஊர் ஹரே க்ருஷ்ணாவில் நம் மணநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டின்னர் நம்ம வகையில். தெரிந்த, தெரியாத பக்தர்களின் வாழ்த்துகள் மனநிறைவைக் கொடுத்தது உண்மை!

இறைவன் சந்நிதியில் வச்சுக் கோவில் நிர்வாகம் இன்னும் ஒரு 45 வருஷம் இருந்து மணநாள் கொண்டாடுங்கோன்னு வாழ்த்தியபோது எனக்கு கண்ணில் குளம் கட்டியது...

உங்கள் வேண்டுதலுக்கு மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஓரளவு நல்ல முன்னேற்றம் இருக்கு, பார்வையில் ! உங்கள் பிரார்த்தனைகளுக்கு எங்கள் நன்றி !

said...

வாங்க மாதேவி.

கோபால், குணமடைந்து வருகிறார் ! வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !

said...

விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்தனைகள்!

said...

வாங்க ராமலக்ஷ்மி,

மனம் நிறைந்த நன்றி !

said...

கடினமான நேரங்கள் மா..இறை அருளால் கடந்து வந்துடீங்க ...

நலம் பெருகட்டும் ...

ரஜ்ஜூ தலை குனித்து இருக்கும் படங்கள் ..அசோ SO SWEET..என்ன அன்பு

said...

Glad to know that Mr.Gopal Sir is recovering now. Take care.
- Gandhi

said...

வாங்க அனுப்ரேம்,

ரஜ்ஜுவின் மற்றொரு பக்கத்தை அந்நாட்களில் பார்த்து வியந்தேன். என்ன ஒரு அறிவு செல்லத்துக்கு !

said...

வாங்க காந்தி,

மிகவும் நன்றி !

said...

சார் பூரணகுணமடைய என் பிரார்த்தனைகள்.
வீட்டுச்செல்லங்களுக்கு வீட்டில் யாருக்காவது உடம்பு முடியலனைன்னா அவங்களுக்கு நன்றாகவே புரியும். எங்க வீட்டில் இருந்த ரோஸி ஞாபகம் தான் வந்தது ர்ஜ்ஜுவின் செய்கையை வாசித்து..விரிவாக நகைசுவையோடு எழுதுயிருக்கீங்க டீச்சர்.

said...

வாங்க ப்ரியசகி,

துன்பம் வரும் வேளையில் சிரிங்கன்னு சொல்லி இருக்காங்க.....

பிரார்த்தனைகளுக்கு நன்றிப்பா.

said...

Very touching.. Informative. superb narration.
Hats off to you and your husband. Thanks for sharing.