Wednesday, January 05, 2005

பேரழிவில் சிக்கிய 'கிவி'க்கள்!

இங்கிருந்து தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா இன்னும் மற்ற சுநாமி பாதித்த இடங்களுக்கு
விடுமுறையில் சென்றவர்கள் அநேகமாக அனைவரும் தப்பித்துவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 23 பேரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.


உயிரிழந்தவர்கள் மிகச் சிலரே என்பதில் ஒரு நிம்மதி இருந்தாலும் பாதிப்பால் இறக்க நேரிட்ட மற்ற நாடுகளைச்
சேர்ந்தவர்களுக்காக வருத்தம் தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும்
அரசாங்கம் முழுமூச்சோடு உதவிகள் செய்தும் வருகிறது.

இங்கேயுள்ள இலங்கை மக்களும், இந்தோனேஷிய, தாய்லாந்து மக்களும் நிதி திரட்டி, அவற்றைப் பாதிக்கப்பட்ட
தம் நாட்டுமக்களுக்கு அனுப்புகின்றனர்.

நியூஸிலாந்து நாட்டுப் பொதுமக்களும் தாராளமாகவே பொருளுதவி செய்தனர்.

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து திரும்பிவந்த மக்களுடைய கணக்கெடுப்பு விமான நிலையத்திலேயே எடுக்கப்பட்டு
விடுகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட/ ஏற்படும் மன அழுத்தம் தீர இலவச உதவி, கவுன்சிலிங் போன்றவைகள்
அரசாங்கத்தாலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(இந்த விவரங்கள் எல்லாம் கோபால், சென்னையிலிருந்து திரும்பி வந்தபோது இங்கே ஏர்ப்போர்ட்டில் அவரிடம்
விசாரித்ததாகச் சொன்னார். மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் உடனே எடுத்துக் கொள்ளும்படி அறிவுரைத்தார்களாம்.)

இதையெல்லாம் அறிந்தபோது, நம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையை எண்ணிப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.


0 comments: