Saturday, February 08, 2025

குழந்தையைக் காணோம்.....

இங்கே க்றிஸ்மஸ் தினத்தில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஊரே ஜிலோன்னு கிடக்கும். டிவியில்   கமர்ஸியல் கூட  இருக்காது. எதாவது பக்திப்படமோ, ம்யூஸிகலோ தான் ! ஊர் முழுக்க கடைகண்ணிகள் மூடி,  எங்கியோ ஒரு டெய்ரி ஷாப் திறந்திருக்கும்.  கார் நடமாட்டமே கூட அவ்வளவா இருக்காது. 
சாயங்காலம் ஒரு அஞ்சுமணி போலக் கிளம்பி பீச்சுக்குப் போறோம்.      
மெட்ராஸ் தெரு தாண்டும்போது,  'கார்ட்போர்ட்' கதீட்ரலுக்குப் போயிட்டுப்போகலாமான்னார் நம்மவர். எனக்கொரு விரோதமும் இல்லை. எங்க கதீட்ரல் இடிஞ்சு விழுந்தபிறகு, திரும்பக் கட்டிமுடிக்கும்வரை தாற்காலிகமா ஒரு சர்ச் கட்டிவிட்டது, ஏஞ்சலிக்கன் சர்ச் நிர்வாகம். ஒரு ஜப்பானியக் கட்டடக்கலைஞர் கார்ட் போர்ட் வச்சுக் கட்டினார். அஞ்சு மில்லியன் செலவாகும்னு சொல்லி ஏழு மில்லியன் டாலருக்கு  இழுத்துருச்சு.
போற போக்கைப் பார்த்தால் இதுதான் நிரந்தரம்னு தோணும்.  பதினாலு வருஷம் ஆகப்போகுது இப்போ...... பழசைத் திரும்பிக் கட்டறோமுன்னு    வேலையை  ஆரம்பிக்கவே  வருஷங்களா இழுத்தடிச்சு, ரெண்டு வருஷத்துக்கு முன் தொடங்குன வேலையை, இப்போ  எதிர்பார்த்ததைவிட  பட்ஜெட் கூடுதலாகுதுன்னு  நிறுத்திட்டாங்க. ப்ச்.....அட்டைகோவிலுக்கு அஞ்சுமில்லியனான்னு அப்போ பதிவெல்லாம் எழுதியிருந்தேன்.

 இந்தச் சர்ச்சாண்டைதான் ஒரு கட்டடம் இடிஞ்சு விழுந்து, 115 பேர் இறந்துட்டாங்க.  இவர்களில் பெரும்பாலோர், ஜப்பான் நாட்டிலிருந்து இங்கே இங்லிஷ் படிக்கவந்த மாணவர்கள்.  அவுங்க வந்திறங்கிய மறுநாள்தான் நிலநடுக்கம். ப்ச்.... 
இப்ப அந்த கட்டடம் இருந்த இடத்தில் சின்னதா ஒரு தோட்டமும், புதுசா  க்ரே கலரில் அழுதுவடியும் நினைவுச்சின்னமும். நமக்குப் பார்க்கிங் அங்கே கிடைச்சதேன்னு எட்டிப்பார்த்தேன்.

 எர்த்க்வேக் மெமோரியல்னு ஆத்தங்கரையில் சுவர் எழுப்பி அங்கே, இறந்துபோன 185 நபர்களின் பெயர்களையும் சலவைக்கல்லில் பொறிச்சு வச்சுருக்கு சிட்டிக்கவுன்ஸில்.  என்ன ஒன்னு.....  கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பூதக் கண்ணாடி வச்சுப் பார்த்தாலும் அந்தப்பெயர்களை நாம் வாசிக்கமுடியாது.....  எந்த மஹானுபாவரின் ஐடியாவோ...... மொத்தத்தில் கலர்சென்ஸ் இல்லாத நிர்வாகம். 
சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போனால்.....  கார்ட்போர்ட் சர்ச்சில் சர்வீஸ் நடந்துக்கிட்டு இருக்கு.  எனக்கு குடில் பார்க்கணும் என்பதால் முன்வரிசையாண்டை போய் உக்கார்ந்தேன்.  சர்வீஸ் நடக்கும் சமயங்களில் படம் எடுக்கக்கூடாதுன்னு விதிமுறை உண்டு. பத்துப்பதினைஞ்சு நிமிட் ஆனதும், போலாம் போலாமுன்னு  ஜாடை காமிச்சுக்கிட்டே இருக்கார் நம்மவர்.  பொறுத்துப்பொறுத்துப்பார்த்து, முடியலைன்னு பாதியில் கிளம்பி வந்துட்டோம். குழந்தையைப் பார்க்கலையேன்னு இருந்துச்சு. 

பீச்சுக்குப்போய் நியூஸி க்றிஸ்மஸ் மரம் என்ற பொஹுட்டுக்காவா மரத்தைப் பார்த்துட்டுக் கொஞ்ச நேரம்  ஒரு பெஞ்சில் உக்கார்ந்துட்டு வீடு வந்தோம். இந்த மரத்தின் மீது எனக்கொரு ஆசை பலவருஷங்களாக....  போனவாரம் ஒரு கார்டன் சென்ட்டரில் விற்பனைக்கு  வந்த சின்னச் செடியை வாங்கிவந்து கொஞ்சம் பெரிய தொட்டியில் நட்டுவச்சுருக்கோம்.  சின்னதா ஒரே ஒரு கொத்து பூ பூத்துச்சு. 
ரெண்டு நாளுக்கப்புறம் மத்யானமா,  இண்டியன் கடைக்குப் பலசரக்கு வாங்கப்போனப்போது, குழந்தையைப்பார்த்துட்டு வரலாமுன்னு போனால்.... எல்லாரும் அப்படிக்கப்படியே இருக்காங்க. புள்ளையைக் காணோம் !!! திக்னு ஆச்சு!





சர்ச் ஆஃபீஸ் வாலண்டியர்களைக் கேட்டால்.... என்னது...பிள்ளையைக் காணோமான்னு கூடச் சேர்ந்து திகைக்கிறாங்க. அடப்பாவமே......ன்னுட்டு. போலிஸ்லே கம்ப்ளெயின்ட் கொடுங்கோன்னுட்டு வந்தேன்.
வருஷம் முடியப்போகுதுல்லே ?  டிசம்பர் 30, மூலநக்ஷத்திரம். நம்ம ஆஞ்சுவுக்குப் பொறந்தநாள் ! கொஞ்சமா கேஸரி செஞ்சு பூஜை முடிச்சுட்டு, சம்பந்தி வீட்டுக்குக் கிளம்பினோம்.  அவுங்க வீட்டில் ஹனூக்கா பண்டிகை.  நம்ம நவராத்ரி போலத்தான் ஒன்பதுநாட்கள் கொண்டாடுவாங்க. குடும்பத்தினரின் வசதியை முன்னிட்டு,  அந்த ஒன்பது நாட்களில் வரும் வீக்கெண்டில்   எல்லோரும் வந்துருந்து கூடியிருந்து குளிர்ந்தேலோதான்.
அன்றைக்குத் திங்களாக இருந்தாலும்  விடுமுறைக் காலம் தானேன்னு  அழைப்பு.  நாம் கொஞ்சமா, துளி  மஸாலா சேர்த்து இண்டியனைஸ்ட் பாஸ்தா கொண்டு போனோம். சம்பந்தியம்மாவின் தகப்பனார், (குடும்பத்தில் பெரியவர், 97 வயசு)எல்லோருக்கும் ஆசி வழங்கினார். நம்ம இவன் கொள்ளுப்பேரன், பேத்திகளில் ஏற்றவும் இளையவன்! 



வருஷத்தின் கட்டக்கடைசி நாள், நடந்தவைகள் இந்த வருஷ முதல் பதிவில்  எழுதியிருக்கேன் !

விருப்பம் இருந்தால் வாசிக்க.... இங்கே க்ளிக்கலாம் !

https://thulasidhalam.blogspot.com/2025/01/blog-post.html

பயணத்தில் இருப்பதால்..... மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம்!


நன்றி ! வணக்கம் !

Monday, February 03, 2025

தண்ணீரே வேண்டாத மரம் !

நினைவுக்காக  மரம் நடுவதைப்போல்  நான் செடிகளை நடுவது வழக்கம். கார்டனியா என்னும் பூ..... மலர்ந்துருக்கு. பாரிஜாதம்னு கூடச் சொல்வாங்க. ரொம்பவே நல்ல  வசீகரமான மணம் ! பார்க்க, நம்மூர் அடுக்கு நந்தியாவெட்டை போல இருக்கும். ஆச்சு பதிமூணு வருஷம்.... 

நான் மாமியார் மெச்சிய மருமகள் !  

நெசமாவா ? 
பின்னே !  ஆரம்பத்தில் இருந்தே வெளியூர், வெளிநாடுன்னு இருந்துட்டேன். டிசம்பர், நமக்குக் கோடை காலம். தாமரை மலர ஆரம்பிச்சது.  அப்பப்ப ஒன்னு ரெண்டுன்னு  இன்னும் ஒரு மூணுமாசத்துக்கு...  கண்ணுக்கு விருந்துதான். ராஸ்பெர்ரி புதரில் கெம்புக்கல்  கம்மல்கள்..... பேரனின் ஃபேவரைட் !
க்றிஸ்மஸ் அலங்காரங்கள், கொஞ்சம் செஞ்சேன். இது நம்ம ஃபிஜி வாசத்தில் உண்டான வழக்கம்.  அப்போ வெறும் கலர்  லைட்ஸ் மட்டும்தான். இங்கே நியூஸி வந்தாட்டு, முதல் வருஷம் உண்மையான பைன் மரக்கிளையில் க்றிஸ்மஸ் மரம் வாங்கினோம்.  தோட்டத்தில் மண்ணில் நட்டு அலங்கரிக்க, ரொம்பவே கஷ்டமாப் போச்சு.  அவ்ளோ பெருங்கிளை ! பயங்கர கனம். ஆழமான குழி தோண்டவே படாதபாடு பட்டாச்சு.


நம்ம கஷ்டம் புரிஞ்ச சீனர்,  தங்கள் கைவேலையைக் காமிச்சாங்க. வீட்டுக்குள் வைக்கும் மரங்கள் வந்தாச்சு. ஒன்னு வாங்கினால்...... பல வருஷம் தாங்கும்!  நம்ம வீட்டில் இங்கே 2003 இலிருந்து கொலுவைக்க ஆரம்பிச்சபிறகு, முக்கியமான  நம் பண்டிகைகளுக்குச் சின்னதா ஒரு டிஸ்ப்ளே செஞ்சு வைக்க ஆரம்பிச்சு, அது க்றிஸ்மஸுக்கும் தொத்திக்கிச்சு ! என்ன ஒன்னு.... அந்தந்த விழா முடிஞ்சதும், அலங்கார சமாச்சாரங்களைக் கவனமாப் பிரிச்சுத் தனிப்பெட்டிகளில் எடுத்துவைக்கணும்.  அட்டைப் பெட்டிகளின் மேல் பெயர் எழுதிவைக்க மறக்கக்கூடாது ! வாசலில் மாட்டிவைக்க ஒரு  மலர்வளையம். (எல்லாம் சொந்த சாஹித்யமே !  பழசாகிப்போன குக்கர் காஸ்கெட் இருந்ததே ! ஹிஹி )பேரனுக்காக அவன்  கைக்கெட்டும் உயரத்தில் ரெண்டு தாத்தாக்கள்.  



 
பதினாறு பேர் வந்து குடிலின் முன் பாடிக்கிட்டு இருக்காங்க.  சாந்தாவின் வீட்டில் கடைசி நேர பரபரப்பு.  அவரோட கார், நம்ம இவனுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.ரயில் எஞ்சினும்தான் !  தொட்டு விளையாடட்டுமுன்னு விட்டுட்டேன். 



