Monday, September 24, 2018

நந்தியாரே, நலமா? (பயணத்தொடர், பகுதி 13)

மலை ஏறிப்போறதே, வியூ பார்க்கன்னும் சொல்லலாம். கோவிலில் இருந்து இறங்கி வரும் பாதையில் ஒரு ஆறேழு நிமிட் ட்ரைவில் இடப்பக்கம் ஒரு ரோடு பிரியுது.  இதுக்குப் பக்கத்திலேயே லுக் அவுட்  ஒன்னு கட்டி இருக்காங்க. மேடையில் டெலஸ்கோப் கூட இருக்கு! ஆனால் கிட்டப்போக முடியாமல் பயங்கரக்கூட்டம். கட்டைச்சுவரையொட்டி, இளைஞர் கூட்டம் ஒன்னு சர்க்கஸ் செஞ்சுக்கிட்டு இருக்கு.  கரணம் தப்பினால்.... மரணம்தான். அதென்ன செல்ஃபி மோகமோ?


நாங்க ஒரு பக்கமா நின்னு மைஸூரைப் பார்த்தோம். தெரிஞ்ச இடமா லலித் மஹால் கண்ணில் பட்டது:-) போதும், பார்த்ததுன்னு கிளைபிரியும் சாலையில் போறோம். சுமார் மூணரை கிமீ பயணம். பெரிய நந்தி இங்கேதான் இருக்கு!  சாமுண்டி கோவிலில் இருந்து கீழே போகும் படிகளில் நடந்து வந்தால் எண்ணூறு மீட்டர்தான்.  கார் போகும் சாலை வளைஞ்சு வளைஞ்சு இருப்பதால் தூரம் அதிகமாயிருது!

வண்டியை ஓரங்கட்டிட்டு, ஒரு சரிவான பாதையில் மேலேறிப்போனால்  நந்தி ஸார் பிரமாண்டமான மேடையில் காலை மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கார்! உக்கார்ந்த நிலையிலேயே பதினாறடி உயரம். நீளம் ஒரு இருபத்தியஞ்சடி! ஒரே கல்லில் செதுக்கிய சிற்பம்!
கழுத்து நிறைய மணிகளும், மாலைகளும், கயிறும் குஞ்சலமும், நகையும் நட்டுமா எல்லா அலங்காரமும்  செதுக்கலில் !  ஹைய்யோ!!!  என்ன அழகு!




போனமுறை பார்த்தப்பக் கருப்பு நிறமா இருந்தவர், இப்போ என்னவோ வெள்ளையா இருக்கார். ஏழுநாள் சிகப்பழகு க்ரீம் பூசிக்கிட்டு இருந்துருப்பாரோ?
நந்தி தேவருக்கு அந்தாண்டை ஒரு குகைக்குள் சிவன் இருக்கார்.கொஞ்சம் ஏறிப்போகணும் போல....  இங்கிருந்தே ஒரு க்ளிக்ஸ் ஆச்சு. நந்திக்கு எதிரில் இன்னொரு மேடை/ மொட்டைமாடி போன்ற  இடத்தில்  இருக்கை ஒன்னு!  இங்கிருந்து நந்தியைக் க்ளிக்கினால் எல்லாம் தெளிவாக இருக்கு! கொஞ்சம் தள்ளி சின்னதா ஒரு சந்நிதி. புள்ளையார் இருக்கார்!
நந்தி தேவர் சிலைக்கு வயசு ஒரு முன்னூத்தியம்பது  இருக்குமாம். மன்னர்  Dhதொட்ட தேவராஜ உடையார் காலத்துலே செதுக்கி இருக்காங்க. இந்த அரசர் காலத்துலேதான் கீழே அடிவாரத்தில் இருந்து மலைமேல் இருக்கும்  சாமுண்டி கோவிலுக்கு வர்றதுக்கு அந்த ஆயிரத்தெட்டுப் படிகளும் உண்டாக்குனாங்களாம்!


திறந்தவெளிக் கோவில் என்பதால் எப்ப வேணுமுன்னாலும் போய் தரிசிக்கலாம். ஆனால் ராத்திரி பத்து மணிக்கு மேல் மலைக்குப்போகும் பாதையில் அனுமதி இல்லை. காலையில் அஞ்சு மணி முதல் அனுமதி உண்டு.

நந்தி  ஸார் அமர்ந்திருக்கும் மேடையின் முன்பக்கம் குருக்கள் நின்னு  தீபாராதனை காட்டினார்! இவரே மொட்டை மாடிக்கும் வந்து புள்ளையாருக்கும் தீபம் காட்டினார்.
மணி ஆறரை ஆச்சே... இருட்டிக்கிட்டு வருதேன்னு கிளம்பி வண்டி நிக்கும் இடத்துக்கு வந்தப்ப அங்கிருந்த  விளம்பர தட்டியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் கண்ணில் பட்டது.   நல்லா இருக்கேன்னு ச்சும்மா ஒரு க்ளிக்!

தொடரும் .....  :-)

18 comments:

said...

பலமுறை சென்றிருக்கிறேன். நீங்கள் சென்ற நேரம் அதிக கூட்டமில்லை ஆகையால் நந்தியைத் தனியாக எடுக்க முடிந்துள்ளது. அருமை. அல்லது நந்தியைச் சுற்றி மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

said...

அம்மாடி... எவ்ளாம் பெரிய நந்தி!

said...

முந்தைய பதிவொன்றில் நந்தியை சொல்ல நினைத்து பிள்ளையார் என்று கூறி விட்டேன்போல

said...

எங்கள் பயணத்தின்போது நந்தியைவிட்டு வர மனமே வரவில்லை. அவ்வளவு கம்பீரம். இன்று உங்களுடன் பயணித்தோம். நன்றி.

said...

மிக அருமை. நன்றி. அண்ணனுக்கு நமஸ்காரம்.

said...

படங்கள் அருமை. தொடர்கிறேன். விளம்பரத் தட்டி எங்கே?

said...

என்ன கம்பீரம்...எப்பொழுது பார்த்தாலும் மனதிற்கு பரவசம் தான்..

said...

நந்திக்கு எண்ணெய் பூசுனா கருப்பாகத் தெரியும். போனவாட்டி போனப்போ எண்ணெய் முழுக்கியிருந்திருப்பாங்க. நீங்க போட்டிருக்கும் படத்துல பாத்தா நல்லா ஷாம்பூ போட்டு குளிப்பாட்டுன மாதிரி இருக்காரு.

முன்னாடி தனியா இருப்பாரு. இப்ப சுத்தி நெறைய கடைகள் வந்துருச்சு போல. கூட்டம் வருதுன்னா கடைகளும் வர்ரதுதானே.

said...

ஆஹா... எத்தனை பிரம்மாண்ட நந்தி.....

மலைப்பாதை பயணம் எப்போதும் ஸ்வாரஸ்யம் எனக்கு! :)

விளம்பரத் தட்டி - படம் இங்கே இல்லையே! அடுத்த பதிவில் வருமோ?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நந்தி கோவிலில் ஒரு ஏழெட்டுப்பேர் இருந்தாங்கதான். இருட்டும் நேரம் என்பதால் அங்கே இருந்த கடைகள் எல்லாம்கூட மூடிட்டாங்க. ஸோ.... அதுக்கப்புறம் யாரும் வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

நீங்க பகலில் போயிருந்தீங்க போல!

said...

வாங்க ஸ்ரீராம்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் பெரிய நந்திகளின் வரிசையில் மூணாவதா இருக்கு. முதலிரண்டும் ஆந்த்ராவில்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இருக்கலாம். நானும் புள்ளையாரைப் பார்க்கலையேன்னு நினைச்சேன் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பழைய நினைவுகளை அசை போடுவதும் ஒரு சுகமே!

said...

வாங்க விஸ்வநாத் !

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

விளம்பர தட்டிப் படம் அடுத்த பதிவில் போடலாமுன்னு விட்டுட்டேன்.

said...

வாங்க அனுராதா ப்ஃப்ரேம்.


உண்மை! என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு அழகு!

said...

வாங்க ஜிரா.

அப்போ எவ்ளோ ஷாம்பூ போட்டுருக்கணும் ! ஹாஹா!

1994 லே போனப்ப கருப்பு நந்திதான் பார்த்தோம்! எனக்குக்கூட இது புது நந்தியோன்னு ஒரு சம்ஸயம் கூட வந்தது!

மக்கள் கூட்டம் பெருகப்பெருக எல்லாமே பெருகிப்போகுது....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்..

அடுத்தபதிவில் வந்தது.

ரொம்பத் தாமதமா பதில் எழுதறேன். மன்னிக்கணும்.