கார்த்திகை தீபத்திருவிழா வந்தது.... இந்த வருஷம் என்னவோ.... கார்த்திகைமாசக் கட்டக் கடைசியில்!  முடிஞ்ச அளவில் சுமாராக் கொண்டாடினோம். மார்கழியும் பிறந்தது.... நம்ம ஜன்னு சம்ப்ரதாயமான மடிஸார் கட்டி ஆண்டாளானாள் ! முதல்நாள் மட்டும் வாசலிலே பூசணிப்பூ :-)

தோழியின் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா. நம்ம ஊரில் மட்டும் மூணு பரதநாட்டியப் பள்ளிக்கூடம் இருக்கு, தெரியுமோ ?  இந்தமுறை கொஞ்சம் சின்ன அளவில் ஒன்னரை மணி நேர நிகழ்ச்சிகள் மட்டும் என்பதால் போயிருந்தோம். கால் இருக்கும் நிலையில் ரொம்ப நேரம் காலைத் தொங்கப்போட்டு உக்கார முடியாது. என்னதான் சொல்லுங்க.... பரதநாட்டிய உடையில் நம்ம பிள்ளைகளைப் பார்த்தாலே...மனசு கிறங்கிப்போயிருது ! 
ஒருநாள் மாலுக்குப் பேரனோடும் மகளோடும் போயிருந்தோம்.  அதுவரை வீட்டிலும், ப்ளே சென்ட்டரிலும் படத்தில் பார்த்த சாண்ட்டாவை 'நேரில்' கண்டதும் பிரமிச்சுப்போயிட்டான் ! நான் சாண்ட்டாவிடம் கொஞ்சம் கதையடிச்சுட்டு வந்தேன்.

கண்ட்ரி சைடில் புதுவீடு கட்டிப்போன தோழியின் வீட்டில் நம்ம ஆர்யசமாஜின் மாதாந்திர ஹோமம். அங்கத்தினர் வீடுகளில் சுழற்சிமுறையில் மாதம் ஒருமுறை நடக்கும் வகை. நான் பொதுவா வீடுகளில் நடக்கும் ஹோமங்களில் பங்கெடுப்பதில்லை.  ஹால்களில் நடந்தால் போவேன். எல்லாம் இந்தக் கால் பிரச்சனையால்தான். கீழே உட்கார முடியாது.  தோழியும் அவர் கணவரும் நம்ம யோகா குழுவின் அங்கங்கள் என்பதால் ரெண்டுபக்கத்திலும் சொந்தமாகிட்டாங்களே !!!

இங்கே கோடை விடுமுறை, க்றிஸ்மஸ் சமயம்தான்  என்பதால் பொதுவா டிசம்பர் மூணாம் வாரம் தொடங்கி, ஜனவரி  முதல் வாரம் வரை  சகல இடங்களிலும் விடுமுறைதான்.  பள்ளிகள், கலாசாலைகள் எல்லாம் சுமார் ரெண்டு முதல் மூணு மாசம் வரைகூட.....  நம்ம யோகா வகுப்புக்கும் விடுமுறைக் காலம் உண்டு. லீவில்  ஊருக்குப்போய்வரும் வழக்கமும் இருக்கே !  நம்ம யோகா  வகுப்பின் கடைசி நாள், க்றிஸ்மஸ் பார்ட்டி !  நம்ம விழாக்களுக்கெல்லாம் அவைகளை அனுசரிச்சு ட்ரெஸ் கோட் கூட வச்சுக்குவோம்.  இப்ப க்றிஸ்மஸ் கலர்ஸ்..... சிகப்பு, பச்சை! விழா இனிதே நடந்தது..... இனி ஜனவரி கடைசியிலோ. ஃபிப்ரவரி முதல் வாரமோ.... ஒரு புதன்கிழமையில் வகுப்பு ஆரம்பிக்கும் ! 

நம்ம கேரளா க்ளப்பின் க்றிஸ்மஸ் பார்ட்டிக்கு இந்தமுறை மகள் குடும்பமும் வந்தாங்க. 

வழக்கமா க்றிஸ்மஸ் ஈவ் , நம்ம கதீட்ரலுக்குப் போய்வருவதெல்லாம் , நிலநடுக்கம் வந்து கதீட்ரலே அழிஞ்சு போனதும் நின்னே போச்சு. வீட்டாண்டை இருக்கும் சர்சுக்கு க்றிஸ்மஸ் திருநாளுக்கு  முதல்நாள் பகலில்  போய் வருவோம்.  ஈ காக்கா இருக்காது. ஏகாந்த தரிசனம்தான் எப்போதும்.


இந்தமுறை பகலில் போகமுடியலை.  ராத்ரி 11.30 சர்வீஸ்தான் கூட்டமா இருக்குமுன்னு நினைச்சுப்போனா..... ஒன்பதே காலுக்கே நல்ல கூட்டம் ! ராத்ரி 12க்கு ஆகும் ஜனனம், சீக்கிரமாகவே ஆகி இருக்கு !!!!! அதுவும் குடிலுக்குள் இல்லாமல்.... ஆல்டரின் முன்பக்கம் !!! சம்ப்ரதாயங்களில் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு......

அடுத்த பேட்டையில் க்றிஸ்மஸ் லைட்ஸ் அலங்காரம் இப்போ ஒரு மூணு வருஷமா நடக்குது. அங்கே போய் எட்டிப்பார்த்துட்டு  ராத்ரி பத்துக்கு வீடு திரும்பியாச்சு.    

மெர்ரி க்றிஸ்மஸ் !!!!     


Friday, January 31, 2025

கல்யாணக்கொண்டாட்டங்கள் !

நம்ம கோவிலில் கந்தசஷ்டி முடிஞ்சு , திருக் கல்யாணம்.   வருஷாவருஷம் வெட்டிங் அனிவர்ஸரின்னு சிம்பிளா வச்சுக்காமத் தாலிகட்டியே கல்யாணம் பண்ணிக்கறதுதான்  இவர் ஸ்டைல்.....  அறுபதாங்கல்யாணம், சதாபிஷேகம், கனகாபிஷேகம் எல்லாம்  மனுசருக்குத்தானாம்.   ஞாயித்துக்கிழமையா இருந்ததால் விழா பகலில்.  





கல்யாணத்துக்குப் போய், பூஜை ஆனதும்  அங்கிருந்து நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் தீபாவளி அன்னக்கூட் தரிசனமும் ஆச்சு.  மதியம் ரெண்டு மணிமுதல்  தரிசனமும் பஜனும்!  சாயங்காலம் ஆறரைக்கு ஆரத்தி.  . ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்களில் ஆண்களுக்கே முன்னுரிமை.  ஸ்வாமி சந்யாசிகள் விஜயம் செய்யும்போதும், பெண்கள்  அவரை அணுகி ஆசி பெற முடியாது.  ஆனால் பெண்கள்தான் கோவில்களில் மாய்ஞ்சு மாய்ஞ்சு விருந்து தயாரிப்பார்கள். 
இந்த முறை ஒரு கூடுதல் விசேஷம், என்னென்னா... பெண்களுக்குன்னு மட்டும்  ஒரு மணி நேரம் ஒதுக்கித் தந்து பஜனை செஞ்சுக்க அனுமதி கொடுத்தார்கள். இதெல்லாம் தெரியாமலேயே  சரியா நாம் அந்த நேரத்துக்குப் போயிருந்தோம்!  நம்மவரும் மற்ற ஆண்களுடன் சேர்ந்து  கோவில் தோட்டத்துலே போட்டுருக்கும் கூடாரத்துக்குப் போயிட்டார். 
கால்வலியில் ரொம்ப நேரம் உக்காரமுடியாது என்பதால்  ..... வீட்டுக்குக் கிளம்பியாச்சு. இங்கே  விழா முடிய எப்படியும்  ராத்ரி எட்டரை ஆகிரும்.

அன்றைக்கே இண்டியன் தமிழ்ஸ் (CITA)நடத்தும் தீபாவளி விழா, நேத்து நாம் போன பக்கத்தூரு  ஈவண்ட் சென்டரில். நாமும் சீட்டாவின் அங்கம் தான்.  அப்பாவும், மகளும், பேரனுமாக் கிளம்பிப்போனாங்க. 

அடுத்த வாரத்தில் ஒருநாள் தோழி ஒருவர்,  ஊரிலிருந்து வந்த உறவினரை நம்ம வீட்டுக்கு அழைச்சு வந்தார்.  அவர் கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையுடன் சம்பந்தமுள்ளவர் என்பதால், நமக்கு வந்திருக்கும் மருந்துகள் பற்றிய விவரங்களையும், எடுத்துக்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கிச் சொன்னார்.  
அப்பதான் பேச்சோடு பேச்சாக,' இந்த ஊரில் முருங்கை மரம் இல்லையா'ன்னார்.  நாலைஞ்சுமுறை விதை வாங்கி நட்டுவச்சு,  செடி முளைச்சு வந்து, குளிர் ஆரம்பிச்சதும் மண்டையைப் போட்டுருதுன்னு சொல்லிட்டுப் போன வருஷம் வந்த செடி , காய்ஞ்சுபோய் வெறும் குச்சி இப்போ. தூக்கிப்போட மனசு வராமல் அப்படியே வச்சுருக்கேன்னு சொன்னேன்.  அது முளைச்சு வந்தாலும் வரும்னு சொன்னார். எங்கே? ன்னு கூட்டிப்போய்ப் காய்ஞ்சு நிக்கும் குச்சியைக் காமிச்சால்.........  அட !  உண்மையிலேயே குட்டியா இலைகள் முளைச்சுவருது !   ஹைய்யோ!!!!

இருபத்தியாறு அங்கத்தினர் இருக்கும் நம்ம யோகா குழுவில்,  பிறந்தநாள். மணநாள் கொண்டாட்டங்களுக்கெல்லாம் குறைவேது..... எப்படியும் ஒரு மாசத்தில் ஒன்னுரெண்டு விசேஷம் வரத்தானே செய்யும் ? சின்ன அளவிலும் பெரிய அளவிலுமாக் கொண்டாடி, நம்ம ' எடை குறையாமல்'                            பார்த்துக்கிட்டோம் !!!!
யோகா குழுவில் இருக்கும் தன் தாய்  தகப்பனின்  திருமணநாள் பொன்விழாவை, சர்ப்பரைஸ் பார்ட்டியாக் கொண்டாட விருப்பப்பட்ட  மகனும் மருமகளும்  நம்மை அணுகியதால்..... ஜாம் ஜாமுன்னு நடத்தியாச்!  முதலில் வகுப்பு நேரத்தில் அரைமணி போதுமுன்னு சொல்லிக் கடைசியில் ஏகப்பட்ட உள்ளூர் உறவினர்களையும்  அழைச்சுட்டாங்க..... அப்புறம் ?  முழுநேரக் கொண்டாட்டம்தான் !  பரவாயில்லை.... இதுக்குன்னே அமெரிக்காவில் இருந்து வந்த மகனின் குடும்பத்து அன்பு, பாராட்டத் தக்கது, இல்லையோ !

 இதுலே இன்னொரு வேடிக்கை என்னன்னா.... யோகா குழுவின் ஆரம்ப  காலத்தில் எங்களைப் பயிற்றுவிச்ச பயிற்சியாளர்,  எப்பவாவது திடீர்னு யோகா வகுப்பு நடக்கும்போது வந்து எங்க லக்ஷணத்தைப் பார்ப்பாங்க.  நாங்களும்  ரொம்ப ஒழுங்கா அவுங்க சொல்லிக்கொடுத்ததையெல்லாம் செஞ்சு காமிச்சு ரொம்பவே நல்ல பெயர் வாங்கிப்போம்.  இன்றைக்குத் திடீர்னு அவுங்க வந்துட்டாங்க.  அப்புறம் ? பொன்விழான்னு விளக்கி அவுங்களையும் பார்ட்டி கேம்ஸில் இழுத்துவிட்டாச் :-)
நவம்பர் மாசம், நமக்கு வசந்தகாலத்தின் கடைசி. இந்தமாசம் முடிஞ்சதும் கோடைகாலம் ஆரம்பம் என்பதால்...... தோட்டத்துப்பூக்களுக்குக் கொண்டாட்டம். நமக்குக் கூடுதல் வேலைகளால் திண்டாட்டம். இந்த முறை நம்மவருக்குத்தான் வீட்டுவேலைகள் கூடிப்போயிருக்கு. ப்ச்.... பாவம்.